About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 27 February 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 115

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 85

உத்³ப⁴வஸ் ஸுந்த³ரஸ் ஸுந்தோ³ 
ரத்ந நாப⁴ஸ் ஸுலோசந:|
அர்க்கோ வாஜஸநஸ்² ஸ்²ருங்கீ³ 
ஜயந்தஸ் ஸர்வ விஜ்ஜயீ:||

  • 796. உத்பவ: உயர்ந்தவர். ஸம்சாரத்தை விட உயர்ந்தவர். மேன்மையான பிறவியில் இருப்பவர். தனக்கு விருப்பமான போது, ​​விரும்பிய இடத்தில் பிறப்பை எடுக்கிறார். உயர்ந்த இடத்தில் (ஸ்ரீ வைகுந்தம்) வசிப்பவர். தேவர்களைப் படைத்தவர். தர்மத்தின் பாதுகாப்பிற்காக மீண்டும் மீண்டும் பிறந்தவர். 
  • 797. ஸுந்தர: அழகியவர்.
  • 798. ஸுந்த: உருகச் செய்பவர். தனது பக்தர்களிடம் இரக்கமுள்ளவர்.
  • 799. ரத்நநாப: மணிபோன்று அழகிய நாபியை உடையவர். ரத்தினம் போன்ற தொப்புளை உடையவர்.
  • 800. ஸுலோசந: அழகிய பார்வையை உடையவர். மயக்கும் கண்களை உடையவர்.

எட்டாம் நூறு திரு நாமங்கள் நிறைவு

  • 801. அர்க்க: துதிக்கப்படுபவர். வணக்கத்திற்கு தகுதியானவர்.
  • 802. வாஜஸந: நிறைந்த அளவில் அன்னம் உண்ணச் சொல்பவர். எல்லா உயிர்களுக்கும் ஊட்டத்தை அளிப்பவர்.
  • 803. ச்ருங்கீ: கொம்புகளுடன் தோன்றுபவர். இறைவன் தனது மத்ஸ்ய மற்றும் வராஹ அவதாரங்களில் கொம்புகளைக் கொண்டிருந்தார். கோவர்த்தன மலையின் உச்சியை கையில் ஏந்தியவர். ஒவ்வொரு உயிரினத்திற்கும் அதன் சக்தியை வெளிப்படுத்துவதற்கான வழிமுறைகளை வழங்கியவர். தன் பக்தர்களின் மறுபிறவி பயத்தை அழிப்பவர்.
  • 804. ஜயந்த: வென்றவர். எதிரிகளை குறிப்பிடத்தக்க வகையில் எளிதாக வெல்கிறார். தனது பக்தர்களின் வெற்றிக்கு கருவியாக இருக்கிறார்.
  • 805. ஸர்வ: விஜ்ஜயீ: சிறந்த அறிவாளிகளையும் வென்றவர். எல்லாவற்றையும் கற்றுக் கொண்டவர்களை வென்றவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.52

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.52 

யதா³ தே மோஹ கலிலம் 
பு³த்³தி⁴ர் வ்யதித ரிஷ்யதி|
ததா³ க³ந்தாஸி நிர் வேத³ம் 
ஸ்²ரோ தவ்யஸ்ய ஸ்²ருதஸ்ய ச||

  • யதா³ - எப்பொழுது 
  • தே - உனது 
  • மோஹ - மயக்கமெனும் 
  • கலிலம் - அடர்ந்த காடு 
  • பு³த்³தி⁴: - அறிவோடு செய்யப்படும் உன்னத தொண்டு 
  • வ்யதிதரிஷ்யதி - கடந்து செல்லுகிறதோ 
  • ததா³ - அப்போது 
  • க³ந்தாஸி - நீ ஆவாய் 
  • நிர்வேத³ம் - சமநிலை 
  • ஸ்²ரோதவ்யஸ்ய - கேட்க வேண்டியவை 
  • ஸ்²ருதஸ்ய - முன்னரே கேட்டவை 
  • ச - மற்றும்

உனது அறிவோடு செய்யப்படும் உன்னத தொண்டு, எப்போது மோகக் குழப்பத்தை கடந்து செல்லுகிறதோ, அப்போது நீ கேட்கப் போவது, கேட்கப்பட்டது என்ற இரண்டிலும் வேதனையேற்படாது, நீ சமநிலை ஆவாய்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்  

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.5

த்³ருஷ்ட் வாநு யாந்தம் ருஷி மாத்மஜம் அப்ய நக்³நம்
தே³வ்யோ ஹ்ரியா பரித³ து⁴ர்ந ஸுதஸ்ய சித்ரம்|
தத்³ வீக்ஷ்ய ப்ருச்ச²தி முநௌ ஜக³ து³ஸ்த வாஸ்தி
ஸ்த்ரீ பும்பி⁴தா³ ந து ஸுதஸ்ய விவிக்க த்³ருஷ்டே:||

  • ஆத்மஜம் - பிள்ளையை
  • அநு யாந்தம் - பின்தொடர்ந்து செல்லுகின்ற
  • ருஷிம் த்³ருஷ்ட் வா - வியாஸ மஹரிஷியைப் பார்த்து 
  • அக்³நம் அபி -  வியாஸர் ஆடையை உடுத்தியவராய் இருந்த போதிலும்
  • தே³வ்யோ - நீராடும் அப்ஸர ஸ்திரீகள்
  • ஹ்ரியா - வெட்கத்தால் ஆடைகளை
  • பரித³து⁴ர் - உடுத்திக் கொண்டனர்
  • ஸுதஸ்ய ந - அம்மணமாக உள்ள ஸுகர் சென்ற போது அவ்வாறு உடுத்திக் கொள்ளவில்லை
  • சித்ரம் தத்³ - அந்த வேடிக்கையைப் 
  • வீக்ஷ்ய - பார்த்து
  • முநௌ ப்ருச்ச²தி - வியாஸர் கேட்ட போது
  • ஜக³து³ஸ் - சொன்னார்கள் 
  • தவ - மிகவும் வயதான தங்களுக்கு
  • ஸ்த்ரீ பும்பி⁴தா³ அஸ்தி - ஆண் மற்றும் பெண் என்ற வேறுபாடுகள் உள்ளது
  • விவிக்த த்³ருஷ்டேஹே - ஒரே மனப்பான்மை உடைய
  • ஸுதஸ்ய து - உமது பிள்ளைக்கோ
  • ந - அந்த பேதமானது ஒரு சிறிதும் இல்லை

எல்லாவற்றையும் துறந்து பற்றற்ற நிலையில் செல்கின்ற மகனான ஸ்ரீ ஸுகரை, அவரது தந்தையும் மரவுரி தரித்திருந்த வயோதிகருமான வியாஸ மகரிஷி மகன் மேல் கொண்ட பாசத்தால் பின்தொடர்ந்து செல்ல, வழியில் நீர்விளையாடல் புரிந்து கொண்டிருந்த அப்சர மகளிர், வியாஸர் ஆடை உடுத்தி இருப்பினும் வெட்கமுற்று தங்களது ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டார்கள். ஆடையின்றி திகம்பரராகச் செல்லும் இளைஞரான ஸ்ரீஸுகரைக் கண்டு அவர்கள் வெட்கப்படவில்லை. இந்த ஆச்சரியத்தைக் கண்ட வியாஸ முனிவர், அவர்களது செய்கைக்குக் காரணம் கேட்க, அந்த அப்சரப் பெண்கள், 'முனிவரே! தங்களுக்கு ஆண், பெண் என்கிற வேறுபாடு காணும் புத்தி உள்ளது. பரிசுத்த வஸ்துவில் பகவானிடம் மட்டுமே நாட்டமுள்ள தங்களது குமாரர் ஸுகருக்கு, எல்லாம் பிரும்ம ஸ்வரூபமாகவே காட்சி தருகிறது' என்று விடையளித்தார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.50

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.50

ஸஹாயம் வரயா மாஸ 
மாரீசம் நாம ராக்ஷஸம்|
வார்ய மாண: ஸுப³ ஹுஸோ² 
மாரீ சேந ஸ ராவண:|| 

  • மாரீசம் நாம - மாரீசன் என்ற
  • ராக்ஷஸம் - இராக்ஷஸனின்
  • ஸஹாயம் -  ஸஹாயனாக
  • வரயா மாஸ -  வேண்டினான்
  • ராவணஹ -  ஓ இராவணா!
  • ஸுப³ ஹுஸோ² -  பற்பல விதமாய்
  • வார்ய மாணஸ் -  தடுக்கப் பட்டான் 
  • மாரீ  சேந - மாரீசனாலே
  • ஸ -  அந்த

மாரீசன் என்ற பெயர் படைத்த இராக்ஷஸனின் உதவியை நாடினான். அந்த மாரீசன் இராவணனிடம், பற்பல விதமாய் சொல்லிப் பல முறை தடுத்தான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திவ்ய ப்ரபந்தம் - 94 - பெரியாழ்வார் திருமொழி - 1.7.9

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 94 - கரிய யானை குட்டி போன்ற திருவிக்கிரமன்
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - ஏழாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்

வெண் புழுதி மேல் பெய்து கொண்டு அளைந்ததோர்* 
வேழத்தின் கருங்கன்று போல்* 
தெண் புழுதியாடி திரிவிக்கிரமன்* 
சிறு புகர் பட வியர்த்து* 
ஒண் போதலர் கமலச் சிறுக்காலுறைத்து* 
ஒன்றும் நோவாமே* 
தண் போது கொண்ட தவிசின் மீதே* 
தளர் நடை நடவானோ!

  • வெள் புழுதி - வெளுத்த புழுதியை
  • மேல் - தன் மேலே 
  • பெய்து கொண்டு - படிய விட்டுக் கொண்டு
  • அளைந்தது - அளைந்து
  • ஓர் வேழத்தின் - ஓர் கருத்த யானையின்
  • கருங்கன்று போல் - குட்டி போல
  • தெள் புழுதி - தெளிவான புழுதியிலே
  • ஆடி - விளையாடி
  • திரி விக்கிரமன் - தனது மூவடியால் உலகங்களை அளந்த திரிவிக்கிரமனாகிய இவன்
  • சிறு புகர் பட - பிரகாசமாகவும் சிறிது பளபளக்க
  • வியர்த்து - வேர்த்துப் போய்
  • போது - உரிய காலத்திலே
  • அலர் - மொக்கு மலர்ந்த
  • ஒண் - அழகிய
  • கமலம் - தாமரைப் பூவை ஒத்த
  • சிறு கால் - சிறிய பாதங்கள்
  • உறைத்து - ஏதேனும் ஒன்று உறுத்த அதனால்
  • ஒன்றும் நோவாமே - சிறிதும் நோவாதபடி
  • தண் போது கொண்ட - குளிர்ந்த புஷ்பங்களுடைய
  • தவிசின் மீது - மெத்தையின் மேலே 
  • தளர் நடை - அழகிய இளம் நடையை
  • நடவானோ - நடக்க மாட்டானோ? நடக்க வேணும்

வெள்ளை நிறம் கொண்ட புழுதியை யானை குட்டி தன் மேல் போட்டுக் கொள்ளுமாப் போலே, கண்ணனும் தெளிந்த புழுதியை தன் மேல் போட்டுக் கொண்டு, திருமேனியில் அங்குமிங்குமாக வியர்த்தவனாய் நின்றான். திரிவிக்கிரமனாய்  மூன்று உலங்கங்களையும் தன் திருவடிகளால் அளந்தவனுமான கண்ணனின் மலர்ந்த தமரையையொத்த திருப்பாதங்கள் உறுத்தாமலும் நோவாதும்படியாகவும் இருக்க குளிர்ந்த பூக்களாலான மெத்தையின் மேல் தளர் நடை நடந்து வர கண்ணனை வேண்டி நிற்கிறார் ஆழ்வார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 027 - திருக்காவளம்பாடி 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

027. திருக்காவளம்பாடி (திருநாங்கூர்)
இருபத்தி ஏழாவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10

001. திவ்ய ப்ரபந்தம் - 1298 - கோபால ஸ்வாமி விஷயம்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஆறாம் திருமொழி - முதலாம்  பாசுரம்
தா அளந்து உலகம் முற்றும்* தட மலர்ப் பொய்கை புக்கு*
நா வளம் நவின்று அங்கு ஏத்த* நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்*
மா வளம் பெருகி மன்னும்* மறையவர் வாழும் நாங்கை*
காவளம்பாடி மேய* கண்ணனே களை கண் நீயே|

002. திவ்ய ப்ரபந்தம் - 1299 - மாவலி வேள்வியில் யாசித்தவன் ஊர் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஆறாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
மண் இடந்து ஏனம் ஆகி* மாவலி வலி தொலைப்பான்* 
விண்ணவர் வேண்டச் சென்று* வேள்வியில் குறை இரந்தாய்* 
துண் என மாற்றார் தம்மைத்* தொலைத்தவர் நாங்கை மேய* 
கண்ணனே காவளம் தண் பாடியாய்* களை கண் நீயே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1300 - சுக்கிரீவனுக்கு அரசு அளித்தவன் இடம் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஆறாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
உருத்து எழு வாலி மார்வில்* ஒரு கணை உருவ ஓட்டி* 
கருத்து உடைத் தம்பிக்கு* இன்பக் கதிர் முடி அரசு அளித்தாய்* 
பருத்து எழு பலவும் மாவும்* பழம் விழுந்து ஒழுகும் நாங்கை* 
கருத்தனே காவளம் தண் பாடியாய்* களை கண் நீயே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1301 - விபீஷணனுக்கு அரசு அளித்தவன் வாழும் இடம் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஆறாம் திருமொழி - நான்காம் பாசுரம்
முனை முகத்து அரக்கன் மாள* முடிகள் பத்து அறுத்து வீழ்த்து* 
ஆங்கு அனையவற்கு இளையவற்கே* அரசு அளித்து அருளினானே* 
சுனைகளில் கயல்கள் பாயச்* சுரும்பு தேன் நுகரும் நாங்கை* 
கனை கழல் காவளம் தண் பாடியாய்* களை கண் நீயே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1302 - காளியன் மீது நடனமாடியவன் தங்கும் இடம்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஆறாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
பட அரவு உச்சி தன் மேல்* பாய்ந்து பல் நடங்கள் செய்து* 
மடவரல் மங்கை தன்னை* மார்வகத்து இருத்தினானே* 
தட வரை தங்கு மாடத்* தகு புகழ் நாங்கை மேய* 
கடவுளே காவளம் தண் பாடியாய்* களை கண் நீயே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1303 - பாரதப் போர் முடித்தவன் வாழ்விடம் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஆறாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
மல்லரை அட்டு மாளக்* கஞ்சனை மலைந்து கொன்று* 
பல் அரசு அவிந்து வீழப்* பாரதப் போர் முடித்தாய்* 
நல் அரண் காவின் நீழல்* நறை கமழ் நாங்கை மேய* 
கல் அரண் காவளம் தண் பாடியாய்* களை கண் நீயே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1304 - பாண்டவ தூதனானவன் உறைவிடம் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஆறாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
மூத்தவற்கு அரசு வேண்டி* முன்பு தூது எழுந்தருளி* 
மாத்து அமர் பாகன் வீழ* மத கரி மருப்பு ஒசித்தாய்* 
பூத்து அமர் சோலை ஓங்கிப்* புனல் பரந்து ஒழுகும் நாங்கை* 
காத்தனே காவளம் தண் பாடியாய்* களை கண் நீயே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1305 - ஸத்ய பாமைக்காகக் கற்பக மரம் கொணர்ந்தவன் ஊர்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஆறாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
ஏவு இளங் கன்னிக்கு ஆகி* இமையவர் கோனைச் செற்று* 
கா வளம் கடிது இறுத்துக்* கற்பகம் கொண்டு போந்தாய்* 
பூ வளம் பொழில்கள் சூழ்ந்த* புரந்தரன் செய்த நாங்கை* 
காவளம்பாடி மேய* கண்ணனே களை கண் நீயே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1306 - திருக்காவளந்தண் பாடியானே நமக்குக் கதி
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஆறாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
சந்தம் ஆய்ச் சமயம் ஆகிச்* சமய ஐம் பூதம் ஆகி* 
அந்தம் ஆய் ஆதி ஆகி* அரு மறை அவையும் ஆனாய்* 
மந்தம் ஆர் பொழில்கள்தோறும்* மட மயில் ஆலும் நாங்கை* 
கந்தம் ஆர் காவளம் தண் பாடியாய்* களை கண் நீயே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1307 - அரசர்க்கு அரசர் ஆவர்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஆறாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
மா வளம் பெருகி மன்னும்* மறையவர் வாழும்* நாங்கைக்
காவளம்பாடி மேய* கண்ணனைக் கலியன் சொன்ன* 
பா வளம் பத்தும் வல்லார்* பார்மிசை அரசர் ஆகிக்* 
கோ இள மன்னர் தாழக்* குடை நிழல் பொலிவர் தாமே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

லீலை கண்ணன் கதைகள் - 106

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

யாதவர்களின் போர்|

இதற்குப் பிறகு, துவாரகையில் துர்நிமித்தங்கள் தோன்றின. அதைப் பார்த்து யாதவர்கள் கவலைப் பட்டார்கள். அவர்கள் கிருஷ்ணரிடம் சென்று முறையிட்டார்கள். கிருஷ்ணர் அவர்களைப் பார்த்து, "இந்த கேட்ட சகுணங்கள் பயத்தை ஏற்படுத்துகின்றன. இனி ஒரு கணமும் நாம் இங்கே இருக்கக் கூடாது. நாம் எல்லோரும் சரஸ்வதி நதி ஓடும் பிரபா க்ஷேத்திரத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு உடனேயே சென்று, அந்தப் புண்ணிய நதியில் நீராடி நாம் தெய்வங்களுக்குப் பூஜை செய்வோம்" என்று சொன்னார். 


கிருஷ்ணர் சொன்னதை எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள். 

கூட்டம் கூட்டமாக பிரபாக் க்ஷேத்திரத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார்கள். கடலைப் படகுகளில் கடந்து, பிறகு தங்கள் ரதங்களில் ஏறிக்கொண்டு சென்றார்கள். அங்கு மிகவும் சிரத்தையுடன் பல சடங்குகள் செய்தார்கள். 

ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஒரு நாள் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்தது. அவர்கள் எல்லோரும் மைரேயகம் என்ற மதுவைக் குடித்தார்கள். அதை அளவுக்கு மீறிக் குடித்து விட்டதனால், அவர்கள் புத்தியோ நாக்கோ மனமோ அவர்கள் வசம் இல்லை. 

அதனால் தாறுமாறாக பேச ஆரம்பித்தார்கள். எனவே சீக்கிரமே அவர்களிடையே சண்டை மூண்டது. கையில் கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்க ஆரம்பித்தார்கள். கடற்கரையில் கூடாரங்களில் தங்கியிருந்தவர்கள், சண்டை போடத் திறந்தவெளிக்கு வந்தனர்.

மிகவும் கடுமையான சண்டை நடந்தது. தந்தைக்கும் பிள்ளைக்கும் சண்டை; சகோதரனுக்கும் சகோதரனுக்கும் சண்டை; தாத்தாவுக்கும் பேரனுக்கும் சண்டை; நண்பனுக்கும் நண்பனுக்கும் சண்டை; எல்லா வகையான ஆயுதங்களும் உடைந்து போயின. 

அப்பொழுது கடற்கரையில் முளைத்திருந்த ஏரக் என்ற புற்களைப் பறித்து, அவற்றால் ஒருவரையொருவர் தூக்கிக் கொண்டார்கள். இரும்பு உலக்கையின் பொடிகள்தாம் அந்தச் செடியாக வளர்ந்திருந்ததனால், அவை வால்களைவிடக் கூர்மையாக இருந்தன. அதனால் கிருஷ்ணரையும், பலராமரையும் தவிர, யாதவ குலமே அழிந்தது. 

இதையெல்லாம் கண்டு வெறுப்புற்ற பலராமர் வெகு தூரம் சென்று, யோகத்தில் ஆழ்ந்து தமது பூத உடலை நீத்தார். பலராமர் உயிர் நீங்கியதைப் பார்த்துவிட்டு, கிருஷ்ணர் ஓர் அரசமரத்தின் அடியில் மெளனமாக உட்கார்ந்தார். அவரும் ஆழ்ந்த யோகத்தில் அமர்ந்தார். அவர் அணிந்திருந்த மாலை காற்றில் பட படவென்று அடித்துக் கொண்டது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 59

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 4

ஸ்கந்தம் 03

விதுரர் மேலும் கூறலானார். “அறிஞரே, ஜீவனின் தன்மையையும் ப்ரபஞ்சமே மாயையின் தோற்றம் என்பதையும் விளங்கிக் கொண்டேன். தங்களைப் போன்ற பகவத் பக்தர்களே இறைவனை அடைய உண்மையான வழிகாட்டிகள். அற்ப புண்ணியம் செய்தவனுக்கு ஸத்சங்கம் கிடைக்காதன்றோ? ஸத்சங்கம் கிடைக்காதவன் புண்ணியம் செய்யாதவன். ஆயிரக் கணக்கான பாதங்கள், தொடைகள், கைகளைக் கொண்ட அந்த விராட் புருஷனை வேதங்கள் புராண புருஷன் என்றழைக்கின்றன. அவரிடம் தான் அனைத்துலகங்களும் ஒன்றோடொன்று மோதாமல் இடைவெளியுடன் இருக்கின்றன. அவரிடமிருந்து சக்திகளுடன் பத்து பிராணன்கள் தோன்றின. அதிலிருந்து இந்திரியங்களும் அதன் சக்திகளும் அதன் தேவதைகளும் தோன்றின. அதிலிருந்து நான்கு வர்ணங்களும் தோன்றின. 


அவரிடமிருந்து தோன்றிய பற்பலவிதமான உருவங்கள், குணங்கள் கொண்ட ஜீவர்கள்,இவ்வுலகம் முழுதும் நிறைந்த தங்களது மகன்கள், பேரன்கள், கொள்ளுப் பேரன்கள், மற்றும் தங்களது கோத்திரத்தில் பிறந்தவர்கள் என்று எவ்வாறு பெருகினார்கள்? எவ்வாறு வாழ்க்கையை நடத்துகிறார்கள்? அனைவர்க்கும் பிதாவான ப்ரும்ம தேவர் எந்தெந்த ப்ரஜாபதிகளைப் படைத்தார்? எந்தெந்த ஸர்கங்களையும் அதன் பிரிவுகளையும், மன்வந்தரங்களையும், அவற்றின் அதிபதிகளையும் படைத்தார்? மனுக்களின் வம்சாவளி, பூமிக்கு மேலும் கீழும் உள்ள லோகங்கள், அத்தனை விதமான பிறவிகளின் உடலமைப்பு, தோன்றும் விதம் ஆகியவற்றையும் சொல்லுங்கள். முக்குணங்களின் தன்மையை ஏற்றுக் கொண்டு அவர் வெவ்வேறு திருமேனிகள் கொண்டு எவ்வாறு முத்தொழில்களை செய்கிறார்?

ரூபம், ஆசாரம், ஒழுக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட நான்கு வர்ணங்கள், நான்கு ஆசிரமங்கள், மஹரிஷிகளின் பிறப்பு, வேதங்களின் பிரிவுகள், வேள்விகளின் விளக்கங்கள், யோகமார்கம், ஞானமார்கம், அதற்கு சாதனமான வேதாந்த சாஸ்திரங்கள், பகவானால் உபதேசிக்கப்பட்ட பாஞ்சராத்ரம் முதலிய ஆகம தந்திர நூல்கள், வேதநெறி தவறிய நாத்திக நெறியின் மாறுபாடுகள், ஜாதிக்கலப்பால் நிகழும் பிறவிகள், அவர்களது குணம், செயல்கள், ஆசாரங்கள், ஜீவன் தன் மரணத்திற்குப் பின் அடையும் கதிகள், அவற்றின் வகைகள் ஆகிய அனைத்தையும் விவரமாகக் கூறுங்கள்.

நான்கு புருஷார்த்தங்களையும் ஒன்றுக்கொன்று முரண்பாடின்றி பெறும் வழிகள், வியாபாரம், அரச நெறி, சாஸ்திரங்கள் ஓதலும் கேட்டலுமான முறைகள், தென்புலத்தார் கடன் விதி முறைகள், பித்ரு கணங்களின் படைப்பு, கோள்கள், தாரைகளின் கணங்கள், காலம் ஆகியவற்றின் போக்கை அளவிடும் ஜோதிர் மண்டலங்கள் முதலியவை பற்றியும் கூறுங்கள். தானம், தவம், வேள்விகள், குளம் - கிணறுகள் வெட்டுதல் போன்ற தர்மங்களால் என்ன பயன்? பகவானான ஜனார்த்தனர் எந்த தர்மத்தைக் கடைப் பிடிப்பதால் மகிழ்ச்சியடைவார்? எவ்வகையானவர்க்கு அருள் புரிவார்? மஹத் தத்வங்களின் மறைவு எவ்விதம்? அவை எவ்வாறு இறைவனுள் ஒடுங்குகின்றன? ஜீவனுடைய இயல்பு தத்துவம் என்ன? குரு சீடன் இவர்கள் ஒருவருக்கிடையே ஒருவர் அடையும் பயன் என்ன? ஞானத்தை அடையும் வழிமுறைகள் யாவை? குற்றமற்றவரே, வேத மோதுதல், தனங்கள், தவங்கள், ஆகிய எவையும் ஒரு ஜீவனது ஜனன மரண பயத்தைப் போக்க வல்லதன்று. தங்களைப் போன்ற பெரியோர்கள் வாயிலாகக் கேட்டுணரும் அறிவொன்றே அச்சத்தைப் போக்கவல்லது.”

ஸ்ரீ சுகர் கூறினார். விதுரர் பகவானைப் பற்றிய புராண விஷயங்களைக் கேட்கவே, மைத்ரேயர் அவற்றைச் சொல்வதற்கு தனக்கு ஒரு வாய்ப்பு கிட்டியமைக்காக மகிழ்ந்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்