||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
006. திருப்பேர் நகர்
கோவிலடி – திருச்சி
ஆறாவது திவ்ய க்ஷேத்ரம்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 33 - 1
பெரியாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 173 - திவ்ய தேசங்களில் விளையாடும் மகன்
பெரியாழ்வார் திருமொழி - இரண்டாம் பத்து - ஆறாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
கொங்கும் குடந்தையும்* கோட்டியூரும் பேரும்*
எங்கும் திரிந்து* விளையாடும் என் மகன்*
சங்கம் பிடிக்கும்* தடக்கைக்குத் தக்க*
நல் அங்கம் உடையது ஓர் கோல் கொண்டு வா!*
அரக்கு வழித்தது ஓர் கோல் கொண்டு வா| (2)
002. திவ்ய ப்ரபந்தம் - 205 - கொண்டல் வண்ணன் கோயில் பிள்ளை
பெரியாழ்வார் திருமொழி - இரண்டாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - நான்காம் பாசுரம்
கொண்டல் வண்ணா! இங்கே போதராயே*
கோயிற் பிள்ளாய்! இங்கே போதராயே*
தெண் திரை சூழ் திருப்பேர்க் கிடந்த* திருநாரணா! இங்கே போதராயே*
உண்டு வந்தேன் அம்மம் என்று சொல்லி* ஓடி அகம் புக ஆய்ச்சி தானும்*
கண்டு எதிரே சென்று எடுத்துக் கொள்ளக்* கண்ணபிரான் கற்ற கல்வி தானே|
திருமங்கையாழ்வார்
003. திவ்ய ப்ரபந்தம் - 1428 - பரமனைப் பாடி நான் உய்ந்தேன்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - முதலாம் பாசுரம்
கை இலங்கு ஆழி சங்கன்* கரு முகில் திரு நிறத்தன்*
பொய் இலன் மெய்யன் தன் தாள்* அடைவரேல் அடிமை ஆக்கும்*
செய் அலர் கமலம் ஓங்கு* செறி பொழில் தென் திருப்பேர்*
பை அரவு அணையான் நாமம்* பரவி நான் உய்ந்த ஆறே|
004. திவ்ய ப்ரபந்தம் - 1429 - திருமாலைத் துதித்து நான் உய்ந்தேன்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
வங்கம் ஆர் கடல்கள் ஏழும்* மலையும் வானகமும் மற்றும்*
அம் கண் மா ஞாலம் எல்லாம்* அமுதுசெய்து உமிழ்ந்த எந்தை*
திங்கள் மா முகில் அணவு* செறி பொழில் தென் திருப்பேர்*
எங்கள் மால் இறைவன் நாமம்* ஏத்தி நான் உய்ந்த ஆறே|
005. திவ்ய ப்ரபந்தம் - 1430 - திருப்பேர் நகரை நினைந்து நான் உய்ந்தேன்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
ஒருவனை உந்திப் பூமேல்* ஓங்குவித்து ஆகம் தன்னால்*
ஒருவனைச் சாபம் நீக்கி* உம்பர் ஆள் என்று விட்டான்*
பெரு வரை மதிள்கள் சூழ்ந்த* பெரு நகர் அரவு அணை மேல்*
கரு வரை வண்ணன் தென் பேர்* கருதி நான் உய்ந்த ஆறே|
006. திவ்ய ப்ரபந்தம் - 1431 - அப்பக் குடத்தானை வாழ்த்தி நான் உய்ந்தேன்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - நான்காம் பாசுரம்
ஊன் அமர் தலை ஒன்று ஏந்தி* உலகு எலாம் திரியும் ஈசன்*
ஈன் அமர் சாபம் நீக்காய் என்ன* ஒண் புனலை ஈந்தான்*
தேன் அமர் பொழில்கள் சூழ்ந்த* செறி வயல் தென் திருப்பேர்*
வானவர்-தலைவன் நாமம்* வாழ்த்தி நான் உய்ந்த ஆறே|
007. திவ்ய ப்ரபந்தம் - 1432 - நரசிங்கனின் திருவடிகளை அடைந்து உய்ந்தேன்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
வக்கரன் வாய் முன் கீண்ட* மாயனே என்று வானோர்
புக்கு* அரண் தந்தருளாய் என்னப்* பொன் ஆகத்தானை*
நக்கு அரி உருவம் ஆகி* நகம் கிளர்ந்து இடந்து உகந்த*
சக்கரச் செல்வன் தென்பேர்த்* தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே|
008. திவ்ய ப்ரபந்தம் - 1433 - திருப்பேர் நகர் சேர்ந்து நான் வாழ்ந்தேன்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
விலங்கலால் கடல் அடைத்து* விளங்கிழை பொருட்டு*
வில்லால் இலங்கை மா நகர்க்கு இறைவன்* இருபது புயம் துணித்தான்*
நலம் கொள் நான்மறை வல்லார்கள்* ஓத்து ஒலி ஏத்தக் கேட்டு*
மலங்கு பாய் வயல் திருப்பேர்* மருவி நான் வாழ்ந்த ஆறே|
009. திவ்ய ப்ரபந்தம் - 1434 - கண்ணனின் பெயரையே சொல்லி உய்ந்தேன்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
வெண்ணெய் தான் அமுது செய்ய* வெகுண்டு மத்து ஆய்ச்சி ஓச்சி*
கண்ணி ஆர் குறுங் கயிற்றால்* கட்ட வெட்டென்று இருந்தான்**
திண்ண மா மதிள்கள் சூழ்ந்த* தென் திருப்பேருள்*
வேலை வண்ணனார் நாமம் நாளும்* வாய் மொழிந்து உய்ந்த ஆறே|
010. திவ்ய ப்ரபந்தம் - 1435 - நாள்தோறும் கண்ணனையே துதிப்பேன்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
அம் பொன் ஆர் உலகம் ஏழும் அறிய* ஆய்ப்பாடி தன்னுள்*
கொம்பு அனார் பின்னை கோலம்* கூடுதற்கு ஏறு கொன்றான்*
செம் பொன் ஆர் மதிள்கள் சூழ்ந்த* தென் திருப்பேருள்* மேவும்
எம்பிரான் நாமம் நாளும்* ஏத்தி நான் உய்ந்த ஆறே|
011. திவ்ய ப்ரபந்தம் - 1436 - என் சிந்தையில் வாழ்பவன் திருப்பேரூரான்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
நால் வகை வேதம் ஐந்து வேள்வி* ஆறு அங்கம் வல்லார்*
மேலை வானவரின் மிக்க* வேதியர் ஆதி காலம்*
சேல் உகள் வயல் திருப்பேர்ச்* செங் கண் மாலோடும் வாழ்வார்*
சீல மா தவத்தர் சிந்தை ஆளி* என் சிந்தையானே|
012. திவ்ய ப்ரபந்தம் - 1437 - தேவர் உலகு கிடைக்கும்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
வண்டு அறை பொழில் திருப்பேர்* வரி அரவு அணையில் பள்ளி*
கொண்டு உறைகின்ற மாலைக்* கொடி மதிள் மாட மங்கை*
திண் திறல் தோள் கலியன்* செஞ்சொலால் மொழிந்த மாலை*
கொண்டு இவை பாடி ஆடக்* கூடுவர் நீள் விசும்பே|
013. திவ்ய ப்ரபந்தம் - 1851 - திருப்பேர் நகரும் திருவெள்ளரையும்
பெரிய திருமொழி - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - நான்காம் பாசுரம்
துளக்கம் இல் சுடரை * அவுணன் உடல் பிளக்கும் மைந்தனைப் *
பேரில் வணங்கிப் போய் * அளப்பு இல் ஆர் அமுதை *
அமரர்க்கு* அருள் விளக்கினை *
சென்று வெள்ளறைக் காண்டுமே|
014. திவ்ய ப்ரபந்தம் - 1857 - இவற்றைப் பாடுவோருக்குத் துன்பமில்லை
பெரிய திருமொழி - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
பெற்ற மாளியைப்* பேரில் மணாளனை*
கற்ற நூல்* கலிகன்றி உரை செய்த*
சொல் திறம்* இவை சொல்லிய தொண்டர்கட்கு*
அற்றம் இல்லை* அண்டம் அவர்க்கு ஆட்சியே|
015. திவ்ய ப்ரபந்தம் - 2048 - எம்பிரான் பெருமையையே பேசுவேன்
திருக்குறுந்தாண்டகம் - இரண்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம் (17)
பேசினார் பிறவி நீத்தார்* பேர் உளான் பெருமை பேசி,*
ஏசினார் உய்ந்து போனார்* என்பது இவ் உலகின் வண்ணம்,*
பேசினேன் ஏச மாட்டேன்* பேதையேன் பிறவி நீத்தற்கு,*
ஆசையோ பெரிது கொள்க* அலைகடல் வண்ணர் பாலே*
016. திவ்ய ப்ரபந்தம் - 2050 - திருக்கோயில் சேர்க! உய்யலாம்
திருக்குறுந்தாண்டகம் - இரண்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (19)
பிண்டியார் மண்டை ஏந்திப்* பிறர் மனை திரி தந்து உண்ணும்*
உண்டியான் சாபம் தீர்த்த* ஒருவன் ஊர்*
உலகம் ஏத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம்*
கச்சி பேர் மல்லை என்று மண்டினார்*
உய்யல் அல்லால்* மற்றையார்க்கு உய்யல் ஆமே? (2)
017. திவ்ய ப்ரபந்தம் - 2059 - அடியார் மனம் தான் ஹரியின் கோயில்
திருநெடுந்தாண்டகம் - முதலாம் திருமொழி - எட்டாம் பாசுரம் (8)
நீரகத்தாய்! நெடு வரையின் உச்சி மேலாய்!*
நிலாத் திங்கள் துண்டத்தாய்! நிறைந்த கச்சி ஊரகத்தாய்*
ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்* உள்ளுவார் உள்ளத்தாய்*
உலகம் ஏத்தும் காரகத்தாய்! கார்வானத்து உள்ளாய்! கள்வா!*
காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய்*
பேராது என் நெஞ்சின் உள்ளாய்!*
பெருமான்! உன் திருவடியே பேணினேனே| (2)
018. திவ்ய ப்ரபந்தம் - 2060 - எம்பிரானே! நீ எங்கே இருக்கிறாய்
திருநெடுந்தாண்டகம் - முதலாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (9)
வங்கத்தால் மா மணி வந்து உந்து முந்நீர் மல்லையாய்!*
மதிள் கச்சி ஊராய்! பேராய்*
கொங்குத்தார் வளங் கொன்றை அலங்கல் மார்வன்*
குல வரையன் மடப் பாவை இடப்பால் கொண்டான்*
பங்கத்தாய் பாற் கடலாய்! பாரின் மேலாய்!*
பனி வரையின் உச்சியாய்! பவள வண்ணா!*
எங்கு உற்றாய்? எம்பெருமான்! உன்னை நாடி*
ஏழையேன் இங்ஙனமே உழிதர்கேனே|
019. திவ்ய ப்ரபந்தம் - 2070 - குடந்தை நகரும் பாடுகிறாள் என் மகள்
திருநெடுந்தாண்டகம் - இரண்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (19)
முற்று ஆரா வன முலையாள் பாவை*
மாயன் மொய் அகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும் அற்றாள்*
தன் நிறை அழிந்தாள் ஆவிக்கின்றாள்*
அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ! என்னும்*
பெற்றேன் வாய்ச் சொல் இறையும் பேசக் கேளாள்*
பேர் பாடி தண் குடந்தை நகரும் பாடி*
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள்*
பொரு அற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே|
திருமழிசையாழ்வார்
020. திவ்ய ப்ரபந்தம் - 2417 - பக்தர் உள்ளத்தில் உறைபவன் திருமால்
நான்முகன் திருவந்தாதி - நான்காம் திருமொழி - ஆறாம் பாசுரம் (36)
நாகத்து அணைக் குடந்தை* வெஃகா திரு எவ்வுள்*
நாகத்து அணை அரங்கம் பேர் அன்பில்*
நாகத்து அணைப் பாற்கடல் கிடக்கும்* ஆதி நெடுமால்*
அணைப்பார் கருத்தன் ஆவான்| (2)
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்