About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 10 April 2022

ஸ்ரீ ராமச்சந்த்ர அஷ்டகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

1. ஸுக்³ரீவ மித்ரம் பரமம் பவித்ரம் 
ஸீதா களத்ரம் நவமேக⁴ கா³த்ரம் 
காருண்ய பாத்ரம் ஸதபத்ர நேத்ரம் 
ஸ்ரீ ராமசந்த்³ரம் ஸததம் நமாமி॥

சுக்ரீவனின் நண்பரும் மிகத் தூய்மையானவரும் சீதையின் நாயகரும் புது மேக நிறத்தினரும் இரக்கம் நிரம்பியவரும் தாமரை போன்ற கண்களை உடையவருமான ஸ்ரீராமசந்திரா! உங்களை வணங்குகிறேன்.

2. ஸம்ஸார ஸாரம் நிக³ம ப்ரசாரம்
த⁴ர்மாவதாரம் ஹ்ருத பூ⁴மி பா⁴ரம்।
ஸதா³ விஹாரம் ஸுக²ஸிந்து⁴ ஸாரம்
ஸ்ரீ ராமசந்த்³ரம் ஸததம் நமாமி॥

உலக வாழ்க்கையைக் கடக்க உதவுபரும் வேதங்களைப் பரப்புபவரும் தர்மத்தின் அவதாரமும் பூமி பாரத்தைத் தீர்ப்பவரும் எப்போதும் களங்கமற்றவரும், மகிழ்ச்சிக் கடல் போன்றவருமான ஸ்ரீராமசந்திரா! உங்களை வணங்குகிறேன்.

3. லக்ஷ்மீ விலாஸம் ஜக³தாம் நிவாஸம்
லங்கா விநாஸம் பு⁴வந ப்ரகாஸம்।
பூ⁴தே³வ வாஸம் ஸரதி³ந்து³ ஹாஸம்
ஸ்ரீ ராமசந்த்³ரம் ஸததம் நமாமி॥

லக்ஷ்மியை விலாஸமாகக் கொண்டவரும் உலகங்களுக்கு இருப்பிடமானவரும் இலங்கையை அழித்தவரும் உலகத்துக்கு ஒளியானவரும்வேதியர்களின் துன்பத்தைப் போக்குபவருமாகிய ஸ்ரீராமசந்திரா! உங்களை வணங்குகிறேன்.

4. மந்தா³ர மாலம் வசநே ரஸாலம்
கு³ணைர் விஸாலம் ஹத ஸப்த தாலம்।
க்ரவ்யாத³ காலம் ஸுர லோக பாலம்
ஸ்ரீ ராமசந்த்³ரம் ஸததம் நமாமி॥

மந்தார மலர்மாலை அணிந்தவரும் இனிமையாகப் பேசுபவரும் நற்குணம் நிறைந்தவரும் ஏழு பனைமரங்களை அழித்தவரும் அசுரர்களுக்கு மரணமாக இருப்பவரும் சொர்க்கத்தின் பாதுகாவலராகவும் ஆகிய ஸ்ரீராமசந்திரா! உங்களை வணங்குகிறேன்.

5. வேதா³ந்த கா³நம் ஸகலைஸ் ஸமாநம்
ஹ்ருதாரி மாநம் த்ரித³ ஸப்ரதா⁴நம்।
க³ஜேந்த்³ர யாநம் விக³தா வஸாநம்
ஸ்ரீ ராமசந்த்³ரம் ஸததம் நமாமி॥

வேதாந்தத்தின் இசையானவரும் அனைவரையும் சமமாக பாவிப்பவரும் கர்வத்தை அடக்குபவரும் தேவர்களுக்கு முதன்மையானவரும் யானை வாகனம் உடையவரும் அனைவர் மனத்திலும் இருப்பவருமான ஸ்ரீராமசந்திரா! உங்களை வணங்குகிறேன்.

6. ஸ்யாமாபி⁴ ராமம் நய நாபி⁴ ராமம்
கு³ணபி⁴ ராமம் வச நாபி⁴ ராமம்।
விஸ்வ ப்ரணாமம் க்ருத ப⁴க்த காமம்
ஸ்ரீ ராமசந்த்³ரம் ஸததம் நமாமி॥

கருநிறங்கொண்டு கவர்பவரும் அழகிய விழிகளால் கவர்பவரும் நற்குணத்தால் கவர்பவரும் நற்சொற்களால் கவர்பவரும் உலகத்தினரால்  வணங்கப்படுபவரும் பக்தர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்பவருமான ஸ்ரீராமசந்திரா! உங்களை வணங்குகிறேன்.

7. லீலா ஸரீரம் ரணரங்க³ தீ⁴ரம்
விஸ்வைக ஸாரம் ரகு⁴வம்ஸ ஹாரம்।
க³ம்பீ⁴ர நாத³ம் ஜித ஸர்வ வாத³ம்
ஸ்ரீ ராமசந்த்³ரம் ஸததம் நமாமி॥

விளையாட்டாக அவதரிப்பவரும் போர்க்களத்தில் தீரமுடையவரும் உலகத்தின் சாரமானவரும் இரகுவம்சத்தின் ஆரம் போன்றவரும் கம்பீரமான குரலுடையவரும் வாதங்களில் வெல்பவருமான ஸ்ரீராமசந்திரா! உங்களை வணங்குகிறேன்.

8. க²லே க்ருதாந்தம் ஸ்வஜநே விநீதம்
ஸாமோ பகீ³தம் மநஸா ப்ரதீ³தம்।
ராகே³ண கீ³தம் வசநாத³தீதம்
ஸ்ரீ ராமசந்த்³ரம் ஸததம் நமாமி॥

கொடியவர்களுக்குக் கடுமையானவரும், தம்மைச் சார்ந்தவர்களுக்கு மிகவும் இனிமையானவரும், ஸாம வேதத்தால் இசைக்கப் படுபவரும், மனத்தால் தொழப் படுபவரும், பல பாடல்களால் வணங்கப் படுபவரும், தம் நாமத்தைச் சொல்பவர்களுக்கு அனைத்தையும் தருபவருமான ஸ்ரீராமசந்திரா! உங்களை வணங்குகிறேன்.


9. ஸ்ரீ ராமசந்த்³ரஸ்ய வராஷ்டகம் த்வாம் 
மயேரிதம் தே³வி மநோஹரம் யே।
பட²ந்தி ஸ்ருண்வந்தி க்³ருணந்தி ப⁴க்த்யா 
தே ஸ்வீயகாமாந் ப்ரளப⁴ந்தி நித்யம்॥

ப்³ரஹ்மாதி³ வேத³ ஸேவ்யாய
ப்³ரஹ்மண்யாய மஹாத்மநே।
ஜாநகீ ப்ராண நாதா²ய
ரகு⁴நாதா²ய மங்³களம்

இதி ஸத கோடி ராம சரிதாந்தர்க³தே ஸ்ரீமதா³ நந்த³ 
ராமாயணே வால்மீகீயே  ஸாரகண்டே³ 
யுத்³த⁴சரிதே த்³வாத³ஸ ஸர்கா³ந்தர் க³தம் ஸ்ரீராமாஷ்டகம் ஸமாப்தம் 

தேவி! ஸ்ரீராமசந்திரன் புகழ்பாடும் அஷ்டகத்தை உன் முன்பு நான் உரைத்தேன்.

॥இதி ஸ்ரீ ராமச்சந்த்³ர அஷ்டகம் ஸம்பூர்ணம்॥

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

ஸ்ரீ ரங்கநாத அஷ்டகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

1. ஆநந்த³ரூபே நிஜபோ³த⁴ரூபே 
ப்³ரஹ்ம ஸ்வரூபே ச்ருதி மூர்திரூபே।
சசாங்கரூபே ரமணீயரூபே 
ஸ்ரீரங்க³ரூபே ரமதாம் மநோ மே॥

ஆனந்த மந்திரங்களின் வடிவினரும், சத்திய ஞானசொரூபரும், பரபிரம்மமாக உள்ளவரும், ச்ருதிகளின் வேதங்களின் வடிவானவரும் கையில் சங்கேந்தி இருப்பவரும், அழகிய உருவமுடையவரும், ஸ்ரீரங்கத்தில் அருளாட்சி செய்பவருமான அந்த ரங்கநாதரிடம் என் மனம் லயிக்கின்றது.

2. காவேரிதீரே கருணாவிலோலே 
மந்தா³ரமூலே த்⁴ருʼதசாருசேலே।
தை³த்யாந்த காலே அகி²லலோகலீலே 
ஸ்ரீரங்க³லீலே ரமதாம் மநோ மே॥

காவேரி தீரத்தில் அதீதமான கருணையுடன் அருள் புரிபவரும், மந்தார மரத்தின் மேல் அமர்ந்தபடி புரியும் தனது அழகான லீலைகளால் மனத்தைக் கவர்பவரும் அசுரர்களின் அந்திம காலத்தை முடிவுக்கு கொண்டு வந்து அகில உலகையும் விளையாட்டாகவே காப்பவருமாகிய ஸ்ரீரங்கனுடைய லீலைகளின் பால் என் மனம் ஈடுபடுகின்றது.

3. லக்ஷ்மீ நிவாஸே ஜக³தாம் நிவாஸே 
ஹ்ருʼத்பத்³ம வாஸே ரவிபி³ம்ப³ வாஸே।
க்ருʼபா நிவாஸே கு³ணப்³ருʼந்த³ வாஸே
ஸ்ரீரங்க³ வாஸே ரமதாம் மநோ மே॥

லட்சுமி தேவியின் இருப்பிடமாக உள்ளவரும் (திருமாலின் மார்பை விட்டு என்றும் நீங்காதிருப்பவள் மகாலட்சுமி) அகில உலகிற்கும் ஆதாரமானவரும் பக்தர்களின் தாமரை போன்ற இதயத்தில் வசிப்பவரும், சூரிய மண்டலத்தில் ஒளிர்பவரும், கருணையின் இருப்பிடமாய் இருப்பவரும், காருண்யத்துக்கு ஆதாரமானவரும், ஸ்ரீரங்கத்திலே வசிப்பவருமான அந்த ரங்கநாதரின் பால் என் மனம் வசப்படுகிறது.

4. ப்³ரஹ்மாதி³வந்த்³யே ஜக³தே³க வந்த்³யே
முகுந்த³ வந்த்³யே ஸுரநாத² வந்த்³யே।
வ்யாஸாதி³ வந்த்³யே ஸநகாதி³ வந்த்³யே
ஸ்ரீரங்க³ வந்த்³யே ரமதாம் மநோ மே॥

பிரம்மா முதலிய தேவர்களால் வணங்கப் படுபவரும், உலக உயிர்கள் அனைத்தினாலும் வழிபடத் தகுந்தவரும், முகுந்தனால் துதிக்கப் படுபவரும், தேவேந்திரனால் நமஸ்கரிக்கப் படுபவரும், வியாசர் மற்றும் சனகாதி முனிவர்களால் போற்றப் படுபவரும் ஸ்ரீரங்கத்தில் வசிப்பவருமான ரங்கநாதரை தரிசிக்க என் மனம் விழைகின்றது.

5. ப்³ரஹ்மாதி⁴ ராஜே க³ருடா³தி⁴ ராஜே
வைகுண்ட² ராஜே ஸுரராஜ ராஜே।
த்ரைலோக்ய ராஜே அகி²ல லோக ராஜே 
ஸ்ரீரங்க³ ராஜே ரமதாம் மநோ மே॥

பிரம்மாவுக்கு அதிபதியும் கருடனுக்கு எஜமானரும், வைகுண்டத்தின் அரசரும், தேவராஜனுக்கு ராஜாவும், மூன்று உலகங்களுக்கும் அரசனும், ஒட்டுமொத்த பிரபஞ்சத்துக்கும் அதிபதியும் ஸ்ரீரங்கத்தில் வசிப்பவருமாகிய ரங்கநாதனிடம் என் மனம் நாட்டமுடையதாகிறது.

6. அமோக⁴ முத்³ரே பரிபூர்ண நித்³ரே 
ஸ்ரீயோக³ நித்³ரே ஸஸமுத்³ர நித்³ரே।
ச்ரிதைக ப⁴த்³ரே ஜக³தே³க நித்³ரே 
ஸ்ரீரங்க³ ப⁴த்³ரே ரமதாம் மநோ மே॥

உயர்வான அபய முத்திரையை உடையவரும், முழுமையான நித்திரையை உடையவரும், யோக நித்திரையில் ஆழ்ந்தவரும், பாற்கடலில் பள்ளி கொண்டு இருப்பவரும், அடைக்கலம் அடைந்தவர்களின் தேடுதலுக்குச் செவிசாய்த்து அருள்பவரும், பிரபஞ்சத்தில் நிலையாக இருக்கும் ஒரே ஒருவருமான ஸ்ரீரங்கவாசரின் பால் என் மனம் எப்போதும் ஈர்க்கப்படுகிறது.

7. ஸ சித்ர சாயீ பு⁴ஜகே³ந்த்³ர சாயீ 
நந்தா³ங்க சாயீ கமலாங்க சாயீ।
க்ஷீராப்³தி⁴ சாயீ வடபத்ர சாயீ 
ஸ்ரீரங்க³ சாயீ ரமதாம் மநோ மே॥

ஆச்சரியப்படும் வடிவினில் படுத்திருப்பவரும், ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டு இருப்பவரும், நந்தன் மடியில் படுத்திருப்பவரும், பிராட்டியாரின் மடியில் தலை வைத்துப்  படுத்திருப்பவரும், ஸ்ரீரங்கத்தில் சயனித்து இருப்பவரும் ஆகிய ரங்கநாதரின் மேல் என் மனம் எப்போதும் ஒன்றியுள்ளது.

8. இத³ம் ஹி ரங்க³ம் த்யஜதா மிஹாங்க³ம் 
புநர் நசாங்கம் யதி³ சாங்க³மேதி।
பாணௌ ரதா²ங்க³ம் சரணேம்பு³ கா³ங்க³ம் 
யாநே விஹங்க³ம் சயநே பு⁴ஜங்க³ம்॥

இது வல்லவா ஸ்ரீரங்கம்! இத் தலத்தில் மரணிப்பவர்கள் மறு பிறப்பால் அவதிப்படுவது இல்லை. அப்படி மறு சரீரம் பெற்றால் (மறு பிறவியில் பிறந்தால்) கையில் சக்கரம், காலில் கங்கா ஜலம், பயணிக்கும் போது கருடன், சயனத்தில் சர்ப்பம் என்று சாட்சாத் மகாவிஷ்ணுவின் சாருப்யத்தையே அடைவர். (பகவான் தன்னோடு அவர்களை ஐக்கியப்படுத்திக் கொள்வதால் அவர்களும் அவரது வடிவையே பெறுவர் என்பது உட்பொருள்).

9. ரங்க³நாதா²ஷ்டகம் புண்யம் 
ப்ராதருத்தா²ய ய: படே²த்।
ஸர்வாந் காமாநவாப்நோதி 
ரங்கி³ஸாயுஜ்ய மாப்நுயாத்॥

எவரொருவர் இந்த ரங்கநாத அஷ்டகத்தை தினமும் காலையில் படிக்கிறாரோ அவரது நியாயமான எல்லா ஆசைகளும் நிறைவேறுவதோடு, ரங்கநாதரின் சாயுஜ்யத்தையும் அவர் பெறுவார் என்பது நிச்சயம்!

॥இதி ஸ்ரீ ரங்க³நாதா²ஷ்டகம் ஸம்பூர்ணம்॥

ஸ்ரீ ரங்கநாதர் ஸ்துதி।।

ஸப்த ப்ராகார மத்யே ஸரஸி ஜ முகுலோத் பாஸமானே விமானே
காவேரீ மத்யதேசே பணிபதி ஸயனே சேஷபர்யங்க பாகே।
நித்ரா முத்ரா பிராமம் கடிநிச்டஸிர: பார்கவ விந்யஸ்த ஹஸ்தம்
பத்மா தாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்கநாதம் பஜேஹம்।।

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

ஸ்ரீ மதுராஷ்டகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

1. அத⁴ரம் மது⁴ரம் வத³னம் மது⁴ரம்
நயனம் மது⁴ரம் ஹஸிதம் மது⁴ரம்|
ஹ்ருத³யம் மது⁴ரம் க³மனம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்||

மதுராவில் அவதரித்த மாயவனே! உனது இதழ்கள் அழகானவை. முகம் வசீகரமானது. கண்கள் வனப்பானவை. உனது புன்முறுவல் அழகு. இதயம் அழகு, தளிர்நடை அழகு, மதுராதிபனே நீ நிறைந்திருப்பதால் அகிலமே அழகானது.

2. வசனம் மது⁴ரம் சரிதம் மது⁴ரம்
வஸனம் மது⁴ரம் வலிதம் மது⁴ரம்|
சலிதம் மது⁴ரம் ப்⁴ரமிதம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்|| 

உனது பேச்சு இனியது. தன்மை அழகானது. நீ இருக்கும் இடம் அழகு. தவழ்தல் அழகு, நகர்தல் அழகு. சுழற்சி அழகு, மதுரா நாயகனே எதிலும் நீயே நிறைந்திருப்பதால் உலகமே அழகு.

3. வேணுர் மது⁴ரோ ரேணுர் மது⁴ர꞉
பாணிர் மது⁴ர꞉ பாதௌ³ மது⁴ரௌ|
ந்ருத்யம் மது⁴ரம் ஸக்²யம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்||

உனது குழல் ஓசை இனிமையானது. பாத துளி உயர்வானது. கைகளும் கால்களும் அழகு. உன்திரு நடனம் ஒய்யாரமானது. பழகுதல் அழகு. மதுரா நாயகனே எதிலும் நீ இருப்பதால் அகிலமே அழகு.

4. கீ³தம் மது⁴ரம் பீதம் மது⁴ரம்
பு⁴க்தம் மது⁴ரம் ஸுப்தம் மது⁴ரம்|
ரூபம் மது⁴ரம் திலகம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்||

உனது பாடல் அழகு. உன் பட்டாடை அழகு. நீ பருகுதலும் அழகு. உண்பதும் காண்பதும் அழகு. தூங்குவது கொள்ளை அழகு. உன் உருவம் அழகு. உனது நெற்றிப் பொட்டு அழகு. மதுரா நாயகனே எல்லாமே நீ என்பதால் அகிலமே அழகு..

5. கரணம் மது⁴ரம் தரணம் மது⁴ரம்
ஹரணம் மது⁴ரம் ஸ்மரணம் மது⁴ரம்|
வமிதம் மது⁴ரம் ஷமிதம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்||

உனது குறும்பு செயல்கள் அழகு. நீ எதையும் கடந்து நிற்பது அழகு. பக்தர்களின் மனதை அபகரிப்பது அழகு. உன்னைப்பற்றி நினைப்பதே இனிமையானது. அணி அழகு, தோற்றம் அழகு, மதுராபுரியரசே, யாவும் நீயாக இருப்பதால் இவ்வுலகமே அழகானது.

6. கு³ஞ்ஜா மது⁴ரா மாலா மது⁴ரா
யமுனா மது⁴ரா வீசீ மது⁴ரா|
ஸலிலம் மது⁴ரம் கமலம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்|| 

கதம்ப பூக்கள் அழகு. மாலை அழகு. அலைகள் அழகு. யமுனை நீர் அழகு. தாமரை மலர் அழகு. மதுராபுரி நாயகனே, அகிலமே உனது என்பதால் அதுவும் பேரழகு.

7. கோ³பீ மது⁴ரா லீலா மது⁴ரா
யுக்தம் மது⁴ரம் முக்தம் மது⁴ரம்|
த்³ருஷ்டம் மது⁴ரம் ஶிஷ்டம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்||

தோழியர் அழகு, கொண்டாட்டம் அழகு, கூடல் அழகு, சிஷ்ட பரிபாலனம் அழகு, பார்வை அழகு, பாவனை அழகு, மதுராதிபனே சகலமும் நீயே என்பதால் அகிலமே அழகு.

8. கோ³பா மது⁴ரா கா³வோ மது⁴ரா
யஷ்டிர் மது⁴ரா ஸ்ருஷ்டிர் மது⁴ரா|
த³லிதம் மது⁴ரம் ப²லிதம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்|| 

ஆயர் அழகு. பசுக்கள் அழகு, செண்டை அழகு, பிறவி அழகு, பிரிதல் அழகு, பயன் பலிப்பது அழகு, நீயே எதிலும் பரவி நிற்பதால் இந்த உலகமே அழகு.

||இதி ஸ்ரீ மதுராஷ்டகம் சம்பூர்ணம்||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||