About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 10 March 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 120

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 90

அணுர் ப்³ருஹத் க்ருஸ²ஸ் ஸ்தூ²லோ 
கு³ண ப்⁴ருந் நிர் கு³ணோ மஹாந்:|
அத்⁴ருதஸ் ஸ்வத்⁴ருதஸ் ஸ்வாத்²ஸ்ய: 
ப்ராக்³ வம்ஸோ² வம்ஸ² வர்த்த⁴ந:||

  • 839. அணுர் - மிகவும் நுண்ணியன். அணுவை விடச் சிறியதாக மாறும் ஆற்றல் உடையவர். அதீத நுணுக்கத்தை உடையவர்.
  • 840. ப்³ருஹத் - பெரியதிலும் பெரியவர். பிரம்மாண்டமானவர். எந்த வரம்புகளையும் தாண்டி வளரும் திறன் கொண்டவர். 
  • 841. க்ருஸ²ஸ் - இலேசானவர். ஒளியை விட இலகுவாகவும் கண்ணுக்கு தெரியாததாகவும் இருக்கும் திறன் கொண்டவர்.
  • 842. ஸ்தூ²லோ - பருத்தவர். விரும்பும் அளவுக்கு பெரியதாகவும் கனமாகவும் மாறும் திறனை உடையவர். மகத்தானவர்.
  • 843. கு³ண ப்⁴ருந் - எல்லாப் பொருள்களையும் தன்னுடைய குணம் போலத் தரிப்பவர். அவர் அனைத்து பண்புகளையும், குணங்களையும் தாங்குகிறார். அவர் சத்வ, ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய குணங்களை உருவாக்குதல், வாழ்தல் மற்றும் கலைத்தல் போன்ற அவரது செயல்பாடுகளின் ஒரு பகுதியாக வெவ்வேறு உயிரினங்களில் பல்வேறு அளவுகளில் ஆதரிக்கிறார். தயா (கருணை), காருண்யா (இரக்கம்) போன்ற குணங்களோடு இருப்பவர்.
  • 844. நிர் கு³ணோ - முக்குணக் கலப்பற்றவர். (குணமே இல்லாதவர் என்று பொருள் கொள்ளக்கூடாது.) உருவமற்றவர். நிர் குணராகவும், நிரா காரராகவும் தனது தூய வடிவில் இருக்கிறார். எல்லா உயிரினங்களிலும் சுயமாக இருக்கிறார். அவர் குணங்களால் தீண்டப்படாதவர் மற்றும் கறைபடாதவர். அவர் எல்லா ஜீவர்களுடனும் எப்பொழுதும் தொடர்பு கொண்டிருந்தாலும், அவர் எவருக்கும் அடிபணியாதவராகவும், எல்லாவற்றிலும் மேலானவராகவும் இருப்பதால், அவர் அவர்களின் குறைபாடுகளால் கறைபடாதவர்.
  • 845. மஹாந்நு - மிகச் சிறந்தவர். தடையின்றிச் செய்யும் ஆற்றல் உடையவர். அவர் தனது விருப்பப்படி எதை வேண்டுமானாலும் அடையும் ஆற்றலைப் பயன்படுத்துகிறார். அளவிட முடியாத நுட்பமானவர்.
  • 846. அத்⁴ருதஸ் - அடக்க முடியாத ஆற்றல் உடையவர். எந்த ஆதரவும் தேவையில்லாத கட்டுப்பாடற்றவர்.
  • 847. ஸ்வத்⁴ருதஸ் - தன்னைத் தானே அடக்கிக் கொள்பவர். சுயமாக நிலைத்திருப்பவர்.
  • 848. ஸ்வாத்²ஸ்யஃ - இயல்பாகவே மேலான நிலையை உடையவர். அவர் ஒப்பற்றவர். 
  • 849. ப்ராக்³ வம்ஸோ² - நித்ய சூரிகளுக்கு வம்ச மூலமாக உள்ளவர். நித்யமானவர். முதன்மையானவர்.
  • 850. வம்ஸ² வர்த்த⁴நஹ - நித்ய சூரிகளைப் பெருகச் செய்பவர். பிரபஞ்சத்தை அவன் விரும்பியபடி விரித்து கரைக்கிறார்.  பாதுகாவலராக, பிரபஞ்சத்தை விரிவுபடுத்துகிறார். அழிப்பவராக, நேரம் வரும் போது அதை அழிக்கிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.57

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.57
 
ய: ஸர்வத்ரா நபி⁴ ஸ்நேஹஸ்
தத் தத் ப்ராப்ய ஸு²பா⁴ ஸு²ப⁴ம்|
நாபி⁴ நந்த³தி ந த்³வேஷ்டி 
தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி²தா||

  • யஸ் - எவனொருவன் 
  • ஸர்வத்ர - எங்கும் 
  • அநபி⁴ ஸ்நேஹஸ் - பற்றுதல் இன்றி 
  • தத் - எவை 
  • தத் - அவை  
  • ப்ராப்ய - அடைந்து 
  • ஸு²ப⁴ - நன்மை  
  • அஸு²ப⁴ம் - தீமை 
  • ந - என்றுமில்லை  
  • அபி⁴ நந்த³தி - புகழ்கிறான் 
  • ந - என்றுமில்லை 
  • த்³வேஷ்டி - பொறமை கொள்வது 
  • தஸ்ய - அவனுடைய  
  • ப்ரஜ்ஞா - பக்குவ அறிவு  
  • ப்ரதிஷ்டி²தா - நிலைபெற்று

எவனொருவன் எங்கும், எதிலும் பற்றுதல் இன்றி, நன்மை, தீமையை அடைந்த போதும் அவைகளை புகழாமலும், பொறாமை கொள்ளாமலும் இருக்கிறானோ அவன் பக்குவ அறிவில் நிலை பெற்றவனாவான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.10

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.10

ஸ ஸம்ராட் கஸ்ய வா ஹேதோ: 
பாண்டூ³நாம் மாந வர்த⁴ந:|
ப்ராயோ பவிஷ்டோ க³ங்கா³யாம்
அநாத்³ ருத்யா தி⁴ராட் ஸ்²ரியம்||

  • பாண்டூ³நாம் - பாண்டு வம்சத்திற்கே
  • மாந வர்த⁴நஹ - ஸிரோ பூஷணமாக உள்ளவனும்
  • ஸம்ராட் ஸ - சக்கரவர்த்தியுமான பரீக்ஷித்
  • அதி⁴ராட் ஸ்²ரியம் - பெரும் ராஜ்ஜியத்தையும் ஐஸ்வர்யத்தையும்
  • அநாத்³ ருத்ய -  உதறி தள்ளி விட்டு
  • க³ங்கா³யாம் -  கங்கைக் கரையில்
  • கஸ்ய ஹேதோஹோ வா -என்ன காரணம் கொண்டு
  • ப்ராயோ பவிஷ்டோ - ப்ராயோபவேசம் என்ற விருத்தத்தை தொடங்கினான்

பாண்டுவின் குலத்திற்கே பெருமை சேர்ப்பவனும் அரசருக்கு அரசனுமான பரீக்ஷித், தனது அரசுச் செல்வம் அனைத்தையும் உதறித் தள்ளி, கங்கைக் கரையில் வடக்கிருத்தலை மேற்கொண்டது ஏன்?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.55

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.55

மார்க³ மாணோ வநே ஸீதாம் 
ராக்ஷஸம் ஸந்த³ த³ர்ஸ²ஹ|
கப³ந்த⁴ம் நாம ரூபேண 
விக்ருதம் கோ⁴ர த³ர்ஸ²நம்||

  • வநே - வனத்தில்
  • ஸீதாம் - ஸீதையை
  • மார்க³ மாணோ - தேடுகிறவராய்
  • ரூபேண - உருவத்தால்
  • விக்ருதம் - விபரீதமான
  • கோ⁴ர த³ர்ஸ²நம் - கண்ணுக்கு பயங்கரமாய் இருந்த
  • கப³ந்த⁴ம் நாம - கபந்தன் என்ற 
  • ராக்ஷஸம் - ராக்ஷஸனை
  • ஸந்த³ த³ர்ஸ² - பார்த்தார்
  • ஹ - ஆச்சரியம்

வனத்தில் சீதையைத் தேடிக் கொண்டிருந்த போது, வடிவம் குலைந்த பயங்கரத் தோற்றத்தையும், கபந்தன் என்ற பெயரையும் கொண்ட ராக்ஷசனைக் கண்டார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 98 - பெரியாழ்வார் திருமொழி - 1.8.2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 98 - பஞ்சாயுதம் தாங்கியவன் 
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - எட்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்

செங்கமலப் பூவில்* தேன் உண்ணும் வண்டே போல்* 
பங்கிகள் வந்து* உன் பவளவாய் மொய்ப்ப*
சங்கு வில் வாள் தண்டு* சக்கரம் ஏந்திய* 
அங்கைகளாலே வந்து அச்சோ அச்சோ* 
ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ!

  • செங்கமலம் - செந்தாமரைப் பூவில்
  • தேன் உண்ணும் - தேனைக் குடிப்பதற்காக மொய்க்கின்ற
  • வண்டே போல் - வண்டுகளைப் போல
  • பங்கிகள் வந்து - உனது சுருண்ட கூந்தல் மயிர்கள் வந்து
  • உன் பவளம் வாய் – பவளம் போல் செந்நிறமான உனது வாயில்
  • மொய்ப்ப - மொய்த்துக் கொள்ளும்படி
  • வந்து - ஓடி வந்து
  • சங்கு – ஸ்ரீ பாஞ்ச ஜந்யத்ம் என்னும் சங்கு
  • வில் – ஸ்ரீ சார்ங்கம் வில்
  • வாள் – ஸ்ரீ நந்தகம் என்னும் வாள்
  • தண்டு – ஸ்ரீ கௌமோதகி என்னும் கதை 
  • சக்கரம் – ஸ்ரீ ஸூதர்சந ஆழ்வானையும்
  • ஏந்திய - பூவேந்தினாற் போல தரித்துக் கொண்டுள்ள
  • அம் கைகளாலே - அழகிய கைகளாலே 
  • அச்சோ அச்சோ - என்னை அணைத்துக் கொள்ள வேண்டும்!
  • வந்து - ஓடி வந்து
  • ஆர தழுவா - திருப்தி உண்டாகும்படி நன்றாகத் தழுவி 
  • அச்சோ அச்சோ - என்னை அணைத்துக் கொள்ள மாட்டானோ!

செந்தாமரைப் பூவின் தேனை சுவைக்க கரு வண்டுகள் பூவை மொய்ப்பதைப் போல், கண்ணனே! உன்னுடைய சுருண்ட கூந்தல் உன் பவளம் போலுள்ள வாயில் விழுந்தவாரே, சங்கு, வில், வாள், கதை, சக்கரம் ஏந்திய அக்கைகளால் என்னை அணைக்க வருக! என்னை கட்டியணைக்க ஓடி வர வேண்டும். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்