About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 17 September 2023

லீலை கண்ணன் கதைகள் - 40

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

நந்தகோபரை மலைப் பாம்பு விழுங்குதல்|

ஒரு நாள் மகா சிவராத்திரி தினத்தன்று மகாதேவரைப் பூஜை செய்யும் பொருட்டு, எல்லாச் கோபர்களும் அம்பிகா வனம் என்ற இடத்திற்குச் சென்றார்கள். எல்லோரும் சரஸ்வதி நதியில் முழுங்கினார்கள். நதிக் கரையில் ஒரு பெரிய சிவன் கோவில் இருந்தது. நீராடிய பிறகு எல்லோரும் சிவனையும் பார்வதியையும் மலர்கள், ஊதுபத்திகள், நைவேத்தியங்கள் கொண்டு வழிபட்டார்கள். ஆனால் நந்தகோபர் அன்று முழுவதும் தண்ணீர் மட்டும் குடித்துக் கொண்டு உபவாசம் இருந்தார். நதிக் கரையிலேயே அவர் படுத்து உறங்கினார்.


அன்றிரவு மிகவும் பசியோடு இருந்த ஒரு மலை பாம்பு நந்தகோபர் தூங்கி கொண்டிருந்த இடத்திற்கு வர நேர்ந்தது. அது நந்தகோபரை விழுங்க ஆரம்பித்தது. அவர் நடுங்கிப் போய், ‘கிருஷ்ணா, கிருஷ்ணா! ஒரு பெரிய மலை பாம்பு என்னை விழுங்கிக் கொண்டிருக்கிறது. நான் உன்னைச் சரண் அடைந்தேன். என்னை காப்பாற்று’ என்று கத்தினார். எல்லாக் கோபர்களும் விழித்தெழுந்தனர். ஒரு மலைப் பாம்பின் வாயில் நந்தகோபர் இருப்பதைக் கண்டு திகைத்தார்கள். கொள்ளிக் கட்டைகளால் பாம்பை அடித்தார்கள். ஆனால் ஒரு பலனும் ஏற்படவில்லை. நந்தகோபரோ மெல்லப் பாம்பின் வாய்க்குள் சென்றுக் கொண்டிருந்தார். கோபர்களின் கூக்குரலைக் கேட்டுக் கிருஷ்ணன் அங்கே ஒடி வந்தான். அவன் தன் காலால் பாம்பைத் தொட்டான். என்ன ஆச்சரியம்! அந்த பாம்பு உருவம் மறைய, அங்கு ஒரு அழகிய தெய்விக மனிதர் தோன்றினார். அவர் கிருஷ்ணனைக் கீழே விழுந்து வணங்கினார். கிருஷ்ணன் அவரைப் பார்த்து, ‘நீங்கள் யார்? எப்படி இந்த பாம்பின் உருவத்தை அடைந்தீர்கள்!” என்று கேட்டான்.

அதற்கு அந்தத் தெய்வீக மனிதர், ‘நான் தேவலோகத்தில் வசிக்கும் வித்தியாதரர்களில் ஒருவன். செல்வம், அழகு ஆகியவை காரணமாக நான் மிகவும் கர்வத்துடன் இருந்தேன். ஒரு சமயம் பூமியில் உள்ள சில ஆசிரமங்களின் மீது நான் என் விமானத்தில் சென்றேன். அப்போது அங்கிருந்த விகாரமாக விளங்கிய சில முனிவர்களைப் பார்த்துச் சிரித்தேன். அதனால் அந்த முனிவர்களில் ஒருவராகிய அங்கிரஸ் எனக்குச் சாபம் கொடுத்தார். ‘நீ ஒரு மலைபாம்பாக மாறிப் பூமியில் வசிக்கக் கடவாய்’ என்று சொன்னார். உடனே நான் என் அழகை இழந்து மலைப் பாம்பாக மாறினேன். எத்தனையோ வருடங்கள் இந்தப் பாம்பு வடிவத்தில் இருந்தேன். இப்போது தங்களின் புனித பாதம் என் மீது பட்டதனால் நான் என் பழைய உருவத்தை அடைந்து விட்டேன்’ என்று சொன்னார். கிருஷ்ணன் அவரை வாழ்த்தித் தேவலோகத்திற்குத் திரும்பும்படி சொன்னான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 010 - திருப்புள்ளம் பூதங்குடி 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

010. திருப்புள்ளம் பூதங்குடி 
பூத புரி - கும்பகோணம்
பத்தாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ வல்வில் ராமர் பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ பொற்றாமறையாள் தாயார் ஸமேத ஸ்ரீ வல்வில் ராமர் பெருமாள் 
திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்: வல்வில் ராமர்
  • பெருமாள் உற்சவர்: சக்கரவர்த்தி திருமகன்
  • தாயார் மூலவர்: பொற்றாமறையாள்
  • தாயார் உற்சவர்: ஹேமாம்புஜவல்லி
  • திருமுக மண்டலம் திசை: கிழக்கு 
  • திருக்கோலம்: புஜங்க சயனம்
  • புஷ்கரிணி/தீர்த்தம்: ஜடாயு 
  • விமானம்: சோபன
  • ஸ்தல விருக்ஷம்: புன்னை
  • ப்ரத்யக்ஷம்: ராமன், ஜடாயு
  • ஸம்ப்ரதாயம்: வட கலை
  • மங்களாஸாஸநம்: 1 ஆழ்வார்
  • பாசுரங்கள்: 10

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

ஜடாயுவாகிய புள்ளிற்கு ராமர் மோட்சம் கொடுத்து ஈமக்கிரியை செய்த நிகழ்வை குறிக்கும் தலமாதலால் இத்தலம் திருப்புள்ளம்  பூதங்குடி ஆனது. வைணவ சம்பிராதயத்தில் வைணவர்களுக்கு இரண்டு பூதபுரிகள் உண்டு. ஒன்று காஞ்சிபுரம் அருகே ஸ்ரீபெரும்புதூர். ராமனுஜர் அவதரித்த இத்தலத்ததை ஆழ்வார்கள் சிறப்பித்தார்கள். மற்றொன்று தஞ்சாவூர் அருகே திருப்புள்ளம் பூதங்குடி. இதை ஆசாரியர்கள் சிறப்பித்தார்கள். ராமர் இத்தலத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சியளிப்பது விசேஷத்திலும் விசேஷம். திருமங்கையாழ்வார் இங்கு வந்த போது, இக்கோயிலில் வேறு ஏதோ தெய்வம் இருப்பதாக கருதி, கவனிக்காமல் சென்றார். அப்போது பெரிய ஒளி தோன்றி அதிலிருந்து சங்கு சக்ரதாரியாக ராமர் காட்சியளித்தார். இதைக் கண்ட திருமங்கை, அறிய வேண்டியதை, அறியாமல் சென்றேனே என 10 பாசுரம் பாடினார். தந்தை தசரதருக்கு செய்ய வேண்டிய இறுதி காரியத்தை செய்ய முடியாவிட்டாலும், ஜடாயுவிற்கு செய்ததை நினைத்து மகிழ்ந்ததால் இத்தல ராமர் வல்வில் ராமர் என அழைக்கப்படுகிறார். 

சீதையை ராவணன் கவர்ந்து சென்ற போது கழுகுகளின் அரசனான ஜடாயு அவனிடம் போரிட்டார். அப்போது ஜடாயுவை ராவணன் வாளால் வெட்டினான். ஜடாயு ராமா, ராமா என முனகியபடி குற்றுயிராக கிடந்தார். அந்த வழியே வந்த ராம, லட்சுமணர்கள் முனகல் சத்தத்தை கேட்டு அருகில் சென்று பார்த்தனர். ஜடாயு, ராவணன் சீதையை கவர்ந்து சென்ற விஷயத்தை கூறி விட்டு உயிர் துறந்தார். இதைக் கண்டு வருந்திய ராமர் ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்ய எண்ணினார். ஈமக்கிரியை செய்யும் போது மனைவியும் அருகில் இருக்க வேண்டும் என்பது விதி. சீதை இல்லை என்பதால் மானசீகமாக சீதையை மனதால் நினைத்தார். உடனே ராமருக்கு உதவி புரிவதற்காக சீதையின் மறு அம்சமாகிய பூமாதேவி காட்சியளித்தாள். அவளோடு இணைந்து ஜடாயுவிற்கு செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளை செய்து முடித்தார். இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் இத்தலத்தில் கோயில் அமைக்கப்பட்டது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 33 - பெரியாழ்வார் திருமொழி - 1.2.11

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 33 - சகடாசுரனை அழித்த திருத்தோள்கள்
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - பதினொன்றாம் பாசுரம்

நாள்களோர் நாலைந்து* 
திங்கள் அளவிலே*
தாளை நிமிர்த்துச்* 
சகடத்தைச் சாடிப் போய்*
வாள் கொள் வளை எயிற்று
ஆருயிர் வவ்வினான்*
தோள்கள் இருந்தவா காணீரே*
 சுரி குழலீர்! வந்து காணீரே|

  • நாள்கள் - கண்ணன் பிறந்த பின்பு சென்ற நாட்கள்
  • ஓர் நாலு ஐந்து திங்கள் அளவிலே - ஒரு நாலைந்து மாதத்தளவிலே
  • தாளை நிமிர்ந்து - தன் மலர் போன்ற மென்மையான பிஞ்சு பாதங்களை தூக்கி
  • சகடத்தை - வண்டிச் சக்கரத்தை 
  • சாடிப்போய் - உதைத்து விட்டு சக்கர வடிவில் வந்த சகடாசுரன் என்னும் அசுரனை வதம் புரிந்தான்
  • வாள் கொள் - ஒளி கொண்டதாய்
  • வளை – வளைந்த கூர்வாள் கொண்டு
  • எயிறு - கோரப் பற்களை உடைய பூதனையினது
  • ஆர் உயிர் - அரிய உயிரை
  • வவ்வினான் - முடித்த கண்ணனுடைய 
  • தோள்கள் இருந்த ஆ காணீர்! - தோள்களுடைய வலிமையையும், வனப்பையும் வந்து பாருங்கள்
  • சுரி குழலீர் வந்து காணீரே - சுருண்ட கேசத்தை உடைய பெண்களே! வந்து பாருங்கள்

கண்ணன் பிறந்து நாலைந்து மாதங்களுக்குள்ளாகவே தன் வயதிற்கு அப்பாற்பட்ட வேலைகளை செய்யத் தொடங்கினான். ஒரு சமயம் யசோதை குழந்தையை ஒரு வண்டியின் கீழ், தொட்டிலில் தனியாக விட்டு விட்டு யமுனைக்கு செல்கிறாள். அப்பொழுது கம்சனால் ஏவப்பட்ட சகடாசுரன் என்ற அசுரன் அந்த வண்டியில் ஆவேசித்து கண்ணன் மேல் விழுந்து கண்ணனைக் கொல்லப் பார்த்தான். கண்ணனோ தன் சிறிய திருவடிகளைத் தூக்கி வண்டியை ஒரு உதை விட்டதில் அந்த வண்டியும் நொருங்கியது. அசுரனும் அழிந்தான். மற்றொரு சமயம் ஒளிகொண்ட உருவமாய், நிமிர்ந்த சரீரத்துடனும், கோரப்பற்களுடனும் வந்த பூதனையின் உயிரை மாய்த்தான். அதோடு நில்லாது, கொலைதொழில் புரியும் கூர்வாள் ஏந்திய, ஒளி உடைய வளைந்த பற்களைக் கொண்ட அசுரர்கள் பல பேரைக் கொன்று முக்தி அளத்தவனான, கண்ணனின் தோள்கள் எத்தனை வலிமையானதாகவும், அழகுடையதாகவும் இருக்கின்றன என்பதை வந்து காணுமாறு அங்கிருந்த சுருண்ட கேசமுடைய பெண்களை அழைக்கிறாள் யசோதை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.34

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் - 1.34

ஆசார்யா: பிதர: புத்ராந் 
ததை²வ ச பிதாமஹா:।
மாதுலா: ஸ்²வஷுரா: பௌத்ரா: 
ஸ்²யாலா ஸம்ப³ந்தி⁴ நஸ்ததா²॥

  • ஆசார்யஃ - குருமார்கள் 
  • பிதரஃ - தந்தையர் 
  • புத்ராஹ - மகன்கள் 
  • ததா² - மட்டுமின்றி மேலும் 
  • ஏவ - நிச்சயமாக 
  • ச - மேலும் 
  • பிதாமஹாஹ - பாட்டன்மார்
  • மாதுலாஸ்² - தாய் மாமன்கள் 
  • ஸ்²வஸு²ராஃ- மாமனார்கள் 
  • பௌத்ராஹ - பேரன்கள் 
  • ஸ்²யாலா - மைத்துனன்கள் 
  • ஸம்ப³ந்தி⁴நஸ் - உறவினர்கள் 
  • ததா - உடன் 

குருக்களும், தந்தையரும், மக்களும், பாட்டன்மாரும், மாதுலரும், மாமன்மாரும், பேரரும், மைத்துனரும், சம்பந்திகளும் இங்குளர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.2.18

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா: 
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம் 
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்|| 
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||

ஸ்லோகம் - 1.2.18

நஷ்ட ப்ராயேஷ்வ ப⁴த்³ரேஷு 
நித்யம் பா⁴க³வத ஸேவயா|
ப⁴க³வத் யுத்தம ஸ்²லோகே 
ப⁴க்திர் ப⁴வதி நைஷ்டி²கீ||

  • நித்யம் பா⁴க³வத ஸேவயா - பிரதி தினமும் பாகவதோத்தமர்களுக்கு செய்யும் சேவையாலும், ஸ்ரீமத் பாகவத பாராயணத்தாலும்
  • அப⁴த்³ரேஷு - பாபங்கள்
  • நஷ்ட ப்ராயேஷு - நாசத்தை அடைந்த அளவில்
  • உத்தம ஸ்²லோகே - புண்ய புருஷனான
  • ப⁴க³வத் - ஸ்ரீமன் நாராயணனிடத்தில்
  • ப⁴க்திர் - பக்தியானது
  • நைஷ்டி²கீ - த்ருடமாக
  • ப⁴வதி – ஏற்படுகிறது

பாகவதர்களை தினமும் வணங்குவதாலும், ஸ்ரீமத் பாகவத்தைப் பாராயணம் செய்வதாலும், காமம் முதலிய பாலங்கள் அழிந்து, பெரும்புகழ் படைத்த பகவானிடத்தில் அசைவற்ற நிலையான பக்தி உண்டாகிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 49

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 19

மஹா பு³த்³தி⁴ர் மஹா வீர்யோ 
மஹா ஸ²க்திர் மஹாத்³ யுதி:|
அநிர்த்³ ஏ³ஸ்²யவபுஸ் ஸ்ரீ மாந் 
அமேயாத்மா மஹாத்³ ரித்⁴ருத்:||

  • 175. மஹா பு³த்³தி⁴ர் - பேரறிவாளன், எல்லையில்லா ஞானி
  • 176. மஹா வீர்யோ - மிகுந்த வீர்யம் உடையவன்.
  • 177. மஹா ஸ²க்திர் - மிகுந்த திறமை உடையவன்.
  • 178. மஹாத்³ யுதிஹி - மிகுந்த ஒளியுள்ளவன்.
  • 179. அநிர்த்³ ஏ³ஸ்²யவபுஸ் - உவமை சொல்ல முடியாத திருமேனி உடையவன்.
  • 180. ஸ்ரீ மாந் - திருமேனிக்குத் தகுந்த திருவாபரணங்களான செல்வம் படைத்தவன்.
  • 181. அமேயாத்மா-அளவிட்டு அறிய முடியாதவன்.
  • 182. மஹாத்³ ரித்⁴ருத்து - பெருமலையையும் தாங்கும் திறம் படைத்தவன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - நாற்பத்தி ஆறாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

046 வழி அடிமை செய்தேனோ லக்ஷ்மணனைப் போலே|

அயோத்தியின் அரசர் தசரதனுக்கு நான்கு மகன்கள் – மூத்தவர் இராமர், இலக்குவன், பரதன், சத்துருகனன். நால்வரும் வசிட்டரிடம் சீடர்களாக சேர்ந்து பல்வேறு கலைகளை கற்றனர். இலக்குவன், இராமரிடம் தனி அன்பும், மரியாதையும் கொண்டிருந்தார். விசுவாமித்திர முனிவர், அயோத்தியை அடைந்து தசரதரிடம் தன் யாகங்களுக்கு ராட்சகர்களால் இடையூறு ஏற்படுவதால் அவர்களை அழிக்க இராமனை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். முதலில் தயங்கினாலும் பிறகு இராமனையும், லட்சுமணனனையும் அவருடன் அனுப்பி வைத்தார்.


இராமனுக்கு முடிசூட்ட தசரதர் எண்ணிய பொழுது, கைகேயி தனது மகனான பரதன் அரசனாக வேண்டும், இராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழ வேண்டும் என்னும் இரண்டு வரங்களைக் கேட்க, தாய் சொல்லை மறுக்காமல், இராமரும் உடனடியாகவே காட்டுக்கு கிளம்பினார். அவர் தடுத்தும் கேளாமல் சீதையும், இலட்சுமணனும் இராமனுடன் காட்டுக்கு கிளம்பினர்.

தனித்து வனவாசம் செல்ல எண்ணிய ராமரிடம், இலட்சுமணன் “நீரின்றி மீனால் வாழ முடியாது. அது போல் தான் தாங்கள் எனக்கும், சீதாதேவிக்கும். எங்களையும் உடன் அழைத்துச் செல்லுங்கள்.”, என்றார்.


இராமன் காட்டிலிருந்த பதினான்கு ஆண்டுகளும் கண்ணுறங்காமல் அவரையும் சீதாதேவியையும் பாதுகாத்து வந்தார் இலட்சுமணன். இராமனுக்கு, ஒரு கூட்டம் செய்ய வேண்டிய காரியங்களை ஒற்றையாளாய் லட்சுமணன் செய்கிறானாம். ராமனுக்கு, அவனைப் போல குறிப்பறிந்து பணியாற்றிட யாரும் இல்லையாம். இராமனுக்கும் சீதாதேவிக்கும் தேவையான பணிவிடைகளை இலட்சுமணன் செய்தார். பஞ்சவடியில் இராமரும் சீதாதேவியும் தங்குவதற்கு பர்ணசாலை (குடில்) அமைத்துக் கொடுத்தார். பின், ராமனைக் கூப்பிட்டுக் காட்டுகிறான்

அதில் யாகம் நடத்த ஒரு இடம், கடவுள் அறை, சமையல் செய்ய் ஒரு அறை என ஒவ்வொன்றாய்க் காட்டுகிறான். ஒரு அறையைக் காட்டி. "அது." என ராமன் கேட்டானாம். அந்த அறை தாங்களும், சீதா பிராட்டியும் தங்க என்கிறான் லட்சுமணன்

ராமனின் சிந்தையறிந்து செயல்படும் லட்சுமணனைத் தழுவிக் கொண்ட ராமன் "ஒரு தண்ணீர்ப் பந்தலைப் போல அல்லவா நம் தந்தை உன்னை எனக்குத் தந்துவிட்டு சென்றுள்ளார்" என அகமகிழ்ந்தான்.

சீதாதேவியை இராவணன் கடத்திச் சென்ற போது, இராமருக்கு பக்க பலமாய் நின்று இராவணனை வென்று சீதையை மீட்க உதவினார். அயோத்தி திரும்பிய பின், மன்னராக முடி சூடிக்கொண்ட இராமர், இலட்சுமணனை பட்டத்து இளவரசராக முடி சூடிக் கொள்ள கூறிய போது, அதை பணிவுடன் மறுத்து, “என்னை விட பரதனே அப்பதவிக்கு தகுதியானவன். அடியேன் தங்களுக்கு சேவை செய்யவே விரும்புகிறேன்.”, என்றார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, " இலட்சுமணன் போல் சரணாகதி அடைந்து, இராமர் செல்லும் இடமெல்லாம் அவருடன் சென்று அவருக்கு பணிவிடைகள் செய்தேனா?” லட்சுமணன் அவதாரம் செய்ததே ராமனுக்கு கைங்கர்யம் செய்ய.. அப்படிப்பட்ட லட்சுமணனைப் போல நான் எதுவும் செய்யவில்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

லீலை கண்ணன் கதைகள் - 39

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

வருணன் கிருஷ்ணனை காணல்|

தன் மாளிகையில் கிருஷ்ணனை காண வருணன் பெரிதும் மகிழ்ச்சியடைந்தான். வருணன் கிருஷ்ணனின் காலில் விழுந்து வணங்கி அவனை ஒரு தெய்வத்தை கும்பிடுவது போல கும்பிட்டான் .அவன் தன் இரண்டு கைகளையும் கூப்பி கிருஷ்ணனை பார்த்து ,"பகவானே! நான் இன்று பெரும் பேரு பெற்றவன். தங்களுடைய பாதங்களை தொடுகிறவர்கள் பிறவிக் கடலிலிருந்து காப்பாற்ற படுகிறார்கள். யார் என்று தெரியாமல் தங்கள் தகப்பனாரை இங்கே பிடித்து அழைத்து வந்த என் தூதரை மன்னித்து விடுங்கள் . அன்பு கூர்ந்து எங்களை ஆசிர்வதியுங்கள். இதோ இருக்கிறார் தங்கள் தகப்பனார் அவரை அழைத்து செல்லலாம் என்று சொன்னான். 


வருணனின் அடக்கத்தை கண்டு கிருஷ்ணன் மகிழ்ச்சி அடைந்தான். அவன் தன் தகப்பனாரோடு விடு திரும்ப எல்லோரும் மிகவும் சந்தோசம் அடைந்தார்கள் . கிருஷ்ணனுடைய இத்தகைய செயல்கள் அவன் கடவுள் தான் என்கிற நம்பிக்கையை கோபர்களுக்கு ஏற்படுத்தியது. அவனை இன்னும் அறிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினர். அவன் நிரந்தரமாக வசிக்கும் வைகுண்டத்தை பார்க்கவேண்டும் என்று விரும்பினர். கிருஷ்ணன் வைகுண்டத்தை பார்க்கும்படி செய்தான் வைகுண்டத்தில் ஸ்ரீமத் நாராயணனை அவர்கள் கண்டார்கள்.தங்கள் கண்களால் கண்டதை அவர்கள் நம்பமுடியவில்லை. பகவானின் செயலகளே ஆச்சர்யம்தான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 009 - திருக்கவித்தலம் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

009. திருக்கவித்தலம் 
க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரம் - கும்பகோணம் 
ஒண்பதாவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 1 பாசுரம்
------------
1. திருமழிசையாழ்வார் - 1 பாசுரம்
1. நான்முகன் திருவந்தாதி (மூன்றாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 2431 - ஐந்தாம் திருமொழி - பத்தாம் பாசுரம் 50)

------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி
காணியும் இல்லமும் கைப் பொருளும் ஈன்றோரும்*
பேணிய வாழ்க்கையும் பேர் உறவும் சேணில்*
புவித் தலத்தில் இன்பமும் பொங்கு அரவம் ஏறிக்*
கவித் தலத்தில் கண் துயில்வோன் காண்* 

  • காணியும் – அடியேனுக்கு பூமியும்
  • இல்லமும் – வீடும்
  • கை பொருளும் – கையிலுள்ள திரவியமும்
  • ஈன்றோரும் – பெற்ற தாய் தந்தையரும்
  • பேணிய வாழ்க்கையும் – விரும்பிய நல்வாழ்வும்
  • பேர் உறவும் – நெருங்கிய சுற்றத்தாரும்
  • சேணில் புவித்தலத்தில் இன்பமும் – மறுமையிலும் இம்மையிலும் உண்டாகக்கூடிய இன்பங்களும்
  • கவித்தலத்தில் – திருக்கவித்தலம் என்னும் ஸ்தலத்தில்
  • பொங்கு அரவம் ஏறி – சீறும் தன்மையுள்ள ஆதிசேஷன் மீது ஏறி
  • கண் துயில்வோன் – திருக்கண் வளர்ந்தருளும் திருமாலினுடைய
  • கால் – திருவடிகளேயாம்
                                                                  ------------
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 1

திருமழிசையாழ்வார்

001. திவ்ய ப்ரபந்தம் - 2431 - கண்ணனை எண்ணுவதே உய்யும் வழி
நான்முகன் திருவந்தாதி - ஐந்தாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (50)
கூற்றமும் சாரா* கொடு வினையும் சாரா* 
தீ மாற்றமும் சாரா வகை அறிந்தேன்*
ஆற்றங்கரைக் கிடக்கும்* கண்ணன் கடல் கிடக்கும்* 
மாயன் உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 32 - பெரியாழ்வார் திருமொழி - 1.2.10

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 32 - மருத மரம் முறித்த, கௌஸ்துபம் அணிந்த திருமார்பு
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - பத்தாம் பாசுரம்

பெரு மா உரலில்* 
பிணிப்புண்டிருந்து* 
அங்கு இருமா மருதம்* 
இறுத்த இப் பிள்ளை*
குரு மா மணிப் பூண்* 
குலாவித் திகழும்* 
திருமார்வு இருந்தவா காணீரே* 
சேயிழையீர்! வந்து காணீரே|


  • பெரு மா உரலில் – மிகப் பெரிய உரலோடு
  • பிணிப்புண்டு - கட்டுண்டு இருந்து 
  • அங்கு - அந்த நிலைமையிலே 
  • இரு மா மருதம் - இரண்டு பெரிய மருத மரங்களை
  • இறுத்த – முறித்து அருளின 
  • இ பிள்ளை - இக்கண்ணபிரானுடைய
  • குரு மா - மிகவும் சிறந்த 
  • மணி பூண் – கௌஸ்துப ஆபரணமானது 
  • குலாவி திகழும் - அசைந்து ஆடும்
  • திருமார்வு இருந்த வா காணீர்! - திரு மார்பின் அழகினை வந்து பாருங்கள்
  • சேயிழையீர் வந்து காணீரே - சிறந்த ஆபரணங்களை உடைய பெண்களே! வந்து பாருங்கள்

தான் செய்த குறும்புத் தனத்திற்காக, அவனை விடப் பெரியதாகவும், மிகுந்த கனத்துடன் இருந்த மிகவும் பெரிய உரலில் யசோதையால் மிகப் பெரிய உரலில் கட்டப்பட்டு, பின் அந்த உரலை தன்னுடைய வலிமையால் இழுத்துச் சென்று, அங்கிருந்த இரண்டு பெரிய மருத மரங்களுக்கு நடுவில் நுழைந்து சென்ற முறித்துவிட்ட இந்தப் கண்ணனின் திருமார்பையும், அந்த திருமார்பில், திருமாலையே தன்வயப்படுத்தி என்றும் பிரியாது மிகவும் நெருக்கமாய் இணைந்து இருக்கும் திருமறுவான திருமகள், மிகுந்த பேரொளியுடன் மின்னுகின்ற புனிதத்தன்மையுடைய அழகிய திருத்துழாய் மாலை, பேரொளி மிகுந்த கனமான இரத்தின மாலை ஆகிய மூவரும் சேர்ந்து பொலிவுடன் அமைந்து மின்னுகின்ற அழகையும் வந்து பாருங்கள் என்று செம்மையுடைய அணிகலன் அணிந்திருக்கும் பெண்களை அழைக்கிறாள் யசோதை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.33

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் - 1.33

யேஷாமர்தே² காங்க்ஷிதம் நோ
ராஜ்யம் போ⁴கா³: ஸுகா²நி ச|
த இமே வஸ்தி²தா யுத்³தே⁴
ப்ராணாம்ஸ் த்யக்த்வா த⁴நாநி ச||

  • யேஷாம் - யாருக்காக 
  • அர்தே² - பொருட்டாக 
  • காங்க்ஷிதம் - விரும்பி 
  • ந: - நம்மால் 
  • ராஜ்யம் - ஆட்சி
  • போ⁴கா³: - உலகின்பம் 
  • ஸுகா²நி - எல்லா மகிழ்வும் 
  • ச - மற்றும் 
  • தே - அவர்களெல்லாம் 
  • இமே - இந்த 
  • அவஸ்தி²தா - நிலை பெற்ற 
  • யுத்தே - இப்போர்க்களத்தில் 
  • ப்ராணான் - உயிர்களை 
  • த்யக்த்வா - விட்டு 
  • த⁴நாநி - செல்வங்களை 
  • ச - மேலும் 

யாருக்காக நாம் ராஜ்ஜியத்தையும், இன்பங்களையும் விரும்புகிறோமோ, அவர்கள் உயிரையும் செல்வத்தையும் துறந்து போரில் நிற்கிறார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.2.17

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா: 
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம் 
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்|| 
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||

ஸ்லோகம் - 1.2.17

ஸ்²ருண்வதாம் ஸ்வகதா²ம் க்ருஷ்ண: 
புண்ய ஸ்²ரவண கீர்தந:|
ஹ்ருத்³யந்த: ஸ்தோ² ஹ்ய ப⁴த்³ராணி 
விது⁴நோதி ஸுஹ்ருத் ஸதாம்||

  • புண்ய ஸ்²ரவண கீர்தநஹ - எவற்றைப் பற்றி கேட்பதாலும் சொல்வதாலும் நன்மை உண்டாகுமோ அப்படிப்பட்டவரும் 
  • ஸதாம் ஸுஹ்ருத் - ஸாதுக்களுக்கு நண்பனுமான
  • க்ருஷ்ண ஹ்ய - ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவோ எனில்
  • ஸ்வகதா²ம் - தனது கதையை
  • ஸ்²ருண்வதாம் - கேட்பவர்களது
  • அந்தஸ் ஸ்தோ² - அந்தராத்வாவில் இருந்து கொண்டு
  • ஹ்ருதி³ - அவர்களது மனத்தில் உள்ள
  • அப⁴த்³ராணி - கல்மஷங்களை
  • விது⁴நோதி - போக்கடிக்கிறார் 

பகவானுடைய திருவிளையாடல்களைக் கேட்பதாலும் சொல்வதாலும் மனிதர்கள் தூய்மை பெறுகிறார்கள். அவரோ பக்தர்களின் நண்பன். தமது கதைகளைக் கேட்போரிகளின் உள்ளத்தில் பகவான் வந்து அமர்ந்து, அங்கு மண்டிக் கிடக்கும் காமம் முதலிய குற்றங்களைக் களைந்தொழிகிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 48

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 18

வேத்³யோ வைத்³ய: ஸதா³ யோகீ³ 
வீரஹா மாத⁴வோ மது⁴:|
அதீந்த்³ரியோ மஹா மாயோ 
மஹோத் ஸாஹோ மஹா ப³ல:||

  • 165. வேத்³யோ - அறியக் கூடியவன். யாவரும். அறிதற்கு எளிதானவன்
  • 166. வைத்³யஸ் - வித்தைகளைக் கற்றறிந்தவன், பிறவி நோய்க்கு மருந்தை அறிந்தவன்.
  • 167. ஸதா³ யோகீ³ - எப்பொழுதும் விழித்தே இருப்பவன்.
  • 168. வீரஹா - வீரர்களைக் கொல்பவன்.
  • 169. மாத⁴வோ - வித்தைக்கு ஈசன்.
  • 170. மது⁴ஹு - தேனைக் காட்டிலும் இனியவன்.
  • 171. அதீந்த்³ரியோ - புலன்களுக்கு அப்பாற்பட்டவன்.
  • 172. மஹா மாயோ - மாயை என்னும் திரையினால், தன்னை மறைத்துக் கொள்ளும் சக்தி படைத்தவன்.
  • 173. மஹோத் ஸாஹோ - மிகவும் ஊக்கமுடையவன்.
  • 174. மஹா ப³லஹ - மிகவும் வலிமை வாய்ந்தவன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - நாற்பத்தி ஐந்தாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

045 வைத்த இடத்து இருந்தேனோ பரதனைப் போலே|

"ஆயிரம் ராமர்கள் உனக்கு இணையாவார்களோ?"  - என்று குகன் பரதனைப் பார்த்து கூறினான். பரதனுடைய பண்பு அத்தகையது.  அயோத்தியை ஆண்ட தசரத மன்னனின் மைந்தர்களுள் ஒருவர். கைகேயியின் ஓரே புதல்வன். இவர் இராமனுக்கு இளையவர் ஆவார்.


ஸ்ரீராமனை காட்டுக்கு அனுப்பும் முன் கைகேயி பரதனை தன் தந்தையின் நாடான கேகேயத்திற்கு அனுப்புகிறாள். பரதனுக்குத்தான் அரசுரிமை, ராமன் காடு செல்ல வேண்டும் என்று கைகேயி மன்னனிடம் கேட்க, இராமனும் அதை தாய் தனக்கிட்ட ஆணையாக மனதிலேற்று, சீதா தேவியுடனும் இலட்சுமணனுடனும் கானகம் செல்கிறார். தன் தாய்மாமனைக் காண சென்ற பரதனுக்கு அயோத்தியில் நடந்தது எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இராமன் வனம் சென்ற சில நாளிலேயே தசரதன் இறந்து போக, பரதனுக்கு செய்தி அனுப்பபப்படுகிறது. அயோத்தி வந்தடைந்த பரதன் நடந்தவற்றை அறிந்து தந்தை இறப்பிற்கும் அண்ணன் கானகம் சென்றதுக்கும் தன் தாய் தான் காரணம் என்பதை அறிந்து அவளை பலவாறாக வைது தீர்க்கிறான். அழுது புலம்புகிறான். இப்படிப் பட்ட வரம் கேட்டது தெரிந்த பின்னும் நானும் இறக்காமல் இருக்கிறேன். இது நான் இந்த அரசை ஆசையோடு ஏற்றுக் கொண்டதற்கு ஒப்பாகும் என்கிறான். ஒரு மாவீரனைப் போல, தாய் செய்த தவறுக்கு தார்மீகப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறான்! இருந்தாலும், தாயாரை மன்னிக்காமல், இராமனின் வனவாசம் முடியும் வரை தன் தாயிடம் பேசாமல் வாழ்ந்து வந்தான் பரதன்.


மகரிஷி வசிஷ்டர் பரதனை முடிசூட்டிக் கொள்ளுமாறு வேண்ட, பரதனோ, “நானும் இந்நாடும் அண்ணனின் உடைமை. என்னால் எப்படி ஆட்சி செய்ய முடியும்? நேரே சென்று அண்ணனை அழைத்து வருகிறேன். அண்ணன் அரியணையில் அமர, நான் கானகம் சென்று வாழ்கிறேன்.”, என்று கூறி, மரவுரி தரித்து வனம் செல்கிறான். உடன் தாயார்களும், மந்திரிகளும், மகரிஷிகளும், அயோத்தி மக்களும் வர, பரதன் கங்கை கரையை அடைந்தான். சித்திரக் கூடம் செல்லும் பரதனை, காட்டிலும் விடாது ராமனைத் துரத்துவதாக எண்ணிய லட்சுமணன், போர்க்கோலம் பூணுகிறான். ராமனோ. லட்சுமணனை சமாதானம் செய்கிறார்.


பரதன் மூலம் தந்தை மறைந்த செய்தியைக் கேள்விப் பட்டு நிர்க்கடன் செலுத்துகிரார் ராமன். அடுத்து, பரதனின் தவக்கோலத்திற்கான காரணத்தைக் கேட்கிறார். அயோத்தியில் நடந்தவற்றை கூறி, இராமனின் பாதங்களில் விழுந்த பரதன் அண்ணனிடம் நீங்கள் வந்து முடிசூட்டி ஆட்சிபுரிய வேண்டும் என்று மன்றாடி கேட்கிறான். இராமனோ தந்தை சொல்லை தன்னால் மீற முடியாது, பதினான்கு ஆண்டு வனவாசம் புரிய வேண்டும் என்ற ஆணையை தான் கைவிடக்கூடாது என்கிறார். வனவாசம் முடித்து விட்டு வந்து அரசாட்சியை எடுத்துக் கொள்கிறேன் நீ அயோத்திக்குப் போய் கடமையைச் செய் என்கிறார்.  பரதன் பிடிவாதமாக இருக்கிறான். வேறு வழியில்லாத ராமன், பரதனை நோக்கி, "இது என் ஆணை. பதினாங்கு ஆண்டுகள் நீ அரசாள்வாய்” என்று கூறியதும், பரதன் மறு பேச்சு பேசாது சம்மதிக்கிறான்.

 பரதன், “திரும்பி வர பதினான்கு ஆண்டுகளுக்கு மேல் ஒரு நொடி அதிகமானாலும் நெருப்பில் விழுந்து உயிர் தியாகம் செய்வேன். மேலும், அரியணை தங்களுக்கு உரியது. அதில் நான் அமர மாட்டேன்.” – என்று கூறி, ராமனின் பாதுகைகளைப் பெற்றுக் கொண்டு, “உமது பாதுகைகளே அரியணையை அலங்கரிக்கும். நான் உன் பிரதிநிதி. அரியணை அமரவும் மாட்டேன். மணிமுடி சூடிக்கொள்ளவும் மாட்டேன்.”, என்று கூறி, பலமுறை இராமபிரானைத் தொழுது, அப்பாதுகைகளை தன் தலையில் வைத்துக்கொண்டு அழுது புறப்படுகிறான் பரதன்.

பரதன் அயோத்தி செல்லவில்லை. கோசல நாட்டின் தென் திசையில் உள்ள நந்திக் கிராமத்தில் மணி மண்டபம் அமைத்து, சிம்மாசனத்தில் இராமனுடைய பாதுகைகளை வைத்து, அப்பாதுகைகளுக்கு முடிசூட்டி வழிபட ஆரம்பிகிறான் பரதன். தென் திசையையன்றி வேறு திசையை நோக்காமல், இராமனைப் போல் உப்பில்லாத கஞ்சியைப் பருகி, தானும் குடிலில் தரையில் படுத்து, நல்லாட்சியும் புரிந்தான்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, " பரதன் போல் இராமன் ஒன்றே பிராதானம் என்று நினைத்து, இறைவன் எதைத் தந்தாலும் அது நல்லதுக்கே என்று ஏற்றுக் கொள்ளும் மன பக்குவம் கொண்டுள்ளேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்