About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 2 November 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 68

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 38

பத்³ம நாபோ⁴ ரவிந்தா³க்ஷ: 
பத்³ம க³ர்ப்ப⁴ஸ்² ஸ²ரீர ப்⁴ருத்:|
மஹர்தி⁴ர் ருத்³தோ⁴ வ்ருத்³தா⁴த்மா 
மஹாக்ஷோ க³ருட³த்⁴ வஜ:||

  • 347. பத்³ம நாபோ⁴ - தாமரை மலரை உந்தியில் பெற்ற தனிப்பெரும் நாயகன்.
  • 348. அரவிந்தா³க்ஷஃ - செந்தாமரைக் கண்ணன்.
  • 349. பத்³ம க³ர்ப்ப⁴ஸ்² - தாமரையை ஆசனமாக உடையவன். இதயக் கமலத்தில் எழுந்தருளியிருப்பவன்.
  • 350. ஸ²ரீர ப்⁴ருத்து - சரீரத்தைத் தாங்குபவன்.
  • 351. மஹர்தி⁴ர் - பெருஞ்செல்வம் உடையவன்.
  • 352. ருத்³தோ⁴ - விருத்தியடைபவன்.
  • 353. வ்ருத்³தா⁴த்மா - நிறைவுற்ற ஆத்ம வடிவினன்.
  • 354. மஹாக்ஷோ - சிறந்த அச்சினை உடைய வாகனமுடையவன்.
  • 355. க³ருட³த்⁴ வஜஹ - கருடக்கொடி உடையவன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.5
 
கு³ரூ நஹத்வா ஹி மஹாநு பா⁴வாந்
ஸ்²ரேயோ போ⁴க்தும் பை⁴க்ஷ்யம பீஹ லோகே|
ஹத்வார் த²காமாந் ஸ்து கு³ரூ நிஹைவ 
பு⁴ஞ்ஜீய போ⁴கா³ந் ருதி⁴ர ப் ரதி³க்³தா⁴ந்||

  • கு³ரூந் - பெரியோர் 
  • அஹத்வா - கொல்லாமல் 
  • ஹி - உறுதியாக 
  • மஹாநு பா⁴வாந் - மகாத்மாக்கள் (குருக்கள்)
  • ஸ்²ரேயோ - சிறந்தது 
  • போ⁴க்தும் - வாழ்வை அனுபவித்தல் 
  • பை⁴க்ஷ்யம் - பிச்சையெடுத்து 
  • அபி - கூட 
  • இஹ - இவ்வாழ்வில் 
  • லோகே - இவ்வுலகில் 
  • ஹத்வா - கொன்று 
  • அர்த² - இலாபம் 
  • காமாந் - ஆசைப்பட்டு 
  • து - ஆனால் 
  • கு³ரூந் - பெரியோர் 
  • இஹ - இவ்வுலகில் 
  • ஏவ - நிச்சயமாக 
  • பு⁴ஞ்ஜீய - அனுபவிக்க வேண்டிய 
  • போ⁴கா³ந் - இன்பங்கள் 
  • ருதி⁴ர - இரத்தம் 
  • ப்ரதி³க்³தா⁴ந் - கறை படிந்து

மஹாத்மாக்களான பெரியோர்களை கொல்லாமல், இவ்வுலகில், இவ்வாழ்வில், உறுதியாக பிச்சை எடுத்து கூட, வாழ்வை அனுபவித்தலே, சிறந்தது. இலாபங்களை விரும்பிய போதிலும், அவர்கள் பெரியோர்களே. ஆனால், நான், இவ்வுலகில் அனுபவிக்க வேண்டிய, இன்பங்களுக்காக ஆசைப்பட்டு, அவர்களை கொன்றால், , அனைத்திலும் இரத்தக் கறையே படிந்திருக்கும். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.3

யஸ்யா வய வஸம் ஸ்தா²நை: 
கல்பிதோ லோக விஸ்தர:|
தத்³வை ப⁴க³வதோ ரூபம் 
விஸு²த்³த⁴ம் ஸத்த்வ மூர்ஜிதம்||

  • யஸ்ய - எந்த விராட் சுரூபனின் அவையவங்களின்
  • அவய வஸம் ஸ்தா² நைஹி - கை கால் முதலிய அமைப்பால்
  • லோக விஸ்தரஹ கல்பிதோ - உலகங்களில் விஸ்தாரம் கற்பிக்கப்பட்டதோ
  • ப⁴க³வதோ தத்³வை ரூபம் - அப்படிப்பட்ட புருஷனுடைய அந்த உருவமானது
  • ஊர்ஜிதம் - பலத்தோடு கூடியது
  • விஸு²த்³த⁴ம் - ஸுத்த ஸ்வரூபமானது 
  • ஸத்த்வம் - ஸத்வ குணம் நிறைந்தது

அந்த விராட் புருஷனுடைய அங்க அமைப்பிலிருந்து பலபடியான உலகங்கள் உண்டுபண்ணப்பட்டன. பகவானுடைய அந்த விராட் திருவுருவம் தூய்மையான சத்வ குணம் நிறைந்தது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.3

சாரித்ரேண ச கோ யுக்த: 
ஸர்வ பூ⁴தேஷு கோ ஹித:।
வித்³வாந் க: க: ஸமர்த²ஸ்² ச 
கஸ்² சைக ப்ரிய த³ர்ஸ²ந:॥ 

  • சாரித்ரேண - குல ஆச்சாரத்துடன்
  • யுக்தஹ ச -  கூடியவனும்
  • கோ -   எவன்
  • ஸர்வ பூ⁴தேஷு -  அனைத்து உயிரினங்களின்
  • ஹிதஹ கோ -   நலனில் அக்கறை கொண்டவன்
  • வித்³வாந் - வித்யா நிபுணன் 
  • கஹ -  எவன்
  • ஸமர்த²ஸ்² ச -  வல்லவனும்
  • கஸ் -  எவன்
  • ஏக ப்ரிய த³ர்ஸ²நஹ கஸ்²: -  பார்ப்பதற்கு தனித்தன்மை வாய்ந்த இனிமையானவன் எவன்

நல்லொழுக்கம் கொண்டவனும், அனைத்து உயிரினங்களின் நன்மையில் விருப்பம் கொண்டவனும், திறன் மிக்கவனும், எதையும் செய்ய இயன்றவனும், வித்தையில் வல்லவனும், தனித்த எழில் கொண்டவனும் எவன்? 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 51 - பெரியாழ்வார் திருமொழி - 1.3.8

ஸ்ரீ:
 ||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 51 - பூமா தேவி அளித்த 
உச்சி மணிச் சுட்டி
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - மூன்றாம் திருமொழி - எட்டாம் பாசுரம்

கச்சொடு பொன் சுரிகை* 
காம்பு கனக வளை*
உச்சி மணிச் சுட்டி* 
ஒண் தாள் நிரைப் பொன் பூ*
அச்சுதனுக்கென்று
அவனியாள் போத்தந்தாள்*
நச்சு முலை உண்டாய்! தாலேலோ* 
நாராயணா! அழேல் தாலேலோ!

  • கச்சொடு - இடுப்புப் பட்டையையும்
  • பொன் - பொன்னால் செய்த
  • சுரிகை - உடை வாளையும்
  • காம்பு - காம்புகளை உடைத்த பூவடிவிலுள்ள
  • கனம் - பொன்னாலான
  • வளை - வளைகளையும்
  • மணி - ரத்னம் இழைத்துச் செய்யப்பட்டதா
  • உச்சி - உச்சியிலே சாத்தக் கூடிய
  • மணிச்சுட்டி - மணிச் சுட்டியையும்
  • ஒள் தாள் - அழகிய காம்புகளுடைய
  • நிரை - அடர்த்தியான
  • பொற்பூ - தங்கப் பூக்களையும்
  • அச்சுதனுக்கு என்று - கண்ணபிரானுக்குக் கொடுப்பீர் என்று
  • அவனியாள் - பூமிப் பிராட்டியானவள்
  • போத்தந்தாள் - அனுப்பினாள்
  • நஞ்சு - விஷமேற்றின
  • முலை - பூதனையின் முலையின் பாலை
  • உண்டாய் - உண்ட கண்ணனே! 
  • தாலேலோ! - கண்ணுறங்கு
  • நாராயணா! - நாராயணா!
  • அழேல் தாலேலோ! - அழாமல் கண்ணுறங்கு!

பொன்னாலான வளையல்களையையும், நெற்றியிலணிய உயர்ந்த கற்களாலான நெற்றிச் சுட்டியையும், காம்புகளை உடைத்த பூவடிவிலுள்ள தங்கத்திலான ஆபரணங்களையையும், பூமிப்பிராட்டியானவள் கண்ணனுக்கு கொடுக்குமாறு அனுப்பியுள்ளாள். பூதனையின் முலையிலிருந்த விஷப்பாலை உண்ட கண்ணனே, கண்ணுறங்கு, நாராயணா! அழாமல் கண்ணுறங்கு!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 014 - திருநறையூர் 5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

014. திருநறையூர்
நாச்சியார் கோயில் - கும்பகோணம்
பதிநான்காவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 111 - 3

திருமங்கையாழ்வார்

041. திவ்ய ப்ரபந்தம் - 1515 - பாஞ்சாலியின் கூந்தலை முடித்தவன் இவனே
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஏழாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
பந்து ஆர் விரலாள் பாஞ்சாலி* கூந்தல் முடிக்க பாரதத்து*
கந்து ஆர் களிற்றுக் கழல் மன்னர் கலங்கச்* சங்கம் வாய் வைத்தான்* 
செந்தாமரைமேல் அயனோடு* சிவனும் அனைய பெருமையோர்*
நந்தா வண் கை மறையோர் வாழ்* நறையூர் நின்ற நம்பியே|

042. திவ்ய ப்ரபந்தம் - 1516 - சிவபிரானின் குறை தீர்த்தவன் இவன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஏழாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
ஆறும் பிறையும் அரவமும்* அடம்பும் சடைமேல் அணிந்து* உடலம்
நீறும் பூசி ஏறு ஊரும்* இறையோன் சென்று குறை இரப்ப*
மாறு ஒன்று இல்லா வாச நீர்* வரை மார்வு அகலத்து அளித்து உகந்தான்*
நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய* நறையூர் நின்ற நம்பியே|

043. திவ்ய ப்ரபந்தம் - 1517 - இவற்றைப் படித்தோரைத் தேவர்களும் வணங்குவர்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஏழாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
நன்மை உடைய மறையோர் வாழ்* நறையூர் நின்ற நம்பியை*
கன்னி மதிள் சூழ் வயல் மங்கைக்* கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை*
பன்னி உலகில் பாடுவார்* பாடு சாரா பழ வினைகள்*
மன்னி உலகம் ஆண்டு போய்* வானோர் வணங்க வாழ்வாரே|

044. திவ்ய ப்ரபந்தம் - 1518 - திருவேங்கடத்தானைத் திருநறையூரில் கண்டேன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - எட்டாம் திருமொழி - முதலாம் பாசுரம்
மான் கொண்ட தோல்* மார்வின் மாணி ஆய்* 
மாவலி மண் தான் கொண்டு* தாளால் அளந்த பெருமானை*
தேன் கொண்ட சாரல்* திருவேங்கடத்தானை*
நான் சென்று நாடி* நறையூரில் கண்டேனே|

045. திவ்ய ப்ரபந்தம் - 1519 - கடல் கடைந்தவனை நறையூரில் கண்டேன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - எட்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
முந்நீரை முன் நாள்* கடைந்தானை* 
மூழ்த்த நாள் அந் நீரை மீன் ஆய்* அமைத்த பெருமானை*
தென் ஆலி மேய திருமாலை எம்மானை*
நல் நீர் சூழ்* நறையூரில் கண்டேனே|

046. திவ்ய ப்ரபந்தம் - 1520 - கருட வாகனனை நறையூரில் கண்டேன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - எட்டாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
தூ வாய புள் ஊர்ந்து வந்து* துறை வேழம்*
மூவாமை நல்கி* முதலை துணித்தானை*
தேவாதி தேவனைச்* செங் கமலக் கண்ணானை*
நாவாய் உளானை* நறையூரில் கண்டேனே|

047. திவ்ய ப்ரபந்தம் - 1521 - திருநீர்மலையானைத் திருநறையூரில் கண்டேன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - எட்டாம் திருமொழி - நான்காம் பாசுரம் 
ஓடா அரி ஆய்* இரணியனை ஊன் இடந்த*
சேடு ஆர் பொழில் சூழ்* திருநீர்மலையானை*
வாடா மலர்த் துழாய்* மாலை முடியானை*
நாள்தோறும் நாடி* நறையூரில் கண்டேனே|

048. திவ்ய ப்ரபந்தம் - 1522 - வில் வீரன் இராமனை நறையூரில் கண்டேன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - எட்டாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
கல் ஆர் மதிள் சூழ்* கதி இலங்கைக் கார் அரக்கன்*
வல் ஆகம் கீள* வரி வெம் சரம் துரந்த வில்லானை* 
செல்வ விபீடணற்கு* வேறாக*
நல்லானை நாடி* நறையூரில் கண்டேனே|

049. திவ்ய ப்ரபந்தம் - 1523 - யசோதை சிறுவனை நறையூரில் கண்டேன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - எட்டாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
உம்பர் உலகோடு* உயிர் எல்லாம் உந்தியில்*
வம்பு மலர்மேல்* படைத்தானை மாயோனை*
அம்பு அன்ன கண்ணாள்* அசோதை தன் சிங்கத்தை*
நம்பனை நாடி* நறையூரில் கண்டேனே|

050. திவ்ய ப்ரபந்தம் - 1524 - கிருஷ்ண பரமாத்மாவை நறையூரில் கண்டேன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - எட்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
கட்டு ஏறு நீள் சோலைக்* காண்டவத்தைத் தீ மூட்டி விட்டானை* 
மெய்யம் அமர்ந்த பெருமானை*
மட்டு ஏறு கற்பகத்தை* மாதர்க்கு ஆய்* 
வண் துவரை நட்டானை நாடி* நறையூரில் கண்டேனே|

051. திவ்ய ப்ரபந்தம் - 1525 - பூ பாரம் தீர்த்த கண்ணனைக் கண்டேன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - எட்டாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
மண்ணின் மீ பாரம் கெடுப்பான்* மற மன்னர்*
பண்ணின்மேல் வந்த* படை எல்லாம் பாரதத்து*
விண்ணின் மீது ஏற* விசயன் தேர் ஊர்ந்தானை*
நண்ணி நான் நாடி* நறையூரில் கண்டேனே|

052. திவ்ய ப்ரபந்தம் - 1526 - திருக்குடந்தைக் கிடந்தவனைக் கண்டேன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - எட்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
பொங்கு ஏறு நீள் சோதிப்* பொன் ஆழி தன்னோடும்*
சங்கு ஏறு கோலத்* தடக் கைப் பெருமானை*
கொங்கு ஏறு சோலைக்* குடந்தைக் கிடந்தானை*
நம் கோனை நாடி* நறையூரில் கண்டேனே|

053. திவ்ய ப்ரபந்தம் - 1527 - தேவர்க்கெல்லாம் தேவர் ஆவர்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - எட்டாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
மன்னு மதுரை* வசுதேவர் வாழ் முதலை*
நல் நறையூர்* நின்ற நம்பியை* 
வம்பு அவிழ் தார்க் கல் நவிலும் தோளான்* கலியன் ஒலி வல்லார்*
பொன் உலகில் வானவர்க்குப்* புத்தேளிர் ஆகுவரே|

054. திவ்ய ப்ரபந்தம் - 1528 - மனமே! நறையூர் நம்பியின் அடியினை சேர்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - முதலாம் பாசுரம்
பெடை அடர்த்த மட அன்னம்* பிரியாது* 
மலர்க் கமலம் மடல் எடுத்து மது நுகரும்* வயல் உடுத்த திருநறையூர்* 
முடை அடர்த்த சிரம் ஏந்தி* மூவுலகும் பலி திரிவோன்*
இடர் கெடுத்த திருவாளன்* இணை அடியே அடை நெஞ்சே|

055. திவ்ய ப்ரபந்தம் - 1529 - மனமே! நறையூரில் இராமபிரான் தான் உள்ளான்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
கழி ஆரும் கன சங்கம்* கலந்து எங்கும் நிறைந்து ஏறி*
வழி ஆர முத்து ஈன்று* வளம் கொடுக்கும் திருநறையூர்* 
பழி ஆரும் விறல் அரக்கன்* பரு முடிகள் அவை சிதற*
அழல் ஆரும் சரம் துரந்தான்* அடி இணையே அடை நெஞ்சே|

056. திவ்ய ப்ரபந்தம் - 1530 - மனமே! நறையூரில் கண்ணபிரான் தான் உள்ளான்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
சுளை கொண்ட பலங்கனிகள்* தேன் பாய* 
கதலிகளின் திளை கொண்ட பழம் கெழுமு* 
திகழ் சோலைத் திருநறையூர்* 
வளை கொண்ட வண்ணத்தன்* பின் தோன்றல்* 
மூவுலகோடு அளை வெண்ணெய் உண்டான் தன்* 
அடி இணையே அடை நெஞ்சே|

057. திவ்ய ப்ரபந்தம் - 1531 - மனமே! கோவர்த்தனனே நறையூரில் உள்ளான்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - நான்காம் பாசுரம் 
துன்று ஒளித் துகில் படலம்* துன்னி எங்கும் மாளிகைமேல்*
நின்று ஆர வான் மூடும்* நீள் செல்வத் திருநறையூர்*
மன்று ஆரக் குடம் ஆடி* வரை எடுத்து மழை தடுத்த*
குன்று ஆரும் திரள் தோளன்* குரை கழலே அடை நெஞ்சே|

058. திவ்ய ப்ரபந்தம் - 1532 - நறையூரில் ஆழியான் அடியினை சேர்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
அகில் குறடும் சந்தனமும்* அம் பொன்னும் அணி முத்தும்*
மிகக் கொணர்ந்து திரை உந்தும்* வியன் பொன்னித் திருநறையூர்*
பகல் கரந்த சுடர் ஆழிப்* படையான் இவ் உலகு ஏழும்*
புகக் கரந்த திரு வயிற்றன்* பொன் அடியே அடை நெஞ்சே|

059. திவ்ய ப்ரபந்தம் - 1533 - மனமே! திருமகள் மார்பன் திருவடிகளே சேர்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
பொன் முத்தும் அரி உகிரும்* புழைக் கை மா கரிக் கோடும்*
மின்னத் தண் திரை உந்தும்* வியன் பொன்னித் திருநறையூர்*
மின் ஒத்த நுண் மருங்குல்* மெல் இயலை* 
திரு மார்பில் மன்னத் தான் வைத்து உகந்தான்* 
மலர் அடியே அடை நெஞ்சே|

060. திவ்ய ப்ரபந்தம் - 1534 - திருத்துழாய் முடியான் திருநறையூரில் உள்ளான்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
சீர் தழைத்த கதிர்ச் செந்நெல்* செங் கமலத்து இடை இடையின்*
பார் தழைத்துக் கரும்பு ஓங்கிப்* பயன் விளைக்கும் திருநறையூர்*
கார் தழைத்த திரு உருவன்* கண்ணபிரான் விண்ணவர் கோன்*
தார் தழைத்த துழாய் முடியன்* தளிர் அடியே அடை நெஞ்சே|

061. திவ்ய ப்ரபந்தம் - 1535 - மனமே! நறையூர் நம்பியின் நல்லடி நண்ணு
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
குலை ஆர்ந்த பழுக் காயும்* பசுங் காயும் பாளை முத்தும்*
தலை ஆர்ந்த இளங் கமுகின்* தடஞ் சோலைத் திருநறையூர்*
மலை ஆர்ந்த கோலம் சேர்* மணி மாடம் மிக மன்னி*
நிலை ஆர நின்றான் தன்* நீள் கழலே அடை நெஞ்சே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

லீலை கண்ணன் கதைகள் - 59

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஜராசந்தனின் வீழ்ச்சிl

ஜராசந்தன் அவர்களுக்குப் பக்கத்தில் அவன் சென்று, "ஓ கிருஷ்ணா, அயோக்கியனே! என் உறவினர்களைக் கொன்றவனே, சிறுவனாகிய உன்னோடு சண்டை போடுவது எனக்கே அவமானம். திருட்டுத்தனமாக வளர்க்கப் பட்ட உன்னோடு நான் சண்டை போட விரும்பவில்லை. ஓ பலராமா, நீ சண்டை போட இஷ்டப்பட்டால் அதற்குள்ள தைரியம் உனக்கு இருந்தால் என்னோடு சண்டைக்கு வா. ஆனால் சாகத் தயாராக இரு" என்று சொன்னான்.


ஆனால், கிருஷ்ணன் அவனை இடைமறித்து, "ஓ ஜராசந்தா, வீரர்கள் தங்களை பற்றி பெருமையடித்துக் கொள்ளுவதில்லை. அவர்கள் தங்கள் பலத்தைச் செய்கையில்தான் காட்டுவார்கள். உன் வார்த்தைகளைச் சாகச் போகிறவன் உளறுவதாகவே நான் கொள்கிறேன்" என்றான். போர் ஆரம்பித்தது, கிருஷ்ணனைக் கொல்லுவதற்காக, அவனை சுற்றி நாலாபுறமும் ஜராசந்தன் தன் படைகளை நிறுத்தி வைத்தான்.


சண்டைப் பார்ப்பதற்காக மதுராபுரிப் பெண்கள் மொட்டை மாடிகளிலும் மாளிகைகளின் உப்பரிகைகளிலும் நின்றனர். ஆனால் கிருஷ்ணனை சுற்றி எத்தனையோ படைவீரர்கள் பல ஆயுதங்களுடன் நிற்பதை கண்டதும் அவர்கள் பயந்தனர். சிலர் மயக்கமுற்று விழுந்தனர். ஜராசந்தனின் படைபலத்தைக் கண்டு கிருஷ்ணனே ஒரு கணம் திகைத்தான். கிருஷ்ணனின் சிறிய படையை அதிக பலமும் அதிக எண்ணிக்கையும் கொண்ட ஜராசந்தனின் படைகள் வதைத்துக் கொண்டிருந்தன.

உடனேயே கிருஷ்ணன் சார்ங்கம் என்னும் தன் வில்லை எடுத்து, அதில் அம்புகளை ஒன்றன்பின் ஒன்றாகத் தொடுத்து, எதிர்ப்படையின் மீது விட்டான். அவன் மிகவும் குறிபார்த்து அம்புகளை எய்ததனால் யானைகள் குதிரைகள் போர்வீரர்கள் எல்லோரும் சரசரவென்று கீழே விழுந்து செத்தார்கள். அவன் விடாமல் தொடர்ந்து எய்திய ஒரு சூறாவளி நெருப்பு ஜராசந்தனின் படையை அப்படியே அழித்தது போன்று தோன்றியது.


கடைசியில் ஜராசந்தன் ஒருவன் தான் எஞ்சினான். அவன் மிகவும் மனச்சோர்வு அடைந்தான். பலராமன் ஜராசந்தனை இறுகப் பற்றிகொண்டான். அவனைக் கட்ட வேண்டுமென்று நினைத்தான். ஆனால் கிருஷ்ணன் அவனுக்கு எதிர் காலத்தில் வேறு திட்டம் ஏற்பாடு செய்திருந்தான். அதனால் அவனைக் கைது செய்ய வேண்டாமென்று பலராமனிடம் சொன்னான். இந்த அவமானமே ஜராசந்தனுக்குப் போதும் என்று ஆகிவிட்டது. அவன் மிகவும் வெட்கி, காட்டுக்குச் சென்று தவத்தில் ஈடுபடத் தீர்மானித்தான்.

ஆனால் அவனுடைய நண்பர்கள் அவனைத் தடுத்தார்கள். "அரசே! நீங்கள் மிகவும் நன்றாகப் போராடினீர்கள். துரத்ரிஷ்டவசமாக நீங்கள் தோற்று விட்டீர்கள். நீங்கள் மீண்டும் உங்கள் படைபலத்தை திரட்டி, அவர்களோடு போர்ப் புரிய வேண்டும்" என்று சொன்னார்கள். அவர்களால் ஆறுதல் அளிக்கப்பட்ட ஜராசந்தன் தன் நகரம் திரும்பினான்.

ஆனால் இங்கு மதுராவிலோ, மக்கள் குதூகலித்தனர். கிருஷ்ணனுக்கும் பலராமனுக்கும் பெருத்த வரவேற்பு அளித்தார்கள். ஊர் அலங்கரிக்கப்பட்டு விழா கோலத்துடன் விளங்கியது. ஆனால் ஜராசந்தன் அவர்களை நிம்மதியாக விட்டு வைக்கவில்லை. பதினேழு தடவைகள் அவன் மதுரா நகர் மீது படையெடுத்தான். பதினேழு தடவைகளும் அவன் படைகள் அடியோடு அழிகப்பட்டன. அவன் மட்டும் கொல்லப்படாமல் தப்பித்தான். இது அவனுக்குப் பெரிய அவமானமாக இருந்தது. வேறு யாராவது பலமுள்ள அரசனோடு சேர்ந்துக் கொண்டு அவர்களை அழிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். பதினெட்டாவது தடவையாக மதுர நகரைத் தாக்க வேண்டும் என்று ஜராசந்தன் திட்டமிட்டுக் கொண்டிருக்கும்போது இன்னொரு நிகழ்ச்சி நடந்தது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - அறுபத்தி ஐந்தாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

065 ஆரியனைப் பிரிந்தேனோ தெய்வவாரி ஆண்டானைப் போலே|

இங்கு ஆரியன் என்பது உயர்ந்தவர் என்ற பொருளில் ஆளவந்தாரைக் கூறியது. 

‘‘அந்தபுரம் புகுதும் இன்றே’’ என்று அரையர் சேவையில் பாடியதைக் கேட்ட ஆளவந்தார், தம் மடத்தின் பொறுப்புகள் அனைத்தையும் தெய்வவாரி ஆண்டான் என்ற சீடரிடம் விட்டுவிட்டு, அடுத்த நாளே திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றார்.


குரு பக்தி அதிகம் கொண்ட தெய்வவாரி ஆண்டானால் குருவை பிரிந்து இருக்கவும் மனமில்லை, குருவின் வார்த்தைகளை பின்பற்றாமலும் இருக்க முடியவில்லை. குருவின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து, மடத்தின் நிர்வாகத்தை கவனித்துக் கொண்டாலும், குருவை பிரிந்து இருப்பது அவரை வாட்டியது. அதன் விளைவாக, சில நாட்களில், உடல் நலம் குன்றி படுக்கையில் வீழ்ந்தார். தெய்வவாரி ஆண்டானை பரிசோதித்த மருத்துவர், குருவின் பிரிவு தாங்க முடியாமல் மனதளவில் வருந்திக் கொண்டதால், உடல் நிலை சுகமில்லாமல் போனது என்றும், ஆச்சார்யரைக் காணாவிடில், இன்னும் மோசமடையும் என்றும் கூறினார்.

மருந்துகளால் தெய்வவாரி ஆண்டானை காப்பாற்ற முடியாது என்பதை உணர்ந்த பிற சீடர்கள், அவரை திருவனந்தபுரத்திற்கு அழைத்துச் செல்ல தீர்மானித்தனர். அவரை பல்லக்கில் ஏற்றினர். ஆசானைக் காணப் போகிறோம் என்கிற எண்ணமே தெய்வவாரி ஆண்டானின் உடல் நிலையில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வந்தது. திருவனந்தபுரத்தை நெருங்கி பயணித்துக் கொண்டு இருந்த பொழுது, ஆளவந்தார் எதிரே வந்து கொண்டு இருந்ததைக் கண்டனர். திருவனந்தபுரத்தில் அநந்த பத்மநாபனை தரிசித்து அவருக்கு சேவை புரிந்து விட்டு, ஆளவந்தார் ஸ்ரீ ரங்கம் திரும்பிக் கொண்டிருந்தார்.


எதிர் நின்ற பல்லக்கைக் கண்ட ஆளவந்தார், ஸ்ரீ ரங்கத்தில் மடத்தை பொறுப்பாக கவனிக்காமல் வாரியாண்டார் வந்ததைக் கண்டு, "வாரியாண்டாரே! பரதன், இராமபெருமான் கட்டளைக்கு இணங்கி நந்திக் கிராமத்தை விட்டு அகலாமல் இருந்தார். ஆனால் நீயோ என் கட்டளைக்கு கீழ் படியாது வந்து விட்டீரே!" என்று கடிந்து கொண்டார்.

ஆசார்யாரை வணங்க பல்லக்கில் இருந்து ஆனந்தமாய் இறங்கிய தெய்வவாரி ஆண்டார், ஆளவந்தாரின் கோபச் சொற்களைத் தாங்க முடியாமல் மூர்ச்சித்து விழுந்து விட்டார். உடன் சென்றவர்கள், ‘‘தங்கள் பிரிவு தாங்காது வாரியாண்டார் உடல் மெலிந்து போனார்! அவரைக் காப்பாற்றவே நாங்கள் இங்கு அழைத்து வந்தோம்.’’ என்று விளக்கினர். தன் பிரிவு தான் வாரியாண்டானின் நிலைக்குக் காரணம் என அறிந்த, ஆளவந்தார், வாரியாண்டானின் ஆச்சார்ய பக்தி கண்டு மனமகிழ்ந்தார்.

வாரியாண்டாரை எழுப்பி, அவருக்கு ஆறுதல் கூறிய ஆளவந்தார், வாரியாண்டானை பத்மநாபனை தரிசித்து வரச் சொன்னார். ஆனால் வாரியாண்டாரோ, "ஆரியப் பெருமானே! (‘ஆரியன்’ என்றால் ‘உயர்ந்தவர்’) எனக்கு அரங்கனும் நீங்களே, அந்தபத்மநாபனும் நீங்களே! மீண்டும் உங்களைப் பிரிய இயலாது" என்றார். மனமகிழ்ந்த ஆளவந்தார், வாரியாண்டாருடனும், தனது சீடர்களுடனும் ஸ்ரீரங்கம் திரும்பினார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "தெய்வவாரி ஆண்டார் போல் ஆச்சார்யரிடத்தில் பக்தி கொண்டேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவத புராணம் - 12

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஆத்மதேவன் - 4

ஸ்கந்தம் 01

கோகர்ணன் சூர்ய ஸ்தம்பனம் செய்தார். ஸூர்ய பகவான் ப்ரத்யக்ஷமானார்.

“என்னை ஏன் நிறுத்தினாய்?“

அவரை வணங்கி, தன் சகோதரன் துந்துகாரிக்கு ஒரு கதி சொல்ல வேண்டும் என்று ப்ரார்த்தனை செய்தார்.

ஸர்வ ஸாக்ஷியாய் விளங்கும் ஸூர்ய பகவான் சொன்னார்.


“கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்? உன் தந்தையான ஆத்ம தேவனை ஸ்ரீமத் பாகவத பாராயணம் செய்யச் சொல்லி நீ தானே சொன்னாய்? இப்போதும் அதுவே உபாயம்.“

“துந்துகாரியை ஏழு கணுக்கள் உள்ள ஒரு மூங்கிலில் ஆவஹனம் செய்து பாராயண விதிப்படி ஸப்தாஹமாக ஏழு நாள்கள் ஸ்ரீமத் பாகவதத்தைப் பாராயணம் செய்து அவனைக் கேட்கச் செய்தால், உன் சகோதரனுக்கு நற்கதி கிடைக்கும்.“ என்று அருளிவிட்டு தன் கதியைத் தொடர்ந்தார் ஆதித்யன்.

மிகவும் மகிழ்ந்து போன கோகர்ணன், பெரிய பந்தல் போட்டு, வெகு விமரிசையாக ஸ்ரீமத் பாகவத பாராயணம் செய்தார். ஊர் முழுதும் கூடியிருந்து கதாம்ருதத்தை அனுபவித்தனர்.

முதல் நாள் பாராயணம் முடிந்ததும், அங்கு நடப்பட்டிருந்த ஏழு கணுக்கள் உள்ள மூங்கிலில் ஒரு கணு வெடித்தது. இரண்டாம் நாள் முடிந்ததும் இரண்டாவது கணு, இப்படியாக ஏழு நாட்களில் ஏழு கணுக்களும் வெடித்து, ஒரு ஸுந்தர புருஷன் அனைவரும் பார்க்கும்படி அதிலிருந்து தோன்றினான். ஒரு திவ்ய விமானமும் வந்தது.

அவ்வளவு பேரும் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த திவ்ய புருஷன் கோகர்ணனை வணங்கினான்.

“யார் நீங்கள்?“

“தம்பீ, என்னை தெரியவில்லையா? நான் தான் துந்துகாரி. நான் ராக்ஷஸ அவஸ்தையிலிருந்து தான் விடுதலை கேட்டேன். ஆனால், நீயோ எனக்கு பரமபதத்திற்கே வழி செய்து விட்டாய். உனக்கு என் நமஸ்காரங்கள்“ என்றான்.

கோகர்ணனுக்கு உடனே ஒரு சந்தேகம் எழுந்தது. திவ்ய விமானத்தில் துந்துகாரியை அழைத்துப் போக வந்த பார்ஷதர்களைப் பார்த்துக் கேட்டார்.

“என் சகோதரன் துந்துகாரிக்கு வைகுண்டம் கிடைத்தது மிகப் பெரிய சந்தோஷம். ஆனால் ஒரு சந்தேகம்.“

“கேளுங்கள் கோகர்ணரே“

“இங்கு நான் உள்பட இவ்வளவு பேரும் ஸ்ரீமத் பாகவதத்தை ஏழு நாட்களும் அனுபவித்தோமே. ஆனால் இவருக்கு மட்டும் விமானம் வந்திருக்கிறதே. எங்களுக்கு பரமபதம் எப்போது கிட்டும்? “

பார்ஷதர் முறுவலித்து விட்டுச் சொன்னார்.

“துந்துகாரி இதை விட்டால் தனக்கு கதியில்லை என்று அல்லும் பகலும் ஏக்கத்தோடு ஒரு ஸ்லோகம் கூட விடாமல் ச்ரத்தையாகக் கேட்டான். அதனால் உடனே மோக்ஷம் கிடைத்து விட்டது. மற்றவர்கள் அப்படி ச்ரத்தையாகக் கேட்கவில்லை. ஆனாலும், மறுபடி மறுபடி ஸ்ரீமத் பாகவத கதா ச்ரவணம் செய்து கொண்டிருக்கலாம். அவரவர்களின் அந்திம ஸ்திதியில் நிச்சயம் வைகுண்டம் உண்டு. நீங்கள் விரும்பினால், மறுபடி ஒரு ஸப்தாஹம் செய்யலாம்“ என்றார்.

வாய்ப்பை நழுவ விட மனமில்லாத கோகர்ணன் மறுபடி ஒரு ஸப்தாஹம் செய்தார். இம்முறை பார்ஷதர் கூறியது போல் சிந்தனை வேறின்றி பகவத் சரணங்களே கதி என்று கொண்டு ஏகாக்ர சித்தத்தோடு ஸப்தாஹம் செய்தார். ஏழாவது நாள் திவ்ய விமானம் வந்தது.

இப்போது கோகர்ணனை அழைத்துச் செல்ல திவ்ய விமானத்தில் ஸ்ரீமன் நாராயணனே வந்தார். மகிழ்ந்து போய் கோகர்ணனை ஆலிங்கனம் செய்து கொண்டார். உடனே கோகர்ணனுக்கும் பார்ஷதர்களைப் போலவே திவ்ய ரூபம் ஏற்பட்டது.

ஸ்ரீ ராமபிரான் பரமபதம் ஏகும் போது வைகுந்தம் வர விரும்புபவர்கள் அனைவரும் என்னோடு சேர்ந்து ஸரயுவில் இறங்குங்கள் என்று அறை கூவல் விடுத்து, தன்னோடு நதியில் இறங்கிய அனைவரையும் பரமபதம் அழைத்துச் சென்றார்.

இங்கோ கோகர்ணன் பகவான் அல்ல. இருப்பினும், ஸ்ரீ ராமனைப் போலவே, பரமபதம் விழைபவர்கள் அனைவரும் என்னோடு வரலாம் என அறை கூவல் விடுத்தார். ஊர் மக்கள் அனைவரும் ஏற, விமானம் அனைவர்க்கும் இடமளித்தது. கோகர்ணன் தன்னோடு வந்த அனைவரையும் அழைத்துக் கொண்டு வைகுந்தம் ஏகினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 67

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 37

அஸோ²க: தாரண: தார: 
ஸூ²ர: ஸௌ²ரி: ஜநேஸ்²வர:|
அநுகூல: ஸ²தா வர்த்த:
பத்மீ பத்ம நிபேக்ஷண:||

  • 337. அஸோ²கஸ் - துன்பங்களை அழிப்பவன்.
  • 338. தாரணஸ் - தாண்டுவிப்பவன்.
  • 339. தாரஸ்² - காப்பவன்
  • 340. ஸூ²ரஸ்² - சமர்த்தன்.
  • 341. ஸௌ²ரிர் - சூரனின் பிள்ளை.
  • 342. ஜநேஸ்²வரஹ - பெருவெள்ளம் போன்ற செல்வம் படைத்தவன்.
  • 343. அநுகூலஸ்² - எல்லைக்குள் நிற்பவன்.
  • 344. ஸ²தாவர்த்தஃ - சுழல்கள் பலவற்றை உடையவன்.
  • 345. பத்மீ - தாமரையைக் கையில் உடையவன்.
  • 346. பத்ம நிபேக்ஷணஹ - இனிய பார்வையை உடையவன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.4 

அர்ஜுந உவாச।
கத²ம் பீ⁴ஷ்ம மஹம் ஸங்க்²யே 
த்³ரோணம் ச மது⁴ ஸூத³ந| 
இஷுபி⁴: ப்ரதி யோத்ஸ் யாமி 
பூஜார் ஹாவரி ஸூத³ந||

  • அர்ஜுந உவாச - அர்ஜுநன் சொல்லுகிறான் 
  • கத²ம் - எப்படி 
  • பீ⁴ஷ்மம் - பீஷ்மர் 
  • அஹம் - நான் 
  • ஸங்க்²யே - போரில் 
  • த்³ரோணம் - துரோணர் 
  • ச - மேலும் 
  • மது ஸுதந - மது என்னும் அரக்கனைக் கொன்றவரே 
  • இஷுபி⁴ஃ - அம்புகளால் 
  • ப்ரதி யோத்ஸ் யாமி - எதிர்ப்பேன் 
  • பூஜா அர்ஹெள - பூஜைக்கு உரியவர்களை 
  • அவரி ஸூத³ந - எதிரிகளை அழிப்பவரே

அர்ஜுநன் கூறுகிறார்: மது என்னும் அரக்கனை கொன்றவரே! பூஜைக்கு உரியவர்களான பீஷ்மர், துரோணர் போன்றோரை இந்த போரில் எப்படி அம்புகளால் எதிர்த்து நிற்பேன். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.2

யஸ்யாம் ப⁴ஸி ஸ²யா நஸ்ய 
யோக³ நித்³ராம் விதந் வத:|
நாபி⁴ஹ் ரதா³ம் பு³ஜா தா³ஸீத்³
ப்³ரஹ்மா விஸ்²வ ஸ்ரு ஜாம் பதி:||

  • அம்ப⁴ஸி - ஜலத்தில்
  • ஸ²யா நஸ்ய - பள்ளி கொண்டிருப்பவரும்
  • யோக³ நித்³ராம் - யோக நித்ரையை
  • விதந் வதஹ - செய்கிறவராயும் உள்ள
  • யஸ்ய - எந்த வாஸுதேவனுடைய
  • நாபி⁴ஹ் ரதா³ம் பு³ஜாத்³ - நாபிக் கமலத்தில் இருந்து
  • விஸ்²வ ஸ்ரு ஜாம் பதிஹி - தக்ஷன், மரீசி முதலானவர்களின் பதியான
  • ப்³ரஹ்மா ஆஸீத்³து - பிரும்மா உண்டானாரோ

பிரளய கால ஜலத்தில் அநந்த பள்ளி கொண்டு, யோக நித்திரை புரியும் அந்த பகவான் வாசுதேவனுடைய தொப்புள் கொடியில் தோன்றிய தாமரை மலரினின்றும், உலகத்தைப் படைக்கும் தக்ஷன், மரீசீ முதலிய பிரஜாபதிகளுக்குத் தலைவராகிய பிரும்ம தேவர் தோன்றினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்