About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 29 January 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 99

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 69

கால நேமி நிஹா வீரஸ்² 
ஸொ²ரிஸ்² ஸூ²ர ஜநேஸ்²வர:|
த்ரி லோகாத்மா த்ரி லோகேஸ²:
கேஸ²வ: கேஸி² ஹா ஹரி:||

  • 648. கால நேமி நிஹா வீரஸ்² - கலியுகக் கொடுமைகளை அழிப்பவர். காலச் சக்கரத்தை அழிப்பவர். கலநேமி என்ற பெயரில் அசுரனை அழிப்பவர். நேரத்தைக் கட்டுப்படுத்தும் சூரியனுக்கு திசையை அமைப்பவர். தைரியமானவர்.
  • 649. ஸொ²ரிஸ்² - சூராவின் மகன் (வாசுதேவனின் மற்றொரு பெயர்) யாதவ குலத்தைச் சேர்ந்த சூரர் இனத்தில் பிறந்தவர். எப்போதும் வீரமும் வெற்றியும் கொண்டவர். அவர் துணிச்சலானவர்.
  • 650. ஸூ²ர - எதிரிகளை அழிப்பவர்.  
  • 651. ஜநேஸ்²வரஹ - சூரர்களுக்குத் தலைவர். வீரம் மிக்க மக்களின் தலைவர்.
  • 652. த்ரி லோகாத்மா - மூவுலங்களிலும் சஞ்சரிப்பவர்.
  • 653. த்ரி லோகேஸ²ஹ் - மூவுலகங்களுக்கும் ஈசன்.
  • 654. கேஸ²வஹ் - துக்கங்களை அழிப்பவர். அழகான கூந்தலை உடையவர். உச்ச நறுமணம் கொண்டவர். பிரம்மா மற்றும் சிவனின் ஆதாரம். சூரியன் முதலியவற்றிலிருந்து வெளிப்படும் கதிர்களுக்கு ஆதாரமாக இருப்பவர். எதிரிகளை துன்புறுத்துபவர். பக்தர்களின் துக்கங்களை நீக்குபவர். மோட்சத்தை வழங்குபவர். நீரின் மீது ஆட்சி செய்பவர். (கடல் போன்றவை)
  • 655. கேஸி² ஹா - கேசி என்னும் அசுரனைக் கொன்றவர்.
  • 656. ஹரிஹி - பச்சை வண்ணன். பக்தர்களின் துன்பத்தை அழிப்பவர். பிரளய காலத்தில் பிரபஞ்சத்தை அழித்தவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.36

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.36 

அவாச்ய வாதா³ம்ஸ்² ச ப³ஹூந்
வதி³ஷ் யந்தி தவா ஹிதா:|
நிந்த³ந் தஸ்தவ ஸாமர்த்²யம் 
ததோ து³:க² தரம் நு கிம்||

  • அவாச்ய - அன்பில்லாத 
  • வாதா³ம்ஸ்² - வார்த்தைகள் 
  • ச - மேலும் 
  • ப³ஹூந் - பல 
  • வதி³ஷ் யந்தி - கூறுவார்கள் 
  • தவ - உன்னுடைய 
  • அஹிதாஹ - எதிரிகள் 
  • நிந்த³ந்தஸ் - பழிக்கும் போது 
  • தவ - உன்னுடைய 
  • ஸாமர்த்²யம் - திறமை 
  • ததோ - அதை விட 
  • து³ஹ்க² தரம் - மிகத் துன்பம் தரும் 
  • நு - நிச்சயமாக 
  • கிம் - வேறு என்ன உள்ளது

உன்னுடைய திறமைகளை, உனக்கு வேண்டாதார் அன்பில்லாத வார்த்தைகளால் பலவற்றை கூறி நிந்திக்கும்போது அதைவிட மிகத் துன்பம் தருவன வேறு என்ன உள்ளது?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.34

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.34

யத்³ யே ஷோ பரதா தே³வீ 
மாயா வைஸா²ரதீ³ மதி:|
ஸம்பந்ந ஏவேதி விது³ர்
மஹிம் நிஸ் வே மஹீயதே||

  • வைஸா²ரதீ³ - ஸர்வஞனான  ஈஸ்வரனுடையதும்
  • தே³வீ - ஸம்சார சக்கரத்தினால் விளையாடுகின்றதுமான
  • யேஷா மாயா - இந்த மாயை 
  • மதிஹி - வித்யா ரூபமாக 
  • யதி³ உபரதா -  எப்பொழுது பரிணாமத்தை அடைகிறதோ அப்பொழுது 
  • ஸம்பந்ந ஏவ - ஜீவ ப்ரும்ம ஸ்வரூபத்தை அடைந்ததாய்
  • ஸ்வே மஹிம்நி - தனது பரமானந்த ஸ்வரூபத்தில்
  • மஹீயதே - விளங்குகிறான் 
  • இதி - என்று 
  • விது³ர் - பெரியோர்கள் அறிகின்றனர்

எல்லாமறிந்த பகவானது தொடர்புடையது அவித்தையாகிற மாயை. மாயை என்னும் இவள், உலகியல் சக்கரத்தைக் கைக்கொண்டு லீலைகள் புரிகிறாள். அதாவது, தானே எல்லாம் அறிந்தவள் என்கிற பொய்யான எண்ணத்தைத் தோற்று விக்கிறாள். இந்த மாயையே, உண்மை வித்யை ஞானமாக மாறுதலை அடையுமேயானால், அப்பொழுது ஜீவன் பிரும்ம ஸ்வரூபனாக ஆகி, பரமானந்தத்தில் திளைக்கறான் என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.34

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.34

நியுஜ்ய மாநோ ராஜ்யாய 
நைச்ச²த்³ ராஜ்யம் மஹாப³ல:|
ஸ ஜகா³ம வநம் வீரோ 
ராம பாத³ ப்ரஸாத³க:|| 

  • ராஜ்யாய -  ராஜ்ய பரிபாலனத்தின் பொருட்டு
  • நியுஜ்ய மாநோ - நியமிக்கப்பட்ட
  • மஹா ப³லஹ -  மகா சக்திமானானவர்
  • வீரோ  - வீரரானவர்
  • ராஜ்யம் -  ராஜ்யத்தை
  • ஐச்ச²த்³  ந- ஏற்றுக் கொள்ளவில்லை
  • ராம  பாத³ ப்ரஸாத³கஹ  - பூஜ்யரான ராமரின் க்ருபையை பெற முயலும்
  • ஸ - அவர்
  • வநம்  - வனத்திற்கு 
  • ஜகா³ம  - புறப்பட்டான்

ராஜாவாக  நியமிக்கப்பட்டாலும்,  வீரரான, மஹாபலனான  பரதன்  ராஜ்யத்தை விரும்பாமல் ராமனின் பாதத்தை வழிபட வனத்திற்கு  புறப்பட்டான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

திவ்ய ப்ரபந்தம் - 79 - பெரியாழ்வார் திருமொழி - 1.6.5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 79 - பத்மநாபா! சப்பாணி கொட்டு
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஆறாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்

புட்டியிற் சேறும்* புழுதியும் கொண்டு வந்து* 
அட்டி அமுக்கி* அகம் புக்கு அறியாமே* 
சட்டித் தயிரும்* தடாவினில் வெண்ணெயும் உண்* 
பட்டிக் கன்றே! கொட்டாய் சப்பாணி
பற்பநாபா! கொட்டாய் சப்பாணி|

  • புட்டியில் - இடுப்பில் படிந்திருக்கும் 
  • சேறும் - சேற்றையும் 
  • புழுதியும் - புழுதி மண்ணையும் 
  • கொண்டு வந்து - கொண்டு வந்து 
  • அட்டி - என் மேல் இட்டு
  • அமுக்கி - அழுத்தி உறைக்கப் பூசி
  • அகம் புக்கு - வீட்டினுள் புகுந்து 
  • அறியாமே - யாருக்கும் தெரியாமல் 
  • சட்டித் தயிரும் - சட்டியில் வைத்திருக்கும் தயிரையும் 
  • தடாவினில் - பானைகளிலிருக்கிற 
  • வெண்ணெயும் - வெண்ணெயையும் 
  • உண் - உண்ணுகின்ற 
  • பட்டி - மாட்டுத் தொழுவத்தில் மேய்ந்து திரியும் 
  • கன்றே! - கன்று போன்றவனே! 
  • கொட்டாய் சப்பாணி - சப்பாணி கொட்டி அருள வேணும்
  • பற்பனாபா! - ப்ரஜாபதி பிறப்பதற்குக் காரணமான தாமரைப் பூவைக் கொண்ட நாபியை உடையவனே! 
  • கொட்டாய் சப்பாணி - சப்பாணி கொட்டி அருள வேணும்

விளையாடுவதால் ஏற்பட்ட, உடம்பிலேறிய சேறும், மண் புழுதியும் என் மேல் அப்பி விட்டு, எனக்குத் தெரியாமல் தப்பி உள்ளே சென்று சட்டியிலுள்ள தயிரையும், பானையிலுள்ள வெண்ணையையும் உண்டு மாட்டுத் தொழுவத்தில் மேயும் கன்னுகுட்டியைப் போன்றவனே, கைகளைக் கொட்டவும். தாமிரைப் பூவை நாபியிலுடையவனே (பற்பநாபா), உன் திருக்கைகளைக் கொட்ட வேண்டும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 022 - திருவெள்ளியங்குடி 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

022. திருவெள்ளியங்குடி (கும்பகோணம்)
இருபத்தி இரண்டாவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் – 10 பாசுரங்கள்

1. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள் 
பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) 

  • திவ்ய ப்ரபந்தம் – 1338 - 1347  - நான்காம் பத்து - பத்தாம் திருமொழி 

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி 

தனியன்

மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி

கால் அளவும் போதாக் கடல் ஞாலத் தோர் கற்ற*
நூல் அளவே அன்றி நுவல்வார் ஆர் கோலப்*
பரு வெள்ளி அம் குடியான் பாதக ஊண் மாய்த்த*
திரு வெள்ளியங் குடியான் சீர்*

  • கோலம் பரு வெள்ளி அம் குடியான் - அழகிய பெரிய கைலாசம் என்னும் வெள்ளி மலையை வாழும் இடமாக உடையனான சிவபிரானது
  • பாதகம் ஊண் - பிரமஹத்தியாகிய பாவத்தினால் நேர்ந்த இரந்துண்ணுதலை
  • மாய்த்த - ஒழித்தருளிய
  • திருவெள்ளியங்குடியான் - திருவெள்ளியங்குடி என்னும் தலத்தில் எழுந்தருளிய எம்பெருமானது
  • சீர் - சிறப்பை
  • கால் அளவும் போதா கடல் ஞாலத்தோர் - திரிவிக்கிரம அவதார காலத்தில் எம்பெருமானது ஒரு திருவடியினால் அளவிடுதற்கும் போதாத கடல் சூழ்ந்த நில உலகத்தில் உள்ளவர்களில்
  • நூல் அளவே அன்றி - கற்ற தாம் படித்தறிந்த நூல்களின் அளவாகக் கூறுவதே அல்லாமல்
  • நுவல்வார் - முழுதும் உணர்ந்து சொல்ல வல்லவர்
  • ஆர் - யாவருளர்?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

லீலை கண்ணன் கதைகள் - 90

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

சால்வனின் தந்திரம்|

பிரத்தியும்னன் அவர்களுக்கு ஆறுதல் கூறி, சால்வனை எதிர்க்கத் தன் இரதத்தில் ஏறினான். அவனுடன் சாத்யகி, சாம்பன், அக்ரூரர், கிருதவர்மன் போன்ற பல யாதவ வீரர்களும் சென்றார்கள். இரண்டு அணிகளுக்குமிடையே கடும் போர் நிகழ்ந்தது. 

பிரத்தியும்னன் வெகு வீரமாகச் சண்டையிட்டான். அவன் மாயப் போர் நன்கறிந்தவன். அதனால் சால்வனின் எல்லாத் தந்திரங்களையும் அவனால் சமாளிக்க முடிந்தது. ஆனால் அவனுக்கு ஆச்சரியம் அளித்தது சால்வனுடைய இரதம். அவனுடைய சேனையைப் பிரத்தியும்னனால் அழிக்க முடிந்தது. ஆனால் சால்வன் அகப்படவில்லை. 


சிவபெருமான் கொடுத்த அந்த அதிசய விமானத்தில் சால்வன் உட்கார்ந்திருந்தான். அவன் யார் கண்ணுக்கும் புலப்படவில்லை. அந்த விமானம் ஒரு கணம் ஆகாயத்தில் இருக்கும், அடுத்த கணம் அது பூமியில் இருக்கும், அதற்கும் அடுத்த கணம் அது ஆகாயத்தில் பறந்து சென்றுவிடும். ஒரு சமயம் மிகப் பெரியதாகக் காணப்படும்; இன்னொரு சமயம் மிகச் சிரியதாகிவிடும்.

சால்வனின் மிக பராக்கிரமசாலியான மந்திரி த்யுமான் பிரத்தியும்னனை எல்லாப் பக்கங்களிலிருந்தும் தாக்கினான். ஒரு நல்ல தருணம் பார்த்து அவன் பிரத்தியும்னனைத் தன் இரும்பு கதையினால் அடித்தான். பிரத்தியும்னனுக்கு மார்பில் நல்ல அடி. உடனே அவனுடைய சாரதி இரதத்தைப் போர்க் களத்திலிருந்து அப்பால் ஓட்டிச் சென்றான். மருத்துவ உதவிக்குப் பிறகு பிரத்தியும்னனுக்கு நினைவு திரும்பியது. 

உடனே அவன் தன் சாரதியைக் கடுமையாகக் கோபித்துக் கொண்டான். இதற்கு சாரதி, "ஐயா! யுத்த தர்மத்தின்படி என்ன செய்ய வேண்டுமோ அதைத் தான் நான் செய்தேன். யஜமானன் ஆபத்தில் இருந்தால் அவரைக் காப்பாற்ற வேண்டியது சாரதியின் கடமை. அதைத் தான் நான் செய்தேன். இதனால் நான் தங்களுக்கு ஒரு களங்கமும் ஏற்படுத்தவில்லை. தாங்கள் இப்பொழுது சரியாகி விட்டதனால், மீண்டும் போர்க்களத்திற்குத் தங்களை நான் ஓட்டிச் செல்வேன்" என்றான்.

பிரத்தியும்னன் உடனே த்யுமானைத் தாகித் தன் கொடிய அம்புகளினால் அவன் தலையைத் துண்டித்தான். கிருஷ்ணர் நகரத்தைக் காப்பாற்றும் பொறுப்பைப் பாலராமரிடம் விட்டுவிட்டு, தம்முடைய சாரதி தாருகனை நேரே யுத்தக் களத்திற்கு இரதத்தை ஓட்டும்படிச் சொன்னார். 

கிருஷ்ணரைப் பார்த்ததும் அங்குள்ள யாதவர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். சால்வனும் கிருஷ்ணரின் இரதத்தைப் பார்த்தான். இருவருக்கும் இடையே கொடிய போர் நடந்தது. சப்தமிட்டுக் கொண்டு வெகு வேகமாகச் செல்லும் வேலாயுதத்தைச் சால்வன் கிருஷ்ணரை நோக்கி எறிந்தான். கிருஷ்ணர் தம்முடைய அம்புகளினால் அதைத் துண்டு துண்டாக்கினார். சால்வன் தன் விமானம் மூலம் ஆகாயத்தில் மறைந்து, அங்கிருந்து கிருஷ்ணரின் இடக்கையை நோக்கி அம்புகளைப் பொழிந்தான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 43

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

இறைவனின் திருத்தோற்றங்கள் - 2

ஸ்கந்தம் 02

11. மத்ஸ்ய அவதாரம்
சாக்ஷுஷ மன்வந்தரத்தின் முடிவில் அடுத்து வரப் போகும் த்ய விரதன் என்ற பாண்டிய மன்னனுக்கு மீன் உருவில் காட்சி அளித்தார். ப்ரளய ஜலத்தில் வேதங்களைச் சொல்லிக் கொண்டு அதிலேயே விளையாடி மகிழ்ந்தார். தசாவதாரத்தில் முதலாவதாகச் சொல்லப்படும் மத்ஸ்ய அவதாரம் நமது தமிழ் நாட்டில் மதுரையம்பதியில் நிகழ்ந்தது.

12. கூர்ம அவதாரம்
தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெற விரும்பி பாற்கடலைக் கடைந்த போது இறைவன் ஆமை உருக்கொண்டு மத்தாக விளங்கிய மந்தர மலையைத் தன் முதுகில் தாங்கினார்.

மலை முன்னும் பின்னுமாக அவர் முதுகில் சுழன்றது அவருக்கு முதுகு சொறிந்து விடுவது போல் சுகமாக இருந்ததாம்.

13. நரஸிம்ஹ அவதாரம்
உத்தம பக்தனான ப்ரஹலாதனைக் காப்பதற்காக ஏற்பட்ட அவதாரம். சிங்க முகத்துடனும் மனித உடலுடனும் தோன்றி ஹிரண்ய கசிபுவைக் கொன்று தேவர்களின் துயர் தீர்த்தார்.

14. கஜேந்திரனுக்காக வந்த அவதாரம்
ஹரி என்று பெயர் பெற்ற இந்த அவதாரம் முதலையினால் துன்புற்ற கஜேந்திரன் என்ற யானையைக் காப்பதற்காக நிகழ்ந்தது.

ஆதிமூலமே, அகில லோகநாதனே! என்றழைத்த யானைக்குத் தானே அது என்னும்படி கருடன்மீதேறி விரைந்து வந்து காத்தார்.

15. வாமன அவதாரம்
அதிதி தேவியின் மகனாக அவதரித்தவர். தன் சகோதரர்களான தேவர்களின் துயர் நீக்கவும், பரம் பக்தனான பலிச் சக்ரவர்த்தியின் அஹங்காரத்தை அழித்து அவரை ஆட்கொள்ளவும் சிறிய திருமேனியாக இருந்தவர், திரிவிக்ரம அவதாரம் எடுத்தார்.

16. ஹம்ஸ வதாரம்
நாரதரின் அளப்பரிய அன்பினாலும் பக்தியினாலும் ஈர்க்கப்பட்டு அன்னப்பறவை உருவில் தோன்றி பாகவத தர்மத்தையிம், பக்தி யோகத்தையும் உபதேசித்தார்.

17. மனு
ஒவ்வொரு மன்வந்தரத்திலும் அந்தந்த காலத்தில் அதிபதியான மனுவாக இறைவனே அவதாரம் செய்கிறார்.

18. தன்வந்த்ரி
பாற்கடலைக் கடையும்போது கைகளில் அமுதக் கலசத்தோடு தோன்றியவர். தன் பெயரைச் சொன்னாலே அனைத்து நோய்களையும் குணப்படுத்துபவர்.

19. பரசுராம அவதாரம்
அந்தணர்களைக் காக்க வேண்டிய அரசர்களே அவர்களைத் துன்புறுத்தி தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ள முற்பட்டனர். அப்போது கூர்மையான (பரசு) கோடரியை ஏந்தி தீயொழுக்கமுள்ள அரசர்களை 21 முறை அழித்தார்.

20. ஸ்ரீ ராம அவதாரம்
தன் பதினாறு கலைகளுடனும் பூர்ணாவதாரமாக தன் அம்சங்களோடு அவதரித்தார். மானுட தர்மத்தை அனுஷ்டித்துக்‌ காட்டினார்.

21. ஸ்ரீ க்ருஷ்ண அவதாரம்
இவரும் பூர்ணாவதாரமே. பூபாரம் தீர்க்க தன் அம்சமான பலராமனோடு அவதரித்து எண்ணற்ற லீலைகள் புரிந்தார்.

22. ஸ்ரீ வியாஸ அவதாரம்
காலமெனும் நீரோட்டத்தில் மானிடர்களின் அறிவும் ஆற்றலும் குறையும்போது, ஒவ்வொரு சதுர்யுகத்தின் துவாபர யுகத்திலும் ஸத்யவதியின் வயிற்றில் பிறந்து வேதமாகிய விருக்ஷத்தைப் பல கிளைகளாகப் பிரிக்கப் போகிறார்.

23. புத்த அவதாரம்
தேவர்களின் பகைவர்களான அசுரர்கள் கண்ணுக்குப் புலப்படாமல் வசித்துக்கொண்டு சத்தியத்தை அழிக்கத் துவங்குவார்கள். அப்போது மனத்தில் மயக்கத்தையும் கவர்ச்சியையும் உண்டுபண்ணும் வண்ணம் அழகிய திருமேனியை ஏற்று, புத்தர் என்ற வடிவில், வேத நெறிக்குப் புறம்பான ஆனால் மக்கள் நலனுக்கேற்ற பல வாழ்க்கை நெறிகளை உபதேசிக்கப்போகிறார்.

24. கல்கி அவதாரம்
கலியுகமுடிவில், வேதம் எங்குமே ஒலிக்காது. ஓரிடத்திலும் ஸத்சங்கம் நடைபெறாது. நல்ல விஷயம் என்று எதுவுமே இருக்காது. அப்போது கலியை அழிப்பதற்காக தென் ந்தியாவில் சம்பளம் என்ற கிராமத்தில் அவதாரம் செய்வார். தேவதத்தம் என்ற குதிரையில் சுற்றி, கோடிக் கணக்கான துஷ்டர்களை வாளால் வதம் செய்யப் போகிறார். அப்போது மாந்தர்களிடையே ஸத்வகுணம் மிகுந்து க்ருதயுகம் தோன்றும்.

படைக்கும் போது ப்ரஜாபதிகள், ப்ரும்மாவாகிய நான், காப்பாற்றும் போது விஷ்ணு, அழிக்கும் போது ருத்ரன் என்று அனைத்து ரூபங்களாகவும் விளங்குபவர் பகவான் ஒருவரே என்று சொல்லி, யோக மாயையை அறிந்தவர்கள் பற்றிய விவரத்தையும் கூறினார் ப்ரும்மா.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்