About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 29 February 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 116

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 86

ஸுவர்ண பி³ந்து³ ரக்ஷோப்⁴ய: 
ஸர்வ வாகீ³ஸ்² வரேஸ்² வர:|
மஹா ஹ்ரதோ³ மஹா க³ர்த்தோ 
மஹா பூ⁴தோ மஹாநிதி⁴:||

  • 806. ஸுவர்ண பி³ந்து³ர் - கேட்பவர் மயங்கும்படி மிகவும் இனிமையாகப் பேசுபவர். தங்க நிறமுள்ள உறுப்புகளோடு கூடிய அழகிய வடிவத்தை உடையவர். மங்களகரமான பிரணவ மந்திரத்தின் வடிவில் இருப்பவர். மங்கள எழுத்துக்களைக் கொண்ட வேதங்களை அறிந்தவர். நெற்றி, கன்னங்கள் போன்றவற்றில் அழகான தங்க நிற சந்தனக் குறிகளை உடையவர்.
  • 807. அக்ஷோப்⁴யஸ் - கலக்க முடியாதவர். ஆசைகள் மற்றும் வெறுப்பு போன்ற உள் கவனச் சிதறல்களால், அசுரர்கள் போன்ற வெளிப்புற எதிரிகளால் கிளர்ச்சியோ குழப்பமோ அடையாதவர்.
  • 808. ஸர்வ வாகீ³ஸ்² வரேஸ்² வரஹ - வல்லமையாகப் பேசுபவர்கள் அனைவருக்கும் மேலானவர். பிரம்மா போன்று எல்லா வார்த்தைகளிலும், பேச்சில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் இறைவன். பேச்சின் அதிபதி.
  • 809. மஹா ஹ்ரதோ³ - ஆழ்ந்த மடுவாக இருப்பவர். பாவிகளை மூழ்கடித்து, பக்தர்கள் நிவாரணம் பெறும் பரந்த ஏரி. யோகிகள் அவரது பேரின்பத்தில் அமைதியாக இருந்து, ஏரியில் மூழ்குவதைப் போன்ற சுகத்தைப் பெறுகிறார்கள்.
  • 810. மஹா க³ர்த்தோ – படு குழியாக இருப்பவர். பாவம் செய்பவர்களை சம்சாரம் என்ற பெரும் குழிக்குள் தள்ளுபவர். மகாபாரதப் புகழ் பெற்ற பெரிய தேரோட்டி. கொடியில் கருடனோடு கூடிய பெரிய தேரைக் கொண்டவர். சேஷாசலம் முதலிய பெரிய மலைகளில் வசிப்பவர். இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் உருவாகி, தங்கி, மீண்டும் ஒன்று இணைக்கும் பெரிய குழி. மாயையின் சக்தி ஒரு பள்ளம், அதை கடப்பது மிகவும் கடினம்.
  • 811. மஹா பூ⁴தோ - மகான்களைத் தன் உறவினராகக் கொண்டவர். அவர் ஒரு பெரியவர். அவர் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகிய காலத்தின் வரம்புகளுக்கு அப்பாற்பட்டவர். பெரிய மனிதர்களைத் தம்முடையவர்களாகக் கருதுபவர். அவர் ஐந்து உறுப்புகளின் தோற்றம்.
  • 812. மஹா நிதி⁴ஹி - மகான்களைப் பெருஞ் செல்பவமாக உடையவர். எல்லா உயிர்களும் அவரில் வசிக்கின்றன, எனவே அவர் நிதியாக இருக்கிறார். தன் பக்தர்களின் வடிவில் பெரும் பொக்கிஷத்தை உடையவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.53

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.53
 
ஸ்²ருதி விப்ரதி பந்நா தே 
யதா³ ஸ்தா²ஸ்யதி நிஸ்²சலா|
ஸமாதா⁴ வசலா பு³த்³தி⁴: 
ஸ்ததா³ யோக³ மவாப்ஸ் யஸி||

  • ஸ்²ருதி - வேதங்களின் 
  • விப்ரதிபந்நா - பலன்களின் விளைவுகளால் பாதிக்கப்படாத 
  • தே - உனது 
  • யதா³ - எப்போது 
  • ஸ்தா²ஸ்யதி - நிலைபெறுகிறதோ 
  • நிஸ்²சலா - அசைவற்று 
  • ஸமாதௌ⁴ - திவ்யமான உணர்வில் 
  • அசலா - உறுதியான 
  • பு³த்³தி⁴ஹி - அறிவு 
  • ததா³- அப்போது 
  • யோக³ம் - தன்னுணர்வை 
  • அவாப்ஸ்யஸி - அடைவாய்

வேதங்களின் பலன்களின் விளைவுகளால் பாதிக்கப்படாமல், எப்போது, உனது மனம் அசைவற்று, திவ்யமான உணர்வில், உறுதியான அறிவு நிலை பெறுகிறதோ, அவ்வேளையில், தன் உணர்வை அடைவாய்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.6

கத²மாலக்ஷித: பௌரை: 
ஸம்ப்ராப்த: குரு ஜாங்க³லாந்|
உந்மத்த மூகஜட³வத்³
விசரந் க³ஜ ஸாஹ் வயே||

  • குரு ஜாங்க³லாந் - குரு, ஜாங்கலம் என்ற தேசங்களை
  • ஸம்ப்ராப்தஹ் - அடைந்தவராய்
  • க³ஜ ஸாஹ் வயே - ஹஸ்தினாபுரத்தில்
  • உந்மத்த மூக ஜட³வத்³ - பைத்தியம் போன்றும், ஊமை போற்றும், ஒன்றும் தெரியாதவர் போன்றும்
  • விசரந் - சஞ்சரிக்கரவராய் கொண்டு  
  • பௌரைஹி - பட்டணத்து ஜனங்களால்
  • கத²ம் ஆலக்ஷிதஃ - இவர் சுகர் என்று எவ்வாறு தெரிந்து கொள்ள பட்டார்

இவ்வளவு பெருமை வாய்ந்த இந்த ஸ்ரீ ஸுகர், குரு தேசம், ஜாங்கல தேசம் ஆகியவற்றைக் கடந்து அஸ்தினாபுரம் வந்தடைந்த போது, பித்தன் போலவும், ஊமை போலவும் திரிந்த இவரை, எவ்வாறு அந்த நகர மக்கள் அறிந்து கொண்டனர்?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.51

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.51

ந விரோதோ⁴ ப³லவதா 
க்ஷமோ ராவண தேந தே|
அநாத்³ ருத்ய து தத்³ வாக்யம் 
ராவண: கால சோதி³த:|| 

  • தேந - அந்த
  • ப³லவதா - பலசாலியுடன்
  • தே - உனக்கு
  • விரோதோ⁴ - விரோதம்
  • க்ஷமோ - ஸஹிக்கக் கூடியது 
  • ந - இல்லை என்று
  • ராவண - ராவணன்
  • து - ஆன போதிலும்
  • கால - விதிவசத்தால் 
  • சோதி³தஹ - தூண்டப்பட்டவன் ஆன
  • ராவணஹ - ராவணன் 
  • தத்³ - அவனுடைய
  • வாக்யம் - வார்த்தையை
  • அநாத்³ ருத்ய - லட்சியம் செய்யாமல்

"இராவணா, அந்தப் பலவானைப் பகைப்பது உனக்குத் தகாது" என்று, ஆன போதிலும் (விதி வசத்தால்) காலத்தால் தூண்டப்பட்ட ராவணன், அந்தப் பேச்சை லக்ஷ்யம் செய்யாமல்,

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 95 - பெரியாழ்வார் திருமொழி - 1.7.10

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 95 - செங்கண்மால் கேசவன்
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - ஏழாம் திருமொழி - பத்தாம் பாசுரம்

திரை நீர்ச் சந்திர மண்டலம் போல்
செங்கண்மால் கேசவன்* 
தன் திரு நீர் முகத்துத் துலங்கு சுட்டி* 
திகழ்ந்தெங்கும் புடை பெயர* 
பெரு நீர்த் திரையெழு கங்கையிலும்* 
பெரியதோர் தீர்த்த பலம் தரு நீர்ச்* 
சிறுச் சண்ணம் துள்ளம் சோரத்* 
தளர் நடை நடவானோ!

  • திரை நீர் - அலை வீசும் நீரை உடைய ஸமுத்திரத்தின் நடுவில் அசைந்து தோன்றுகிற
  • செங்கண்மால் - சிவந்த கண்களையும், கரு நிறத்தையும்
  • கேசவன் - கேசவன் என்னும் திருநாமம் உடைய இவன்
  • சந்திர மண்டலம் போல் - சந்திர மண்டலத்தைப் போல்
  • தன் - தன்னுடைய
  • திரு நீர் - அழகிய ஒளியை உடைய
  • முகத்து - திரு முகத்திலே
  • துலங்கு - விளங்குகின்ற
  • சுட்டி - சுட்டியானது
  • எங்கும் - எல்லா விடத்திலும்
  • திழ்ந்து - ப்ரகாசித்துக் கொண்டு
  • புடை பெயர் - இடமாகவும் வலமாகவும் அசையவும்
  • பெரு நீர்த் - சிறந்த தீர்த்தமாகிய
  • திரை எழு - அலைகள் எழும்பும்
  • கங்கையிலும் - கங்கையை விட
  • பெரியது -அதிகமான
  • ஓர் - ஒப்பற்ற
  • தீர்த்த பலம் - தீர்த்த நீராடிய பலத்தை
  • தரும் - கொடுக்கின்ற
  • நீர் - ஜலத்தை உடைத்தான
  • சிறு சண்ணம் - சிறிய சண்ணமானது
  • துள்ளம் சோர - துளி துளிகளாகச் சொட்டவும்
  • தளர் நடை - அழகிய இளம் நடையை
  • நடவானோ - நடக்க மாட்டானோ? நடக்க வேணும்

சிவந்த கண்களையுடையவனும் கரு நிறத்தவனுமான கண்ணன் கேசவன் அணிந்திருக்கும் பிரகாசமாக ஒளிவீசும் திருமுகத்துச் சுட்டியானது அவன் நடக்கும் போது அசைவது எப்படியுள்ளது என்றால் முழுச் சந்திர மண்டலத்தின் பிரதிபிம்பம் கருநிறக் கடலின் நடுவில் தோன்றி அலைகளால் அசைவது போலுள்ளதாம். உயர்ந்த அலை திரளும் கங்கை ஆற்றின் நீரைக் காட்டிலும் புனிதமான கண்ணனின் மூத்திர நீரானது துளித் துளியாக அவன் குறியிலிருந்து சொட்டும் படியே தளர் நடையாக அவன் நடந்து வர காத்து நிற்கிறார் ஆழ்வார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 028 - திருக்காழி சீராம விண்ணகரம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

028. திருக்காழி சீராம விண்ணகரம் (சீர்காழி)
இருபத்தி எட்டாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ திரிவிக்கிரமன் பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ லோகநாயகி தாயார் ஸமேத ஸ்ரீ திரிவிக்ரமன் பெருமாள் 
திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்: திரிவிக்ரம நாராயணன், திருவிக்ரம மூர்த்தி
  • பெருமாள் உற்சவர்: தாடாளன்
  • தாயார் மூலவர்: லோக நாயகி
  • தாயார் உற்சவர்: மட்டவிழுங்குழலி
  • திருமுகமண்டலம் திசை: கிழக்கு
  • திருக்கோலம்: நின்ற 
  • புஷ்கரிணி:  சங்கு 
  • தீர்த்தம்: சக்கர 
  • விமானம்: புஷ்பகலா வர்த்தக
  • ஸ்தல விருக்ஷம்: பலா
  • ப்ரத்யக்ஷம்: அஷ்டகோண மஹரிஷி
  • ஆகமம்: வைகானஸம்
  • ஸம்ப்ரதாயம்: தென் கலை
  • மங்களாஸாஸநம்: 1 ஆழ்வார்
  • பாசுரங்கள்: 10 

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

முன் மண்டபத்தில் வராக அவதாரம் எடுத்த பெருமாள் வலக்கையை தானம் பெற்ற கோலத்தில் வைத்து, இடக்கையில் குடை பிடித்து படி சாளக்கிராம மாலை அணிந்து காட்சி தருகிறார். ஸ்வாமியிடம் வேண்டிய செயல்கள் நிறைவேறிய பின் இவரிடம் நேர்த்திக் கடன்களை செலுத்துகிறார்கள். இவருக்கு அருகிலேயே கையில் வேலுடன், காலில் தண்டை அணிந்த கோலத்தில் திருமங்கையாழ்வார் இருக்கிறார். உலகையே ஒரு அடியில் அளந்த பெருமாள் என்பதால் இங்கு பூமி, வாஸ்து பூஜை செய்யும் முன்பு ஸ்வாமியிடம் தங்களது நிலத்தின் மணலை வைத்து வேண்டிக் கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் நிலம் சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தில் ராமர் சந்நதியும், கோயிலுக்கு எதிரே வெளிப் புறத்தில் ஆஞ்சநேயர் சந்நதியும் இருக்கிறது. இங்குள்ள தங்க கருடனுக்கு தினசரி இரண்டு கால பூஜைகள் நடக்கிறது. இக்கோயிலுக்கு மிக அருகிலேயே திருஞான சம்பந்தருக்கு பார்வதி தேவி பாலூட்டிய சட்டை நாதர் கோயில் இருக்கிறது.

கருவறையில் இடது காலை தலைக்கு மேலே தூக்கிக் கொண்டு, வலக்கையை தானம் பெற்ற அமைப்பிலும், இடக்கையை மீதி ஒரு அடி எங்கே? எனக் கேட்டு ஒரு விரலை மட்டும் தூக்கிய படி திரிவிக்கிரமர் காட்சி தருகிறார். இவருக்கு மேல் உள்ள விமானம் புஷ்கலா வர்த்த விமானம் எனப்படும்.  சாளக்கிராம மாலை அணிந்தபடி இருக்கும் இவரது சங்கும், பிரயோக சக்கரமும் சாய்ந்த படியே இருக்கிறது. வலது பாதத்திற்கு அருகில் உற்சவர் தாடாளன் இருக்கிறார். இவரை "தவிட்டுப் பானை தாடாளன்' என்றும் சொல்கின்றனர். வைகுண்ட ஏகாதசி அன்று ஒரு நாள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும்."தாள்' என்றால் "பூமி அல்லது உலகம்', "ஆளன்' என்றால் "அளந்தவன்' என்று பொருள். தன் திருவடியால் மூன்று உலகங்களையும் அளந்தவன் என்பதால், ஆண்டாள் இவருக்கு "தாடாளன்' என்ற பெயரை சூட்டினாள். ஸ்வாமியை குறித்து ஆண்டாள் தனது திருப்பாவை, நாச்சியார் திருமொழியிலும் பாடி இருக்கிறாள். அருகில் குழந்தை தொட்டிலில் சந்தான கோபால கிருஷ்ணர் இருக்கிறார். புத்திரப்பேறு இல்லாதவர்கள் இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

பெருமாள் தன் மார்பில் மகாலக்ஷ்மியை தாங்கிய படி இருப்பதைப் போல, இங்கு தாயார் லோக நாயகி மார்பில் திரிவிக்கிரமரைத் தாங்கியபடி காட்சி தருகிறாள். ஒரு கால் ஊன்றி மற்றொரு காலைத் தூக்கி நின்று கொண்டு இருப்பதால் ஸ்வாமியின் பாதம் வலித்து விடாமல் இருக்க அவரை இத்தலத்தில் மகாலக்ஷ்மி தாங்குகிறாளாம். எனவே அவள் தன் மார்பில் ஸ்வாமி பதக்கத்தை அணிந்திருக்கிறாள். இந்த தரிசனம் விசேஷமானது. பெண்கள் இவளை வணங்கினால் கணவர் மீது கூடுதல் அன்பு காட்டுவர், பிரிந்து இருக்கும் கணவனுடன் மீண்டும் சேர்வர் என்பது நம்பிக்கை. உற்சவ தாயார், மூலவர் தாயாரை மறைத்தபடி இருப்பதால், இவளது திருமுகத்தை மட்டுமே தரிசனம் செய்ய முடியும். தன்னை தாங்கும் கணவனை தான் தாங்குவதை யாரும் பார்த்து விடாமல் இருக்க இவ்வாறு இருப்பதாக சொல்கிறார்கள். வெள்ளிக் கிழமைகளில் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.

தேவாரம் பாடிய நால்வரில் ஒருவரான திருஞான சம்பந்தர் இவ்வூரில் தான் பிறந்தார். அவர் இங்கேயே தங்கி இருந்து சிவத் தொண்டு செய்து வந்தார். இக்கோயில் சிலகாலம் வழிபாட்டில் இல்லாதிருந்த போது, உற்சவர் தாடாளனை ஒரு மூதாட்டி தன் வீட்டில் ஒரு தவிட்டுப் பானையில் மறைத்து வைத்து தினமும் பூஜைகள் செய்து ஸ்வாமியை வணங்கி வந்தாள். ஒரு சமயம் திருமங்கையாழ்வார் இவ்வூருக்கு வந்தார். அவருடன் வந்தவர்கள் திருமங்கையைப் போற்றிப் பாடிக் கொண்டு வந்தனர். இதைக் கண்ட சம்பந்தரின் சீடர்கள் அவர்களை அமைதியாகச் செல்லும்படி கூறினர். அவர்களோ மறுத்தனர். இருவருக்கும் இடையே வாதம் உண்டானது. இறுதியில் திருமங்கைக்கும், சம்பந்தருக்கும் மறு நாளில் வாத போட்டி வைப்பது என முடிவானது. எனவே, அன்றைய தினம் திருமங்கை சீர்காழியிலேயே தங்கினார்.  இரவில் திருமங்கையின் கனவில் தோன்றிய பெருமாள், தான் மூதாட்டியின் தவிட்டுப் பானைக்குள் இருப்பதாகவும், தன்னை வணங்கி வாதத்தில் வெல்லும் படி சொன்னார். அதன்படி மூதாட்டியிடம் தாடாளனை திருமங்கை வாங்கிக் கொண்டார். மறுநாள் போட்டி ஆரம்பமானது. சம்பந்தர் திருமங்கையிடம், ஒரு குறள் சொல்லும்படி கூறினார். திருமங்கை, "குறள்' எனும் சொல்லையே முதலாவதாக தொடங்கி பெருமாளின் பத்து அவதாரங்களைப் பற்றி ஒன்று, இரண்டு என வரிசையாக பாடினார். திருமங்கையின் பெருமையை உணர்ந்த சம்பந்தர் அவரைப் பாராட்டி தான் வைத்திருந்த வேலை அவருக்கு பரிசாகக் கொடுத்து, காலில் தண்டையையும் அணிவித்தார். திருமங்கையாழ்வார் ஞான சம்பந்தரை வாதத்தில் வென்று நாலு கவிப் பெருமாள் என்ற விருதை பெற்ற ஸ்தலம். பின் திருமங்கை இக்கோயிலை மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டு வந்தார். தாடாளனையும், தாயாரையும் பாடியதோடு ஸ்வாமி எழுந்தருள காரணமான உரோமசரையும் சேர்த்து தன் பெயர்கள் அனைத்தையும் குறிப்பிட்டு மங்களாஸாஸநம் செய்தார்.

படைக்கும் கடவுளான பிரம்மா பல யுகங்கள் வாழும்படி சாகா வரம் பெற்று இருந்தார். இதனால் அவர் மனதில் கர்வம் உண்டாகவே, தனது பணியையும் அவர் சரியாக செய்யவில்லை. அவரது கர்வத்தை அடக்க எண்ணம் கொண்டார் மகாவிஷ்ணு. இதனிடையே மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து திரிவிக்கிரமனாக காலைத் தூக்கி மூவுலகத்தையும் அளந்து காட்டிய கோலத்தைக் காண வேண்டும் என உரோமச முனிவருக்கு ஆசை எழுந்தது. ஸ்வாமியை வேண்டி இத்தலத்தில் தவம் இருந்தார். அவருக்கு காட்சி தந்த மகாவிஷ்ணு, தன் இடக் காலை தூக்கி திரிவிக்கிரம அவதாரத்தை காட்டியருளினார். பின் அவர் உரோமசரிடம், "என் ஏகாந்த நிலையை தரிசித்த நீங்கள் பெறுவதற்கு அரிய பல பேறுகளைப் பெற்று சிறப்பான நிலையை பெறுவீர்கள். மேலும், பிரம்மனை விட கூடுதலான ஆயுட்காலமும் பெற்று வாழ்வீர். உமது உடலில் இருக்கும் ஒரு முடி உதிர்ந்தால் பிரம்மாவின் ஆயுட்காலத்தில் ஒரு வருடம் முடியும்' என்று கூறி இத்தலத்தில் திரிவிக்கிரமனாக எழுந்தருளினார். மகாவிஷ்ணு சூட்சுமமாக தன் ஆயுளைக் குறைத்ததை அறிந்த பிரம்மா தன் கர்வம் அழியப் பெற்றார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்