About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 23 December 2023

ருண விமோசந ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்⁴யாநம்

வாகீ³ஸா யஸ்ய வத³நே 
லக்ஷ்மீர் யஸ்ய ச வக்ஷஸி|
யஸ்யாஸ்தே ஹ்ருதயே ஸம்வித் 
தம் ந்ருஸிம்ஹ மஹம் பஜே||

அத² ஸ்தோத்ரம்

1. தே³வதா காரிய ஸித்³த்⁴யர்த²ம் 
ஸ்பா⁴ஸ் தம்ப⁴  ஸமுத்³ப⁴வம்|
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் 
நமாமி ருண முக்தயே||

தேவதைகளின் காரியத்தை ஸாதிப்பதற்காக, ஹிரண்யகசிபுவின் சபையில் தூணிலிருந்து வெளிப்பட்டவரும், மஹா வீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை, பிறவி கடனிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

2. லக்ஷ்மி ஆலிங்கி³த வாமாங்க³ம் 
ப⁴தாநாம் வரதா³யகம்|
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் 
நமாமி ருண முக்தயே||

மஹாலக்ஷ்மியை இடப்பாகத்தில் அணைத்துக் கொண்டு, தன்னை வழிபடும் பக்தர்களுக்கு விரும்பிய வரங்களை தருபவரும், மஹா வீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை, பிறவி கடனிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

3. ஆந்த்ர மாலாத⁴ரம் ஸ²ங்க² 
சக்ராப்³ ஜாயுத⁴  தா⁴ரிணம்|
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் 
நமாமி ருண முக்தயே||

ஹிரண்யகசிபுவின் குடலை மாலையாக அணிந்தவரும், ஸங்கம், சக்கரம், தாமரை, ஆயுதம் இவைகளை கைகளில் தாங்கியவரும், மஹா வீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை, பிறவி கடனிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

4. ஸ்மரணாத் ஸர்வ பாபக்⁴நம் 
கத்³ரூஜம் விஷ நாஸ²நம்|
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் 
நமாமி ருண முக்தயே||

நினைத்த உடனேயே அனைத்து பாவங்களையும் போக்கடிப்பவரும், கொடிய விஷத்தை முறியடிப்பவரும், மஹா வீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை, பிறவி கடனிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

5. ஸிம்ஹ நாதே³ந மஹதா 
தி³க்³த³ந்தி ப⁴ய நாஸ²நம்|
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் 
நமாமி ருண முக்தயே||

மிகப் பயங்கரமான ஸிம்ஹத்தின் கர்ஜனையால் எட்டுத் திசைகளிலும் உள்ள திக்கஜங்களுக்கும் பயத்தை போக்கடிப்பவரும், மஹா வீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை, பிறவி கடனிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

6. ப்ரஹ்லாத³ வரத³ம் ஸ்ரீஸ²ம் 
தை³த்யேஸ²்வர விதா³ரிணம்|
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் 
நமாமி ருண முக்தயே||

பக்தனான ப்ரஹ்லாதனுக்கு அநுக்ரகம் செய்தவரும், மஹாலக்ஷ்மியுடன் கூடியவரும் அரக்கர் தலைவரான ஹிரண்யகசிபுவை ஸம்ஹரித்த மஹா வீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை, பிறவி கடனிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

7. க்ரூரக்³ரஹை꞉ பீடி³தாநாம் 
ப⁴க்தாநாம ப⁴யப்ரத³ம்|
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் 
நமாமி ருண முக்தயே||

உக்ரமும் கோரமும் உடைய க்ரஹங்களால் பீடிக்கப்பட்ட பக்தர்களுக்கு அபயம் அளிப்பவரும், மஹா வீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை, பிறவி கடனிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

8. வேத³ வேதா³ந்த யஜ்ஞேஸ²ம்
 ப்³ரம்ஹ ருத்³ராதி³ வந்தி³தம்|
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் 
நமாமி ருண முக்தயே||

வேதங்கள், உபநிஷதங்கள், யாகங்கள் முதலியவைகளுக்கு தலைவரும், ப்ரம்ஹா, ருத்ரன் முதலியோர்களால் வணங்கப்பட்டவரும், மஹா வீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை, பிறவி கடனிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

9. ய: இத³ம் பட²தே நித்யம் 
ருணமோசன ஸஞ்ஜ்ஞிதம்| 
அந்ருணே ஜாயதே ஸத்யோ 
த⁴நம் ஸ²க்⁴ரம வாப்நுயாத்||

யார் இந்த ருண விமோசநம் என்ற பெயருடைய ந்ருஸிம்ஹ ஸ்லோகத்தை தினம் படிக்கின்றனோ அவர் விரைவிலயே பிறவி கடனிலிருந்து விடுபட்டவராகி, பெருவீடு என்ற செல்வத்தை அடைவார்.

||இதி  ஸ்ரீ ந்ருஸிம்ஹ புராணே ருண மோசந ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம்||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||