About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 7 January 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 93

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 63

ஸு²பா⁴ங்க³ஸ்² ஸா²ந்தித³ஸ் ஸ்ரஷ்டா 
குமுத³: குவலேஸ²ய:|
கோ³ஹிதோ கோ³பதிர் கோ³ப்தா 
வ்ருஷ பா⁴க்ஷோ வ்ருஷ ப்ரிய:||

  • 593. ஸு²பா⁴ங்க³ஸ்²யோகத்தின் எட்டு அங்கங்களையும் நிறைவேற்றித் தரும் மங்களகரமானவர். வசீகரமும் மயக்கும் அழகிய உறுப்புகளை உடையவர். மயக்குபவர். 
  • 594. ஸா²ந்தித³ஸ்முழு சாந்தியைத் தருபவர். அமைதியை வழங்குபவர்.
  • 595. ஸ்ரஷ்டா - படைப்பவர்.
  • 596. குமுத³ஹ் - மகிழ்பவர். பூமியில் தனது பல்வேறு அவதாரங்களின் போது தனது அனைத்து லீலாக்களை காட்டுபவர்.
  • 597. குவலே ஸ²யஹ - ஜீவர்களை அடக்கி ஆள்பவர். பூமியைச் சூழ்ந்துள்ள நீர்நிலைகளில் இருப்பவர்.
  • 598. கோ³ஹிதோ - இதத்தை உண்டு பண்ணுபவர். கோவர்த்தன கிரியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு பசுக்களைப் பாதுகாத்தார்.
  • 599. கோ³பதிர் - போக பூமிக்குத் தலைவர். 
  • 600. கோ³ப்தா - காப்பாற்றுபவர்.

ஆறாம் நூறு திரு நாமங்கள் நிறைவு.

  • 601. வ்ருஷ பா⁴க்ஷோ - தரும சக்கரத்துக்கு அச்சாக இருப்பவர். தர்மத்தின்படி செயலின் பலனைப் பொழிகிறார்.
  • 602. வ்ருஷ ப்ரியஹ - தருமத்தில் அன்புள்ளவர். நல்லொழுக்கம் உள்ளவர்களின் ப்ரியமானவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.30

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.30 

தே³ஹீ நித்யம வத்⁴யோ யம் 
தே³ஹே ஸர்வஸ்ய பா⁴ரத|
தஸ்மாத் ஸர்வாணி பூ⁴தாநி 
ந த்வம் ஸோ²சிது மர்ஹஸி||

  • தே³ஹீ - பௌதிக உடலின் உரிமையாளன் 
  • நித்யம் - நித்தியமாக 
  • அவத்⁴ய - கொல்லப்பட முடியாதவன் 
  • அயம் - இந்த ஆத்மா 
  • தே³ஹே - உடலில் 
  • ஸர்வஸ்ய - எல்லோரது 
  • பா⁴ரத - பரத குலத்தில் உதித்தவனே
  • தஸ்மாத் - எனவே 
  • ஸர்வாணி - எல்லா 
  • பூ⁴தாநி - பிறந்த உயிர்வாழிகள் 
  • ந - ஒருபோதும் இல்லை 
  • த்வம் - நீ 
  • ஸோ²சிதும் - கவலைப்பட 
  • அர்ஹஸி - தகாது

பரத குலத்தில் உதித்தவனே! இந்த ஆத்மா, எல்லா உடலிலும் நித்தியமாக இருப்பதால், கொல்லப்பட முடியாதவன். எனவே, பிறந்த எல்லா உயிர் வாழிகளுக்காகவும் ஒருபோதும் நீ கவலைப்பட தேவையில்லை.

இவ்வாறு கூறி அர்ஜுநனை போர் புரிய வைக்கிறான் கண்ணன். மேலும் இப்போர் புரியாமல் போனால் என்ன நடக்கும் என்பதையும் விளக்குகிறான் கண்ணன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.28

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.28

ஏதே சாம் ஸ²கலா: பும்ஸ: 
க்ருஷ்ணஸ் து ப⁴க³வாந் ஸ்வயம்|
இந்த்³ராரி வ்யா குலம் லோகம் 
ம்ருட³யந்தி யுகே³ யுகே³||

  • ஏதே ச - முன் சொல்லப்பட்டவர்கள் எல்லோரும் 
  • பும்ஸஹ - விராட் புருஷனின் 
  • அம்ஸ² கலாஃ - சில அம்சங்களேயாம் 
  • க்ருஷ்ணஸ் து - கிருஷ்ணரோ என்றால் 
  • ஸ்வயம் ப⁴க³வாந் - தானே பகவாந் (அம்சீ என்றதாம்) 
  • யுகே³ யுகே³ - அப்படிப்பட்டவர் ஒவ்வொரு யுகத்திலும் 
  • இந்த்³ராரி வ்யா குலம் - இந்திரனுடைய சத்துருக்களால் பிடிக்கப்பட்ட 
  • லோகம் - உலகத்தை 
  • ம்ருட³யந்தி - காப்பாற்றுகிறார்

முன் சொல்லப்பட்ட அனைவருமே விராட்யுருஷனான பகவானுடைய சில அம்சங்களே. அதாவது, ஒரு சிறிய பாகமே. ஆனால், ஸ்ரீ கிருஷ்ணனோ உண்மையில் பகவானே. இந்திரனது பகைவர்களான அசுரர்கள் இவ்வுலகைத் துன்புறுத்தும் போது, ஒவ்வொரு யுகத்திலும் இவரின் அவதாரங்கள் உலகைக் காண்கின்றன.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.28

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.28

ஸீதா ப்யநு க³தா ராமம் 
ஸ²ஸி²நம் ரோஹிணீ யதா²|
பௌரை ரநுக³தோ தூ³ரம் 
பித்ரா த³ஸ²ரதே²ந ச||

  • ஸீதா அபி - ஸீதையும்
  • ஸ²ஸி²நம் - சந்திரனை
  • ரோஹிணீ யதா² - ரோகிணி போல்
  • ராமம் - ஸ்ரீராமரை
  • அநு க³தா - பின்பற்றினாள்
  • பௌரைர் - பட்டணத்து ஜனங்களாலும்
  • பித்ரா - பிதாவான
  • த³ஸ²ரதே²ந ச - தசரதராலும்
  • தூ³ரம் - வெகு தூரம்
  • அநு க³தோ - பின் தொடரப்பட்டவரான

சீதையும், சசியுடன் {சந்திரனுடன்} கூடிய ரோஹிணியைப் போல ராமனைப் பின் தொடர்ந்து சென்றாள். குடிமக்களாலும், தந்தையான தசரதனாலும் நீண்ட தொலைவுக்குப் பின் தொடரப்பட்டவனும், 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திவ்ய ப்ரபந்தம் - 74 - பெரியாழ்வார் திருமொழி - 1.5.11

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 74 - புகழும் இன்பமும் அடைவர்
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - ஐந்தாம் திருமொழி - பதினொன்றாம் பாசுரம்

அன்னமும் மீனுருவும் ஆளரியும் குறளும்* 
ஆமையும் ஆனவனே! ஆயர்கள் நாயகனே!* 
என் அவலம் களைவாய்! ஆடுக செங்கீரை* 
ஏழுலகும் உடையாய்! ஆடுக ஆடுகவென்று
அன்ன நடை மடவாள் அசோதை உகந்த பரிசு* 
ஆன புகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ்* 
இன்னிசை மாலைகள் இப் பத்தும் வல்லார்* 
உலகில் எண் திசையும் புகழ் மிக்கு 
இன்பமது எய்துவரே| (2)

  • அன்னமும் - ஹம்ஸ ரூபமாகவும்
  • மீன் உருவும் - மத்ஸ்ய ரூபமாகவும்
  • ஆள் அரியும் - நர ஸிம்ஹ ரூபமாகவும்
  • குறளும் - வாமந ரூபமாகவும்
  • ஆமையும் - கூர்ம ரூபமாகவும்
  • ஆனவனே - அவதரித்தவனே!
  • ஆயர்கள் - இடையர்களுக்கு
  • நாயகனே - தலைவனானவனே!
  • என் அவலம் - என் துன்பத்தை
  • களைவாய் - நீக்கினவனே!
  • செங்கீரை ஆடுக - செங்கீரை ஆட வேணும்
  • ஏழ் உலகும் - ஸப்த லோகங்களுக்கும்
  • உடையாய் - ஸ்வாமியானவனே!
  • ஆடுக ஆடுக - பலஎன்று காலும் ஆட வேணும் என்று
  • அன்னம் நடை - அன்ன நடை உடையவளான
  • மடவாள் - நற்குணம் டையளான
  • அசோதை - யசோதைப் பிராட்டியாலே
  • உகந்த - உகந்த சொல்லப் பட்ட
  • பரிசு - ப்ரகாரத்தை (விதத்தை)
  • ஆன - பொருந்திய
  • புகழ் - புகழை டையரான
  • புதுவை பட்டன் - பெரியாழ்வார்
  • உரைத்த - அருளிச் செய்த
  • இன் இசை - இனிய இசையை டைய
  • தமிழ் மாலைகள் - தமிழ்த் தொடைகளான
  • இ பத்து - இப் பத்துப் பாசுரங்களையும்
  • வல்லார் - ஓத வல்லவர்கள்
  • உலகில் - இந்த லோகத்தில்
  • எண் திசையும் - எட்டுத் திசைகளிலும் பரந்த
  • புகழ் - கீர்த்தியையும்
  • மிகு இன்பமது - மிக்க இன்பத்தையும்
  • எய்துவர் - பெறுவார்கள் 

ஹம்ஸ, மத்ஸ்ய, ந்ருஸிம்ஹ, வாமன போன்ற அவதாரங்களை எடுத்தவனே, இடையர்களின் தலைவனே, என் துன்பத்தை போக்கினவனே, எழு உலகங்களுக்கும் அதிபதியே, நீ செங்கீரை ஆட வேணும், ஆட வேணும் என்று ஹம்ஸ நடை கொண்ட, களங்கம் அற்றவளான யசோதை பிராட்டி உகந்து சொன்னவற்றை, புகழ் பொருந்திய பெரியாழ்வார் இனிய இசையுடன் தமிழ் மாலைகளாகத் தொகுத்துத் தந்த இப்பத்து பாசுரங்களை ஓத வல்லவர்கள் இந்த உலகில் எட்டு திசைகளிலும் கீர்த்தியையும், பரமானந்தத்தையும் அடைவார்கள்.

அடிவரவு: உய்ய கோளரி நம்முடை* வானவர் மத்து காய* துப்புடை உன்னை பாலொடு* செங்கமலம் அன்னமும் - மாணிக்கம்
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 020 - திரு தஞ்சைமாமணி கோவில் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

020. திரு தஞ்சைமாமணி கோவில் (தஞ்சாவூர்)
இருபதாவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
3 ஆழ்வார்கள் - 5 பாசுரங்கள் 

1. பூதத்தாழ்வார் - 1 பாசுரம்
இரண்டாம் திருவந்தாதி (மூன்றாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் – 2251 - இரண்டாம் திருவந்தாதி - ஏழாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (70)

----------------------
2. நம்மாழ்வார் - 1 பாசுரம்
திருவாய்மொழி (நான்காம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 3255 - ஐந்தாம் பத்து - மூன்றாம் திருவாய்மொழி - முதலாம் பாசுரம்

----------------------
3. திருமங்கையாழ்வார் - 3 பாசுரங்கள்
பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) 

  • திவ்ய ப்ரபந்தம் - 953 -முதலாம் பத்து - முதலாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 1090 - இரண்டாம் பத்து - ஐந்தாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 1576 - ஏழாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்

----------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்

மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி

ஓதக்கேள் நெஞ்சே உனக்கும் இது நன்று எனக்கும்*
மேதக்க நன்மை இதின் வேறு இல்லை போதப்*
பெருந்தஞ்சை மா மணியைப் பேணி வடிவம்*
பொருந்து அஞ்சை மா மணியைப் போற்று* 

  • நெஞ்சே – மனமே! 
  • ஓத – நான் சொல்வதை
  • கேள் – நீ கேட்பாயாக
  • கேட்டால் இது உனக்கும் நன்று – நான் சொல்லுகின்ற இவ்விஷயம் உனக்கும் நன்மையை உண்டாக்கும்
  • எனக்கும் மேதக்க நன்மை இனி வேறு இல்லை – எனக்கும் மிக்க நன்மையை உண்டாக்குவது இதனினும் வேறொன்று இல்லையாம். இவ்வாறு நம்மிருவர்க்கும் ஒருங்கே நன்மை பயக்கக்கூடிய உபாயம் யாதெனில்
  • பெருந் தஞ்சை மா மணியை போத பேணி – பெரிய திருத்தஞ்சையென்னும் திவ்ய ஸ்தலத்தில் எழுந்தருளிய
  • சிறந்த மாணிக்கம் போன்ற கடவுளை நன்றாக விரும்பித் துதித்து
  • வடிவம் பொருந்து – அப்பெருமானது திருமேனியில் பொருந்திய
  • அஞ்சை – பஞ்சாயுதங்களையும்
  • மா – லஷ்மியையும்
  • மணியை – கௌஸ்துபரத்நத்தையும்
  • போற்று – வாழ்த்துவாயாக

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

லீலை கண்ணன் கதைகள் - 84

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

கிருஷ்ணன் ஜராசந்தனிடம் வேண்டுதல்| 

ஜராசந்தனை அழிப்பதற்கு, உத்தவர் சொன்னபடி கிருஷ்ணர் ஒரு திட்டம் வகுத்தார். அதன்படி, பீமன், கிருஷ்ணர், அர்ஜுனன் ஆகிய மூவரும் அந்தணரைப் போல வேஷம் தரித்து, ஜராசந்தனிடம் சென்றனர். அப்பொழுது நடுப்பகல், அப்பொழுது தான் அவன் சிவ பூஜையை முடித்து விட்டு, முன் அறையில் காத்திருப்பவர்களுக்கு அவர்கள் என்ன கேட்டாலும் கொடுப்பது வழக்கம். மூன்று பெரும் ஜராசந்தனைப் பார்த்து, "ஐயா, நாங்கள் வெகு தூரத்திலிருந்து வருகிறோம். நாங்கள் கேட்பதைத் தாங்கள் கொடுக்க வேண்டும்" என்றார்கள். 


அவர்களைப் பார்க்க ஜராசந்தன் சற்று ஆச்சரியப்பட்டான். அவர்களுடைய குரல், அவர்கள் நடந்து கொண்ட விதம், உள்ளங் கைகளில் காணப்பட்ட நாணின் வடுக்கள் இவற்றைக் கொண்டு, அவர்கள் க்ஷத்திரியர்கள் என்றும், அவர்களைத் தாம் முன்பே எங்கேயோ பார்த்திருக்க வேண்டும் என்றும் நினைத்தான். "இவர்கள் உண்மையில் அந்தண வேடத்தில் உள்ள க்ஷத்திரியர்கள் தாம்." இருந்தாலும், இவர்கள் என்ன கேட்டாலும் சரி, அது ஏன் உயிரே ஆனாலும் சரி, நான் கொடுப்பேன்!" என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான். 

இப்படி மனதில் நினைத்துக் கொண்டு, அவன் அவர்களைப் பார்த்து, "ஓ அந்தணர்களே! உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள். என் தலையைக் கேட்டாலும் நான் தருவேன்" என்று கூறினான்.

கிருஷ்ணர், "அரசே! அப்படியானால் தாங்கள் எங்களுடன் வந்து யுத்தம் செய்ய இசையுங்கள். நாங்கள் அந்தணர்கள் அல்ல, க்ஷத்திரியர்கள். சண்டை போட வந்தவர்கள், சாப்பாடு கேட்டு வந்தவர்கள் அல்ல. இவன் குந்தியின் மகன் பீமசேனன். அவன் அவனுடைய தம்பி அர்ஜுனன். நான் உன் பழைய எதிரி கிருஷ்ணன்" என்று கூறினார். 

இதைக் கேட்டு, ஜராசந்தன் உரக்கச் சிரித்தான். "அட மடையா! நீ கேட்டபடியே நான் சண்டை போடுவேன். ஆனால் உன்னோடு அல்ல. ஏனெனில் நீ ஒரு கோழை. நீ மதுரா நகரை விட்டுக் கடலிலுள்ள ஒரு தீவில் நகரை நிர்மாணித்துக் கொண்டு, எப்பொழுதும் என் பயத்திலயே வாழ்கிறாய். இந்த அர்ஜுனனோ என்னை விட வயதில் இளையவன். அவன் உடலும் ஒல்லியானது, வலுவற்றது. அவன் எனக்கு நிகராக மாட்டான். பீமன் பரவாயில்லை; என்னோடு சண்டை போடத் தகுதி உள்ளவன் என்று நினைக்கிறேன்" என்றான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 37

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

பக்தியே கதி

ஸ்கந்தம் 02

ஸ்ரீ சுகாசார்யார், யோகிகள் சரீரத்தை விட்டதும் எவ்வாறு பரமாத்ம ஸ்வரூபத்தில் கலக்கிறார்கள் என்பதை விவரித்துக் கூறினார். பின்னர், “அரசே, தொன்று தொட்டு வேதங்களில் கூறப்பட்டு வரும் ஸத்யோ முக்தியையும், கிரமமாக படிப்படியாக அடையும் முக்தியையும் உனக்குச் சொன்னேன். இவையே தூம மார்க்கம், அர்ச்சிராதி மார்க்கம் எனப்படும். முன்பு பிரம்ம தேவருக்கு ஸ்ரீ வாஸுதேவர் கூறிய இரண்டு வழிகள் இவை.


பகவான் வாஸுதேவரிடம் அன்புடன் பக்தி செய்யும் வழியைத் தவிர இந்த நிலவுலகில் விழுந்து தவிக்கும் ஒருவனுக்கு, நன்மை அளிக்கும் வழி வேறு இல்லை.

பிரம்ம தேவர் ஒரு மனத்தோடு வேதங்களை திரும்ப திரும்பப் படித்து, நிதானமாக ஆலோசித்து, பின்னர் பகவான் வாஸுதேவரிடம் தீவிர பக்தி கொள்வது ஒன்று தான் மேலான வழி என்று நிச்சயித்தார்.

புத்தி, அநுமானம் இவை, பகவான் இருக்கிறார் என்பதை ஊகித்து அறிய பயன்படும் ஸாதனங்களே தவிர, பகவானை அடையும் ஸாதனங்கள் ஆக மாட்டா. மனிதர்களான நமக்கு எங்கும், எந்நேரத்திலும், எவ்விதத்திலும் பகவான் ஸ்ரீஹரி ஒருவரே, மனோ, வாக், காயங்களால் பாடவும் சிந்திக்கவும் தகுந்தவர். அனைத்திலும் ஆத்மாவாக விளங்கும் பகவானின் லீலைகளை ஸாதுக்கள் கேட்டும், பருகியும் மனத்தில் தேக்கி வைத்துக் கொள்கின்றனர். அதனால் புலன்களால் மாசு அடைந்த இதயம் தூய்மையாகிறது.”

சுகாசாரியார் மேலும் கூறத் தொடங்கினார்.

“பிரம்ம தேஜஸை விரும்புபவன் பிரம்மாவையும், புலன்களின் சக்தியை வேண்டுபவன் இந்திரனையும், மக்கட் பேற்றை விரும்புபவன் ப்ரஜாபதிகளையும், நல்ல இல்லறத்தை விரும்புபவன் துர்கா தேவியையும், ஒளியை விரும்புபவன் அக்னியையும், செல்வத்தை விடும்புபவன் அஷ்ட வசுக்களையும், வீரத்தை விரும்புபவன் ருத்ரனையும், அன்னத்தை விரும்புபவன் அதிதியையும், ஸ்வர்கத்தை விரும்புபவன் பன்னிரண்டு ஆதித்யர்களையும், அரசனாக விரும்புபவன் விஸ்வே தேவர்களையும், நீண்ட ஆயுளை விரும்புபவன் அஸ்வினி தேவர்களையும், வலிமையை விரும்புபவன் பூமியையும், அழகை விரும்புபவன் கந்தர்வர்களையும், கணவன்‌ மனைவி உறவு இனிக்க ஸதி தேவியான உமையையும், குலம் தழைக்க பித்ரு தேவர்களையும், தொல்லைகளில் இருந்து விடுபட யக்ஷர்களையும், உலகியல் இன்பத்தை வேண்டுபவன் சந்திரனையும், வைராக்யத்தை விரும்புபவன் ஸ்ரீமந் நாராயணனையும் பூஜிக்க வேண்டும்.

ஒருவன் எங்கும் எதிலும் விருப்பமுள்ளவன் ஆயினும், மேற்கண்ட அனைத்தையும் விரும்புபவன் ஆயினும், முக்தியை அடைய விரும்பினாலும், எதிலுமே விருப்பம் இல்லாதவன் ஆயினும், தீவிரமான பக்தி யோகத்தால் எங்கும் நீக்கமற நிறைந்துள்ள பகவானையே ஆராதிக்க வேண்டும். எந்த தேவதையை உபாசித்தாலும், ஸாது சங்கத்தில் இருந்து கொண்டு, பகவான் ஸ்ரீ ஹரியிடம் நிச்சயமான பக்தி செய்து தான் முக்தி பெற இயலும்.”

சௌனகர் கேட்டார்.

“ஸூதரே, பரீக்ஷித் மேலும் என்னென்ன விஷயங்களைக் கேட்டான்?” 

“பரிக்ஷித் சிறு வயதிலிருந்தே விளையாட்டுப் பொருள்களைக் கொண்டு ஸ்ரீ க்ருஷ்ணனைப் பூஜை செய்யும் விளையாட்டுக்களையே விளையாடினான். வியாஸரின் மகனோ, அனைத்தும் அறிந்தவர். இவ்விருவரும் சேர்ந்தால் மிகச் சிறந்த பகவத் கதைகளே வெளிப்படும். பகவானைப் பற்றிய சிந்தனைகளில் கழிக்கும் நேரமானது காலவரையறைகளில் அடங்குவதில்லை. பகவானைப் பற்றிக் கேட்காத பேசாத ஒவ்வொரு நொடியும் வீணே. அவர்களின் ஆயுள் பறிக்கப் படுகிறது.

மற்ற விலங்குகளைப் போல் வாழும் மனிதன் அவைகளை விட எவ்விதத்தில் உயர்ந்தவன்? பகவன் நாமத்தைச் சொல்லாத கேட்காத ஒருவனின் புலன்கள் விலங்குகளின் புலன்களுக்குச் சமம். மூவுலகையும் அளந்த பெருமானின் புகழைக் கேட்காத காதுகள் எலி வசிக்கும் வளை. பாம்பு வசிக்கும் புற்று. இறைவனின் சரிதத்தை கானம் செய்யாத நாக்கு தவளையின் நாக்கு போன்றது. பட்டுத் தலைப் பாகை இருப்பினும் அது வெறிம் சுமை. இறைவனின் திருவுருவத்தைப் பார்க்காத கண்கள் மயில் பீலியின் கண்களே. கோவில்களுக்குச் செல்லாத கால்கள் மரக் கால்கள். இறைவன் புகழைக் கேட்டு நெகிழாத இதயம் இரும்பு. ஆகவே நீங்கள் பகவானைப் பற்றிய கதைகளையே கூறுங்கள்.” என்றார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்