About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 10 November 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 73

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 43

ராமோ விராமோ விரதோ 
மார்கோ நேயோ நயோநய:|
வீர: ஸ²க்தி மதாம் ஸ்²ரேஷ்ட்டோ²
த⁴ர்மோ த⁴ர்ம விநுத்தம:||

  • 395. ராமோ - யாவரையும் மகிழச் செய்பவன்.
  • 396. விராமோ - பிறரை ஓயச் செய்பவன்.
  • 397. விரதோ - ஆசையை அறவே நீக்கியவன்.
  • 398. மார்க்கோ³ - தேடப் படுபவன்.
  • 399. நேயோ - கட்டளையிடப் பெறுபவன்.
  • 400. நயோ - நடத்துபவன்.

(நான்காம் நூறு திரு நாமங்கள் நிறைவு)

  • 401. அநயஹ - பகைவரால் அணுக முடியாதவன்.
  • 402. வீரஸ் - வீரத்தால் எதிரிகளை நடுங்கச்செய்பவன்.
  • 403. ஸ²க்தி மதாம் ஸ்²ரேஷ்ட்டோ² - சக்தி படைத்தவருள் சிறந்தவன்.
  • 404. த⁴ர்மோ - தருமமே வடிவானவன்.
  • 405. த⁴ர்ம விநுத்தமஹ - தருமம் அறிந்தவருள் முதல்வன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.10

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.10 

தமு வாச ஹ்ருஷீகேஸ²: 
ப்ரஹ ஸந்நிவ பா⁴ரத|
ஸேநயோ ருப⁴யோர் மத்⁴யே 
விஷீ த³ந்த மித³ம் வச:||

  • தம் - அவனிடம் (அர்ஜுநன்)
  • உவாச - கூறினார் 
  • ஹ்ருஷீகேஸ²ஃ - புலன்களின் அதிபதி, கிருஷ்ணர் 
  • ப்ரஹஸந் - புன்சிரிப்புடன்
  • இவ - இதே போல்
  • பா⁴ரத - பரத குலத்தில் உதித்தவனே
  • ஸேநயோர் - படைகளின்
  • உப⁴யோர் - இரு தரப்பு
  • மத்⁴யே - மத்தியில்
  • விஷீத³ந்தம் - கவலைப்படுபவனிடம் 
  • இத³ம் - பின்வரும் 
  • வசஹ - சொற்களை

பார்த்தா!, இரு தரப்பு சேனைகளுக்கு மத்தியில், கவலைப் படுவனான அவனிடம் புலன்களின் அதிபதியான கிருஷ்ணர் புன்சிரிப்புடன், பின்வரும் சொற்களை இதே போல் கூறினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.8

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.8

த்ரு தீயம் ருஷி ஸர்க³ம் ச 
தே³வர் ஷித்வம் உபேத்ய ஸ:|
தந்த்ரம் ஸாத்வத மாசஷ்ட 
நைஷ் கர்ம்யம் கர்மணாம் யத:||

  • ஸஹ - அந்த பகவான்
  • த்ரு தீயம் ருஷி ஸர்க³ம் ச - மூன்றாவதாக மஹரிஷிகள் இடத்தில் ஆவிர் பாவத்தை அடைய எண்ணி
  • தே³வர் ஷித்வம் உபேத்ய - தேவ ரிஷியான நாரத ஸ்வரூபத்தை அடைந்து
  • யதஹ கர்மணாம் - எதிலிருந்து கர்மாக்களின்
  • நைஷ் கர்ம்யம் - நிஷ்காம்ய தன்மையானது ஏற்படுமோ, அப்படிப்பட்ட 
  • ஸாத்வதம் தந்த்ரம் - பாஞ்சராத்ரம் என்ற ஆகமத்தை
  • ஆசஷ்ட - சொன்னார்

மூன்றாவது அவதாரமாக, தேவரிஷி நாரதராக அவதாரம் செய்து, நாம் செய்யும் கர்மங்களின் பலன் நம்மைக் கட்டுப்படுத்தாத விதமாக, பயனில் பற்றற்ற நிஷ்காம்ய கர்மங்களைச் செய்யும் முறையை விளக்கும் வைஷ்ணவ சாஸ்திரமான 'பாஞ்சராத்ரம்' என்ற ஆகம சாஸ்திரத்தைக் கூறியருளினர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.8

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.8

இக்ஷ்வாகு வம்ஸ² ப்ரப⁴வோ 
ராமோ நாம ஜநை: ஸ்²ருத:।
நியதாத்மா மஹா வீர்யோ 
த்³யுதி மாந் த்⁴ருதி மாந் வஸீ²॥ 

  • ராமோ நாம - ஸ்ரீ ராமர் என்று 
  • ஜநைஸ் -  ஜனங்களால்
  • ஸ்²ருதஹ -  சொல்லப்பட்டவர்
  • இக்ஷ்வாகு -  இக்ஷ்வாகு
  • வம்ஸ² - வம்சத்தில்
  • ப்ரப⁴வோ -   பிறந்தவர்
  • நியதாத்மா -  உறுதிமிக்கவனும் (மாறாத வடிவம் நிர்விகாரர்)
  • மஹா வீர்யோ - மகா சக்தியை உடையவர்
  • த்³யுதி மாந் - காந்தி உள்ளவர்
  • த்⁴ருதி மாந் -  உறுதி உள்ளவர்
  • வஸீ² -  எவரையும் தன் வசத்தில் அடக்கி ஆளுகிறவர்

தற்கட்டுப்பாட்டைக் கொண்டவனும், பேராற்றல் வாய்ந்தவனும், தன்னொளியுடன் கூடியவனும், உறுதி மிக்கவனும், புலனடக்கம் கொண்டவனும், எவரையும் தன் வசத்தில் அடக்கி ஆளுகிற ஒருவன் இக்ஷ்வாகு குலத்தில் பிறந்திருக்கிறான். இராமன் என்ற பெயரில் அவன் மக்களால் அறியப்படுகிறான். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திவ்ய ப்ரபந்தம் 55 - பெரியாழ்வார் திருமொழி - 1.4.2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 55 - அஞ்சன வண்ணனோடு ஆடு
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - நான்காம் திருமொழி - இரண்டாம் பாசுரம்

என் சிறுக்குட்டன்* 
எனக்கோர் இன்னமுது எம்பிரான்*
தன் சிறுக் கைகளால்* 
காட்டிக் காட்டி அழைக்கின்றான்*
அஞ்சன வண்ணனோடு* 
ஆடலாட உறுதியேல்*
மஞ்சில் மறையாதே* 
மா மதீ! மகிழ்ந்து ஓடி வா!

  • என் சிறுக்குட்டன் - என் அருமை மகனான கண்ணன்  
  • எனக்கு ஓர் -  தாயாகிய எனக்குக் கிடைக்கப் பெற்ற ஓர்
  • இன் அமுது - இனிய தெவிட்டாத மதுரமான 
  • எம்பிரான் - அம்ருதம் போன்றவன்
  • தன் சிறு கைகளால் - தன்னுடைய சிறிய கைகளால் 
  • காட்டிக் காட்டி - எப்பொழுதும் உன்னையே காட்டி காட்டி 
  • அழைக்கின்றான் - கூப்பிடுகிறான் 
  • அஞ்சனம் வண்ணனோடு - மை போன்ற கருமை வண்ணம் கொண்ட வடிவை உடைய இந்த கண்ணபிரானோடு 
  • ஆடல் ஆட - விளையாட 
  • உறுதியேல் - நினைத்தாய் என்றால் 
  • மஞ்சில் - மேகத்திலே 
  • மறையாது - நுழைந்து மறையாமல் 
  • மகிழ்ந்து ஓடிவா - ஆவலுடன் மகிழ்ந்து ஓடி வா

என்னுடைய இந்த சிறிய பாலகன், எனக்குக் கிடைக்கப் பெற்ற ஓர் இனிய தெவிட்டாத மதுரமாயிருப்பதொரு அம்ருதம் போன்றவன்; என்னுடைய அவன்; அமுதம் போல் இனிமையானவனும், என் தலைவன், என் அருமைப் புதல்வன் கண்ணன் தன் சிறு கைகளால் உன்னை காட்டி காட்டி அழைக்கிறான். அழகிய சந்திரனே! மை போன்ற கருமை வண்ணம் கொண்ட திருமேனி உடைய கண்ணனோடு விளையாடுவதற்கு நீ நினைத்தேயானால், மேகத்தில் நுழைந்து மறையாமல், ஆவலுடன் ஓடி வா!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 015 - திருச்சேறை 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:||  

015. திருச்சேறை 
பஞ்ச ஸார க்ஷேத்ரம் - கும்பகோணம்
பதினைந்தாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ ஸாரநாதப் பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ ஸாரநாயகி தாயார் ஸமேத ஸ்ரீ ஸாரநாதன் பெருமாள் 
திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்: ஸாரநாதன்
  • தாயார் மூலவர்: ஸாரநாயகி
  • தாயார் உற்சவர்: பஞ்சலெட்சுமி
  • திருமுக மண்டலம் திசை: கிழக்கு 
  • திருக்கோலம்: நின்ற 
  • புஷ்கரிணி/தீர்த்தம்: ஸார
  • விமானம்: ஸார
  • ப்ரத்யக்ஷம்: காவேரி, மார்கண்டேயன்
  • ஆகமம்: பாஞ்சராத்திரம் 
  • ஸம்ப்ரதாயம்: தென் கலை
  • மங்களாஸாஸநம்: 1 ஆழ்வார்
  • பாசுரங்கள்: 13

--------------------

ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

மூல ஸ்தானத்தில் பெருமாளுக்கு வலது பக்கம் மார்க்கண்டேயர் வீற்றிருக்கிறார். மார்க்கண்டேயர் இத்தலத்தில் தான் முக்தி அடைந்தார். உப்பிலியப்பன் கோயிலில் தனது மகள் பூதேவியை சிறு வயதிலேயே பெருமாள் விரும்புகிறார். மார்க்கண்டேயர், "ஸ்வாமி! இவள் சிறு பெண். இவளுக்கு சரியாக உப்பு போட்டு கூட சமைக்க தெரியாது. அப்படி இருக்கும் போது நீங்கள் எவ்வாறு இவளை திருமணம் செய்து கொள்ள முடியும்,'' என்கிறார். அதற்கு பெருமாள், "இவள் உப்பே போடாமல் சமைத்தாலும், அதை நான் திருப்தியாக ஏற்று கொள்வேன்'' என்று கூறி பூதேவியை திருமணம் செய்து கொள்கிறார். அன்றிலிருந்து பெருமாள் உப்பிலியப்பன் என்ற திருநாமத்துடன் உப்பில்லாத நைவேத்தியத்தை ஏற்று கொள்கிறார்.

மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி சன்னதியின் திருப்பணிக்காக அழகிய மணவாள நாயக்கர் மன்னன் ஆணைப்படி இவ்வூர் வழியாக வண்டிகள் சென்றன. வண்டிக்கு ஒரு கல் வீதம் இக்கோயில் திருப்பணிக்கு நரசபூபாலன் என்பவன் மன்னனுக்கு தெரியாமல் இறக்கி வைத்தான். இதைக் கேள்விப்பட்ட மன்னன் விசாரிக்க இங்கு வந்தான். இதனால் பயந்த நரசபூபாலன், இத்தல பெருமாளை வேண்டினான். பெருமாள் மன்னனுக்கு மன்னார்குடி ராஜகோபாலனாக காட்சி கொடுத்தார். மகிழ்ந்த மன்னன் இக்கோயிலுக்கும் சிறப்பாக திருப்பணிகள் செய்தான்.

பிரளய காலத்தில் பிரம்மா இத்தலத்து மண்ணை எடுத்து ஒரு கடம் செய்து அதில் வேதங்களை வைத்து காப்பாற்றியதாக புராணங்கள் கூறுகிறது. ஒரு முறை காவிரித் தாய் பெருமாளிடம், "அனைவரும் கங்கையே உயர்ந்தவள். அங்கு சென்று நீராடினால் பாவங்கள் தொலையும் என்று பெருமை பேசுகிறார்கள். அத்தகைய பெருமை எனக்கும் வேண்டும்,'' என கேட்டு இத்தல சார புஷ்கரணியில் மேற்கு கரை அரச மரத்தடியில் தவம் இருந்தாள். இவளது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் குழந்தை வடிவில் காவிரித் தாயின் மடியில் தவழ்ந்தார்.  "தனக்கு இந்த பெருமை மட்டும் போதாது,'' என காவிரி கூறியவுடன்,  கருட வாகனத்தில் சங்கு சக்கரதாரியாக ஐந்து லட்சுமிகளுடன் காட்சி கொடுத்து, "வேண்டும் வரம் கேள்' என்றார். அதற்கு காவிரி, "தாங்கள் எப்போதும் இதே கோலத்தில் இங்கு காட்சி தர வேண்டும். கங்கையிலும் மேன்மை எனக்கு தந்தருள வேண்டும்,'' என்றாள். பெருமாளும் அப்படியே செய்தார். மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு இடது பக்கம் காவிரித்தாய் இருப்பதை இன்றும் காணலாம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

லீலை கண்ணன் கதைகள் - 64

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:||  

ருக்மிணியின் திருமணப் பேச்சு|

விதர்ப்ப நகரின் அரசரின் பெயர் பீஷ்மகர் என்பது. அவர் சிறந்த கடவுள் பக்தி கொண்டவர். எல்லாருக்கும் நன்மை செய்வதிலே கருத்துடையவர். அவருக்கு ஐந்து பிள்ளைகளும், மிகவும் அழகான ஒரு பெண்ணும் இருந்தார்கள். முதல் பிள்ளையின் பெயர் ருக்மி, மற்ற பிள்ளைகள் - ருக்மரதன், ருக்மபாஷீ, ருக்மகேசன், ருக்மமாலி என்பது. பெண்ணின் பெயர் ருக்மிணி.


நாரதர் போன்ற பல ஞானிகள் பீஷ்மகரின் அரண்மனைக்கு வருவதுண்டு. அரசர் இயற்கையிலே பக்திமான் ஆனதால், அவர்கள் வேதாந்த விஷயங்களைப் பற்றிப் பேசும் பேச்சுக்களை மணிக்கணக்காகக் கேட்பதும் வழக்கம். அவருடைய செல்லப் பெண்ணான ருக்மிணி தன் தகப்பானர் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டு இவற்றையெல்லாம் கேட்பாள்.

நாரதர் பல தடவைகள் கிருஷ்ணரின் அழகு, அவருடைய சிறந்த குணங்கள், அவருடைய தெய்வீகத் தன்மை, பக்தர்களிடம் அவருக்குள்ள அன்பு ஆகியவைப் பற்றிக் கூறியிருக்கிறார். ருக்மிணி தன் தந்தையின் மடியில் உட்கார்ந்து இவற்றை எல்லாம் கேட்டிருக்கிறாள். வருடங்கள் சென்றன, குழந்தையாக இருந்த ருக்மிணி இப்பொழுது அழகிய யுவதியாக மாறி விட்டாள். அவளுடைய திருமணக் காலம் நெருங்கியது. கிருஷ்ணரைத் தான் மணம் புரிய வேண்டும் என்று ருக்மிணி தன் மனதிற்குள் தீர்மானித்து விட்டாள்.

பீஷ்மகரும் கிருஷ்ணர் தாம் தம் மகளுக்கு மிகப் பொருத்தம் என்று நினைத்தார். ஒரு நாள் அவர்தம் மூத்த மகன் ருக்மியை கூப்பிட்டு ருக்மிணியின் திருமணத்தைப் பற்று பேச ஆரம்பித்தார். "ருக்மிணிக்குத் திருமணம் நடத்த வேண்டிய பருவம் வந்து விட்டது. நானும் ஒரு நல்ல வரனைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்" என்றார்.

ருக்மி தன் தகப்பனாரின் வார்த்தைகளைக் கேட்டு சந்தோஷப்பட்டான். "ஆகா, எனக்கு வரனைத் தேடும் கஷ்டம் வேண்டாம் என்று வைத்து விட்டீர்கள். ஆமாம், யார் அந்த அதிர்ஷ்டசாலி??" என்று கேட்டான். வசுதேவரின் மகன் கிருஷ்ணன் தான் என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் ருக்மி சீற்றம் கொண்டு எழுந்து, "அந்த அயோகியனுக்கு என் தங்கையை கொடுக்க மாட்டேன்" என்று சொன்னான்.

கிருஷ்ணரின் விரோதிகளான ஜராசந்தனும் காலயவனனுக்கும் ருக்மி சிறந்த நண்பன். ஆகவே அவன் தன் தகப்பனாரைப் பார்த்து, "அப்பா, நாம் க்ஷத்திரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள். கிருஷ்ணன் இடையன். அவன் அக்கிரமமாகக் கம்சனைக் கொன்றான், என் நண்பர்கள் எல்லோரையும் துன்புறுத்தினான் அவன். பதவியிலும் பொருளிலும் இன்னும் மற்ற எல்லாவற்றிலும் அவன் நம்மை விட எவ்வளவோ தாழ்ந்தவன். அவனை என் தங்கையின் கணவன் என்று நினைத்துக் கூட பார்க்கவே எனக்கு வெறுப்பாக இருக்கிறது. ருக்மிணிக்கு ஏற்றவனாக நான் அழகான ஆண் மகனை மனதில் வைத்து இருக்கிறேன். எல்லா வகையிலும் அவனே ருக்மிணிக்கு மிகவும் பொருத்தமானவன். தமகோஷரின் புத்திரனான சிசுபாலன் தான் நம் அழகிய ருக்மிணிக்கு ஏற்றவன்" என்றான்.

மகன் சொன்னதைக் கேட்ட பீஷ்மகருக்குப் பிடிக்கவே இல்லை. ஆனால் அவனை எதிர்த்து பேசும் தைரியமும் அவருக்கில்லை. ஆகவே ருக்மி சொன்னதைச் சரி என்று ஒப்புக் கொண்டார். தகப்பனார் ஒன்றும் சொல்ல மாட்டார் என்ற தைரியத்தில் ருக்மி தன் தங்கையைத் தன் நெருங்கிய நண்பன் சிசுபாலனுக்குக் கொடுக்க ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - எழுபதாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

070 சுற்றி கிடந்தேனோ திருமாலை ஆண்டானை போலே|

திருமாலை ஆண்டான் ஆளவந்தாரின் சீடர்.

திருமாலிருஞ்சோலையில் அவதரித்த இவரின் இயற்பெயர் ஞானபூர்ணர். திருவாய்மொழி வியாக்யானங்களை ஆளவந்தாரிடம் கற்றவர். ஸ்ரீரங்கம் அழைத்து வந்த திருகோட்டியூர் நம்பி, ஒரு முறை திருமாலை ஆண்டானிடம் ராமானுஜருக்கு நம்மாழ்வாரின் திருவாய்மொழியை கற்பிக்குமாரு வேண்டினார். திருமாலை ஆண்டானும் ஒப்புக் கொண்டார்.

நம்பிகளை வரவேற்ற ராமானுஜர், திருமலை ஆண்டானையும் வணங்கினார். நம்பிகள் ராமானுஜரிடம்,"இவர் என் குரு ஆளவந்தாரின் சீடன். திருவாய்மொழியை ஆளவந்தாரிடம் கற்றுத் தேர்ந்தவர். நீங்கள் இவரிடம் திருவாய்மொழியை அர்த்தத்துடன் கற்றுக் கொள்ள வேண்டும்" என்றார்.


ராமானுஜரும் ஒப்புக் கொண்டார். திருமலை ஆண்டான், திருவாய்மொழியை, தான் ஆளவந்தாரிடம் கற்றவிதத்தில் அர்த்தத்துடன் கற்பித்தார்.

ஆனால், ராமானுஜர் அவ்வப்போது குறுக்கிட்டு, இதற்கு இந்தப் பொருள் வராதே' எனக் கூறி, அவர் ஒரு விளக்கத்தை உரைப்பார். இது ஆண்டானுக்கு எரிச்சல் மூட்டியது.

உதாரணத்திற்கு, திருவாய்மொழி இரண்டாம் பத்தில் வரும்

 "அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து
  அறியாமா மாயத்து அடியேனை வைத்தாயால்:
  அறியாமைக் குறள் ஆய், நிலம் மாவலி மூவடி என்று
  அறியாமை வஞ்சித்தாய், எனது ஆவியுள் கலந்தே"

என்ற பாசுரத்திற்கு பாடம் எடுத்தார்.

இதற்கு ஆண்டான், "அறிவு பெறாத காலத்தில் தன்னுடன் வைத்திருந்த பெருமாள், பின்பு தன்னை சம்சார சாகரத்தில் தள்ளி வஞ்சித்து விட்டதாக புலம்புகிறார் ஆழ்வார்" எனப் பொருள் கூறினார்.

ஆனால் ராமானுஜர், "அது சரியான விளக்கம் அல்ல. தன்னுள்ளே உரையும் இறைவனை தெரிந்து கொள்ளாதது தனது அறியாமையே" என்று விளக்கினார்.

இதனால் கடுப்பான ஆண்டான், “ஆளவந்தாரிடம் இவ்விளக்கத்தை நான் கேட்டதில்லை. நீர் புது விளக்கம் கூறுவது, விஸ்வாமித்திரரின் மூன்றாம் உலகத்தைப் போன்றுள்ளது.”, என்று கூறி, அவ்விடத்தை விட்டு நீங்கினார். கற்பிப்பதையும் நிறுத்தினார்.

பாடம் நடத்துவதை ஆண்டான் நிறுத்தி விட்டதை அறிந்த திருக்கோட்டியூர் நம்பி, ஸ்ரீ ரங்கம் விரைந்து வந்து, திருமாலை ஆண்டானின் வாயிலாக நடந்தவற்றைக் கேட்டு அறிந்தார். பின்னர், “ராமானுஜரின் இவ்விளக்கத்தை ஒரு முறை ஆளவந்தார் உரைத்து நானே கேட்டிருகிறேன். ஆளவந்தாரின் மனதில் இல்லாதது ஒன்றும் ராமானுஜரின் நாவில் வராது. எல்லாம் அறிந்த கிருஷ்ண பகவான் சாந்திபனி முனிவரிடம் பாடம் கேட்டார். அதுபோல எண்ணி ராமானுஜருக்கு கற்பிக்கவும்,” என ஆண்டானுக்கு அறிவுரை கூறினார். திரும்ப பாடம் ஆரம்பமானது. ராமானுஜர் குறுக்கீடும் இருந்தது.

ஆண்டான் யோசித்தார், ராமானுஜர் சொல்லும் அர்த்தம் பொருத்தமாக இருப்பதை உணர்ந்தார். பின் கேட்டார் "நீர் ஆளவந்தாரிடம் பேசியதில்லை. அவர் பேசிக் கேட்டதும் இல்லை. அப்படியிருக்க இவ்வளவு சரியானப்படி அவர் எண்ணங்களை எப்படி பிரதிபலிக்கிறீர்கள்"? அதற்கு ராமானுஜர், “நான் ஆளவந்தாரின் ஏகலைவன்”, என்றார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "அப்படி ராமானுஜர் குறுக்கீடுகள் இருந்தும், அவரைச் சுற்றியே இருந்த திருமாலை ஆண்டான் போல நான் சுற்றிக் கிடந்தேனோ? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவத புராணம் - 17

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

வியாஸ நாரத ஸம்வாதம் - 4

ஸ்கந்தம் 01

"ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் தாயே முதல் குருவாகிறாள். தன் குழந்தை நிம்மதியோடு வாழ வேண்டும் என்று ஆசைப்படாத தாயே இல்லை. குழந்தை கர்பத்திலிருக்கும் போதே அவளது ப்ரார்த்தனைகள் துவங்கி விடுகின்றன. கைக்குழந்தை என்றும் பாராமல், மாஹாத்மாக்களின் சரணங்களிலும் கோவில்களில் ஸந்நிதிகளிலும் குழந்தையைக் கிடத்தி தன் குழந்தையின் க்ஷேமத்திற்காக ப்ரார்த்தனை செய்யாத அம்மாக்கள் எங்கேயாவது உண்டா?

இங்கு நாரதரின் பூர்வாசிரமத்தில் அவரது தாயே ஸாது சங்கத்தை அறிமுகம் செய்து வைக்கிறாள்.

ஸாது கொடுத்த உச்சிஷ்டத்தை உண்ட குழந்தைக்கு, உள்ளத்தில் எம் முயற்சியுமின்றி தானாகவே ஹரி நாமம் கேட்டது.

கண்ணை மூடித் திறப்பதற்குள் நான்கு மாதங்கள் ஓடி விட்டன. சாதுர்மாஸ்யம் முடிந்து ஸாதுக்கள் கிளம்பினார்கள். போகும் போது ஒரு ஸாது குழந்தையை அழைத்து அதன் வலது காதில் ஹரி நாமத்தை உபதேசம் செய்து விட்டுப் போனார்.

ஸாதுக்களைப் போல் பொல்லாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஒரே காட்சியில் அன்பினால் ஹ்ருதயம் நுழைந்து விடுவார்கள். இனி அவர்களைப் பிரிய முடியாது என்னும் படியாக நம் மீது அன்பைக் கொட்டி விட்டு அடுத்தவர்க்கு அனுக்ரஹம் செய்யக் கிளம்பி விடுவார்கள்.

அவ்வளவு தான் நமது நிலைமை.


அமர்ந்தாலும், எழுந்தாலும், நின்றாலும், நடந்தாலும், பசித்தாலும், புசித்தாலும் உறங்கினாலும், கனவிலும் கூட அவர்கள் நினைவே ஆட்கொண்டு விடும். ஒரு கட்டத்தில் நாம் லௌகீகமாக உழன்று கொண்டிருந்ததே தேவலாம் என்னும் அளவிற்கு அவர்களது பிரிவு வாட்டும். கணவன் மனைவி, தாய் பிள்ளை, காதலன் காதலி இவர்களது அன்பைக் காட்டிலும் பல மடங்கு சக்தி வாய்ந்தது குருவிற்கும் சிஷ்யனுக்குமிடையிலான அன்பு.

நம்மைப் பிரிவதன் மூலம், நமது முயற்சியின்றியே நமக்கு குருவின் தியானம் சித்தித்து விடும்.

குழந்தையால் அந்த ஸாதுக்களைப் பிரிய முடியவில்லை. அவர்களோடு போக விழைந்தாலும், ஆதரவற்ற அன்னையை விட்டுப் போக முடியவில்லை. மேலும் அவனோ ஐந்து வயதுக் குழந்தை.

ஒரு நாள் விதி வசத்தால் தாய் பாம்பு கடித்து மாண்டு போனாள்.

ஸாது சேவை செய்தும் தாய் இறந்து விட்டாளே என்று தோன்றவில்லை. மாறாக, இறைவனை அடையும் வழியில் தடையாக இருந்த ஒரே பந்தத்தையும் இறைவன் விலக்கினானே என்று தோன்றியது குழந்தைக்கு.

பக்தி, ஞானம், வைராக்யம் இவையெல்லாம் ஒரு உண்மையான மஹாத்மாவின் ஸந்நிதியில் சும்மா சுற்றிக் கொண்டிருந்தாலே கிடைத்து விடுகிறது.

இனி தன்னைக் கட்டுப்படுத்த யாருமில்லையென்று ஸாதுக்கள் போன திக்கிலேயே கிளம்பினான்.

வழி நடந்து கங்கா தீரத்தை அடைந்தான். மனம் தியானத்தில் இயல்பாக மூழ்கித் திளைத்தது. கண்ணை மூடிக் கொண்டு அமர்ந்தால், தானாகவே ஹ்ருதயத்தில் ஒரு ஒளி தோன்றியது. குழலோசை கேட்டது. மின்னல் போல் அவ்வப்போது திவ்யக் காட்சிகள் தென்பட்டன. ஒருநாள் அசரீரி கேட்டது.

இடி போன்ற குரலில் பகவான் குழந்தையிடம் பேசினான்.

"குழந்தாய்! உன்னைக் கண்டு மகிழ்ந்தேன். என் அனுபவத்தில் நான் யாரோடும் இவ்வளவு சீக்கிரமாக பேசியதுமில்லை. தரிசனம் கொடுத்ததும் இல்லை. நீ அறிந்தோ அறியாமலோ ஸாதுக்களின் கடாக்ஷத்திற்குப் பாத்திரமாகி விட்டாய். குறுக்கு வழியில் வெகு சீக்கிரத்தில் என் அனுக்ரஹத்தை அடைந்து விட்டாய். எனினும் இப்பிறவியில் என் தரிசனத்தைக் காணும் பக்குவத்தை நீ அடையவில்லை. எனவே, உனது அடுத்த பிறவியில் உனக்கு என் தரிசனம் கிட்டும்."

குரல் வந்த திசையில் நமஸ்காரம் செய்த குழந்தை சிரித்தான்.

"இப்போது தரிசனம் இல்லை என்கிறேன் சிரிக்கிறாயே."

"இருக்கட்டுமே. அதனால் என்ன?"

"இப்போதும் நீங்கள் என்னோடு பேசியதன் காரணம் என்ன தெரியுமா? அன்றொரு நாள் எனக்கு அனுக்ரஹம் செய்தார்களே அந்த ஸாதுக்கள், "அந்த ஊரில் ஒரு குழந்தை நம்மோடு ஓடி ஓடி வந்ததே. இப்போது எப்படி இருக்கிறானோ என்று என்னைப் பற்றி நினைத்திருப்பார்கள்.

நீங்கள் அவர்கள் ஹ்ருதயத்தில் குடி கொண்டிருப்பதால், அவர்கள் என்னை நினைத்ததும் ஓடி வந்து என்னோடு பேசுகிறீர்கள்.

அடுத்த பிறவி என்று நீங்களே வந்து சொல்கிறீர்களே.. அதுவே பாக்யம் தானே. என்னிடம் வந்து அதைச் சொல்ல அவசியம் என்ன இருக்கிறது? என் மீதான அந்த மஹாத்மாக்களின் கருணையே உம்மை என்னோடு பேசத் தூண்டிற்று. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தரிசனம் கொடுங்கள். அது உங்கள் விருப்பம்.

எனக்கு உங்கள் மீது எப்போதும் பக்தி இருக்க வேண்டும் என்று அனுக்ரஹம் செய்யுங்கள்" என்று சொல்லி மீண்டும் நமஸ்காரம் செய்தான்.

மிகவும் மகிழ்ந்த பகவான் "அப்படியே" என்று அசரீரியாகச் சொன்னார்.

கேட்டுக் கொண்டிருந்த வியாஸர்,

"ஸ்வாமி, இப்போது அடுத்த பிறவியா?" என்றார்.

"ஆம். அதன் பிறகு அந்தப் பிறவியை ஹரி தியானத்திலேயே கழித்தேன். பிறகு ப்ரும்மாவின் மானஸ புத்திரர்களுள் ஒருவனாக இந்தப் பிறவி வாய்த்தது."

"இப்போது பகவான் தரிசனம் கொடுத்தாரா?"

"அதை ஏன் கேட்கிறீர்கள் வியாஸரே"

"சென்ற பிறவியில் தெரியாத்தனமாக தியானம் செய்து விட்டேன். மின்னல் போல் அவ்வப்போது ஒளியாய்த் தோன்றி, அசரீரியாகப் பேசினார். இப்பிறவியில் நான் நான் தியானமோ, யோகமோ ஸாதனைகளுமோ செய்வதில்லை. எந்நேரமும் நாராயணா எனும் நாமத்தையே சொல்கிறேன். அதனால் குச்சி வைத்துக் கொண்டு விரட்டினாலும் என்னை விட்டுப் போவதே இல்லை. எப்போதும் என்னைச் சுற்றி சுற்றி வருகிறார். எந்நேரத்திலும் நேரில் தோன்றி என்னோடு பேசுகிறார். எனவே, நீங்கள் நாமத்தின் பெருமையை உணர்த்தும் வண்ணம் ஒரு கிரந்தம் செய்யுங்கள்" என்றார் நாரதர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 72

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 42

வ்யவ ஸாயோ வ்யவஸ்த் தா²ந:
ஸம்ஸ்த் தா²ந: ஸ்தா²ந தோ³ த்⁴ருவ:|
பரர்த்தி⁴: பரம ஸ்பஷ்ட:
துஷ்ட: புஷ்ட: ஸு²பே⁴ க்ஷண:||

  • 385. வ்யவ ஸாயோ - விண்மீன்களுக்கு ஆதாரமாய் இருப்பவன்.
  • 386. வ்யவஸ் தா²நஸ் - காலமாறுதல்களுக்கு அடிப்படையானவன.
  • 387. ஸம்ஸ் தாநஸ் - எல்லாவற்றையும் ஒரு கால கட்டத்தில் முடிப்பவன்.
  • 388. ஸ்தாந தோ³ - மேலான வீட்டினை, ஸ்தானத்தை அளிப்பவன்.
  • 389. த்ருவஃ - நிலைத்திருப்பவன்.
  • 390. பரர்த்தி⁴ஃ - மேலான குணபூர்த்தி உள்ளவன்.
  • 391. பரமஸ்பஷ்டஸ் - வெளிப்படையாகக் காணும் மேன்மையுடையவன்.
  • 392. துஷ்டஃ - மகிழ்ச்சி நிறைந்தவன்.
  • 393. புஷ்டஸ் - நிரம்பியவன்.
  • 394. ஸு²பே⁴ க்ஷணஹ - மங்களமான பார்வையுடையவன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.9

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.9 

ஸஞ்ஜய உவாச।
ஏவ முக்த்வா ஹ்ருஷீகேஸ²ம் 
கு³டா³ கேஸ²: பரந்தப:|
ந யோத்ஸ்ய இதி கோ³விந்த³ம்
உக்த்வா தூஷ்ணீம் ப³பூ⁴வ ஹ||

  • ஸஞ்ஜய உவாச - ஸஞ்ஜயன் சொல்லுகிறார் 
  • ஏவம் - இவ்வாறு 
  • உக்த்வா - சொல்லி 
  • ஹ்ருஷீகேஸ²ம் - புலன்களின் அதிபதியான ஸ்ரீ கிருஷ்ணரிடம் 
  • கு³டா³கேஸ²ஃ - உறக்கத்தை வென்றவன்
  • அர்ஜுநன் பரந்தபஹ - எதிரிகளைச் தவிக்கச் செய்பவன் 
  • ந யோத்ஸ்யே - போரிட மாட்டேன் 
  • இதி - இவ்வாறு 
  • கோ³விந்த³ம் - புலன்களுக்கு இன்பம் அளிப்பவரான கிருஷ்ணரிடம் 
  • உக்த்வா - சொல்லி 
  • தூஷ்ணீம் - அமைதி 
  • ப³பூ⁴வ - ஆகி விட்டான் 
  • ஹ – நிச்சயமாக

ஸஞ்ஜயன் கூறுகிறார்: இவ்வாறு கூறிய பின், அறியாமையை வென்றவனும், எதிரிகளையும் தவிக்கச் செய்பவனான அர்ஜுநன், கோவிந்தா, நான் போரிட மாட்டேன், என்று கூறி அமைதியாகி விட்டான். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.7

த்³விதீயம் து ப⁴வா யாஸ்ய 
ரஸா தல க³தாம் மஹீம்।
உத்³த⁴ரிஷ் யந்நு பாத³த்த 
யஜ்ஞேஸ²: ஸௌகரம் வபு:

  • த்³விதீயம் து - இரண்டாவது அவதாரமோ எனில்
  • யஜ்ஞேஸ²ஸ் - யாகங்களுக்கெல்லாம் பதியான இவர்
  • அஸ்ய ப⁴வாய - இவ்வுலக க்ஷேமத்தின் பொருட்டு
  • ரஸா தல க³தாம் - பாதாளத்தை அடைந்த
  • மஹீம் - பூமியை
  • உத்³த⁴ரிஷ் யந் - மேல் எடுக்கின்றவராய்
  • ஸௌகரம் வபுஹு - பன்றி உருவமான ஸரீரத்தை
  • உபாத³த்த - எடுத்துக் கொண்டார்

வேள்விகள் அனைத்திற்கும் தலைவரான பகவான் வருவதற்காக, இவ்வுலக நன்மையின் பொருட்டு, பாதாளத்தில் மூழ்கிய பூமியை மேலே கொண்டு வருவதற்காக, வராக அவதாரத்தை இரண்டாவது அவதாரமாகக் கைக்கொண்டார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.7

ப³ஹவோ து³ர் லபா⁴ஸ்² சைவ 
யே த்வயா கீர்திதா கு³ணா:।
முநே வக்ஷ்யாம் யஹம் பு³த்³த்வா 
தைர் யுக்த: ஸ்²ரூய தாம் நர:॥ 

  • முநே - முனிவரே!
  • த்வயா - உம்மாலே
  • கீர்திதா - கூறப்பட்ட
  • கு³ணாஹ -  நற்குணங்கள்
  • யே -  எவைகளோ அவைகள்  
  • ப³ஹவோ - அநேகங்கள்
  • து³ர் லபா⁴ஸ்² ச ஏவ -  கிடைப்பதற்கு அரியனவாகும்
  • அஹம் - நான்
  • பு³த்³த்வா -  ஆலோசித்து
  • வக்ஷ்யாம் - விவரித்து சொல்லுகிறேன்
  • தைர் - அவைகளோடு 
  • யுக்தஸ் -  கூடின
  • நரஹ -  புருஷன்
  • ஸ்²ரூய தாம் - இன்னார் என்று அறிந்து கொள்ளப்படட்டும்

வால்மீகி முனியே, நீர் புகழ்ந்துரைத்த பல குணங்களையும் கொண்டவர்கள் உண்மையில் அரிதானவர்கள். இந்த குணங்களைக் கொண்ட ஒரு மனிதனை குறித்து பிரம்மரிடம் ஏற்கனவே கேட்டு அறிந்த பிறகே நான் உம்மிடம் சொல்கிறேன். கேட்பீராக! 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - பெரியாழ்வார் திருமொழி - 1.4.1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 54 - கோவிந்தன் கூத்து
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - நான்காம் திருமொழி - முதலாம் பாசுரம்

தன் முகத்துச் சுட்டி* 
தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்ப்* 
பொன் முகக் கிண்கிணி ஆர்ப்பப்* 
புழுதி அளைகின்றான்*
என் மகன் கோவிந்தன்* 
கூத்தினை இள மா மதீ!* 
நின் முகம் கண் உளவாகில்* 
நீ இங்கே நோக்கிப் போ! (2)

  • தன் முகத்து - கண்ணனின் முகத்தில் நெற்றி வரை தொங்குகின்ற 
  • சுட்டி - சுட்டியானது 
  • தூங்க தூங்க - வேகமாய் அழகாக இங்கும் அங்குமாக அசைந்து ஆட
  • தவழ்ந்து போய் - முற்றத்தில் தவழ்ந்து போகும் போது
  • பொன் முகம் - தங்க முகத்தையுடைய 
  • கிண்கிணி - சதங்கைகளானவை 
  • ஆர்ப்ப - கிண்கிண் என்று சப்தம் இடவும் 
  • புழுதி - தெருப்புழுதி மண்ணை 
  • அளைகின்றான் - கிளப்பி உற்சாகத்துடன் விளையாடுகின்ற 
  • என் மகன் - எனக்குப் பிள்ளையான 
  • கோவிந்தன் - கண்ணபிரானுடைய 
  • கூத்தினை - சேஷ்டைகளை
  • இள - இளமை தங்கிய
  • மா மதி - அழகிய சந்திரனே! 
  • நின் முகம் - உன் முகத்தில்
  • கண் உள ஆகில் - கண்கள் இருக்குமேயானால்
  • நீ இங்கே நோக்கி போ - நீ இங்கே பார்த்துப் போ 

குட்டிக் கண்ணனின் முகத்தில் நெற்றி வரை தொங்குகின்ற சுட்டி வேகமாய் அழகாக இங்கும் அங்குமாக அசைந்து ஆட, விரைந்து மணல் முற்றத்திற்குத் தவழ்ந்து செல்கின்றான்; அங்கே அவன் கால் சதங்கையில் தொங்குகின்ற பொன்னாலான கிண்கிணிகள் மிகுவாய் ஒலி எழுப்ப, அங்கும் இங்கும் அலைந்து, தெருப்புழுதி மண்ணை கிளப்பி, அவன் தேகம் முழுவதும் புழுதியாகும் வண்ணம் மிகுந்த உற்சாகத்துடன் விளையாடுகின்றான். தன் மகன் தனியே விளையாடுவதைப் பார்த்த யசோதை அன்னை, நிலவினை நோக்கி, ' இளமை தங்கிய அழகிய சந்திரனே! இங்கே என் மகன் கோவிந்தன் புழுதி மணலில் ஆடுகின்ற கூத்தினைப் பார். வட்டமான உன் முகத்தில் எங்கேனும் கண் இருக்குமானால், (அல்லது கண் பெற்றதின் பயனாக) நீ என் மகன் விளையாடுகின்ற காட்சியை பார்த்து விட்டுப் போ', என்று கூறுகிறாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்