About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 17 October 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 62

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 32

பூ⁴த ப⁴வ்ய ப⁴வந் நாத²: 
பவந: பாவநோ நல:|
காமஹா காம க்ருத் காந்த: 
காம: காம ப்ரத³ ப்ரபு⁴:||

  • 291. பூ⁴த ப⁴வ்ய ப⁴வந் நாத²ஃ - முக்காலங்களிலும் உள்ளவற்றுக்குத் தலைவன்.
  • 292. பவநஃ - சஞ்சரிப்பவன்.
  • 293. பாவநோ - தூய்மை அளிப்பவன்.
  • 294. நலஹ - அருள் புரிவதில் திருப்தி அடையாதவன்.
  • 295. காமஹா - ஆசைகளைப் போக்குபவன்.
  • 296. காம க்ருத் - ஆசைகளை பக்தர்களுக்கு வளர்ப்பவன்.
  • 297. காந்தஹ் - விரும்பப் படுபவன்.
  • 298. காமஹ் - ஆசைப்படத்தகுந்தவன்.
  • 299. காம ப்ரத³ - விருப்பங்களைக் கொடுப்பவன்.
  • 300. ப்ரபு⁴ஹு - பிரபுவாய் இருப்பவன்

மூன்றாம் நூறு திரு நாமங்கள் நிறைவு.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.47

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் - 1.47 

ஸஞ்ஜய உவாச|
ஏவ முக்த் வார்ஜுந: ஸங்க்²யே 
ரதோ² பஸ்த² உபா விஸ²த்|
விஸ்ரு ஜ்ய ஸஸ²ரம் சாபம் 
ஸோ²க ஸம் விக்³ந மாநஸ:||

  • ஸஞ்ஜய: உவாச - ஸஞ்ஜயன் கூறினான் 
  • ஏவம் - இவ்வாறாக
  • உக்த்வா - சொல்லி 
  • அர்ஜுநஸ் - அர்ஜுநன்
  • ஸங்க்²யே - போர்க்களத்தில்
  • ரதோ² - ரதத்தின் 
  • பஸ்த² - இருக்கையில் 
  • உபா விஸ²த்து - மீண்டும் அமர்ந்தான் 
  • விஸ்ரு ஜ்ய - தனியே எறிந்து விட்டு 
  • ஸஸ²ரம் - அம்பையும் 
  • சாபம் - வில்லையும் 
  • ஸோ²க - சோகத்தால்
  • ஸம் விக்³ந - துன்பப்பட்டு 
  • மாநஸஹ - மனதிற்குள்
ஸஞ்ஜயன் கூறுகிறார்: இவ்வாறாக சொல்லிய அர்ஜுநன், போர்க்களத்தில் அம்புகளுடன் வில்லையும் தனியே எறிந்து விட்டு, ரதத்தின் இருக்கையில் மீண்டும் அமர்ந்து விட்டு சோகத்தால் மனதிற்குள் துன்பப்பட்டான்.

||ஓம் தத் ஸதி³தி ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா ஸூப நிஷத்ஸு
ப்³ரஹ்ம வித்³யாயாம் யோக³ ஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுந ஸம் வாதே³
அர்ஜுந விஷாத³ யோகோ³ நாம ப்ரத²மோ அத்⁴யாய꞉|| - 1

ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'அர்ஜுந விஷாத யோகம்' எனப் பெயர் படைத்த முதல் அத்தியாயம் நிறைவுற்றது. 

பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுநன் யுத்தகளத்தை கண்ட உடன் பதற்றம் அடைந்தான்.  அந்த பதற்றத்திற்கு காரணம் அவனுக்கு இந்த உலகத்தின் (அல்லது ) பிரபஞ்சத்தின் பூரண உண்மை தெரியாததால் அவன் அவ்வாறு பதற்றத்துக்கு உள்ளானான். தர்மதிற்கான யுத்தத்தில் தனது உறவினர்களும் கொல்லபடுவார்களே என்று அஞ்சினான். இவ்வாறு அஞ்சி நடுங்கி கொண்டு இருந்த அர்ஜுநனுக்கு பகவான் கிருஷ்ணர் பூரண உண்மையை கூறி அவனது புத்தியை விழித்தெழ செய்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.2.31

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா: 
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம் 
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்|| 
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||

ஸ்லோகம் - 1.2.31

தயா விலஸி தேஷ் வேஷு 
கு³ணேஷு கு³ணவாந் இவ|
அந்த: ப்ரவிஷ்ட ஆபா⁴தி 
விஜ்ஞா நேந விஜ்ரும் பி⁴த:||

  • தயா - அந்த மாயையால் 
  • விலஸி தேஷ் - உண்டாகிய
  • வேஷு கு³ணேஷு - ஆகாசம் முதலியவைகளில்
  • அந்தஃ ப்ரவிஷ்ட - உட் புகுந்தவராய்க் கொண்டு
  • கு³ணவாந் இவ - எனக்குள் அடங்கியவையே இவை என்று எண்ணுகிறவர் போல்
  • விஜ்ஞா நேந - சித் என்னும் சக்தி ஸ்வரூபத்தால்
  • விஜ்ரும் பி⁴தஹ - உயர்ந்தவராகக் கொண்டு
  • ஆபா⁴தி - விளங்குகிறார்  

அந்த மாயையால் உண்டான எல்லாப் பொருள்களிலும் பகவானே உட்புகுந்து நிறைந்து விளங்குவதால் குணமுள்ளவன் போல் தோற்றமளிக்கிறான். உண்மையில், அவன் முற்றிலும் நிறைவான ஞானானந்தச் செறிவானவன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - த்யான ஸ்லோகம் 10

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்⁴யான மங்க³ல ஸ²லோகா꞉ 10
ஶ்ரீ வால்மீகி நமஸ்க்ரியா:

ஶ்ரீராம த்⁴யானம்

வைதே³ஹீ ஸஹிதம் ஸுரத்³ரு மதலே ஹைமே மஹா மண்ட³பே
மத்⁴யே புஷ்பக மாஸனே மணி மயே வீராஸனே ஸுஸ்தி²தம்|
அக்³ரே வாசயதி ப்ரப⁴ஞ்ஜந ஸுதே தத் த்வம் முநிப்⁴ய꞉ பரம்
வ்யாக்²யாந்தம் ப⁴ரதாதி³பி⁴꞉ பரி வ்ருதம் ராமம் ப⁴ஜே ஸ்²யாமளம்||

  • வைதே³ஹீ ஸஹிதம் - சீதையுடன் கூட
  • ஸுரத்³ரு மதலே - கல்பக வனத்தில்
  • ஹைமே - தங்க மயமான
  • மஹா மண்ட³பே- மண்டபத்தில்
  • மணி மயே- ரத்தினங்கள் பதித்த
  • புஷ்பக மாஸனே - புஷ்பக விமானத்தின்
  • மத்⁴யே - நடுவில்
  • வீராஸனே - வீராசனத்தில்
  • ஸுஸ்தி²தம் - நன்கு அமர்ந்து இருப்பவரும்
  • அக்³ரே - முன்னால்
  • ப்ரப⁴ஞ்ஜந ஸுதே - ஹனுமனுடனும்
  • முநிப்⁴யஃ - முனிவர்களுக்கு
  • தத் த்வம்- தத்துவத்தை
  • வாசயதி - கூறி
  • வ்யாக்²யாந்தம் - விளக்குபவரும்
  • ப⁴ரதாதி³பி⁴ஃ - பரதன் முதலியவர்களால்
  • பரி வ்ருதம் - சூழப்பட்டவரும் ஆன
  • ஸ்²யாமளம் - நீலநிறம் கொண்ட
  • ராமம் - ராமனைத்
  • ப⁴ஜே - தொழுகிறேன்

சீதையுடன் கூட கல்பக வனத்தில் தங்க மயமான மண்டபத்தில் ரத்தினங்கள் பதித்த புஷ்பக விமானத்தின் நடுவில் வீராசனத்தில் நன்கு அமர்ந்து இருப்பவரும் முன்னால் ஹனுமனுடனும் முனிவர்களுக்கு தத்துவத்தை கூறி விளக்குபவரும் பரதன் முதலியவர்களால் சூழப்பட்டவரும் ஆன நீல நிறம் கொண்ட ராமனைத் தொழுகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 45 - பெரியாழ்வார் திருமொழி - 1.3.2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் – 45 - சிவபெருமான் அளித்த அரைவடம்
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - மூன்றாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்

உடையார் கன மணியோடு* 
ஒண் மாதுளம் பூ* 
இடை விரவிக் கோத்த* 
எழிற் தெழ்கினோடு*
விடையேறு காபாலி* 
ஈசன் விடு தந்தான்* 
உடையாய்! அழேல் அழேல் தாலேலோ* 
உலகம் அளந்தானே! தாலேலோ|

  • உடை ஆர் - திருவரைக்குச் சேரும் படியான (இடுப்புக்குத் தகுந்த)
  • கனம் மணியோடு - பொன் மணியையும்
  • இடை - நடு நடுவே
  • விரவி - கலந்து
  • கோத்த - கோர்க்கப்பட்ட
  • எழில் - அழகிய
  • தெழ்கினோடும் - இடைச் சரிகையையும்
  • ஒண் - அழகிய 
  • மாதுளம்பூ - மாதுளம்புக் கோவையான சங்கிலியையும்
  • விடை ஏறு - ரிஷப வாஹகனா  
  • காபாலி - கபாலதாரியா
  • ஈசன் - ருத்ரன் 
  • விடுதந்தான் - உனக்கு அனுப்பி வைத்தான்
  • உடையாய் - அனைத்தையும் உடைய கண்ணனே! 
  • அழேல் அழேல் - அழாதே அழாதே!
  •  தாலேலோ! - கண்ணுறங்கு! 
  • உலகம் அளந்தானே! - உலகளந்த திருவிக்கிரமனே!
  •  தாலேலோ! - கண்ணுறங்கு! 

ரிஷப வாகனத்தை உடையவனும், கபாலி என்ற பெயருடையவனும், அஷ்ட ஐஸ்வர்யங்களை உடையவனுமான சிவன், பொன் மணிகளை நடு நடுவே கலந்து கோக்கப்பட்ட இடுப்பில் அணியக் கூடிய சரிகையையும், மாதுளம்புக் கோவை என்கிற அரை வட்டமும் கொடுத்தனுப்பி உள்ளான். கண்ணா! அதைப் பெற்றுக் கொள். அழாதே, அழாதே, கண்ணுறங்கு, உலங்கமளந்தானே, கண்ணுறங்கு. (பிரம்மாவினுடைய ஐந்து தலைகளில் ஒன்றை பறித்ததினால் சிவனுக்கு காபாலி என்று பெயர். ஈசன் என்பதன் ஒரு பொருள் அஷ்ட ஐஸ்வர்யங்களை உடையவன்)

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 013 - திருவிண்ணகரம் 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

013. திருவிண்ணகரம் 
மார்க்கண்டேய க்ஷேத்ரம் – கும்பகோணம்
பதிமூன்றாவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 47 - 2

திருமங்கையாழ்வார்

025. திவ்ய ப்ரபந்தம் - 1472 - நின்னை நினைந்து பிறவாமை பெற்றேன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
மற்று ஓர் தெய்வம் எண்ணேன்* 
உன்னை என் மனத்து வைத்துப் பெற்றேன்* 
பெற்றதுவும் பிறவாமை எம் பெருமான்* 
வற்றா நீள் கடல் சூழ்* இலங்கை இராவணனைச்*
செற்றாய் கொற்றவனே* திருவிண்ணகரானே|

026. திவ்ய ப்ரபந்தம் - 1473 - திருவிண்ணகரானே! பிழைக்கும் கை உணர்ந்தேன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
மை ஒண் கருங் கடலும்* நிலனும் மணி வரையும்*
செய்ய சுடர் இரண்டும்* இவை ஆய நின்னை* 
நெஞ்சில் உய்யும் வகை உணர்ந்தேன்* உண்மையால் இனி* 
யாதும் மற்று ஓர் தெய்வம் பிறிது அறியேன்* திருவிண்ணகரானே|

027. திவ்ய ப்ரபந்தம் - 1474 - திருவிண்ணகரானே! நீயே என் தெய்வம்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
வேறே கூறுவது உண்டு* அடியேன் விரித்து உரைக்கும் ஆறே* 
நீ பணியாது அடை* நின் திருமனத்து* 
கூறேன் நெஞ்சு தன்னால்* குணம் கொண்டு* 
மற்று ஓர் தெய்வம் தேறேன் உன்னை அல்லால்* திருவிண்ணகரானே|

028. திவ்ய ப்ரபந்தம் - 1475 - நான் பரம பதம் அடைவது எப்பொழுது?
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
முளிந்தீந்த வெம் கடத்து* மூரிப் பெருங் களிற்றால்*
விளிந்தீந்த மா மரம்போல்* வீழ்ந்தாரை நினையாதே* 
அளிந்து ஓர்ந்த சிந்தை* நின்பால் அடியேற்கு* 
வான் உலகம் தெளிந்தே என்று எய்துவது?* திருவிண்ணகரானே|

029. திவ்ய ப்ரபந்தம் - 1476 - நம்பீ! என் தீவினைகளை நீக்கு
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
சொல்லாய் திரு மார்வா * 
உனக்கு ஆகித் தொண்டு பட்ட நல்லேனை * 
வினைகள் நலியாமை நம்பு *
நம்பீ மல்லா குடம் ஆடீ * மதுசூதனே * 
உலகில் செல்லா நல் இசையாய்* திருவிண்ணகரானே|

030. திவ்ய ப்ரபந்தம் - 1477 - துன்பம் நீங்கி விடும்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
தார் ஆர் மலர்க் கமலத்* தடம் சூழ்ந்த தண் புறவில்*
சீர் ஆர் நெடு மறுகின்* திருவிண்ணகரானை* 
கார் ஆர் புயல் தடக் கைக்* கலியன் ஒலி மாலை*
ஆர் ஆர் இவை வல்லார்* அவர்க்கு அல்லல் நில்லாவே|

031. திவ்ய ப்ரபந்தம் - 1855 - திருமாலிருஞ்சோலையும் திருவிண்ணகரும்
பெரிய திருமொழி - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
பத்தர் ஆவியைப்* பால் மதியை* 
அணித் தொத்தை* மாலிருஞ்சோலைத் தொழுது போய்* 
முத்தினை மணியை* மணி மாணிக்க வித்தினை* 
சென்று விண்ணகர்க் காண்டுமே|

032. திவ்ய ப்ரபந்தம் - 2080 - கண்ணனையே நாயேன் நினைக்கின்றேன்
திருநெடுந்தாண்டகம் - மூன்றாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (29)
அன்று ஆயர் குலமகளுக்கு அரையன் தன்னை*
அலை கடலைக் கடைந்து அடைத்த அம்மான் தன்னை*
குன்றாத வலி அரக்கர் கோனை மாளக்*
கொடும் சிலை வாய்ச் சரம் துரந்து குலம் களைந்து வென்றானை*
குன்று எடுத்த தோளினானை*
விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும் நின்றானை* 
தண் குடந்தைக் கிடந்த மாலை*
நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே|

பேயாழ்வார்

033. திவ்ய ப்ரபந்தம் - 2342 - திருக்கடிகையில் திருமால் எழுந்தருளி ள்ளான்
மூன்றாம் திருவந்தாதி - ஏழாம் திருமொழி - முதலாம் பாசுரம் (61)
பண்டு எல்லாம் வேங்கடம்* பாற்கடல் வைகுந்தம்*
கொண்டு அங்கு உறைவார்க்கு கோயில் போல்*
வண்டு வளம் கிளரும் நீள் சோலை* வண் பூங் கடிகை*
இளங் குமரன் தன் விண்ணகர்|

034. திவ்ய ப்ரபந்தம் - 2343 - திருமால் எழுந்தருளி ள்ள திருப்பதிகள்
மூன்றாம் திருவந்தாதி - ஏழாம் திருமொழி - இரண்டாம் பாசுரம் (62)
விண்ணகரம் வெஃகா* விரி திரை நீர் வேங்கடம்*
மண் நகரம் மா மாட வேளுக்கை*
மண்ணகத்த தென் குடந்தை* 
தேன் ஆர் திருவரங்கம் தென் கோட்டி*
தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு|

திருமங்கையாழ்வார்

035. திவ்ய ப்ரபந்தம் - 2707 - தலைவி சென்று தேடிய திவ்ய தேசங்கள்
சிறிய திருமடல் - நான்காம் திருமொழி - ஐந்தாம் பாசுரம் (35)
கார் ஆர் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்*
சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர்*
கார் ஆர் குடந்தை கடிகை கடல் மல்லை*
ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை*
சீர் ஆரும் மாலிருஞ்சோலை திருமோகூர்|

036. திவ்ய ப்ரபந்தம் - 2772 - எம்பெருமான் தங்கியிருக்கும் திவ்ய தேசங்களை அவள் புகழ்ந்து வணங்குகிறாள்
பெரிய திருமடல் - ஆறாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (60) 
தாமரை மேல் மின் இடையாள் நாயகனை விண் நகருள் பொன் மலையை*
பொன்னி மணி கொழிக்கும் பூங் குடந்தைப் போர் விடையை*
தென்னன் குறுங்குடியுள் செம் பவளக் குன்றினை*
மன்னிய தண் சேறை வள்ளலை|

நம்மாழ்வார் 

037. திவ்ய ப்ரபந்தம் - 3365 - எல்லாமானவனை ஒப்பிலியப்பன் கோயிலில் கண்டேன்
திருவாய்மொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருவாய்மொழி - முதலாம் பாசுரம்
நல்குரவும் செல்வும்* நரகும் சுவர்க்கமும் ஆய்*
வெல்பகையும் நட்பும்* விடமும் அமுதமும் ஆய்* 
பல்வகையும் பரந்த* பெருமான் என்னை ஆள்வானை*
செல்வம் மல்கு குடித்* திருவிண்ணகர்க் கண்டேனே|   

038. திவ்ய ப்ரபந்தம் - 3366 - கண்டு கொள்வதற்கு அரிய பெருமான் ஒப்பிலியப்பன்
திருவாய்மொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருவாய்மொழி - இரண்டாம் பாசுரம்
கண்ட இன்பம் துன்பம்* கலக்கங்களும் தேற்றமும் ஆய்*
தண்டமும் தண்மையும்* தழலும் நிழலும் ஆய்* 
கண்டுகோடற்கு அரிய* பெருமான் என்னை ஆள்வான் ஊர்*
தெண் திரைப் புனல் சூழ்* திருவிண்ணகர் நல் நகரே|

039. திவ்ய ப்ரபந்தம் - 3367 - ஒப்பிலியப்பன் புகழ் பேசுவதே புண்ணியம்
திருவாய்மொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருவாய்மொழி - மூன்றாம் பாசுரம்
நகரமும் நாடுகளும்* ஞானமும் மூடமும் ஆய்*
நிகர் இல் சூழ் சுடர் ஆய் இருள்* ஆய் நிலன் ஆய் விசும்பு ஆய்* 
சிகர மாடங்கள் சூழ்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
புகர் கொள் கீர்த்தி அல்லால்* இல்லை யாவர்க்கும் புண்ணியமே|

040. திவ்ய ப்ரபந்தம் - 3368 - கண்ணனின் அருளைக் கண்டு கொள்ளுங்கள்
திருவாய்மொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருவாய்மொழி - நான்காம் பாசுரம்
புண்ணியம் பாவம்* புணர்ச்சி பிரிவு என்று இவை ஆய்*
எண்ணம் ஆய் மறப்பு ஆய்* உண்மை ஆய் இன்மை ஆய் அல்லன் ஆய்* 
திண்ண மாடங்கள் சூழ்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
கண்ணன் இன் அருளே* கண்டு கொள்மின்கள் கைதவமே?

041. திவ்ய ப்ரபந்தம் - 3369 - திருவிண்ணகரானே மூவுலகுக்கும் ஆதி
திருவாய்மொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருவாய்மொழி - ஐந்தாம் பாசுரம்
கைதவம் செம்மை* கருமை வெளுமையும் ஆய்*
மெய் பொய் இளமை* முதுமை புதுமை பழமையும் ஆய்* 
செய்த திண் மதிள் சூழ்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
பெய்த காவு கண்டீர்* பெரும் தேவு உடை மூவுலகே| 

042. திவ்ய ப்ரபந்தம் - 3370 - தேவர் தொழும் பிரான் என் மனத்தில் உறைகின்றான்
திருவாய்மொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருவாய்மொழி - ஆறாம் பாசுரம்
மூவுலகங்களும் ஆய்* அல்லன் ஆய் உகப்பு ஆய் முனிவு* 
ஆய் பூவில் வாழ் மகள் ஆய்* தவ்வை ஆய்ப் புகழ் ஆய்ப் பழி ஆய்* 
தேவர் மேவித் தொழும்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
பாவியேன் மனத்தே* உறைகின்ற பரஞ்சுடரே|

043. திவ்ய ப்ரபந்தம் - 3371 - திருவிண்ணகரன் பாதமல்லால் சரணில்லை
திருவாய்மொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருவாய்மொழி - ஏழாம் பாசுரம்
பரம் சுடர் உடம்பு ஆய்* அழுக்குப் பதித்த உடம்பு ஆய்*
கரந்தும் தோன்றியும் நின்றும்* கைதவங்கள் செய்தும்*
விண்ணோர் சிரங்களால் வணங்கும்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
வரம் கொள் பாதம் அல்லால் இல்லை* யாவர்க்கும் வன் சரணே|

044. திவ்ய ப்ரபந்தம் - 3372 - கண்ணனே என்னை ஆளுடையப்பன்
திருவாய்மொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருவாய்மொழி - எட்டாம் பாசுரம்
வன் சரண் சுரர்க்கு ஆய்* அசுரர்க்கு வெம் கூற்றமும் ஆய்*
தன் சரண் நிழற்கீழ்* உலகம் வைத்தும் வையாதும்* 
தென் சரண் திசைக்குத்* திருவிண்ணகர் சேர்ந்த பிரான்*
என் சரண் என் கண்ணன்* என்னை ஆளுடை என் அப்பனே|

045. திவ்ய ப்ரபந்தம் - 3373 - ஒப்பிலியப்பன் எனக்கு அடைக்கலம் அளித்தான்
திருவாய்மொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருவாய்மொழி - ஒண்பதாம் பாசுரம்
என் அப்பன் எனக்கு ஆய்* இகுள் ஆய் என்னைப் பெற்றவள் ஆய்*
பொன் அப்பன் மணி அப்பன்* முத்து அப்பன் அன் அப்பனும் ஆய்* 
மின்னப் பொன் மதிள் சூழ்* திருவிண்ணகர் சேர்ந்த அப்பன்*
தன் ஒப்பார் இல் அப்பன்* தந்தனன் தன தாள் நிழலே|

046. திவ்ய ப்ரபந்தம் - 3374 - திருவிண்ணகரான் திருவடிகளே எனக்குப் புகலிடம்
திருவாய்மொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருவாய்மொழி - பத்தாம் பாசுரம்
நிழல் வெய்யில் சிறுமை பெருமை* குறுமை நெடுமையும் ஆய்*
சுழல்வன நிற்பன* மற்றும் ஆய் அவை அல்லனும் ஆய்* 
மழலை வாய் வண்டு வாழ்* திருவிண்ணகர் மன்னு பிரான்*
கழல்கள் அன்றி* மற்றோர் களை கண் இலம் காண்மின்களே|

047. திவ்ய ப்ரபந்தம் - 3375 - இவற்றைப் படித்தோர் தேவர்க்குப் பெரியோராவர்
திருவாய்மொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருவாய்மொழி - பதினொன்றாம் பாசுரம்
காண்மின்கள் உலகீர் என்று* கண் முகப்பே நிமிர்ந்த*
தாள் இணையன் தன்னைக்* குருகூர்ச் சடகோபன் சொன்ன* 
ஆணை ஆயிரத்துத்* திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்*
கோணை இன்றி விண்ணோர்க்கு* என்றும் ஆவர் குரவர்களே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

லீலை கண்ணன் கதைகள் - 53

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

மல்யுத்த வீரர்களின் வீழ்ச்சி|

அனைவரும் போட்டிக்கு தயாராகினர். புகழ் பெற்ற வீரனான சனுரா, கிருஷ்ணன் மற்றும் பலராமனிடம் சென்று, "உங்கள் இருவரின் சாகசங்களை நான் நன்கு அறிவேன், நீங்கள் நிஜத்தில் வீரர்கள் தான், நீங்கள் இருவரும் மல்யுத்தத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் என்று நன்றாக தெரியும், இதை அறிந்த மகாராஜா உங்களை இந்த போட்டிக்கு அழைத்து உள்ளார். உங்களை நான் மனமாற வரவேற்கிறேன்" என்றான். கிருஷ்ணன் சனுராவின் பொல்லாத நோக்கத்தை புரிந்துகொண்டார். ஆனால் கிருஷ்ணன் ராஜதந்திரமாக, "நாம் அனைவரும் அரசரின் ஆசைப்படி நடப்போம். ஆனால் நாங்கள் சிறிய பிள்ளைகள். எங்கள் வயிதில் இருக்கும் பிள்ளைகளுடன் சண்டையிட்டால் தான் நன்றாக இருக்கும். இந்த மல்யுத்த போட்டியில் சில விதி முறைகளை பின்பற்ற வேண்டும், இல்லையென்றால் நீங்கள் பாவத்திற்கு ஆளாகக்கூடும்."


ஆனால் சனுரா கிருஷ்ணனிடம், "கிருஷ்ணா நீங்கள் அந்த யானையை கொன்றதில் இருந்தே தெரிந்து விட்டது நீங்கள் மிக பெரிய வீரர்கள் என்று. நீங்கள் இந்த வீரர்களுடன் எதிர்த்து போரிட தயாராக உள்ளீர்கள். தாங்கள் என்னை எதிர்த்து உங்கள் பலத்தை காட்டுங்கள், பலராமன் முஷ்டிக்ஹா என்பவனை எதிர்த்து போரிட்டும்" என்றான்.

இந்த போட்டியை ஏற்றுக்கொண்டு, கிருஷ்ணனும் பலராமனும், முஷ்டிக்ஹாவையும் சனுராவையும் நோக்கி நடந்தனர். கைக்குள் கைவைத்து, காலுக்குள் கால் விட்டு, கிருஷ்ணனும் சனுராவும் ஒருவரை இருவர் இழுத்து வெற்றி பெற விரும்பினர். உடலுடன் உடல் முட்டிக்கொண்டு, கட்டி உருண்டனர். முன் பின் தள்ளி, தரையில் உருண்டு ஒருவரை ஒருவர் அடித்தனர், சனுராவை தலைமீது தூக்கி சுழற்றி அடித்து, இறுதியில் கிருஷ்ணன் சனுராவை வென்றார். இதேபோல் பலராமனும் முஷ்டிக்ஹாவை அடித்து உதைத்தார், அவன் வாயில் ரத்தம் வரும் வரை அடித்து, கடைசியில் அவனை அழித்தார்.

இருவரும் அழிந்தவுடன், மற்ற வீரர்களும் களத்தில் இறங்கினர். கிருஷ்ணருக்கும் பலராமருக்கும் ஈடு இணையே இல்லை. அனைவரும் சில நொடிகளிலேயே சுருண்டு விழுந்தனர். அனைத்து மக்களும் கூடி கை தட்டி அவர்களை உற்சாகம் செய்தனர். மக்களின் சந்தோஷத்துக்கு அளவேயில்லை. கோபியர் கூடத்தில் இருந்த கிருஷ்ணனின் நண்பர்கள் களத்தில் குதித்து பாட்டு பாட ஆரம்பித்தனர். கிருஷ்ணனும் பலராமனும் பாட்டுக்கு ஆடத்தொடங்கினர். அனைவரும் இவர்கள் நடனத்தை பார்த்து பெரு மகிழ்ச்சியடைந்தனர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்