About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 8 August 2023

திவ்ய ப்ரபந்தம் - திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி தனியன் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

தனியன் 1

நாதமுனிகள் அருளிச் செய்தது

கு³ருமுக² மநதீ⁴த்ய* 
ப்ராஹ வே³தாந ஸே²ஷாந்* 
நரபதி பரிக்லுப்தம்* 
ஸு²ல்க மாதா³து காம:*
ஸ்²வஸு²ர மமர வந்த்³யம்* 
ரங்க³ நாத²ஸ்ய ஸாக்ஷாத்* 
த்³விஜ குல திலகம் தம்* 
விஷ்ணு சித்தம் நமாமி|

  • குருமுகம் - ஆசார்ய முகத்தாலே
  • அநதீத்ய - அப்யசிக்காமலே
  • ப்ராஹ - உபன்யசித்தாரோ
  • வேதான் - வேதங்களை
  • அசேஷான் - சமஸ்தமாகிய
  • நர பதி - ஸ்ரீ வல்லப தேவன் என்கிற ராஜாவினால்
  • பரிக்லிப்தம் - ஏற்படுத்தப்பட்ட
  • ஸூல்கம் - வித்யா சுல்கத்தை
  • ஆதாதுகாம - க்ரஹிப்பதற்கு ஆசை உள்ளவராய்
  • ஸ்வஸுரம் - மாமனாரும்
  • அமர - தேவதைகளால்
  • வந்த்யம் - ஸ்தோத்ரம் செய்வதற்கு தக்கவரும்
  • ரங்க நாதஸ்ய - ஸ்ரீ ரெங்க அதிபனுக்கு
  • ஸாஷாத் - பிரத்யஷமாய்
  • த்விஜகுல - ப்ராஹ்மண வம்சத்துக்கு
  • திலகம் - அலங்கார பூதருமாகிய
  • தம் விஷ்ணு சித்தம் - அந்த பெரியாழ்வாரை
  • நமாமி – சேவிக்கிறேன்

ஒரு குருவின் மூலமாகக் கற்காமல், திருமாலாலே நேராக (மயர்வற மதிநலம்) தெளிவான ஞானமும் பக்தியும் அருளப் பெற்ற விஷ்ணுசித்தர் என்னும் பெரியாழ்வார், மதுரையில், ஸ்ரீ வல்லப தேவன் என்கிற ராஜாவின் ஸபையில் நடக்கும் வித்வான்களின் கோஷ்டியில் அங்கே இருக்கும் பரிசான பொற் கிழியை ஸ்ரீவில்லிபுத்தூர் வட பெரும் கோயில் உடையான் எம்பெருமானுக்கு ஆக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்று, எல்லா வேதங்களையும் எடுத்துரைத்து, அப்பரிசை வென்றார். மேலும் ஸ்ரீரங்கநாதனுக்குத் தன் திருமகளாரான ஆண்டாளை மணமுடித்துக் கொடுத்து, நித்ய ஸூரிகளாலும் எம்பெருமானுக்கு மாமனார் என்று வணங்கப்பட்டார். அந்தணர் குலத்தில் மிகச் சிறந்தவராக விளங்கினார். இப்படிப்பட்ட பெரியாழ்வாரை நான் வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - த்யான ஸ்லோகம் 6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்⁴யான ஸ்லோகம் - 6

பீ⁴ஷ்ம த்³ரோண தடா ஜயத்³ரத² ஜலா, 
கா³ந்தா⁴ரனீ லோத் பலா
ஸல்ய க்³ராஹ வதீ க்ருபேண வஹனீ, 
கர்ணேன வேலா குலா|
அஸ்வத்தா²ம விகர்ண கோ⁴ர மகரா 
து³ர்யோத⁴னா வர்தினீ
ஸோத் தீர்ணா க²லு பாண்ட³வை꞉ 
ரணனதீ³ கைவர்தக꞉ கேஸவ꞉||

பூபாரம் தீர்க்க வந்தவர் கிருஷ்ணன். அதன் விளைவு மகாபாரதப் போர். இந்த ச்லோகம் ஒரு அதிசய உருவகத்தின் மூலம் அதை வர்ணிக்கிறது. இந்த யுத்தம் ஒரு ரத்த ஆறாக வர்ணிக்கப் படுகிறது. இதில், கரைகளைப் போல் வெள்ளத்தை கட்டுப் படுத்துவதால், பீஷ்மரும் துரோணரும் கரைகள். ஜெயத்ரதன் கௌரவரின் ஒரே சஹோதரியின் கணவன். இவன் தான் அபிமன்யுவின் வதத்திற்கு மூல காரணம். அவனை நதியின் நீர் என்று கூறுகிறார். நீல நிறம் விஷத்தைக் குறிக்கும். அதனால் சகுனி நீல தாமரை. பார்ப்பதற்கு சாதாணமானவன் ஆனால் உள்ளே விஷத்தன்மை உடையவன். சல்லியன் முதலையாகவும், கிருபர் நதியின் வேகமாகவும், கர்ணன் அந்த நதியின் அலை போலவும், அஸ்வத்தாமன், விகர்ணன் இவர்கள் சுறா மீன்கள் எனவும் உருவகப்படுத்தப் பட்டுள்ளார்கள். துரியோதனன் நீர்ச் சுழலுக்கு ஒப்பானவன். ஏனென்றால் அவன் தான் எல்லோரையும் தன்னுள் இழுத்துக் கொண்டு அழிக்கிறான். அப்படிப்பட்ட ரத்த ஆறானது, பாண்டவர்களால் கேசவன் என்ற ஓடக்காரனின் உதவியால் கடக்கப்பட்டது. கேசவன் என்ற சொல்லின் பொருள் மும்மூர்த்திகளையும் தம்முள் அடக்கிய பரம் பொருள் என்பது. அதுவே அழகிய கேசங்கள் உடைய கண்ணனாக வந்து பாண்டவர்களுக்கு உதவியது. பவசாகரம் கடக்கவே உதவும் பகவான் யுத்தமாகிய ரண நதியைக் கடக்க உதவியதில் என்ன ஆச்சரியம்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.1.3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² ப்ரத²ம: அத்⁴யாய꞉||
||நைமிஷ க்ஷேத்ரே ஸ்ரீமத் பாகவத விஷயே  
ஸூதம், ப்ரதி ஸொ²னகாதி முனீநாம் ப்ரஸ்ந:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||முதல் அத்யாயம்|| 
||ஞானிகளின் கேள்விகள்||

ஸ்லோகம் - 1.1.3

நிக³ம கல்ப தரோர் க³லிதம் ப²லம்|
ஸு²க முகா²த்³ அம்ருதத்³ ரவ ஸம் யுதம்||
பிப³த பா⁴க³வதம் ரஸமாலயம்|
முஹுர ஹோ ரஸிகா பு⁴வி பா⁴வுகா꞉||

  • அஹோ ரஸிகா - ஹேl ரசிகர்களேl 
  • பா⁴வுகாஹ - ரஸ விசேஷத்தை அறிவதில் வல்லுனர்களேl 
  • நிக³ம கல்ப தரோர் - வேதமாகிய கற்பக விருக்ஷத்தில் இருந்தும் 
  • ஸு²க முகா²த்³ - ஸுக முனிவருடைய (கிளியின்) வாயிலிருந்தும்
  • பு⁴வி க³லிதம் - பூமியில் விழுந்ததும், பரம்பரையாக வந்ததும்
  • அம்ருதத்³ ரவ ஸம் யுதம் - அமிர்த துளிகளோடு கூடியதும், பரமானந்த ரஸத்தோடு கூடியதும்
  • ரஸம் - ரஸ ஸ்வரூபமாக உள்ளதுமான
  • பா⁴க³வதம் ப²லம் - ஸ்ரீமத் பாகவதம் என்னும் பலத்தை (பழத்தை)
  • ஆலயம் - மோக்ஷ ஸாம்ராஜ்யம் ஏற்படும் வரை
  • முஹுர் - அடிக்கடி
  • பிப³த - அனுபவியுங்கள் (சாப்பிடுங்கள்)

பூமியில் கனிந்த, நிபுணத்துவம் வாய்ந்த மற்றும் சிந்தனை மிக்க மனிதர்களே, அறிவில் நிரம்பியவர்களே! வேத இலக்கியங்களான கல்ப விருட்சத்தின் முதிர்ந்த பழமான ஸ்ரீமத் பாகவதத்தை ரசியுங்கள். இது ஸ்ரீல ஸுக தேவ கோஸ்வாமியின் உதடுகளில் இருந்து வெளிப்பட்டது. இது பழ இரசமாக (அரை திடமாகவும் மென்மையாகவும்) மாறி விட்டது, எனவே எளிதில் விழுங்கக் கூடியது மற்றும் சுவைக்க எல்லா வகையிலும் சரியானது. இறைவனுடனான நித்ய உறவின் அறிவியலைக் கையாளும் புத்தகம் மற்றும் விடுதலை கிடைக்கும் வரை அல்லது விடுதலையான நிலையில் கூட, எப்போதும் சுவைக்கக் கூடிய அமிர்த சாறு.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 10

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ பீ⁴ஷ்ம உவாச|
ஜகத் ப்ரபு⁴ம் தேவ தேவம் 
அநந்தம் புருஷோத்தமம்|
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண 
புருஷ: ஸததோத்தித:||


புருஷ: - புருஷஸ்
ஸததோத்தித: ஸததோத்திதஹ

ஸ்ரீ பீஷ்மர் கூறலானார்: அசைபவை, அசையாதவை ஆகியவற்றைக் கொண்ட உலகத்துக்குத் தலைவனும், தேவர்களுக்கு எல்லாம் தேவனும், அளந்து காண முடியாத பெருமை உடையவமானுகிய வள்ளல்களில் சிறந்தவனை இடைவிடாத முயற்சியுடன் அவனது ஆயிரம் திருநாமங்களைச் சேதனன் துதி செய்தும்,

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - எட்டாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

008 தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே|

எம்பெருமான் சிருஷ்டிக்க ஆரம்பித்தார். பகவான் பிரம்மாவை படைத்தார். பிரம்மா முதலில் ச்வயம்புவமனுவை படைத்தார். ச்வயம்புவமனுவிற்கு ப்ரியம்ரதன், உத்தானபாதன் என்று இரண்டு குமாரர்கள். அதில் உத்தான பாதனுக்கு சுநிதி, சுருச்சி என்று இரண்டு மனைவிமார்கள். அதில் சுநிதியின் பிள்ளை துருவன். சுருச்சியின் பிள்ளை உத்தமன். உத்தமன் ஒரு நாள் தகப்பனாரின் மடியில் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்தான். 


துருவனும் தந்தை மடி வேணும்னு ஆசைப்பட்டு அருகில் போனான். துருவனை மன்னன் தன் மடியில் அமர்த்தி, முத்தமிட்டான். அதை பார்த்த சுருச்சி (சிற்றன்னை) கோபமடைந்து துருவனிடம், "இந்த மடியில் இருக்க உனக்கு யோகியதை இல்லை, என் வயிற்றில் பிறந்திருந்தால் தான் உன் தந்தை மடியில் ஏறலாம், இறங்கு என்று கூறி இறக்கி விட்டவுடன், குழந்தை ரொம்ப அவமானப்பட்டு கோபப்பட்டான். தந்தை மடியில் உட்கார நான் என்ன பண்ண வேண்டும் என்று கேட்டான். "பெருமானை ஆராதனை பண்ணி, என் வயிற்றில் வந்து பிறந்தால் தந்தை மடியில் வந்து உட்காரலாம்" என்றாள். 


கோபத்தோடு அந்தபுரத்திற்கு வந்தான். அவனுடைய தாயார் சுநிதி அவனை பார்த்து "என்ன நடந்தது? ஏன் கோபிக்கிறாய்?" என்று கேட்டாள். நடந்தை சொன்னான் துருவன். அதற்கு அவள் வேடிக்கையாக சிரித்துக் கொண்டு "இரண்டு விஷயங்களில் ஒன்று உண்மை, மற்றொன்று தேவையே இல்லையே. பெருமானை குறித்து தவம் பண்ணு என்று சொன்னது உண்மை. பகவானை குறித்து தவம் பண்ணிட்டு என் வயிற்றில் வந்து பிற என்று சொன்னது தேவை இல்லையே! பெருமானை குறித்து தவம் பண்ணி விட்டால், பரமபுருஷனுடைய அவன் மடியே கிடைத்து விடுமே! அப்புறம் இவர்கள் மடி எதற்கு? இந்த தந்தை மடி தேவை இல்லை போ" என்று சொல்லி காட்டுக்கு அனுப்பி வைத்தாள். 


துருவன் காட்டை நோக்கி வந்தான். வழியில் நாரதர் வந்து தடுத்தார். "குழந்தைகளுக்கு மான அவமானம் எல்லாம் இருக்க கூடாது. ஏன் போகிறாய்?" என்று கேட்டார். தேவரீர் சொல்வதை கேட்கற நிலையில் இப்போ நான் இல்லை, எனக்கு பெருமானை உடனடியாக ப்ரத்யக்ஷம் பண்ணியாகணும். அதற்கு எதாவது வழி இருந்தா சொல்லும்" என்றான். அதற்கு நாரதர், "முதலில் உணவில் நாட்டக் கூடாது. உணவு உண்பதை விட வேண்டும்" என்றார். 

உண்ணுவதை நிறுத்தினான் துருவன். பின்னர், தண்ணீர் அருந்துவதையும் நிறுத்தினான். அவனின் தியானம், உச்ச நிலைக்குச் சென்றது. இறைவன், அவன் ஆத்மாவிற்குள் நுழைந்தார். அதை, துருவன் உணர்ந்து கொண்டாலும், அவனது லட்சியம் விஷ்ணுவை நேரில் பார்க்க வேண்டும் என்பதே.


நாரதர் அதற்கும் ஒரு உபாயம் சொல்கிறார். "பிரணவத்தில் சுவாசத்தை நிலை நிறுத்த வேண்டும்" "திருத்வாதசாக்ஷரி என்ற ஓம் நமோ பகவதே வாசுதேவாய" மந்திரத்தை நாரத பகவான் சொல்லி கொடுக்க, துருவன் அதன்படி செய்ய, எங்கும் "ஓம்" என ஓங்காரம் ஒலிக்கிறது. மகாவிஷ்ணு அவன் முன் தோன்றி, அவனை மடியில் தூக்கி வைத்துக் கொண்டார். ஐந்தே மாதத்தில் பெருமானை ப்ரத்யக்ஷமாக சேவித்து விட்டான் துருவன். பெருமானை சேவித்து துருவ பதவி அடைந்தான். துருவ நக்ஷத்திரம் என்று சொல்வதே இவரை வைத்து தான்.


திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “என் தந்தை எங்கே என்று உலகத்துக்கே சர்வலோகத்திற்கும் தந்தையாக இருக்க கூடிய பகவானை தந்தை என்று நினைத்து கேட்கிறானே!. அந்த தந்தையை தேடி கொண்டு காட்டுக்கு போனானே! அப்படி பகவானே தந்தை என்று நான் நினைத்து போகலையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

லீலை கண்ணன் கதைகள் - 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ மகாவிஷ்ணுவின் வாக்குறுதி|

முன்னொரு சமயம், கொடியவர்களும், அகந்தை கொண்டவர்களுமான பல அசுர அரசர்களின் பாரம் தாங்க முடியாமல் பூமாதேவி தவித்தாள். உடனே அவள் ஒரு பசுவின் உருவை எடுத்துக் கொண்டு, பிரம்மாவைச் சென்று பார்த்தாள். தன்னுடைய துன்பத்தை அவள் அவரிடம் சொல்லி கதறினாள். பிரம்மா அவள் மீது இரக்கம் கொண்டார். 


பூமாதேவியைப் பார்த்து அவர், "குழந்தாய்! உன்னை ஒரே ஒருவரால் தான் காப்பாற்ற முடியும். அவர் தான் ஸ்ரீமந்நாராயணன். அவரிடம் அடைக்கலம் புகுவோம், வா'' என்றார். 

பரமசிவனையும் இன்னும் மற்ற தேவர்களையும் அழைத்துக் கொண்டு, பிரம்மா, ஸ்ரீ மகாவிஷ்ணு இருக்கும் வைகுண்டத்தை அடைந்தார். அங்குள்ள திருபாற்கடலின் கரையில் நின்று கொண்டு, எல்லோரும் மிக்க பக்தியுடன் ஸ்ரீ மகாவிஷ்ணுவைத் தியானம் செய்தார்கள். ஆழ்ந்த தியானத்தில் இருந்து பிரம்மாவின் காதுகளில் கணீர் என்று ஒரு குரல் ஒலித்தது. அது மகாவிஷ்ணுவின் குரல்.

பிரம்மா தம் தியானத்திலிருந்து விழித்து எழுந்து, மற்ற தேவர்களைப் பார்த்து, "என் தியானத்தில் நான் நாராயணனின் குரலைக் கேட்டேன். அவர் என்ன சொன்னார் என்று உங்கள் எல்லோருக்கும் சொல்லுகிறேன், கேளுங்கள். பூமாதேவியின் கஷ்டத்தை அவர் ஏற்கனவே அறிந்துள்ளார். உலகில் தேவகிக்கும் வசுதேவருக்கும் மகனாகப் பிறக்க, அவர் தீர்மானித்துள்ளார். அவருக்கு உதவ நீங்கள் எல்லோரும் யது குலத்தில் பிறக்க வேண்டும். அவர் பூலோகத்தில் உள்ளவரை நீங்களும் அங்கு அவரோடு இருக்க வேண்டும்" என்றார்.

பிரம்மா சொன்னதைக் கேட்டு, பூமாதேவியும் மற்ற தேவர்களும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். மகா விஷ்ணுவின் வாக்குறுதி அவர்களுக்கு மிகுந்த திருப்தியை அளித்தது. எல்லோரும் அவரவர் இருப்பிடம் திரும்பினார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 001 - திருவரங்கம் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

001. திருவரங்கம் 
ஸ்ரீரங்கம் - திருச்சி 
முதலாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீரங்கம் கோவில் பெரிய என்ற சொற்களால் 
வரும் பெருமை உடையது 

  • 1) பெரிய கோவில் 
  • (2) பெரிய பெருமாள்
  • (3) பெரிய பிராட்டியார் 
  • (4) பெரிய கருடன் 
  • (5) பெரிய வசரம் 
  • (6) பெரிய திருமதில் 
  • (7) பெரிய கோபுரம் 
 ஸ்ரீரங்கம் ரங்கனாதருக்கு 7 நாச்சிமார்கள் 

  • (1) ஸ்ரீதேவி 
  • (2) பூதேவி 
  • (3) துலுக்க நாச்சியார் 
  • (4) சேரகுலவல்லி நாச்சியார் 
  • (5) கமலவல்லி நாச்சியார் 
  • (6) கோதை நாச்சியார் 
  • (7) ரெங்கநாச்சியார் ஆகியோர்
ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் 
தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். 

  • (1) விருப்பன் திருநாள் 
  • (2) வசந்த உத்சவம் 
  • (3) விஜயதசமி 
  • (4) வேடுபறி 
  • (5) பூபதி திருநாள் 
  • (6) பாரிவேட்டை 
  • (7) ஆதி பிரம்மோத்சவம்
ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் 
திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார். 

  • (1) சித்திரை 
  • (2) வைகாசி 
  • (3) ஆடி 
  • (4) புரட்டாசி 
  • (5) தை 
  • (6) மாசி 
  • (7) பங்குனி
ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் 7ம் திருநாளன்று 
வருடத்திற்கு 7 முறை நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுவார். 

  • (1) சித்திரை
  • (2) வைகாசி 
  • (3) ஆவணி 
  • (4) ஐப்பசி 
  • (5) தை 
  • (6) மாசி 
  • (7) பங்குனி
ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு 
ஏழு உற்சவங்கள் நடைபெறும். 

  • (1) கோடை உத்சவம் 
  • (2) வசந்த உத்சவம் 
  • (3) ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை 
  • (4) நவராத்ரி 
  • (5) ஊஞ்சல் உத்சவம் 
  • (6) அத்யயநோத்சவம் 
  • (7) பங்குனி உத்திரம்
ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர 
மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார்.

  • (1) வசந்த உத்சவம் 
  • (2) சங்கராந்தி 
  • (3) பாரிவேட்டை 
  • (4) அத்யயநோத்சவம் 
  • (5) பவித்ர உத்சவம் 
  • (6) உஞ்சல் உத்சவம் 
  • (7) கோடை உத்சவம்
ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே 
கண்டுகளிக்கும் சேவைகளாகும். 

  • (1) பூச்சாண்டி சேவை 
  • (2) கற்பூர படியேற்ற சேவை 
  • (3) மோகினி அலங்காரம், ரத்னங்கி சேவை 
  • (4) வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம் 
  • (5) உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை 
  • (6) தாயார் திருவடி சேவை 
  • (7) ஜாலி சாலி அலங்காரம்
பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான 
தென் திசையில் 7 கோபுரங்கள் உள்ளன. 

  • (1) நாழிகேட்டான் கோபுரம் 
  • (2) ஆர்யபடால் கோபுரம் 
  • (3) கார்த்திகை கோபுரம் 
  • (4) ரெங்கா ரெங்கா கோபுரம் 
  • (5) தெற்கு கட்டை கோபுரம்- 
  • (6) தெற்கு கட்டை கோபுரம் 
  • (7) ராஜகோபுரம்
பன்னிரண்டு ஆழ்வார்களும் 7 சன்னதிகளில் 
எழுந்தருளி இருக்கிறார்கள். 

  • (1) பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார் 
  • (2) நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார் 
  • (3) குலசேகர ஆழ்வார் 
  • (4) திருப்பாணாழ்வார் 
  • (5) தொண்டரடிபொடி ஆழ்வார் 
  • (6) திருமழிசை ஆழ்வார் 
  • (7) பெரியாழ்வார், ஆண்டாள்
ஏழு திருச்சுற்றுகள், ஏழு மதில் சுற்றுக்களையும் 
ஏழு உலகங்கள் என்று கூறுவர்.

  • (1) மாடங்கள் சூழ்ந்துள்ள சுற்று: பூலோகம்
  • (2) திரிவிக்ரம சோழன் சுற்று: புவர் லோகம்
  • (3) அகளங்கன் என்னும் கிளிச் சோழன் சுற்று: ஸுவர் லோகம்
  • (4) திருமங்கை மன்னன் சுற்று: மஹர் லோகம்
  • (5) குலசேகரன் சுற்று: ஜநோ லோகம்
  • (6) ராஜ மஹேந்திர சோழன் சுற்று: தபோ லோகம்
  • (7) தர்ம வர்ம சோழன் சுற்று: ஸத்ய லோகம்

மற்ற விவரங்கள் 

  • ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்ரி உற்சவத்தில் 7ம் திருநாளன்று ஸ்ரீரங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்.
  • தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் 30 நாட்களும் தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.
  • ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். ராமாவதாரம் 7வது அவதாரமாகும்.
  • இராப்பத்து 7ம் திருநாளில் நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில் சேவை சாதிப்பார்.
  • பிரம்மோற்ஸவத்தின் ஏழாம் நாளில், சுவாமிக்கு சூர்ணத்தால் (மருந்துக்கலவை) அபிஷேகம் செய்யப்படுகிறது.
  • கார்த்திகை கைசிக ஏகாதசியன்று (வளர்பிறை ஏகாதசி) இரவில் நம்பெருமாளுக்கு 365 போர்வைகளை ஒவ்வொன்றாக போர்த்தும் வைபவம் விடிய விடிய நடக்கிறது. சுவாமிக்கு தினசரி பூஜையில் அணிவிக்கும் வஸ்திரங்களில் குறைபாடு இருந்தால், அதை நிவர்த்தி செய்யும்விதமாக இந்த பரிகாரம் செய்கின்றனர். கார்த்திகை, மார்கழி குளிர் மாதங்கள் என்பதால், சுவாமியின் மீதான அன்பின் காரணமாகவும், போர்வை அணிவிப்பதாகச் சொல்வர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - திருப்பல்லாண்டு அறிமுகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

1. திருப்பல்லாண்டு - 12 பாசுரங்கள் - பெரியாழ்வார்
திவ்ய ப்ரபந்தம் - 1 - 12

காப்பு
குறள் வெண்செந்துறை

திருப்பல்லாண்டு பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஸ்ரீவில்லிபுத்தூர்ச் சேர்ந்த பெரியாழ்வார் பாடிய நூல் ஆகும். இது 12 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தின் முதல் ஆயிரம் பாக்களில் முதல் 12 பாடல்கள் திருப்பல்லாண்டு பாடல்கள் ஆகும்.


பாண்டிய குல மன்னன் வல்லப தேவனின் அரசவையில் எம்பெருமான் நியமித்த ருளியபடி பெரியாழ்வார் பரதத்வத்தை (உண்மை பொருள்) நிலை நாட்டி பொற் கிழியைப் பெற்றதால் அரசன் மகிழ்ந்து, அவருக்கு 'பட்டர்பிரான்' என்று விருது அளித்து, யானை மீது நகர்வலம் அழைத்து விழா எடுத்தான். அந்த விழாவைக் காண மஹாலக்ஷ்மியுடன் பகவானும் கருடன் மீது ஏறி வந்தான். இந்த இருள் தருமா ஞாலத்தில் தன் மேன்மையைக் கருதாமல் வந்தானே! அவனது பேரழில் பொய்கையான திவ்ய மங்கள திருமேனி அனைத்து மக்கள் கண்களுக்கும் இலக்கானால் திருஷ்டி தோஷம் ஏற்பட்டு விடுமே! என்று ஆழ்வாருக்கு பரிவு பொங்கியது. உடனே யானை கழுத்தில் இருந்த மணிகளை தாளமாகக் கொண்டு 'பல்லாண்டு, பல்லாண்டு' என்று மங்களாசாசனம் பண்ணுகிறார். மேலும் அவனது மேன்மைக்கு தான் மட்டும் பல்லாண்டு பாடினால் போதாது என்று எண்ணி பகவானையே அடைய விரும்பும் பக்தர்களையும், கைவல்யம் என்னும் ஆத்மா அனுபவத்தை விரும்புபவர்களையும், செல்வத்தை விரும்புபவர்களையும் தன்னுடன் பல்லாண்டு பாட வாருங்கள் என்று அழைக்கிறார். 

மக்கள் தன் நல்லதையே விரும்புகிறார்களே! பிறர் நலத்தை எண்ண வேண்டவோ! தம்முடைய நன்மையை மட்டுமே விரும்பி பகவானிடம் போகிறார்கள். வேண்டியவற்றை கேட்டு பெறுகிறார்கள். பகவானுக்கு ஒரு முறை கூட பல்லாண்டு பாடுவதில்லையே! உலகின் தன்மை அறிந்து பெரியாழ்வாரின் திருவுள்ளம் குமுறுகிறது. பல்லாண்டு பாடலாம் வாங்கோள் என்று எல்லோரையும் அழைக்கிறார். பல்லாண்டு பாடுவதே மங்களாசாசனம் செய்வது. அடியார்களின் கடமை, அவர் காட்டிய வழியை பின்பற்றுவோமே!

ஆழ்வார் ஞானநிலையில் பகவானை பர தத்வமாக நிலை நாட்டினார். ஆனால் அவனை எதிரே கண்டதும் பிரேம நிலையில் பகவானை, தாம் அவனுக்கு எவ்வித தீங்கும் நேராமல் காக்க வேண்டும் என்று மங்களாசாசனம் பண்ணுவது இப்பிரபந்தமாகும். 

ஹரி ஓம்||
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - த்யான ஸ்லோகம் 5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்⁴யான ஸ்லோகம் - 5

வஸுதே³ வஸுதம் தே³வம், 
கம்ஸ சாணூர மர்த³னம்|
தே³வகீ பரமானந்த³ம், 
க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³ கு³ரும்||

இந்த ஸ்லோகம் கீதாசார்யனின் நிஜ ஸ்வரூபத்தை விளக்கும் ஒன்று. வசுதேவரின் மகன் ஆனால் தேவன். அதாவது பகவானே கிருஷ்ணனாக அவதரித்தான் என்பதை சுட்டுகிறது. . கம்சன் சாணூரன் இவர்களை அழித்தவன்., இது அவன் அவதார நோக்கமான துஷ்ட சம்ஹாரம். தேவகியின் பரமானந்தத்திற்குக் காரணம் ஆனவன். இது அவன் பால லீலைகளால் தேவகிக்கு மட்டும் அல்ல யசோதைக்கும் மற்றும் எல்லோருக்கும் இந்த உலகத்துக்குமே ஆனந்தத்தை கொடுத்தது. கடைசியில் ஜகத்குருவான க்ருஷ்ணனை நமஸ்கரிக்கிறேன் என்று அவன் யார் என்பதை காட்டுகிறார். ஜகத்குரு. முதலில் பிரம்மாவுக்கு உபதேசம் செய்தவரான பரம்பொருள். இங்கு கீதாசார்யனாக உலகுக்கு உபதேசம் செய்கிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.1.2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² ப்ரத²ம: அத்⁴யாய꞉||
||நைமிஷ க்ஷேத்ரே ஸ்ரீமத் பாகவத விஷயே  
ஸூதம், ப்ரதி ஸொ²னகாதி முனீநாம் ப்ரஸ்ந:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||முதல் அத்யாயம்|| 
||ஞானிகளின் கேள்விகள்||

ஸ்லோகம் - 1.1.2

த⁴ர்ம: ப்ரோஜ்ஜி²த கைதவோத்ர பரமோ 
நிர்மத் ஸராணாம் ஸதாம்|
வேத்³யம் வாஸ்தவமத்ர வஸ்து ஸி²வத³ம் 
தாபத்ர யோந் மூலநம்|| 
ஶ்ரீமத்³ பா⁴க³வதே மஹாமுநி க்ருதே 
கிம் வா பரைர் ஈஸ்²வர꞉|
ஸத்³யோ ஹ்ருத்³ய வருத்⁴யதேத்ர க்ருதிபி⁴:
ஸு²ஸ்²ரூ ஷுபி⁴ஸ் தத் க்ஷணாத்||

  • மஹா முநி க்ருதே - ஸ்ரீமன் நாராயணரால் முதலில் உபதேசிக்கப்பட்ட
  • அத்ர - இந்த
  • ஶ்ரீமத்³ பா⁴க³வதே - அழகான பாகவதத்தில்
  • நிர்மத் ஸராணாம் - அஸூயை (பொறாமை) அற்றவர்களான
  • ஸதாம் - ஸஜ்ஜனங்களுக்காக
  • ப்ரோஜ்ஜி²த கைதவோ - அடியோடு அகற்றப்பட்ட கபடத்தையும் பலாபி ஸந்தியையும் உடையதான
  • பரமோ - மிக உயர்ந்ததான
  • த⁴ர்மஃ - பாகவத தர்மம் கூறப்பட்டிருக்கிறது
  • அத்ர - இந்த பாகவதத்தில்
  • வாஸ்தவம் - பரமார்த்தமானதும், என்றும் அழியாததும்
  • ஸி²வத³ம் - க்ஷேமத்தை அளிப்பதும்
  • தாப த்ரயோந் மூலநம் - ஆத்யாத்மிகம் முதலிய தாபங்களை வேருடன் அகற்றுவதுமான
  • வஸ்து - பரமாத்ம வஸ்துவானது
  • வேத்³யம் - அறிய முடிந்ததாக இருக்கிறது
  • பரைர் - மற்ற சாஸ்திரங்களால்
  • ஈச்வரஹ - பரமாத்மா
  • ஹ்ருதி³ - ஹ்ருதயத்தில்
  • ஸத்³யோ - கேட்ட மாத்திரத்திலே (உடனேயே) 
  • அவருத்⁴யதே கிம் வா - நிலை நிறுத்தப்படுகிறாரா என்ன?
  • அத்ர - இந்த பாகவதத்திலோ என்றால் 
  • க்ருதிபி⁴ஹ் - புண்ணியவான்களான
  • ஸு²ஸ்²ரூ ஷுபி⁴ஸ் - கேட்க விருப்பம் கொண்டவர்களால்
  • தத் க்ஷணாத் - அந்த க்ஷணத்திலேயே நிலை நிறுத்தப்படுகிறார்

பௌதிக நோக்கம் கொண்ட அனைத்து மதச் செயல்களையும் முற்றிலுமாக நிராகரித்து, இந்த பாகவத புராணம் மிக உயர்ந்த உண்மையை முன் வைக்கிறது, இது இதயத்தில் தூய்மையான பக்தர்களால் நிலை நிறுத்தப்படும். அனைவரின் நலனுக்காக மாயையில் இருந்து வேறுபடுத்தப்பட்ட யதார்த்தமே உயர்ந்த உண்மை. இத்தகைய உண்மை முப்பெரும் துன்பங்களை வேரோடு பிடுங்கி எறிகிறது. மகா முனிவரான ஸ்ரீ வியாச தேவரால் தொகுக்கப்பட்ட இந்த அழகான பாகவதம் கடவுளை உணர போதுமானது. ஒருவன் பாகவதத்தின் செய்தியை கவனத்துடனும் பணிவுடனும் கேட்ட உடனேயே, அவன் பரமாத்மாவிடம் பற்று கொள்கிறான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 8 & 9

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

(8)
யுதி⁴ஷ்டிர உவாச| 
கிமேகம் தைவதம் லோகே 
கிம் வாப்யேகம் பராயணம்|
ஸ்துவந்த: கம் கமர்ச் சந்த: 
ப்ராப்நுயுர் மாநவஸ: ஸு²ப⁴ம்||


ஸ்துவந்த: - ஸ்துவந்தஹ்
சந்த: - சந்தஃ
மாநவஸ: - மாநவஸஸ்²

(9)
கோ த⁴ர்ம: ஸர்வ த⁴ர்மாணாம் 
ப⁴வத: பரமோ மத:|
கிம் ஜபந் முச்யதே ஜந்துர் 
ஜந்ம ஸம்ஸார பந்தநாத்:||


த⁴ர்ம: - த⁴ர்மஸ்
ப⁴வத: - ப⁴வதஃ
மத: - மதஹ
பந்தநாத்: பந்தநாத்து

8 & 9 - தருமர் (யுதி⁴ஷ்டிரர்) கூறினார்:

சந்தனு மஹாராஜாவுக்கும் கங்கா தேவிக்கும் பிறந்தவர் பீஷ்மர். இவர் மகா ஞானி. ஞானத்தைச் சொல்பவர் பீஷ்மர், கேட்பவர் தரும தேவதையின் புதல்வர். சொல்லப்படும் பொருளோ ஆசார்யரால் விரும்பிப் போற்றப் படுகிறது. கேட்பவனுக்கு நல்லவற்றைச் செய்யும் என்னும் நம்பிக்கையுடனும், நல்ல மனதுடனும் சொல்கிறார். சொல்லும் பீஷ்மரும், கேட்கும் தருமரும் ஒருவருக்கொருவர் பிரியமானவர். எனவே, மேன்மையை அளிக்கும் நல்லவை இங்கே கேட்கப்படுகின்றன. தர்மங்களில் சிறந்ததாகப் பீஷ்மர் எதைக் கருதுகிறாரோ, அதை வெளியிட வேண்டுமென்று தருமர் கேட்கிறார்: 

  • 1. ஸாஸ்திரங்களில் மிக உயர்ந்த தெய்வமாக, ஒப்பற்ற தெய்வமாகக் கூறப்படும் தெய்வம் எந்தத் தெய்வம் என்று கருதுகிறீர்?
  • 2. இகம், பரம் ஆகிய இரண்டிலும் விருப்பமுடன் அடையத்தக்க பொருளாக இருப்பது எது?
  • 3. யாரைப் புகழ்ந்து பாடி வழிபட்டால் உயர்ந்த நலனைப் பெற முடியும்.
  • 4. யாரை மனதால் தியானித்தும், வாக்கால் திருநாமங்களைச் சொல்லியும், மலர் கொண்டு கையினால் அர்ச்சித்தும் பெறுதற்கரிய பலனைப் பெற முடியும்?
  • 5. எல்லாத் தருமங்களிலும் சிறந்த தருமமாகத் தங்களால் மனதாரக் கருதும் தருமம் எது?
  • 6. பிறத்தல், வளர்தல், மூப்பெய்தல், இறத்தல், புண்ய பாபங்களுக்கு ஏற்பப் பயனை அனுபவித்தல் ஆகியவற்றைக் கொண்ட உயிர்கள் எதை ஜபித்துப் பிறவித் தளையில் இருந்து விடுபட முடியும்? மோட்ச சாதனத்தைத் தருவது எது?

இவ்வாறு கேள்விகள் கேட்ட தருமருக்குப் பீஷ்மர் கூறலானார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - ஏழாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

007 தாய்க்கோலஞ் செய்தேனோ அநஸூயைப் போலே|

அநஸூயை அத்ரி முனிவரின் தர்ம பத்தினி. இருவரும் சித்திரக்கூடத்தின் தெற்கு பக்கத்தில் மந்தாகினி நதிக்கரையில் ஓர் ஆசிரமத்தில் வாழ்ந்து வந்தார்கள். அநஸூயை என்ற பெயருக்கு ஏற்றார் போல், யார் குற்றமும் அவள் கண்ணில் படாது. எல்லாவற்றையும் நல்ல குணமாகவே எடுத்துக் கொள்வாள். அவளும் யாரை பார்த்தாலும் பொறாமை படமாட்டாள். அவளை பார்த்தும் யாரும் பொறாமை படமாட்டார்கள். அந்த அளவிற்கு சிறந்த குணசாலினியாக இருந்தாள். அவர்களுக்கு சொத்து என்று எதுவும் இல்லை. ஆனால் ராமரும் சீதையும் அவர்களை தேடிக் கொண்டு வந்து தெண்டன் சமர்ப்பித்து அதிக நேரம் உட்கார்ந்து பேசுகிற அளவிற்கு சிறந்தவர்களாக விளங்கினர் தம்பதியினர். 


ராமர் அத்ரியுடனும், சீதை அநஸூயையூடனும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அப்பொழுது சீதையிடம் "சீதை, உன் திருக்கல்யாணம் மிகவும் சிறப்பாக நடந்ததாமே! எப்படி நடந்தது? யாரெல்லாம் வந்தார்கள்? என்ன சீர் எல்லாம் வந்தது?" போன்ற கேள்விகளை எல்லாம் கேட்கிறாள் அநஸூயை. சீதையும் ஆசையோடு அனைத்தையும் சொல்கிறாள். அதை கேட்டு "சீதை, இத்தனை நன்றாக இருந்தவள் இப்பொழுது காட்டிற்கு வந்து விட்டாயே! இப்படி எல்லாம் நடந்திருக்க வேண்டாம் தான். இருந்தாலும் எல்லா அலங்காரமும் உனக்கு நான் பண்ணி விடுகிறேன். அனைத்தையும் விட்டுவிட்டு தான் நீ வந்திருக்க! ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு ஆபரணம் அணிந்துக் கொள்ளும் அளவிற்கு தான் உன் தந்தையின் இல்லமும் மாமனாரின் இல்லமும் இருக்கிறது. அத்தனை வைபவம் பெற்றவர்கள் தான் அவர்கள். அப்படியிருக்கும் போது ஒன்றுமே இல்லாமல் வெறும் மான் தோல் ஆபரணங்களோடு வந்திருக்கிறாயே! இது எனக்கு பிடிக்கலை, அதனால் உனக்கு நான் அலங்காரம் பண்ண போறேன்" என்று சொல்லி பக்கத்தில் இருக்கும் நல்ல புஷ்பங்களை கொய்து கொண்டு வந்து, நல்ல ஆடைகளை எடுத்துக் கொண்டு வந்து சீதைக்கு மிகவும் அழகாக அலங்காரம் பண்ணி விட்டாள். தன் மகளாக நினைத்து, அழகுப் படுத்தி, தலை கோதி விட்டு, தோள்களை தொட்டு தடவி ஆஸ்வாஸப்படுத்தி, "கவலைப்படாதே சீதை, பதினான்கு வருடங்கள் ரிஷிகளோடு கூடியிருந்து நிறைய விஷயங்களையும் அர்த்தத்தையும் தெரிந்துக் கொண்டு நீயும் ராமனுமாக நல்ல ஆட்சி புரிவீர்கள்" என்று சீதைக்கு சொல்கிறாள். 

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “அப்படி ஒரு தாயை போல நான் ஏதாவது செய்தேனா? அந்த தாய்மை எனக்கு இல்லையே! பெருமானுக்கும் பிராட்டிக்கும் அலங்காரம் பண்ணி பார்க்க வேண்டும் என்ற தாய்மை எனக்கு இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
----------
தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே - இதற்கு இன்னொரு கதையையும் எடுத்துக்காட்டாய் சொல்லுவார்கள். 

அத்திரி மகரிஷி, அனுசூயா தம்பதிகள் குடில் அமைத்து வசித்து வந்தனர். அவர்களுக்கு மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் குழந்தைகளாக பிறக்க வேண்டும் என ஆசை. அதற்காக கடுமையாக பிரார்தித்து வந்தனர்

மும்மூர்த்திகளும், அவர்களது பக்தியை சோதிக்க எண்ணினர். துறவிகள் போல அவர்கள் வேடமிட்டு, அத்திரியின் குடிலுக்கு வந்தனர். அப்போது மகரிஷி வீட்டில் இல்லை.

அனுசூயா, தினமும் தன் கணவருக்கு பாத பூஜை செய்து, அந்தத் தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்ட பின்னரே பணிகளைத் தொடங்குவார். அந்தத் தீர்த்தம் எப்போதும் அவர்கள் இல்லத்தில் இருக்கும்.

அனுசூயா வந்த துறவிகளை வரவேற்றார். உணவு எடுத்து வர உள்ளே சென்ற போது அவர்கள் "தாயே! எங்களிடம் ஒரு பழக்கம் உள்ளது, எங்களுக்கு யார் உணவிட்டாலும் அவர்கள் நிர்வாண (திகம்பரராக) நிலையிலேயே அதைச் செய்ய வேண்டும். அப்போது தான் அந்த உணவை நாங்கள் ஏற்போம்" என்றனர்.

அனுசூயாவிற்கு இதில் ஏதோ தெய்வ சங்கல்பம் இருப்பது போலத் தெரிந்தது. உடனே அவர் ,"ஆகா அப்படியே செய்கிறேன்" என்று கூறிவிட்டு, எப்போதும் வீட்டில் வைத்திருக்கும் கணவரின் பாத பூஜை தீர்த்தத்தை எடுத்து" இறைவா! நான் என் கணவர் மீதும், உன் மீதும் கொண்ட பக்தி உண்மையானால் இந்தத் துறவிகளை குழந்தையாக மாற்று' என்று கூறியபடியே அந்த தீர்த்தத்தை அவர்கள்மீது தெளித்தார். மூவரும் குழந்தைகள் ஆகிவிட்டனர். பின், அவர்கள் விருப்பப்படியே அவர்கள் பசியை பாலூட்டிப் போக்கினார்.


அத்திரி முனிவரும் வந்தார். தனது ஞானதிருஷ்டியால் வந்தவர்கள் மும்மூர்த்திகள் என அறிந்தார். அக்குழந்தைகளை அணைத்தார். மூன்று தலைகளும், ஆறு கைகளும் கொண்ட ஒரே குழந்தையாக ஆனது. இத்தகவல் அறிந்த முப்பெரும் தேவியரும், அவரவர் தங்கள் கணவர்களைத் திருப்பித்தர வேண்டினர். அக்குழந்தை தங்களுடனேயே வளர வேண்டும் என அத்திரியும், அனுசூயாவும் சொன்னார்கள், அதற்கு தேவியர்கள் ஒப்புக் கொண்டால், அவர்களது கணவன்மார்களைத் திருப்பித் தருவதாகக் கூறினர். மூவரும் அதற்கு இசைய, அனுசூயை மும்மூர்த்திகளை மானசிகமாக வேண்டினார். அப்போது மூவரும் காட்சியளித்து, தங்கள் சக்தியாகிய அக்குழந்தை அவர்களுடன் வளர ஆசிர்வதித்து, அக்குழந்தை ஒரு முனிவராக வளரும் என்றனர். அக்குழந்தையே தத்தாத்ரேயர் ஆவார்.

இதையே திருக்கோளூர் பெண் 'தாய்க்கோலம் செய்தேனோ அனுசூயைப் போல" என்கிறாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 001 - திருவரங்கம் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

001. திருவரங்கம் 
ஸ்ரீரங்கம் - திருச்சி 
முதலாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் பெருமாளுடன் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இங்குள்ள ரங்கநாயகி தாயார் சன்னதியில் தாயார் உற்சவராகவும், அவளுக்கு பின்புறம் ஸ்ரீதேவி, பூமாதேவி என வரிசையாகக் காட்சி தருகின்றனர். இத்தகைய அமைப்பில் தாயார்களை தரிசிப்பது அபூர்வம். தாயார் பூஜையில் தீபாராதனை செய்யும்போது மத்தளம், எக்காளம் என்னும் வாத்தியங்கள் இயக்கப்படுகின்றன. 

மருத்துவக் கடவுளான தன்வந்திரிக்கு இங்கு சன்னதி இருக்கிறது. மார்பில் மகாலட்சுமி, கைகளில் சங்கு, கரம், அமிர்த கலசம் மற்றும் அட்டைப்பூச்சியுடன் காட்சி தருகிறார் இவர். தீராத வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள், இவருக்கு விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றி, தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள். வெள்ளிக் கிழமைகளில் ரங்கநாதருக்கு புனுகு சாத்தப்படுகிறது. தினமும் சுவாமிக்கு நைவேத்யத்துடன் சுக்கு, வெல்லக் கலவையையும் படைக்கின்றனர். சுவாமிக்கு ஜீரணமாவதற்காக, இந்த கலவையை தன்வந்திரியே கொடுப்பதாக ஐதீகம். பிரம்மோற்ஸவத்தின் ஏழாம் நாளில், சுவாமிக்கு சூர்ணத்தால் (மருந்துக்கலவை) அபிஷேகம் செய்யப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் முப்பது முக்கோடி புண்ய தீர்த்தங்களும், காவிரியில் கலக்கிறபடியால் துலாகாவேரி ஸ்நானம் சிறப்பானது.

கம்ப ராமாயணத்தை கம்பர் இங்கு அரங்கேற்றம் செய்த போது, அதில் நரசிம்மரை பற்றி குறிப்பிட்டதை சுட்டிக் காட்டிய அறிஞர்கள், ராம அவதாரத்தில் நரசிம்மர் பற்றி சொல்லக் கூடாது என்றனர். கம்பர், "அதை நரசிம்மரே சொல்லட்டும்!' எனச் சொல்லி நரசிம்மரிடம் வேண்டினார். அப்போது நரசிம்மர், கர்ஜனையுடன் தூணிலிருந்து வெளிப்பட்டு, "கம்பரின் கூற்று உண்மை!' என ஆமோதித்து தலையாட்டினார். மேட்டழகிய சிங்கர் என்றழைக்கப்படும் இவர், தாயார் சன்னதி அருகில் தனி சன்னதியில் இருக்கிறார். கையில் சங்கு மட்டும் இருக்கிறது, கரம் கிடையாது. சன்னதி எதிரில், கம்பராமாயண அரங்கேற்ற மண்டபம் உள்ளது. 

இத்தலத்தில் தங்கி பல காலம் ரங்கநாதருக்கு சேவை செய்த ராமானுஜர், இங்கேயே மோட்சம் அடைந்தார். அவரது உடலை, சீடர்கள் பத்மாசனத்தில் அமர வைத்தபடி அடக்கம் செய்தனர். சில காலம் கழித்து அவர் அதே கோலத்திலேயே பூமிக்கு மேல் எழுந்தார். இவர் இங்கு தனிச் சன்னதியில் காட்சி தருகிறார். இவருக்கு திருமஞ்சனம் கிடையாது. சித்திரை திருவாதிரையன்று குங்குமப்பூ, பச்சைகற்பூரம் சேர்ந்த கலவை சாத்தப்படுகிறது. இத்தலத்தில் அனைத்து மரபுகளும் ஸ்ரீ ராமானுஜரால் ஏற்படுத்தப்பட்டது. 

திருப்பாணாழ்வார் மீது அர்ச்சகர் ஒருவர் கல் எறிந்த போது, சுவாமி தன் நெற்றியில் ரத்தம் வழிய நின்று, ஆழ்வாருக்கு மோட்சம் கொடுத்த தலம் இது. டில்லியை ஆட்சி செய்த மன்னனின் மகள், இத்தலத்து நம்பெருமாள் மீது தீராத அன்பு கொண்டிருந்தாள். இதன் அடிப்படையில் நம்பெருமாளுக்கு ஏகாதசி, அமாவாசை நாட்களில் லுங்கி அணிவித்து, ரொட்டி நைவேத்யம் படைக்கப்படுகிறது. 

நம்பெருமாளை ஸ்ரீ ராமானுஜருக்கு முற்பட்ட ஆசாரியர்கள் ராமானுஜர் ஆழ்வான் ஆண்டான், பட்டர், எம்பார், பிள்ளைலோகாச்சாரியார் போன்ற ஆசாரியர்களும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - பொது தனியன் 5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஆழ்வார்கள் உடையவர் தனியன்
(ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்தது)

5. பூ⁴தம் ஸரஸ்²ச மஹதா³ஹ் வய ப⁴ட்ட நாத²* 
ஸ்ரீ ப⁴க்தி ஸார குலஸே²க²ர யோகி³ வாஹாந்* 
ப⁴க்தாங்க்⁴ரி ரேணு பரகால யதீந்த்³ர மிஸ்²ராந்*
ஸ்ரீமத் பராங்குஸ² முனிம் ப்ரணதோஸ்மி நித்யம்|

  • பூதம் - கு ஸூ மத்தில் அவதரிக்கையாலே கடல் மலை பூதத்தார்
  • சரஸ்ய - பொற்றாமரைப் பூவில் அவதரித்த பொய்கையார்
  • மஹதாஹ்வய - செவ்வல்லிப் பூவிலே அவதரித்த பேயன்
  • பட்ட நாத - வித்துவக் கோஷ்டியிலே சென்று அவர்களை வென்று பரத்வ நிர்ணய முகேன பட்டர் பிரான் பெரியாழ்வார் 
  • ஸ்ரீ - பெரியாழ்வாருக்கு ஸ்ரீ யான ஆண்டாள்
  • ஸ்ரீ பக்தி சாரர் - திருமழிசையாழ்வார்
  • குலசேகர - பெரிய பெருமாள் விஷயத்தில் நிரவதிக பிரேமத்தையுடைய ஸ்ரீ குலசேகரப் பெருமாள்
  • யோகி வாஹான்- யோகி வாஹர் ஆகிறார் முனி வாஹரான பாண் பெருமாள் திருப்பாணாழ்வார்
  • பக்தாங்க்ரி ரேணு - தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் என்கை
  • பரகால - வாள் வீசும் பரகாலன் திருமங்கை ஆழ்வார்
  • யதீந்திர மிஸ்ரான் - மதுரகவி யாழ்வார் எதிராசராம் இவர்கள் சேர்த்தி இருப்பது
  • ஸ்ரீ மத் பராங்குச முநிம் - எல்லாரையும் அவயவ பூதராய் உடையராய் ஆழ்வார் தாம் இருப்பது 

நம்மாழ்வாரே முழு பகவத் ஸ்வரூபம், மற்ற ஆழ்வார்கள் அவருக்கு அவயங்கள். பூதத்தாழ்வாரே திருமுடி, பொய்கை பேய் இரு கண்கள், முகமே பட்டர்பிரான், கழுத்து திருமழிசை, இரு கைகளோ குலசேகரனும் திருப்பாணனும், தொண்டரடி தான் திருமார்பு, கலியன் நாபி, யதிராஜரே நம்மாழ்வாரின் திருவடி. இத்தனியன் ஸ்ரீ நன்ஜீயரின் தூண்டுதலின் பேரில் ஸ்ரீ பராசர பட்டரால் அருளிச் செய்யப்பட்டது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - த்யான ஸ்லோகம் 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்⁴யான ஸ்லோகம் - 4

ஸர்வோ பனிஷதோ³ கா³வோ, 
தோ³க்³தா⁴ கோ³பால னந்த³ன꞉|
பார்தோ² வத்ஸ꞉ ஸுதீ⁴ர் போ⁴க்தா, 
து³க்³த⁴ம் கீ³தாம்ருதம் மஹத்||

உபநிஷத்துக்களே பசுக்களாக இருக்க கோபால நந்தனன் கறப்போனாக, அர்ஜுனனே கன்றாக, உலகில் உள்ள நல்லோர் பருகுவதற்காக கீதை என்கிற அம்ருதம் கறக்கப்பட்டது. உபநிஷத்துக்களின் பொருள் எல்லோராலும் அறியக் கூடியதன்று. அதனால் எல்லையற்ற கருணையுடன் பகவான் அவற்றின் சாரத்தை கீதை என்கிற பாலின் மூலம் எல்லோரும் பருகும்படி செய்தான். பால் குழந்தையிலிருந்து முதியோர் வரை எல்லோராலும் எளிதில் ஜீரணிக்கப் படுகிறதல்லவா?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்