About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 26 February 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 114

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 84

ஸு²பாங்கோ³ லோக ஸாரங்க³: 
ஸுதந்துஸ் தந்து வாத்த⁴ந:|
இந்த்³ர கர்மா மஹா கர்மா 
க்ருத கர்மா க்ருதா க³ம:||

  • 788. ஸு²பாங்கோ³ - மங்களகரமான அழகிய உடலை உடையவர். அசுரர்களையும் மயக்கும் வடிவத்தை உடையவர்.
  • 789. லோக ஸாரங்க³ஸ் - உலகுக்கு வேண்டிய சாரமான பொருளைப் பேசுபவர். உலகுக்கு உபதேசித்தவர். தேனீயைப் போல உலகின் சாரத்தை புரிந்து கொள்கிறார். பிரணவ மந்திரம் என்ற வேதங்களின் சாரம் மூலம் அவரை அடைய முடியும். அவர் பக்தியின் பொருள். பக்தியால் கவரப்பட்டவர். மோக்ஷத்தை அளிக்கிறார். ஞானிகள் அவரிடம் ஈர்க்கப்படுகிறார்கள். அவருடைய அருட் குணங்களைப் பாடும் பக்தர்களைக் கொண்டிருக்கிறார்.
  • 790. ஸுதந்துஸ் - கெட்டியான நூல் வலையை உடையவர். தப்பிக்க முடியாத அசுரர்களைக் கைப்பற்றும் சக்தி வாய்ந்த வலையை உடையவர்.
  • 791. தந்து வாத்த⁴நஹ - நூல்களான கயிற்றைப் பலப்படுத்தியவர். பிரபஞ்சத்தை விருத்தி செய்பவர். 
  • 792. இந்த்³ர கர்மா - இந்திரனுக்காகச் செயல்பட்டவர்.
  • 793. மஹா கர்மா - பெருமைக்குரிய சிறப்பான செயல்களைச் செய்பவர். மகத்தான செயல்களைச் செய்பவர்.
  • 794. க்ருத கர்மா - செயல்பட்டவர். அவர் உபதேசித்த செயல்களைச் செய்தவர்.
  • 795. க்ருதா க³மஹ - ஆகம நூல்களை வெளியிட்டவர். அவர் ஆகமங்களை முன் வைப்பவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.51

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.51 

கர்மஜம் பு³த்³தி⁴ யுக்தா ஹி 
ப²லம் த்யக்த்வா மநீஷிண:|
ஜந்ம ப³ந்த⁴ விநிர் முக்தா: 
பத³ம் க³ச்ச²ந் த்யநா மயம்||

  • கர்ம ஜம் - பலன்நோக்குச் செயல்களால் 
  • பு³த்³தி⁴யுக்தா - புத்தியுடைய மேதாவிகள் 
  • ஹி - நிச்சயமாக 
  • ப²லம் - பலன்களை 
  • த்யக்தவா - கைவிட்டு 
  • மநீஷிணஹ - சிறந்த முனிவர்கள், பக்தர்கள்
  • ஜந்ம ப³ந்த⁴ - பிறப்பு இறப்பின் பந்தம் 
  • விநிர் முக்தாஹ - முக்தி பெற்ற 
  • பத³ம் - நிலை 
  • க³ச்ச²ந்தி - அடைகின்றனர் 
  • அநாமயம் - துன்பங்களற்ற

புத்தியுடைய மேதாவிகள், பலன் நோக்குச் செயல்களின் பலன்களை கைவிட்டு, பக்தித் தொண்டில் ஈடுபட்டு, பிறப்பு இறப்பின் பந்தத்திலிருந்து, முக்தி பெற்று, துன்பங்களற்ற நிலையை அடைகின்றனர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.4

தஸ்ய புத்ரோ மஹா யோகீ³ 
ஸமத்³ ருங் நிர்வி கல்பக:|
ஏகாந்த மதிருந் நித்³ரோ 
கூ³டோ⁴ மூட⁴ இவேயதே||

  • தஸ்ய - அந்த வியாஸ பகவானின்
  • புத்ரோ -  புத்திரரான ஸுகரோ
  • மஹா யோகீ³ -  பெரிய யோக சித்தியை உடையவர்
  • ஸமத்³ ருங் -  பிரம்மத்தை சாக்ஷாத்  தரித்தவர்
  • நிர்வி கல்பகஹ - பேத ஞானம் அற்றவர்
  • ஏகாந்த மதி - ஏகா க்ரமான சித்தத்தை உடையவர்
  • உருந் நித்³ரோ -  அவித்யை என்பதே சிறிதும் அற்றவர் 
  • கூ³டோ⁴ -  மிகவும் அறிந்தவராலே தெரிந்து கொள்ளபடத் தக்கவர்
  • மூட⁴ இவ - அறிவிலியைப் போன்று
  • ஈயதே - காணப்படுகிறார்

அந்த வியாசருடைய திருக்குமாரராகிய ஸ்ரீஸுகர் பெரிய யோகி. தான், பிறர் என்ற வேறுபாடின்றி அனைத்தும் பிரும்மத்தின் ஸ்வரூபமே என்று உணர்ந்தவர்; வேறுபாடற்றவர்; பகவானிடமே மனத்தைச் செலுத்தியவர்; மாயையாகிய தூக்கத்தை ஒழித்தவர்; தன்னை வெளியுலகிற்குக் காட்டிக் கொள்ளாதவர். ஆகவே, ஒரு மூடன் போல் காட்சியளிப்பவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.49

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.49

ரக்ஷஸாம் நிஹதாந் யாஸந் 
ஸஹஸ் ராணி சதுர் த³ஸ²|
ததோ ஜ்ஞாதி வத⁴ம் ஸ்²ருத்வா 
ராவண: க்ரோத⁴ மூர்ச்சி²த:|| 

  • ரக்ஷஸாம் - இராக்ஷஸர்கள்
  • சதுர் த³ஸ² -  பதிநான்கு
  • ஸஹஸ் ராணி -  ஆயிரமானவர்கள்
  • நிஹதாநி -  ஸம்ஹரிக்கப் பட்டவர்களாக
  • ஆஸந் -  ஆனார்கள்  
  • ராவணஹ் -  ராவணன்
  • ஜ்ஞாதி வத⁴ம் -  உற்றார் உறவினர் கொல்லப்பட்டதைக் 
  • ஸ்²ருத்வா தத - கேட்டு துடித்து, அதனால்
  • க்ரோத⁴ மூர்ச்சி²தஹ -  கோபத்தால் அறிவு இழந்தவனாய்

பதிநான்கு ஆயிரம் இராக்ஷஸர்கள் கொல்லப்பட்டனர். அப்போது ராவணன் தன் உற்றார் உறவினர் கொல்லப்பட்டதைக் கேட்டு, கோபத்தால் துடித்து, அதனால் அறிவு இழந்தவனாய்,

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்