About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 7 October 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 56

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 26

ஸுப்ரஸாத³: ப்ரஸந்நாத்மா 
விஸ்²வத்ருக்³ விஸ்²வபு⁴க்³ விபு⁴:|
ஸத் கர்த்தா ஸத் க்ருத: ஸாது⁴ர் 
ஜஹ்நுர் நாராயணோ நர:||

  • 238. ஸுப்ரஸாத³ஃ - மிகவும் அருள் புரிபவன்.
  • 239. ப்ரஸந்நாத்மா - தெளிவான சிந்தை உடையவன்.
  • 240. விஸ்²வத்ருக்³ - எல்லாவற்றையும் படைப்பவன்.
  • 241. விஸ்²வபு⁴க்³ விபு⁴ஹு - எங்கும் பரந்திருந்து காப்பவன்.
  • 242. ஸத் கர்த்தா - நல்லார்களை இயல்பாகப் பாதுகாப்பவன்.
  • 243. ஸத் க்ருதஸ் - நல்லார்களால், சாதுக்களால் வழிபடக்கூடியவன்.
  • 244. ஸாது⁴ர்- தன்னை அண்டியவர்களுக்கு நல்லவன்.
  • 245. ஜஹ்நுர் - அடியார் அல்லாதவர்க்குத் தனது பெருமையைக் காட்டாதவன்.
  • 246. நாராயணோ - நாராயணன். எல்லா உயிர்களையும் தாங்குபவன்
  • 247. நரஹ - அழியாதவன்.
ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.41

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் – 1.41 

அத⁴ர்மாபி⁴ ப⁴வாத் க்ருஷ்ண 
ப்ரது³ஷ் யந்தி குல ஸ்த்ரிய:|
ஸ்த்ரீஷு து³ஷ்டாஸு வார்ஷ்ணேய 
ஜாயதே வர்ண ஸங்கர:||

  • அத⁴ர்ம: - அதர்மம் 
  • அபி ப⁴வாத் - உச்சமடைவதால் 
  • க்ருஷ்ண - கண்ணா! 
  • ப்ரது³ஷ் யந்தி - கெட்டுப் போகிறார்கள்
  • குல ஸ்த்ரியஹ - குடும்பப் பெண்கள்
  • ஸ்த்ரீஷு - பெண்மை 
  • து³ஷ்டாஸு - களங்கமடைவதால் 
  • வார்ஷ்ணேய - விருஷ்ணி குலத்தவரே 
  • ஜாயதே - உண்டாகிறது 
  • வர்ண ஸங்கரஹ - வர்ணக் கலப்பால் தேவையற்ற சந்ததி

விருஷ்ணி குலத்தில் உதித்தவனே! கிருஷ்ணா! அதர்மம் மிகுவால் குலமகளிர் கற்பை இழப்பார்கள். பெண்கள் கற்பை இழப்பதால் ஜாதி கலப்பு உண்டாகிறது.

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.2.25

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா: 
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம் 
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்|| 
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||

ஸ்லோகம் - 1.2.25

பே⁴ஜிரே முநயோ தா²க்³ரே 
ப⁴க³வந் தம் அதோ⁴க்ஷஜம்|
ஸத்த்வம் விஸு²த்³தம் க்ஷேமாய 
கல்பந்தே யேநு தாந் ஹிந||

  • அத² - இக் காரணத்தால்
  • அக்³ரே - முற் காலத்தில் 
  • முநயோத் - மஹரிஷிகள்
  • விஸு²த்³தம் - இயற்கையின் முக்குணங்களுக்கும் மேல் மிகப் பரிசுத்தமானவரும்
  • ஸத்த்வம் - ஸத்வ ரூபியாக உள்ளவரும்
  • ப⁴க³வந்தம் - பகவானான
  • அதோ⁴க்ஷஜம் - திவ்யமானவருமான
  • க்ஷேமாய - முடிவான நன்மையை அடைய
  • பே⁴ஜிரே - சரணமாக அடைந்தனர்
  • யேநு தாந் ஹிந - எவர்கள் அந்த மஹரிஷிகளை அநுசரித்து இருக்கின்றனரோ அவர்கள்
  • இஹ - இவ்வுலகில்
  • கல்பந்தே - யோகியர்கள் ஆகிறார்கள்

ஆகையால், முற்காலத்தில் முனிவர்கள் தங்களது நன்மையைக் கருதி தூய்மையானவரும், சுத்த ஸத்வ ரூபமானவருமான பகவான் வாசுதேவனைச் சரணமடைந்தனர். இப்போதும் அந்த முனிவர்களைப் பின்பற்றியவர்கள், இவ்வுலகியல் கட்டுகளை உதறித் தள்ளி விடுபட்டு முக்தியை அடைகின்றனர்.

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - த்யான ஸ்லோகம் 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்⁴யான மங்க³ல ஸ²லோகா꞉ 4
ஶ்ரீ வால்மீகி நமஸ்க்ரியா:

வால்மீகி கி³ரி ஸம்பூ⁴தா 
ராம ஸாக³ர கா³மிநீ|
புநாது பு⁴வநம் புண்யா 
ராமாயண மஹா நதீ³||

  • வால்மீகி கி³ரி ஸம்பூ⁴தா - வால்மீகி என்ற மலையில் உற்பத்தியாகி
  • ராம ஸாக³ர கா³மிநீ - ராமன் என்ற கடலை நோக்கிச் செல்லும்
  • ராமாயண மஹா நதீ³ - ராமாயணம் என்னும் மகாநதியானது
  • பு⁴வநம் - உலகத்தை
  • புநாது - தூய்மையாக்குமாக 

வால்மீகி என்ற மலையில் உற்பத்தியாகி, ராமன் என்ற கடலை நோக்கிச் செல்லும் ராமாயணம் என்னும் மகாநதியானது உலகத்தை மிகவும் தூய்மை ஆக்கும்.

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திவ்ய ப்ரபந்தம் - 40 - பெரியாழ்வார் திருமொழி - 1.2.18

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 40 - மகரக் குண்டலங்கள் பதிந்த திருச்செவிகள்
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - பதினெட்டாம் பாசுரம்

மண்ணும் மலையும்* 
கடலும் உலகேழும்* 
உண்ணும் திறத்து* 
மகிழ்ந்துண்ணும் பிள்ளைக்கு*
வண்ணமெழில் கொள்* 
மகரக் குழை இவை* 
திண்ணம் இருந்தவா காணீரே* 
சேயிழையீர்! வந்து காணீரே|

  • மண்ணும் - பூமியையும்
  • மலையும் - மலைகளையும்
  • கடலும் - கடல்களையும்
  • உலகு ஏழும் - ஸப்த (ஏழு) லோகங்களையும் 
  • உண்ணும்  - திருவயிற்றில் வைத்துக் கொள்ளும் 
  • திறத்து - திறமையுடன்
  • மகிழ்ந்து - உகந்து 
  • உண்ணும் - உண்கின்ற
  • பிள்ளைக்கு - இக் கண்ணபிரானின்
  • எழில் வண்ணம் கொள் - அழகிய நிறம் கொண்ட
  • மகரம் குழை இவை - எங்கும் பிரகாசிக்கின்ற அழகுடைய மீன் வடிவ குண்டலங்களின் (காதணிகள்) 
  • திண்ணம் இருந்தவா காணீரே - திண்மையான அழகைக் காண வாருங்கள்! 
  • சேயிழையீர்! - அழகிய ஆபரணங்களை அணிந்துள்ள பெண்களே! 
  • வந்து காணீர்! - காண வாருங்கள்! 

பிரளய காலத்தில் மண்ணும், மலையும், பெருங்கடல்களும் நிறைந்திருக்கின்ற இந்த பூவுலகத்தோடு சேர்த்து ஏழு உலகங்களையும், வெண்ணெய் உண்பது போல் எளிதாய், இலகுவாய் விரும்பி தன் திரு வாயால் காக்கும் திறமையால் மகிழ்ச்சியுடன் உண்டு தன் வயிற்றில் அடக்கி வைக்கிறான். அச்சிறந்த பண்புடைய கண்ணனின் திருக்காதுகளில், பொன் வண்ண ஒளி எங்கும் சிதறுகின்ற அழகுடைய மீன் வடிவ குண்டலங்கள் ஒவ்வொன்றும் எத்தனை பொருத்தமாய், அழகாய் இருக்கின்றதென்பதை வந்து பாருங்கள். இங்கே வந்து, இந்த பிள்ளையின் காதுகளுக்குப் பொருத்தமாய் அமைந்திருக்கின்ற இந்த மகரக் குண்டலங்களின் அழகினை வந்து பாருங்கள் என்று செம்மையான ஆபரணங்கள் அணிந்துள்ள பெண்களை அழைக்கிறாள் யசோதை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 012 - திருக்குடந்தை 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

012. திருக்குடந்தை 
பாஸ்கர க்ஷேத்ரம் - கும்பகோணம்
பன்னிரெண்டாவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 51 - 1

பெரியாழ்வார்

001. திவ்ய ப்ரபந்தம் - 173 - திவ்ய தேசங்களில் விளையாடும் மகன்
பெரியாழ்வார் திருமொழி - இரண்டாம் பத்து - ஆறாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
கொங்கும் குடந்தையும்* கோட்டியூரும் பேரும்*
எங்கும் திரிந்து* விளையாடும் என்மகன்**
சங்கம் பிடிக்கும்* தடக்கைக்குத் தக்க* 
நல் அங்கம் உடையது ஓர் கோல் கொண்டு வா* 
அரக்கு வழித்தது ஓர் கோல் கொண்டு வா|

002. திவ்ய ப்ரபந்தம் - 177 - குடந்தைக் கிடந்தான்
பெரியாழ்வார் திருமொழி - இரண்டாம் பத்து - ஆறாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
ஆலத்து இலையான்* அரவின் அணை மேலான்*
நீலக் கடலுள்* நெடுங்காலம் கண் வளர்ந்தான்*
பாலப் பிராயத்தே* பார்த்தற்கு அருள் செய்த*
கோலப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா* 
குடந்தைக் கிடந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா|

003. திவ்ய ப்ரபந்தம் - 188 - திருக்குடந்தை ஆராவமுதுக்குக் குருக்கத்திப் பூ
பெரியாழ்வார் திருமொழி - இரண்டாம் பத்து - ஏழாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
குடங்கள் எடுத்து ஏற விட்டுக்* கூத்தாட வல்ல எம் கோவே*
மடம் கொள் மதி முகத்தாரை* மால்செய்ய வல்ல என் மைந்தா*
இடந்திட்டு இரணியன் நெஞ்சை* இரு பிளவு ஆக முன் கீண்டாய்*
குடந்தைக் கிடந்த எம் கோவே* குருக்கத்திப் பூச் சூட்ட வாராய்|

ஸ்ரீ ஆண்டாள் 

004. திவ்ய ப்ரபந்தம் – 628 - திருத்துழாயை என் கூந்தலில் சூட்டுங்கள்
நாச்சியார் திருமொழி - பதிமூன்றாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
பால் ஆலிலையில் துயில் கொண்ட* பரமன் வலைப்பட்டு இருந்தேனை*
வேலால் துன்னம் பெய்தாற் போல்* வேண்டிற்று எல்லாம் பேசாதே*
கோலால் நிரை மேய்த்து ஆயனாய்க்* குடந்தைக் கிடந்த குடம் ஆடி*
நீலார் தண்ணந் துழாய் கொண்டு* என் நெறி மென் குழல்மேல் சூட்டிரே|

திருமழிசை ஆழ்வார் 

005. திவ்ய ப்ரபந்தம் - 807 - திருக்குடந்தைக் கிடந்த திருமால்
திருச்சந்த விருத்தம் - ஆறாம் திருமொழி - ஆறாம் பாசுரம் (56)
இலங்கை மன்னன் ஐந்தொடு ஐந்து* பைந்தலை நிலத்து உக*
கலங்க அன்று சென்று கொன்று* வென்றி கொண்ட வீரனே*
விலங்கு நூலர் வேத நாவர்* நீதியான கேள்வியார்*
வலங் கொளக் குடந்தையுள்* கிடந்த மாலும் அல்லையே?

006. திவ்ய ப்ரபந்தம் - 808 - திருக்குடந்தை ஆராவமுது
திருச்சந்த விருத்தம் - ஆறாம் திருமொழி - ஏழாம் பாசுரம் (57)
சங்கு தங்கு முன் கை நங்கை* கொங்கை தங்கல் உற்றவன்*
அங்கம் மங்க அன்று சென்று* அடர்த்து எறிந்த ஆழியான்*
கொங்கு தங்கு வார் குழல்* மடந்தைமார் குடைந்த நீர்*
பொங்கு தண் குடந்தையுள்* கிடந்த புண்டரீகனே|

007. திவ்ய ப்ரபந்தம் - 809  - மத்த யானை கொம்பொடித்தவன்
திருச்சந்த விருத்தம் - ஆறாம் திருமொழி - எட்டாம் பாசுரம் (58)
மரம் கெட நடந்து அடர்த்து* மத்த யானை மத்தகத்து*
உரம் கெடப் புடைத்து* ஒர் கொம்பு ஒசித்து உகந்த உத்தமா*
துரங்கம் வாய் பிளந்து* மண் அளந்த பாத வேதியர்*
வரம் கொளக் குடந்தையுள்* கிடந்த மாலும் அல்லையே? 

008. திவ்ய ப்ரபந்தம் - 810 - திருக்குடந்தையுள் வாழும் கோவலன்
திருச்சந்த விருத்தம் - ஆறாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (59)
சாலி வேலி தண் வயல்* தடங்கிடங்கு பூம்பொழில்*
கோல மாடம் நீடு* தண் குடந்தை மேய கோவலா*
காலநேமி வக்கரன்* கரன் முரன் சிரம் அவை*
காலனோடு கூட* விற்குனித்த வில் கை வீரனே|

009. திவ்ய ப்ரபந்தம் - 811 - உயர் வேங்கடத்தில் நின்றவன்
திருச்சந்த விருத்தம் - ஆறாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (60)
செழுங் கொழும் பெரும்பனி பொழிந்திட* உயர்ந்த வேய்
விழுந்து உலர்ந்து எழுந்து* விண் புடைக்கும் வேங்கடத்துள் நின்று*
எழுந்திருந்து தேன் பொருந்து* பூம்பொழில் தழைக் கொழும்*
செழுந் தடங் குடந்தையுள்* கிடந்த மாலும் அல்லையே? 

010. திவ்ய ப்ரபந்தம் - 812 - கேசனே!எழுந்திருந்து பேசு
திருச்சந்த விருத்தம் - ஏழாம் திருமொழி - முதலாம் பாசுரம் (61) 
நடந்த கால்கள் நொந்தவோ?* நடுங்க ஞாலம் ஏனமாய்*
இடந்த மெய் குலுங்கவோ?* இலங்கு மால் வரைச் சுரம்*
கடந்த கால் பரந்த* காவிரிக் கரைக் குடந்தையுள்*
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு* வாழி கேசனே|

திருமங்கையாழ்வார் 

011. திவ்ய ப்ரபந்தம் - 949 - நாட்கள் வீணாயின இப்பொழுது தெளிந்தேன்
பெரிய திருமொழி - முதலாம் பத்து - முதலாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
ஆவியே! அமுதே! என நினைந்து உருகி* அவர் அவர் பணை முலை துணையா*
பாவியேன் உணராது எத்தனை பகலும்* பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்*
தூவி சேர் அன்னம் துணையொடும் புணரும்* சூழ் புனல் குடந்தையே தொழுது*
என் நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம்|

012. திவ்ய ப்ரபந்தம் - 954 - திருக்குடந்தைத் திருமாலையே தொழுமின்
பெரிய திருமொழி - முதலாம் பத்து - முதலாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
இல் பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர்* இன்னது ஓர் தன்மை என்று உணரீர்*
கற்பகம் புலவர் களைகண் என்று உலகில்* கண்டவா தொண்டரைப் பாடும்*
சொல் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்மின்* 
சூழ் புனல் குடந்தையே தொழுமின்*
நல் பொருள் காண்மின் பாடி நீர் உய்மின்* நாராயணா என்னும் நாமம்|

013. திவ்ய ப்ரபந்தம் - 991 - அரக்கரை அழித்தவன் வாழுமிடம் சாளக்கிராமம்
பெரிய திருமொழி - முதலாம் பத்து - ஐந்தாம் திருமொழி - நான்காம் பாசுரம் 
ஊரான் குடந்தை உத்தமன்* ஒரு கால் இரு கால் சிலை வளைய*
தேரா அரக்கர் தேர் வெள்ளம் செற்றான்* வற்றா வரு புனல் சூழ் பேரான்* 
பேர் ஆயிரம் உடையான்* பிறங்கு சிறை வண்டு அறைகின்ற தாரான்* 
தாரா வயல் சூழ்ந்த* சாளக்கிராமம் அடை நெஞ்சே|

014. திவ்ய ப்ரபந்தம் - 1078 - நால்வகைத் திருக்கோலங் கொண்டவன் இடம்
பெரிய திருமொழி - இரண்டாம் பத்து - நான்காம் திருமொழி - முதலாம் பாசுரம்
அன்று ஆயர் குலக் கொடியோடு* அணி மா மலர் மங்கையொடு அன்பு அளவி*
அவுணர்க்கு என்றானும் இரக்கம் இலாதவனுக்கு* உறையும் இடம் ஆவது*
இரும் பொழில் சூழ் நன்று ஆய புனல் நறையூர் திருவாலி குடந்தை* 
தடம் திகழ் கோவல்நகர்*
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம்* 
மா மலை ஆவது நீர்மலையே|

015. திவ்ய ப்ரபந்தம் - 1202 - குடந்தைப் பெருமானே! எனக்குத் துணைவனாகுக
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஆறாம் திருமொழி - - ஐந்தாம் பாசுரம்
வாள் ஆய கண் பனிப்ப* மென் முலைகள் பொன் அரும்ப*
நாள் நாளும்* நின் நினைந்து நைவேற்கு* 
ஓ மண் அளந்த தாளாளா தண் குடந்தை நகராளா* வரை எடுத்த தோளாளா* 
என் தனக்கு ஓர்* துணையாளன் ஆகாயே|

016. திவ்ய ப்ரபந்தம் - 1205 - மணவாளா! உன் நினைவால் தூங்கவே இல்லை
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஆறாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
குயில் ஆலும் வளர் பொழில் சூழ்* தண் குடந்தைக் குடம் ஆடி*
துயிலாத கண் இணையேன்* நின் நினைந்து துயர்வேனோ?*
முயல் ஆலும் இள மதிக்கே* வளை இழந்தேற்கு* 
இது நடுவே வயல் ஆலி மணவாளா* கொள்வாயோ மணி நிறமே?

017. திவ்ய ப்ரபந்தம் - 1394 - என் மகளது குணத்தை மாற்றி விட்டானே மாயன்!
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஐந்தாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
வார் ஆளும் இளங் கொங்கை* வண்ணம் வேறு ஆயினவாறு எண்ணாள்* 
எண்ணில் பேராளன் பேர் அல்லால் பேசாள்* 
இப் பெண் பெற்றேன் என் செய்கேன் நான்?*
தார் ஆளன் தண் குடந்தை நகர் ஆளன்* 
ஐவர்க்கு ஆய் அமரில் உய்த்த தேர் ஆளன்* 
என் மகளைச் செய்தனகள்* எங்ஙனம் நான் செப்புகேனே?

018. திவ்ய ப்ரபந்தம் - 1526 - திருக்குடந்தைக் கிடந்தவனைக் கண்டேன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - எட்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
பொங்கு ஏறு நீள் சோதிப்* பொன் ஆழி தன்னோடும்*
சங்கு ஏறு கோலத்* தடக் கைப் பெருமானை*
கொங்கு ஏறு சோலைக்* குடந்தைக் கிடந்தானை*
நம் கோனை நாடி* நறையூரில் கண்டேனே|

019. திவ்ய ப்ரபந்தம் - 1538 - திருமாலின் திருநாமம் நமோ நாராயணம்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - பத்தாம் திருமொழி - முதலாம் பாசுரம்
கிடந்த நம்பி குடந்தை மேவிக்* கேழல் ஆய் உலகை இடந்த நம்பி* 
எங்கள் நம்பி* எறிஞர் அரண் அழிய*
கடந்த நம்பி கடி ஆர் இலங்கை* உலகை ஈர் அடியால்*
நடந்த நம்பி நாமம் சொல்லில்* நமோ நாராயணமே|

020. திவ்ய ப்ரபந்தம் - 1570 - எம்பிரானை நான் எந்த விதத்திலும் மறக்க முடியாது
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - மூன்றாம் திருமொழி -  மூன்றாம் பாசுரம்
வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான்* மற்று ஓர் நெஞ்சு அறியான்* 
அடியேனுடைச் சிந்தை ஆய் வந்து* 
தென்புலர்க்கு என்னைச் சேர் கொடான் இது சிக்கெனப் பெற்றேன்*
கொந்து உலாம் பொழில் சூழ் குடந்தைத் தலைக் கோவினை* 
குடம் ஆடிய கூத்தனை* 
எந்தையை எந்தை தந்தை தம்மானை* எம்பிரானை எத்தால் மறக்கேனே?

021. திவ்ய ப்ரபந்தம் - 1606 - திருமகள் கணவனை நான் கண்டு களித்த இடம் இது
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஆறாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
பேரானைக்* குடந்தைப் பெருமானை* 
இலங்கு ஒளி சேர் வார் ஆர் வனமுலையாள்* மலர் மங்கை நாயகனை*
ஆரா இன் அமுதைத்* தென் அழுந்தையில் மன்னி நின்ற*
கார் ஆர் கரு முகிலைக்* கண்டு கொண்டு களித்தேனே|

022. திவ்ய ப்ரபந்தம் - 1732 - குடந்தையில் கிடந்தவனே! உன்னை மறவேன்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
வந்தாய் என் மனத்தே* வந்து நீ புகுந்த பின்னை*
எந்தாய் போய் அறியாய்* இதுவே அமையாதோ?*
கொந்து ஆர் பைம் பொழில் சூழ்* குடந்தைக் கிடந்து உகந்த மைந்தா*
உன்னை என்றும்* மறவாமைப் பெற்றேனே|

023. திவ்ய ப்ரபந்தம் - 1759 - குடந்தையில் கிடக்கும் பெருமாளா இவர்?
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - இரண்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
தோடு அவிழ் நீலம் மணம் கொடுக்கும்* சூழ் புனல் சூழ் குடந்தைக் கிடந்த*
சேடர்கொல் என்று தெரிக்கமாட்டேன்* செஞ் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி*
பாடக மெல் அடியார் வணங்கப்* பல் மணி முத்தொடு இலங்கு சோதி*
ஆடகம் பூண்டு ஒரு நான்கு தோளும்* அச்சோ ஒருவர் அழகியவா|

024. திவ்ய ப்ரபந்தம் - 1853 -  திருச்சேறையும் திருக்குடந்தையும்
பெரிய திருமொழி - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
வானை ஆர் அமுதம்* தந்த வள்ளலை*
தேனை நீள் வயல்* சேறையில் கண்டு போய்*
ஆனை வாட்டி அருளும்* அமரர் தம் கோனை* 
யாம் குடந்தைச் சென்று காண்டுமே|

025. திவ்ய ப்ரபந்தம் - 1949 - குடந்தைத் திருமால் இங்கே வருவானோ?
பெரிய திருமொழி - பத்தாம் பத்து - பத்தாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
இங்கே போதும்கொலோ*
இன வேல் நெடுங் கண் களிப்ப?*
கொங்கு ஆர் சோலைக்* குடந்தைக் கிடந்த மால்*
இங்கே போதும் கொலோ?

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

லீலை கண்ணன் கதைகள் - 47

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

கோபியர்களின் மன வருத்தம்|

கிருஷ்ணன், பலராமர் மற்றும் நந்தர் மதுரா செல்லும் விஷயத்தை அறிந்த கோபியருக்கு ஒன்றும் புரியவில்லை, கிருஷ்ணனை நினைத்து அழ ஆரம்பித்தனர், அவர்கள் மனதில் துன்பம் பெருகியது, கிருஷ்ணனை விட்டு பிரியப் போவதை நினைத்து புலம்பினர், எல்லோரும் ஒன்று சேர்ந்து, கண்களில் கண்ணிருடன், "ஹே பகவானே, எங்கள் மீது கருணையே இல்லையா? எங்களுக்கு கிருஷ்ணனின் அழகிய கண்களை காட்டியது நீதான், அவனது குழி விழும் கண்ணங்களையும், கூர்மையான மூக்கினையும், அழகு நிரம்பிய முகத்தையும் காட்டியது நீயே, ஆனால் இப்பொழுது அதை எங்களிடம் இருந்து எடுத்துக் கொள்ள நினைக்கிறாயே, இது நியாயமா? தர்மமா?" என்று புலம்பினர்.


கிருஷ்ணன் கிளம்பும் போது அனைவரும் அவனை தடுக்க நினைத்தனர், அவனது வீட்டுக்கு சென்று பார்த்தனர். கிருஷ்ணன் வீட்டில் இருந்து ஒரு அந்நியன் வெளியே வந்தார், அவர் அழகிய உடை, அலங்காரத்துடன் இருந்தார், நேராக சென்று தேரில் ஏறினார். அவரை கிருஷ்ணன் மற்றும் பலராமன் பின்தொடர்ந்து சென்று தேரில் அமர்ந்தனர். அனைவரும் பயணத்திற்கு தயாராக இருந்தனர். யசோதையும் ரோஹினியும் அவர்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டு அவர்கள் முகத்தை கைகளால் மூடி இருந்தனர், அவர்கள் இருவரும் இரவு முழுவதும் அழுது அழுது இவர்கள் செல்லுகையில் கண்ணீர் கூட வரவில்லை. முதன் முறையாக கிருஷ்ணனும் பலராமனும் கோபத்துடன் இருப்பதாய் கோபியர் பார்த்தார்கள். மற்றொரு தேரில் நந்தர் சில கோபியரையும் அழைத்து கொண்டு, தயிர், வெண்ணை, பால் மற்றும் சில பரிசு பொருட்களை ஏற்றினார். கோபியர்களின் வாயில் இருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை. பேச முடியவில்லை, கிருஷ்ணன் எங்கு செல்கிறான் என்று கேட்க முடியவில்லை. அவன் எங்கே செல்கிறான் என்று அவர்களுக்கு முன்பே தெரியும். 


கிருஷ்ணன் அவர்களை திரும்பி பார்த்து, ஒரு சின்ன புன்னகையை தந்தான். அவர்கள் தேற்ற முடியாத நிலையில் இருப்பதாய் கிருஷ்ணன் உணர்ந்தான். கிருஷ்ணன் தேரில் இருந்து இறங்கி, அவர்கள் அருகில் வந்து, அவர்களை பார்த்து நான் சீக்கிரம் வந்து விடுவேன், யாரும் கவலை பட வேண்டாம், நான் இப்பொது செல்லவில்லை என்றால் பிருந்தாவனமே அடியோடு அழிந்து விடும் என்று கோபியரிடம் கூறினான்.

ஒருத்தி மட்டும் கிருஷ்ணனை பார்த்து "கம்சன் பிருந்தாவனத்தை அழித்து விட்டால், நாங்களும் உன்னோடு இறந்து விடுவோம், நீ இல்லாத இடத்தில் நங்கள் வாழ மாட்டோம். உன்னை பார்த்துக் கொண்டு, உன்னுடைய நாமத்தை ஜபித்து கொண்டே நாங்கள் உயிரை விட்டு விடுவோம். இந்த பிருந்தாவனத்தை விட்டுச் சென்று விடாதே கிருஷ்ணா" என்று கதறினாள். கிருஷ்ணன் சமாதனம் பேசி விட்டு, சிக்கிரம் வருவதாக வாக்குறுதி கொடுத்து, அங்கு இருக்கும் பசுக்களிடம் சென்று தடவி கொடுத்தான். பசுக்களும் அழுது கொண்டு இருந்தன, அதன் கண்ணீரை துடைத்து விட்டான் கிருஷ்ணன். அவை அவன் மீது உள்ள பாசத்தினை வெளிபடுத்தின. பசுக்களை விட்டு பிரிந்து வர மனம் இல்லாமல் வந்தான். கோபியர்கள் சிலை போல அப்படியே நின்று கொண்டு இருந்தார்கள், அவர்கள் தேரினை உற்று நோக்கிக் கொண்டே இருந்தார்கள், கண் முன்னிருந்து மறையும் வரை பார்வை நகரவில்லை. கிருஷ்ணன் கண்டிப்பாக விரைவில் வந்து விடுவான் என்ற நம்பிக்கையில் மனதை தேற்றிக் கொண்டனர்.

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - ஐம்பத்தி மூன்றாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

053 காட்டுக்குப் போனேனோ பெருமாளைப் போலே|

கைகேயி, கேகய நாட்டு மன்னர் அஸ்வபதியின் மகளும், தசரத மன்னனின் மூன்று மனைவிகளுள் இளையவர் ஆவார். அழகும், வீரமும், விவேகமும் ஒரு சேர உருவான பெண். பரதன் இவருடைய மகன் ஆவார். ஸ்ரீராமனிடம் அதிக அளவு அன்பும் பாசமும் கொண்டவர்.


தசரத சக்ரவர்த்தி, ராமனுக்கு முடிசூட்ட எண்ணம் கொண்டு, மந்திரிகளுடன் ஆலோசனை முடிந்து ராமனுக்கு முடிசூட்ட நாளும் குறிக்கப்பட்டது. இராமனுக்கு முடிசூட்டு விழா என்று முரசு முழங்கியது. நாடே விழாக் கோலம் கொண்டு மக்கள் மகிழ்ச்சியில் குதூகலித்தனர். எல்லோரையும் விட இச்செய்தியால் அதிகம் மகிழ்ந்தவர் கைகேயி. பெருமிதம் கொண்டார்.


ஆனால், சிலந்தி வலையில் சிக்கிய சிறு பூச்சியைப் போல், மந்தரை என்றொரு கூனி வீசிய வலையில் சிக்கிய கைகேயியின் மனமும் குணமும் முற்றிலுமாக மாறியது.  ராமனுக்கு நாளை முடிசூட்டப் போகும் கனவில் மகிழ்ந்திருந்த அரசன் தசரதன் இரவு கைகேயியைக் காண வந்தார். அலங்கோலமாய் அமர்ந்திருந்த கைகேயியின் நிலை கண்டு பதறினான். “என்ன ஆயிற்று?”- என்று கேட்ட மன்னனிடம், “எனக்கு தாங்கள் இரு வரம் தருவதாய் முன்பு வாக்களித்தீர். இன்று அதை நான் கேட்கின்றேன். ஒன்று, ராமனுக்குப் பதிலாக என் மகன் பரதனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும். இரண்டு, 14 வருடங்கள் ராமன் காட்டுக்குச் செல்ல வேண்டும்.”- என்றும் தசரதனிடம் இரண்டு வரங்களைக் கேட்டாள் கைகேயி. 

கைகேயி தன் முடிவில் உறுதியாய் நின்றாள். தசரதன் கொடுத்த வாக்கை மீற முடியாமல் தவித்தான். இரவெல்லாம் மன்றாடியும், தசரதனால் கைகேயியின் மனதை மாற்ற இயலவில்லை. வேறு வழியின்றி வரத்தை வழங்கினார். தாயிடம் ஆசீர்வாதம் வாங்க வந்த ஸ்ரீ இராமன், தன் தந்தை மற்றும் தாயின் நிலை கண்டு பதறி, நடந்ததை வினவ, கைகேயியும் நடந்தவற்றைக் கூறினாள்.


ஆழ்ந்த மௌனத்திற்கு பின், சற்றும் பதறாமல், ஸ்ரீ இராமன் “சரியம்மா! தம்பி பரதன் நாடாளட்டும். நான் கானகம் புறப்படுகிறேன்.”-என்று கூறி, தாயிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு தந்தையிடம் விடை பெறச் செல்கிறார். "ராமா! நான் கொடுத்த வரத்திற்கு கட்டுப்பட்டு விட்டேன். நீ என்னை மதியாமல் அயோத்தியைக் கைப் பற்றியிருக்கலாமே" என்கிறான் மன்னன்

"தந்தையே! நான் ராஜ்ஜியத்திற்கு ஆசைப்படவில்லை. உங்கள் வாக்கைக் காப்பாற்றுவேன். பதினான்கு ஆண்டுகள் வனவாசம் புரிந்து திரும்புவேன்' என்றார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, " தந்தையின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து, மறுப்பேதும் கூறாமல், வார்த்தையில், செயலில், இதயத்தில் தெளிவு காட்டி, ஸ்ரீ இராமன் காட்டிற்கு சென்றாரே, அதுபோல் ஒரு தெளிவை பெருமாளிடம் நான் கொண்டுள்ளேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்