About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 12 October 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 59

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 29

ஸுபு⁴ஜோ து³ர்த⁴ரோ வாக்³மீ 
மஹேந்த்³ரோ வஸுதோ³ வஸு:|
நைகரூபோ ப்³ருஹத்³ ரூப: 
ஸி²பிவிஷ்ட: ப்ரகாஸ²ந:||

  • 266. ஸுபு⁴ஜோ - அழகிய தோள்களையுடையவன்.
  • 267. து³ர்த⁴ரோ - தடுக்க முடியாத வல்லமையுடையவன்.
  • 268. வாக்³மீ - பாராட்டும் படியான வாக்குடையவன்.
  • 269. மஹேந்த்³ரோ - சிறந்ததும் அழிவற்றதுமாகிய செல்வம் உடையவன்.
  • 270. வஸுதோ³ - தனமாகவே உள்ளவன்.
  • 271. வஸுஹு - வசு என்றால் செல்வம் என்றும் சூரியன் என்றும் பொருள். சூரியனாக அவர் உலகை வளர்த்து வளர்க்கிறார்.
  • 272. நைகரூபோ - பல உருவங்களை உடையவன்.
  • 273. ப்³ருஹத்³ ரூபஸ்² - பெரிய உருவத்தை உடையவன்.
  • 274. ஸி²பிவிஷ்டஃ - ஒளிக்கிரணங்களிலும் வியாபித்துள்ளவன்.
  • 275. ப்ரகாஸ²நஹ - விளங்கச் செய்பவன்.

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.44

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் - 1.44
 
உத்ஸந்ந குல த⁴ர்மாணாம் 
மநுஷ்யாணாம் ஜநார்த³ந|
நரகே நியதம் வாஸ:
ப⁴வதி த்யநு ஸு²ஸ்²ரும|| 

  • உத்ஸந்ந - கெடுக்கப்பட்ட 
  • குல த⁴ர்மாணாம் - குல தர்மத்தை உடையவரின் 
  • மநுஷ்யாணாம் - அத்தகு மனிதர் 
  • ஜநார்த³ந - கிருஷ்ணரே 
  • நரகே - நரகத்தில் 
  • அநியதம் - அளவற்ற காலம் 
  • வாஸஹ - வாசம் 
  • ப⁴வதி - ஏற்படுகிறது
  • இதி - இவ்வாறாக 
  • அநு ஸு²ஸ்²ரும - சீடப் பரம்பரை வாயிலாகக் கேட்டுள்ளேன்

ஜனார்த்தனா! குல தர்மங்களை இழந்தவர்கள் நரகத்தில் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று சீடப் பரம்பரை வாயிலாகக் கேள்விபட்டு இருக்கிறேன்.

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.2.28

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா: 
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம் 
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்|| 
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||

ஸ்லோகம் - 1.2.28

வாஸுதே³வ பரா வேதா³ 
வாஸுதே³வ பரா மகா²:|
வாஸுதே³வ பரா யோகா³ 
வாஸுதே³வ பரா க்ரியா:||

  • வேதா³ - மறைகள் யாவும்
  • வாஸுதே³வ பரா - வாஸுதேவனையே லட்சியமாகக் கொண்டிருக்கின்றன
  • மகா²ஹ - யாகங்கள் யாவும்
  • வாஸுதே³வ பரா - வாஸுதேவனையே பலமாகக் கொண்டவை
  • யோகா³ - யோக சாஸ்திரங்களும்
  • வாஸுதே³வ பரா - வாஸுதேவனையே குறிக்கின்றன
  • க்ரியாஹ - கர்மாக்கள் யாவும்
  • வாஸுதே³வ பரா - வாஸுதேவனையே பிரயோஜனமாக உடையவை

மறைகள் யாவும் வாசுதேவனான பகவானைப் பற்றியவைகள். யாகங்களும் பகவானையே சார்ந்தவைகள். யோக சாஸ்திரங்களும் அப்படிய, கர்மங்களும் வாசுதேவனை அடைவதையே பயனாகக் கொண்டவை.

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - த்யான ஸ்லோகம் 7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்⁴யான மங்க³ல ஸ²லோகா꞉ 7
ஶ்ரீ வால்மீகி நமஸ்க்ரியா:

ய: கர்ணாஞ்சலி ஸம்புடை: அஹரஹ: 
ஸம்யக் பிப³த்யா த³ராத்³
வால்மீகே: வத³நாரவிந்த³ க³லிதம் 
ராமாயணாக்²யம் மது⁴|
ஜந்ம வ்யாதி⁴ ஜரா விபத்தி மரணை: 
அத்யந்த: ஸோபத்³ரவம்
ஸம்ஸாரம் ஸ விஹாய க³ச்ச²தி 
புமாந் விஷ்ணோ: பத³ம் ஸா²ஸ்²வதம்||

  • ய: - எவனொருவன்
  • அஹரஹ: - தினம் தினம்
  • கர்ணாஞ்சலி ஸம்புடைர் - செவிகள் என்கிற குவித்த கரங்களாகிய பாத்திரங்களால்
  • வால்மீகேர் - வால்மீகியினுடைய
  • வத³நாரவிந்த³ க³லிதம் - வாக்கிலிருந்து (கிளியின் வாயிலிருந்து விழுவதைப் போல்)
  • ராமாயணாக்²யம் மது⁴ - ராமாயணம் என்னும் தேனை
  • ஸம்யக் - நன்றாக
  • ஆத³ராத்³ - ஆவலுடன்
  • பிப³தி - பருகுகிறானோ
  • ஸ: புமாந் - அந்த மனிதன்
  • ஜந்ம வ்யாதி⁴ ஜரா விபத்தி மரணைர் - பிறப்பு , நோய், முதுமை , விபத்துக்கள் , மரணம் இவைகளால்
  • அத்யந்தஸ் ஸோபத்³ரவம் - மிகவும் தொல்லை கொடுக்கும்
  • ஸம்ஸாரம் - சம்சாரத்தை
  • விஹாய - நீத்து
  • ஸா²ஸ்²வதம் - நிரந்தரமான
  • விஷ்ணோஃ பத³ம் - விஷ்ணுவின் பதத்திற்கு
  • க³ச்ச²தி - செல்கிறான்

எவனொருவன் தினம் தினம் செவிகள் என்கிற குவித்த கரங்களாகிய பாத்திரங்களால் வால்மீகியினுடைய வாக்கிலிருந்து (கிளியின் வாயிலிருந்து விழுவதைப் போல்) ராமாயணம் என்னும் தேனை நன்றாக ஆவலுடன் பருகுகிறானோ அந்த மனிதன் பிறப்பு , நோய், முதுமை , விபத்துக்கள் , மரணம் இவைகளால் மிகவும் தொல்லை கொடுக்கும் ஸம்சாரத்தை
நீத்து, நிரந்தரமான விஷ்ணுவின் பதத்திற்கு செல்கிறான்

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திவ்ய ப்ரபந்தம் - 43 - பெரியாழ்வார் திருமொழி - 1.2.21

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 43 – திருப்பாதாதி கேசம் அடியும் முடியும்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - இருபத்தி ஒன்றாம் பாசுரம்

தரவு கொச்சகக் கலிப்பா 

சுருப்பார் குழலி* 
யசோதை முன் சொன்ன* 
திருப்பாத கேசத்தைத்* 
தென் புதுவைப் பட்டன்*
விருப்பாலுரைத்த* 
இருபதோடொன்றும் உரைப்பார் போய்* 
வைகுந்தத்து ஒன்றுவர் தாமே(2) 

  • சுருப்பார் - வண்டுகள் மொய்க்கும் மலர்களைச் சூடிய
  • குழலி - கூந்தலை உடையளான
  • அசோதை - யசோதைப் பிராட்டியால் 
  • முன் - க்ருஷ்ணாவதார ஸமயத்திலே
  • சொன்ன - சொல்லப்பட்ட
  • திருப்பாத கேசத்தை - திருவடி முதல் திருமுடி வரையில் உள்ள அழகினைக் காட்டிய வர்ணனைப் பாசுரங்களை
  • தென் புதுவை பட்டன் - அழகிய ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு நிர்வாஹகரான பெரியாழ்வார்
  • விருப்பால் - மிக்க விருப்பத்தோடு   
  • உரைத்த - அருளிச் செய்த
  • இருபதோடு ஒன்றும் - இந்த இருபத்தோரு பாட்டுக்களையும்
  • உரைப்பார் தாம் - கற்பவர்கள்
  • போய் - இம்மண்டலத்தைக் கடந்து போய்
  • வைகுந்தத்து - ஸ்ரீ வைகுண்டத்திலே 
  • ஒன்றுவர் - பொருந்தப் பெறுவார்கள்

வண்டுகள் அமர்ந்து தேனுண்டு ஆர்ப்பரிக்கும் மலர்களைச் சூடிய கூந்தலை டைய யசோதை அன்னை, குழந்தை கண்ணனின் திருவடி முதல் திருமுடி வரை அன்று சொல்லி மகிழ்ந்ததை, திருவில்லிப்புத்தூர் வாழும் கவிஞனான, விட்டுசித்தன், குழந்தை கண்ணபெருமான் மேல் கொண்ட அதீத அன்பினால் அவற்றை இந்த இருபத்திஒரு பாடல்களிலும் தந்துள்ளவற்றை, முழு விருப்பத்துடன் மனதாற பாடுபவர்கள், நிச்சயம் இவ்வுலகை விட்டுப் போய், இறைவனின் திருவடி நிலையான வைகுந்த நிலையை அடைந்து என்றும் வாழ்வாங்கு வாழ்வர்.

அடிவரவு: சீத முத்தும் பணை உழ பிறங்கிய மத்தம் இருங்கை வந்து அதிரும் பெருமா நாள் மை* வண்டமர் எந்தொண்டை நோக்கி விண் பருவம் மண் முற்றில் அழகிய கருப்பார் - மாணிக்கம்


||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 013 - திருவிண்ணகரம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

013. திருவிண்ணகரம் 
மார்க்கண்டேய க்ஷேத்ரம் – கும்பகோணம்
பதிமூன்றாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ ஒப்பிலியப்பன் பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ பூமிதேவி தாயார் ஸமேத ஸ்ரீ ஒப்பிலியப்பன் பெருமாள் 
திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்: ஒப்பிலியப்பன், உப்பிலியப்பன்
  • பெருமாள் உற்சவர்: திருவிண்ணகரப்பன், பொன்னப்பன்
  • தாயார் மூலவர்: பூமி தேவி
  • திருமுக மண்டலம் திசை: கிழக்கு 
  • திருக்கோலம்: நின்ற 
  • புஷ்கரிணி/தீர்த்தம்: அஹோராத்ர
  • விமானம்: விஷ்ணு, சுத்தானந்த
  • ப்ரத்யக்ஷம்: மார்கண்டேயர், கருடன், காவேரி, தர்ம தேவதை
  • ஆகமம்: வைகாநஸம்
  • ஸம்ப்ரதாயம்: வட கலை
  • மங்களாஸாஸநம்: 3 ஆழ்வார்கள்
  • பாசுரங்கள்: 47

--------------------

ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

திருமால், மார்க்கண்டேயரிடம் ஒரு பங்குனி மாத திருவோண நக்ஷத்ரம் அன்று பெண் கேட்டு வந்தார். திருமணம் ஐப்பசி மாத திருவோணத்தன்று நடந்தது. இந்த நிகழ்வின் அடிப்படையில் இத்தலத்தில் ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தில், திருமால் சன்னதியில் சாம்பிராணி தூபம் காட்டப்பட்டு, அகண்ட தீபமும், வால் தீபமும் ஏற்றப் படுகிறது. இந்த விளக்கில் மகாலட்சுமி எழுந்தருளி இருப்பதாக ஐதீகம். இந்த தீப தரிசனம் பார்த்தால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. ஆவணி திருவோணத்தன்று காலையில் பெருமாள் கருட வாகனத்தில் "உதய கருட சேவை' அருள்கிறார். பின், "தெட்சிண கங்கை' என்னும் நாட்டாறு தீர்த்தத்தில் நீராடுகிறார். அதன் பின்பு சிறப்பு பூஜை நடக்கிறது. இங்கு ஸ்வாமிக்கு காட்டிய தீபத்தின் முன்னால், அருள் வாக்கு சொல்லும் வழக்கமும் இருக்கிறது.

இத்தலத்தில் ஸ்வாமி பாதம் நோக்கி காட்டிய வலது கையில் கீதை உபதேசமான, "மாம் ஏகம் சரணம் விரஜ' என்று எழுதப்பட்டுள்ளது. இதற்கு "என்னை சரணடைபவர்களை காப்பேன்' என்று பொருள். நம்மாழ்வார் இவரை "யாருக்கும் ஒப்பில்லாமல் உயர்ந்திருப்பவர்' என்ற பொருளில் மங்களா ஸாஸநம் செய்துள்ளார். அவருக்கு திருவிண்ணகரப்பன் (மூலவர்), பொன்னப்பன் (உற்சவர்), மணியப்பன், என்னப்பன் (பிரகார சன்னதி), முத்தப்பன் என ஐந்து கோலங்களில் திருமால் காட்சி தந்தருளினார். இவர்களில் முத்தப்பன் சன்னதி தற்போது இல்லை. மணியப்பன் சன்னதியில் ஸ்வாமியுடன் சங்கு, சக்கரம் அருகிலேயே இருப்பது விசேஷமான தரிசனம். இக்கோயிலில் நைவேத்யங்கள் உப்பில்லாமலேயே தயாரிக்கப் படுகிறது. உப்புள்ள பண்டங்களை கோயிலுக்குள் எடுத்துச் செல்வது பாவத்தை தரும் என்றும் நம்பப்படுகிறது. மார்க்கண்டேயர் வழிபட்ட தலம் என்பதால், இங்கு ஆயுள் விருத்தி, மிருத்யுஞ்ச ஹோமம் நடக்கிறது. இத்தலத்திலுள்ள அஹோத்ர புஷ்கரணி மிகவும் விசேஷமானது. இதற்கு "பகலிராப் பொய்கை' என்றும் பெயருண்டு. இந்த குளத்தில் இரவு, பகல் எந்த நேரமும் நீராடலாம் என்பது சிறப்பம்சம்.

பொதுவாக பூமாதேவி பெருமாளுக்கு இடது புறத்தில் இருப்பாள். ஆனால், அவர் அவளை இங்கு மணம் முடித்த தலம் என்பதால், ஸ்வாமிக்கு வலது புறம் இருக்கிறாள். பூமாதேவியை, திருமாலுக்கு, மார்க்கண்டேயர் மணம் முடித்து தந்த போது ஒரு போதும் தன் மகளை விட்டு பிரியக் கூடாது என்று நிபந்தனை விதித்தார். எனவே, பெருமாள் இங்கு தாயாருடன் இணைந்தே பவனி வருவார்.

மகாவிஷ்ணுவின் மனைவியும், லட்சுமியின் ஒரு அம்சமுமான பூமாதேவி, விஷ்ணுவிடம், "எப்போதும் மகாலட்சுமியை மட்டும் மார்பில் தாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கும் அந்த பாக்கியத்தை தாருங்கள்,'' என்று கேட்டாள். மகாவிஷ்ணு அவளிடம், "நீ பூலோகத்தில் ஒரு ரிஷியின் மகளாக, திருத்துழாய் (துளசி) என்ற பெயரில் பிறந்து இந்த பேற்றைப் பெறுவாய்,'' என்றார். இச்சமயத்தில், என்றும் பதினாறு வயதுடைய மார்க்கண்டேய மகரிஷி, மகாலட்சுமியே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டி தவமிருந்தார். லட்சுமியின் அம்சமான பூமாதேவி, குழந்தை வடிவில் ஒரு துளசிச் செடிக்கு கீழே கிடப்பதைக் கண்டார். தன் ஞான திருஷ்டியால் அவள் லட்சுமியின் அம்சம் என்பதை அறிந்து, துளசி என பெயர் சூட்டி வளர்த்து வந்தார். திருமண வயது வந்த போது, திருமால், ஒரு முதியவர் வேடத்தில் சென்று அவரிடம் பெண் கேட்டார். மார்க்கண்டேயர் சம்மதிக்கவில்லை. மேலும், "சிறியவளான என் மகளுக்கு சாப்பாட்டில் சரியாக உப்பு போட்டுக்கூட சமைக்கத் தெரியாது. அத்தகையவளை நீங்கள் மணம் முடிப்பது சரி வராது,'' என்று ஒதுங்கிக் கொண்டார். திருமாலோ விடுவதாக இல்லை. உப்பில்லாத சமையலாக இருந்தாலும் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று வற்புறுத்தினார். தன் தவ வலிமையால் வந்திருப்பது திருமால் என்பதை உணர்ந்த மார்க்கண்டேயர், தன் மகளை மணம் முடித்து கொடுத்தார். உப்பில்லாத சாப்பாடு சாப்பிட ஒப்புக் கொண்டதால் உப்பிலியப்பன் என்றும், ஒப்பில்லாத பெருமை உடையவர் என்பதால் ஒப்பிலியப்பன் என்றும் திருநாமம் பெற்று அத்தலத்தில் மனைவியுடன் எழுந்தருளினார். துளசிதேவி அவர் மார்பில் துளசி மாலையாக மாறி நிரந்தரமாக தங்கினாள். இதனால் தான், எல்லாப் பெருமாள் கோயில்களிலும் துளசி மாலை பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது.

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

லீலை கண்ணன் கதைகள் - 50

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்ரிவக்ராவுடன் ஒரு சந்திப்பு|

கிருஷ்ணனும் பலராமனும் நடப்பதை தொடர்ந்தனர், கம்சனின் மாளிகை வழியாக சென்றனர். ஒரு பெண் இவர்கள் எதிரில் ஒரு பாத்திரம் முழுவதும் அறைத்த சந்தனத்தை கொண்டுவந்தாள். அதன் வாசனை அந்த இடம் முழுவதும் பரவியது. அந்த பெண் இளமையாகவும் அழகாகவும் இருந்தாள், ஆனால் அவன் முதுகு கூன் விழுந்திருந்தது. கிருஷ்ணன் அவளை பார்த்து, "அழகிய பெண்ணே, நீ யார்? இந்த சந்தனத்தை யாருக்கு கொண்டு செல்கிறாய்? கொஞ்சம் எங்களுக்கும் தருவாயா?" என்று கேட்டார்.


அவள் கம்சன் மாளிகையில் வேலை செய்யும் பெண், கிருஷ்ணனின் வார்த்தைகளில் மயங்கினாள். கிருஷ்ணனிடம் "ஐயா, எனது பெயர் த்ரிவக்ரா. நான் வாசனை திரவியம் செய்பவள். எனது இந்த திறமைக்காக கம்சன் என்னை ஆதரித்து உள்ளார், நான் செய்த இந்த வாசனை திரவியம் அரசருக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இந்த களிம்பை உங்களுக்கு நான் தருகிறேன், உங்களை தவிர வேறு யாருக்கும் இந்த களிம்பை பெற தகுதி இல்லை." சந்தன களிம்பை கிருஷ்ணனுக்கும் பலராமனுக்கும் தந்து மகிழ்ந்தாள்.


அவர்கள் இருவரும் அதை மார்பிலும், கைகளிலும், கழுத்திலும் பூசிக் கொண்டனர். கிருஷ்ணன் அவரது கருணையை அவரை போற்றுபவர்களுக்கு வாரி வழங்குவார். அவளது கூன் விழுந்த முதுகை மூன்று இடத்தில் வளைத்து சரிசெய்தார். அவளின் கால்கள் மீது இவர் கால் வைத்து, அவள் கன்னத்தை இரண்டு விரல்களால் பிடித்து கொண்டு, அவள் முகத்தை விரல்களால் இழுத்தார். அவள் உடல் தேறியது. அவள் கூன் சரி ஆகி அழகான பெண்ணாக மாறினாள். கிருஷ்ணருக்கு நன்றிகளை கூறி அவர்களிடமிருந்து விடைப் பெற்றாள்.

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - ஐம்பத்தி ஆறாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

056 இங்கு பால் பொங்கும் என்றேனோ வடுக நம்பியைப் போலே|

கர்நாடகத்தின் மைசூரில் உள்ள சாலகிராமம் என்னும் ஊரில் சித்திரை மாதம், அஸ்வினி நட்சத்திரத்தில் ஆந்திரபூரணர் என்னும் இயற்பெயரோடு பிறந்த வடுகநம்பி, வைணவ ஆச்சாரியனான இராமாநுசரின் முதன்மை மாணாக்கரில் ஒருவர். தன் குருவாகிய இராமானுசர் மீது கொண்ட அளவில்லா குருபக்திக்காக இவர் பெரிதும் புகழப்பெறுகிறார்.  


இராமானுசரோடு திருவரங்கனை சேவிக்க செல்லும்போதெல்லாம், இராமானுசர் அரங்கனின் வடிவழகில் தன்னைப் பூரணமாக ஈடுபடுத்திக் கொள்ள, நம்பியோ தன் ஆச்சாரியனாகிய இராமானுசரின் வடிவழகில் லயித்துக் கொண்டிருப்பார். இதனை ஒருநாள் கண்ணுற்ற இராமானுசர் "நீண்ட அப்பெரிய கண்கள்..." எனும் ஆழ்வாரின் பாடலைப் பாடி அரங்கனின் கண்ணழகை காணும்படிக் கூற, நம்பியோ திருப்பாணாழ்வாரின் பாடலாகிய "என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினை காணாவே" என பதிலளிக்க, இவரின் குருபக்தியை பெருதும் மெச்சினார் உடையவர்.

ஒரு நாள், இராமானுசருக்காக பால் சூடுபடுத்திக் கொண்டிருக்கையில் திருவரங்கத்து அரங்கநாதன் கோயில் உற்சவராகிய நம்பெருமாள் உலா வந்துக் கொண்டிருந்தார். அவரை சேவிக்க (தொழும் பொருட்டு) இராமானுசர் தனது மாணாக்கர் ஒருவரை அனுப்பி வடுக நம்பியை அழைத்து வரக் கூறினார். “வடுகா, விரைந்து வா... நம்பெருமாள் உலா வந்து கொண்டு இருக்கிறார். சேவித்துக் கொள்." என அழைத்தனர். அதற்கு வடுக நம்பியோ, “பெருமாளைக் காண நான் வந்து விட்டால், எம்பெருமாளுக்காக (இராமானுசர்) தயாராகிக் கொண்டிருக்கும் பால் பொங்கி விடும். அதன் சுவையும் போய்விடும். ஆச்சார்யாருக்கான எனது சேவையை முதலில் சரியாக புரிந்து விட்டு வருகிறேன்.”, என்றார் பணிவுடன்.

தாமதமாக வந்த நம்பியை இராமானுசர் கடிந்துக் கொள்ள அதற்கு "உம்பெருமாளை (நம்பெருமாள் - ரங்கநாதன்) சேவிக்க வந்துவிட்டால், எம்பெருமாளுக்கான (இராமானுசர்) சேவையை (பணிவிடை) யார் செய்வது" என்று பதிலளித்தார். அவரைப் பொறுத்தவரை ராமாநுஜரே நம்பெருமாள்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "அந்த வடுகநம்பியைப் போல பெருமாளையும் மறந்து ஆச்சார்ய பக்தி கொண்டுள்ளேனா? ஆசார்ய பக்தியில் இருந்தேனா?  இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸர்வ பூத மனோஹரம்

ஸ்கந்தம் 01

புத்ரனான சுகரைத் துரத்திக் கொண்டு வியாஸர் சென்ற போதும், அவரால் தனயனைப் பிடிக்க முடியவில்லை. யக்ஞப் ப்ரசாதமாக ப்ரும்ம ஸ்வரூபமாய் அருமையான புத்ரன் கிடைத்தும் அவன் வீடு தங்காமல் புறப்பட்டதை நினைத்து, வருத்தத்துடன் ஆசிரமம் திரும்பினார் வியாஸ பகவான்.

பாட சாலைகளில் அஷ்டமி, அமாவாசை போன்ற பாடம் இல்லாத நாட்களில், ஹோமத்திற்கும் அனுஷ்டானங்களுக்கும் வேண்டிய தர்பை, ஸமித் (அரச மரக் குச்சி) போன்றவற்றை சேகரிக்க மாணவர்கள் காட்டுக்குள் செல்வார்கள்.


ஒரு சமயம் அவ்வாறு செல்லும் மாணவர்கள் குருவான வியாஸரிடம் வந்து, "ஸ்வாமி, காட்டினுள் துஷ்ட மிருகங்கள் அதிகமாக ஸஞ்சரிக்கின்றன. எங்களுக்கு பயமாக இருக்கிறது. அவற்றிடமிருந்து காத்துக் கொள்ள ஏதாவது உபாயம் சொல்லுங்கள்", எனக் கேட்டனர். வியாஸர், ஹூம் பட் என்று கேட்டவுடன் மிருகங்கள் சிதறி ஓடும்படியாக ஏதாவது மந்திர உபதேசம் செய்யக்கூடாதோ? ஆனால், அவரோ சற்று யோசித்து விட்டு, 

"பர்ஹா பீடம் நட வர வபு: கர்ணயோ: கர்ணி காரம்
பிப்ரத் வாஸ: கனக கபிசம் வைஜயந் தீஞ்ச மாலாம் |
ரந்த்ரான் வேணோர் அதர சுதயா பூரயன் கோப வ்ருந்தை:
வ்ருந்தாரண்யம் ஸ்வபத ரமணம் ப்ராவிசத் கீத கீர்த்தி:||

என்ற ஸ்லோகத்தை உபதேசம் செய்து இதை ஆவ்ருத்தி செய்து கொண்டே செல்லுங்கள். எந்த ஜீவராசியும் உங்களை ஒன்றும் செய்யாது" என்று சொன்னார்.

அப்படியென்ன ஸ்லோகம் அது?

சகல ஆபத்து களிலிருந்தும் காக்கும் எவ்வளவோ மந்திரங்கள் இருக்கின்றனவே. பலவற்றை செய்ததே வியாசர் தானே!

ஸ்ரீ மத் பாகவதத்திலேயே நாராயண கவசம் என்ற அற்புதமான ஸ்லோகத் தொகுப்பு எதிரிகளிடமிருந்து பாதுகாக்குமே.

ஸ்ரீ மத் பாகவத்திலேயே சுதர்சன ஸ்துதி இருக்கிறது. அதையெல்லாம் விட்டு விட்டு கண்ணன் வேணு கானம் செய்யக் கிளம்பிய கோலத்தை வர்ணிக்கும் ஸ்லோகத்தை இப்போது காக்கும் கவசமாக உபதேசம் செய்திருக்கிறாரே என்று தோன்றலாம்.

இந்த ஸ்லோகம் ஸ்ரீ மத் பாகவதத்தின் தசம ஸ்கந்தத்தில் 21ம் அத்யாயத்தில் சொல்லப்படுகிறது. ஐந்து முக்கியமான கீதங்களில் கண்ணன் குழலூதும் அழகை வர்ணிக்கும் வேணுகீதத்தின் துவக்கத்தில் வருகிறது.

அழகான பெரிய மயில் பீலியை தலையில் வைத்துக் கொண்டு, அன்னை போட்டு விட்ட தங்க ஆபரணங்களை எல்லாம் மரப் பொந்தில் கழற்றி வைத்து விட்டு, காதுகளில் கர்ணி காரப் புஷ்பத்தையும், கழுத்தில் வன மாலையையும் அணிந்து கொண்டு அத்தனை கோபிகளையும் பொறாமை கொள்ள வைக்கும் குழலை பவள வாயில் வைத்துக் கொண்டு, அத்தனை ஜட மற்றும் ஜீவராசிகளின் ஹ்ருதயங்களையும் கொள்ளை கொள்ளும் படி மிக மிக ஒயிலான நடையுடன் ப்ருந்தாவனத்திற்குள் கண்ணன் ப்ரவேசிக்கும் அழகைச் சொல்லும் ஸ்லோகம்.

குரு உபதேசம் செய்த ஸ்லோகத்தை உரு ஏற்றிக் கொண்டு அதையே ஆவ்ருத்தி செய்து கொண்டு சீடர்கள் காட்டில் ஸமித் முதலியவைகளைச் சேகரித்துக் கொண்டிருந்தார்கள்.

என்ன ஆச்சர்யம்!

மாணாக்கர்கள் சொல்லும் ஸ்லோகத்தைக் கேட்டு சிங்கம், புலி, பாம்பு போன்றவை எல்லாம் கூட ஸ்வபாவத்தை மறந்து அன்போடு வாலைக் குழைத்துக் கொண்டும் நக்கிக் கொடுத்துக் கொண்டும் சென்றன.

அன்பே உருவான நமது ஸ்வாமியைப் பற்றிய வர்ணனையே போதும். உலகில் அன்பு பெருகும்.

  • பர்ஹாபீடம் நடவர வபு:
  • பர்ஹாபீடம் நடவர வபு:

அவர்கள் சொல்லிக் கொண்டிருந்த ஸ்லோகம் காற்றில் சுற்றிச் சுற்றி நமது ப்ரும்மத்தின் காதுகளுள் நுழைந்தது. பாமரர்களையும் மிருகங்களையும் மட்டுமல்ல, ப்ரும்ம ஞானிகளையும் அசைத்துப் போடும் நமது கண்ணனின் உருவமும், பெயரும்.

அவதூதரான ஸதாசிவ ப்ரும்மேந்திராளும்

  • மதசிகி பிஞ்சா அலங்க்ருத சிகுரே 
  • மானஸ ஸஞ்சரரே  ப்ரும்மனி

தலையில் மயில் பீலி வைத்துக் கொண்டிருக்கும் ப்ரும்மத்தில் ஈடுபடுவாய் மனமே என்று பாடுகிறார்.

தேனிருக்கும் மலரை வண்டு தேடி வருவது போல, நன்கு பழுத்த பழத்தைத் தேடி கிளி வருவது போல, ஸ்லோகத்தைக் கேட்டதும் சுக முனியின் கால்கள் தாமாகவே சொல்பவர்களைத் தேடி நடந்தது.

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 58

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 28

வ்ருஷாஹீ வ்ருஷபோ⁴ விஷ்ணுர் 
வ்ருஷ பர்வா வ்ருஷோ த³ர:|
வர்த்த⁴நோ வர்த்த⁴ மாநஸ்² ச 
விவிக்த: ஸ்²ருதி ஸாக³ர:||

  • 257. வ்ருஷாஹீ - அடையும் நாள் நல்ல நாளாக இருப்பவன்.
  • 258. வ்ருஷபோ⁴ - கருணையைப் பொழிபவன்.
  • 259. விஷ்ணுர் - எங்கும் பரந்திருப்பவன்.
  • 260. வ்ருஷ பர்வா - தருமமென்னும் படிகளால் அடையத்தக்கவன்.
  • 261. வ்ருஷோ த³ரஹ - தருமமே உருவான வயிற்றை உடையவன்.
  • 262. வர்த்த⁴நோ - வழிபடுவோரை வளர்ப்பவன்.
  • 263. வர்த்த மாநஸ்² ச - வளர்ச்சி அடைபவன்.
  • 264. விவிக்தஸ்² - உலகில் யாரையும் விடத் தனிச் சிறப்புடையவன்.
  • 265. ஸ்²ருதி ஸாகரஹ - வேதக்கடல், வேத முடிவானவன்.

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.43

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் - 1.43 

தோ³ஷை ரேதை: குலக்⁴ நாநாம் 
வர்ண ஸங்கர காரகை:|
உத்ஸாத்³ யந்தே ஜாதி த⁴ர்மா: 
குல த⁴ர்மாஸ்² ச ஸா²ஸ்²வதா:||

  • தோ³ஷை - இது போன்ற தோஷங்களால் 
  • ஏதைர் - இவையெல்லாம்
  • குலக்⁴ நாநாம் - குலநாசம் செய்பவர்கள் 
  • வர்ண ஸங்கர - வர்ணக் கலப்பு ஏற்படுத்துகின்ற 
  • காரகைஹி  - செய்பவர்களால் (குற்றங்களால்)
  • உத்ஸாத்³ யந்தே - அழிவுக்குக் காரணமாக 
  • ஜாதி த⁴ர்மாஹ - ஜாதி தர்மம் 
  • குல த⁴ர்மாஸ்² - குல தர்மம் 
  • ச - மேலும் 
  • ஸா²ஸ்²வதாஹ - நித்தியமான

குலத்தை அழித்தவர்களின் தீமைகளால் ஜாதிகலப்பு ஏற்படுகிறது. அதன் காரணமாக காலங்காலமாக இருந்து வருகின்ற ஜாதி தர்மங்களும் குல தர்மங்களும் அழிகின்றன.

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.2.27

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா: 
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம் 
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்|| 
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||

ஸ்லோகம் - 1.2.27

ரஜஸ் தம: ப்ரக்ருதய: 
ஸம ஸீ²லா ப⁴ஜந்தி வை|
பித்ரு பூ⁴த ப்ரஜே ஸா²தீ³ந் 
ஸ்²ரியை ஸ்²வர்ய ப்ரஜேப் ஸவ:||

  • ரஜஸ் - ரஜோ குணம்
  • தமஃ - தமோ குணம்
  • ப்ரக்ருதயஹ - இவற்றை உடையவர்களும்
  • ஸம - சமானமான
  • ஸீ²லா - குணமுடையவர்களும்
  • ஸ்²ரியை ஸ்²வர்ய - லக்ஷ்மி, ஐஸ்வர்யம் சந்தானம் இவற்றை
  • ப்ரஜேப் ஸவஹ - விரும்புகின்றவர்களும்
  • பித்ரு - பித்ருக்கள்
  • பூ⁴த - பூதங்கள்
  • ப்ரஜே - யமன்
  • ஸா²தீ³ந்நு வை - முதலியவர்களையே
  • ப⁴ஜந்தி - ஸேவிக்கின்றார்கள்

இயல்பாகவே ரஜோ குணம், தமோ குணம் கொண்டவர்கள் பொருள், ஆளுமை, மக்கட்செல்வம் ஆகியவற்றை விரும்பித் தங்களைப் போன்று ரஜோ குணம், தமோ குணம் மேலிட்ட பித்ருக்கள், பூதங்கள், பிரஜாபதிகள் (பிரும்மன் உட்பட) ஆகியோர்களை வழிபடுகின்றனர்.

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்