About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 2 March 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 117

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 87

குமுத³: குந்த³ர: குந்த³: 
பர்ஜந்ய: பாவநோ நில:|
அம்ருதாம் ஸோம் ருதவ புஸ் 
ஸர்வஜ்ஞஸ் ஸர்வதோ முக²:||

  • 813. குமுத³ஹ் - பூமண்டலத்தின் ஆனந்தமாக இருப்பவர். தனது பக்தர்களின் சங்கத்தில் இந்த உலகில் மகிழ்ச்சியாக இருப்பவர். தீமை செய்பவர்களை ஒழித்து பூமியின் சுமையை இறக்குபவர். பூமியின் சுமையை குறைப்பதன் மூலம் அவர் பூமியை மகிழ்விக்கிறார். மோட்சத்தை அருளுபவர். சூரியனின் வடிவில் வானத்தில் மகிழ்ச்சி அடைபவர். நீல அல்லி மற்றும் தாமரையால் செய்யப்பட்ட மாலையை அணிந்தவர்.
  • 814. குந்த³ரஹ் - பரதத்துவத்தைப் பற்றிய ஞானத்தை அளிப்பவர். உன்னத யதார்த்தத்தைப் பற்றிய அறிவை வழங்குபவர். எண்ணற்ற பிறவிகளில் சேரும் பாவங்களைக் கரைப்பவர் அல்லது நீக்குபவர். தேடப்பட்ட அல்லது விரும்பியதைப் போன்ற நன்மைகளை வழங்குபவர். ஹிரண்யக்ஷை தேடும் போது பூமியைத் தனது வராஹ அவதாரத்தில் துளைத்தவர். பூமியைத் துளைத்து சமுத்திரங்களை உருவாக்கியவர். குண்ட மல்லிகை மலர்களை தூய்மையான பிரசாதத்தை தம் பக்தர்களால் காணிக்கையாகக் கொண்டு மிகவும் மகிழ்ந்தவர்.
  • 815. குந்த³ஃ - பாபத்தைப் போக்கிப் படிப்படியாக ஞானமளிப்பவர். உயர்ந்த அறிவை வழங்குபவர். தன் பக்தர்களின் பாவங்களைச் சுத்தப்படுத்துபவர். குந்தா மல்லிகை மலரைப் போன்று தூய்மையும் அழகும் உடையவர்.  குந்தா மலரைப் போன்ற தூய்மையைத் தன் பக்தர்களுக்கு வழங்குபவர். குந்தா என்ற ஈட்டியை உடையவர். தன் பக்தர்களின் பாவங்களை நீக்குவதில் குந்த ஈட்டியைப் போன்ற கூர்மை உடையவர். காஷ்யப ரிஷிக்கு பூமியைக் காணிக்கையாகக் கொடுத்தவர். சூரியன், மழை போன்றவற்றின் மூலம் பூமியை சுத்தம் செய்பவர்.
  • 816. பர்ஜந்யஃ - தாபத்தைப் போக்கும் மேகமாக இருப்பவர். பயிர்களின் மீது மழை பொழியும் மேகம் போல பக்தர்களுக்கு அருள் புரிபவர்.
  • 817. பவந - தானே பக்தர்களிடம் செல்பவர். பக்தர்கள் அவரைப் பற்றி சிந்திக்கும் செயலில் ஈடுபடும் போது கூட அவர் அவர்களைத் தூய்மைப்படுத்துகிறார்.
  • 818. அநிலஹ - தூண்டுதலின்றி தானே பக்தர்களுக்கு அருள் புரிபவர். அவருக்கு மேல் அதிகாரம்  செய்ய யாரும் இல்லை. உயர்ந்த அதிகாரம் பெற்றவர். 
  • 819. அம்ருதாச - அமிர்தத்தை உட்கொண்டவர். தன் பக்தர்களுக்கு அமிர்தத்தையே ஊட்டுபவர். தனது பக்தர்களுக்கு ஆசீர்வாதங்களை வழங்குவதில் குறையாத விருப்பம் கொண்டவர். 
  • 820. அம்ரு தவபுஸ் - அமுதம் போன்ற திருமேனியை உடையவர். அழியாத வடிவம் கொண்டவர். தனது பக்தர்களுக்கு வெகுமதி அளிக்க வேண்டும் என்ற நிலையான ஆசை கொண்டவர். அவர் மரணம் மற்றும் சிதைவு இல்லாத உடலைக் கொண்டு இருக்கிறார்.
  • 821. ஸர்வஜ்ஞஸ் - முற்றும் உணர்ந்தவர். அவர் அனைத்தையும் அறிந்தவர். 
  • 822. ஸர்வதோ முகஹ - எளிதில் வசீகரிக்கக் கூடியவர். அவர் எல்லாப் பக்கங்களிலும் கண்கள் மற்றும் முகங்களைக் கொண்டவர். எல்லாவற்றையும் பார்க்கிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.54

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.54 

அர்ஜுந உவாச|
ஸ்தி²த ப்ரஜ்ஞஸ்ய கா பா⁴ஷா 
ஸமாதி⁴ஸ் த²ஸ்ய கேஸ²வ|
ஸ்தி²த தீ⁴: கிம் ப்ரபா⁴ ஷேத 
கிமா ஸீத வ்ரஜேத கிம்||

  • அர்ஜுந உவாச - அர்ஜுநன் சொல்லுகிறான் 
  • ஸ்தி²த ப்ரஜ்ஞஸ்ய - உணர்வில் உறுதி பெற்றவன் 
  • கா - என்ன 
  • பா⁴ஷா - பேசுவான்
  • ஸமாதி⁴ஸ் த²ஸ்ய - ஸமாதியில் நிலை பெற்றோன் 
  • கேஸ²வ - கேசவா!
  • ஸ்தி²த தீ⁴ஹ் - ஸ்திர புத்தியுடையவன்
  • கிம் - என்ன 
  • ப்ரபா⁴ ஷேத - பேசுவான் 
  • கிம் - எவ்வாறு 
  • ஆஸீத - இருப்பான் 
  • வ்ரஜேத - நடப்பான் 
  • கிம் - எவ்வாறு

அர்ஜுநன் கூறுகிறார்:- கேசவா! உறுதி கொண்ட அறிவுடன் சமாதியில் நிற்போன் எவ்வாறு பேசுவான்? ஸ்திர புத்தி உடையவன் என்ன சொல்வான்? எப்படியிருப்பான்? எதனையடைவான்?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.7

கத²ம் வா பாண்ட³வே யஸ்ய 
ராஜர் ஷேர் முநிநா ஸஹ| 
ஸம்வாத³ ஸம பூ⁴த் தாத 
யத் ரைஷா ஸாத்வதீ ஸ்²ருதி:||

  • தாத - ஓ பெரியோனே! 
  • பாண்ட³வே யஸ்ய - பாண்டு வம்சத்தினனான
  • ராஜர் ஷேர் - ராஜ ரிஷியான பரீக்ஷித்திற்கு 
  • முநிநா ஸஹ - இந்த சுக மஹரிஷியோடு கூட 
  • ரைஷா ஸாத்வதீ - எந்த ஸம்வாதத்தில் பகவத் ஸம்பந்தமான
  • ஸ்²ருதிஹி - ஸம்மிதையானது உண்டாயிற்றோ அந்த
  • ஸம்வாத³ - பரீக்ஷித் கேட்க சுகாச்சாரியார் சொல்லும் ரூபமான சம்பாஷணை
  • கத²ம் வா ஸம பூ⁴த் - எவ்வாறு ஏற்பட்டது

பெரியோர்களே! பாண்டுவின் வம்சத் தோன்றலாகிய பரீக்ஷித்திற்கும், இந்த ஸ்ரீ ஸுக முனிவருக்கும் இடையே வேதங்களின் மகத்தான ஆழ்நிலை உரையாடல் எவ்வாறு நிகழ்ந்தது? அதனாலல்லவா, இந்த ஸ்ரீமத் பாகவத கதை தோன்றியது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.52

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.52

ஜகா³ மஸஹ மாரீசஸ்
தஸ்யாஸ்² ரம பத³ம் ததா³|
தேந மாயா விநா தூ³ரம்
அப வாஹ்ய ந்ருபாத் மஜௌ|| 

  • ஸஹ மாரீசஸ் - மாரிசனோடு கூட 
  • ததா³ - அப்பொழுது
  • தஸ்ய - அவருடைய
  • ஆஸ்²ரம பத³ம் - ஆசிரம ஸ்தானத்தை
  • ஜகா³ ம - வந்தடைந்தான்
  • மாயா விநா - மாயாவியான
  • தேந - அவனைக் கொண்டு
  • ந்ருபாத் மஜௌ - ராஜ குமாரர்கள் இருவரையும்
  • தூ³ரம் - வெகுதூரம் போகச் 
  • அப வாஹ்ய – செய்து

மாரீஸனுடன் சேர்ந்து, ராமன் இருந்த அந்த ஆசிரமத்திற்குச் சென்றான். அந்த மாயாவி மாரீசன், தசரதனின் மகன்களான ராமனையும், லக்ஷ்மணனையும் நெடும் தொலைவுக்கு அழைத்துச் சென்ற பிறகு,

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

திவ்ய ப்ரபந்தம் - 96 - பெரியாழ்வார் திருமொழி - 1.7.11

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 96 - பக்தி மிக்க மக்களைப் பெறுவர்
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - ஏழாம் திருமொழி - பதினொன்றாம் பாசுரம்

ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய* 
அஞ்சன வண்ணன் தன்னைத்* 
தாயர் மகிழ ஒன்னார் தளரத்* 
தளர் நடை நடந்ததனை* 
வேயர் புகழ் விட்டுசித்தன்* 
சீரால் விரித்தன உரைக்க வல்லார்* 
மாயன் மணிவண்ணன் தாள் பணியும்* 
மக்களைப் பெறுவர்களே! (2)

  • ஆயர் குலத்தினில் - இடையர் குலத்தில்
  • வந்து தோன்றிய - வந்து அவதரித்த
  • அஞ்சன வண்ணன் - மை போன்ற கரு நிறம் உடையவனான கண்ணன்
  • தன்னை - தன்னைக் கண்டு
  • தாயர் - தாய்மார்கள்
  • மகிழ - மனம் மகிழவும்
  • ஒன்னார் - விரோதிகள் 
  • தளர - வருத்தமடையவும்
  • தளர்நடை நடந்ததனை - தளர்நடை நடந்ததை
  • வேயர் - வேயர் குடியிலிருப்பவர் எல்லாராலும்
  • புகழ் - புகழப் பெற்ற 
  • விட்டுசித்தன் - பெரியாழ்வார்
  • சீரால் - சிறப்பாக
  • விரித்தன - விவரித்துச் சொன்ன பாசுரங்களை
  • உரைக்க வல்லார் - சொல்ல வல்லவர்கள்
  • மாயன் - ஆச்சர்யமான குணங்கள உடையவனும்
  • மணி - நீல மணி போன்ற
  • வண்ணன் - நிறமுடையனுமான எம்பெருமானுடைய
  • தாள் - திருவடிகளை
  • பணியும் - வணங்க வல்ல
  • மக்களை - பிள்ளைகளைப்
  • பெறுவார்கள் - பெறுவார்கள்

எதிரிகளை ஒடுக்கவும், தாய்மார்களை மகிழ்விக்கவும் இடையர் குலத்தில் உதித்த மை போன்ற திருமேனியை டைய எம்பெருமான் கண்ணன் தளர் நடை நடந்ததை வேயர் குலப் புகழோன் விஷ்ணு சித்தன் (பெரியாழ்வார்) விவரித்து ரைத்த இப்பாசுரங்களை கூற வல்லவர்கள் மாயன்  மணி வண்ணனின் திருவடிகளை வணங்கவல்ல பிள்ளைகளைப் பெற்று இன்புறுவர்கள். 

குறிப்பு: மாயன்: ஆச்சர்யமான செயல்களைப் புரிபவன், திருமால் மணிவண்ணன்: நீல ரத்தினம் போன்ற நிறமுடையவன்.

அடிவரவுதொடர் செக்கர் மின்னு* கன்னல் முன்னல் ஒரு கால்* படர் பக்கம் வெண் திரை* ஆயர் - பொன்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 028 - திருக்காழி சீராம விண்ணகரம் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

028. திருக்காழி சீராம விண்ணகரம் (சீர்காழி)
இருபத்தி எட்டாவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்

1. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள் 
பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 1178 - 1187 - மூன்றாம் பத்து - நான்காம் திருமொழி

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்

மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி

செல்லும் தொறும் உயிர்ப்பின் செல்லும் இரு வினையை*
வெல்லும் உபாயம் விரும்புவீர் தொல் அரங்கர்*
சீராம விண்ணகரம் சேர்மின் பின் மீளாத*
ஊர் ஆம் அவ் விண்ணகரம் உண்டு*

  • செல்லும் தொறும் – உடலை விட்டு உயிர் போகின்ற இடங்களில் எல்லாம்
  • உயிர் பின் செல்லும் – அவ்வுயிரின் பின்னே விடாது தொடர்ந்து செல்லுகின்ற
  • இரு வினையை – நல்வினை தீவினை என்னும் இரண்டு வினைகளையும்
  • வெல்லும் – கடத்தற்குத் தக்க
  • உபாயம் – வழியை
  • விரும்புவீர் – இச்சிக்கின்றவர்களே! நீங்கள்
  • தொல் அரங்கர் சீராமவிண்ணகரம் சேர்மின் – பழைய திருவரங்கநாதனுடைய திருச்சீராம விண்ணகரம் என்னும் ஸ்தலத்தைப் போய்ச் சேருங்கள்
  • பின் – அவ்வாறு சேர்ந்த பிறகு
  • மீளாத ஊர் ஆம் அ விண்நகரம் – தன்னைச் சேர்ந்தவர் திரும்பிச் செல்லுதல் இல்லாத திருநகரமாகிய அந்தப் பரமபதம்
  • உண்டு – உங்களுக்குச் சித்திக்கும்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

லீலை கண்ணன் கதைகள் - 108

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

கிருஷ்ணர் வைகுண்டம் திரும்புகிறார்| 

அச்சமயம் பிரம்மா அங்கு தோன்றி, அவருடன் சிவனும், இந்திரன் முதலான தேவர்களும் தோன்றினார்கள். அவர்கள் பகவானின் பூவுலக அவதார முடிவை காண ஆவலுடன் அங்கு கூடினார்கள். அனைவரும் கிருஷ்ணர் மீது பூமழை தூவி, அவரைப் போற்றி பாடல்கள் பல பாடினர். 


கிருஷ்ணர் கண்களை மூடி, யோகத்தில் அமர்ந்து தம் ஆன்மாவில் ஒன்றினார். உலகையே மயக்கிய தம்முடைய கிருஷ்ண ரூபத்துடன் பகவான் வைகுண்டத்திற்கு திரும்பினார். இன்றும் பக்தர்கள் தியானத்தில் ஆழ்ந்து அவருடைய என்றும் அழியாத ரூபத்தைக் காணும் பேருபெறுகிறார்கள். 

இத்துடன் கிருஷ்ணர் லீலைகளின் கதைகள் முற்றும். இத்தனை பகுதிகளையும் தொடர்ந்து படித்த அனைவருக்கும் கிருஷ்ணர் அருள் கிட்டட்டும் என்று முழு மனதுடன் வேண்டிக் கொள்கிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 61

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 6

ஸ்கந்தம் 03

மைத்ரேயர் தொடர்ந்தார். அந்த ஊழிநீரில் தாமரைத் தண்டு போன்ற வெளுத்த பெருத்த திருமேனியுடைய ஆதிசேஷப் படுக்கையில் தனி ஒருவராகப் படுத்திருக்கும் ஸ்ரீ மன் நாராயணனைக் கண்டார் ப்ரும்மா. ஆதிசேஷனின் பதினாயிரம் முடிகளும் பகவானுக்குக் குடை பிடித்தது போல் இருந்தன. அதன் முடிகளில் ஒளிரும் ரத்தினங்கள் நாற்புறமும் உள்ள இருளை நீக்கி எங்கும் ஒளிமயமாக்கின.


ஸ்ரீ மன் நாராயணனது நீருண்ட மேகம் போன்ற திருமேனி மரகத மலையின் ஒளியை மங்கச் செய்வது. இடுப்பில் விளங்கும் பொன்னாடை மாலை நேர சூரிய கிரணங்களைத் தாங்கும் மேகம்போல் இருந்தது. தலையில் விளங்கும் கிரீடம் மரகத மலைக்குப் பொற்சிகரங்கள் போலிருந்தது. அவரது திருமார்பில் விளங்கும் வனமாலையோ மரகதமலையில் உள்ள செடி, கொடிகள், அருவிகள், ரத்தினங்களின் அழகை விஞ்சுவதாக இருந்தது. மூன்று உலகங்களையும் தன்னுள் கொண்ட ஸ்ரீ மன் நாராயணனின் திருமேனியின் நீள அகலங்களை வர்ணிக்க இயலாது‌. திருமேனியெங்கும் அணிகலன்கள். பீதாம்பரம், ஆடை, அணிகலன்களால் இவருக்கு அழகு சேரவில்லை. இவரது திருமேனியால் தான் அவற்றிற்கு அழகு.

தங்கள் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டி பற்பல வழிகளில் தொழுதேத்தும் தன் பக்தர்கள் காண்பதற்காக திருவடியைச் சற்றே உயர்த்தி வைத்துக் கொண்டிருக்கிறார். தாமரை இதழ் போன்ற மெல்லிய விரல் நகங்களின் அழகு நிலவை வெட்கமுறச் செய்வது. உயர்ந்த அழகிய மூக்கு, வில் போன்ற வளைந்த புருவங்கள், காதுகளில் அழகு மிளிரும் மகர குண்டலங்கள், கொவ்வைப் பழம் போன்ற சிவந்த அதரங்கள், அடியார்களின் துன்பம் துடைக்கும் புன்னகை, இவ்வாறான திருமுக மண்டலத்தால் தன் அடியார்களை மகிழச் செய்கிறார். இடுப்பில் கதம்ப மலரின் கேசரங்கள் போல் மஞ்சள் நிறப்பொன்னாடை, அதன் மேல் அரைஞாண், மார்பில் ஸ்ரீ வத்ஸம் என்ற மரு. கழுத்தில் விலை மதிப்பில்லா முத்துச் சரங்கள், என்னே அழகு!

அடுத்ததாக பகவானை சந்தன மரத்திற்கும் மலைக்கும் ஒப்பிட்டு வர்ணிக்கிறார் ஸ்ரீ சுகர்.

பகவானின் கழுத்தில் வனமாலை. வேதங்கள் பகவானைத் துதிப்பதுபோல் வனமாலையில் மொய்க்கும் வண்டுகள் இனிதே ரீங்காரம் செய்து பாடுகின்றன. ஆகவே வனமாலை அவரது புகழின் இருப்பிடமாகிறது. வனமாலையின் அம்சமாகத் தோன்றிய தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் புஷ்ப கைங்கர்யம் செய்தார். தான் குடியிருக்கும் பகவானின் அதே உருவில் ஈடுபட்டு பூலோக வைகுண்டம் வந்து அரங்கன் சேவையில் ஈடுபடுகிறார். அவர் பாடிய திருமாலையில் ஒரு பாடலான பச்சை மாமலை போல் மேனி, மேற்கண்ட பாகவத ஸ்லோகங்களின் மொழி பெயர்ப்போ எனும் அள்விற்கு, ஒத்துப் போகின்றன. அவர் வனமாலையாய்த் தவழ்ந்த அதே பகவானை பூலோக வைகுண்டத்தில் கண்டு வர்ணித்திருக்கிறார். இறைவனின் காட்சி மறைந்ததும், ப்ரும்மா ரஜோ குணம் நிரம்பியவராகி உலகைப் படைக்க விரும்பினார்.

ப்ரளய ஜலம், ஆகாயம், வாயு, தாமரை மலர், தான் ஆகிய இவை ஐந்தே விஷயங்கள்தான் அவருக்குத் தெரிந்தன. இவற்றை வைத்துக் கொண்டு எப்படி படைப்புத் தொழிலை நிகழ்த்துவது என்று அவருக்குப் புரியவில்லை. அதனால் தன் தோற்றத்திற்குக் காரணமான பகவானை ஒன்றுபட்ட மனத்துடன் மீண்டும் தியானிக்கத் துவங்கினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்