About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 28 November 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 81

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 51

த⁴ர்ம கு³ப்³ த⁴ர்ம க்ருத்³ த⁴ர்மீ
ஸத³ க்ஷரம ஸத்க்ஷர மக்ஷரம்|
அவிஜ் ஞாதா ஸஹஸ் ராம் ஸு² ர்
விதா⁴தா க்ருத லஷண:||

  • 476. த⁴ர்ம கு³ப்³ - தர்மத்தைப் பாதுகாப்பவர்.
  • 477. த⁴ர்ம க்ருத்³ - தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்.
  • 478. த⁴ர்மீ - தர்மமே வடிவானவர். தர்மத்தைச் சுமக்கிறார்.
  • 479. ஸத்³ - நல்லதாகவே உள்ளவர். பாராட்டுக்குரியவர். நித்யமானவர்.
  • 480. ஸதக்ஷரம் அக்ஷரம் ஸத் இருப்பு எந்த வகையிலும் குறையாமலும், அழியாமலும் இருப்பவர். எல்லாக் காலத்தும் நிறைவோடு இருப்பவர். கல்யாண குணங்கள் நிறைந்து இருப்பவர். நல்லதை ஒரு போதும் கைவிடாதவர்.
  • 481. அஸத் அபரப் பிரம்மம். தர்மத்தைப் பின்பற்றாதவர்களுக்கும், பாவச் செயல்களைச் செய்பவர்களுக்கும் துக்கத்தைக் கொடுப்பவர்.
  • 482. க்ஷரம் - கெட்டதை விட்டு விலகுகிறார். 
  • 483. அவிஜ் ஞாதா - அடியார்களிடம் தவறுகளை அறியாதவர். உண்மையாக ஈடுபடும் பக்தர்களின் குறைகளை அவர் அறிவதில்லை.
  • 484. ஸஹஸ் ராம் ஸு² ர் - எல்லையில் ஞானத்தர். பிரகாசத்தில் சூரியனை மிஞ்சும் எண்ணற்ற கதிர்களை (அறிவு) உடையவர். அவர் சூரியனுக்குப் பின்னால் உள்ள சக்தி.
  • 485. விதா⁴தா - விதிப்பவர். கட்டளையிடுபவர். உச்சக் கட்டுப்பாட்டாளர். 
  • 486. க்ருத லக்ஷணஹ - சங்கு சக்கரம் முதலான அடையாளங்களை உடையவர். பக்திமான்களுக்கான தனித்தன்மைகளை அவர் வகுத்துள்ளார். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.18

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.18 

அந்த வந்த இமே தே³ஹா 
நித்யஸ் யோக்தா: ஸ²ரீரிண:|
அநாஸி²நோ ப்ரமே யஸ்ய 
தஸ்மாத்³ யுத்⁴ யஸ்வ பா⁴ரத||

  • அந்த வந்த - அழியக் கூடிய 
  • இமே - இவையெல்லாம் 
  • தே³ஹா - ஜட உடல்கள் 
  • நித்யஸ்ய - நித்தியமான நிலையுடையவை 
  • உக்தாஸ் - என்று கூறப்பட்ட 
  • ஸ²ரீரிணஹ - உடலில் வாழ்பவர்கள் 
  • அநாஸி²நோ - ஒரு போதும் அழிவற்ற 
  • அப்ரமே யஸ்ய - அளவிட முடியாத 
  • தஸ்மாத்³ - எனவே 
  • யுத்⁴ யஸ்வ - போரிடு 
  • பா⁴ரத - பரத குலத் தோன்றலே

பரத குலத்தில் உதித்தவனே! இவையெல்லாம் ஒருபோதும், அழியாதது, அளவிட முடியாதது. மற்றும் நித்யமான நிலை உடையது என்று உடலில் வாழ்பவர்கள், கூறப்படும் ஜட உடல்கள் அழியக்கூடியவை. ஆகையால், போரிடு! 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.16

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.16

ஸுரா ஸுராணாமு த³தி⁴ம் 
மத்²ந தாம் மந்த³ரா சலம்|
த³த்⁴ரே கமட² ரூபேண 
ப்ரு ஷ்ட² ஏகாத³ ஸே² விபு:⁴||

  • விபு⁴ஹு - பகவான்
  • ஏகா த³ஸே² - பதினோராவது அவதாரத்தில்
  • ஸுரா ஸுராணாம் - தேவர்களும் அசுரர்களும்
  • உத³தி⁴ம் மத்²ந தாம் - பாற்கடலை கடைக்கின்ற அளவில்
  • மந்த³ரா சலம் - மந்தர பர்வதத்தை
  • கமட² ரூபேண - ஆமை உருவத்தால்
  • ப்ரு ஷ்ட² த³த்⁴ரே - முதுகில் தரித்தார்

பதினோராவதாக, தேவர்களும் அசுரர்களும் சமுத்திரத்தைக் கடையும் போது, 'கூர்மாவதாரம்' எடுத்து, மத்தாக நின்ற மந்தர மலையை தன் முதுகில் தாங்கினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.16

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.16

ஸர்வ தா³பி⁴க³த: ஸத்³பி⁴:
ஸமுத்³ர இவ ஸிந்து⁴பி⁴:|
ஆர்ய: ஸர்வ ஸமஸ்²சைவ
ஸதை³வ ப்ரிய த³ர்ஸ²ந:||

  • ஸிந்து⁴ பி⁴ஹி - நதிகளால்
  • ஸமுத்³ர இவ - கடல் போல்
  • ஸத்³பி⁴ஹி - நல்லவர்களால்
  • ஸர்வ தா³ - எப்பொழுதும்
  • அபி⁴ க³தஸ் - அடையப் பெற்றவர்
  • ஆர்யஸ் - பூஜ்யர்
  • ஸர்வ ஸமஸ்² -  எல்லோரிடத்திலும் ஸமமாய் இருப்பவர்
  • ச -  மேலும்
  • ஸதா³ ஏவ - எப்பொழுதும்
  • ஏக ப்ரிய த³ர்ஸ²நஹ - ப்ரியமானதாகவே உள்ள பார்வையை உடையவர்

அவன், ஆறுகளால் அடையப்படும் பெருங்கடலைப் போலவே, தெளிந்த மனம் கொண்டவர்களால் எப்போதும் அணுகப்படக் கூடிய ஆரியனாக {உன்னதனாக} இருக்கிறான்; அனைவரையும் சமமாக நடத்தும் அவன், எப்போதும் காண்பதற்கு இனியவனாக இருக்கிறான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

திவ்ய ப்ரபந்தம் - 63 - பெரியாழ்வார் திருமொழி - 1.4.10

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் – 63 - என்றும் துன்பம் நெருங்காது
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - நான்காம் திருமொழி - பத்தாம் பாசுரம்

மைத்தடங் கண்ணி* 
யசோதை தன் மகனுக்கு* 
இவை ஒத்தன சொல்லி* 
உரைத்த மாற்றம்* 
ஒளி புத்தூர் வித்தகன் விட்டுசித்தன்* 
விரித்த தமிழிவை* 
எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு* 
இடரில்லையே! (2)

  • மை - கருத்த மை ணிந்த 
  • தட - விசாலமா  பெரிய
  • கண்ணி - கண்களை உடையவளான
  • அசோதை - யசோதையானளவள்
  • தன் மகனுக்கு - தன் மகனான கண்ணனின்
  • ஒத்தன சொல்லி - மனதிற்கு ஏற்றவாறு கண்ணனின் வீர பராக்கிரமங்களையும், அவன் வலிமையையும், மாய சக்திகளைப் பற்றியெல்லாம் பொருந்த சொன்ன இந்த மேலான உண்மைப் பொருள்களை எல்லாம்
  • உரைத்த - சந்திரனை நோக்கிச் சொன்ன
  • இவை மாற்றம் - இப்பாசுரத்தை
  • ஒளி - ஒளி பொருந்திய
  • புத்தூர் - ஸ்ரீவில்லிபுத்தூரில் உதித்தவராய்
  • வித்தகன் - ஸமர்த்தரான
  • விட்டுசித்தன் - பெரியாழ்வாராலே
  • விரித்த - விரித்து அருளிச் செய்யப்பட்ட
  • தமிழ் - இந்த தீந்தமிழ் 
  • இவை - இப்பாசுரங்கள் பத்தையும்
  • எத்தனையும் - ஏதேனும் ஒரு வகையில்
  • சொல்லவல்லவர்க்கு - மனமாற சொல்பவர்களை
  • இடர் இல்லை - எந்த துன்பமும் தீண்டாது

அகன்ற, பெரிய, அழகிய கண்களை உடையவளான யசோதை அன்னை, தன் மகனான குட்டிக் கண்ணனின் மனதிற்கு ஏற்றவாறு, சந்திரனை நோக்கி , கண்ணனின் வீர பராக்கிரமங்களையும், அவன் வலிமையையும், மாய சக்திகளைப் பற்றியெல்லாம் பொருந்த சொன்ன இந்த மேலான உண்மைப் பொருள்களை எல்லாம் மேன்மையுடைய திருவில்லிப்புத்தூர் நகர் வாழ், இறைவனின் தூதுவனான அடியன் விஷ்ணுசித்தன் (பெரியாழ்வார்) விரிவாய் எடுத்து உரைத்திருக்கிறார். இந்த தீந்தமிழ்ப் பாடல்கள் முழுவதையும் ஏதேனும் ஒரு வகையில் மனமாற சொல்பவர்களை எந்த துன்பமும் தீண்டாது.

அடிவரவு: தன் என் சுற்றும்* சக்கரம் அழகிய தண்டு* பாலகன் சிறியன்* தாழி மைத்தட – உய்ய

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 017 - திருக்கண்ணபுரம் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

017. திருக்கண்ணபுரம்
க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரம் – நாகப்பட்டினம்
பதினாறாவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 129 - 1

பெரியாழ்வார்

001. திவ்ய ப்ரபந்தம் - 71 - ஏழுலகுடையவனே ஆயர் போரேறு
பெரியாழ்வார் திருமொழி - முதலாம் பத்து - ஐந்தாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
உன்னையும் ஒக்கலையிற் கொண்டு தம் இல் மருவி* 
உன்னொடு தங்கள் கருத்து ஆயின செய்து வரும்*
கன்னியரும் மகிழ கண்டவர் கண்குளிர* 
கற்றவர் தெற்றிவர பெற்ற எனக்கு அருளி* 
மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் மதில் சூழ்* 
சோலைமலைக்கு அரசே கண்ணபுரத்து அமுதே*
என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை* 
ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே|

ஸ்ரீ ஆண்டாள்

002. திவ்ய ப்ரபந்தம் - 535 - வாமனன் வந்து கூட்டுவார் என்றால் கூடலே கூடு
நாச்சியார் திருமொழி - நான்காம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
காட்டில் வேங்கடம்* கண்ணபுர நகர்*
வாட்டம் இன்றி* மகிழ்ந்து உறை வாமனன்* 
ஓட்டரா வந்து* என் கைப் பற்றி தன்னொடும்*
கூட்டு மாகில்* நீ கூடிடு கூடலே|

குலசேகராழ்வார்

003. திவ்ய ப்ரபந்தம் - 719 - கணபுரத்தின் கருமணியே! தாலேலோ!
பெருமாள் திருமொழி - எட்டாம் திருமொழி - முதலாம் பாசுரம்
மன்னு புகழ்க் கௌசலை தன்* மணி வயிறு வாய்த்தவனே*
தென் இலங்கைக் கோன் முடிகள்* சிந்து வித்தாய் செம்பொன் சேர்*
கன்னி நன் மா மதில் புடைசூழ்* கணபுரத்து என் கருமணியே*
என்னுடைய இன்னமுதே* இராகவனே தாலேலோ|

004. திவ்ய ப்ரபந்தம் - 720 - எண் திசையும் ஆள்பவனே! தாலேலோ!
பெருமாள் திருமொழி - எட்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
புண்டரிக மலர் அதன் மேல்* புவனி எல்லாம் படைத்தவனே*
திண் திறலாள் தாடகை தன்* உரம் உருவச் சிலை வளைத்தாய்*
கண்டவர்தம் மனம் வழங்கும்* கணபுரத்து என் கருமணியே*
எண் திசையும் ஆளுடையாய்* இராகவனே தாலேலோ|

005. திவ்ய ப்ரபந்தம் - 721 - சனகன் மருமகனே! தாலேலோ
பெருமாள் திருமொழி - எட்டாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
கொங்கு மலி கருங்குழலாள்* கௌசலைதன் குல மதலாய்*
தங்கு பெரும் புகழ்ச் சனகன்* திரு மருகா தாசரதீ*
கங்கையிலும் தீர்த்த மலி* கணபுரத்து என் கருமணியே
எங்கள் குலத்து இன்னமுதே* இராகவனே தாலேலோ|

006.  திவ்ய ப்ரபந்தம் - 722 - வில்லுக்கு ஒருவனே! தாலேலோ
பெருமாள் திருமொழி - எட்டாம் திருமொழி - நான்காம் பாசுரம் 
தாமரை மேல் அயனவனைப்* படைத்தவனே தயரதன் தன்*
மா மதலாய்* மைதிலி தன் மணவாளா* 
வண்டினங்கள் காமரங்கள் இசைபாடும்* கணபுரத்து என் கருமணியே*
ஏமருவும் சிலை வலவா* இராகவனே தாலேலோ|

007. திவ்ய ப்ரபந்தம் - 723 - பரதனுக்கு நாடு தந்தவனே! தாலேலோ
பெருமாள் திருமொழி - எட்டாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
பார் ஆளும் படர் செல்வம்* பரத நம்பிக்கே அருளி*
ஆரா அன்பு இளையவனோடு* அருங்கானம் அடைந்தவனே*
சீர் ஆளும் வரை மார்பா* திருக் கண்ணபுரத்து அரசே*
தார் ஆரும் நீண் முடி* என் தாசரதீ தாலேலோ|

008. திவ்ய ப்ரபந்தம் - 724 - சிற்றன்னை சொற்கொண்டவனே! தாலேலோ
பெருமாள் திருமொழி - எட்டாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
சுற்றம் எல்லாம் பின் தொடரத்* தொல் கானம் அடைந்தவனே*
அற்றவர்கட்கு அருமருந்தே* அயோத்தி நகர்க்கு அதிபதியே*
கற்றவர்கள் தாம் வாழும்* கணபுரத்து என் கருமணியே*
சிற்றவை தன் சொற் கொண்ட* சீராமா தாலேலோ|

009. திவ்ய ப்ரபந்தம் - 725 - அயோத்தி மன்னனே! தாலேலோ
பெருமாள் திருமொழி - எட்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
ஆலின் இலைப் பாலகனாய்* அன்று உலகம் உண்டவனே*
வாலியைக் கொன்று அரசு* இளைய வானரத்துக்கு அளித்தவனே*
காலின் மணி கரை அலைக்கும்* கணபுரத்து என் கருமணியே*
ஆலி நகர்க்கு அதிபதியே* அயோத்திமனே தாலேலோ|

010. திவ்ய ப்ரபந்தம் - 726 - தேவர்க்கு அமுதம் அளித்தவனே! தாலேலோ
பெருமாள் திருமொழி - எட்டாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
மலையதனால் அணை கட்டி* மதிள் இலங்கை அழித்தவனே*
அலை கடலைக் கடைந்து* அமரர்க்கு அமுது அருளிச் செய்தவனே*
கலை வலவர் தாம் வாழும்* கணபுரத்து என் கருமணியே*
சிலை வலவா சேவகனே* சீராமா தாலேலோ|

011. திவ்ய ப்ரபந்தம் - 727 - இலங்கையை அழித்தவனே! தாலேலோ
பெருமாள் திருமொழி - எட்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
தளை அவிழும் நறுங் குஞ்சித்* தயரதன் தன் குல மதலாய்*
வளைய ஒரு சிலையதனால்* மதிள் இலங்கை அழித்தவனே*
களை கழுநீர் மருங்கு அலரும்* கணபுரத்து என் கருமணியே*
இளையவர்கட்கு அருள் உடையாய்* இராகவனே தாலேலோ|

012. திவ்ய ப்ரபந்தம் - 728 -  யாவரையும் படைத்தவனே! தாலேலோ
பெருமாள் திருமொழி - எட்டாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!*
யாவரும் வந்தடி வணங்க* அரங்கநகர்த் துயின்றவனே!*
காவிரி நல் நதி பாயும்* கணபுரத்து என் கருமணியே*
ஏவரி வெஞ்சிலை வலவா! இராகவனே! தாலேலோ|

013. திவ்ய ப்ரபந்தம் - 729 - காகுத்தனின் பக்தர்கள் ஆவர்
பெருமாள் திருமொழி - எட்டாம் திருமொழி - பதினொன்றாம் பாசுரம்
கன்னி நன் மா மதில் புடைசூழ்* கணபுரத்து என் காகுத்தன் தன் அடிமேல்* 
தாலேலோ என்று உரைத்த* தமிழ்மாலை*
கொல் நவிலும் வேல் வலவன்* குடைக் குலசேகரன் சொன்ன*
பன்னிய நூல் பத்தும் வல்லார்* பாங்காய பத்தர்களே|

திருமங்கையாழ்வார்

014. திவ்ய ப்ரபந்தம் - 1648 - தலைவி ஸௌரிராஜப் பெருமாளைக் கண்டு விட்டாளோ?
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - முதலாம் திருமொழி - முதலாம் பாசுரம்
சிலை இலங்கு பொன் ஆழி* திண் படை தண்டு ஒண் சங்கம் என்கின்றாளால்*
மலை இலங்கு தோள் நான்கே* மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால்*
முலை இலங்கு பூம் பயலை* முன்பு ஓட அன்பு ஓடி இருக்கின்றாளால்*
கலை இலங்கு மொழியாளர்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ?

015.  திவ்ய ப்ரபந்தம் - 1649 - ஸௌரி ராஜனின் வீரத்தை இவள் வியக்கின்றாள்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - முதலாம் திருமொழி -  இரண்டாம் பாசுரம்
செருவரை முன் ஆசு அறுத்த* சிலை அன்றோ கைத்தலத்தது என்கின்றாளால்*
பொரு வரை முன் போர் தொலைத்த* பொன் ஆழி மற்று ஒரு கை என்கின்றாளால்*
ஒருவரையும் நின் ஒப்பார்* ஒப்பு இலா என் அப்பா என்கின்றாளால்*
கரு வரைபோல் நின்றானைக்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ?

016. திவ்ய ப்ரபந்தம் - 1650 - ஸௌரி ராஜனின் தோற்றத்தை வர்ணிக்கின்றாள்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - முதலாம் திருமொழி -  மூன்றாம் பாசுரம்
துன்னு மா மணி முடிமேல்* துழாய் அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால்*
மின்னு மா மணி மகர குண்டலங்கள்* வில் வீசும் என்கின்றாளால்*
பொன்னின் மா மணி ஆரம்* அணி ஆகத்து இலங்குமால் என்கின்றாளால்*
கன்னி மா மதிள் புடை சூழ்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ?

017.  திவ்ய ப்ரபந்தம் - 1651 - ஸௌரி ராஜனை இவள் கண்டாள் என்பது உறுதி
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - முதலாம் திருமொழி -  நான்காம் பாசுரம்
தார் ஆய தண் துளப வண்டு* உழுத வரை மார்பன் என்கின்றாளால்*
போர் ஆனைக் கொம்பு ஒசித்த புள் பாகன்* என் அம்மான் என்கின்றாளால்*
ஆரானும் காண்மின்கள்* அம் பவளம் வாய் அவனுக்கு என்கின்றாளால்*
கார் வானம் நின்று அதிரும்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ?

018.  திவ்ய ப்ரபந்தம் - 1652 - ஸௌரி ராஜனின் அவயவங்களையே வர்ணிக்கின்றாள்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - முதலாம் திருமொழி -  ஐந்தாம் பாசுரம்
அடித்தலமும் தாமரையே* அம் கைகளும் பங்கயமே என்கின்றாளால்*
முடித்தலமும் பொன் பூணும்* என் நெஞ்சத்துள் அகலா என்கின்றாளால்*
வடித் தடங் கண் மலரவளோ* வரை ஆகத்துள் இருப்பாள்? என்கின்றாளால்*
கடிக் கமலம் கள் உகுக்கும்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ?

019.  திவ்ய ப்ரபந்தம் - 1653 - ஸௌரி ராஜன் உருவத்தையே புகழ்கின்றாள்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - முதலாம் திருமொழி -  ஆறாம் பாசுரம்
பேர் ஆயிரம் உடைய பேராளன்* பேராளன் என்கின்றாளால்*
ஏர் ஆர் கன மகர குண்டலத்தன்* எண் தோளன் என்கின்றாளால்*
நீர் ஆர் மழை முகிலே* நீள் வரையே ஒக்குமால் என்கின்றாளால்*
கார் ஆர் வயல் அமரும்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ?

020. திவ்ய ப்ரபந்தம் - 1654 - ஸௌரி ராஜன் அழகில் இவள் மயங்கி விட்டாள்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - முதலாம் திருமொழி -  ஏழாம் பாசுரம்
செவ் அரத்த உடை ஆடை* அதன் மேல் ஓர் சிவளிகைக் கச்சு என்கின்றாளால்*
அவ் அரத்த அடி இணையும்* அம் கைகளும் பங்கயமே என்கின்றாளால்*
மை வளர்க்கும் மணி உருவம்* மரகதமோ? மழை முகிலோ? என்கின்றாளால்*
கை வளர்க்கும் அழலாளர்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ?

021. திவ்ய ப்ரபந்தம் - 1655 - கண்ணபுரத்து அம்மானையே இவள் காதலிக்கின்றாள்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - முதலாம் திருமொழி -  எட்டாம் பாசுரம்
கொற்றப் புள் ஒன்று ஏறி* மன்றூடே வருகின்றான் என்கின்றாளால்*
வெற்றிப் போர் இந்திரற்கும்* இந்திரனே ஒக்குமால் என்கின்றாளால்*
பெற்றக்கால் அவன் ஆகம்* பெண் பிறந்தோம் உய்யோமோ? என்கின்றாளால்*
கற்ற நூல் மறையாளர்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ?

022. திவ்ய ப்ரபந்தம் - 1656 - ஸௌரி ராஜனை இவள் பிரிய மாட்டாள்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - முதலாம் திருமொழி -  ஒண்பதாம் பாசுரம்
வண்டு அமரும் வனமாலை* மணி முடி மேல் மணம் நாறும் என்கின்றாளால்*
உண்டு இவர்பால் அன்பு எனக்கு என்று* 
ஒருகாலும் பிரிகிலேன் என்கின்றாளால்*
பண்டு இவரைக் கண்டு அறிவது* எவ் ஊரில்? யாம் என்றே பயில்கின்றாளால்*
கண்டவர் தம் மனம் வழங்கும்* 
கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ?

023. திவ்ய ப்ரபந்தம் - 1657 - பொன்னுலகில் மன்னராவர்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - முதலாம் திருமொழி - பத்தாம் பாசுரம் 
மா வளரும் மென் நோக்கி* மாதராள் மாயவனைக் கண்டாள் என்று*
கா வளரும் கடி பொழில் சூழ்* கண்ணபுரத்து அம்மானைக் கலியன் சொன்ன*
பா வளரும் தமிழ் மாலை* பன்னிய நூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்*
பூ வளரும் கற்பகம் சேர்* பொன் உலகில் மன்னவர் ஆய்ப் புகழ் தக்கோரே|

024. திவ்ய ப்ரபந்தம் - 1658 - என் மகளின் கை வளை கழன்று விட்டதே!
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - இரண்டாம் திருமொழி -  முதலாம் பாசுரம்
தெள்ளியீர் தேவர்க்கும்* தேவர் திருத் தக்கீர்*
வெள்ளியீர் வெய்ய* விழு நிதி வண்ணர்*
ஓ துள்ளு நீர்க்* கண்ணபுரம் தொழுதாள் இவள் கள்வியோ?* 
கை வளை கொள்வது தக்கதே?

025. திவ்ய ப்ரபந்தம் - 1659 - என் மகள் நாணத்தைத் துறந்து விட்டாள்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - இரண்டாம் திருமொழி -  இரண்டாம் பாசுரம்
நீள் நிலா முற்றத்து* நின்று இவள் நோக்கினாள்*
காணுமோ* கண்ணபுரம் என்று காட்டினாள்*
பாணனார் திண்ணம் இருக்க* 
இனி இவள் நாணுமோ?* நன்று நன்று நறையூரர்க்கே|
 
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

லீலை கண்ணன் கதைகள் - 72

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

பிரத்யும்னனின் பிறப்பிற்கான காரணம்|

கிருஷ்ணர் ருக்மிணியுடன் துவாரகை சென்று அவருடைய பெற்றோரிடம் கேட்டு உத்தரவு பெற்றுக் கொண்டு, ருக்மிணியை மனம் முடிக்க தயாரானர். அங்கு அவளை வேத முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.


தக்ஷன் யகத்தில் சக்தி எப்படி இறந்தாள் என்று எல்லோருக்கும் தெரியும், அதன் பிறகு சிவன் இமயமலைப் பிரதேசத்தில் அமர்ந்து தவத்தில் ஆழ்ந்துவிட்டார். இதற்கிடையில், சக்தி இமவானின் மகள் பார்வதியாக பிறந்தாள். சிவப்பெருமானைத் தான் மணம் புரிவது என்று அவள் உறுதியாக இருந்தாள். அதனால் அவள் தவம் செய்துக் கொண்டிருந்த சிவனுக்குத் தொண்டு செய்ய ஆரம்பித்தாள். ஆனால் கண்களையே திறக்காத சிவன் அவளைக் கவனிக்கவேயில்லை.

ஆனால் சிவன் பார்வதியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், அவர்களுக்குப் பிறக்கும் முருகக்கடவுள் தங்களுக்குச் சேனாதிபதியாக இருக்க வேண்டும் என்றும் தேவர்கள் விரும்பினார்கள். அதனால் இந்திரன் காமதேவனான மன்மதனை வரவழைத்துச் சிவபெருமானின் தவத்தைக் கலைக்கும்படி கட்டளையிட்டான். மன்மதன் தன் மலரம்புகளால் சிவனைத் தாக்கினான்.

சிவனுடையத் தவம் கலைந்தது. அவர் மெல்லக் கண்களைத் திறந்துப் பார்த்தார். எதிரே பார்வதி நின்றுக் கொண்டிருந்தாள். அவளுடைய பக்தியை ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருந்தது. தமது தவம் கலைக்கப்பட்டதைக் குறித்து அவர் மிகவும் கோபமாக இருந்தார். திரும்பிப் பார்த்தல் மன்மதன் நடுங்கிக் கொண்டு நின்றுக் கொண்டிருந்தான். சிவம் தம் நெற்றிக் கண்ணைத் திறந்தவுடன் மன்மதன் எரிந்து சாம்பலானான்.

மன்மதனின் மனைவி ரதி சிவனிடம் ஓடி வந்து, கதறி அழுதாள். தன் கணவனை உயிர்ப்பிக்க வேண்டும் என்று சிவனிடம் கெஞ்சினாள். சிவன் அவள் மீது இரக்கம் கொண்டு, மன்மதனைப் பிழைக்க வைத்தார். "ஆனால் அவன் உன்னுடைய கண்ணுக்கு மட்டும் தான் தெரிவான்" என்று ரதியிடன் சொன்னார்.

"இறைவா, என் கணவருக்கு இனி உருவமே கிடையாதா? என்று ரதி கேட்டாள். சிவன் சற்று நேரம் யோசித்து, "கவலைப்படாதே, அவன் கிருஷ்ணரின் மகனாகப் பிறப்பான். நீ சம்பராசுரன் என்னும் அசுரன் வீட்டில் வேலைக்காரியாக இருப்பாய். நீங்கள் இருவரும் மீண்டும் அடுத்த ஜென்மத்தில் அங்கு ஒன்று சேர்வீர்கள்" என்று சொன்னார். ரதியும் மகிழ்ச்சியுடன் தன் இருப்பிடம் திரும்பினாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - எழுபத்தி எட்டாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

078 வாக்கினால் வென்றேனோ பட்டரைப் போலே|

இராமானுசரின் முதன்மை சீடரான கூரத்தாழ்வாரின் மகனாகப் பிறந்தவர் பராசர பட்டர்.


நான்கு வயது சிறுவனாக இருக்கும் பொழுது, ஒரு நாள், காவிரிக் கரையில் விளையாடிக் கொண்டிருந்த பராசரன், ஸர்வக்ஞ பட்டர் என்ற முதிர்ந்த வைணவப் பெரியவரொருவர் பல்லக்கில் ஊர்வலமாகப் போய்க் கொண்டு  இருப்பதைக் கண்டார். உடன் வந்த அவரின் சீடர்கள், அவருடைய புகழைப் பாடி வந்தார்கள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பராசர பட்டர், ராமானுஜரும், கூரத்தாழ்வாரும், முதலியாண்டாரும், எம்பாரும் வசிக்கும் ஊரில், இப்படி தற்புகழ்ச்சியுடன் ஒருவர் வருவதை விரும்பவில்லை.

கையில் ஒரு பிடி மணலை எடுத்துக்கொண்டு, பல்லக்கினை நிறுத்தி, சர்வக்ஞரிடம், “நீங்கள் திறமைசாலி எனில், என் கையில் உள்ள மண் எவ்வளவு எனக் கூற முடியுமா?” என்றார்.

“மண் கோடிக்கணக்கில் இருக்கும். எவ்வளவு மணல் உள்ளது என்பதை எப்படி சொல்ல முடியும்?” என்று கேலியாக சிரித்து திகைத்த ஸர்வக்ஞ பட்டர் வினவ, 

உடனே பராசரர், "என்னால் சொல்ல முடியும்" என்றார்.

வியந்த சர்வக்ஞர்" சொல் பார்ப்போம்" என்றார்.

சற்றும் தாமதிக்காத பராசர பட்டர், "ஒரு கைப்பிடி மண்" தன் கேள்விக்கான பதிலைக் கூறினார்.

சிறுவனின் திறமையைக் கண்டு வியந்து தலைவணங்கிய சர்வக்ஞர், அந்தக் குழந்தையை, “யார் நீ?” என வினவ, பராசர பட்டர், தான் கூரத்தாழ்வாரின் மகன் எனக் கூறினார். குழந்தையை தன் பல்லக்கில் ஏற்றி வந்து கூரத்தாழ்வார் வீட்டில் கொண்டு வந்து விட்டார், ஸர்வக்ஞ பட்டர்.

வாசலில் பிள்ளை உறங்காவில் தாசரின் மனைவி பொன்னாச்சியார் குழ்ந்தையை அதன் தாய் ஆண்டாளிடம் ஒப்படைத்து, "குழந்தையை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள். கெட்ட கண்கள் அவர் மீது பட்டு விடப் போகிறது" என்றாள்.


பின்னாளில், பராசர பட்டர் வளர்ந்ததும், ஸ்ரீராமானுஜரால் தெரிந்து எடுக்கப்பட்டு, அவர் காலத்திலேயே வைணவ ஆசாரியராக நியமிக்கப் பட்டார். ராமானுஜரின் அந்திம காலத்தில் ராமானுஜர், பராசரரை அழைத்து, திருநாராயணபுரம் சென்று, அங்கு வேதாந்தி என்பவரை வாதத்தில் வென்று வருமாறுக் கூறினார். பட்டரும் திருநாராயணபுரம் சென்று, வேதாந்தியை வாதத்திறமையால் வென்று அவரை ஸ்ரீரங்கம் அழைத்து வந்தார். அவருக்கு நஞ்ஜீயர் எனப் பெயரிட்டு, வைஷ்ணவ சம்பிரதாயத்தை கடைபிடிக்கவும் வைத்தார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "பட்டரைப் போல் தனது வாதத் திறமையால் பிறரை வென்று, ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தை நிலைநாட்டினேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவத புராணம் - 25

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

கண்ணன் காத்த குழந்தை

ஸ்கந்தம் 01

விஷ்ணுராதனுக்கு புண்ணியாக வசனமும், ஜாத கர்மாவும் தௌம்யர் போன்ற மஹரிஷிகளைக் கொண்டு செய்விக்கப் பட்டது.


தர்ம புத்ரர் ஏராளமான தானங்களைச் செய்தார். அப்போது அவரை வாழ்த்திய அந்தணர்கள், "விஷ்ணுராதன், ஸார்வ பௌமனாகவும், மிகுந்த புகழ் உடையவனாகவும், மஹா பாகவதனாகவும் விளங்குவான். இக்ஷ்வாகு போல் மக்களைக் காப்பவன். ராமனைப்போல் மக்களிடத்தில் பிரியம் உள்ளவன். சிபியைப் போல் கொடையாளி, பரதனைப் போல் தன்னைச் சேர்ந்தவர்களின் புகழை அதிகரிக்கச் செய்வான். கார்த்தவீர்யன், அர்ஜுனன் இவர்களைப் போல் சிறந்த வில்லாளி, அக்னி போல் நெருங்க முடியாதவன். சிம்மம் போல் பராக்ரமம் உள்ளவன், பொறுமை உடையவன். ப்ரும்மாவைப் போல் பாரபட்ச இல்லாதவன். சிவனைப் போல் அனுக்ரஹம் செய்பவன். மஹா விஷ்ணுவைப் போல் அனைவர்க்கும் ஆச்ரயமாய் விளங்குவான். ஸாக்ஷாத் க்ருஷ்ணனைப் போல் அனைத்து நற்குணங்களும் கொண்டவன். ரந்தி தேவன்போல் உதார குணமுள்ளவன். தைரியத்தில் மஹாபலி போலும், ப்ரஹ்லாதன் போல் பகவானிடம் பற்றுள்ளவனாகவும் இருப்பான். நிறைய ராஜ ரிஷிகளை உண்டு பண்ணுவான். கெட்ட வழியில் நடப்பவர்களை தண்டிப்பான். கலியை அடக்குவான். ஒரு ப்ராமண குமாரனின் சாபத்தால் தன் மரணத்தை அறிந்து கொண்டு, விரக்தனாகி ஹரி சரணத்தை அடைவான். வியாசரின் மகனான சுகரிடம் கதை கேட்டு, ஆத்ம ஸ்வரூபத்தை உணர்ந்து, கங்கைக் கரையில் இவனுக்கு மோக்ஷம் கிட்டும்." என்றனர்.

ப்ராமண சாபம் கிட்டும் என்றதும் சற்று கலங்கிய தர்மபுத்ரர், ஸத்சங்கம் கிட்டும், மோக்ஷத்தை அடைவான் என்றதும் ஆறுதல் அடைந்தார்.

அன்னை, 5 தாத்தாக்கள், ஏராளமான பாட்டிகள், கொள்ளுப் பாட்டியான குந்தி, அத்தனை பேரின் அரவணைப்பிலும் வெகு சீக்கிரம் வளர்ந்தான் குழந்தை.

ஞாதிகளை வதம் செய்த பாவத்தைப் போக்க, தர்ம புத்ரர் மூன்று அச்வ மேத யாகங்கள் செய்தார்.

பகவான் கண்ணன் வந்து உடனிருந்து யாகங்களை செவ்வனே நடத்திக் கொடுத்தான். அவ்வமயம் சில மாதங்கள் அஸ்தினாபுரத்தில் தங்கியிருந்த கண்ணன், தன்னால் காக்கப்பட்ட அந்த குழந்தையோடு மிகவும் ஆசையாய் விளையாடினான். பின்னர், மீண்டும் துவாரகை திரும்பும் போது, அர்ஜுனனை உடன் அழைத்துக் கொண்டு திரும்பினான். அதன் பின்னர் ஏழு மாதங்களுக்கு கண்ணனைப் பற்றிய எந்த செய்தியும் அஸ்தினாபுரத்தை எட்டவில்லை. தர்ம புத்ரர் கவலை கொள்ளத் துவங்கினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்