About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 6 December 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 82

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 52

க³ப⁴ஸ்தி நேமி: ஸத் வஸ்த்த²:
ஸிம்ஹோ பூ⁴த மஹேஸ்²வர:|
ஆதி³ தே³வோ மஹா தே³வோ
தே³வேஸோ தே³வ ப்⁴ருத்³ கு³ரு:||

  • 487. க³ப⁴ஸ்தி நேமிஸ் - ஒளிரும் சக்கரத்தை ஆயுதமாக கொண்டவர். தனது பிரகாசத்தால் அனைத்தையும் பிரகாசமாக்குகிறார். ஆயிரம் ஆரங்கள் கொண்ட சுதர்சன சக்கரம் உள்ளது. அதை அவர் கட்டுப்படுத்தவும், வழிநடத்தவும், தர்மத்தின் பாதையை நோக்கி அனைவரையும் வழிநடத்தவும் பயன்படுத்துகிறார். 
  • 488. ஸத் வஸ்த்த²ஸ் - அடியவர் நெஞ்சில் குடியிருப்பவர். பக்தர்களின் இதயத்தில் வசிப்பவர்.
  • 489. ஸிம்ஹோ - தன் பக்தர்களைத் துன்புறுத்துபவர்களைத் தண்டிப்பவர்.
  • 490. பூ⁴த மஹேஸ்²வரஹ - எல்லா உயிரினங்களுக்கும் மேலானவர். பிரபஞ்சத்தின் கர்த்தா. 
  • 491. ஆதி³ தே³வோ - முதல் காரணமாக இருப்பவர். பிரகாசம் கொண்டவர்.
  • 492. மஹா தே³வோ - விளையாட்டாக எதனையும் செய்யும் மகாதேவர். பரம கடவுள். ஆரம்பமும் முடிவும் இல்லாத படைப்பாளி.
  • 493. தே³வேஸோ - தேவர்களுக்கு ஈசன். அனைத்து தேவர்களுக்கும் ஆதரவாளர். உச்சக் கட்டுப்பாட்டாளர். 
  • 494. தே³வ ப்⁴ருத்³ - தேவர்களைத் தாங்குபவர். அனைத்து தேவர்களையும் போஷிப்பவர். அனைத்து அறிவையும் பரப்புபவர்.
  • 495. கு³ருஹு - வேத அறிவை வழங்கும் தேவர்களின் ஆசாரியன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.19

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.19 

ய ஏநம் வேத்தி ஹந்தாரம் 
யஸ்² சைநம் மந்யதே ஹதம்|
உபௌ⁴ தௌ ந விஜா நீதோ 
நாயம் ஹந்தி ந ஹந்யதே||

  • ய - எவனொருவன் 
  • ஏநம் - இந்த ஆத்மாவை 
  • வேத்தி - அறிபவர் 
  • ஹந்தாரம் - கொல்பவன் 
  • யஸ்² - எவனொருவன் 
  • ச - மேலும் 
  • ஏநம்-இந்த 
  • மந்யதே - எண்ணுகிறான் 
  • ஹதம் - கொல்லப்படுகின்றது 
  • உபௌ⁴ - இருவருமே 
  • தௌ - அந்த 
  • ந - இல்லை 
  • விஜா நீதோ - அறிவு 
  • ந - என்றுமில்லை 
  • அயம் - இந்த ஆத்மா 
  • ஹந்தி - கொலை செய்வதோ 
  • ந - இல்லை 
  • ஹந்யதே - கொல்லப்படுவதோ

எவன் ஓருவன் இந்த ஆத்மாவை கொல்பவனாக அறிகிறானோ, எவன் ஓருவன் இந்த ஆத்மா கொல்லப்படுகின்றது என்று எண்ணுகிறானோ, அந்த இருவருமே, அறிவில்லாதவர்கள். இந்த ஆத்மா கொல்லப்படுவதோ, கொலை செய்வதோ இல்லை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.17

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.17

தா⁴ந் வந்தரம் த்³வாத³ ஸ²மம் 
த்ரயோ த³ஸ²ம மேவ ச|
அபாய யத் ஸுராநந் யாந் 
மோஹிந்யா மோஹ யந் ஸ்த்ரியா||

  • தா⁴ந் வந்தரம் - தந்வந்தரி ஸ்வரூபம்
  • த்³வாத³ ஸ²மம் - பன்னிரண்டாவதான அவதாரம்
  • மோஹிந்யா - மோஹிநீ என்ற
  • ஸ்த்ரியா - பெண் உருவத்தால்
  • அந்யாந் மோஹ யந் - அசுரர்களை மோஹத்தை அடைந்தவர்களாக செய்து
  • ஸுராந் - தேவர்களை
  • அபாய யத் - அமிர்தத்தை உண்ணச் செய்தார்
  • த்ரயோ த³ஸ²ம் ஏவ ச - என்பது பதிமூன்றாவதான அவதாரம்

பன்னிரண்டாவது திருவவதாரம் 'தந்வந்தரி'. பதிமூன்றாவதாக 'மோஹிநீ' என்ற பெண்ணுரு தாங்கி, அசுரர்களை மயக்கி, அமர்களுக்கு அமுதத்தை வழங்கினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.17

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.17

ஸ ச ஸர்வ கு³ணோ பேத:
கௌஸல்யா நந்த³ வர்த⁴ந:|
ஸமுத்³ர இவ கா³ம்பீ⁴ர்யே
தை⁴ர்யேண ஹிம வாநிவ||

  • ஸ - அவர் 
  • கௌஸல்யா நந்த³ வர்த⁴நஹ - கௌசல்யைக்கு ஆனந்தத்தை வ்ருத்தி செய்பவர்
  • ச -  மேலும்
  • ஸர்வ கு³ணோ பேதஹ -  ஸமஸ்த நற்குணங்களோடு கூடினவர்
  • கா³ம்பீ⁴ர்யே - கம்பீரத்தில்
  • ஸமுத்³ர -  ஸமுத்ரம்
  • இவ -   போன்றவர்
  • தை⁴ர்யேண -  தைரியத்தில்
  • ஹிம வாந் -  இமயமலை
  • இவ -  போன்றவர்

கௌசல்யையின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனும், உன்னதக் குணங்கள் அனைத்தையும் கொண்டவனுமான அவன், அளவற்ற ஆழம் கொண்ட பெருங்கடலைப் போல, கம்பீரமிக்கவனாகவும், ஹிமவானை {இமய மலையைப்} போன்ற உறுதி {தைரியம்} கொண்டவனாகவும் இருக்கிறான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - பெரியாழ்வார் திருமொழி - 1.5 அறிமுகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஐந்தாம் திருமொழி - 11 பாசுரங்கள்
திவ்ய ப்ரபந்தம் - 64 - 74

செங்கீரைப் பருவம்

தலையை நிமிர்த்தி முகத்தை அசைத்து ஆடுதல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

செங்கீரை பருவம் என்பது குழந்தைகள் ஒரு காலை மடக்கி, மறுகாலை நீட்டி, இரு கைகளையும் தரையில் ஊன்றி, தலையை நிமிர்த்தி, முகத்தை அசைத்து ஆடச் சொல்லும் பருவம். குழந்தைகள் ஐந்து மாத தவழும் பருவத்தில் கை கால்களை அசைத்து ஆடும் ஒரு வகையான நடனம். 


கண்ணன் இரு கைகளையும் இரண்டு முழந்தாள்களையும் தரையில் ஊன்றிக் கொண்டு தலையை நிமிர்த்தி அசைந்து விளையாடுகிறான். இதில் மயங்கினாள் யசோதை!' அழகனே! இன்ப ஊற்றாக அமையும் அமுதே! எனக்காக ஒரே ஒரு முறை தலையசைத்து விளையாடிக் காட்டு' என்று வேண்டுகிறாள் அவள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 017 - திருக்கண்ணபுரம் 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

017. திருக்கண்ணபுரம்
க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரம் – நாகப்பட்டினம்
பதினாறாவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 129 - 2

திருமங்கையாழ்வார்

026. திவ்ய ப்ரபந்தம் - 1660 - என் மகள் உருகி மெலிந்து விட்டாளே!
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
அருவி சோர் வேங்கடம்* நீர்மலை என்று வாய் வெருவினாள்* 
மெய்யம் வினவி இருக்கின்றாள்* பெருகு சீர்க்* 
கண்ணபுரம் என்று பேசினாள் உருகினாள்* 
உள்மெலிந்தாள் இது என்கொலோ?

027. திவ்ய ப்ரபந்தம் - 1661 - என் மகள் ஊணும் உறக்கமும் ஒழிந்தாள்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - நான்காம் பாசுரம்
உண்ணும் நாள் இல்லை* உறக்கமும் தான் இல்லை*
பெண்மையும் சால* நிறைந்திலள் பேதை தான்*
கண்ணன் ஊர் கண்ணபுரம்* தொழும் கார்க் கடல் வண்ணர் மேல்* 
எண்ணம் இவட்கு இது என்கொலோ?

028. திவ்ய ப்ரபந்தம் - 1662 - இவள் உடம்பில் பசலை (தேமல்) பரவி விட்டதே
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
கண்ணன் ஊர்* கண்ணபுரம் தொழும் காரிகை*
பெண்மை என்? தன்னுடை* உண்மை உரைக்கின்றாள்*
வெண்ணெய் உண்டு ஆப்புண்ட* வண்ணம் விளம்பினால்*
வண்ணமும்* பொன் நிறம் ஆவது ஒழியுமே|

029. திவ்ய ப்ரபந்தம் - 1663 - என் மகள் மிகவும் இளமை உடையவள்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
வட வரை நின்றும் வந்து* இன்று கணபுரம் இடவகை கொள்வது* 
யாம் என்று பேசினாள்* மடவரல் மாதர் என் பேதை* 
இவர்க்கு இவள் கடவது என்* 
கண் துயில் இன்று இவர் கொள்ளவே?

030. திவ்ய ப்ரபந்தம் - 1664 - என் மகள் எவ்வளவு ஏங்கி விட்டாள்!
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
தரங்க நீர் பேசினும்* தண் மதி காயினும்*
இரங்குமோ?* எத்தனை நாள் இருந்து எள்கினாள்*
துரங்கம் வாய் கீண்டு உகந்தான்* அது தொன்மை* 
ஊர் அரங்கமே என்பது* இவள் தனக்கு ஆசையே|

031. திவ்ய ப்ரபந்தம் - 1665 - என் மகளின் நிறம் மாறி விட்டதே!
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
தொண்டு எல்லாம் நின் அடியே* தொழுது உய்யுமா கண்டு* 
தான் கண்ணபுரம்* தொழப் போயினாள்*
வண்டு உலாம் கோதை என் பேதை* 
மணி நிறம் கொண்டு தான்* கோயின்மை செய்வது தக்கதே?

032. திவ்ய ப்ரபந்தம் - 1666 - என் மகள் இன்னும் பருவம் கூட அடையவில்லையே!
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
முள் எயிறு ஏய்ந்தில* கூழை முடிகொடா*
தெள்ளியள் என்பது ஓர்* தேசு இலள் என் செய்கேன்*
கள் அவிழ் சோலைக்* கணபுரம் கை தொழும் பிள்ளையை* 
பிள்ளை என்று எண்ணப் பெறுவரே?

033. திவ்ய ப்ரபந்தம் - 1667 - உலகில் நெடுங்காலம் வாழ்வர்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - பத்தாம் பாசுரம் 
கார் மலி* கண்ணபுரத்து எம் அடிகளை*
பார் மலி மங்கையர் கோன்* பரகாலன் சொல்*
சீர் மலி பாடல்* இவை பத்தும் வல்லவர்*
நீர் மலி வையத்து* நீடு நிற்பார்களே|

034. திவ்ய ப்ரபந்தம் - 1668 - பெருமானின் பிரிவால் மெலிந்தேன்: வளைகள் கழன்று விட்டன
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - மூன்றாம் திருமொழி - முதலாம் பாசுரம்
கரை எடுத்த சுரி சங்கும்* கன பவளத்து எழு கொடியும்*
திரை எடுத்து வரு புனல் சூழ்* திருக்கண்ணபுரத்து உறையும்*
விரை எடுத்த துழாய் அலங்கல்* விறல் வரைத் தோள் புடைபெயர*
வரை எடுத்த பெருமானுக்கு* இழந்தேன் என் வரி வளையே|

035. திவ்ய ப்ரபந்தம் - 1669 - என் கனமான வளைகளை இழந்து விட்டேன்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - மூன்றாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
அரி விரவு முகில் கணத்தால்* அகில் புகையால் வரையோடும்*
தெரிவு அரிய மணி மாடத்* திருக்கண்ணபுரத்து உறையும்*
வரி அரவின் அணைத் துயின்று* மழை மதத்த சிறு தறு கண்*
கரி வெருவ மருப்பு ஒசித்தாற்கு* இழந்தேன் என் கன வளையே|

036. திவ்ய ப்ரபந்தம் - 1670 - செங்கண்மாலால் என் வளைகளை இழந்தேன்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - மூன்றாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
துங்க மா மணி மாட* நெடு முகட்டின் சூலிகை போம்*
திங்கள் மா முகில் துணிக்கும்* திருக்கண்ணபுரத்து உறையும்*
பைங் கண் மால் விடை அடர்த்துப்* பனி மதி கோள் விடுத்து உகந்த*
செங் கண் மால் அம்மானுக்கு* இழந்தேன் என் செறி வளையே|

037. திவ்ய ப்ரபந்தம் - 1671 - கண்ணபிரானால் என் பொன் வளைகள் போய் விட்டன
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - மூன்றாம் திருமொழி - நான்காம் பாசுரம்
கணம் மருவும் மயில் அகவு* கடி பொழில் சூழ் நெடு மறுகின்*
திணம் மருவு கன மதிள் சூழ்* திருக்கண்ணபுரத்து உறையும்*
மணம் மருவு தோள் ஆய்ச்சி* ஆர்க்க போய் உரலோடும்*
புணர் மருதம் இற நடந்தாற்கு* இழந்தேன் என் பொன் வளையே|

038. திவ்ய ப்ரபந்தம் - 1672 - என் வரி வளைகளை இழந்து விட்டேன்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
வாய் எடுத்த மந்திரத்தால்* அந்தணர் தம் செய் தொழில்கள்*
தீ எடுத்து மறை வளர்க்கும்* திருக்கண்ணபுரத்து உறையும்*
தாய் எடுத்த சிறு கோலுக்கு* உளைந்து ஓடி தயிர் உண்ட*
வாய் துடைத்த மைந்தனுக்கு* இழந்தேன் என் வரி வளையே|

039. திவ்ய ப்ரபந்தம் - 1673 - என் ஒளி வளைகளை இழந்தேன்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
மடல் எடுத்த நெடுந் தாழை* மருங்கு எல்லாம் வளர் பவளம்*
திடல் எடுத்து சுடர் இமைக்கும்* திருக்கண்ணபுரத்து உறையும்*
அடல் அடர்த்து அன்று இரணியனை* முரண் அழிய அணி உகிரால்*
உடல் எடுத்த பெருமானுக்கு* இழந்தேன் என் ஒளி வளையே|

040. திவ்ய ப்ரபந்தம் - 1674 - உலகமுண்டனால் என் ஒளி வளைகள் ஒழிந்தன
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
வண்டு அமரும் மலர்ப் புன்னை* வரி நீழல் அணி முத்தம்*
தெண் திரைகள் வரத் திரட்டும்* திருக்கண்ணபுரத்து உறையும்*
எண் திசையும் எழு சுடரும்* இரு நிலனும் பெரு விசும்பும்*
உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு* இழந்தேன் என் ஒளி வளையே|

041. திவ்ய ப்ரபந்தம் - 1675 - அவன் பிரிவால் என் செறி வளைகள் கழன்றன
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - மூன்றாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
கொங்கு மலி கருங் குவளை* கண் ஆகத் தெண் கயங்கள்*
செங் கமலம் முகம் அலர்த்தும்* திருக்கண்ணபுரத்து உறையும்*
வங்கம் மலி தடங் கடலுள்* வரி அரவின் அணைத் துயின்ற*
செங்கமலநாபனுக்கு* இழந்தேன் என் செறி வளையே|

042. திவ்ய ப்ரபந்தம் - 1676 - அரவணையானால் என் வளைகள் அகன்றன
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
வார் ஆளும் இளங் கொங்கை* நெடும் பணைத் தோள் மடப் பாவை*
சீர் ஆளும் வரை மார்வன்* திருக்கண்ணபுரத்து உறையும்*
பேராளன் ஆயிரம் பேர்* ஆயிர வாய் அரவு அணைமேல்*
பேராளர் பெருமானுக்கு* இழந்தேன் என் பெய் வளையே|

043. திவ்ய ப்ரபந்தம் - 1677 - இவற்றைப் பாடினால் வினைகள் சேரா
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - மூன்றாம் திருமொழி - பத்தாம் பாசுரம் 
தே மருவு பொழில் புடை சூழ்* திருக்கண்ணபுரத்து உறையும்
வாமனனை* மறி கடல் சூழ்* வயல் ஆலி வள நாடன்*
காமரு சீர்க் கலிகன்றி* கண்டு உரைத்த தமிழ் மாலை*
நா மருவி இவை பாட* வினை ஆய நண்ணாவே|

044. திவ்ய ப்ரபந்தம் - 1678 - வண்டே! நறுந்துழாயை ஊது
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - நான்காம் திருமொழி - முதலாம் பாசுரம்
விண்ணவர் தங்கள் பெருமான்* திருமார்வன்*
மண்ணவர் எல்லாம் வணங்கும்* மலி புகழ் சேர்*
கண்ணபுரத்து எம் பெருமான்* கதிர் முடி மேல்*
வண்ண நறுந் துழாய்* வந்து ஊதாய் கோல் தும்பீ|

045. திவ்ய ப்ரபந்தம் - 1679 - ஸௌரி ராஜனின் திருத்துழாயை ஊது
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - நான்காம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
வேத முதல்வன்* விளங்கு புரி நூலன்*
பாதம் பரவிப்* பலரும் பணிந்து ஏத்தி*
காதன்மை செய்யும்* கண்ணபுரத்து எம் பெருமான்*
தாது நறுந் துழாய்* தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ|

046. திவ்ய ப்ரபந்தம் - 1680 - வண்டே! நீ மலர்களை ஊதினால் பயனில்லை
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - நான்காம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
விண்ட மலர் எல்லாம்* ஊதி நீ என் பெறுதி?*
அண்ட முதல்வன்* அமரர்கள் எல்லாரும்*
கண்டு வணங்கும்* கண்ணபுரத்து எம் பெருமான்*
வண்டு நறுந் துழாய்* வந்து ஊதாய் கோல் தும்பீ|

047. திவ்ய ப்ரபந்தம் - 1681 - வண்டே! மீனாமை சிங்கமானவன் துழாயை ஊது
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம்
நீர் மலிகின்றது ஓர்* மீன் ஆய் ஓர் ஆமையும் ஆய்*
சீர் மலிகின்றது ஓர்* சிங்க உரு ஆகி*
கார் மலி வண்ணன்* கண்ணபுரத்து எம் பெருமான்*
தார் மலி தண் துழாய்* தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ|

048. திவ்ய ப்ரபந்தம் - 1682 - மலர்களை ஊதி என்ன பயன்? துழாயை ஊது
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - நான்காம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
ஏர் ஆர் மலர் எல்லாம்* ஊதி நீ என் பெறுதி?*
பார் ஆர் உலகம்* பரவ பெருங் கடலுள்*
கார் ஆமை ஆன* கண்ணபுரத்து எம் பெருமான்*
தார் ஆர் நறுந் துழாய்* தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ|

049. திவ்ய ப்ரபந்தம் - 1683 - காயா மலர் வண்ணனின் துழாயை ஊது
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - நான்காம் திருமொழி - ஆறாம் பாசுரம்
மார்வில் திருவன்* வலன் ஏந்து சக்கரத்தன்*
பாரைப் பிளந்த* பரமன் பரஞ்சோதி*
காரில் திகழ்* காயா வண்ணன் கதிர் முடி மேல்*
தாரில் நறுந் துழாய்* தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ|

050. திவ்ய ப்ரபந்தம் - 1684 - வண்டே! துழாய் மாலையையே ஊது
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - நான்காம் திருமொழி - ஏழாம் பாசுரம்
வாமனன் கற்கி* மதுசூதன் மாதவன்*
தார் மன்னு* தாசரதி ஆய தடமார்வன்*
காமன் தன் தாதை* கண்ணபுரத்து எம் பெருமான்*
தாம நறுந் துழாய்* தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ|
 
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

லீலை கண்ணன் கதைகள் - 73

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

கிருஷ்ணன் ருக்மிணியின் குழந்தை|

சிவன் சொன்னது போலவே, மன்மதன் கிருஷ்ணருக்கும் ருக்மிணிக்கும் மகனாக பிறந்தார். அவனுக்கு அவர்கள் பிரத்யும்னன் என்று பெயர் சூட்டினார்கள். அப்பொழுது சம்பராசுரன் என்ற அரக்கன் இருந்தான். அவனிடம் கிருஷ்ணரின் மகனால்தான் அவனுக்கு மரணம் என்று யாரோ சொல்லியிருந்தார்கள்.


அதனால் அவன் ஒரு நாள் துவாரகைக்குச் சென்று, யாரும் அறியாமல் கிருஷ்ணனின் அரண்மனைக்குள் நுழைந்தான், பத்து நாள் குழந்தையாக இருந்த பிரத்யும்னனைத் திருடி அந்தக் குழந்தையைக் கடலில் தூக்கி எறிந்து விட்டு, வீடு திரும்பினான். குழந்தையைக் காணவில்லை என்று தெரிந்ததும் ருக்மிணி பட்ட கஷ்டம் சொல்ல முடியாதது.

ஆனால் குழந்தை சாகவில்லை. அது கடலில் எறியப்பட்டதும் அதை ஒரு பெரிய மீன் விழுங்கியது. சில மீனவர்கள் அந்த மீனைப் பிடித்து விட்டார்கள். அது மிகவும் பெரிய மீனாக இருந்ததனால், அதைத் தங்கள் அரசனான சம்பராசுரனுக்குக் காணிக்கையாகக் கொடுத்தார்கள். மீன், அரண்மனையின் சமயலறைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

அந்தச் சமயலறையில் மாயாதேவி என்ற ஓர் அழகிய பெண் வேலைச் செய்துக் கொண்டிருந்தாள். மீனை அரிந்ததும், சமையற்காரர்கள் அதன் வயிற்றில் ஓர் அழகிய ஆண் குழந்தையைக் கண்டதும், இந்த விஷயத்தை மாயா தேவியிடம் சொல்ல, அவள் அந்தக் குழந்தையின் அழகைக் கண்டு மயங்கி, அதைத் தன் குழந்தை போலவே வளர்க்க ஆரம்பித்தாள்.
பிரத்யும்னன் வளர்ந்து அழகிய சிறுவனாக ஆனான். ஒரு நாள் நாரதர் அங்கு வந்தார். அந்தச் சிறுவனைப் பார்த்து விட்டு அவன் யார் என்று மாயாதேவியை வினவினார். அவன் மீன் வயிற்றில் இருந்த கதையை அவன் சொன்னாள்.

நாரதர் சிரித்தார். அந்தக் குழந்தையைப் பற்றிய உண்மையை அவளிடம் சொன்னார். அத்துடன் அவள் தான் ரதி என்றும், சிவனால் எரிக்கப்பட்ட தன் கணவர் மீண்டும் உடல் பெற்று வர அவள் காத்திருப்பதாகவும் சொல்லிப் போய் விட்டார். சீக்கிரமே, கிருஷ்ணரின் மகள் வளர்ந்து அழகிய இளைஞன் ஆனான். அவனைப் பார்த்த பெண்கள் எல்லோரும் மனச்சஞ்சலம் அடைந்தார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - எழுபத்தி ஒண்பதாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

079 வாயில் கையிட்டேனோ எம்பாரைப் போலே|

திருப்பெரும்பூதூரின் அருகில் உள்ள மழலை மங்கலத்தில் (தற்போதைய மதுர மங்கலம்) கிபி 1026 ஆம் ஆண்டு, கோவிந்த பட்டர் என்ற இயற்பெயருடன் பிறந்த எம்பார், ராமானுஜரின் சித்தி மகனாவார். திருப்புட்குழியில் தன் அண்ணனாகிய இராமானுசருடன் யாதவ பிரகாசரிடம் கல்வி பயின்றார். ஒரு முறை காசிக்குச் சென்று கங்கையில் நீராடுகையில் சிவலிங்கம் ஒன்று கிடைக்க, அதை எடுத்து வந்து காளஹஸ்தியில் வைத்து கோயில் கட்டினார்.  இச்சம்பவத்தால் "உளங்கைக் கொணர்ந்த நாயனார்" என சைவர்களால் அழைக்கப்பட்டார். சிவ பக்தனாக இருந்த கோவிந்த பட்டரை ராமானுஜரின் வேண்டுதலுக்கிணங்க, திருமலையில் இருந்த பெரிய திருமலை நம்பிகள் வைணவத்திற்கு திருப்பினார்.


பெரிய திருமலை நம்பியிடம், திருமலையில் ராமாயணத்தின் உள் அர்த்தங்களை அறிந்து கொண்டிருந்த ராமானுஜர், ஒரு சமயம், எம்பார் பாம்பின் வாயில் தனது கையை வைத்து ஏதோ செய்து கொண்டிருப்பதைக் கண்டார். சில நிமிடங்கள் செல்ல, எம்பார், பாம்பை விட்டு விட்டு, தனது ஆசார்ய சேவைக்கு திரும்புவதைக் கண்டார். ராமானுஜர், "என்ன செய்து கொண்டிருந்தீர் பாம்புடன்?"என வினவினார்.

எம்பார், "அந்த பாம்பு தன் நாக்கை நீட்டிக் கொண்டிருந்தது. அருகில் சென்று பார்த்த பொழுது, நாக்கினுள் முள் ஒன்று தைத்திருந்தது. அதை எடுத்து விட்டேன். அது ஓடி விட்டது.”, என்றார். அனைத்து உயிர்களையும் ஒன்றெனக் காணும் எம்பாரின் கருணை உள்ளதைக் கண்டு ராமானுஜர் பெருமிதமும் ஆனந்தமும் கொண்டார். வைணவனின் அடிப்படை தர்மம் மனித நேயம், கருணை, இரக்கம். 

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "அந்த எம்பாரைப் போல அனைத்து உயிர்களிடத்திலும் கருணையுடன் இருந்தேனா? கருணை உள்ளத்தோடு பாம்பின் வாயில் கையை விட்டேனோ இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவத புராணம் - 26

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

காலம்

ஸ்கந்தம் 01

தன் இரு சகோதரர்களின் புதல்வர்களுக்குள் யுத்தம் மூண்ட படியால், விதுரர், யுத்தத்தில் பங்கேற்க மனமின்றி தீர்த்த யாத்திரை சென்றார்.

யுத்தம் முடிந்த நிலையில் நாடு திரும்பிக் கொண்டிருந்த விதுரர், வழியில் கங்கைக் கரையில், மைத்ரேய மகரிஷியைச் சந்தித்தார். கண்ணனிடத்துப் பேரன்பு கொண்டிருந்த அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார். ஆனால், சந்தித்ததில்லை. மைத்ரேயரும் விதுரரைப் பற்றி அறிந்திருந்தாரே தவிர கண்டதில்லை.


ஆனால், உள்ளத்தில் குடி கொண்டிருக்கும் அன்பு ஒன்றே அன்றோ! எனவே, தூரத்தே கண்டதும் இருவரும் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொண்டனர். அன்புணர்வு மிகுதியான உள்ளங்களுக்கு நாவின் துணை தேவையா என்ன? 

ஒருவரை ஒருவர் ஆலிங்கனம் செய்து கொண்டனர். பின்னர், மெதுவாக மைத்ரேயர் சுதாரித்துக் கொண்டு, நிறைய விஷயங்களைச் சொன்னார்.

விதுரரும் அவரிடம் நிறைய சந்தேகங்களையும், கேள்விகளையும் கேட்டார். நேரம் போவதே தெரியாமல் இருவரும் அன்பினால் கட்டுண்டு அளவளாவினர்.

கண்ணனின் அடியார்களுக்கு அறிமுகம் தேவையில்லை. அவனைப் பற்றிப் பேச நேரமும் போதவில்லை. 

பின்னர், விதுரர் மெதுவாக விடை பெற்றுக் கொண்டு அஸ்தினாபுரம் வந்தடைந்தார்.

தர்மபுத்ரர், தம்பிகள், யுயுத்ஸு, த்ருதராஷ்ட்ரன், காந்தாரி, குந்தி, சஞ்சயன், த்ரௌபதி, சுபத்ரை, உத்தரை, க்ருபி, மற்றும் மற்ற உறவுக்காரர்கள் அனைவரும் வந்து உயிரைக் கை வரவேற்பதுபோல் விதுரரை வரவேற்றனர்.

மிக்க மகிழ்ச்சியுடன் தர்ம புத்ரர் விதுரருக்கு பூஜை செய்தார்.

களைப்பாறிய பின்னர், அனைவரும் சூழ, விதுரரிடம் தர்ம புத்ரர் கேட்டார்.

"உங்கள் நிழலில் வளர்ந்த எங்களை நினைவு வைத்திருக்கிறீர்களா? விஷம், நெருப்பு முதலியவற்றிலிருந்து நீங்களே எம்மைக் காத்தீர். யாத்திரையாக எங்கெல்லாம் சென்றீர்கள்? என்னென்ன தீர்த்தம், க்ஷேத்ரங்களை தரிசனம் செய்தீர்கள்?
வழியில் துவாரகை பக்கம் சென்றீர்களா? கண்ணன் எப்படி இருக்கிறான்? வேறு யாராவது பந்துக்களைப் பார்த்தீர்களா?"

விதுரர், ஒரே ஒரு செய்தியைத் தவிர மற்ற எல்லா விஷயங்களையும் விவரமாகச் சொன்னார்.

துக்ககரமான அந்த செய்தியைச் சொல்லி, அனைவர் மனத்தையும் புண்படுத்த அவர் விரும்பவில்லை.

சில காலம் அங்கு தங்கியிருந்தார் விதுரர். மாண்டவ்ய மஹரிஷியின் சாபத்தால் நூறு வருஷங்களுக்கு பூமியில் விதுரராகப் பிறந்திருந்தார். அப்போது யமனின் வேலையை அர்யமா என்பவர் செய்து வந்தார். காலத்தின் வேகத்தை அறிந்த விதுரர், ஒரு நாள் த்ருதராஷ்ட்ரனைத் தனிமையில் சந்தித்தார். "அண்ணா, நம் எல்லோருக்குமே மரண காலம் வந்து விட்டது. சீக்கிரம் கிளம்புங்கள்.  உங்கள் தந்தை, சகோதரர், நண்பன், புத்திரர்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள். உங்களுக்கும் முதுமை வந்து விட்டது. மனிதனுக்கு உயிரோடிருப்பதில் ஆசை அதிகம். பீமனை விஷம் வைத்துக் கொல்லத் துணிந்தீர். இப்போது வேளை தவறாமல் வந்து நாய்க்குக் கொடுப்பது போல் உணவு வைத்து விட்டுப் போகிறான். கொழுக்கட்டையை அவன் கொடுக்கும் போது அதே கொழுக்கட்டையில் நீங்கள் அவனுக்கு விஷம் கொடுத்தது நினைவு வரவில்லையா? குலவதுவான த்ரௌபதியை சபையில் அவமானப்படுத்திய போது வாளாவிருந்து விட்டு, இன்று அவள் தர்மபுத்ரரோடு வந்து தினமும் வணங்குவதையும் ஏற்றுக் கொள்கிறீரே. அந்த யுதிஷ்டிரனை நீங்கள் தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு நாடு கடத்தினீர்கள்.

இப்படியாவது நீங்கள் உயிர் தரிக்கத் தான் வேண்டுமா? நீங்கள் விரும்பா விட்டாலும் மரணம் வந்தே தீரும். அதற்கு முன்னால் விரக்தியடைந்து, தானாகவே அனைத்தையும் துறந்து கிளம்புபவனை தீரன் என்று உலகம் புகழ்கிறது. ஸ்ரீ வாசுதேவனை மனத்தில் தியானித்து, இவ்வுலக வாழ்வில் வெறுப்படைந்து, விரக்தியுடன் வடக்கு திசை நோக்கிக் கிளம்புங்கள். இதன் பின் வரப் போகும் காலம் கலியுகமாகும்." என்றார்.

இவ்வாறு கேட்டதும், குருடனான த்ருதராஷ்ட்ரன், மன உறுதியுடன் பந்தங்களை உதறி, விதுரர் சொன்னபடி கிளம்பினார். பதிவ்ரதையான காந்தாரியும் அவரை பின் தொடர்ந்தாள்.

மாலை அனுஷ்டாங்களை முடித்து விட்டு, பெரியோர்களை வணங்குவதற்காக த்ரௌபதியோடு வந்த யுதிஷ்டிரன் பெரிய தந்தை, பெரியம்மா, சிற்றப்பாவான விதுரர் ஒருவரும் அரண்மனையில் இல்லாதது கண்டு திகைத்தார். 

பின்னர் எங்கு தேடியும் கிடைக்காததால் அழுது அரற்றத் துவங்கினார். சஞ்சயனைக் கேட்டார்.

"பெரியப்பா எங்கே? தந்தையில்லாத காலத்தில் எங்களை அரவணைத்தவர் அவர். பெரியம்மா எங்கே? கண்கள் தெரியாதே. என்னிடம் ஏதாவது குறையா? சொல்லாமல் எங்கு போனார்கள்? கங்கையில் விழுந்து விட்டார்களா?" என்றெல்லாம் கேட்க, சஞ்சயனுக்கும் ஒன்றும் தெரியவில்லை.

ஒருவர் கலக்கமுறும் நேரத்திலெல்லாம் அரவணைப்பவர் குரு ஒருவரே. நாரதர் அங்கு வந்து சேர்ந்தார்.

மஹரிஷியைக் கண்டதும் யுதிஷ்டிரர் அவரை வரவேற்று பாத பூஜைகள் செய்து ஆசனம் அளித்தார்.

பின்னர், அவரிடம் தன் தவிப்பைச் சொன்னார் யுதிஷ்டிரர்.

கரை காணாத படகோட்டி போல் தவிக்கும் தர்ம புத்ரரைப் பார்த்து நாரதர் சொல்லலானார்.

"தர்ம புத்ரரே, நீ வருத்தமடையாதே. உலகமே ஈஸ்வரனுக்கு கட்டுப்பட்டது. எந்த இறைவன் நம்மை ஒன்று சேர்த்து வைக்கிறானோ, அவனே பிரித்தும் வைக்கிறான். இந்த தேஹம் அழிவுடையது. ஆனால், ஆத்மா அழிவில்லாதது என்பதைத் தெரிந்து கொண்டால் நீ வருந்த மாட்டாய். அதனால், உன் பெரியோர்களைக் குறித்து கலக்கம் அடையாதே. காலத்திலிருந்து யார் யாரைக் காப்பாற்றமுடியும்?" இப்படியாக பல உபதேசங்கள் செய்தார். பின்னர், "இவ்வுலகில் அசுரர்களை அழிப்பதற்காக ஸ்ரீ வாசுதேவனே கண்ணனாகப் பிறந்தார். அவரது வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டன. அவர் இவ்வுலகில் வசிக்கும் காலம் வரை நீயும் வசிப்பாயாக. த்ருதராஷ்ட்ரர் விதுரனோடும், காந்தாரியோடும், இமயத்திற்குத் தெற்கே உள்ள மஹரிஷிகளின் ஆசிரமத்தில் இருக்கிறார். அவர் பரம வைராக்யத்தை அடைந்து இன்றிலிருந்து ஐந்தாம் நாள் யோகத்தினாலேயே சரீரத்தை விடப் போகிறார். அவருக்கு நீ இடையூறாகி விடாதே. காந்தாரியும் அவரது யோகாக்னியில் ப்ரவேசிப்பாள். அதன் பின் விதுரர் தீர்த்த யாத்திரை செல்வார்." என்று சொல்லி, இன்னும் பலவாறு ஆறுதல்கள் சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பி தும்புரு மஹரிஷியோடு தேவலோகம் சென்றார்.

நாரதரின் தரிசனத்தால் தர்ம புத்ரரின் மனக்கலக்கம் நீங்கியது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்