About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 24 January 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 97

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 67

உதீ³ர்ண: ஸர்வதஸ்² சக்ஷுர் 
அநீஸ²ஸ்² ஸா²ஸ்²வத ஸ்தி²ர:|
பூ⁴ஸ²யோ பூ⁴ஷணோ பூ⁴திர் 
விஸோ²கஸ்² ஸோ²க நாஸ²ந:||

  • 630. உதீர்ணஸ் - தன் திருமேனியை நன்றாக வெளிப்படுத்துபவர். எல்லா உயிரினங்களுக்கும் மேலானவர்.
  • 631. ஸர்வதஸ்² சக்ஷு - யாவரும் தன் கண்ணால் காணும் படியானவர். எங்கும் கண்களை உடையவர். எல்லாவற்றையும் பார்ப்பவர்.
  • 632. அநீஸ²ஸ்² - தலைவன் இல்லாதவர். பரதந்த்ரன்
  • 633. ஸா²ஸ்²வத ஸ்திரஹ - எப்பொழுதும் நிலையாய் இருப்பவர். நித்யமாக இருப்பவர்.
  • 634. பூஸ²யோ - பூமியில் சயனித்து அருள் புரிபவர். வெறுமையான பூமியில் தூங்குபவர்.
  • 635.  பூஷணோ - அலங்கரிக்கப்பட்டவர்.
  • 636. பூதிர் - பக்தர்களுக்கு செல்வமாக இருப்பவர்.
  • 637. விஸோ²கஸ்² - சோகம் இல்லாதவர்.
  • 638. ஸோ²க நாஸ²நஹ - சோகத்தை ஒழிப்பவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.34

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.34
 
அகீர் திம் சாபி பூ⁴தாநி 
கத²யிஷ் யந்தி தேவ் யயாம்|
ஸம்பா⁴ விதஸ்ய சாகீர் திர்
மரணா த³தி ரிச்யதே||

  • அகீர் திம் - இகழ்ச்சி 
  • ச - மேலும் 
  • அபி - அதற்கு மேலாக 
  • பூ⁴தாநி - மக்களெல்லாம் 
  • கத²யிஷ் யந்தி - பேசுவர் 
  • தே - உன்னைப்பற்றி 
  • அவ்யயாம்- என்றென்றும் 
  • ஸம்பா⁴ விதஸ்ய - மதிக்கத்தக்க ஒருவனுக்கு 
  • ச - மற்றும் 
  • அகீர்திர் - அவமானம் 
  • மரணாத் - மரணத்தை விட 
  • அதி ரிச்யதே - மேற்பட்டது கொடியது

அதற்கும் மேலாக, மக்கள் எல்லாம் உன்னைப் பற்றி, இகழ்ச்சியாக பேசுவர். மதிக்கத்தக்க ஒருவனுக்கு, அவமானம் என்றென்றும் மரணத்தை விட கொடியது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.32

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.32

அத: பரம் யத³வ் யக்தம்
அவ்யூட⁴ கு³ண வ்யூஹிதம்|
அத்³ருஷ் டாஸ்² ருத வஸ்துத் வாத்
ஸ ஜீவோ யத் புநர் ப⁴வ:||

  • அதஃ பரம் - இந்த ஸ்தூல ரூபத்தை காட்டிலும் வேறானது
  • அத்³ருஷ் டாஸ்² ருத - பார்க்கப்படாததும் கேட்கப்படாததும் வஸ்து
  • வஸ்துத் வாத்து - ஸத்தா ஸ்வரூபம் ஆனதும்
  • அவ்யூட⁴ கு³ண வ்யூஹிதம் - கர சரணாகதிகளில் இல்லாததும் ப்ருதிவியாதிகளால் செய்யப்பட்டதும்
  • அவ் யக்தம் - அதி ஸூக்ஷமமாகவும்
  • யத்³ - யாதொரு ஸூக்ஷ்ம ஸரீரம் உண்டோ
  • யத் - யாதொரு ஸூக்ஷ்ம ஸரீரத்தில் இருந்து
  • புநர் ப⁴வஹ - மறுபடியும் உற்பத்தி உண்டாகிறதோ
  • ஸ ஜீவோ - அதுவே ஜீவோ பாதியாக கல்பிக்கப்படுகிறது

வெளியில் தெரியக்கூடிய ஸ்தூல ஸரீரத்திலிருந்து வேறுபட்டதும், கை, கால் முதலிய அவயவங்களற்றதும், ஆகவே, பார்கவோ கேட்கவோ முடியாததும், மிகவும் ஸூக்ஷ்மமாகவும் உள்ள இந்த லிங்க சரீரமே (மாயையோடு கூடியதுமே) ஜீவன் என்று அழைக்கப் படுகிறது. இதுவே பிறப்பிறப்பிற்குக் காரணமாகிறது. அதாவது பிறவி எடுக்கிறது. இந்த (ஸூக்ஷ்மமான) லிங்க ஸரீரமும் முன் கூறியது போல, பகவான் மேல் ஏற்றிக் கூறப்படுகிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.32

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.32

தே³வ க³ந்த⁴ர்வ ஸங்கா ஸா²ஸ்
தத்ர தே ந்ய வஸந் ஸுக²ம்|
சித்ரகூடம் க³தே ராமே 
புத்ர ஸோ²காது ரஸ்ததா²|| 

  • தே - அந்த 
  • தே³வக³ந்த⁴ர்வ - தேவ கந்தர்வர்களுக்கு
  • ஸங்காஸா²ஸ் -  சமமாக
  • தத்ர  - வனத்தில்
  • ஸுக²ம் - சுகமாக
  • ந்யவஸந் -  வஸித்தார்கள் 
  • ராமே - ஸ்ரீ ராமர்
  • சித்ரகூடம்  - சித்ர கூடத்தை
  • க³தே -   அடைந்த அளவில்
  • புத்ர ஸோ²காதுரஸ் - புத்ர சோகத்தால் பீடிக்கப்பட்டவரான
  • ததா²  - அப்படியே

அந்த தேவர்களைப் போலவும், கந்தர்வர்களைப் போலவும்  மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். இவ்வாறு ராமன் சித்ர கூடத்திற்குச் சென்றதும், புத்திர சோகத்தால் அப்படியே, 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திவ்ய ப்ரபந்தம் - 77 - பெரியாழ்வார் திருமொழி - 1.6.3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 77 - மணிவண்ணன் ஆழியங்கையன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஆறாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்

பன்மணி முத்துஇன் பவளம் பதித்தன்ன* 
என் மணிவண்ணன்* இலங்கு பொற்றோட்டின் மேல்* 
நின்மணி வாய் முத்திலங்க* நின் அம்மை தன்* 
அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி* 
ஆழியங் கையனே சப்பாணி|

  • என் - என்னுடைய
  • மணி வண்ணன் - நீல மணி போன்ற நிறமுடையவனே!
  • பல் - பலவகைப் பட்ட
  • மணி - சதகங்களையும்
  • முத்து - முத்துக்களையும்
  • இன் பவளம் - இனிய பவழத்தையும்
  • பதித்த - அழுத்தி பதித்துச் செய்யப் பட்டதும்
  • அன்ன - அப்படிப்பட்ட அழகியதுமாக
  • இலங்கு - விளங்குகின்ற
  • பொன் தோட்டின் மேல் - பொன்னாற் செய்த தோடென்னும் காதணியின் அழகையும் மிஞ்சும் படியாக இருக்கும்
  • நின் மணி வாய் முத்து - உன்னுடைய அழகிய திருவாயிலே முத்துப் போன்ற பற்கள்
  • இலங்க - தெரிய சிரித்துக் கொண்டு
  • நின் அம்மை தன் - உன் தாய் யசோதையின்
  • அம்மணி மேல் - மடியிலிருந்து கொண்டு
  • கொட்டாய் சப்பாணி - சப்பாணி கொட்டி அருள வேணும்
  • ஆழி - திருவாழி மோதிரத்தை
  • அம் கையனே - அழகிய கையிலுடையவனே! 
  • சப்பாணி - சப்பாணி கொட்டி அருள வேணும்

விதவிதமான மணிகளும், முத்துக்களும், பவளங்களும் பொருத்திச் செய்யப்பட்ட நீ அணிந்திருக்கும் பொன் காது அணிகளின் அழகையும் மிஞ்சும் படியாக இருக்கும் முத்துக்கள் போல் பிரகாசிக்கும் உன் பற்கள், உன் திருப்பவள வாய்ச் சிரிப்பின் போது, தெரியும் படி உன் தாயின் இடுப்பில் அமர்ந்து கைகளைக் கொட்டு, என் நீல மணி போன்ற நிறம் உடையவனே! திருச் சக்கரத்தை அழகிய கையில் ஏந்தியவனே! அத்திருக் கைகளைக் கொட்டி விளையாட வேண்டும்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 021 - திருநந்திபுர விண்ணகரம் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

021. திருநந்திபுர விண்ணகரம் 
நாதன் கோயில் - கும்பகோணம்
இருபத்தி ஒன்றாவது திவ்ய க்ஷேத்ரம்
.
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10

திருமங்கையாழ்வார்

001. திவ்ய ப்ரபந்தம் - 1438 - தயிர் உண்ட நாதன் ஊர் நந்திபுர விண்ணகரம்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - பத்தாம் திருமொழி - முதலாம் பாசுரம்
தீது அறு நிலத்தொடு எரி காலினொடு* நீர் கெழு விசும்பும் அவை ஆய்*
மாசு அறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை* 
அவை ஆய பெருமான்* தாய் செற உளைந்து தயிர் உண்டு குடம் ஆடு* 
தட மார்வர் தகைசேர்* நாதன் உறைகின்ற நகர்* 
நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே|

002. திவ்ய ப்ரபந்தம் - 1439 - உலகேழும் உண்டவன் உறையும் ஊர்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - பத்தாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
உய்யும் வகை உண்டு சொன செய்யில் உலகு* ஏழும் ஒழி யாமை முன நாள்* 
மெய்யின் அளவே அமுதுசெய்ய வல* ஐயன் அவன் மேவும் நகர் தான்*  
மைய வரி வண்டு மது உண்டு கிளையோடு* மலர் கிண்டி அதன்மேல்* 
நைவளம் நவிற்று பொழில்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1440 - மனமே! நந்திபுர விண்ணகரம் சேர்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - பத்தாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
உம்பர் உலகு ஏழு கடல் ஏழு மலை ஏழும்* ஒழியாமை முன நாள்*
தம் பொன் வயிறு ஆர் அளவும் உண்டு அவை உமிழ்ந்த* 
தட மார்வர் தகை சேர்* 
வம்பு மலர்கின்ற பொழில் பைம் பொன் வரு தும்பி* மணி கங்குல் வயல் சூழ்* 
நம்பன் உறைகின்ற நகர்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1441 - அசுரர்களை அழித்தவன் அமரும் இடம் இது
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - பத்தாம் திருமொழி - நான்காம் பாசுரம்
பிறையின் ஒளி எயிறு இலக முறுகி எதிர் பொருதும் என* வந்த அசுரர்* 
இறைகள் அவை நெறு நெறு என வெறிய அவர் வயிறு அழல* 
நின்ற பெருமான்* 
சிறை கொள் மயில் குயில் பயில மலர்கள் உக அளி முரல* 
அடிகொள் நெடு மா* 
நறைசெய் பொழில் மழை தவழும்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1442 - பஞ்சாயுதன் உறையும் இடம் இது
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - பத்தாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
மூள எரி சிந்தி முனிவு எய்தி அமர் செய்தும் என* வந்த அசுரர்* 
தோளும் அவர் தாளும் முடியோடு பொடி ஆக* நொடி ஆம் அளவு எய்தான்*
வாளும் வரி வில்லும் வளை ஆழி கதை சங்கம்* இவை அம்கை உடையான்* 
நாளும் உறைகின்ற நகர்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1443 - இராமன் இருக்கும் இடம் இது
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - பத்தாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
தம்பியொடு தாம் ஒருவர் தன் துணைவி காதல்* துணை ஆக முன நாள்*
வெம்பி எரி கானகம் உலாவும் அவர் தாம்* இனிது மேவும் நகர் தான்*  
கொம்பு குதி கொண்டு குயில் கூவ மயில் ஆலும்* எழில் ஆர் புறவு சேர்* 
நம்பி உறைகின்ற நகர்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1444 - நந்தி வர்மன் பணி செய்த இடம் இது
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - பத்தாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
தந்தை மனம் உந்து துயர் நந்த இருள் வந்த விறல்* நந்தன் மதலை*
எந்தை இவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ* நின்ற நகர் தான்*  
மந்த முழவு ஓசை மழை ஆக எழு கார்* மயில்கள் ஆடு பொழில் சூழ்* 
நந்தி பணிசெய்த நகர்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1445 - மனமே! நந்திபுர விண்ணகரை அடைவாய்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - பத்தாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை என்று* முனி யாளர் திரு ஆர்* 
பண்ணில் மலி கீதமொடு பாடி அவர் ஆடலொடு* கூட எழில் ஆர்* 
மண்ணில் இதுபோல நகர் இல்லை என* வானவர்கள் தாம் மலர்கள் தூய்* 
நண்ணி உறைகின்ற நகர்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1446 - நந்திபுர விண்ணகரத்தானே நங்கள் பெருமான்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - பத்தாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
வங்கம் மலி பௌவம் அது மா முகடின் உச்சி புக* மிக்க பெருநீர்* 
அங்கம் அழியார் அவனது ஆணை* தலை சூடும் அடியார் அறிதியேல்*
பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி* எங்கும் உளதால்* 
நங்கள் பெருமான் உறையும்* நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1447 - இவற்றைப் பாடினால் வினைகள் அகலும்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - பத்தாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
நறை செய் பொழில் மழை தவழும்* நந்திபுர விண்ணகரம் நண்ணி உறையும்*
உறை கொள் புகர் ஆழி சுரி சங்கம்* அவை அம் கை உடை யானை* 
ஒளி சேர் கறை வளரும் வேல் வல்ல* 
கலியன் ஒலி மாலை இவை ஐந்தும் ஐந்தும்*
முறையின் இவை பயில வல அடியவர்கள் கொடு வினைகள்* முழுது அகலுமே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்  

லீலை கண்ணன் கதைகள் - 88

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

சிசுபாலனின் வதம்|

ஆனால் கிருஷ்ணர் இப்படி வணங்கப்படுவதை அவையிலுள்ள ஒருவனால் சகிக்க முடியவில்லை. அவன் தான் தமகோஷரின் புத்திரனான சிசுபாலன். அவன் எழுந்து நின்று உரத்த குரலில், "போதும் உங்கள் அசட்டுத்தனம்!" என்று கத்திவிட்டு, மிகுந்த கோபத்துடன் கிருஷ்ணரை இழிவாகப் பேச ஆரம்பித்தான். 


"பெரியவர்களுடைய மூளை எல்லாம் ஏன் இப்படிக் குழம்பிப் போயிற்று என்பது எனக்கு விளங்கவில்லை. பெரியவர்களாகிய உங்களுக்கு விஷயம் தெரிய வேண்டியிருக்க, சிறுவன் சகாதேவன் சொன்னதை எல்லோரும் கேட்டுவிட்டீர்கள். இந்தக் கௌரவத்தை அடையக் கிருஷ்ணருக்கு என்ன தகுதி இருக்கிறது? அவன் உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். அவன் அரசனன்று, ஆட்டிடையன். சிறையில் பிறந்து, இடையனாக வளர்ந்தவன்; எப்படி அவன் அரசர்களோடு சரி சமமாக வீற்று இருக்க முடியும்? இங்கு எத்தனையோ பெரியவர்கள் இருக்கிறார்கள். தவத்தினாலும் படிப்பினாலும் ஆசாரத்தினாலும் உயர்ந்த எத்தனையோ தவ சிரேஷ்டர்கள் இந்த அவையில் உள்ளனர்.

அவர்களுக்கு ஏன் இந்தக் கௌரவம் அளிக்கப்படவில்லை?" 

இந்த முறையில் சிசுபாலன் கிருஷ்ணரை அவதூறாகப் பேசிக் கொண்டே போனான். கடைசியில் அவையில் ஒரு நிமிடம் மௌனம் நிலவியது. கிருஷ்ணர் பேசாமல் உட்கார்ந்திருந்தார். அவர் முகத்தில் ஒரு மாறுதலும் தோன்றவில்லை. நரியின் ஊளையைச் சிங்கம் பொருட்படுத்தாமல் இருப்பது போல அவர் பேசாமல் இருந்தார். 

ஆனால் கிருஷ்ணரிடம் மரியாதை வைத்திருந்த பல பெரியோர், சிசுபாலனின் வசவுகளைக் கேட்கப் பொறுக்காமல், காதுகளை மூடிக் கொண்டு, சிசுபாலனைச் சபித்து விட்டு வெளியே சென்றனர். ஆனால், பாண்டவர்களால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்கள் தங்கள் ஆயுதங்களைக் கையில் எடுத்தனர். சிசுபாலனுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்தனர். 

அவர்களோடு இன்னும் பல அரசர்களும் சேர்ந்து கொண்டனர். ஆனால் அவர்களைப் பொறுத்துக் கொள்ளும்படி கிருஷ்ணர் சைகை காட்டினார். ஆனால் சிசுபாலனோ, சண்டை போடக் கத்தியையும் கேடயத்தையும் எடுத்துக் கொண்டான். ஆனால் கிருஷ்ணரோ, நொடிப் பொழுதில் தம்முடைய சக்கர ஆயுதத்தினால் அவன் தலையை அறுத்து விட்டார். 

சிசுபாலன் செத்துக் கீழே விழுந்ததும் பெரிய ஆரவாரம் ஏற்பட்டது. எல்லோரும் மகிழ்ச்சியடைந்தனர். யுதிஷ்டிரர் யாகத்தைப் பூர்த்தி செய்ய ஆரம்பித்தார். கிருஷ்ணருக்கு அக்கிர பூஜையும் செய்து முடிக்கப்பட்டது. யாகம் முடிந்த பிறகு எல்லா அரசர்களும் அவரவர்கள் இருப்பிடம் திரும்பினர். யாக காரியங்கள் முழுவதாக முடியும்வரை கிருஷ்ணர் அங்கே இந்திரப் பிரஸ்தத்தில் இருந்துவிட்டு, பிறகு துவாரகை திரும்பினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 41

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

இறையின் ஸ்வரூபம்

ஸ்கந்தம் 02

விராட் புருஷனின் ஒவ்வொரு அங்கத்தையும் விவரித்த ப்ரும்மா மேலும் கூறலானார்.

"நாரதா, நீ, நான், ருத்ரன், உனக்கு முன் தோன்றிய ஸநகாதிகள், தேவர்கள், அசுரர்கள், பறவைகள், விலங்குகள், பாம்புகள், கந்தர்வர்கள், அப்ஸரஸ்கள், யக்ஷர்கள், அரக்கர்கள், பூத கணங்கள், ஊர்வன, பசுக்கள், பித்ருக்கள், சித்தர்கள், வித்யாதரர்கள், சாரணர்கள், மரங்கள், நீர் வாழ்வன, நிலத்தில் வாழ்வன, விண்ணில் வாழ்வன, சூரியன் முதலான கோள்கள், அசுவினி முதலான நக்ஷத்திரங்கள், மின்னல், இடி, தூம கேது முதலான வால் நக்ஷத்ரங்கள், நடந்தது, நடப்பது, இனி நடக்கப் போவதுமான இவ்வுலகம், அத்தனையும் விராட் புருஷனே. இவை அனைத்துமே அவரது திருமேனியில் பத்து அங்குல பரிமாணத்திற்குள் அடங்கி உள்ளன.


இவர் மரண பயம் அளிக்கும் கர்ம வினைகளைத் தாண்டியவர் ஆகையால், பயமற்ற ஆனந்தத்தின் கொள் கலனாகிறார். ப்ரபஞ்ச ரூபமானவர். ஆனாலும் ஆனந்தத்தின் வைப்பிடம். அவரது பெருமை அவரது உருவத்தைப் போன்றே எல்லை அற்றது."

இதன் பின் ஒவ்வொரு லோகத்தின் வசிப்பவர்களின் ஆனந்தத்தின் தன்மையை விளக்குகிறார் ப்ரும்மா.

"இந்த ப்ரும்மாண்டத்தைத் தோற்றுவித்த இறைவனிடமிருந்தே ஐம்பெரும் பூதங்களும், பொறிகளும், ஸத்வம் முதலான தத்வங்களும் தோன்றின. இருப்பினும் அவற்றில் ஒட்டாமல் தனித்துப் பரிணமிக்கிறார். சூரியன் எவ்வாறு ஒளி தந்து உலகை விளங்க வைத்தாலும் தான் அதில் ஒட்டாது தனித்து விளங்குகிறாரோ, அது போல், அந்தர்யாமி அகிய அந்த இறைவனின் தொப்புளில் இருந்து வெளி வந்த தாமரை மலரில் நான் தோன்றிய போது, வேள்வியால் அவரை ஆராதிக்க எப்பொருளும் இருக்கவில்லை. 

பின்னர் அவருடைய அவயவங்களில் இருந்தே வேள்விக்கான அனைத்தையும் பெற்றுக் கொண்டேன். அவரிடம் இருந்து பெற்ற பொருள்களைக் கொண்டே அவரை வேள்விகளால் ஆராதனை செய்தேன்.

அதன் பின் தோன்றிய ஒன்பது ப்ரஜாபதிகளும் (மரீசி, அத்ரி, ஆங்கீரஸ், புலஸ்தியர், புலஹர், க்ரது, ப்ருகு, வசிஷ்டர், தக்ஷன்) அவ்வாறே மனத்தை ஒருமைப்படுத்தி பூஜித்தனர்.

அதன் பின்னர் ஸ்வாயம்புவ மனு முதலான மனுக்களும், ரிஷிகளும், பித்ருக்களும், தேவர்களும், அசுரர்களும், மனிதர்களும் தோன்றினர். காலம் கிடைத்த போதெல்லாம் வேள்விகள் செய்து இறையை வழிபட்டனர்.

ஸ்ரீமந் நாராயணன் எவ்வொரு குணத்திற்கும் ஆட்படாதவர். நிர்குணர். ஆனால், படைப்பிற்காக கல்யாண குணங்களை மேற்கொள்கிறார். ஸகுணராகிறார். அவரே ப்ரபஞ்சத்தின் ஆதாரமானவர். 


நான் எப்போதும் இறைவனை ஏக்கமும், அன்பும் கொண்ட இதயத்துடன் த்யானித்து வருவதால் என் வாக்கு பொய்ப்பதே இல்லை. தவறான எண்ணங்களும் தோன்றுவதில்லை. புலன்களும் தீய வழியில் செல்வதில்லை. தவமே வடிவு எடுத்ததோ என்று அனைவரும் எண்ணும்படி இறைவனை நினைத்து தவம் செய்துள்ளேன். யோகப் பயிற்சியும் செய்தேன். நானே ப்ரஜாபதிகள் அனைவர்க்கும் தந்தை. 

இவ்வளவு இருந்தும் என்னால் இறைவனை முழுமையாக அறிய முடியவில்லை. அவரது திறன் எல்லை அற்றது. இது வரை அவரது ஸ்வரூபத்தை அறிந்தவர் எவரும் இல்லை. இருப்பினும் என்னால் இயன்ற அளவிற்கு அவரது ஸ்வரூப லக்ஷணங்களைக் கூறுகிறேன். இறைவன் அணு அளவும் மாயை அற்றவர். சுத்த ஞான ஸ்வரூபி. அந்தராத்மாவின் வடிவில் அனைத்திலும் நிறைந்து இருப்பவர். மூன்று காலங்களிலும் விளங்கும் உண்மைப் பொருள். அவருக்குத் துவக்கமும் இல்லை. முடிவும் இல்லை. தொன்மையானவர். முக்குணங்களும் அற்றவர். அவரைத் தவிர இரண்டாவதாக வேறு ஒரு பொருள் அற்றவர்.

மனம், பொறிகள், மற்றும் உடலைத் தன்வயப்படுத்திய முனிவர்கள் தியானத்தின் மூலம் இறைவனை அறிகிறார்கள். தீயொழிக்கம் நிரம்பியவர்களுக்கு உள்ளுறையும் உண்மை மாயையினால் மறைக்கப் படுவதால் அது புலப்படுவதில்லை. எவ்வளவு அறிந்தாலும், ஸமுத்திரத்தின் கரையில் நிற்கும் ஒருவன் அதை எவ்வாறு முழுமையாய் உணர மாட்டானோ அது போல் இறைவனையும் முழுமையாக உணர்பவர்கள் எவரும் இல்லை. விராட் புருஷனே இறைவனின் முதல் திருத்தோற்றம் (அவதாரம்)." 

அதைத் தொடர்ந்து இறைவனின் பல்வேறு அவதாரங்களை நாரதருக்கு எடுத்துக் கூறுகிறார் ப்ரும்ம தேவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்