About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 11 April 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 137

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 107

ஸ²ங்க² ப்⁴ருந் நந்த³கீ சக்ரீ 
ஸா²ர்ங்க³ த⁴ந்வா க³தா³ த⁴ர:|
ரதா²ங்க³ பாணி ரக்ஷப்⁴யஸ் 
ஸர்வ ப்ரஹரணா யுத⁴:||

ஸர்வ ப்ரஹரணா யுத⁴ ஓம் நம இதி|| 

  • 993. ஸ²ங்க² ப்⁴ருந் - வனமாலையைத் தரிப்பவர். பாஞ்சஜன்யம் என்ற சங்கைத் தன் கையில் சுமப்பவர்.
  • 994. நந்த³கீ - நந்தகம் என்னும் வாளைத் திவ்ய ஆயுதமாக உடையவர். ஞானம் மற்றும் மாயையாலான வாளைச் சுமப்பவர்.
  • 995. சக்ரீ - திருவாழியை (சக்ராயுதத்தை) உடையவர். இடையறாமல் யுகச் சக்கரத்தைச் சுழலச் செய்பவர்.
  • 996. ஸா²ர்ங்க³ த⁴ந்வா - ஸ்ரீசார்ங்கம் என்னும் வில்லை ஏந்தியவர்.
  • 997. க³தா³ த⁴ரஹ - கௌமேதகீ என்றழைக்கப்படும் கதாயுதத்தை உடையவர். மிகத்திடமான புத்தியுடன் கூடிய கதாயுதத்தைக் கொண்டவர்.
  • 998. ரதா²ங்க³ பாணிர் - தேர்ச் சக்கரத்தை ஆயுதமாகக் கொண்டவர்.
  • 999. அக்ஷப்⁴யஸ் - அசைக்க முடியாதவர்.
  • 1000. ஸர்வ ப்ரஹரணா யுத⁴ஹ - எல்லாத் திவ்ய ஆயுதங்களையும் உடையவர். அனைத்து வகை ஆயுதங்களையும் தரித்தவர்.

ஓம் நம இதி ஸர்வ ப்ரஹரணா யுத என்பதுடன் 
1000 திருநாமங்கள் நிறைவுறும். 

ஸர்வ ப்ரஹரணா யுத என்னும் திருநாமத்தை 
இருமுறை ஓதி ஓம் நம என்று முடிப்பது முறை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 3.1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||

ஸ்லோகம் - 3.1 

அர்ஜுந உவாச|
ஜ்யாயஸீ சேத் கர்மணஸ் தே 
மதா பு³த்³தி⁴ர் ஜநார்த³ந|
தத் கிம் கர்மணி கோ⁴ரே மாம் 
நியோ ஜயஸி கேஸ²வ||

  • அர்ஜுந உவாச - அர்ஜுநன் கூறினான் 
  • ஜ்யாயஸீ - சிறந்தது  
  • சேத் - இருந்தால் 
  • கர்மணஸ் - பலன் நோக்குச் செயல்களை விட 
  • தே - தங்களால் 
  • மதா - அபிப்பிராயம்  
  • பு³த்³தி⁴ ர் - புத்தி 
  • ஜநார்த³ந - கிருஷ்ண 
  • தத் - எனவே 
  • கிம் - ஏன்  
  • கர்மணி - செயலில் 
  • கோ⁴ரே - கொடிய 
  • மாம் - என்னை  
  • நியோ ஜயஸி - ஈடுபடுத்துகிறாய்  
  • கேஸ²வ - கேசவனே

அர்ஜுநன் கூறுகிறார்:- ஜனார்த்தனா! கேசவா! செய்கையை விட ஞானமே சிறந்தது எனில் கோரமான இப்போரில் என்னை ஏன் ஈடுப்படுத்துகிறாய்?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.27

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.27

நாதி ப்ரஸீத³த்³ த்⁴ருத³ய: 
ஸரஸ் வத்யாஸ் தடே ஸூ²சௌ|
விதர் கயந் விவிக் தஸ்த² 
இத³ம் ப்ரோவாச த⁴ர்ம வித்|| 

  • நாதி ப்ரஸீத³த்³ த்⁴ருத³ய: - மிகத் திருப்தி அடையாத மதத்தை உடையவரும்
  • த⁴ர்ம வித் - சகல தர்மத்தை அறிந்தவருமான வியாஸர்
  • ஸூ²சௌ - பரிசுத்தமான
  • ஸரஸ் வத்யாஸ் - ஸரஸ்வதீ நதியின் 
  • தடே - கரையில்
  • விவிக் தஸ்த² - ஏகாந்தமான பிரதேசத்தில்
  • விதர் கயந் - தனக்குள் ஏதோ ஒன்றை நினைத்தவராய்
  • இத³ம் ப்ரோவாச - இதை சொன்னார் 

அனைத்து அறநெறிகளையும் நன்குணர்ந்த வியாஸ முனிவர், தூய்மையான ஸரஸ்வதீ நதிக்கரையில் இருப்பினும், சிறிதும் மகிழ்ச்சியின்றித் தெளியாத மனத்துடன் தனித்திருந்து, தனக்குத் தானே பலபடியாக ஆலோசித்து இவ்விதம் கூறலானார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.72

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.72

ததோ க்³ருத்⁴ரஸ்ய வசநாத் 
ஸம்பாதேர் ஹநுமாந் ப³லீ|
ஸ²த யோஜந விஸ்தீர்ணம் 
புப்லுவே லவணார்ணவம்|| 

  • ததோ - அதன் பிறகு 
  • ப³லீ - பலவானான 
  • ஹநுமாந் - ஹனுமான் 
  • க்³ருத்⁴ரஸ் ய - கழுகான 
  • ஸம்பாதேர் - ஸம்பாதியினுடைய 
  • வசநாத் - வார்த்தையில்
  • ஸ²த யோஜந - நூறு யோஜனை 
  • விஸ்தீர்ணம் - விஸ்தாரமான 
  • லவணார்ணவம் - ஸமுத்திரத்தை 
  • புப்லுவே - தாண்டினார் 

அப்போது பலமிக்கவனான ஹனுமான், கழுகான சம்பாதியின் சொல்லைக் கேட்டு, நூறு யோஜனைகள் பரந்திருக்கும் லவணச் சமுத்திரத்தின் (உப்புப் பெருங்கடலின்) மேல் கடந்து சென்றார். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திவ்ய ப்ரபந்தம் - 114 - பெரியாழ்வார் திருமொழி - 1.9.7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 114 - பாலும் வெண்ணெயும் வயிறார விழுங்கியவன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஏழாம் பாசுரம்

பொத்த உரலைக் கவிழ்த்து* அதன் மேல் ஏறி* 
தித்தித்த பாலும்* தடாவினில் வெண்ணெயும்*
மெத்தத் திருவயிறு* ஆர விழுங்கிய*
அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான்* 
ஆழியான் என்னைப் புறம் புல்குவான்|

  • பொத்த - அடியில் ஓட்டையாய் போன
  • உரலை - உரலை கொண்டு வந்து
  • கவிழ்த்து - தலை கவிழ்த்துப் போட்டு
  • அதன் மேல் - அதன் மேல்
  • ஏறி - ஏறி நின்று கொண்டு
  • தடாவினில் - உறியில் இருக்கும்
  • தித்தித்த பாலும் - இனிப்பான பாலையும், திரட்டுப் பாலையும்
  • வெண்ணெயும் - வெண்ணெயையும்
  • திரு வயிறு ஆர் - வயிறு நிரம்ப
  • மெத்த விழுங்கிய - மிகுதியாக விழுங்கின
  • அத்தன் - தலைவன்
  • வந்து - ஓடி வந்து
  • என்னை - என்னுடைய
  • புறம் - முதுகை
  • புல்குவான் - கட்டிக் கொள்வான்
  • ஆழியான் - கைகளில் திருச்சக்கரம் ஏந்தியவன்
  • என் புறம் - என்னுடைய 
  • புல்குவான்! - முதுகை கட்டிக் கொள்வான்

ஓட்டையான உரலை தலை கீழாகப் போட்டு அதன் மீதேறி, உயரே வைத்து இருந்த மிடாக்களிலிருந்து சுவையான பாலையும், வெண்ணையையும் எடுத்து வயிறு நிரம்ப நன்றாக உண்ட என் தலைவன் கண்ணன் என் பின்னால் வந்து என்னைக் கட்டிக் கொள்வான்! கைகளில் திருச்சக்கரம் ஏந்தியவன் என்னைப் பின்புறம் வந்து கட்டிக் கொள்வான்! 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்