About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 16 April 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 139

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||உத்தர பீடி²கா||
உத்தர பாகம்
பலஸ்²ருதி

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 1

ஶ்ரீ பீஷ்ம உவாச|
இதீத³ம் கீர்த்தி நீயஸ்ய 
கேஸ²வஸ்ய மஹாத்மந꞉|
நாம் நாம் ஸஹஸ்ரம் தி³வ்யாநாம் 
அஸே²ஷேண ப்ரகீர்திதம்|| 


மஹாத்மந꞉ - மஹாத்மநஹ

மகிமை பொருந்தியவரும் போற்றத் தக்கவருமான கேசவருடைய திவ்ய நாமங்கள் ஆயிரமும் ஒன்று விடாமல் சந்தந மகாராஜாவின் குமாரரான பீஷ்மரால் குந்தி மகனான தரும புத்திரனுக்கு கூறப்பட்டன.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 3.3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||

ஸ்லோகம் - 3.3 

ஸ்ரீ ப⁴க³வாநுவாச||| 
லோகே அஸ்மிந் த்³விவிதா⁴ நிஷ்டா² 
புரா ப்ரோக்தா மயா நக⁴|
ஜ்ஞாந யோகே³ந ஸாங்க்²யா நாம் 
கர்ம யோகே³ந யோகி³ நாம்||

  • ஸ்ரீப⁴க³வாநுவாச - ஸ்ரீபகவான் சொல்லுகிறார்
  • லோகே - உலகில்  
  • அஸ்மிந் - இந்த 
  • த்³விவிதா⁴ - இரு விதமான 
  • நிஷ்டா² - நம்பிக்கை  
  • புரா - முன்னரே 
  • ப்ரோக்தா - கூறப்பட்டது 
  • மய - என்னால் 
  • அநக⁴ - பாவமற்றவனே 
  • ஜ்ஞாந யோகே³ந - ஞானம் என்னும் இணைப்பு முறையால் 
  • ஸாங்க்²யா நாம் - ஸாங்கிய தத்துவவாதிகளின் 
  • கர்ம யோகே³ந - பக்தி என்னும் இணைப்பு முறையில் 
  • யோகி³ நாம் - பக்தர்களது

ஸ்ரீ பகவான் கூறுகிறார்: பாவமற்றவனே! அர்ஜுநா, இந்த உலகில் இருவிதமான நம்பிக்கை இருக்கிறது என என்னால் முன்னரே கூறப்பட்டது. ஸாங்கிய தத்துவவாதிகளின் ஞானம் என்னும் இணைப்பு முறையாலும், பக்தர்கள் பக்தி என்னும் முறையாலும் தன்னுணர்வினை அடைய முயல்கிறார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.29

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.29

பா⁴ரத வ்யப தே³ஸே²ந
ஹ்யாம் நாயார் த²ஸ்²ச த³ர்ஸி²த:|
த்³ருஸ்² யதே யத்ர த⁴ர்மாதி³ 
ஸ்த்ரீ ஸூ²த்³ராதி³ பி⁴ரப் யுத|| 

  • பா⁴ரத வ்யப தே³ஸே²ந - பாரத கதை என்ற வ்யாஜமாக 
  • ஆம் நாயார் த²ஸ்² ச -  வேதப் பொருள்களும் 
  • த³ர்ஸி²தஹ ஹி -  காண்பிக்கப் பட்டதன்றோ 
  • உத யத்ர - மேலும் இந்த பாரதத்தில் 
  • ஸ்த்ரீ - பெண்கள் 
  • ஸூ²த்³ராதி³பி⁴ - ஸூத்ரர்களாலும் 
  • அபி⁴  - கூட 
  • த⁴ர்மாதி³  - தர்மம் முதலியவை 
  • த்³ருஸ்² யதே -  தெரிந்து கொள்ளப் படுகின்றது

மாதர்கள், நான்காம் வருணத்தவர் ஆகியவர்களும் பின்பற்றக் கூடிய அறநெறிகளையும், வேதவிழுப் பொருளையும் அனைவரும் அறியும் வண்ணம் 'பாரதம்' என்ற பெயரில் வெளியிட்டேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.74

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.74

நிவேத³ யித்வாபி⁴ ஜ்ஞாநம் 
ப்ரவ்ருத்திம் ச நிவேத்³ய ச|
ஸமாஸ்² வாஸ்ய ச வைதே³ஹீம் 
மர்த³ யாமாஸ தோரணம்|| 

  • அபி⁴ ஜ்ஞாநம் - ராமனின் மோதிரம் எனும் அடையாளத்தை 
  • நிவேத³ யித்வா ச - தெரியப்படுத்தியும்
  • ப்ரவ்ருத்திம் - முயற்சியை 
  • நிவேத்³ய ச - தெரிவித்தும் 
  • வைதே³ஹீம் - விதேஹ தேசத்து அரசர் பெண்ணை 
  • ஸமாஸ்² வாஸ்ய ச - தைரியப்படுத்தியும் 
  • தோரணம் - வெளி வாயிலை
  • மர்த³ யாமாஸ - சிதைத்தார்

ராமனின் மோதிரம் எனும் அடையாளத்தைக் கொடுத்து, ராமனின் ஏற்பாடுகளையும் சொல்லி,  சீதைக்கு ஆறுதலளித்து அசோக வனத்தில் இருந்த கோட்டைவாயில் கோபுரத்தை (தோரணத்தை) அழித்தான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திவ்ய ப்ரபந்தம் - 116 - பெரியாழ்வார் திருமொழி - 1.9.9

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 116 - கற்பக மரத்தைப் பூமிக்குக் கொண்டு வந்தவன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்

கற்பகக் காவு* கருதிய காதலிக்கு*
இப்பொழுது ஈவன் என்று* இந்திரன் காவினில்* 
நிற்பன செய்து* நிலாத் திகழ் முற்றத்துள்* 
உய்த்தவன் என்னைப் புறம் புல்குவான்* 
உம்பர் கோன் என்னைப் புறம் புல்குவான்|

  • இந்திரன் காவினில் - இந்த்ரனுடைய உத்யாந வநத்திலிருந்த
  • கற்பகம் காவு - கற்பகச் சோலையை
  • கருதிய - தன் வீட்டிற் கொண்டு வைக்க வேணுமென்று விரும்பிய
  • காதலிக்கு - தனக்கு ப்ரியையான ஸத்ய பாமைப் பிராட்டிக்கு
  • இப்பொழுது - இப்பொழுதே
  • ஈவன் - கொண்டு வந்து தருவேன்
  • என்று - என்று சொல்லி
  • நிலா திகழ் - நிலவொளி சூழ்ந்த
  • முற்றத்துள் - அவள் வீட்டு முற்றத்தில்
  • நிற்பன செய்து - கற்பக விருக்ஷத்தை நிற்க வைத்து  
  • உய்த்தவன் - தழைக்கும்படி செய்த கண்ணன்
  • என்னை - என்னுடைய
  • புறம் - முதுகை
  • புல்குவான் - கட்டிக் கொள்வான்
  • உம்பர் கோன் - அன்று தன் பராக்ரமத்தை காட்டிய தேவர்கள் தலைவன்
  • என் புறம் - என்னுடைய 
  • புல்குவான்! - முதுகை கட்டிக் கொள்வான்

தன்னுடைய காதலி சத்யபாமாவின் விருப்பத்திற்கு இணங்க இந்திரனுடைய நந்தவனத்திலிருந்த கற்பகச் சோலையை, "இதோ இப்பொழுதே கொண்டு வந்து தருகிறேன் " என்று கூறி அவள் வீட்டு நிலா காயும் முற்றத்தில் இருத்தி மலரச் செய்தவன், கண்ணன், என் பின்னால் வந்து என்னைக் கட்டிக் கொள்வான்! விண்ணோர் தலைவன் என்னைப் பின்புறம் வந்து கட்டிக் கொள்வான்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 035 - திருதேவனார் தொகை 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

035. திருதேவனார் தொகை (திருநாங்கூர்)
முப்பத்தி ஐந்தாவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்

1. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள் 
பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 1248 - 1257 - நான்காம் பத்து - முதலாம் திருமொழி 

--------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்

மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி

ஆர்க்கும் வலம் புரியால் அண்டமும் எண் திசையும்*
கார்க்கடலும் வெற்பும் கலங்கினவால் சீர்க்கும்*
திருத் தேவனார் தொகை மால் செவ்வாய் வைத்து ஊதத்*
தருத் தேவனார் தொகையும் சாய்ந்து*

  • சீர்க்கும் – சிறப்புப் பெற்ற
  • திருத்தேவனார்தொகை மால் – திருத்தேவனார் தொகை என்னும் திவ்ய ஸ்தலத்தில் எழுந்தருளி இருக்கின்ற திருமால்
  • பாரிஜாத விருக்ஷத்தைத் தேவ லோகத்தில் இருந்து பேர்த்துக் கொணரும் போது
  • செம் வாய் வைத்து ஊத – பாஞ்ச ஜந்யத்தைத் தமது சிவந்த வாயிலே வைத்து ஊதுகையில்
  • ஆர்க்கும் வலம்புரியால் – பேர் ஆரவாரம் செய்கின்ற அந்த வலம்புரிச் சங்கத்தினால்
  • தரு தேவனார் தொகையும் – கற்பக தருவின் நிழலில் வசிக்கின்ற தேவர்களின் கூட்டமும்
  • சாய்ந்து – மூர்ச்சித்து விழ 
  • அண்டமும் – அண்டங்களும்
  • எண் திசையும் – எட்டுத் திக்குக்களும்
  • கார் கடலும் – கரிய சமுத்திரமும்
  • வெற்பும் – அஷ்ட குல பருவதங்களும்
  • கலங்கின – கலங்கிப் போயின

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 83

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 28

ஸ்கந்தம் 03

கபில பகவான் தன் பவள வாய் திறந்து தன்னைச் சுமந்த தாயின் பந்தங்களை அறச்செய்யுமாறு பேசினார்.

அம்மா! நான் அனைத்து ஜீவனுள்ளும் அந்தராத்மாவாக இருப்பவன். ப்ரக்ருதி, புருஷன் இவர்களை வழி நடத்துபவன். என்னை வணங்குவதால் மரணபயம்‌ நீங்கும். என்னிடம்‌ உள்ள பயத்தினாலேயே பஞ்ச பூதங்களும் தன் பணிகளைச் செவ்வனே செய்கின்றன. ஆகவே, யோகிகளும், பக்தர்களும் பயமே இல்லாத என் சரணத்தையே பற்றுகிறார்கள்.


ப்ரக்ருதி முதலிய தத்வங்களின் இலக்கணத்தைத் தொடர்ந்து கூறினார் கபிலர். அன்பு அம்மா! ஆன்மாவைப் பற்றிய உண்மை அறிவே மோக்ஷத்திற்கு வழி காட்டும். அதுதான் மனிதர்களின் யான், எனது என்ற அஹங்காரத்தைக் களைய உதவும். இந்த அகில உலகங்களும் எந்த பரமானால் எங்கும் நிரம்பி வழிகிறதோ, அந்த ஆன்மதத்வமே புருஷன். அவன் அனாதி. தோற்றமும் முடிவும் இல்லாதவன். ப்ரக்ருதி வயப்படாதவன். ஹ்ருதய குகையில் காட்சி தருபவன். தனக்குத்தானே ஒளிர்பவன்.

ப்ரக்ருதி ஸத்வம், ராஜஸம், தாமஸம் என்னும்‌ முக்குணங்கள் உடையது. அதற்கு சுயமாக சக்தி கிடையாது. பகவானுடன் இருப்பதாலேயே சக்தி பெற்று தன் மாயையால் செயல்களைப் புரிகிறது. ப்ரக்ருதி என்பது ஆவரண சக்தியான மறைக்கும் திறன், விக்ஷேப சக்தியான கலக்கும் திறன் என்று இரு வகைப்படும். ஆவரண சக்தியோடு ஜீவனுடன் கூடினால் அது அவித்யை அல்லது அறியாமை எனப்படும். விக்ஷேப சக்தியுடன்‌ பகவானைக் கலந்தால், அது மாயை எனப்படுகிறது.

புருஷன் ஜீவன், ஈஸ்வரன் என்று இரு வகையாகத் தோற்றம் அளிக்கிறான். ப்ரக்ருதியின் உண்மையறிவு இன்மையால், உலகியல்‌ இன்ப துன்பங்களை அடைகிறான் ஜீவன். அதே ப்ரக்ருதியைத் தன் வயப்படுத்தி படைப்பு முதலியவைகளைச் செய்கிறான். ப்ரக்ருதியின் உண்மை அறிவைப் பெறும் ஜீவன் ஈஸ்வரனின் ஸ்தானத்தை அடைந்து அவனுடன் கலந்து விடுகிறான். அவ்வாறு உண்மை அறிவைப் பெற்ற ஜீவனையும் ஈஸ்வரனையும் வேறுபடுத்த இயலாது. ப்ரக்ருதியின் உண்மை அறிவற்ற ஜீவன் உலகை ஐந்து வழிகளால் அடைகிறது. ப்ரக்ருதியின் ஸத்வகுணத்தைக் கொண்டு ஆதி புருஷன் போன்ற ஜீவன் படைக்கப்படுகிறான். அந்த ஜீவன் ப்ரக்ருதியின் சக்தியில் மயங்கித் தன் உண்மை ஸ்வரூபத்தை மறந்து விடுகிறான். இதனாலேயே ஆண் பெண்களுக்குள் ஈர்ப்புத் தன்மை தோன்றியது. அதை ஜீவன் தன் குணமாக ஏற்றுக்கொண்டான். அந்த ஜீவன் முக்குணத்தினால் ஏற்படும் செய்கைகளைத் தான் செய்வதாகவே எண்ணுகிறான். நானே செயல்களைச் செய்கிறேன் என்ற எண்ணத்தால் தான், செயலற்ற, ஸ்வந்தந்திரமான, ஆனந்தமயமான ஜீவனுக்கு பிறப்பு இறப்பு, ப்ரக்ருதிக்கு அடிமையாவது போன்ற தன்மைகள் ஏற்படுகின்றன. 

தேவஹூதி கேட்டாள்.  புருஷோத்தமா! ப்ரக்ருதி அதாவது கண்ணால் காணப்படும் உலகம், புருஷன் இவை இரண்டின் இலக்கணம் என்ன? இவைதானே ப்ரபஞ்சத்திற்குக் காரணம்? இவை இரண்டும் எங்கிருந்து உற்பத்தியாகின்றன?

பகவான் சொல்லத் துவங்கினார். ப்ரக்ருதி முக்குணங்களை உடையது. அழிவில்லாதது. காரண காரிய வடிவானது. எல்லா விதச் செயல்பாடுகளுக்கும் நிலைக்களனாக விளங்குவது. ஐந்து பூதங்கள், ஐந்து தன்மாத்திரைகள், மனம், அஹங்காரம், மஹத், அவ்யக்தம்‌ என்ற நான்கு அந்தக்கரணங்கள், பத்து பொறிகள், ஆகிய இருபத்து நான்கு தத்துவங்கள் அடங்கிய திறன் ப்ரக்ருதியின் காரியம்‌ என்று கூறப்படுகிறது.

மேற்கொண்டு இந்த தத்வங்களை விளக்கிக் கூறினார் கபிலர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்