About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 8 February 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 108

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 78

ஏகோ நைகஸ் ஸவ: க: கிம் 
யத்தத் பத³ம நுத்தமம்:|
லோக ப³ந்து⁴ர் லோக நாதோ² 
மாத⁴வோ ப⁴க்த வத்ஸல:||

  • 730. ஏகோ - தனிப்பெருமை உடையவர். எல்லா வகையிலும் தனித்துவமானவர். ஒப்பற்றவர். 
  • 731. நைகஸ் - பலராக இருப்பவர். எல்லை அற்றவர்.
  • 732. - அறிவைப் பரப்புபவர். எல்லா அறிவுக்கும் இறுதி அதிகாரம் படைத்தவர். தன் பக்தர்களுக்குத் தடைகள் அனைத்தையும் அழிப்பவர். எளிதில் அணுகக் கூடியவர். சோம யாகத்தின் வடிவில் இருப்பவர். அவர் இறுதி அறிவு மற்றும் எங்கும் வாழ்பவர். 
  • 733. வஹ் - மனத்தினுள்ளே வசிப்பவர். 
  • 734. கஹ் - ஒளிர்பவர். ஜொலிபவர்.  பிரகாசிப்பவர். பக்தர்களால் வார்த்தைகளால் அழைக்கப்படுபவர். போற்றப்படுபவர். மகிழ்ச்சியின் உருவமாக இருப்பவர். 'அறிவுத்திறன்' மூலம் அணுகும் போது விடை தெரியாத கேள்விக்குறியாக இருப்பவர்.
  • 735. கிம் - எது பரம் பொருள் என்று ஆராயத் தக்கவனாய் இருப்பவர்.
  • 736. யத் - நம்மைக் காப்பதில் முயற்சியை உடையவர்.
  • 737. தத் - தூண்டி விடுபவர். பக்தர்களிடம் அறிவையும் பக்தியையும் அதிகரிப்பவர். பக்தர்களின் கீர்த்தியை (புகழை) அதிகப்படுத்துபவர். பிரபஞ்சத்தை அதன் நுட்பமான வடிவத்திலிருந்து அதன் உடல் வடிவத்திற்கு விரிவுபடுத்துபவர். புலன்களால் அனுபவிக்கப் படாதவர். 
  • 738. பத³ம் அநுத்தமம் - மேலான அடையத் தக்க பொருளாக இருப்பவர். அவர் உயர்ந்த இலக்கு.
  • 739. லோக ப³ந்து⁴ர் - உலகினர் அனைவர்க்கும் உறவினன். அவர் படைப்பாளர் என்பதால், அனைவரும் அவருடன் தொடர்பு உடையவர்கள். வரையறுக்கப்பட்ட வாழ்க்கை போன்றவற்றின் மூலம் அனைத்தையும் கட்டுப் படுத்துபவர். ஒருவருக்கு எல்லாம் கட்டுப்பட்டவர், ஏனெனில் அவர் அவர்களின் ஆதரவாக இருக்கிறார். வேதம்/சாஸ்திரங்கள் மூலம் எது சரி எது தவறு என்று ஒரு உறவினராக அறிவுரைகளை வழங்குபவர். 
  • 740. லோக நாதோ² - உலகத்துக்குத் தலைவர். உலகத்தை ஆளுபவர். உலகத்தின் பாதுகாவலர். தனது மிகுதியின் விளைவாக அனைவருக்கும் செழிப்பை வழங்குகிறார். அனைவராலும் தேடப்படுகிறார். பிரார்த்தனை செய்யப்படுகிறார். உலகில் பிரகாசிக்கிறார். ஆற்றல் மூலம் உலகத்தை ஒழுங்கு படுத்துகிறார். ஒழுக்கமாக இருக்க வேண்டியவர்களுக்குத் தேவையான தொல்லைகளைக் கொடுக்கிறார்.
  • 741. மாத⁴வோ - இலட்சுமிக்கு அன்பன். தன்னைப் பற்றிய அறிவை வழங்குபவர். ஊக்குவிப்பவர். மது வித்யாவின் மூலம் அடையப்பட்டவர். மௌனம், தியானம் மற்றும் யோகம் மூலம் அடையப்பட்டவர். யாதவரான மது இனத்தில் பிறந்தவர். பிரபஞ்சத்தின் மற்ற பகுதிகளுடன் தாய் மற்றும் தந்தையின் நித்ய உறவு.  
  • 742. ப⁴க்த வத்ஸலஹ - அடியார்களிடம் அன்புடையவர். யக்ஞத்தின் மூலம் தனக்கு காணிக்கை செலுத்தும் பக்தர்களிடம் செல்பவர். பசுவுக்குக் கன்றினைப் போல தனக்குப் பிரியமான பக்தர்களை தம்மிடம் அழைத்துச் செல்பவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.45

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.45 

த்ரை கு³ண்ய விஷயா வேதா³: 
நிஸ் த்ரை கு³ண்யோ ப⁴வார் ஜுந|
நிர்த்³வந் த்³வோ நித்ய ஸத்த் வஸ்தோ² 
நிர் யோக³ க்ஷேம ஆத்ம வாந்||

  • த்ரை கு³ண்ய - ஜட இயற்கையின் மூன்று குணங்கள் பற்றிய 
  • விஷயா - விஷயங்கள் 
  • வேதா³ஹ - வேத இலக்கியங்கள் 
  • நிஸ் த்ரை கு³ண்யோ - ஜட இயற்கையின் மூன்று குணங்களுக்கு மேற்பட்ட 
  • ப⁴வ - ஆவாய் 
  • அர்ஜுந - அர்ஜுநனே 
  • நிர்த்³ வந் த்³வோ - இருமைகள் அற்ற 
  • நித்ய ஸத்த் வஸ்தோ² - எப்போதும் உண்மையில், தூய ஆன்மீக நிலையில் நின்று
  • நிர் யோக³ க்ஷேம - அடைதல், காத்தல் எனும் எண்ணங்களிலிருந்து விடுபெற்ற 
  • ஆத்ம வாந் - தன்னில் நிலைபெற்ற 

அர்ஜுநா! வேத இலக்கியங்கள், ஜட இயற்கையின் மூன்று குணங்கள் பற்றிய விஷயங்கள் கொண்டுள்ளது. ஜட இயற்கையின், மூன்று குணங்களுக்கு, அப்பாற்பட்டவனாக ஆவாயாக. இருமைகள் அற்ற, தூய ஆன்மீக நிலையில், அடைதல், காத்தல் எனும் எண்ணங்களிலிருந்து விடுபெற்று, தன்னில் நிலைபெறுவாயாக.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.43

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.43

ப்ராயோ பவிஷ்டம் க³ங்கா³ யாம் 
பரீதம் பரமர் ஷிபி⁴:|
க்ருஷ்ணே ஸ்வதா⁴மோ பக³தே 
த⁴ர்மஜ் ஞாநாதி³ பி⁴: ஸஹ||

  • பரமர் ஷிபி⁴ஹி - மஹரிஷிகளால்
  • பரீதம் -  சூழப்பட்டவராயும்
  • க³ங்கா³ யாம் -  கங்கை கரையில்
  • ப்ராயோ பவிஷ்டம் -  ப்ராயோப  வேச  விருதம் உடையவருமான
  • த⁴ர்மஜ் ஞாநாதி³ பி⁴ஸ் ஸஹ - அறுவகை ஐஸ்வர்யங்களோடு
  • க்ருஷ்ணே -  ஸ்ரீ கிருஷ்ணர்
  • ஸ்வதா⁴மோ பக³தே -  தனது இருப்பிடமான வைகுண்டத்தை அடைந்த அளவில்

இந்த ஸ்ரீமத் பாகவதத்தைக் கங்கைக் கரையில் இறக்கும் வரை உண்ணா விரதம் என்கிற பிராயோபவேச விரதத்தை மேற்கொண்ட பரீக்ஷித் மகாராஜனுக்கு, அநேக மகரிஷிகள் சூழ்ந்திருந்த போது ஸ்ரீசுகர் கூறினார். பகவான் ஸ்ரீகிருஷ்ணன் தர்மம், ஞானம் முதலிய அறுவகைச் செல்வங்களுடன் தனது இருப்பிடமான வைகுண்டத்திற்குச் சென்ற பின், 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.43

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.43

க²ட்³க³ம் ச பரம ப்ரீதஸ்
தூணீ சாக்ஷய ஸாய கௌ|
வஸ தஸ்தஸ்ய ராமஸ்ய 
வநே வநசரை: ஸஹ|| 
ருஷயோ ப்⁴யா க³மந் ஸர்வே 
வதா⁴யா ஸுர ரக்ஷஸாம்|

  • க²ட்³க³ம் ச - கட்கத்தையும் 
  • அக்ஷய ஸாய கௌ - அக்ஷயமான பாணங்களை உடைய
  • தூணீ சா - இரண்டு அம்புறாத் தூணிகளையும்
  • பரம ப்ரீதஸ் - மிகச் ஸந்துஷ்டாராக
  • வநசரைஸ் ஸஹ - வனவாஸிகளோடு கூட
  • ருஷயோ - முனிவர்கள்
  • ஸர்வே - எல்லோரும்
  • அஸுர ரக்ஷஸாம் - அசுரர்கள் இராக்ஷஸர்கள் இவர்களுடைய
  • வதா⁴யா - வதத்தின் பொருட்டு
  • வநே - வனத்தில்
  • வஸதஸ் தஸ்ய - வஸித்துக் கொண்டிருக்கிற அந்த
  • ராமஸ்ய - ஸ்ரீராமருக்கு
  • அப்⁴யா க³மந் -  அருகில் வந்தார்கள்

மற்றும் வாள், எப்போதும் வற்றாத கணைகளைக் கொண்ட இரு தூணிகள் ஆகியவற்றை ராமன் பெரும் மகிழ்ச்சியுடன்  ஸ்வீகரித்தார். இராமர், அந்த தண்டகாரண் வனத்தில் சரபங்க முனிவரின் ஆசிரமத்தில் வசித்த போது, ரிஷிகள் அனைவரும் வனவாசிகளுடன் சேர்ந்து, அசுரர்களையும், இராக்ஷஸர்களையும் கொல்வதற்காக அவரை அணுகினர்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

திவ்ய ப்ரபந்தம் - 87 - பெரியாழ்வார் திருமொழி - 1.7.2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 87 - ஆமைத் தாலி பூண்ட அனந்த சயனன்
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - ஏழாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்

செக்கரிடை நுனிக் கொம்பில் தோன்றும்* 
சிறு பிறை முளைப் போல* 
நக்க செந்துவர் வாய்த் திண்ணை மீதே* 
நளிர் வெண் பல் முளை இலக* 
அக்கு வடமுடுத்து ஆமைத் தாலி பூண்ட* 
அனந்த சயனன்* 
தக்க மா மணிவண்ணன் வாசுதேவன்* 
தளர் நடை நடவானோ! (2)

🎵பெரியாழ்வார் திருமொழி - 1.7.2🙏

  • செக்கரிடை - செவ்வானத்திலே
  • நுனி கொம்பில் - கொம்பின் நுனியிலே
  • தோன்றும் - காணப்படுகிற
  • சிறுபிறை - சிறிய பிறைச் சந்திரனாகிய 
  • முளை போல - முளையைப் போல 
  • நக்க - சிரித்த
  • செந்துவர் வாய்த்  - மிகவும்  சிவந்த வாயாகிய
  • தி்ண்ணை மீதே - உதட்டின் மீது 
  • நளிர் வெண் பல் - குளிர்ந்த வெண்மையாகிய பல்லின் 
  • முளை இலக - முளைகள் தோன்ற
  • அஃகு வடம் - சங்கு மணி வடத்தை
  • உடுத்து - திருவரையில் தரித்த
  • ஆமைத் தாலி - ஆமையின் வடிவமாகச் செய்யப்பட்ட தாலியை
  • பூண்ட - கழுத்திலணி்ந்து கொண்டவனும்
  • அனந்த சயனன் - திருவனந்தாழ்வான் மேலே படுப்பவனும்
  • தக்க மா - தகுதியான அழகிய பெரிய 
  • மணிவண்ணன் - நீல மணி போன்ற நிறத்தை உடையவனும்
  • வாசுதேவன் - வஸுதேவ புத்திரனுமான இவன் 
  • தளர் நடை - அழகிய இளம் நடையை
  • நடவானோ - நடக்க மாட்டானோ? நடக்க வேணும்

கண்ணபிரான் தன்னுடைய பவள நிற வாயால் தூய வெள்ளை நிறமுடைய சிறிதாக முளைத்த பற்கள் தெரியும்படி சிரிக்கும் போது அந்தக் காட்சி எப்படியிருந்ததென்றால் சிவந்த வானில் உதித்த சிறிய பிறைச் சந்திரனை ஒரு மரக் கிளையின் நுனி வழியாக பார்ப்பது போல் இருந்ததாம். சங்கின் வடிவத்தில் அமைத்த மணி வடத்தை இடுப்பில் அணிந்தவாரும், ஆமை வடிவில் அமைத்த கழுத்திலணிந்த காப்புடனும், பாம்பை படுக்கையாகக் கொண்டவனும், உயர்ந்த நீல ரத்தினம் போல் நிறத்தையுடையவனும், வசு தேவரின் புதல்வனுமான கண்ணன் தளர் நடையாக நடந்து வர காத்து நிற்கிறார் ஆழ்வார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 025 - திருத்தலைச்சங்க நாண்மதியம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

025. திருத்தலைச்சங்க நாண்மதியம் 
தலைச்சங்காடு - திருவாரூர் 
இருபத்தி ஐந்தாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ நாண்மதியப் பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ தலைச்சங்க தாயார் ஸமேத ஸ்ரீ நாண்மதிய பெருமாள் 
திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்: நாண்மதியன், வெண்சுடர் பிரான் 
  • பெருமாள் உற்சவர்: சந்திர சாபஹரர், லோகநாதன், வியோம் ஜோதி பிரான்
  • தாயார் மூலவர்: தலைச்சங்க நாச்சியார்
  • தாயார் உற்சவர்: செங்கமலவல்லி, சவுந்தரவல்லி
  • திருமுக மண்டலம் திசை: கிழக்கு
  • திருக்கோலம்: நின்ற
  • புஷ்கரிணி/தீர்த்தம்: சந்திர
  • விமானம்: சந்திர
  • ப்ரத்யக்ஷம்: சந்திரன், தேவர்கள், நித்ய ஸூரிகள்
  • ஆகமம்: பாஞ்சராத்ரம் 
  • ஸம்ப்ரதாயம்: தென் கலை
  • மங்களாஸாஸநம்: 1 ஆழ்வார்
  • பாசுரங்கள்: 2

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

இத்தலத்தின் பெருமாள் சிவனைப் போல் தலையில் சந்திரனை சூடிய நிலையில் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இதனாலேயே இவர் நாண்மதியப் பெருமாள் என்றும், சந்திர சாபஹரர் என்றும் அழைக்கப்படுகிறார். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது அதிலிருந்து மஹாலக்ஷ்மிக்கு முன்னதாக தோன்றியவர் சந்திரன். இவர், லக்ஷ்மியின் அண்ணன் ஆவார். நவகிரகத்தில் சூரியனுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர். அத்திரி முனிவருக்கும், அனுசுயா தேவிக்கும் பிறந்தவர்களில் சோமன் என்பவரே சந்திரன் என்றும் புராணங்கள் கூறுகிறது. 

சந்திரன் மிக அழகானவர். இவர் தேவ குருவிடம் கல்வி கற்று பல கலைகளில் தேர்ச்சி பெற்றவர். இவர் ஒரு முறை மஹா விஷ்ணுவை குறித்து "ராஜ சூய யாகம்' செய்தார். சகல வெற்றிகளையும் தரும் இந்த யாகத்திற்கு ஏராளமான முனிவர்கள் வந்திருந்தனர். இவர்களுடன் தேவ குருவின் மனைவி தாரையும் வந்தாள். சந்திரனும், தாரையும் நேருக்கு நேர் பார்த்ததும் இருவரும் விரும்பத் தொடங்கினர். அதிர்ச்சி அடைந்த குரு, திருமாலிடம் முறையிட்டார். சீடன் செய்த குற்றத்தை மன்னிக்க முடியாதவராக அவனுக்கு குஷ்ட நோய் ஏற்பட சாபமிட்டார். இதற்கிடையில் சந்திரனுக்கும் தாரைக்கும் புதன் என்ற குழந்தை பிறந்தது. பின்னர் திருமால் கூறியபடி குருவிடம் மனைவியை ஒப்படைத்தான் சந்திரன். தந்தை மீது புதனுக்கு வெறுப்பு ஏற்பட்டு இமயமலையில் கடும் தவம் செய்து கிரக பதவி அடைந்தான்.  இதைத் தவிர சந்திரன் இன்னொரு தவறும் செய்து விட்டான். தக்கனுக்கு 27 மகள்கள். இவர்கள் அனைவரும் சந்திரனை திருமணம் செய்து கொண்டார்கள். 27 பெண்களிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதாக தக்கனிடம் சந்திரன் வாக்கு கொடுத்தான். ஆனால் ரோகிணியிடம் மட்டுமே மிகுந்த காதலுடன் இருந்தான். இதனால் மற்ற மனைவிகள் தங்களது தந்தையிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட தக்கன், "உன் அழகும், ஒளியும் தினம் தினம் குறையட்டும்," என சாபமிட்டான். சாபம் பலித்ததால், முழு சந்திரன் தேய தொடங்கினான். இரண்டு சாபங்களும் சந்திரனை வாட்டி வதைத்தது. வருத்தம் அடைந்த அவன் திருமாலிடம் சென்று தன் குறையை கூறினான். அதற்கு பெருமாள், "சந்திரனே! நீ உடனே ஸ்ரீரங்கம், திரு இந்தளூர், தலைச்சங்க நாண்மதியம் ஆகிய மூன்று தலங்களுக்கு சென்று குளத்தில் நீராடி என்னை வழிபட்டால் உன் சாபம் நீங்கும்,'' என்றார். அவர் கூறியபடி ஸ்ரீரங்கம், திரு இந்தளூர் சென்று வழிபட்ட சந்திரன் கடைசியாக தலைச்சங்காடு வந்து குளத்தில் நீராடி பெருமாளை வழிபட்டான். உடனே அவனுக்கு ஏற்பட்ட தோஷமும், நோயும் விலகியது. பெருமாள் அவனுக்கு காட்சி கொடுத்து அவனை அப்படியே தலையில் சூடிக் கொண்டார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

லீலை கண்ணன் கதைகள் - 99

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

அர்ஜுனனும் ஓர் அந்தணரும்|

துவாரகையில் ஓர் அந்தணர் இருந்தார். அவருடைய மனைவி ஒரு குழந்தையை ஈன்றாள். அது பூமியைத் தொட்டது தான் தாமதம், இறந்து போயிற்று. உடனே அந்த அந்தணர் குழந்தையை எடுத்துக் கொண்டு போய் அரண்மனை வாயிலில் வைத்துப் பின்வருமாறு புலம்பினார்.


"பிராம்மணர்களைப் பகைப்பவனும், வஞ்சகனும், லோபியும், சிற்றின்பத்தில் வாழ்பவனும் பெயருக்கு மாத்திரம் அரசனாக இருப்பவனுமான இவனுடைய கர்மதோஷத்தினால் என் குழந்தை இறந்து போயிற்று". 

இப்படி வெகு நேரம் புலம்பிவிட்டு அவர் வீடு திரும்பினார். அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. அதுவும் பூமியைத் தொட்டதும் இறந்தது. திரும்பவும் அந்தணர் அரசனைப் பழி சொன்னார். இப்படியாக அவருக்கு ஒன்பது குழந்தைகள் பிறக்க, ஒன்பதும் பிறந்தவுடன் இறந்து விட்டன. 

ஒன்பதாவது குழந்தையை வைத்துக் கொண்டு, அவர் அரசனை நிந்தித்துக் கொண்டிருந்தபோது, கிருஷ்ணனைப் பார்ப்பதற்காக வந்திருந்த அர்ஜுனன், அந்தணரின் குரல் கேட்டு அங்கே வந்தான். என்ன விஷயம் என்று விசாரித்தான். அவர் சொன்ன கதையைக் கேட்டு வருத்தப்பட்டான்.

அவன் அந்தனைப் பார்த்து, "அந்தணரே! நீர் சொல்லுவது போல, பிரஜைகள் படும் கஷ்டங்களுக்கு அரசன் தான் காரணம். தன் குடிமக்களைக் காப்பாற்றுவது அரசனின் கடமை. இல்லாவிட்டால் அவன் க்ஷத்திரியனாக இருக்க முடியாது. இப்பொழுது உள்ள க்ஷத்திரியர்கள் எல்லாம் யாகம் செய்யக் கூடியுள்ள அந்தணர்களைப் போலாகி விட்டார்கள். உமது அடுத்த குழந்தையின் உயிரை நான் காப்பாற்றுவேன். இல்லாவிட்டால் நெருப்பில் விழுந்து என் பாவத்தைக் கழுவுவேன்" என்று உறுதி அளித்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 52

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

கேள்விக் கணைகள்

ஸ்கந்தம் 03

உத்தவரும் விதுரரும் யமுனைக் கரையில் சந்தித்தனர்.

ஆனந்தத்தில் தம்மையே மறந்து தழுவிக் கொண்டு வெகு நேரம் நின்றனர். பின்னர், விதுரர் உத்தவனைப் பார்த்து மிகவும் பரபரப்புடன் வரிசையாக கேள்விக் கணைகளைத் தொடுத்தார். கண்ணனைப் பற்றி ஏதேனும் செய்தி கிடைத்தால் போதும் என்ற தவிப்பு மிகுந்திருந்தது அவர் குரலில்.


தன் தொப்புள் குழியிலிருந்து தோன்றிய ப்ரும்மாவின் வேண்டுகோளுக் கு இணங்கி பூபாரம் தீர்க்க வந்த கண்ணனும் பலராமனும் நலமா? குரு வம்சத்தின் நெருங்கிய நண்பரான வசுதேவர் நலமா? குந்தி முதலிய தன் சகோதரிகளுக்கு தந்தையைப் போல் மனம் மகிழ்ந்து திளைக்கும் படி வேண்டியதை எல்லாம் கொடுத்து சீர் செய்வாரே! அவர் எப்படி இருக்கிறார்? ருக்மிணியின் மகனும், சிறந்த சேனாதிபதியுமான ப்ரத்யும்னன் நலமா? அரசனாகும் ஆசையை அறவே விட்டொழித்தவரும், கண்ணனின் வேண்டுகோளுக்காக அரசாட்சி செய்பவருமான உக்ரசேனர் நலமா? ஸ்ரீ க்ருஷ்ணனின் மனைவியான ஜாம்பவதி முருகனைப் பலவாறு விரதங்களால் பூஜித்து சாம்பன் என்ற பெயரில் தன் மகனாகவே அடைந்தாளே. சாம்பனும் ஜாம்பவதியும் எப்படி இருக்கிறார்கள்? அர்ஜுனனிடம் இ ருந்து தனுர் வேதத்தின் ரகசியங்களைக் கற்ற ஸாத்யகி நலமா? 

ஷ்வபல்கரின் மகனான அக்ரூரர் கிருஷ்ண பக்தியில் தலை சிறந்தவர் ஆயிற்றே. மஹா அறிவாளி. க்ருஷ்ணனின் காலடிச் சுவடுகளைக் கண்டு பரமானந்தம் அடைந்து ப்ருந்தாவனத்து வீதிகளில் விழுந்து புரண்டவர். அவர் நலமோடு இருக்கிறாரா? போஜ மன்னனின் பெண்ணான தேவகி தேவமாதா அதிதிக்கு ஒப்பானவள். வேதமாதா வேள்விகளின் நெறிகளையும், அவற்றின் பொருளையும் மந்திர உருவில் தாங்குவது போல் ஸ்ரீ க்ருஷ்ணனை உதரத்தில் தாங்கினாளே. அவள் நலமா? 

சாஸ்திரங்களுக்கும் வேதங்களுக்கும் ஆதிகாரணன் எனவும், அந்தக் கரணங்களில் ஒன்றான மனத்தின் தேவதையென்றும் புகழப்படும் அநிருத்தன் நலமா?

அந்தக்கரணங்கள் நான்கு - சித்தம், அஹங்காரம், புத்தி, மனம் ஆகியவை. அவற்றின் தேவதைகள் முறையே வாசுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன் ஆகியோர். 

உத்தவரே! க்ருஷ்ணனை ஹ்ருதய கமலத்தில் தாங்கி உடலைத் துரும்பென மதிப்பவர்களான ஹ்ருதீகன், சத்யபாமாவின் மகனான சாருதோஷ்ணன், கதன் ஆகியோர் நலமா? தர்ம புத்ரன் பற்றி ஏதாவது தெரியுமா? க்ருஷ்ணனும் அர்ஜுனனும் அவரது இரு கரங்கள் போல் இருப்பார்களே. அவர் நல்லாட்சி புரிகிறாரா? பீமன் போர்க் களத்திற்குத் தேரிலேறித் தான் வருவான். யுத்தம் சற்று உக்ரமடைந்ததும் சினத்தினால் கீழே குதித்து கதையைச் சுழற்ற ஆரம்பிப்பானே. அவனது சினம் குறைந்திருக்கிறதா? காண்டீபத்தை ஏந்திய அர்ஜுனன், தன்னைச் சார்ந்தவர் அனைவர்க்கும் நற்பெயர் வாங்கித் தருபவன். வேடனாக வந்த பரமேஸ்வரனையே பாணங்களால் மூடி மறைத்தவனாயிற்றே. அதனால் மகிழ்ந்து அவர் பாசுபதாஸ்திரம் கொடுத்தாரே. இப்போது தான் பகைவர்கள் அழிந்து விட்டார்களே. அவன் சந்தோஷமாக இருக்கிறானா? நகுல சகாதேவர்கள் மாத்ரிக்குப் பிறந்தார்கள். ஆனால், அவர்களைத் தன் பிள்ளைகள் போலவே வளர்த்தாளே குந்தி. மற்ற மூன்று பாண்டவர்களும் மிகுந்த அன்புடன் அவர்களைக் காத்தார்கள். அவர்கள் இருவரும் நலமா? குந்தியின் நிலை மிகவும் பரிதாபகரமானது. அளவுக்கதிகமான கஷ்டங்களை அனுபவித்த அவள் இப்போதாவது மகிழ்ச்சியாய் இருக்கிறாளா? 

கீழ் நிலைக்குப் போய்க் கொண்டிருக்கும் என் அண்ணன் த்ருதராஷ்ட்ரனைப் பற்றித் தான் மிகுந்த கவலையாய் இருக்கிறது. பாண்டுவிற்கு அவர் செய்யும் துரோகங்கள் இன்னும் முடியவில்லை. ஆனால் பகவான் தானே அத்தனை பேரையும் ஆட்டிப் படைக்கிறான். எனவே, வருந்துவதில் அர்த்தமில்லை.  கௌரவர்கள் பகவானையே அவமதித்தனரே. க்ருஷ்ணனைப் பற்றிய ஏதாவதொரு செய்தியையாவது கூறுங்கள் உத்தவரே. க்ருஷ்ணனின் புகழைக் கேட்டாலே போதும். ஒருவர் அத்தனை சங்கடங்களிலிருந்தும் விடுபடுவார். இறைவனான அவர், மானுட வேடம் தரித்து யதுகுலத்தில் திருத்தோற்றம் கொண்டார்.” விதுரர் மிகுந்த படபடப்புடன் பேசிக்கொண்டே போனார்.

உத்தவரோ தனக்கும் க்ருஷ்ணனுக்கும் இடையே இருந்த நட்பையும், இப்போது பிரிவாற்றாமையையும் நினைத்து தன்வசமிழந்து பதில் கூறவும் சக்தியின்றி, கண்ணீர் உகுத்தபடி ஒரு முஹூர்த்த காலம் பேசாமல் இருந்தார். அவர் ஐந்து வயதுக் குழந்தையாக இருந்த போது குழந்தை விளையாட்டில் ஸ்ரீ க்ருஷ்ணனின் உருவத்தை பொம்மையாகச் செய்து அதைப் பூஜிப்பதும், பேசுவதுமாக விளையாடுவார். உணவு உண்ண அன்னை அழைக்கும் குரல் கூட காதில் விழாது. இப்போது வயதாகி விட்டது. கண்ணனுடனேயே பல காலம் இருந்தவருக்கு பேச்சு எப்படி எழும்? அவரது கண்கள் மூடியிருந்தன. மெய் சிலிர்த்தது. ஆறாகக் கண்ணீர் பெருகிய வண்ணம் இருந்தது. அவரது நிலைமையைக் கண்ட விதுரர், இவரை தரிசித்ததே பெரும் பாக்யம் என்று எண்ணிக் கொண்டார். அவராக அந்நிலையிலிருந்து விடுபடும் வரை நிலவைக் காண ஏங்கும் சகோரபக்ஷி போல் பொறுமையாகக் காத்திருந்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 107

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 77

விஸ்²வ மூர்த்திர் மஹா மூர்த்திர் 
தீ³ப்த மூர்த்தி ரமூர்த்தி மாந்:|
அநேக மூர்த்தி ரவ்யக்தஸ்² 
ஸ²த மூர்த்திஸ்² ஸ²தா நந:||

  • 722. விஸ்²வ மூர்த்திர் - உலகத்தைச் சரீரமாக உடையவர். தனது பக்தர்களின் மனதை உள்வாங்கும், கண்களைக் கவரும் அழகிய வடிவம் கொண்டவர். பிரபஞ்சத்தின் வடிவில் மாயா சக்தியைக் கொண்டிருக்கிறார். எல்லாவற்றிலும் மாயாவைத் தூண்டக்கூடிய ஒரு வடிவம் கொண்டவர். 
  • 723. மஹா மூர்த்திர் - பெரிய உருவம் படைத்தவர். மகத்தான வடிவம் கொண்டவர்.
  • 724. தீ³ப்த மூர்த்திர் - ஒளி மயமான உருவம் படைத்தவர். பிரகாச வடிவம் கொண்டவர்.
  • 725. அமூர்த்தி மாந்நு - நுட்பமான உருவம் உடையவர். நெகிழ்வானவர். நிலையான வடிவம் இல்லாததால், விவரிக்க முடியாதவர். விரும்பும் வடிவங்களை தனது அவதாரங்களாக எடுத்துக் கொள்கிறார். உருவமற்றவர். வடிவங்கள் கர்மாவின் விளைவல்ல.
  • 726. அநேக மூர்த்திர் - பல உருவங்களை உடையவர்.
  • 727. அவ்யக்தஸ்²  - காண முடியாதவர். எளிதில் உணர முடியாதவர்.
  • 728. ஸ²த மூர்த்திஸ்² - நூற்றுக் கணக்கான உருவத்தை உடையவர்.
  • 729. ஸ²தா நநஹ - அநேக முகங்களை உடையவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.44

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.44 

போ⁴கை³ ஸ்²வர்ய ப்ர ஸக்தா நாம் 
தயா பஹ்ருத சேத ஸாம்|
வ்யவஸா யாத்மிகா பு³த்³தி⁴: 
ஸமாதௌ⁴ ந விதீ⁴ யதே||

  • போ⁴க³ - பௌதிக இன்பத்தில் 
  • ஐஸ்²வர்ய - செல்வம் 
  • ப்ரஸக்தா நாம் - பற்றுதல் உடையவர்களுக்கு 
  • தயா - இது போன்றவற்றால் 
  • அபஹ் ருத சேத ஸாம் - மனம் மயங்கியவர் 
  • வ்யவஸா யாத்மிகா - திடமான உறுதி 
  • பு³த்³தி⁴ஹி - கடவுளின் பக்தித் தொண்டு 
  • ஸமாதௌ⁴ - கட்டுப்பட்ட மனதில் 
  • ந - என்றுமில்லை 
  • விதீ⁴ யதே - உண்டாவது

செல்வம், பௌதீக இன்பத்தில் பற்றுதல் கொண்டு, இது போன்றவற்றால் மனம் மயங்கியவர்களின், கட்டுப்பட்ட மனதில், கடவுளின் பக்தித் தொண்டிற்கான, திடமான உறுதி என்றும் உண்டாவதில்லை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.42

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.42

ஸர்வ வேதே³தி ஹாஸா நாம் 
ஸாரம் ஸாரம் ஸமுத்³ த்⁴ரு தம்|
ஸ து: ஸம்ஸ்²ரா வயாம் ஆஸ 
மஹாராஜம் பரீக்ஷிதம்||

  • ஸர்வ வேதே³தி ஹாஸா நாம் - எல்லா வேதங்கள் இதிஹாஸங்கள் இவைகளின்
  • ஸமுத்³ த்⁴ரு தம் - கடைந்தெடுக்கப்பட்ட
  • ஸாரம் ஸாரம் - மிகவும் ஸாரமாய் உள்ள
  • ஸ துஸ் - அந்த ஸுகரோ
  • பரீக்ஷிதம் மஹாராஜம் - பரீக்ஷித் என்ற அரசனை
  • ஸம்ஸ்²ரா வயாம் ஆஸ - கேட்கும் படி செய்தார்

வேதங்கள், இதிகாசங்கள் ஆகிய அனைத்து சாஸ்திரங்களில் இருந்தும் கடைந்து எடுக்கப்பட்ட வெண்ணெய் போன்ற இந்த ஸ்ரீமத் பாகவதத்தை ஸ்ரீசுகர், பரீக்ஷித் என்ற அரசனை கேட்கும் படி செய்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.42

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.42

ஸுதீக்ஷ்ணம் சாப் யக³ஸ்த்யம் ச 
அக³ஸ் த்ய ப்⁴ராதரம் ததா²|
அக³ஸ்த்ய வசநாச் சைவ 
ஜக்³ரா ஹைந் த்³ரம் ஸ²ரா ஸநம்|| 

  • ஸுதீக்ஷ்ணம் ச - ஸுதீக்ஷ்ணரையும்
  • அக³ஸ்த்யம் ச - அகஸ்தியரையும்
  • ததா² - அப்படியே
  • அக³ஸ்த்ய ப்⁴ராதரம் அபி - அகஸ்தியரின் தம்பி  ஸுதர்சனரையும்
  • அக³ஸ்த்ய வசநாச் சைவ - அகஸ்தியருடைய சொற்படியே
  • ஐந்த்³ரம் - இந்திர சம்மந்தமான
  • ஸ²ரா ஸநம் ச - தநுஸையும்
  • ஜக்³ரா -   ஸ்வீகரித்தார் 

சுதீக்ஷ்ணர், அகஸ்தியர், அகஸ்தியரின் தம்பி  சுதர்சனர் ஆகியோரைக் கண்டார். அகஸ்தியர் சொன்னதைக் கேட்டு, இந்திரன் கொடுத்த வில்லை பெற்றுக் கொண்டார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்  

திவ்ய ப்ரபந்தம் - 86 - பெரியாழ்வார் திருமொழி - 1.7.1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 86 - வாரணம் கண்ணன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஏழாம் திருமொழி - முதலாம் பாசுரம்

தொடர் சங்கிலிகை சலார் பிலார் என்னத்* 
தூங்கு பொன்மணி ஒலிப்பப்*
படு மும்மதப் புனல் சோர* 
வாரணம் பைய நின்று ஊர்வது போல்* 
உடன் கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப* 
உடை மணி பறை கறங்க* 
தடந் தாளிணை கொண்டு சார்ங்கபாணி* 
தளர்நடை நடவானோ! (2)

  • தொடர் சங்கிலிகை - இரும்புச் சங்கிலியின் வளையங்களின் உரசலால்
  • சலார் பிலார் என்ன - சலார் பிலார் என சப்தத்துடனும்
  • தூங்கு - தொங்கும் கயிற்றில் கட்டப்பட்டிருக்கும்
  • பொன் மணி ஒலிப்ப - பொன் மணிகள் அசைவதினால் ஏற்படும் ஓலியுடனும்
  • படு மும்மத - கசியும்
  • புனல் - மூன்று விதமான மத நீர்
  • சோர - பெருகிட
  • வாரணம் - யானையானது
  • பைய நின்று - மெள்ள நின்று நிதானமாக
  • ஊர்வது போல் - நடந்து போவது போலே
  • கிண்கிணி - கால் சதங்கைகள்
  • உடன் கூடி - ஒன்றோடொன்று சேர்ந்து
  • ஆரவாரிப்ப - சப்திக்கவும்
  • உடைமணி - அரை நாணில் கட்டிய சிறு மணிகள்
  • பறை கறங்க - பறை போல் ஒலிக்கவும்
  • சார்ங்கம் - சார்ங்கமென்னும் வில்லை
  • பாணி - கையிலேந்திய பிள்ளையாகிய இவன்
  • தடந் தாளிணை - தன் இரு பாதங்களாலும்
  • கொண்டு - ஒன்றுகொன்று ஒத்திருக்க கூடிய
  • தளர் நடை - அழகிய இளம் நடையை
  • நடவானோ - நடக்க மாட்டானோ? நடக்க வேணும்

மதநீர் பெருக, இரும்புச் சங்கிலிகளின் உரசலால் உண்டாகும் சப்தத்துடனும், தொங்கும் கயிற்றில் கட்டப்பட்டிருக்கும் பொன் மணிகள் அசைவதினால் ஏற்படும் ஓலியுடனும், யானை எப்படி மெல்ல நடந்து செல்லுமோ, அது போல் திருக்கால்களில் அணிந்திருக்கும் சதங்கைகளின் நாதத்துடனும், இடுப்பில் கட்டியிருக்கும் மணிகள் எழுப்பும் சப்தத்துடனும் சார்ங்கம் என்னும் வில்லேந்தியவனான எம்பெருமான், தன்னுடைய மிக உயர்ந்த பாதக் கமலங்களைக்கொண்டு, தளர் நடையாக நடந்து வர காத்திருக்கிறார் ஆழ்வார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 024 - திருசிறுப்புலியூர் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

024. திருசிறுப்புலியூர் (திருவாரூர்)
இருபத்தி நான்காவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10

திருமங்கையாழ்வார்

001. திவ்ய ப்ரபந்தம் - 1628 - யாவரும் அருள்மா கடல் நாயகனைத் தொழுமின்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - முதலாம் பாசுரம்
கள்ளம் மனம் விள்ளும் வகை* கருதிக் கழல் தொழுவீர்*
வெள்ளம் முது பரவைத்* திரை விரிய* 
கரை எங்கும் தெள்ளும் மணி திகழும்* 
சிறுபுலியூர்ச் சலசயனத்து உள்ளும்* 
எனது உள்ளத்துள்ளும்* உறைவாரை உள்ளீரே|

002. திவ்ய ப்ரபந்தம் - 1629 - யார் சொல்லையும் கேளாமல் சிறுபுலியூர் சேர்க
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
தெருவில் திரி சிறு நோன்பியர்* செஞ் சோற்றொடு கஞ்சி மருவி* 
பிரிந்தவர் வாய்மொழி* மதியாது வந்து அடைவீர்*
திருவில் பொலி மறையோர்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
உருவக் குறள் அடிகள் அடி* உணர்மின் உணர்வீரே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1630 - அருள்மா கடலின் அடிகளையே நான் அறிவேன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
பறையும் வினை தொழுது உய்ம்மின் நீர்* பணியும் சிறு தொண்டீர்*
அறையும் புனல் ஒருபால் வயல்* ஒரு பால் பொழில் ஒரு பால்*
சிறை வண்டு இனம் அறையும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து உறையும்* 
இறை அடி அல்லது* ஒன்று இறையும் அறியேனே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1631 - வேறு யாருக்கும் நான் அடிமையாக மாட்டேன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - நான்காம் பாசுரம் 
வான் ஆர் மதி பொதியும் சடை* மழுவாளியொடு ஒருபால்*
தான் ஆகிய தலைவன் அவன்* அமரர்க்கு அதிபதி ஆம்*
தேன் ஆர் பொழில் தழுவும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து ஆன் ஆயனது* 
அடி அல்லது* ஒன்று அறியேன் அடியேனே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1632 - அருள்மா கடலே! அருள் செய்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
நந்தா நெடு நரகத்திடை* நணுகா வகை* 
நாளும் எந்தாய் என* இமையோர் தொழுது ஏத்தும் இடம்* 
எறி நீர்ச் செந்தாமரை மலரும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
அம் தாமரை அடியாய்* உனது அடியேற்கு அருள் புரியே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1633 - இப்பரமனைத் தொழுவார்க்குத் துயரமே வராது
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
முழு நீலமும் மலர் ஆம்பலும்* அரவிந்தமும் விரவி*
கழுநீரொடு மடவார் அவர்* கண் வாய் முகம் மலரும்*
செழு நீர் வயல் தழுவும்* சிறுபுலியூர்ச் சலசயனம்*
தொழு நீர்மை அது உடையார்* அடி தொழுவார் துயர் இலரே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1634 - மாயனே! நீ எங்கிருக்கிறாய்?
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
சேய் ஓங்கு* தண் திருமாலிருஞ்சோலை மலை உறையும் மாயா* 
எனக்கு உரையாய் இது* மறை நான்கின் உளாயோ?*
தீ ஓம்புகை மறையோர்* சிறுபுலியூர்ச் சலசயனத் தாயோ?* 
உனது அடியார் மனத்தாயோ?* அறியேனே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1635 - புலியூர்ச் சல சயனத்தானே! அருள் செய்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
மை ஆர் வரி நீலம்* மலர்க் கண்ணார் மனம் விட்டிட்டு*
உய்வான் உன கழலே* தொழுது எழுவேன்* 
கிளி மடவார் செவ்வாய் மொழி பயிலும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
ஐ வாய் அரவு அணை மேல்* உறை அமலா அருளாயே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1636 - பரமனே! உன் திருவடிகளே எங்கள் கதி
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
கரு மா முகில் உருவா* கனல் உருவா புனல் உருவா*
பெரு மால் வரை உருவா* பிற உருவா நினது உருவா*
திரு மா மகள் மருவும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
அரு மா கடல் அமுதே* உனது அடியே சரண் ஆமே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1637 - பாவம் பறந்து விடும்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
சீர் ஆர் நெடு மறுகில்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
ஏர் ஆர் முகில் வண்ணன் தனை* இமையோர் பெருமானை*
கார் ஆர் வயல் மங்கைக்கு இறை* கலியன் ஒலி மாலை*
பாரார் இவை பரவித் தொழப்* பாவம் பயிலாவே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

லீலை கண்ணன் கதைகள் - 98

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

சுருத தேவர் பகுலாச்வனின் வேண்டுகோள்|

சுருததேவரும் பகுலாச்வனும் அவரைப் பூஜிக்க அங்கே வந்தார்கள். கிருஷ்ணரின் அழகிய உருவத்தைப் பார்த்ததும் இருவர் கண்களிலிருந்தும் கண்ணீர் பொல பொலவென வழிந்தது. வெகு நேரத்திற்கு அவர்களுடைய வாய்களிலிருந்து ஒரு வார்த்தையும் வெளிவரவில்லை. இருவரும் அவர் காலில் விழுந்து அவரை அழைத்தனர். தன் விருந்தினராய் இருக்க வேண்டுமென்று அரசன் அவரை அழைத்தான். அந்தணரும் கிருஷ்ணர் தம் எளிய குடிசைக்கு எழுந்தருளித் தம்மை ஆசிர்வதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


இருவரையும் திருப்தி செய்யக் கிருஷ்ணர் விரும்பினார், இருவர் அழைப்பையும் அவர் ஏற்றுக் கொண்டார், உடனே அவர் இரண்டு கிருஷ்ணராக மாறினார். ஒரு கிருஷ்ணர் அந்தணர் வீட்டிற்கும், இன்னொரு கிருஷ்ணர் அரசன் வீட்டிற்கும் சென்றனர். ஆனால் இருவரும் தங்கள் வீட்டுக்கு மட்டுமே கிருஷ்ணர் வந்திருப்பதாக நினைத்தார்கள்.

அரசனின் அரண்மனையைக் கிருஷ்ணர் அடைந்ததும், அரசன் அவரை உயர்ந்த ஆசனத்தில் அமரச் செய்து அவர் கால்களை அலம்பினான். பிறகு தூபம், சந்தனம் முதலியவற்றைக் கொண்டு அவரைப் பூஜித்தாள். கிருஷ்ணரின் கால்களைத் தன் மடியில் வைத்துக் கொண்டு, அவற்றை மெதுவாக பிடித்து விட்டான். பிறகு, அவன் கிருஷ்ணரைப் பார்த்து, "பிரபு, என் வீட்டிற்கு வந்து என்னை எவ்வளவோ மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்கள். தாங்கள் ஒரு தடவை 'என் சகோதரன் ஆனந்தசேஷன், என் மனைவி லக்ஷ்மி, என் மகன் பிரம்மா இவர்களை விட என்னையே நினைத்துக் கொண்டிருக்கும் என் பக்தன் தான் எனக்குப் பிரியமானவன்' என்று சொன்னீர்கள். அதை நிரூபிக்க, என் நாட்டையும் என்னையும் வாழ்த்தத் தாங்கள் சில நாட்கள் எங்களுடன் தங்கியிருந்து எங்கள் இல்லத்தைப் பூலோக வைகுண்டமாக்க வேண்டும்" என்றான்.

அரசனின் பக்தியைக் கண்டு மகிழ்ந்து, கிருஷ்ணர் அங்கே சில நாட்கள் தங்கினார்.

இதே சமயம், கிருஷ்ணர் அந்த ஏழை அந்தணர் வீட்டிலும் வசித்து வந்தார். கிருஷ்ணர் தம் அதிதியாக இருப்பது குறித்து அவரும் சந்தோஷப்பட்டார். அவர் ஏழையாக இருந்தததனால் அவரால் கிருஷ்ணருக்கு தர்ப்பாசனம் தான் கொடுக்க முடிந்தது. துளசி இதழ்களைக் கொண்டு அவர் கிருஷ்ணரைப் பூஜித்தார். கிருஷ்ணரின் பாத கமலங்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு தம் இதயத்தோடு அணைத்துக் கொண்டார்.

கிருஷ்ணருக்கு, அரசன் வீட்டுக்கும் சரி, அந்தணர் வீட்டுக்கும் சரி, ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. இரண்டு இடங்களிலும் ஒரே சமயம் இருந்து, தாம் தம் அடியார்களுக்கு அடியார் என்பதை அவர் காட்டியதோடு தமக்கு ஏழை, பணக்காரன் என்கிற வித்தியாசமும் இல்லை என்று நிரூபித்தார்.

கிருஷ்ணர் கேட்டதெல்லாம் இதயத் தூய்மையும் பக்தியும் தான். இரண்டு இடங்களிலும் சில நாட்கள் இன்பமாக கழித்து விட்டு, அவர் துவரகைக்குத் திரும்பினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்