About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 14 September 2023

லீலை கண்ணன் கதைகள் - 34

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

காட்டுத் தீ|

ஒரு நாள் கிருஷ்ணனும் அவனுடைய நண்பர்களும் வழக்கம் போல் ஒரு மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பசுக்களும் கன்றுகளும் பக்கத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. ஆனால் அவை பசும் புல்லைத் தேடி நகர்ந்து கொண்டே சென்று, ஒர் அடந்த காட்டை அடைந்து விட்டன. அவை மேய்ந்து கொண்டிருக்கையில், காட்டுத் தீ செடிகளையும் மரங்களையும் எரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தன. நாலா பக்கங்களிலும் தீ அந்தப் பசுக்களையும் கன்றுகளையும் அணுகிக் கொண்டிருந்தது. அப்போது தான் சிறுவர்களுக்குப் பசுக்களைக் காணோம் என்ற விவரம் தெரிய வந்தது. எங்கே தேடிப் பார்த்ததும் பசுக்களைக் காணவில்லை. உடனே கிருஷ்ணன் தன் மாயக் குழலை எடுத்து ஊத ஆரம்பித்தான். தங்கள் தலைவனின் குழல் ஓசையைக் கேட்டு, தீயினால் சூழப்பட்டிருந்த அந்தப் பசுக்கள் பெருத்த குரல் கொடுத்தன. அவற்றின் குரலில் வேதனை தோன்றியது. பசுக்கள் ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதைக் கிருஷ்ணன் உடனே புரிந்து கொண்டான். பசுக்களின் குரல் கேட்ட திசையை நோக்கி அவன் தன் நணபர்களுடன் விரைந்தான்.


இதற்கிடையில் தீ வேகமாகப் பரவிவிட்டது. நெருப்பின் ஜ்வாலைகள் ஆகாயத்தை நோக்கிக் கிளம்பின. பெரும் வெப்பக் காற்றாக இருந்தது. தீ பரவுவதைப் பார்த்துப் பசுக்களும் பயந்தன. சிறுவர்களும் பயந்தார்கள். பீதியடைந்த சிறுவர்கள் கிருஷ்ணன் காலில் விழுந்து, “கிருஷ்ணா! எங்களை சாம்பலாக்கி விடத் துடித்துக் கொண்டிருக்கும் காட்டுத் தீயிலிருந்து எங்களைக் காப்பாற்ற ஏதாவது செய். தீ எல்லாவற்றையும் அழித்துக் கொண்டிருக்கிறது. நீ தாமதம் செய்தால் அது எங்களை அழித்துவிடும்” என்று சொல்லிக் கதறினார்கள்.


அவர்களுடைய பரிதாபக் குரலைக் கேட்ட சர்வ சக்தி உடையவனான கிருஷ்ணன், அவர்களைச் சமாதானப் படுத்தினான். “பயப்படாதீர்கள்! நான் இருக்கும் வரையில் நீங்கள் எதற்காகப் பயப்பட வேண்டும்? எல்லாரும் கண்களை மூடிக் கொள்ளுங்கள் நான் சொல்லும் வரையில் திறக்காதீர்கள்” என்றான். அவன் சொன்னபடியே சிறுவர்கள் செய்தார்கள். எல்லாரும் கண்களை இறுக மூடிக் கொண்டு நின்றார்கள். கிருஷ்ணன் தன் யோக சக்தியைப் பயன்படுத்தி, தன் வாயினால் காட்டுத் தீயை விழுங்கினான். எல்லாத் தீயும் அவன் வயிற்றுக்குள் சென்றது. அது அவனை ஒன்றும் செய்யவில்லை. “இப்போது கண்ணைத் திறங்கள்” என்றான் கிருஷ்ணன். அவர்கள் கண்களைத் திறந்து பார்த்த போது தீயை அங்கே காணவில்லை. எங்கும் குளிர்ச்சி மயமாக இருந்தது. அவர்கள் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள். கிருஷ்ணனைப் பாராட்டிக் கொண்டே எல்லாரும் பசுக்களுடன் வீடு திரும்பினார்கள். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 007 - திருக்கண்டியூர் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

007. திருக்கண்டியூர் 
த்ரிமூர்த்தி க்ஷேத்ரம் – தஞ்சாவூர்
ஏழாவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 1 பாசுரம்

1. திருமங்கையாழ்வார் - 1 பாசுரம் 
1. திருக்குறுந்தாண்டகம் (இரண்டாம் ஆயிரம்) 

  • திவ்ய ப்ரபந்தம் - 2050 - இரண்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (19)

---------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி
பேசவரின் தென் அரங்கன் பேர் எல்லாம் பேசுக வாய்*
கேசவனைக் காண்க விழி கேட்க செவி ஈசனார்*
உண்டி ஊர் தோறும் உழன்று இரவாமல் தவிர்த்தான்*
கண்டியூர் கூப்புக என்கை*

  • வாய் - எனது வாயானது 
  • பேச வரின் - பேசத் தொடங்கினால்
  • தென் அரங்கன் பேர் எல்லாம் பேசுக - அழகிய ஸ்ரீ ரங்கநாதனது திருநாமங்களை எல்லாம் பேசக் கடவது
  • விழி - எனது கண்கள்
  • கேசவனை காண்க - கேசவன் என்னும் திருநாமத்தை உடைய எம்பெருமானைத் தரிசிக்கக் கடவன
  • செவி - எனது காதுகள் 
  • கேட்க - அவனது புகழ்களையே கேட்கக் கடவன
  • என் கை - எனது கைகள்
  • ஈசனார் - சிவபெருமானை
  • ஊர் தோறும் உழன்று உண்டி இரவாமல் - ஊர்கள் தோறும் அலைந்து சென்று உணவை யாசிக்க வொட்டாமல்
  • தவிர்த்தான் - அவனது சாபத்தை நீக்கி அருளியவனுடைய
  • கண்டியூர் - திருக்கண்டியூர் என்னும் ஸ்தலத்தை நோக்கி
  • கூப்புக - குவித்து அஞ்சலி செய்யக் கடவன
---------
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 1

திருமங்கையாழ்வார்

001. திவ்ய ப்ரபந்தம் - 2050 - திருக்கோயில் சேர்க! உய்யலாம்
திருக்குறுந்தாண்டகம் - இரண்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (19)
பிண்டியார் மண்டை ஏந்திப்* பிறர் மனை திரி தந்து உண்ணும்*
உண்டியான் சாபம் தீர்த்த* ஒருவன் ஊர்*
உலகம் ஏத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம்* 
கச்சி பேர் மல்லை என்று மண்டினார்* 
உய்யல் அல்லால்* மற்றையார்க்கு உய்யல் ஆமே? (2) 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 27 - பெரியாழ்வார் திருமொழி - 1.2.5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 27 - இரணியனை அழித்த தொடைகள்
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்

பிறங்கிய பேய்ச்சி* 
முலை சுவைத்துண்டிட்டு*
உறங்குவான் போலே* 
கிடந்த இப்பிள்ளை*
மறங்கொள் இரணியன்* 
மார்வை முன் கீண்டான்*
குறங்குகளை வந்து காணீரே!* 
குவி முலையீர்! வந்து காணீரே| 

  • பிறங்கிய - ப்ரகாசத்தை உடைய
  • பேய்ச்சி - பூதனையினுடைய
  • முலை - முலையை
  • சுவைத்து - பாலோடு அவள் உயிரையே சேர்த்து உறிஞ்சி
  • உண்டிட்டு - அமுது செய்து கொன்று விட்டு
  • உறங்குவான்போலே - ஒன்றுமே அறியாமல் உறங்குபவனைப் போலே
  • கிடந்த - படுத்திருப்பவனான
  • இப் பிள்ளை - இந்தக் கண்ணன்
  • மறம் கொள் - விரோதம் கொண்ட
  • இரணியன் - ஹிரண்யனுடைய
  • மார்வை - மார்பை
  • முன் - முற்காலத்திலே
  • கீண்டான் - பிளந்தான்
  • குறங்குகளை வந்து காணீரே - திருத்துடை அழகை வந்து பாருங்கள்
  • குவி முலையீர் - குவிந்த அழகை உடைய பெண்களே! 
  • வந்து காணீரே - வந்து பாருங்கள் 

அரக்கியாக இல்லாமல், பிரகாசமாய் அழகிய பெண் உருவமெடுத்து கம்சனால் ஏவப்பட்டவளாய் குழந்தைக் கண்ணனைக் கொல்ல வந்த பூதனை என்னும் அரக்கியிடம் பால் உண்ணுவது போல், பாலோடு அவள் உயிரையே சேர்த்து உறிஞ்சி அவளைக் கொன்றான் கண்ணன். நரசிம்ஹ அவதாரத்தில், த்வேஷத்தினால் மிகுந்த வீராவேசங் கொண்டு போர் புரிந்த ஹிரண்யகசிபு என்ற அரக்கனை தன் தொடை மேலேயே வைத்து அவன் நெஞ்சை இரண்டாகப் பிளந்து கொன்றான். இத்தனை ஸாகசங்களையும் புரிந்து விட்டு, ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தையாய் உறங்குவது போல் பாசாங்கு செய்த இந்த குழந்தை கண்ணனின் தொடை அழகையும் வலிமையையும் வந்து பாருங்கள் என்று அங்கிருக்கும் குவிந்த அழகை உடைய பெண்களை அழைக்கிறாள் யசோதை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.28

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் - 1.28

க்ருபயா பரயா அவிஷ்ட:
விஷீ த³ந்நித³ மப்³ரவீத்|
அர்ஜுந உவாச।|
த்³ருஷ்ட் வேமம் ஸ்வஜநம் க்ருஷ்ண 
யுயுத்ஸும் ஸமு பஸ்தி²தம்|| 

  • க்ருபயா - கருணையுடன் 
  • பரயா- உயர்ந்த 
  • ஆவிஷ் டஹ - மூழ்கி 
  • விஷீத³ந் - கவலை கொண்டு 
  • இத³ம் - இவ்வாறாக 
  • அப்³ரவீத் - கூறினான்
  • க்ருஷ்ண - ஹே கிருஷ்ணா
  • யுயுத்ஸும் - போர் செய்ய விருப்பத்துடன்
  • ஸமு பஸ்தி²தம் - நிற்கிற
  • இமம் - இந்த 
  • ஸ்வஜநம் - சுற்றத்தார்களை 
  • த்³ருஷ்ட்வா - கண்டு

அர்ஜுநன் கூறுகிறார்: கண்ணா! போரிடும் எண்ணத்துடன் கூடியுள்ள உறவினர்கள் அனைவரையும் பார்த்த பின் எனது உடல் அங்கங்கள் நடுங்குகிறது, வாய் உலர்கிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.2.12

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா: 
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம் 
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்|| 
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||

ஸ்லோகம் - 1.2.12

தத் ஸ்²ரத்³ த³தா⁴நா முநயோ
ஜ்ஞாந வைராக்³ய யுக்தயா|
பஸ்²யந்த் யாத்மநி சாத் மாநம்
ப⁴க்த்யா ஸ்²ருத க்³ருஹீ தயா||

  • ஆத்மாநம் - பரமாத்மா தன்னையும்
  • தத் ச - அந்த மெய்ப்பொருளையும்
  • ஸ்²ரத்³ த³தா⁴நா - சிரத்தையோடு கூடிய
  • முநயோ - மஹரிஷிகள்
  • ஸ்²ருத - வேதங்கள் (சாஸ்திர)
  • க்³ருஹீ தயா - சிரவணங்களால் ஏற்பட்ட
  • ஜ்ஞாந - ஞானம்
  • வைராக்³ய - வைராக்கியம்
  • யுக்தயாந் - இவற்றோடு கூடிய
  • ப⁴க்த்யா - பக்தியை கொண்டு
  • ஆத்மநி - தங்களது ஆத்மாவில்
  • பஸ்²யந்தி - நன்கு அறிகின்றார்

சிரத்தையான ஈடுபாட்டோடு கூடிய மரிஷிகள் பகவானைப் பற்றிய சாஸ்திரங்களைத் தெளிந்து கேட்பதானல் பெற்ற அறிவு, பற்றற்ற தன்மை (வைராக்கியம்) ஆகியவற்றோடு கூடிய பக்தியினால், பகவானாகிய மெய்ப் பொருளான பரம தத்துவத்தைத் தாங்களாகவே தங்களது ஆத்மாவில் காண்கிறார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 43

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 13

ருத்³ரோ ப³ஹுஸி²ரா ப³ப்⁴ருர் 
விஸ்²வ யோநி: ஸு²சிஸ்²ரவா:|
அம்ருத: ஸா²ஸ்²வத: ஸ்தா²ணுர் 
வரா ரோஹோ மஹாதபா:||

  • 115. ருத்³ரோ - பக்தர்களுக்கு ஆனந்தக் கண்ணீரை வரவழைப்பவர். பக்தர்களுக்கு நல்லதை வழங்குபவர். துன்பத்தை அழிப்பவர்.
  • 116. ப³ஹுஸி²ரா - பல தலைகள் கொண்டவர்.
  • 117. ப³ப்⁴ருர் - தாங்கி நிற்பவர்.
  • 118. விஸ்²வ யோநிஸ்² - எல்லா உலகத்தவருடன் உறவு கொண்டவர்.
  • 119. ஸு²சிஸ்²ரவாஹ - தூய சொற்களையே கேட்பவர். தெய்வீக காதுகளை உடையவர்.
  • 120. அம்ருதஸ்² - ஆரா அமுதன். பக்தர்களுக்குத் திருப்தி அளிக்காத அமிர்தமாவார்.
  • 121. ஸா²ஸ்²வதஸ் ஸ்தா²ணுர் - என்றும் நிலைத்து நிற்பவர். பக்தர்களை ஆசீர்வதிப்பதில் உறுதியாக இருப்பவர்.
  • 122. வரா ரோஹோ - அடையத் தக்க மேலானவர் பரமபரநாதன். சிறந்த ஏற்றம் உடையவர்.
  • 123. மஹாதபாஹ - எல்லையில்லாத ஞானமுடையவர். ஞானமூர்த்தி. சிறந்த அறிவை உடையவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - நாற்பதாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

040 அடி வாங்கினேனோ கொங்கிற் பிராட்டியைப் போலே|

இங்கு, “அடி வாங்கினேனோ” என்னும் சொல், “திருவடி” குறித்து கூறப்பட்டதாகும்!

வைணவத்தில் ஆசார்ய சம்பந்தம் இல்லாது எம்பெருமான் சம்பந்தம் இருந்தும் பயனில்லை. ஆசார்ய சம்பந்தம் இருந்தால் எம்பெருமான் சம்பந்தம் தானே அமைந்து விடும். இதற்கு கொங்கு பிராட்டியின் சரித்திரமே ஒரு உதாரணம்.


கொங்கு தேசத்தில் பன்னிரெண்டு வருடங்களாக மழை பொய்த்தமையால், வேறு வழியின்றி, கணவருடன் திருவரங்கம் வந்து சில நாட்கள் தங்கினார், கொங்கிற்பிராட்டி!! அவரது இயற்பெயர் சுமதி.


திருவரங்கன் சந்நிதியைச் சுற்றியுள்ள வீதிகளில், உடையவர் ஒரு இல்லத்தின் வாயிலில் சென்று, பிக்ஷைக்கு நிற்பார்! ஒரு பசுமாட்டின் மடியை கறக்கும் நேரத்துக்குள், உள்ளேயிருந்து வீட்டுப் பெண்மணி பிக்ஷை அளிக்க வேண்டும்! இல்லையென்றால் அன்று அவருக்கு உணவு இல்லை!! இது அனுதினமும் நடக்கும். இதற்கு மாதுகரம் என்று பெயர். நூற்றுக் கணக்கில் சிஷ்யர்களும், சிம்மாசனாதிபதிகளும் உடன் வர, சுவாமி இராமானுஜர் தனது அடியார்களுடன் மாதுகரம் செல்வது ஒரு திருவிழா போல இருக்கும்!! ஒரு நாள், மாதுகரம் வைபவத்தில் ஸ்ரீராமானுஜரை வீதி என்றும் பாராது, அதிகாரிகள், செல்வந்தர்கள், வயதானோர் எல்லாம் தண்டனிடும் காட்சியைப் பார்த்தாள். 


உடையவரின் தேஜசைக் கண்ட கொங்கிற் பிராட்டியார், தன்னையும் அவரின் அடியாராய் சேர்த்துக் கொள்ளுமாறு கண்ணீர் மல்க மன்றாட, உடையவரும் த்வயம் என்னும் மந்திரத்தை உபதேசித்து, பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைத்து, ஸ்ரீ வைஷ்ணவப் பெண்ணாக மாற்றினார்!!


காலங்கள் கடந்தன! கொங்கு தேசத்தில் நிலைமை மாற, மீண்டும் கொங்கிற்பிராட்டியார் கொங்குதேசம் கிளம்ப உத்தேசித்தார்!! உடையவரிடம் சென்று, “சுவாமி, அடியேன் கொங்கு தேசம் செல்ல விரும்புகிறேன். தங்களின் சம்மதம் வேண்டி நிற்கிறேன்!”, என்றார். உடையவரும் சம்மதிக்க, “உம் நினைவாய் உமது திருவடியை அடியேனுக்கு தாரும்!!” என்று வேண்டினார் கொங்கிற்பிராட்டியார்.

காலங்கள் கடந்தன. சோழனின் கொடுமையிலிருந்து மீள, காவி தவிர்த்து, வெள்ளை உடுத்தி, தன் அடியார்களுடன் உடையவர் கொங்கு மண்டலம் புகுந்த ஒரு நாளில், ஒரு குடிலின் அருகே ஒதுங்கினார். அது கொங்கிற்பிராட்டியாரின் குடிலாகும்! வந்திருந்தவர்களைக் கண்டதும், பெருமகிழ்ச்சியில் திளைத்த கொங்கிற்பிராட்டியாரும் அவரது கணவரும், அவர்களுக்கு அமுது பரிமாற தங்களுக்கு கருணை புரியுமாறு வேண்டினர்.


இராமாநுஜர் வைணவ சம்பந்தம் இல்லாத இல்லத்தில் உணவு அருந்துவதில்லை!! அந்தப் பெண்ணிடம் அவருடைய சீடர்கள் அவளுக்கு ஸ்ரீவைஷ்ணவ சம்பந்தம் இருக்கிறதா என்று கேட்டனர்!! திருவரங்கத்திலே எம்பெருமானாரிடம் வைணவ சம்பந்தம் பெற்றவள் நான் என்று கூறி, அவரது பாதுகைகளை எடுத்து காட்டினார். மேலும், தான் திருவரங்கத்தில் வசித்ததையும், அவரால் பஞ்ச சம்ஸ்காரம் செய்யப்பட்டதையும் கூறினார். அந்த அம்மையார் சமைத்த உணவை ஒரு சிறு அறைக்குள் எடுத்துச் சென்று விட்டு வருவதை அவரின் சீடர்கள் பார்த்தனர். அறையினுள் சென்று பார்த்த போது, ஸ்ரீராமானுஜர் அவளுக்கு அளித்த பாதுகைகள் வைக்கப்பட்டு, அவற்றிற்கு அவள் நைவேத்தியம் செய்து விட்டு வருவதைப் பார்த்தனர்.


உடையவர், தனது அடியார்களின் சந்தேகத்திற்கு தீர்வு காண, அப்பாதுகைகளை வாங்கி, தன் பாதங்களில் இட்டு அலங்கரித்தார்! இராமாநுஜரின் திருவடிகள் கண்டதும், கண்களில் நீர் ததும்ப அவர் முகத்தைப் பார்த்த கொங்கிற் பிராட்டியார், “வெண்ணிற உடையில் தங்களை அடையாளம் காணாதது அடியேனின் தவறு! அடியேனை மன்னித்தருள வேண்டும்!” என்று வேண்டினார்! காவி உடை தவிர்த்து, வெண்ணிற ஆடையில் இருந்த ராமானுஜரை அவளால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. பின்னர், உடையவரின் சம்மதத்துடன், வந்திருந்தவர் அனைவருக்கும் அமுது படைத்தார், கொங்கிற் பிராட்டியார். 


திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "அப்படிப்பட்ட கொங்கு பிராட்டியைப் போல ஆச்சாரியாரின் பாதுகைகளை வேண்டி பெற்றேனோ? இல்லையே!!” ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்