About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 14 August 2023

லீலை கண்ணன் கதைகள் - 19

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

கிருஷ்ணனின் குறும்புகள்| 2

கிருஷ்ணனின் குறும்பு தனத்தை புகார் செய்வவே தினம் தினம் ஒவ்வொரு கோபிகைகள் யசோதையிடம் வருவார்கள். 


ஒரு கோபி சொல்லுவாள்: "நான் மிகவும் எச்சரிக்கையாக இருந்ததனால், என் வீட்டில் சாப்பிட, கிருஷ்ணனால்  ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அவன் தூங்கிக் கொண்டிருந்த என் குழந்தையைக் கிள்ளி அழ வைத்துவிட்டுக் குறும்புச் சிரிப்பு சிரித்துக் கொண்டே சென்று விட்டான்". 

இன்னொரு கோபி சொல்லுவாள்: "நான் என் வீட்டில் பாலையும் தயிரையும் மேலே உத்திரத்திலிருந்து தொங்கும் உறியில் வைத்திருந்தேன். கிருஷ்ணனும், பலராமனும் அங்கு வந்தார்கள். ஆனால் அது அவர்களுக்கு எட்டவில்லை. ஆகவே அவர்கள் ஒரு தந்திரம் செய்தார்கள். சில பலகைகளை ஒன்றின்மீது ஒன்றாக அமைத்தார்கள். அவற்றின்மீது, நான் உட்கார்ந்து தயிர் கடைவதற்காகப் பயன்படுத்தும் முக்காலியை வைத்தார்கள். முக்காலியின் மீது பலராமன் ஏறினான். அப்பொழுதும் பானை எட்டவில்லை. அதனால் பலராமன் வளைந்து கொடுக்க, கிருஷ்ணன் அவன் முதுகின் மீது ஏறினான். 


பானை எட்டவே, எல்லா வெண்ணையையும் சாப்பிட்டு தீர்த்தார்கள். அப்பொழுது நான் வீட்டிற்குள் நுழைந்து கிருஷ்ணனின் கையைப் பிடித்தேன். ஆனால் அவன் என்னைக் கண்டு பயப்படவில்லை. என்னைப் பார்த்து, நான் இந்த வீட்டின் சொந்தக்காரன், நீ தான் திருடி என்றான்".

இன்னொரு கோபி சொல்லுவாள்: "நான் அப்பொழுது தான் வீட்டை மெழுகிச் சுத்தமாக வைத்திருந்தேன். கிருஷ்ணன் வந்து வெண்ணெய் கேட்டான். என்னிடம் வெண்ணெய் இல்லை என்று சொன்னேன். பிறகு நான் வீட்டு வேலையைக் கவனித்துக் கொண்டிருந்த வேளையில் அவன் தெரு மண்ணை எல்லாம் என் வீட்டுத் தரையில் இரைத்து விட்டு ஓடி விட்டான்".


இப்படி எல்லாக் கோபிகளும் யசோதையிடம் முறையிடுவார்கள். ஆனால் ஒருத்திக்கும் கிருஷ்ணனின் மீது கோபம் இருக்காது. அவன் குறும்புகளை அவர்கள் ரசிக்கவே செய்தார்கள். இவர்கள் யசோதையிடம் முறையிடும் போது, கிருஷ்ணன் ஒரு மூலையில் குறும்புச் சிரிப்பு சிரித்து கொண்டு, இவர்கள் தன்னை பற்றி என்ன சொல்லுகிறார்கள் என்று கேட்டுக் கொண்டிருப்பான். யசோதை கோப கண்களுடன் அவனை திரும்பிப் பார்ப்பாள். உடனே அவன் கண்களில் கண்ணீர் மல்கும். கிருஷ்ணன் அழ யார் தாம் பொறுப்பார்கள்? உடனே யசோதை அவனை தன் மடியில் கிடத்தி தட்டிக்கொடுப்பாள். கிருஷ்ணனுடைய அழகிய முகம் அவனுடைய களங்கமற்ற கண்கள் அவனுடைய இனிய புன்முறுவல் இவை கோபிகளின் மனத்தை மயக்கின. 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 13 - பெரியாழ்வார் திருமொழி - 1.1.1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 13 - திருக்கோட்டியூர்க் கேசவனான 
கண்ணன்  பிறந்தான்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - முதலாம் திருமொழி - முதலாம் பாசுரம்

வண்ண மாடங்கள் சூழ்* திருக்கோட்டியூர்*
கண்ணன் கேசவன்* நம்பி பிறந்தினில்*
எண்ணெய் சுண்ணம்* எதிரெதிர் தூவிடக்*
கண்ணன் முற்றம்* கலந்து அளறாயிற்றே| (2)

  • வண்ண மாடங்கள் - அழகிய மாடங்களால்
  • சூழ் - சூழப்பட்ட
  • திருக்கோட்டியூர் - திருக்கோட்டியூரில்
  • கேசவன் - கேசவன் என்ற பெயருடைய
  • நம்பி - கல்யாண குண பரிபூர்ணனான நாயகன்
  • கண்ணன் - ஸ்ரீ கிருஷ்ணன்
  • இன் இல் - நந்தகோபனுடைய இனிய திருமாளிகையில்
  • பிறந்து - அவதரித்து அதனால் ஆய்ப்பாடியில் உள்ளவர்கள்
  • எண்ணெய் - எண்ணெயும்
  • சுண்ணம் - மஞ்சள் பொடியையும்
  • எதிரெதிர் - ஒருவருக்கொருவர்
  • தூவிட - எதிர்த்துத் தூவ
  • கண் நல் முற்றம் - விசாலமான விக்ஷணாமான முற்றம்
  • கலந்து - எண்ணெயும் மஞ்சள் பொடியையும் சேர்த்து

திருக்கோட்டியூரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான், திருவாய்பாடியில் நந்தகோபருடைய அழகிய திருமாளிகையில் கேசவன் என்கிற திருநாமம் கொண்ட, ஒளி நிறைந்த நீண்ட கண்களை உடையவனும், கேசி என்னும் அசுரனைக் கொன்றவனுமான, பேரெழில் மிக்கத் தலைவன் கண்ணனாக திருவவதரித்த போது கோகுலவாசிகளிடம் இருந்த அளவில்லா உத்ஸாகத்தை வர்ணிக்கிறார் ஆழ்வார். அவர்கள் எண்ணையையும், மஞ்சள் பொடியையும் ஒருவர் மேல் ஒருவர் தூவி சந்தோஷப்பட்டார்களாம். இதனால் ஸ்ரீ நந்தகோபருடைய திருமாளிகையின் முற்றமே சேறாகி காட்சியளித்ததாம். (குறிப்பு: கண்ணபிரான் வடமதுரையில் கம்ஸனுடைய சிறைக் கூடத்திலே பிறந்திருக்க, நந்தகோபருடைய திருமாளிகையிற் பிறந்ததாகச் சொன்னது - கம்ஸனுக்குத் தப்பி கோகுலத்தில் பிரவேசித்த பின்பு தான் இவன் பிறந்ததாக ஆழ்வார் நினைத்திருக்கிறார் என்று வ்யாக்யானம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.13

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் - 1.13 

தத: ஸ²ங்கா²ஸ்² ச பே⁴ர்யஸ்² ச
பணவா நக கோ³முகா²:|
ஸஹஸை வாப்⁴ய ஹந்யந்த 
ஸ ஸ²ப்³த³ஸ்து முலோ ப⁴வத்||  

  • ததஸ் - அதன் பிறகு
  • ஸ²ங்கா²ஸ்² - சங்குகள்
  • ச - மேலும்
  • பே⁴ர்யஸ்² - மத்தளங்கள்
  • ச - மேலும்
  • பணவ ஆநக - தாரைகளும் முரசுகளும்
  • கோ³முகா²ஹ - கொம்புகள்
  • ஸஹஸா - திடீரென
  • ஏவ - நிச்சயமாய்
  • அப்⁴ய ஹந்யந்த - ஒரே சமயத்தில் ஒலித்தன
  • ஸ: - அந்த
  • ஸ²ப்³த³ஸ் - ஒருமித்த சப்தம்
  • துமுல: - கிளர்ச்சி
  • அப⁴வத் – உண்டாயிற்று

அதன் பின், சங்குகள், மத்தளங்கள், முரசுகள், கொம்புகள், தாறைகள், தம்பட்டங்கள் என அனைத்தும் திடீரென ஒரே சமயத்தில் முழங்க, அப்பேரொலி மிகவும் பயங்கரமாக இருந்தது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.1.20

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² ப்ரத²ம: அத்⁴யாய꞉||
||நைமிஷ க்ஷேத்ரே ஸ்ரீமத் பாகவத விஷயே  
ஸூதம், ப்ரதி ஸொ²னகாதி முனீநாம் ப்ரஸ்ந:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||முதல் அத்யாயம்|| 
||ஞானிகளின் கேள்விகள்||

ஸ்லோகம் - 1.1.20

க்ருத வாந் கில வீர்யாணி 
ஸஹ ராமேண கேஸ²வ꞉|
அதி மர்த் யாநி ப⁴க³வாந் 
கூ³ட⁴꞉ கபட மாநுஷ꞉||

  • கபட மாநுஷ - மாயா மனுஷன் ஆனவனும்
  • கூ³ட⁴ஹ் - அறியப்படாதவனுமான
  • ப⁴க³வாந்நு கேஸ²வஹ - இறைவனான கிருஷ்ணன்
  • ராமேண ஸஹ - பலராமனோடு கூடியவராய்
  • அதி மர்த் யாநி - மனித சக்திக்கு அப்பாற்பட்ட
  • வீர்யாணி - வீரியம் மிகுந்த செயல்களை
  • க்ருதவாந் கில - செய்தார் அன்றோ? அவற்றைச் சொல்லும்

தன் உண்மை ஸ்வரூபத்தை தன் மாயையால் மறைத்து, சாதாரண ஒரு மனிதன் போல் நடித்துக் கொண்டு ஒரு கபட நாடக சூத்திரதாரியான பகவான், பலராமனோடு சேர்ந்து கோகுலத்தில் வளர்ந்து, மனித சக்திக்கு அப்பாற்பட்ட பற்பல வீரச்செயல்களைச் செய்தாரல்லவா?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 28

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம த்யான ஸ்லோகம் - 5

ஸஸ²ங்க² சக்ரம் ஸகிரீட குண்ட³லம்
ஸபீத வஸ்த்ரம் ஸரஸீரு ஹே க்ஷணம்|
ஸஹார வக்ஷஸ் ஸ்த²ல ஸோ²பி⁴ கௌஸ்துப⁴ம்
நமாமி விஷ்ணும் ஸி²ரஸா சதுர்பு⁴ஜம்||

  • ஸஸ²ங்க² - ஒரு கையில் சங்கு (பாஞ்சஜன்யா சங்கம்)
  • சக்ரம் - ஒரு கையில் ஒரு வட்டு (ஸுதர்சன சக்கரம்) ஏந்தி
  • ஸகிரீட - தலையில் அழகான கிரீடத்தை ஏந்தி
  • குண்ட³லம் - காதுகளில் தொங்கும் பளபளப்பான மோதிரங்களை அணிந்திருப்பவர்
  • ஸபீத வஸ்த்ரம் - அழகான மஞ்சள் நிற பட்டு உடையை அணிந்தவர்
  • ஸரஸீருஹா - தாமரை 
  • ஈக்ஷணம் - கண்கள் 
  • ஸஹார - மாலை அல்லது கழுத்தணி
  • வக்ஷஸ் ஸ்த²லம் - மார்பு
  • ஸோ²பி⁴ - ஜொலிக்கும்
  • கௌஸ்துப⁴ம் - அற்புதமான ரத்தினம்
  • நமாமி விஷ்ணும் ஸி²ரஸா - தலையைக் குனிந்து விஷ்ணுவை வணங்குகிறேன் 
  • சதுர் - நான்கு
  • பு⁴ஜம் - விஷ்ணுவின் திருக்கைகள்

ஒரு கையில் சங்கு (பாஞ்சஜன்ய சங்கா) மற்றும் மற்றொரு கையில் வட்டு (ஸுதர்சன சக்கரம்) ஏந்தியவராய், பளபளப்பான கிரீடம் மற்றும் அழகான காது வளையங்களை அணிந்தவராய், மஞ்சள் பட்டு வஸ்திரத்தில் (உடை) அலங்கரிக்கப்பட்டவராய், அழகான தாமரை போன்ற கண்களை உடையவராய், மாலை அணிந்த மார்பில் கௌஸ்துபம் ஒளி வீசுபவராய், நான்கு திருக்கரங்களுடன் விளங்கும் விஷ்ணுவை வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - இருபத்தி ஐந்தாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

025 அநுயாத்திரை செய்தேனோ அணிலங்களைப் போலே|

அணிலங்கள் என்றால் அணில். யாத்திரை போகும் பொழுது பின்னாடியே போவதற்கு அனுயாத்திரை என்று பெயர். 

ஸ்ரீராமர், ராவணனால் சிறையெடுக்கப்பட்ட சீதா பிராட்டியை லங்கைக்குச் சென்றால் தானே மீட்க முடியும், ராவணனையும் வதம் செய்ய முடியும்.


அதற்குக் கடலைக் கடந்தாக வேண்டும். கடலைக் கடப்பதெனில் கடல் பாலம் ஒன்றை அமைத்திட வேண்டும். ராமர் சேது கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அப்பொழுது, கடலில் பாலம் கட்ட அவருக்கு வானரங்கள் உதவி செய்தன. அனைவரும் வேக வேகமாக கல்லை கொண்டு போய் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். கற்கள் நன்றாக மிதந்து கொண்டிருந்தது. பாறைகளைத் தான் போட்டனவேத் தவிர பாறைகளுக்கு இடையே பூச்சு வேலை நடைபெறவில்லை. 


அப்பொழுது பக்கத்தில் இருந்த அணில்கள் இதை பார்த்துக் கொண்டிருந்தது. குரங்கிற்கு கட்ட தெரியவில்லையே! கல்லை மட்டும் போட்டால் கட்டிடம் நிற்காதே! குறுக்க குறுக்க மணலைக் கொட்டி பூசினால் தானே நிற்கும்! ராமருக்கு காலை போஜனம் ஆகிவிட்டது. மதிய போஜனம் குள் போய் சேர வேண்டுமே! குரங்குகள் மெதுவாக வேலை செய்கிறதே! நாம் போய் பூசுவோம் என்று நினைத்து, நீரில் தங்களை நனைத்துக் கொண்டு பின் மணலில் புரண்டு தன் உடம்பில் ஒட்டிக் கொண்டு போய் கல்லுக்குள் ஒவ்வொரு இடுக்கிலும் ஓடி ஓடி மணலை உதிர்த்து விடுகிறது பூச்சு வேலைக்கு உதவுவது போல. 


பெரு யாத்திரை செல்லும் பாறைகளைத் தூக்கிச் செல்லும் வானரங்களுடன், உடலில் மணலை ஒட்டிக் கொண்டு அணில்கள் அனுயாத்திரை செய்தன.

அப்படி, அணில்களும், குரங்குகளும் ஸ்ரீராமருக்கு கைங்கர்யம் செய்ததைப் போல ஏதும் செய்யாது மரம் போன்ற மனதுடன் இருப்பதாக தொண்டரடிப் பொடி ஆழ்வார் வருந்தி பாடியுள்ளார்

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “அணில் செய்த அந்த கைங்கர்யம் மிகவும் சிறியது தான். ஆனால் அந்த அளவு கைங்கர்யம் செய்யும் பாக்கியம் கூட எனக்கு இல்லையே. அணிலை போல் ஓடி ஓடி நான் எதுவும் கைங்கர்யம் பண்ணலையே! ராமரை தொடர்ந்து போகவில்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

லீலை கண்ணன் கதைகள் - 18

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

கிருஷ்ணனின் குறும்புகள்| 1

நாளடைவில் பலராமனும் கிருஷ்ணனும் தவழ ஆரம்பித்தார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து தவழ்ந்து சென்று விளையாடுவார்கள். அவர்களுடைய தண்டை மணிகளின் ஒலி காதுக்கு இனிமையாக இருக்கும். 

இந்தக் குழந்தைகள் தெருவில் செல்லும் பெண்களைத் தங்கள் தாயார்கள் என்று நினைத்துக் கொண்டு, அவர்கள் பின்னால் தவழ்ந்து செல்வார்கள். இதைக் கண்டு அந்தப் பெண்கள், "பலராமனும் கிருஷ்ணனும் எப்படித் தவழ்கிறார்கள் பார்!" என்று சொல்லி மகிழ்வார்கள்.


சில சமயங்களில் இந்தக் குழந்தைகள் கன்றுக் குட்டிகளின் வால்களைப் பிடித்திழுக்கும். கன்றுக் குட்டிகள் பயந்து இங்கும் அங்கும் தாவும், ஆனால் குழந்தைகளோ அந்தக் கன்றுக் குட்டிகளின் வால்களை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும். கன்றுக் குட்டிகளோ பயந்து இன்னும் வேகமாக ஓட ஆரம்பிக்கும். பிறகு எல்லோரும் சிரித்து மகிழ்வார்கள். இப்படி கோகுலத்தில் நாட்கள் உல்லாசமாகக் கழிந்தன. சீக்கிரமே குழந்தைகள் தவழும் பருவம் நீங்கி ஓடும் பருவத்திற்கு வந்தார்கள். 


இந்தச் சிறுவர்கள் மற்றச் சிறுவர்களோடு சேர்ந்துக் கொண்டு குறும்புத்தனம் செய்ய ஆரம்பித்தார்கள். ஆனால் அவர்களுடைய குறும்புத்தனங்கள் கோபிகளை மகிழ்விக்கத் தான் செய்தன. இன்றும் கிருஷ்ணனுடைய லீலைகள் பக்தர்களுக்கு மகிழ்ச்சியைத் தான் அளித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் கிருஷ்ணன் கோபிகளின் வீடுகளில் செய்த குறும்புத்தனத்தை பற்றி அந்தக் கோபிகள் புகார் செய்ததை யசோதை அடிக்கடி கேட்க வேண்டி வந்தது.


ஒரு கோபி சொல்லுவாள்: "நேற்று விடிய காலையிலேயே கிருஷ்ணன் என் வீட்டிற்கு வந்து விட்டான். நான் பசுக்களைக் கறக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன். கடைசியில் மாட்டுக் கொட்டகைக்குச் சென்றால், கிருஷ்ணன் ஏற்கனவே கன்றுக் குட்டியை அவிழ்த்து விட்டு விட்டதனால் கன்றுக் குட்டி எல்லாப் பாலையும் குடித்து விட்டது. திரும்பி பார்த்தால் தூரத்தில் கிருஷ்ணன் குறும்புச் சிரிப்புடன் நின்று கொண்டிருந்தான். அவனைப் பிடிப்பதற்காகச் சென்றேன். அவனோ ஓடி போய் இன்னொரு வீட்டுக்குள் ஒளிந்து கொண்டு விட்டான்".


இன்னொரு கோபி சொல்லுவாள்: "உன் மகன் திருடுவதில் பெரிய நிபுணன் ஆகி விட்டான். என் வீட்டில் வெண்ணெயையும் பாலையும் திருடுவதற்கு அவன் எத்தனை வழிகள் வைத்திருக்கிறான், தெரியுமா? அவற்றை அவன் சாப்பிட்டது போக, மீதியை மரங்களில் காத்திருக்கும் குரங்குகளுக்கு கொடுக்கிறான். உயரத்தில் உள்ள பானைகள் எட்டவில்லை என்றால் கற்களை விட்டெறிந்து அவற்றை உடைக்கிறான். அவனும் அவனுடைய நண்பர்களும் கீழே, "ஆ' என்று வாயைத் திறந்து கொண்டு நிற்கிறார்கள். பானையிலிருந்து வரும் தயிரைக் குடிக்கிறார்கள்". இப்படி தினமும் ஒவ்வொரு கோபிகைகள் யசோதை வீட்டிற்கு வந்து புகார் செய்து விட்டு போவார்கள். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 002 - திருக்கோழி 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

002. திருக்கோழி 
திரு உறையூர், நிசுளாபுரி, உறந்தை - திருச்சி
இரண்டாவது திவ்ய க்ஷேத்ரம் 

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
2 ஆழ்வார்கள் – 2 பாசுரங்கள்

1. குலசேகராழ்வார் - 1 பாசுரம் 
1. பெருமாள் திருமொழி (முதலாம் ஆயிரம்) 

  • திவ்ய ப்ரபந்தம் - 667 - இரண்டாம் திருமொழி - பத்தாம் பாசுரம் 

-----------
2. திருமங்கையாழ்வார் - 1 பாசுரம்  
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 1762 - ஒண்பதாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
-----------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார் 
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி
சிறப்புடைய செல்வத் திருப்பதிகள் போலே
மறப்புடைய நாயேன் மனத்துள் உறப் போந்து
அறம்தையா நின்ற அரங்கா திரு வாழ்
உறந்தையாய் இங்கு உறைந்தது ஒது

  • மறப்பு உடைய - மறதியை உடைய
  • நாயேன் - நாய் போலக் கடைப்பட்டவனான எனது
  • மனத்துள் - மனத்திலே
  • உறபோந்து - நன்றாக எழுந்தருளி இருந்து
  • அறம் தையாநின்ற - தருமத்தைப் பதியுமாறு செய்கின்ற
  • அரங்கா - திருவரங்கநாதனே!
  • திரு வாழ் உறந்தையாய் - இலக்குமி வாழ்கின்ற திருவுறையூர் என்னும் திவ்ய ஸ்தலத்தில் எழுந்தருளி இருப்பவனே!
  • சிறப்பு உடைய செல்வம் திருப்பதிகள் போல - பெருமை பெற்ற செல்வம் நிறைந்த திவ்ய ஷேத்திரங்கள் போல
  • இங்கு - இந்த என் மனத்தில்
  • உறைந்தது - நித்தியவாசம் செய்வதற்குக் காரணத்தை
  • ஓது - நீ கூறியருள்வாய்

உறையூர் என்னும் திருப்பதியில் உறைந்திருக்கும் அரங்கனாகிய பெருமானே, சிறந்த திவ்ய தேசங்களில் கோயில் கொண்டிருப்பது போல், மிகத் தாழ்ந்தவனான என் மனத்திலும் புகுந்து அகலாமல் உறைந்திருப்பது எவ்வாறு? சொல்வாயக!
-----------
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 2

குலசேகராழ்வார்

001. திவ்ய ப்ரபந்தம் - 667 - அடியார்க்கு அடியார் ஆவர்
பெருமாள் திருமொழி - இரண்டாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
அல்லி மா மலர் மங்கை நாதன்* அரங்கன் மெய்யடியார்கள் தம்* 
எல்லை இல் அடிமைத் திறத்தினில்* என்றும் மேவு மனத்தனாம்* 
கொல்லி காவலன் கூடல் நாயகன்* கோழிக் கோன் குலசேகரன்*
சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர்* 
தொண்டர் தொண்டர்கள் ஆவரே| (2)

திருமங்கை ஆழ்வார் 

002. திவ்ய ப்ரபந்தம் - 1762 - கடல் வண்ணர் கட்டழகுடையவர்
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்  
கோழியும் கூடலும் கோயில் கொண்ட* கோவலரே ஒப்பர் குன்றம் அன்ன*
பாழி அம் தோளும் ஓர் நான்கு உடையர்* 
பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்**
வாழியரோ இவர் வண்ணம் எண்ணில்* 
மா கடல் போன்று உளர் கையில் வெய்ய*
ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி* அச்சோ ஒருவர் அழகிய வா|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - பெரியாழ்வார் திருமொழி - 1 - 1 அறிமுகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - முதலாம் திருமொழி - 10 பாசுரங்கள்
திவ்ய ப்ரபந்தம் - 13 - 22

கண்ணன் திருவவதாரச் சிறப்பு

கலிவிருத்தம்

பிறந்த நாளை எப்படி வேண்டுமானாலும் கொண்டாடலாம். கண்ணன் பிறந்த நாள் எப்படிக் கொண்டாடப்படுகிறது! திருவாய்பாடியில் நந்தகோபருடைய அழகிய திருமாளிகையில் கேசவன் என்ற திருநாமத்துடன் கண்ணனாக திருவவதரித்தபோது கோகுலவாசிகள் அளவில்லா உத்ஸாகத்தை அடைந்தார்கள். பக்தியின் எல்லையைக் கடந்தவர்களின் செயல் இப்படித்தான் இருக்கும்! 


குழந்தை கண்ணன் யார்? ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையாகக் கூறிப் புகழ்கிறார்கள். கண்ணன் பிறந்த சந்தோஷத்தை எப்படியெல்லாம் ஆயர்பாடியர்கள் கொண்டாடினார்கள் என்பதை மிக ஆச்சர்யமாக சித்தரிக்கிறார் ஆழ்வார். ஆனால் ஒன்று மட்டும் உறுதி! பலரும் பல வகையாகப் புகழ்வதற்கு ஏற்ற தகுதியுடையவன் அவன் ஒருவனே!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.12

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் – 1.12 

தஸ்ய ஸஞ்ஜநயந் ஹர்ஷம்
குரு வ்ருத்³த⁴: பிதாமஹ:|
ஸிம்ஹ நாத³ம் விநத்³யோச்சை:
ஸ²ங்க²ம் த³த்⁴மௌ ப்ரதா பவாந்||

  • தஸ்ய - அவனுடைய (துரியோதனனுடைய) இதயத்தில் 
  • ஸஞ்ஜநயந் - அதிகரிக்கின்ற 
  • ஹர்ஷம் - மகிழ்ச்சி 
  • குரு வ்ருத்³த⁴ஃ - குரு வம்சத்தின் முதியவர் 
  • பிதாமஹஹ - பாட்டனார் பீஷ்மர்
  • ஸிம்ஹ நாத³ம் - சிங்கத்தைப் போன்ற கர்ஜனை ஒலி 
  • விநத்³ய - அதிர்வடைந்து 
  • உச்சைஹி - மிக சத்தமாக 
  • ஸ²ங்க²ம் - சங்கு 
  • த³த்⁴மௌ - ஊதினார் 
  • ப்ரதா பவாந் - கீர்த்தி மிக்க பெரும் வீரர்

அப்போது, குரு வம்சத்தின் மூத்தவரும் மாபெரும் வீரரும் பாட்டனாருமான பீஷ்மர், தனது சங்கை சிங்க கர்ஜனை போன்று உரக்க ஊதி துரியோதனனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.1.19

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² ப்ரத²ம: அத்⁴யாய꞉||
||நைமிஷ க்ஷேத்ரே ஸ்ரீமத் பாகவத விஷயே  
ஸூதம், ப்ரதி ஸொ²னகாதி முனீநாம் ப்ரஸ்ந:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||முதல் அத்யாயம்|| 
||ஞானிகளின் கேள்விகள்||

ஸ்லோகம் - 1.1.19

வயம் து ந வித்ருப் யாம 
உத்தம ஸ்²லோக விக்ரமே|
யத் ச்²ருண் வதாம் ரஸ ஜ்ஞாநாம்
ஸ்வாது³ ஸ்வாது³ பதே³ பதே³||

  • வயம் து - நாங்களோ எனில்
  • உத்தம ஸ்²லோக விக்ரமே - பகவானுடைய பராக்ரமங்களைக் கேட்பதில்
  • ந வித்ருப் யாம - திருப்தி அடையோம். மேலும் மேலும் கேட்பதில் விருப்பமுள்ளவர்களாகவே ஆவோம்
  • யத் - எந்த பகவானின் பண்புகள்
  • ச்²ருண் வதாம் - கேட்கின்றவர்களுக்கும்
  • ரஸ ஜ்ஞாநாம் - ரஸத்தை அறிந்தவர்களுக்கும்
  • பதே³ பதே³ - ஒவ்வொரு க்ஷணமும் கேட்கக் கேட்க
  • ஸ்வாது³ ஸ்வாது³ - இனிக்கும் தன்மை எனவோ

மேலான புகழ் வாய்ந்த பகவானது திருவிளையாடல்களைக் கேட்பதில் ஆர்வமுடைய எங்களுக்கு, அதை கேட்பதில் போதும் என்கிற மனநிலை (திருப்தி) இன்னும் ஏற்படவில்லை. ஏனெனில், அதன் உண்மையான இனிய இன்பத்தை உணர்ந்த அடியவர்களுக்கு, அதன் ஒவ்வொரு சொல்லும் இன்பம் தருவதாக இருக்கிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 27

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

த்யான ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 4

மேக⁴ ஸ்²யாமம் பீத கௌஸே²ய வாஸம்
ஸ்ரீவத் ஸாங்கம் கௌஸ்து போ⁴த்³ பா⁴ஸி தாங்க³ம்|
புண்யோ பேதம் புண்ட³ரீ காய தாக்ஷம்
விஷ்ணும் வந்தே³ ஸர்வ லோகைக நாத²ம்||


நம: ஸமஸ்த பூ⁴தாநாம் 
ஆதி³ பூ⁴தாய பூ⁴ப்⁴ருதே|
அநேக ரூப ரூபாய 
விஷ்ணவே ப்ரப⁴ விஷ்ணவே||

  • பீத - மஞ்சள்
  • கௌஸே²ய - பட்டு
  • வாஸம் - உடை, வஸ்திரம்
  • ஸ்ரீவத்ஸம் - தாங்குபவர்
  • அங்கம் - குறி
  • கௌஸ்துபம் - ரத்தினம்
  • உத்³ பாஸி தாங்க³ம் - அலங்கரிக்கப்பட்ட மற்றும் அங்க என்பது உடலின் ஒரு பகுதியாகும்
  • புண்யா - ஆசீர்வதிக்கப்பட்ட நபர்
  • உபேதம் - சூழப்பட்டுள்ள
  • புண்ட³ரீ கா - தாமரை
  • ஆயதா - நீளம் மற்றும் அகலம்
  • அக்ஷம் - கண்
  • விஷ்ணும் வந்தே³ - நான் விஷ்ணுவை வணங்குகிறேன்
  • ஸர்வ - அனைத்து
  • லோக - உலகம்
  • ஏகா - மட்டும், என்றும்
  • நாத²ம் – தலைவர்

மழை மேகங்களின் ஆழமான கருநீல நிறத்தை உடைய திருமேனியர்; கவர்ச்சிகரமான மஞ்சள் நிற பட்டு உடையில் அலங்கரிக்கப்பட்டவர்; திருமார்பில் அற்புதமான ஸ்ரீ வத்ஸம் எனப்படும் முத்திரையால் அலங்கரிக்கப்பட்டவர்; தன் உடம்பில் கௌஸ்துப ரத்தினத்தின் பிரகாசத்தை ஒளிரச் செய்பவர்; ஆசீர்வதிக்கப்பட்ட புண்ணிய மக்களால் தொடர்ந்து சூழப் பெற்றவர்; தாமரை மலரைப் போல நீளமாகவும் அகலமாகவும் அழகாகவும் திருக்கண்களை உடையவர்; எல்லா உலகங்களுக்கும் ஒப்பற்ற தலைவர். இப்படிப்பட்ட மகாவிஷ்ணுவை வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - இருபத்தி நான்காவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

024 ஆயனை வளர்த்தேனோ யசோதையாரைப் போலே|

ஒருத்தி மகனாய் பிறந்து, ஒருத்தி மகனாய் வளர்ந்தவன் கண்ணன்.

கண்ணன் குழ்ந்தைப் பருவத்தை அனுபவித்தவள் யசோதை மட்டுமே! அனைத்து பலன்களையும் யசோதை பெற்றிருக்கிறாளே! என்னால் அப்படி தாலாட்டு பாட முடியவில்லையே! என்று தேவகி நினைத்துக் கொள்வாளாம். இந்த ஆதங்கம் தேவகிக்கு இருந்தது. அந்த அளவுக்கு கண்ணனை வளர்க்கும் அனைத்து பலனையும் பெற்றவள் யசோதை. கிருஷ்ணர் கம்சனை வதம் செய்து, பெற்றோரை சிறை மீட்ட போது, தேவகி கேட்டுக் கொண்டதால், தான் பிறந்த கணத்திலிருந்து, அந்தக் கணம் வரை நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் கண்ணன் தாய்க்குக் காட்சிப் படுத்திக் காட்டினான்.


யசோதை எப்பவும் தானே சாப்பிட மாட்டாள். கண்ணன் சாப்பிட்ட மீதியை சாப்பிட்டு தான் வழக்கம். ராட்ஷர்களை பார்த்து கண்ணன் பயந்து விட போகிறானே என்று பார்த்து பார்த்து தாயத்து காட்டி, பயந்து விடாமல் இருக்க என்னென்னவோ செய்வாளாம் யசோதை. அதே போல ஆழ்வார்கள் தங்களை யசோதையாகப் பாவித்து கண்ணனைக் கொண்டாடினார்கள்


திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “அப்படி ஒரு பலனையும் நான் பெறவில்லையே! கண்ணனை குழந்தையாக எண்ணி வளர்க்கும் பரிவு என்னிடம் இல்லையே! அந்த அளவிற்கு பெருமை வாய்ந்த யசோதையா நான் இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

லீலை கண்ணன் கதைகள் - 17

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

குழந்தைக்கு பெயர்சூட்டு விழா|

யாதவர்களுக்குக் குலகுருவாக கர்க்க மகரிஷி இருந்தார். அதனால் தம் குழந்தைகளுக்கு கர்க்கர் தாம் நாமகரணச் சடங்கு செய்ய வேண்டும் என்று வசுதேவர் விரும்பினார். ஆதலால் கோகுலம் வந்து குழந்தைகளுக்கு நாமகரணம் செய்து வைக்க வேண்டும் என்று கர்க்கரை வேண்டிக் கொண்டார். கர்க்கர் கோகுலம் வந்து சேர்ந்தார். நந்தகோபரும் யசோதையும் அவரை அன்போடும் பக்தியுடனும் வரவேற்றனர். கோகுலவாசிகள் எல்லோருமே அவர் திருவடிகளில் விழுந்து வணங்கினார்கள். அந்த இரு பிள்ளைகளுக்கும் நாமகரணம் செய்து வைக்குபடி நந்தகோபர் கர்க்கரைக் கேட்டுக் கொண்டார். கர்க்கரும் அதே காரியமாகத்தான் அங்கே வந்திருந்தார். அதனால் நந்தகோபர் சொன்னதை அவர் உடனே ஒப்புக் கொண்டார். ஆனால் அந்த சடங்கை ஆடம்பரமின்றி செய்ய வேண்டும் என்று அவர் சொன்னார். இல்லாவிட்டால் இந்த விஷயம் கம்சனுக்குத் தெரிய வரலாம், தான் நாம கரணம் செய்து வைத்ததனால் இந்தக் குழந்தைகளுக்கு எதோ முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று அவன் நினைத்துத் தன்னைக் கொல்ல பார்க்கலாம் என்று அவர் சொன்னார்.


கர்க்கர் சொன்னதை நந்தகோபர் ஏற்றுக் கொண்டார். எல்லாச் சடங்குகளையும் கர்க்கர் மிகவும் எளிய முறையில் செய்து முடித்தார். பிறகு அவர், " இந்த ரோகிணியின் மகன், தன் அழகினால் எல்லோரையும் தன்னை மோகிக்கச் செய்கிறான். தன்னுடைய நற்பண்புகளால் இவன் தன் நண்பர்களையும் உறவினர்களையும் மகிழ்விப்பான். அதனால் இவனை ராமன் என்று அழைப்போம். ஒரு காலத்தில் இவன் மிகுந்த பலசாலியாக விளங்குவான். அதனால் இவனை 'பலன்' என்றும் அழைக்கலாம். வசுதேவர் குடும்பத்தையும், நந்தகோபர் குடும்பத்தையும் இவன் இணைப்பதால் இவனை 'சங்கர்ஷணன்' என்றும் அழைக்கலாம்" என்று சொன்னார்.


பிறகு குழந்தையைப் பார்த்து, "இந்தக் குழந்தை கடவுளின் அவதாரம். இவன் கறுப்பாக இருப்பதனால் இவனைக் கிருஷ்ணன் என்று அழைக்கலாம். இவனுடைய தகப்பனாரின் பெயர் வசுதேவராதலால் இவன் வாசுதேவன் என்றும் அழைக்கப் படுவான். உனக்கும் கோகுலத்தில் உள்ள மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் இவன் உங்களுக்கு எத்தனையோ நலன்களை அளிக்கப் போகிறான். இவனை மிகவும் ஜாக்கிரதையாகக் கவனித்துக் கொள்ளுங்கள்" என்று சொன்னார். 

சடங்குகள் முடிந்ததும், கர்க்கர் எல்லோரையும் ஆசீர்வதித்து விட்டு, தம் இருப்பிடம் திரும்பினார். நந்தகோபரும் யசோதையும் தாங்கள் பாக்கியசாலிகள் என்று மகிழ்ச்சி டைந்தார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 002 - திருக்கோழி 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

002. திருக்கோழி 
திரு உறையூர், நிசுளாபுரி, உறந்தை - திருச்சி
இரண்டாவது திவ்ய க்ஷேத்ரம் 

ஸ்ரீ அழகிய மணவாளன் பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ வாஸலக்ஷ்மி தாயார் ஸமேத ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் 
திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்: அழகிய மணவாளன் (ப்ரயோக சக்கரம்)
  • பெருமாள் உற்சவர்: சுந்தரவரயன்
  • தாயார் மூலவர்: கமலவல்லி 
  • தாயார் உற்சவர்: வாஸலக்ஷ்மீ, உறையூர்வல்லி
  • திருமுக மண்டலம் திசை: வடக்கு
  • திருக்கோலம்: நின்ற 
  • புஷ்கரிணி: கமல, சூர்ய
  • தீர்த்தம்: கல்யாண, குடமுருட்டி நதி
  • விமானம்: கல்யாண
  • ப்ரத்யக்ஷம்: ரவிதர்மராஜன், கோடி தேவர்கள்
  • ஆகமம்: பாஞ்சராத்திரம் 
  • ஸம்ப்ரதாயம்: தென் கலை
  • மங்களாஸாஸநம்: 2 ஆழ்வார்கள்
  • பாசுரங்கள்: 2

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

திருப்பாணாழ்வார் இத்தலத்தில் அவதரித்தவர். இவர் தனிச்சன்னதியில் இருக்கிறார். நாயன்மார்களில் புகழ் சோழர், கோச்செங்கட்சோழர் ஆகிய இருவரும் இவ்வூரில் அவதரித்தவர்களே ஆவர். பொதுவாக வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் சொர்க்க வாசலைக் கடந்து வரும் வைபவம் வைணவத் தலங்களில் நடைபெறும். இதிலிருந்து மாறுபட்டு, தாயார் சொர்க்க வாசல் கடக்கும் நிகழ்ச்சி மாசி மாத தேய்பிறை ஏகாதசி நாளில், உறையூரில் மட்டுமே நடைபெறும். வைகுண்ட ஏகாதசியன்று இங்கு சொர்க்க வாசல் திறப்பதில்லை. வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறும். இங்கே பகவானுக்குரிய எல்லா வழிபாடுகளும் இந்த கமலவல்லித் தாயாருக்கு நடக்கிறது. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

மூலஸ்தானத்தில் அழகிய மணவாளப் பெருமாளும், கமலவல்லி தாயாரும் திருமணக் கோலத்தில் நின்றபடி காட்சி தருகின்றனர். ரங்கநாதரே தாயாரை மணந்து கொண்டால் இங்கு ஸ்வாமி, தாயார் இருவரும் அவரை பார்த்தபடி வடக்கு திசை நோக்கியிருக்கின்றனர். திருமணத்தடையுள்ளவர்கள் ஆயில்யம் நட்சத்திரத்தன்று தாயாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை. இத்தலம் தாயாரின் பிறந்த தலம் என்பதால், இவளே இங்கு பிரதானமாக இருக்கிறாள். இவளது பெயரால் இத்தலம் நாச்சியார் கோயில் என்றும் அழைக்கப் படுகிறது. மூலஸ்தானத்தில் தாயார் மட்டுமே உற்சவராக இருக்கிறாள். பெருமாள் உற்சவர் இல்லை. பொதுவாக பெருமாள் தலங்களில் குங்கும பிரசாதம் கொடுப்பர். ஆனால், இங்கு சந்தன பிரசாதம் தருகின்றனர். இவளுக்கு படைக்கப்படும் நைவேத்யத்தில் காரத்துக்காக மிளகாய் வத்தல் சேர்க்காமல் மிளகு சேர்க்கப்படுகிறது. 

இக்கோயில் விழாக்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் விழாக்களையொட்டி நடக்கிறது. ரங்கநாதர் மார்கழியில் வைகுண்டவாசல் கடந்த பின்பு, தை அல்லது மாசியில் வரும் ஏகாதசியன்று இவள் சொர்க்கவாசல் வழியே செல்கிறாள். ஸ்ரீரங்கத்தில் நடக்கும் பங்குனி விழாவின் போது, உற்சவர் நம்பெருமாள் ஒருநாள் இத்தலத்திற்கு எழுந்தருளி, நாச்சியாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார். கமலவல்லி, பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் அவதரித்ததாக ஐதீகம். எனவே ஆயில்ய நட்சத்திரத்தில் இவ்விழா (ஆறாம் நாள் விழா) நடக்கிறது. அன்று அதிகாலையில் ஸ்ரீரங்கத்தில் இருந்து நம்பெருமாள் பல்லக்கில் காவிரிக்கரையில் உள்ள அம்மா மண்டபம், காவிரி, குடமுருட்டி நதிகளைக் கடந்து இக்கோயிலுக்கு வருகிறார். அப்போது இவ்வூர் பக்தர்கள் வழிநெடுகிலும் வாழை மரங்கள் கட்டி, வாசலில் கோலம் போட்டு மணமகனுக்கு வரவேற்பு கொடுக்கின்றனர். கோயிலுக்கு வரும் ஸ்வாமி, மூலஸ்தானம் எதிரே நின்று தாயாரை அழைக்கிறார். பின்பு பிரகாரத்தில் உள்ள சேர்த்தி மண்டபத்திற்கு செல்கிறார். அதன் பின் தாயாரும் சேர்த்தி மண்டபத்திற்கு சென்று, ஸ்வாமியுடன் சேர்ந்து மணக்கோலத்தில் இரவு சுமார் 11 மணி வரையில் காட்சி தருகிறார். பின்னர் மூலஸ்தானத்திற்கு தாயார் திரும்ப, ஸ்வாமி மீண்டும் ஸ்ரீரங்கம் செல்கிறார். பங்குனி உத்திரத்தன்று இவர் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாயகி தாயாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார். இவ்வாறு பங்குனி விழாவில் ஸ்வாமி, இரண்டு தாயார்களுடன் சேர்ந்து காட்சி தருவதை தரிசிப்பது விசேஷம்.

ரங்கநாதரின் பக்தனான நங்த சோழ மன்னன், இப்பகுதியை ஆண்டு வந்தான். அவனுக்கு புத்திரப் பேறு இல்லை. ரங்கனிடம் குழந்தை பாக்கியம் தரும்படி வேண்டினான். தன் தீவிர பக்தனுக்காக, மகாலட்சுமியையே மன்னனின் மகளாக அவதரிக்கும் படி ரங்கநாதர் அனுப்பினார். ஒருசமயம் நந்த சோழன் வேட்டைக்குச் சென்றபோது, ஒரு தடாகத்தில் தாமரை மலரில், ஒரு குழந்தை படுத்திருப்பதைக் கண்டான். மகிழ்ச்சியுடன் அக்குழந்தையை எடுத்து, "கமலவல்லி' (கமலம்-தாமரை) என பெயரிட்டு வளர்த்தான். பருவமடைந்ததும், தோழியருடன் வனத்தில் உலவிக் கொண்டிருந்தாள். அப்போது, ரங்கநாதர் அவள் முன்பு குதிரையில் சென்றார். அவரைக் கண்ட கமலவல்லி அவர் மீது காதல் கொண்டாள். அவரையே மணப்பதென உறுதி பூண்டாள். நந்த சோழனின் கனவில் தோன்றிய பெருமாள், தான் கமலவல்லியை மணக்க விருப்பதாக கூறினார். எனவே நந்தசோழன், கமலவல்லியை ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்றார். அங்கு ரங்கநாதருடன், கமலவல்லி ஐக்கியமானாள். பின்பு மன்னன், உறையூரில் கமலவல்லிக்கு கோயில் எழுப்பினான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்