About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 4 November 2023

108 திவ்ய தேசங்கள் - 014 - திருநறையூர் 7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

014. திருநறையூர்
நாச்சியார் கோயில் - கும்பகோணம்
பதிநான்காவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 111 - 5

திருமங்கையாழ்வார்

082. திவ்ய ப்ரபந்தம் - 1556 - நம்பி! உயிர்க்கெல்லாம் நீ தான் தாய்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - முதலாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
தூயாய் சுடர் மா மதிபோல்* உயிர்க்கு எல்லாம்*
தாய் ஆய் அளிக்கின்ற* தண் தாமரைக் கண்ணா!*
ஆயா அலை நீர் உலகு ஏழும்* முன் உண்ட வாயா* 
உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே|

083. திவ்ய ப்ரபந்தம் - 1557 - துயரமே இல்லை; விண்ணுலகு கிடைக்கும்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - முதலாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
வண்டு ஆர் பொழில் சூழ்* நறையூர் நம்பிக்கு* 
என்றும் தொண்டு ஆய்* கலியன் ஒலி செய் தமிழ் மாலை*
தொண்டீர் இவை பாடுமின்* பாடி நின்று ஆட*
உண்டே விசும்பு* உம் தமக்கு இல்லை துயரே|

084. திவ்ய ப்ரபந்தம் - 1558 - நம்பி! நான் உன்னையே நினைப்பேன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - இரண்டாம் திருமொழி - முதலாம் பாசுரம்
புள் ஆய் ஏனமும் ஆய்ப் புகுந்து* என்னை உள்ளம் கொண்ட*
கள்வா என்றலும்* என் கண்கள் நீர்கள் சோர் தருமால்*
உள்ளே நின்று உருகி* நெஞ்சம் உன்னை உள்ளியக்கால்*
நள்ளேன் உன்னை அல்லால்* நறையூர் நின்ற நம்பீயோ|

085. திவ்ய ப்ரபந்தம் - 1559 - நம்பி! நான் உன்னையே நாடுவேன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - இரண்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
ஓடா ஆள் அரியின்* உரு ஆய் மருவி* 
என் தன் மாடே வந்து* அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா*
பாடேன் தொண்டர் தம்மைக்* கவிதைப் பனுவல் கொண்டு*
நாடேன் உன்னை அல்லால்* நறையூர் நின்ற நம்பீயோ|

086. திவ்ய ப்ரபந்தம் - 1560 - நம்பி! எனக்கு நீயே அம்மையும் அப்பனும்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - இரண்டாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
எம்மானும் எம் அனையும்* என்னைப் பெற்று ஒழிந்ததற் பின்*
அம்மானும் அம்மனையும்* அடியேனுக்கு ஆகி நின்ற*
நல் மான ஒண் சுடரே* நறையூர் நின்ற நம்பீ* 
உன் மைம் மான வண்ணம் அல்லால்* மகிழ்ந்து ஏத்த மாட்டேனே|

087. திவ்ய ப்ரபந்தம் - 1561 - உலகுண்டவன் உறையும் இடம் என் மனம்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - இரண்டாம் திருமொழி - நான்காம் பாசுரம் 
சிறியாய் ஓர் பிள்ளையும் ஆய்* உலகு உண்டு ஓர் ஆல் இலை மேல் உறைவாய்*
என் நெஞ்சின் உள்ளே* உறைவாய் உறைந்தது தான்*
அறியாது இருந்தறியேன்* அடியேன் அணி வண்டு கிண்டும்*
நறை வாரும் பொழில் சூழ்* நறையூர் நின்ற நம்பீயோ|

088. திவ்ய ப்ரபந்தம் - 1562 - நம்பியே! என் வனத்தை விடுத்து அகல முடியாது
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
நீண்டாயை வானவர்கள்* நினைந்து ஏத்திக் காண்பு அரிதால்*
ஆண்டாய் என்று ஆதரிக்கப் படுவாய்க்கு* நான் அடிமை பூண்டேன்* 
என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்*
நாண் தான் உனக்கு ஒழிந்தேன்* நறையூர் நின்ற நம்பீயோ|

089. திவ்ய ப்ரபந்தம் - 1563 - நம்பீ! நீ அருள் செய்து கொண்டே இருப்பாய்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
எம் தாதை தாதை அப்பால்* எழுவர் பழ அடிமை வந்தார்* 
என் நெஞ்சின் உள்ளே* வந்தாயைப் போகல் ஒட்டேன்*
அந்தோ! என் ஆர் உயிரே* அரசே அருள் எனக்கு*
நந்தாமல் தந்த எந்தாய்!* நறையூர் நின்ற நம்பீயோ|

090. திவ்ய ப்ரபந்தம் - 1564 - நம்பீ! நீ பிறர் மனத்தில் புக நான் விட மாட்டேன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
மன் அஞ்ச ஆயிரம் தோள்* மழுவில் துணித்த மைந்தா*
என் நெஞ்சத்துள் இருந்து* இங்கு இனிப் போய்ப் பிறர் ஒருவர்*
வல் நெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன்* வளைத்து வைத்தேன்*
நல் நெஞ்ச அன்னம் மன்னும்* நறையூர் நின்ற நம்பீயோ|

091. திவ்ய ப்ரபந்தம் - 1565 - நம்பீ! நீ என் மனத்தில் தான் இருக்க வேண்டும்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - இரண்டாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
எப்போதும் பொன் மலர் இட்டு* இமையோர் தொழுது* 
தங்கள் கைப் போது கொண்டு இறைஞ்சிக்* கழல் மேல் வணங்க நின்றாய்*
இப்போது என் நெஞ்சின் உள்ளே* புகுந்தாயைப் போகல் ஒட்டேன்*
நல் போது வண்டு கிண்டும்* நறையூர் நின்ற நம்பீயோ|

092. திவ்ய ப்ரபந்தம் - 1566 - நம்பீ! எனக்குத் தான் இப்பேறு கிடைத்தது
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
ஊன் நேர் ஆக்கை* தன்னை உழந்து ஓம்பி வைத்தமையால்*
யான் ஆய் என் தனக்கு ஆய்* அடியேன் மனம் புகுந்த தேனே* 
தீங் கரும்பின் தெளிவே* என் சிந்தை-தன்னால்*
நானே எய்தப் பெற்றேன்* நறையூர் நின்ற நம்பீயோ|

093. திவ்ய ப்ரபந்தம் - 1567 - நெடுங்காலம் தேவராக வாழ்வர்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - இரண்டாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
நல் நீர் வயல் புடை சூழ்* நறையூர் நின்ற நம்பியை*
கல் நீர மால் வரைத் தோள்* கலிகன்றி மங்கையர் கோன்*
சொல் நீர சொல் மாலை* சொல்லுவார்கள் சூழ் விசும்பில்*
நல் நீர்மையால் மகிழ்ந்து* நெடுங் காலம் வாழ்வாரே|

094. திவ்ய ப்ரபந்தம் - 1568 - நறையூர் நம்பியைக் கண்டு களித்தேன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - மூன்றாம் திருமொழி - முதலாம் பாசுரம்
சின இல் செங் கண் அரக்கர் உயிர் மாளச்*
செற்ற வில்லி என்று கற்றவர் தம்தம் மனமுள் கொண்டு* 
என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மா முனியை* மரம் ஏழ் எய்த மைந்தனை*
நனவில் சென்று ஆர்க்கும் நண்ணற்கு அரியானை*
நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியை*
கனவில் கண்டேன் இன்று கண்டமையால்* 
என் கண் இணைகள் களிப்பக் களித்தேனே|

095. திவ்ய ப்ரபந்தம் - 1569 - நறையூர் நம்பியைக் நான் ஆதரிப்பேன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - மூன்றாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
தாய் நினைந்த கன்றே ஒக்க* என்னையும் தன்னையே நினைக்கச் செய்து* 
தான் எனக்கு ஆய் நினைந்து அருள் செய்யும் அப்பனை*
அன்று இவ் வையகம் உண்டு உமிழ்ந்திட்ட வாயனை* 
மகரக் குழைக் காதனை* மைந்தனை மதிள் கோவல் இடைகழி ஆயனை* 
அமரர்க்கு அரி ஏற்றை* என் அன்பனை அன்றி ஆதரியேனே|

096. திவ்ய ப்ரபந்தம் - 1570 - எம்பிரானை நான் எந்த விதத்திலும் மறக்க முடியாது
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - மூன்றாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான்* 
மற்று ஓர் நெஞ்சு அறியான்* 
அடியேனுடைச் சிந்தை ஆய் வந்து* 
தென்புலர்க்கு என்னைச் சேர்கொடான் இது சிக்கெனப் பெற்றேன்*
கொந்து உலாம் பொழில் சூழ் குடந்தைத் தலைக் கோவினை* 
குடம் ஆடிய கூத்தனை* 
எந்தையை எந்தை தந்தை தம்மானை* எம்பிரானை எத்தால் மறக்கேனே?

097. திவ்ய ப்ரபந்தம் - 1571 - கண்ணனுக்கே என் மனம் தாழும்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - மூன்றாம் திருமொழி - நான்காம் பாசுரம்
உரங்களால் இயன்ற மன்னர் மாளப்* 
பாரதத்து ஒரு தேர் ஐவர்க்கு ஆய்ச் சென்று*
இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள் செய்யும் எம்பிரானை* 
வம்பு ஆர் புனல் காவிரி* 
அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி* ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று*
சரங்கள் ஆண்ட தன் தாமரை கண்ணனுக்கு அன்றி* 
என் மனம் தாழ்ந்து நில்லாதே|

098. திவ்ய ப்ரபந்தம் - 1572 - கண்ணபிரானையே என் மனம் சிந்தை செய்யும்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
ஆங்கு வெம் நரகத்து அழுந்தும் போது*
அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து தாங்கு* 
தாமரை அன்ன பொன் ஆர் அடிஎம்பிரானை* 
உம்பர்க்கு அணி ஆய் நின்ற* வேங்கடத்து அரியை பரி கீறியை*
வெண்ணெய் உண்டு உரலினிடை ஆப்புண்ட தீங் கரும்பினை* 
தேனை நன் பாலினை அன்றி* என் மனம் சிந்தை செய்யாதே|

099. திவ்ய ப்ரபந்தம் - 1573 - பள்ளி கொண்டானையே நான் பாடுவேன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
எள் தனைப்பொழுது ஆகிலும்* என்றும் என் மனத்து அகலாது இருக்கும் புகழ்*
தட்டு அலர்த்த பொன்னே அலர் கோங்கின்* 
தாழ் பொழில் திருமாலிருஞ்சோலை அம்கட்டியை* 
கரும்பு ஈன்ற இன் சாற்றை* காதலால் மறை நான்கும் முன் ஓதியபட்டனை* 
பரவைத் துயில் ஏற்றை* என் பண்பனை அன்றிப் பாடல் செய்யேனே|

100. திவ்ய ப்ரபந்தம் - 1574 - கடல் வண்ணன் நிறத்தையே என் வாய் பேசும்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற* பாலை ஆகி இங்கே புகுந்து* 
என் கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான்*
கொண்ட பின் மறையோர் மனம் தன் உள்*
விண் உளார் பெருமானை எம்மானை*
வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல்வண்ணன்* 
மா மணி வண்ணன் எம் அண்ணல்* வண்ணமே அன்றி வாய் உரையாதே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

லீலை கண்ணன் கதைகள் - 61

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

காலயவனனின் அழிவுl

கிருஷ்ணன் காலயவனனைக் கண்டு பயந்தவனைப் போல ஓட ஆரம்பித்தான். காலயவனனும் கத்திக்கொண்டே கிருஷ்ணன் பின்னால் ஓடினான். "ஓ கிருஷ்ணா! கோழையைப் போல் ஓடாதே! இது ஒரு வீரனுக்குத் தகாது. உன் வெறும் கைகளால் கம்சனைக் கொன்றாய். ஜரசந்தனைப் பல தடவை தோற்கடித்தாய், இருந்தும் உன்னைப் பற்றி நான் நினைத்ததற்கு மாறாக நீ இருக்கிறாய். எதற்காக என்னைக் கண்டு ஓடுகிறாய்?" என்று கத்தினான். அவன் தன் வேகத்தை அதிகரித்துக் கொண்டு ஓடினான்.


கிருஷ்ணன் சிக்கி விட்டான் என்று நினைக்கும் சமயம் அவன் அகப்பட்டுக் கொள்ளாமல் இன்னும் வேகமாக ஓடினான். கடைசியில் வெகு தூரத்தில் உள்ள ஒரு குகைக்குள் நுழைந்தான். "இது தான் உன் திட்டமா! குகைக்குள் ஒளிந்து கொண்டு என்னிடமிருந்து தப்பித்துக் கொண்டுவிட முடியும் என்று நினைக்கிறாயா" என்று சொல்லிக் கொண்டே காலயவனன் குகைக்குள் நுழைந்தான். அவன் கிருஷ்ணனைத் தேடித் பார்த்தான். ஆனால் கிருஷ்ணன் அகப்படவில்லை. கடைசியில் யாரோ ஒருவர் அங்கே தரையில் படுத்துத் தூங்குவது போல் தென்பட்டது, இருட்டில் படுத்திருப்பவன் முகம் தெரியவில்லை. கிருஷ்ணன் தான் அப்படித் தூங்குவது போலப் பாசாங்கு செய்கிறான் என்று நினைத்துக் கொண்டு, அந்த உருவத்தைப் பார்த்து ஒரு பலமான உதை விட்டான் காலயவனன்.


தூங்கிக் கொண்டிருந்தவர் சற்று அசைந்துக் கொடுத்து, மெல்லத் தம் கண்களைத் திறந்தார். தம் தூக்கத்தைக் கலைத்தது யார் என்று நாலாபுறமும் பார்த்தார். காலயவனன் தம் முன் நிற்பதை பார்த்ததும், உடனே அவரது உடலிலிருந்து ஜ்வாலை கிளம்ப, அது காலயவனனை எரித்துச் சாம்பலாக்கியது. 

என்ன ஆச்சரியம்! அங்கே தூங்கிக் கொண்டிருந்த அந்த மனிதர் யார்? அவருடைய பார்வை எப்படி ஒரு வீரனை எரித்தது? இது ஒரு தனிக் கதை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - அறுபத்தி ஏழாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

067 அநுகூலம் சொன்னேனோ மால்யவானைப் போலே|

இராமயணத்தில், மால்யவான், இலங்கையை ஆண்ட ராவணனின் தாய்வழி தாத்தா சுமாலியின் மூத்த சகோதரர் ஆவார். இலங்கையின் மன்னனாகவும் சில ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அரசியல் மற்றும் ஆட்சி குறித்த அரசவை தலைமை ஆலோசகராகவும், தாத்தாவாக, சிறந்த அறிவுரைகளையும் வழங்கி, மால்யவான், ராவணனுக்கு உறுதுணையாக இருந்தார். வயதானவர், அறிவாளி, அனுபவம் நிறைந்தவர் 


ராவணன் சீதையை சிறைப்பிடித்து இலங்கையில் வைத்திருந்த பொழுது, சீதா பிராட்டி, மண்டோதரி. விபீஷணன், கும்பகர்ணன் உட்பட பலரும் சீதையை திருப்பி அனுப்பி விடும்படியும், ராமனுடன் சமாதானமாய் சென்றுவிடும் படியும் ராவணனுக்கு அறிவுரை வழங்கினார்கள். ஆனால் ராவணன் எவர் சொல்லுக்கும் செவி சாய்க்கவில்லை.

ஆலோசகர் என்ற முறையில் மால்யவான் அறிவுறுத்தினாலும் ராவணன் செவி சாய்க்கவில்லை. தாத்தா என்ற முறையில், மால்யவான் - "ராவணா! ராமனுடன், அவனது வலு தெரியாது சண்டைக்குப்போகாதே! மனிதர்களும், குரங்குகளும் ராமனைக் காக்க உள்ளனர். நீ சிவபெருமானிடம் இருந்து வாங்கிய வரத்தில், உனக்கு மனிதர்களிடம் இருந்தோ குரங்குகளிடம் இருந்தோ ஆபத்து நேரக்கூடாது என்று இல்லை. அவர்கள் உனக்கு எதிரிகள். ஆனால், இன்றோ, இரண்டும் ஒன்று சேர்ந்து உன்னை எதிர்த்து நிற்க, நீயோ அவர்களை போருக்கு அழைக்கிறாய். அதனால் இது நீ யோசிக்க வேண்டிய விஷயம். மேலும், ராமன், ஒரு சாதாரண மனிதனாய் தெரியவில்லை. அவன் விஷ்ணுவின் அவதாரம். உன் செயல், உன் அழிவிற்கு மட்டுமல்ல, நம் இனம் அழியவும் வழி வகுக்கிறது! ஆகவே சீதையை ராமனிடம் ஒப்படைத்து, சரணடைந்து, சமாதானமாய்ப் போய்விடு.", என்று அறிவுரை கூறினார்.

மால்யவானின் இந்த அறிவுரைகளுக்கு ராவணன் செவி சாய்க்கவில்லை. இறுதியில், போரில் ஸ்ரீ ராமர் வெல்ல, ராவணன் மடிந்தான். ராவணனின் மறைவுக்குப் பின், விபீஷணன் இலங்கையின் மன்னனாக முடிசூடினான். விபீஷணனின் அரசியல் மற்றும் தலைமை ஆலோசகராக மால்யவான் இருந்தார். 

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "மால்யவானைப் போல எம்பெருமான் பற்றி அனுகூலம் சொன்னேனோ? எம்பெருமானிடம் சரணாகதி அடையுமாறு நல்வழி கூறினேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவத புராணம் - 14

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

வியாஸ நாரத ஸம்வாதம் - 1

ஸ்கந்தம் 01

ஸூத பௌராணிகர், 

நாராயணம் நமஸ்க்ருத்ய நரம் சைவ நரோத்தமம் 
தேவீம் ஸர்ஸ்வதீம் வ்யாஸம் ததோ ஜயமுதீரயேத்|

என்று நர நாராயணர்களாக அவதரித்த பகவான், வியாஸர் ஸரஸ்வதி தேவி அனைவரையும் துதித்த பின்னர், பாகவதம் உருவான நிகழ்வை விவரிக்கிறார்.

ஸரஸ்வதி நதி ‌தீரத்தில் தனது ஆசிரமத்தில் அமர்ந்திருந்தார் வியாஸர். ஒன்றே கால் லக்ஷம் ஸ்லோகங்கள் கொண்டு விநாயகரின் உதவியோடு மஹாபாரதத்தை முடித்திருந்தார். பெரிய மனத்திருப்தி ஏற்பட்டிருந்தது.


இனி கலியுகம் வரப் போகிறது. அந்த மக்களை நல்வழிப்படுத்தி பகவானிடம் சேர்க்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்ட நிம்மதி. பதினேழு புராணங்கள், அத்தனை விதமான தர்மங்களையும், கடைப்பிடிக்கும் முறைகளையும் உதாரணங்களோடும், கதைகளோடும் விளக்கி மஹாபாரதம் செய்தாயிற்று. அது ஒன்றைப் படித்தாலே போதும். அனைவருக்கும் நன்னெறியில் ஒழுகும் விதம் தெரிந்து விடும். அநாதியான வேதம். எப்படியோ தலையைப் பிய்த்துக் கொண்டு வகைப்படுத்தியாயிற்று.

கர்ம மார்கத்திற்காக நால்வகை வேதங்கள், ஞான மார்கத்திற்காக நூற்றி எட்டு உபநிஷத்துக்கள் எல்லாம் முடித்தாயிற்று. இனி கலியுகத்தில் வரும் மாந்தர்களுக்கு ஒரு கவலையும் இல்லை. என்றெல்லாம் மகிழ்ந்தவருக்கு தான் கொடுத்த கிரந்தங்களை மக்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்று பார்க்க ஆவல் ஏற்பட்டது.

கண்களை மூடி சற்று பவிஷ்யத்தைப் பார்த்தவர் இடிந்து போனார். வேதங்களையும், புராணங்களையும் சீந்துவாரில்லை. எங்கோ ஒரு சிலரைத் தவிர வேறெவரும் அவற்றைச் சட்டை செய்யவில்லை. மிகவும் சுவையான, எக் காலத்திற்கும், அனைத்து மக்களுக்கும் ஏற்றவாறு தர்மங்களை எடுத்துச் சொல்லும் மஹாபாரதமும் வீண் விவாதங்களுக்கும் பட்டி மன்றம் நடத்துவதற்குமே பயன்பட்டது. மக்கள் எப்போதும் எதையோ தேடி அலைந்து கொண்டேயிருந்தனர்.

தலை சுற்றியது வியாசருக்கு. பகவத் ஸ்மரணையின்றி ஒரு பெரும் மக்கள் கூட்டம். எப்படி கரையேறுவார்கள்? தன் உழைப்பு அவ்வளவும் வீணாகி விட்டதாய் உணர்ந்தார்.

தளர்ந்த மன நிலையோடு தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார்.

மஹான்களின் கவலை எப்போதும் உலகிலுள்ளோரின் நன்மையைப் பற்றியதே. அவர்களுக்கு அவ்வாறு ஏற்படும் கவலை ஒரு பெருத்த நன்மையில் முடியும். ஸாதுக்களுக்கு கவலை ஏற்படுமாயின் அவ்விடத்தில் பகவான் உடனே ஆவிர்பவிப்பான். அல்லது தகுந்த குருவை உடனே அனுப்பி வைப்பான். நாரதரின் கவலையைப் போக்க ஸனத் குமாரர் வந்ததை மாஹாத்மியத்தில் பார்த்தோம்.

வியாஸரின் கவலையைப் போக்க நாரதரே அவ்விடம் வந்தார். அவரே ஸ்ரீமத் பாகவதத்திற்கு மூல காரணமும் ஆவார்.

வியாஸர் நாரதர் வருவதைக் கண்டதும் வரவேற்று, அவரை உரிய மரியாதைகளுடன் பூஜை செய்தார்.

வியாஸரைப் பார்த்து நாரதர் கேட்டார்,
"நீங்கள் நலமோடு இருக்கிறீரா? உடல் நலக் குறைவா? அல்லது மனத்தில் ஏதாவது கவலையிருக்கிறதா? உம்மைப் போன்ற மஹாத்மாக்களின் கவலை லோகோத்தாரணத்திற்கு வழியாயிற்றே"

வியாஸர் சொன்னார்,
"நாரதரே! நீங்கள் சூரியனைப் போல் அனைத்தையும் அறிவீர். காற்றைப் போல் எல்லா இஅங்களிலும் நுழைந்து ஸஞ்சாரம் செய்யக் கூடியவர். தங்களது உபாசனா தெய்வமோ பரம புருஷனேயாவார்.

தங்களைப் போன்ற ஸாதுக்களிடம் எதையாவது மறைக்க முடியுமா? நீங்கள் ஹ்ருதயம் நுழைந்து அனுக்ரஹம் செய்பவராயிற்றே. என் கவலை தங்களுக்குத் தெரியாதா? அது நீங்குவதற்கு உபாயமும் தாங்களே சொல்லுங்கள். நீங்கள் ஒருவரும் சாதிக்க முடியாத பெரிய காரியத்தை சாதித்திருக்கிறீர்கள். வேதத்தைப் பகுப்பதென்ன எளிதா? எவ்வளவு புராணங்கள் செய்திருக்கிறீர்! மஹாபாரதம் போல் உண்டா? ஆனாலும்,"

"என்ன ஆனாலும்?"

"பகவானின் பெருமைகளையும், குணங்களையும் நாமங்களையும் வலியுறுத்துவது போல் ஒரு கிரந்தம் செய்யவில்லை. அதுவே கலியுகத்திற்குப் பயன்படும்."

வியாசருக்கு ஒன்றும் புரியவில்லை.

"என்ன ஸ்வாமி சொல்கிறீர்? வேதமே பகவானின் புகழைத் தானே பாடுகிறது? அத்தனை புராணங்களும் பகவானின் மகிமைகளைத் தானே பறை சாற்றுகின்றன? மஹாபாரதத்தில் பகவானின் லீலைகள் இல்லையா?"

"இருக்கிறது ரிஷியே. ஆனால், ப்ரத்யேகமாக பகவன் நாமத்தையும், குணங்களையும் மட்டும் வலியுறுத்துவதாக இல்லை. வேதத்தில் பகவானுக்கு ஆயிரம் தலைகள், ஆயிரம் கண்கள், ஆயிரம் கைகள் என்றெல்லாம் வர்ணிக்கிறீர். உண்மைதான் என்றாலும், லலிதமாக ஆராதிப்பதாக இல்லை. ஒரு குழந்தை பிறந்தால் அதைக் கண்ணே மணியே என்று கொஞ்சுவார்களா? அது இவ்வளவு எடை, இத்தனை எலும்புகள், என்றெல்லாம் கொஞ்சுவார்களா? லலிதமாக, அத்தனை பேர் வாயிலும் எளிதாக நுழையும் வண்ணம் சித்ர பதங்களைப் போட்டு ஒரு புராணம் செய்யுங்கள். அது பகவன் நாம மகிமையை வலியுறுத்த வேண்டும். அதைப் படித்ததுமே ஹ்ருதயத்தில் பக்தியைத் தூண்ட வேண்டும்."

"முக்கியமாக தப்பும் தவறுமாகப் படித்தாலும், விபரீத பலன்களைத் தராமல், நற்பலன்களையே கொடுக்க வேண்டும். படிக்கத் தெரியா விட்டாலும் கேட்டலே பகவத் சரண சம்மந்தத்தைக் கொடுக்க வேண்டும். அந்த கிரந்தத்தின் ஒரே ஒரு ஸ்லோகத்தின் பாதி அடியை யாராவது எதேச்சையாகக் கேட்டாலும் முக்தி கிட்ட வேண்டும்." நாரதர் நம் மீதுள்ள கருணையினால் அடுக்கிக் கொண்டே போக, வியாஸர் திருதிருவென்று விழித்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 69

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 39

அதுல: ஸ²ரபோ⁴ பீ⁴ம:
ஸமயஜ்ஞோ ஹவிர் ஹரி:|
ஸர்வ லக்ஷண லக்ஷண்யோ 
லக்ஷ்மீ வாந் ஸமிதிஞ் ஜய:||

  • 356. அதுலஸ் - ஒப்பில்லாதவன்.
  • 357. ஸ²ரபோ⁴ - அழிப்பவன்.
  • 358. பீமஸ் - தன் ஆணையைக் கடப்பவருக்கு பயங்கரன்.
  • 359. ஸமயஜ்ஞோ - காலம் அறிந்தவன்.
  • 360. ஹவிர் ஹரிஹி - அவியுணவை ஏற்பவன்.
  • 361. ஸர்வ லக்ஷண லக்ஷண்யோ- எல்லாச் சுபலட்சணங்களும் பொருந்தியவன்.
  • 362. லக்ஷ்மீ வாந் - பூமகளின் கேள்வன்.
  • 363. ஸமிதிஞ் ஜயஹ - வெற்றி மகளை உடையவன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.6 

ந சைதத்³ வித்³ம: கதரந் நோ க³ரீயோ 
யத்³வா ஜயேம யதி³ வா நோ ஜயேயு:|
யாநேவ ஹத்வா ந ஜிஜீவி ஷாம:
தேவஸ்தி²தா: ப்ரமுகே² தா⁴ர்தராஷ்ட்ரா:||

  • ந - இல்லை 
  • ச - மேலும் 
  • ஏதத் - இந்த 
  • வித்³மஹ் - நமக்குத் தெரியுமா 
  • கதர - எது 
  • ந - நமக்கு 
  • க³ரீயோ - சிறந்தது 
  • யத்³வா - எது 
  • ஜயேம - நாம் வெல்லலாம் 
  • யதி³ - அதுவாகில் 
  • வா - அல்லது 
  • நோ - நாம்
  • ஜயேயுஹு - அவர்கள் வெல்லுதல் 
  • யாந் - இவர்களை 
  • ஏவ - நிச்சயமாக 
  • ஹத்வா - கொல்வதால் 
  • ந - ஒருபோதும் இல்லை 
  • ஜிஜீவி ஷாமஹ - நாம் வாழ விரும்புவோம் 
  • தே - அவர்களெல்லாம் 
  • அவஸ் தி²தாஃ - அமைந்துள்ள 
  • ப்ரமுகே² - முன்னிலையில் 
  • தா⁴ர்தராஷ்ட்ராஹ - திருதராஷ்டிரரின் மகன்கள்

மேலும், நாம் இவர்களை வெல்லுதல், இவர்கள் நம்மை வெல்லுதல், இவற்றுள் எது நமக்கு மேன்மையென்பது விளங்கவில்லை. எவரைக் கொன்ற பின் நாம் உயிர் கொண்டு வாழ விரும்போமோ, அத்தகைய திருதராஷ்டிரக் கூட்டத்தார் போர் முனையில் வந்து நிற்கிறார்கள். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.4

பஸ்²யந்த் யதோ³ ரூப மத³ப்⁴ர சக்ஷுஷா
ஸஹஸ்ர பாதோ³ரு பு⁴ஜாந நாத்³ பு⁴தம்|
ஸஹஸ்ர மூர்த⁴ ஸ்²ரவணாக்ஷி நாஸிகம்
ஸஹஸ்ர மௌல் யம்ப³ ரகுண்ட³ லோல் லஸத்||

  • ஸஹஸ்ர - ஆயிரக் கணக்கான
  • பாதோ³ரு பு⁴ஜாந நாத்³ பு⁴தம் - கால்கள், தொடைகள், புஜங்கள், முகங்கள் இவைகளால் மிக அற்புதமானதும்
  • ஸஹஸ்ர - ஆயிரக் கணக்கான
  • மூர்த⁴ ஸ்²ரவணாக்ஷி நாஸிகம் - தலைகள், காதுகள், கண்கள், மூக்குகள் உள்ளதும்
  • ஸஹஸ்ர - ஆயிரக் கணக்கான
  • மௌல் யம்ப³ ரகுண்ட³ லோல் லஸத் - கிரீடங்கள், தலைப்பாகைகள், குண்டலங்கள் இவைகளால் பிரகாசிக்கின்றதுமான
  • யதோ³ ரூபம் - இந்த விராட் புருஷனின் ரூபத்தை
  • அத³ப்⁴ர சக்ஷுஷா - மிக விரிவான ஞானக் கண்களால்
  • பஸ்²யந்தி - யோகிகள் பார்க்கின்றனர்

அந்த விராட் திருவுருவம் - ஆயிரமாயிரம் திருவடிகள், தொடைகள், முகங்கள், ஆயிரமாயிரம் தலைகள், செவிகள், கண்கள், மூக்குகள் மற்றும் ஆயிரமாயிரம் கிரீடங்கள், ஆடைகள், குண்டலங்கள் ஆகியன கொண்டு விளங்கிற்று. இவ்வாறான அற்புதமான திருவுருவத்தை யோகிகள் தங்கள் ஞானக் கண்களால் காண்கின்றனர். அதாவது, எல்லாப் பொருள்களிலும் பரமாத்ம ஸ்வரூபத்தையே காண்கிறார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.4

ஆத்மவாந் கோ ஜிதக் ரோதோ⁴ 
த்³யுதி மாந் கோந ஸூயக:।
கஸ்ய பி³ப்⁴யதி தே³வாஸ்²ச 
ஜாதரோ ஷஸ்ய ஸம்யுகே³॥ 

  • ஆத்மவாந் -  தைரியம் உடையவன்
  • கோ -  எவன்
  • ஜிதக் ரோதோ⁴ -  கோபத்தை தன் வசப்படுத்தினவன்
  • த்³யுதி மாந் -  காந்தி உள்ளவன்
  • அந ஸூயகஹ - பொறாமை இல்லாதவன் 
  • கோ - எவன்
  • ஸம்யுகே³ - போரில்
  • ஜாத ரோ ஷஸ்ய -  கோபம் கொண்ட 
  • கஸ்ய -  எவனுக்கு
  • தே³வாஸ்²ச -  தேவர்கள் கூட 
  • பி³ப்⁴யதி -  நடுங்குகிறார்கள்

தற்கட்டுப்பாட்டைக் கொண்டவனும், கோபத்தை வென்றவனும், அறிவார்ந்தவனும், பொறாமையற்றவனும், கோபம் தூண்டப் பட்டால் தேவர்களையே பீதியைடையச் செய்பவனுமாக இருப்பவன் எவன்? 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 52 - பெரியாழ்வார் திருமொழி - 1.3.9

ஸ்ரீ:
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 52 - துர்க்கை தந்த பொருள்கள்
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்

மெய் திமிரும் நானப்* 
பொடியொடு மஞ்சளும்*
செய்ய தடங் கண்ணுக்கு* 
அஞ்சனமும் சிந்துரமும்*
வெய்ய கலைப்பாகி* 
கொண்டுவளாய் நின்றாள்*
ஐயா! அழேல் அழேல் தாலேலோ* 
அரங்கத்தணையானே! தாலேலோ!

  • மெய் - திருமேனியிலே
  • திமிரும் - பூசத் தகுந்த
  • நானம் - கஸ்தூரி, கருப்பூரம், சந்தநம் முதலிய 
  • பொடியோடு - ஸூகந்தப் பொடிகளையும் 
  • மஞ்சளும் - மஞ்சள் பொடியையும்
  • செய்ய - சிவந்ததாய்
  • தட - விசாலமாயுள்ள
  • கண்ணுக்கு - கண்களில் சாத்த
  • அஞ்சனமும் - மையையும்
  • சிந்தூரமும் - திருநெற்றியில் சாத்த ஸிந்தூரத்தையும்
  • வெய்ய கலை பாகி - கொடிய ஆண் மானை வாஹமாக உடைய துர்க்கையானவள்
  • கொண்டு - எடுத்துக் கொண்டு வந்து
  • உவளாய் நின்றாள் - பணிவன்புடன் நின்றாள்
  • ஐயா - ஸ்வாமியான கண்ணனே! 
  • அழேல் அழேல் தாலேலோ - அய்யனே அழாது கண்ணுறங்கு
  • அரங்கத்து - திருவரங்கத்திலே 
  • அணையானே - திருவனந்தாழ்வானைப் படுக்கையாக டையவனே! 
  •  தாலேலோ! - கண்ணுறங்கு! 

திருமேனியில் பூசுவதற்க்காக வாசனை மற்றும் மஞ்சள் பொடிகளையையும், சிவந்து அகந்திருந்த கண்களுக்கு மையையும், நெற்றிக்கு இட சிந்தூரத்தையும் கொண்டு வந்து கண்ணனுக்கு அளிப்பதற்காக அதோ நிற்கிறாள் ஆண் மானை வாகனமாகக் கொண்ட துர்கா தேவி. பெருமானே, அழாதே, அழாதே, கண்ணுறங்கு, ஸ்ரீரங்கத்தில் பாம்பைப் படுக்கையாக உடையவனே கண்ணுறங்கு.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 014 - திருநறையூர் 6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

014. திருநறையூர்
நாச்சியார் கோயில் - கும்பகோணம்
பதிநான்காவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 111 - 4

திருமங்கையாழ்வார்

062. திவ்ய ப்ரபந்தம் - 1536 - மனமே! நறையூர் நம்பி தான் தேவ தேவன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
மறை ஆரும் பெரு வேள்விக்* கொழும் புகை போய் வளர்ந்து எங்கும்*
நிறை ஆர வான் மூடும்* நீள் செல்வத் திருநறையூர்*
பிறை ஆரும் சடையானும்* பிரமனும் முன் தொழுது ஏத்த*
இறை ஆகி நின்றான் தன்* இணை அடியே அடை நெஞ்சே|

063. திவ்ய ப்ரபந்தம் - 1537 - தேவர்களாகி வாழ்வர்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
திண் களக மதிள் புடை சூழ்* திருநறையூர் நின்றானை*
வண் களகம் நிலவு எறிக்கும்* வயல் மங்கை நகராளன்*
பண்கள் அகம் பயின்ற சீர்ப்* பாடல் இவை பத்தும் வல்லார்*
விண்கள் அகத்து இமையவர் ஆய்* வீற்றிருந்து வாழ்வாரே|

064. திவ்ய ப்ரபந்தம் - 1538 - திருமாலின் திருநாமம் நமோ நாராயணம்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - பத்தாம் திருமொழி - முதலாம் பாசுரம்
கிடந்த நம்பி குடந்தை மேவிக்* கேழல் ஆய் உலகை இடந்த நம்பி* 
எங்கள் நம்பி* எறிஞர் அரண் அழிய*
கடந்த நம்பி கடி ஆர் இலங்கை* உலகை ஈர் அடியால்*
நடந்த நம்பி நாமம் சொல்லில்* நமோ நாராயணமே|

065. திவ்ய ப்ரபந்தம் - 1539 - உலகளந்தான் திருப்பெயர் நமோ நாராயணம்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - பத்தாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
விடம் தான் உடைய அரவம் வெருவச்* செருவில் முன நாள்* 
முன் தடந் தாமரை நீர்ப் பொய்கை புக்கு* மிக்க தாள் ஆளன்*
இடந்தான் வையம் கேழல் ஆகி* உலகை ஈர் அடியால்*
நடந்தானுடைய நாமம் சொல்லில்* நமோ நாராயணமே|

066. திவ்ய ப்ரபந்தம் - 1540 - வெண்ணெயுண்டான் திருநாமம் நமோ நாராயணம்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - பத்தாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
பூணாது அனலும்* தறுகண் வேழம் மறுக* 
வளை மருப்பை பேணான் வாங்கி* 
அமுதம் கொண்ட பெருமான் திரு மார்வன்*
பாணா வண்டு முரலும் கூந்தல்* ஆய்ச்சி தயிர் வெண்ணெய்*
நாணாது உண்டான் நாமம் சொல்லில்* நமோ நாராயணமே|

067. திவ்ய ப்ரபந்தம் - 1541 - விபீடணனுக்கு நல்லவன் நாமம் நமோ நாராயணம்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - பத்தாம் திருமொழி - நான்காம் பாசுரம் 
கல் ஆர் மதிள் சூழ்* கச்சி நகருள் நச்சிப்* 
பாடகத்துள் எல்லா உலகும் வணங்க* இருந்த அம்மான்* 
இலங்கைக்கோன் வல் ஆள் ஆகம்* வில்லால் முனிந்த எந்தை* 
விபீடணற்கு நல்லானுடைய நாமம் சொல்லில்* நமோ நாராயணமே|

068. திவ்ய ப்ரபந்தம் - 1542 - கோவர்த்தனன் திருநாமம் நமோ நாராயணம்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - பத்தாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
குடையா வரையால்* நிரை முன் காத்த பெருமான்* 
மருவாத விடை தான் ஏழும் வென்றான்* கோவல் நின்றான்* 
தென் இலங்கை அடையா அரக்கர் வீயப்* பொருது மேவி வெம் கூற்றம்*
நடையா உண்ணக் கண்டான் நாமம்* நமோ நாராயணமே|

069. திவ்ய ப்ரபந்தம் - 1543 - நமோ நாராயணம் என்றே சொல்லுங்கள்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - பத்தாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
கான எண்கும் குரங்கும்* முசுவும் படையா* 
அடல் அரக்கர் மானம் அழித்து நின்ற* வென்றி அம்மான்* 
எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதும் ஆய* திருமால் திருநாமம்*
நானும் சொன்னேன் நமரும் உரைமின்* நமோ நாராயணமே|

070. திவ்ய ப்ரபந்தம் - 1544 - நமோ நாராயணம் என்ற நாமம் மிக நல்லது
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - பத்தாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
நின்ற வரையும் கிடந்த கடலும்* திசையும் இரு நிலனும்*
ஒன்றும் ஒழியா வண்ணம் எண்ணி* நின்ற அம்மானார்*
குன்று குடையா எடுத்த* அடிகளுடைய திருநாமம்*
நன்று காண்மின் தொண்டீர் சொன்னேன்* நமோ நாராயணமே|

071. திவ்ய ப்ரபந்தம் - 1545 - ஆநிறை காத்தவன் பெயர் நமோ நாராயணம்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - பத்தாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
கடுங் கால் மாரி கல்லே பொழிய* அல்லே எமக்கு என்று படுங்கால்* 
நீயே சரண் என்று* ஆயர் அஞ்ச அஞ்சா முன்*
நெடுங்கால் குன்றம் குடை ஒன்று ஏந்தி* நிரையைச் சிரமத்தால்*
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம்* நமோ நாராயணமே|

072. திவ்ய ப்ரபந்தம் - 1546 - நமோ நாராயணம் என்றால் வினைகள் நீங்கும்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - பத்தாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
பொங்கு புணரிக் கடல் சூழ் ஆடை* நில மா மகள் மலர் மா மங்கை* 
பிரமன் சிவன் இந்திரன்* வானவர் நாயகர் ஆய*
எங்கள் அடிகள் இமையோர்* தலைவருடைய திருநாமம்*
நங்கள் வினைகள் தவிர உரைமின்* நமோ நாராயணமே|

073. திவ்ய ப்ரபந்தம் - 1547 - இவற்றைப் பாடினால் பாவம் பறந்து விடும்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - பத்தாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
வாவித் தடம் சூழ் மணி முத்தாற்று* நறையூர் நெடுமாலை*
நாவில் பரவி நெஞ்சில் கொண்டு* நம்பி நாமத்தை*
காவித் தடங் கண் மடவார் கேள்வன்* கலியன் ஒலி மாலை*
மேவிச் சொல்ல வல்லார் பாவம்* நில்லா வீயுமே|

074. திவ்ய ப்ரபந்தம் - 1548 - நம்பி! பிறவா வரம் அருள்வாய்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - முதலாம் திருமொழி - முதலாம் பாசுரம்
கறவா மட நாகு* தன் கன்று உள்ளினால் போல்*
மறவாது அடியேன்* உன்னையே அழைக்கின்றேன்*
நறவு ஆர் பொழில் சூழ்* நறையூர் நின்ற நம்பி*
பிறவாமை எனைப் பணி* எந்தை பிரானே|

075. திவ்ய ப்ரபந்தம் - 1549 - நம்பி! நான் உன்னையே அழைக்கின்றேன்
பெரிய திருமொழி - ழாம் பத்து - முதலாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
வற்றா முதுநீரொடு* மால் வரை ஏழும்*
துற்று ஆக முன் துற்றிய* தொல் புகழோனே*
அற்றேன் அடியேன்* உன்னையே அழைக்கின்றேன்*
பெற்றேன் அருள் தந்திடு* என் எந்தை பிரானே|

076. திவ்ய ப்ரபந்தம் - 1550 - நம்பி! நான் உன்னையே உகந்தேன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - முதலாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
தாரேன் பிறர்க்கு* உன் அருள் என்னிடை வைத்தாய்*
ஆரேன் அதுவே* பருகிக் களிக்கின்றேன்*
கார் ஏய் கடலே மலையே* திருக்கோட்டி ஊரே* 
உகந்தாயை* உகந்து அடியேனே|

077. திவ்ய ப்ரபந்தம் - 1551 - நம்பி! நான் உன்னை எப்படி மறப்பேன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - முதலாம் திருமொழி - நான்காம் பாசுரம்
புள் வாய் பிளந்த* புனிதா என்று அழைக்க*
உள்ளே நின்று* என் உள்ளம் குளிரும் ஒருவா!*
கள்வா!* கடல் மல்லைக் கிடந்த கரும்பே*
வள்ளால் உன்னை* எங்ஙனம் நான் மறக்கேனே?

078. திவ்ய ப்ரபந்தம் - 1552 - நம்பி! உன்னைத் தொழும் விதத்தைச் சொல்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - முதலாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
வில் ஏர்* நுதல் நெடுங் கண்ணியும் நீயும்*
கல் ஆர் கடுங் கானம்* திரிந்த களிறே*
நல்லாய் நர நாரணனே!* எங்கள் நம்பி*
சொல்லாய் உன்னை* யான் வணங்கித் தொழும் ஆறே|

079. திவ்ய ப்ரபந்தம் - 1553 - நம்பி! உன்னைக் கண்டு நான் உய்ந்தேன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - முதலாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
பனி ஏய் பரங் குன்றின்* பவளத் திரளே*
முனியே* திருமூழிக்களத்து விளக்கே*
இனியாய் தொண்டரோம்* பருகும் இன் அமுது ஆய கனியே* 
உன்னைக் கண்டு கொண்டு* உய்ந்தொழிந்தேனே|

080. திவ்ய ப்ரபந்தம் - 1554 - நம்பி! தொண்டர்கட்கு நீதான் கதி
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - முதலாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
கதியேல் இல்லை* நின் அருள் அல்லது எனக்கு*
நிதியே!* திருநீர்மலை நித்திலத் தொத்தே*
பதியே பரவித் தொழும்* தொண்டர் தமக்குக் கதியே* 
உன்னைக் கண்டுகொண்டு* உய்ந்தொழிந்தேனே|

081. திவ்ய ப்ரபந்தம் - 1555 - நம்பி! நான் எப்படி விடுவேன்?
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - முதலாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
அத்தா அரியே என்று* உன்னை அழைக்க*
பித்தா என்று பேசுகின்றார்* பிறர் என்னை*
முத்தே மணி மாணிக்கமே* முளைக்கின்ற வித்தே* 
உன்னை எங்ஙனம் நான் விடுகேனே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்