||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
த்⁴யாநம்
வாகீ³ஸா யஸ்ய வத³நே
லக்ஷ்மீர் யஸ்ய ச வக்ஷஸி|
யஸ்யாஸ்தே ஹ்ருதயே ஸம்வித்
தம் ந்ருஸிம்ஹ மஹம் பஜே||
அத² ஸ்தோத்ரம்
1. தே³வதா காரிய ஸித்³த்⁴யர்த²ம்
ஸ்பா⁴ஸ் தம்ப⁴ ஸமுத்³ப⁴வம்|
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருண முக்தயே||
தேவதைகளின் காரியத்தை ஸாதிப்பதற்காக, ஹிரண்யகசிபுவின் சபையில் தூணிலிருந்து வெளிப்பட்டவரும், மஹா வீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை, பிறவி கடனிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
2. லக்ஷ்மி ஆலிங்கி³த வாமாங்க³ம்
ப⁴தாநாம் வரதா³யகம்|
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருண முக்தயே||
மஹாலக்ஷ்மியை இடப்பாகத்தில் அணைத்துக் கொண்டு, தன்னை வழிபடும் பக்தர்களுக்கு விரும்பிய வரங்களை தருபவரும், மஹா வீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை, பிறவி கடனிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
3. ஆந்த்ர மாலாத⁴ரம் ஸ²ங்க²
சக்ராப்³ ஜாயுத⁴ தா⁴ரிணம்|
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருண முக்தயே||
ஹிரண்யகசிபுவின் குடலை மாலையாக அணிந்தவரும், ஸங்கம், சக்கரம், தாமரை, ஆயுதம் இவைகளை கைகளில் தாங்கியவரும், மஹா வீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை, பிறவி கடனிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
4. ஸ்மரணாத் ஸர்வ பாபக்⁴நம்
கத்³ரூஜம் விஷ நாஸ²நம்|
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருண முக்தயே||
நினைத்த உடனேயே அனைத்து பாவங்களையும் போக்கடிப்பவரும், கொடிய விஷத்தை முறியடிப்பவரும், மஹா வீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை, பிறவி கடனிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
5. ஸிம்ஹ நாதே³ந மஹதா
தி³க்³த³ந்தி ப⁴ய நாஸ²நம்|
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருண முக்தயே||
மிகப் பயங்கரமான ஸிம்ஹத்தின் கர்ஜனையால் எட்டுத் திசைகளிலும் உள்ள திக்கஜங்களுக்கும் பயத்தை போக்கடிப்பவரும், மஹா வீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை, பிறவி கடனிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
6. ப்ரஹ்லாத³ வரத³ம் ஸ்ரீஸ²ம்
தை³த்யேஸ²்வர விதா³ரிணம்|
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருண முக்தயே||
பக்தனான ப்ரஹ்லாதனுக்கு அநுக்ரகம் செய்தவரும், மஹாலக்ஷ்மியுடன் கூடியவரும் அரக்கர் தலைவரான ஹிரண்யகசிபுவை ஸம்ஹரித்த மஹா வீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை, பிறவி கடனிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
7. க்ரூரக்³ரஹை꞉ பீடி³தாநாம்
ப⁴க்தாநாம ப⁴யப்ரத³ம்|
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருண முக்தயே||
உக்ரமும் கோரமும் உடைய க்ரஹங்களால் பீடிக்கப்பட்ட பக்தர்களுக்கு அபயம் அளிப்பவரும், மஹா வீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை, பிறவி கடனிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
8. வேத³ வேதா³ந்த யஜ்ஞேஸ²ம்
ப்³ரம்ஹ ருத்³ராதி³ வந்தி³தம்|
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருண முக்தயே||
வேதங்கள், உபநிஷதங்கள், யாகங்கள் முதலியவைகளுக்கு தலைவரும், ப்ரம்ஹா, ருத்ரன் முதலியோர்களால் வணங்கப்பட்டவரும், மஹா வீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை, பிறவி கடனிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
9. ய: இத³ம் பட²தே நித்யம்
ருணமோசன ஸஞ்ஜ்ஞிதம்|
அந்ருணே ஜாயதே ஸத்யோ
த⁴நம் ஸ²க்⁴ரம வாப்நுயாத்||
யார் இந்த ருண விமோசநம் என்ற பெயருடைய ந்ருஸிம்ஹ ஸ்லோகத்தை தினம் படிக்கின்றனோ அவர் விரைவிலயே பிறவி கடனிலிருந்து விடுபட்டவராகி, பெருவீடு என்ற செல்வத்தை அடைவார்.
||இதி ஸ்ரீ ந்ருஸிம்ஹ புராணே ருண மோசந ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம்||
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||