About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 24 October 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 65

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 35

அச்யுத: ப்ரதி²த: ப்ராண: 
ப்ராணதோ³ வாஸவாநுஜ:|
அபாம் நிதி⁴ர் அதி⁴ஷ்டாநம் 
அப்ரமத்த: ப்ரதிஷ்டி²த:||

  • 319. அச்யுதஃ - நழுவாதவன்.
  • 320. ப்ரதிதஃ - புகழ்பெற்றவன்.
  • 321. ப்ராணஃ - உயிரானவன்.
  • 322.  ப்ராணதோ³ - 
  • 323. வாஸவாநுஜஹ - இந்திரனுக்குப் பின் பிறந்தவன்.
  • 324. அபாம் நிதி⁴ர் - கடல்களுக்கு ஆதாரமானவன்.
  • 325. அதி⁴ஷ்டாநம் - ஆசனமாக இருந்தவன்.
  • 326. அப்ரமத்தஃ - ஊக்கம் உடையவன், விழிப்புடையவன்.
  • 327. ப்ரதிஷ்டி²தஹ - நிலை பெற்றவன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.2 

ஸ்ரீ ப⁴க³வாநுவாச।
குதஸ் த்வா கஸ்²மலமித³ம் 
விஷமே ஸமு பஸ்தி²தம்| 
அநார் யஜுஷ்டமஸ் வர்க்³யம்
அகீர்தி கரமர்ஜுந||

  • ஸ்ரீ ப⁴க³வான் உவாச - புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்
  • குதஸ் - எங்கிருந்து 
  • த்வா - உன்னிடம் 
  • கஸ்²மலம் - அழுக்கு 
  • இத³ம் - இந்தக் கவலை 
  • விஷமே - இந்த நெருக்கடி நேரத்தில் 
  • ஸமுபஸ்தி²தம் - வந்தது 
  • அநார்ய - வாழ்வின் நோக்கமறியாதோர் 
  • ஜுஷ்டம் - பயிற்சி செய்யப்படும் 
  • அஸ்வர்க்³யம் - மேலுலகங்களுக்கு கொண்டு செல்லாதது 
  • அகீர்த்தி - அவமானம் 
  • கரம் - காரணம் 
  • அர்ஜுந! - அர்ஜுநா

ஸ்ரீ பகவான் கூறுகிறார்: அர்ஜுநா! உன்னிடம் இதுபோன்ற களங்கங்கள் எங்கிருந்து வந்தன? வாழ்வின் மதிப்பை அறிந்த மனிதனுக்கு இவை தகுதியற்றவை. இவை மேலுலகங்களுக்குக் கொண்டு செல்வதில்லை, அவமானத்தையே கொடுக்கின்றன. 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.2.34

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா: 
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம் 
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்|| 
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||

ஸ்லோகம் - 1.2.34

பா⁴வயத் யேஷ ஸத்த் வேந 
லோகாந் வை லோக பா⁴வந:|
லீலா வதாரா நுரதோ 
தே³வ திர்யங் நரா தி³ஷு||

  • ஏஷ லோக பா⁴வநஹ - இந்த உலக ரட்சகனான வாஸுதேவன்
  • ஸத்த் வேந - தனது சக்தியால்
  • தே³வ திர்யங் நரா தி³ஷு - தேவன் நரன் மிருகம் முதலியனவாகக் கொண்ட
  • லீலா அவதார அநுரதோ - லீலா அவதாரங்களில் பற்று உடையவராய்
  • லோகாந் வை - உலகம் அனைத்தையும்
  • பாவயதி – ரக்ஷிக்கின்றார்

ஒரே ஒரு பரம்பொருளான பகவான், தனது சத்துவ குணமாகிய சக்தியால் உலக ரட்சகராக விளங்குகிறார். அமரர், மனிதர், விலங்கு முதலிய பற்பல பிறவிகளில் லீலையாக அவதாரம் செய்ய விருப்பம் கொண்டு, உலகமனைத்தையும் காத்து வருகிறார்.

ஸ்ரீமத் பாகவத மகாபுராணம், முதலாவது ஸ்கந்தத்தில் 
இரண்டாவது அத்யாயம் முற்றிற்று.

||இதி ஶ்ரீமத்³ பா⁴க³வதே மஹாபுராணே பாரம ஹம்ஸ்யாம் ஸம்ஹிதாயாம்||
||ப்ரத²ம ஸ்கந்தே⁴ நைமிஷீயோ பாக்²யாநே த்³விதீயோ அத்⁴யாய:||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - பால காண்டம் அறிமுகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

பால காண்டம் - இளமை மாட்சிமை

பால காண்டம் - 77 - ஸர்க்கங்கள் - 2266 ஸ்லோகங்கள்

தெய்வீக முனிவர் நாரதர், வால்மீகி முனிவருக்கு ஞானம் அளிப்பதற்காகவும், இராமாயணக் காவியத்தை எழுதும் கடமையைப் பற்றி அவருக்குத் தெரியப்படுத்துவதற்காகவும் அவரது ஆசிரமத்திற்கு வருகிறார். இந்த இரு முனிவர்களுக்கிடையிலான உரையாடலில், வால்மீகி பூமியில் உள்ள மிகவும் நல்லொழுக்கமுள்ள மனிதரைப் பற்றி நாரதரிடம் இருந்து வெளிப் படுத்துகிறார், அதாவது ராமர். இந்த தொடக்க அத்யாயத்தில், ராம நாரதரை புகழ்ந்து பேசும் போது, ராமாயணத்தின் ஒரு அவுட்லைன் கொடுக்கிறது, இந்த காவியத்தின் முக்கிய அம்சங்களான, நல்லொழுக்கம், தாராள மனப்பான்மை, ஒழுக்கம், கற்பு போன்றவற்றை உண்மையாகவே எடுத்துக்காட்டுகிறது.

வால்மீகி ராமாயணம் காயத்ரி கீதத்தின் இருபத்தி நான்கு எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது, மேலும் ஒவ்வொரு எழுத்தின் தலைப்பின் கீழ் ஆயிரம் வசனங்கள் ஒரு புத்தகமாக அமைக்கப்பட்டன. அந்த வகைப்பாடு அல்லது வசனங்களை ஆயிரம் அத்யாயங்களாகப் பிரிப்பது இப்போது இல்லை என்றாலும், காயத்ரி ராமாயணம் எனப்படும் காயத்ரி கீர்த்தனையின் 24 எழுத்துக்களுடன் அடையாளம் காணப்பட்ட இருபத்தி நான்கு பாடல்கள் கிடைக்கின்றன, அது இந்தப் பக்கத்தின் இறுதிக் குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. காயத்ரியின் திட்டத்திற்கு இணங்க, ராமாயணம் முதல் வசனத்தை டா என்ற எழுத்தில் ஒரு நல்ல எழுத்துடன் தொடங்குகிறது.

  • ஸர்க்கம் 1 - நாரத வாக்யம் - 100 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 2 - ப்ரும்மா வருதல் - 43 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 3 - இராம காவியம் பற்றிய கதை சுருக்கம் - 39 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 4 - இராமாயணம் தோன்றியது - 36 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 5 - அயோத்யா வர்ணனை - 23 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 6 - ராஜ வர்ணனை - 28 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 7 - மந்திரிகள் பற்றிய வர்ணனை - 24 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 8 - சுமந்திரன் சொல்லியது - 24 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 9 - ரிஷ்ய ஸ்ருங்க முனிவரின் கதை - 20 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 10 - ரிஷ்ய ஸ்ருங்க முனிவரை வர வழைத்தல் - 33 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 11 - ரிஷ்ய ஸ்ருங்க முனிவர் அயோத்யா வருதல் - 31 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 12 - அஷ்வ மேத ஏற்பாடுகள் - 22 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 13 - யக்ஞ சாலா பிரவேசம் - 41 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 14 - அஷ்வ மேதம் - 60 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 15 - ராவணனை வதம் செய்ய உபாயம் தேடுதல் - 34 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 16 - பாயஸ உத்பத்தி - 32 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 17 - கரடி, வானரங்களின் பிறப்பு - 37 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 18 - ராமன் முதலானோர் பிறப்பு - 59 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 19 - விஸ்வாமித்திர வாக்யம் - 22 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 20 - தசரதரின் பதில் - 28 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 21 - வசிஷ்டரின் உபதேசம் - 22 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 22 - வித்யா புதிய வித்தையை உபதேசித்தல் - 23 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 23 - காமா ஸ்ரமம் என்ற இடத்தில் வசித்தல் - 22 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 24 - தாடகா வனத்தில் நுழைதல் - 32 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 25 - தாடகையின் கதை - 22 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 26 - தாடகையின் வதம் - 36 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 27 - அஸ்திரங்களை பெறுதல் - 28 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 28 - அஸ்திர ஸம்ஹார க்ரஹணம் - 22 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 29 - ஸித்த ஆஸ்ரமம் - 32 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 30 - யாகத்தைக் காத்தல் - 26 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 31 - மிதிலைக்கு புறப்படுதல் - 24 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 32 - குச நாபர் மகளின் கதை - 26 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 33 - விஸ்வாமித்திர வம்ச வர்ணனை 1 - 26 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 34 - விஸ்வாமித்திர வம்ச வர்ணனை 2 - 23 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 35 - உமா, கங்கையின் கதைகளின் சுருக்கம் - 24 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 36 - உமா மாகாத்ம்யம் - 27 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 37 - குமரன் என்ற முருகன் பிறப்பு - 32 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 38 - ஸகர புத்திரன் பிறப்பு - 24 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 39 - பூமியைத் தோண்டுதல் - 26 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 40 - கபிலரைக் காணுதல் - 30 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 41 - ஸகர யக்ஞ சமாப்தி - 26 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 42 - பகீரதனுக்கு வரம் அளித்தல் - 25 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 43 - கங்கை இறங்கி வருதல் - 41 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 44 - ஸகர புத்திரர்களை கரையேற்றுதல் - 23 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 45 - அம்ருதம் தோன்றுதல் - 45 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 46 - திதியின் கர்ப்பத்தை அழித்தல் - 23 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 47 - விசாலா கமனம் - 22 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 48 - இந்திரன் அகல்யை, இவர்களை சபித்தல் - 33 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 49 - அகல்யை சாபத்திலிருந்து விடுபடுதல் - 22 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 50 - ஜனகரை சந்தித்தல் - 25 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 51 - விஸ்வாமித்திரரின் கதை - 28 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 52 - வசிஷ்டர் செய்த விருந்து உபசாரம் - 23 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 53 - சபலாவை தான் விலை கொடுத்து வாங்கிக் கொள்வதாக சொல்லுதல் - 25 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 54 - பப்லவர்களை உற்பத்தி செய்தல் - 23 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 55 - விஸ்வாமித்திரரின் வில் வித்தை முதலியன - 28 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 56 - ப்ரும்ம தேஜஸின் பலம் - 24 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 57 - திரிசங்குவின் வேண்டுகோள் - 22 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 58 - திரிசங்கு பெற்ற சாபம் - 24 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 59 - வசிஷ்டரின் பிள்ளைகளை சபித்தல் - 22 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 60 - திரிசங்கு சுவர்கம் - 34 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 61 - சுனசேபன் என்பவனை விற்றல் - 24 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 62 - அம்பரீஷனின் யாகம் - 28 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 63 - மேனகையை வெளியேற்றுதல் - 26 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 64 - ரம்பையின் சாபம் - 20 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 65 - ப்ரும்ம ரிஷி பதவி பெறுதல் - 40 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 66 - வில்லைப் பற்றிய விவரம் - 26 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 67 - வில்லை உடைத்தல் - 27 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 68 - தசரதரை அழைத்தல் - 19 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 69 - தசரதரும், ஜனகரும் சந்தித்தல் - 19 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 70 - பெண் கேட்டல் - 45 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 71 - கன்யாவை தர சம்மதித்தல் - 24 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 72 - கோதான மங்களம் காப்பு கட்டுதல் - 25 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 73 - தசரதரின் புத்திரர்களின் விவாகம் - 40 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 74 - ஜமதக்னி மகன் வந்து எதிர்த்தல் - 24 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 75 - வைஷ்ணவ வில்லின் பெருமை - 28 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 76 - ஜமதக்னி புத்திரரை அடக்குதல் - 24 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 77 - அயோத்தியில் பிரவேசித்தல் - 29 ஸ்லோகங்கள் 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 48 - பெரியாழ்வார் திருமொழி - 1.3.5

ஸ்ரீ:
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் – 48 - குபேரன் தந்த முத்து வடம்
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்

எழிலார் திருமார்வுக்கு* 
ஏற்கும் இவையென்று*
அழகிய ஐம்படையும்* 
ஆரமும் கொண்டு*
வழுவில் கொடையான்* 
வயிச் சிரவணன்* 
தொழுதுவனாய் நின்றான் தாலேலோ* 
தூமணி வண்ணனே! தாலேலோ|

  • எழில் ஆர் - அழகு மிக்க
  • திருமார்பிற்கு - வக்ஷஸ்ஸ் தலத்துக்கு (திருமார்புக்கு)
  • ஏற்கும் இவையென்று - இவை பொருந்தும் என்று
  • அழகிய - அழகியவையான
  • ஐம்படையும் - பஞ்சாயுதங்களையும்
  • ஆரமும் - முத்து வடத்தியும் (சங்கிலி)
  • கொண்டு - எடுத்துக் கொண்டு
  • வழுவில் - குற்றமற்ற
  • கொடை யான் - கொடையாளனான, ஔதார்யத்தை டைய
  • வயிச்சிரவணன் - குபேரானானவன் 
  • தொழுது - இவற்றை நீ ஏற்க வேண்டுமென்று கை கூப்பிக் கொண்டு
  • உவனாய் நின்றான் - பணிவன்புடன் நின்றான் 
  •  தாலேலோ! - கண்ணுறங்கு! 
  • தூ மணி - தூய நீலமணி போன்ற 
  • வண்ணனே - வடிவை டைய கண்ணனே! 
  •  தாலேலோ! - கண்ணுறங்கு! 

பெருமாளின் அடையாளங்களான பஞ்சாயுதங்களின் சின்னங்கள் பொருந்திய முத்து மாலை ஒன்றை கண்ணனின் அழகான திரு மார்பிற்கு உகந்தவை என்றெண்ணி அப்பழுக்கு இல்லாத குபேரன் உனக்கு சமர்ப்பித்து விட்டு கை கூப்பி நிற்கின்றான், கண்ணுறங்கு, தூய நீல மணி போன்றவனே கண்ணுறங்கு. 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 014 - திருநறையூர் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

014. திருநறையூர்
நாச்சியார் கோயில் - கும்பகோணம்
பதிநான்காவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 110 பாசுரங்கள்

1. திருமங்கையாழ்வார் - 110 பாசுரங்கள் 
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) - 106 பாசுரங்கள்

  • திவ்ய ப்ரபந்தம் - 1078 - இரண்டாம் பத்து - நான்காம் திருமொழி - முதலாம் பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 1329 - நான்காம் பத்து - ஒண்பதாம் திருமொழி -  இரண்டாம் பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 1470 - ஆறாம் பத்து - மூன்றாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 1478 - 1487 - ஆறாம் பத்து - நான்காம் திருமொழி - 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 1488 - 1497 - ஆறாம் பத்து - ஐந்தாம் திருமொழி - 10 பாசுரங்கள்  
  • திவ்ய ப்ரபந்தம் - 1498 - 1507 - ஆறாம் பத்து - ஆறாம் திருமொழி - 10 பாசுரங்கள் 
  • திவ்ய ப்ரபந்தம் - 1508 - 1517 - ஆறாம் பத்து - ஏழாம் திருமொழி - 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 1518 - 1527 - ஆறாம் பத்து - எட்டாம் திருமொழி - 10 பாசுரங்கள் 
  • திவ்ய ப்ரபந்தம் - 1528 - 1537 - ஆறாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 1538 - 1547 - ஆறாம் பத்து - பத்தாம் திருமொழி - 10 பாசுரங்கள் 
  • திவ்ய ப்ரபந்தம் - 1548 - 1557 - ஏழாம் பத்து - முதலாம் திருமொழி - 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 1558 - 1567 - ஏழாம் பத்து - இரண்டாம் திருமொழி - 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 1568 - 1577 - ஏழாம் பத்து - மூன்றாம் திருமொழி - 10 பாசுரங்கள் 
  • திவ்ய ப்ரபந்தம் - 1611 - ஏழாம் பத்து - ஏழாம் திருமொழி - நான்காம் பாசுரம் 
  • திவ்ய ப்ரபந்தம் - 1659 - எட்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 1852 - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
2. திருநெடுந்தாண்டகம் (இரண்டாம் ஆயிரம்) - 2 பாசுரங்கள்

  • திவ்ய ப்ரபந்தம் - 2067, 2068 - இரண்டாம் திருமொழி - 6 & 7 பாசுரங்கள் (16, 17)
3. சிறிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம் 

  • திவ்ய ப்ரபந்தம் - 2706 - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம் (34)
4. பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 2 பாசுரங்கள்

  • திவ்ய ப்ரபந்தம் - 2753 - ஐந்தாம் திருமொழி - முதலாம் பாசுரம் (41) 
  • திவ்ய ப்ரபந்தம் - 2782 - ஏழாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (70)
---------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி
செய்ய சடையோன் திசை முகத்தோன் வானவர் கோன்*
ஐயம் அறுத்து இன்னம் அறியாரே துய்ய*
மரு நறை ஊர் வண் துழாய் மாயோன் செவ் வாயான்*
திரு நறையூர் நின்றான் செயல்*

  • துய்ய - பரிசுத்தமாகிய
  • மரு நறை ஊர் வள் துழாய் - நறுமணமும் தேனும் பொருந்திய செழிப்பான திருத்துழாயை அணிந்த
  • மாயோன் - ஆச்சரியமான குண சேஷ்டிதங்களை உடையவனும்
  • செவ் வாயோன் - செந் தாமரை மலர் போலச் சிவந்த திருவதரத்தை உடையவனும்
  • திருநறையூர் நின்றான் - திருநறையூர் என்னும் ஸ்தலத்தில் நின்ற திருக்கோலமாக எழுந்தருளி இருப்பவனுமான எம்பெருமானது
  • செயல் - செய்கையைப் பற்றி
  • செய்ய சடையோன் - செந்நிறமான கபர்த்தம் என்னும் சடையை உடைய சிவபிரானும்
  • திசை முகத்தோன் - நான்கு திக்கையும் நோக்கிய நான்கு முகங்களை உடைய பிரமனும்
  • வானவர் கோன் - தேவர்கட்கெல்லாம் தலைவனான இந்திரனும்
  • ஐயம் அறுத்து - சந்தேகத்தை ஓழித்து நிஸ்ஸந் தேஹமாய்
  • இன்னம் அறியார் - இன்னமும் அறிய மாட்டார்கள்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

லீலை கண்ணன் கதைகள் - 56

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

அக்ரூரர் அஸ்தினாபுரம் செல்லுகிறார்|

வசுதேவரும் தேவகியும் தங்கள் உறவினர்களைப் பற்றியெல்லாம் கிருஷ்ணருக்கும் பலராமனுக்கும் சொன்னார்கள். அவர்கள் யார், பெயர்கள் என்னென்ன, எங்கு இருக்கிறார்கள், எப்படிப்பட்டவர்கள் என்றெல்லாம் அறிய இருவரும் மிகவும் ஆவலாக இருந்தார்கள். உறவினர்களைப் பற்றிப் பேசும் போது குந்தி என்னும் தன் சகோதரிகளில் ஒருத்தியைச் சந்திர வம்சத்தைச் சேர்ந்த பாண்டு மன்னனுக்குத் திருமணம் செய்து கொடுக்கப்பட்டது என்று வசுதேவர் சொன்னார். பாண்டு இளம்வயதிலேயே மரணமடைந்துவிட்டதால், குந்தியின் ஐந்து மக்களாகிய பாண்டவர்களை அவர்களுடைய பெரியப்பா திருதராஷ்டிரனும், அவர்களுடைய பிள்ளைகளையும் சரியாக நடத்தவில்லை என்று சொன்னார். இது குறித்து கிருஷ்ணன் தலையிட்டு அவர்களுக்கு நீதி கிடைக்கும்படி செய்தால் நல்லது என்றும் சொன்னார்.


சந்திர வம்ச அரசர்களின் தலைநகரம் அஸ்தினாபுரமாகும். நிலைமை அங்கே எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள நினைத்து அங்கு யாரையாவது அனுப்ப வேண்டும் என்று கிருஷ்ணன் தீர்மானித்தான். கம்சனின் தூதராக பிருந்தாவனத்திற்கு வந்த அக்ருரரின் ஞாபகம் அவனுக்கு வந்தது. உடனே அவன் பலராமனையும், தம் நண்பரும் பக்தருமான உத்தவரையும் அழைத்துக் கொண்டு அக்ருரர் வீட்டிற்குச் சென்றான்.

இவர்களைக் கண்டதும் அக்ருரர் மகிழ்ச்சியுடன் வாசலுக்கு ஓடிவந்து அவர்களை வரவேற்றார், அவர்களை அவர் திரும்பத் திரும்ப நமஸ்காரம் செய்தார். அவர்களை வசதியான ஆசானங்களில் அமரவைத்து, சந்தானம், மலர்கள், இன்னும் மற்ற பூஜைப் பொருட்கள் இவற்றை கொண்டு பூஜித்தார். தாம் கீழே உட்கார்ந்து, கிருஷ்ணனின் பாதங்களை தம் மடியில் வைத்துக் கொண்டு அவற்றை வருடினார்.

பிறகு அக்ருரர் மிகவும் அடக்கத்துடன் கிருஷ்ணனைப் பார்த்து, “ஏன் அன்புக்குகந்த கிருஷ்ணரே! கம்சனையும் அவனுடைய ஆட்களையும் கொன்று பெருத்த உதவி செய்தீர்கள், யாதவ குலத்தையே அவனிடமிருந்து காப்பாற்றினீர்கள். இன்று தங்கள் வரவால் ஏன் வீடு புனிதமடைந்தது. 

உலகிலேயே நான் மிகவும் பெரிய பாக்கியசாலி ஆகிவிட்டேன்” என்று சொன்னார். அக்ருரரின் வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த கிருஷ்ணன், “தங்கள் ஒரு காரியமாக அஸ்தினாபுரம் செல்ல வேண்டும். பாண்டு அரசனின் மறைவுக்கு பிறகு, அவருடைய பிள்ளைகளான பாண்டவர்களையும், அவர்களுடைய விதைவை தாயார் குந்தியும், திருதராஷ்டிரரின் ஆக்கத்தில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். திருதராஷ்டிரர் தாம் அவர்களுக்கு இரட்சகர். என்றாலும், கண்பார்வை இல்லாத அவர் தம் பொறுப்பிலும் குருடராகவே இருக்கிறார் என்று கேள்விபட்டேன். தம் துஷ்ட மகன் துரியோதனன் மீது உள்ள பாசத்தினால் அவர் பாண்டவர்களைச் சரியானபடி நடத்தவில்லை என்று தெரிகிறது.

“ஆகவே தயவுசெய்து தாங்கள் அஸ்தினாபுரம் சென்று திருதராஷ்டிரர் பாண்டவர்களை சரியாக நடத்துகிறாரா இல்லையா என்று தெரிந்து கொண்டு வாருங்கள். அதற்குப் பின் பாண்டவர்களுக்கு எப்படி உதவ வேண்டும் என்று நான் தீர்மானிக்கிறேன்” என்று சொன்னான். இப்படிச் சொல்லி விட்டுக் கிருஷ்ணன் பலராமனுடனும் உத்தவருடனும் தன் வீடு திரும்பினான். அடுத்த நாள், அக்ருரர் அஸ்தினாபுரம் புறப்பட்டார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - அறுபத்தி இரண்டாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

062 அத்வைதம் வென்றேனோ எம்பெருமானாரைப் போலே|

இந்து தத்துவத்தில் இறைவனின் தன்மை பற்றிக் கூறும் கொள்கைகள் மூன்று: அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம்.


அத்வைதம் (அ + துவைதம்) என்பது இரண்டற்ற நிலை. ஜீவனும், இறைவனும் (ஜீவாத்மா, பரமாத்மா) ஒன்று தான். வேறு வேறு அல்ல. சகல உயிர்களுக்கும் பொதுவாக ஆத்மா விளங்குகிறது என்று இத்தத்துவம் விளக்குகிறது. ஆதிசங்கரர் தான் முதன்முதலில் அத்வைத தத்துவத்தை தொகுத்து எழுதி வைத்தார். இவர் யாருக்கும் உபதேசிக்கவோ பிரசாரம் செய்யவோ இல்லை.


த்வைதம் என்றால் இரண்டாக விளங்குவது என்று பொருள். பரமாத்மா என்பது இறைவன். ஜீவாத்மா என்பது கடவுளால் (பரமாத்மா) படைக்கப்பட்ட உயிர். எப்பொழுதுமே, இந்த வேறுபாடு இருந்து கொண்டே தான் இருக்கும் என்பதே த்வைதம் சொல்லும் உண்மை. இந்தக் கோட்பாட்டை உபதேசித்தவர் மத்வாச்சாரியார்.

விசிஷ்டாத்வைதம் - அத்வைதம் என்னும் கொள்கையோடு ஒரு விஷேஷத் தன்மை கொண்டது. அதாவது, பரமாத்மா வேறு, ஜீவாத்மா வேறு. ஆனால், ஜீவாத்மா முயன்றால், பரமாத்மாவை தன்னுள் ஏற்றுக் கொள்ளலாம். அதுவே முக்திக்கான வழி.

நான் தான் பிரம்மம் என்ற அத்வைத தத்துவம் ராமானுஜருக்கு திகைப்பூட்டியது.

நானே பிரம்மம் என்று இருந்து விட்டால் கடவுள் வணக்கத்திற்கு வகை ஏது. பக்திக்கு இடம் ஏது. தன்னைவிட மேலான பரம்பொருள் என ஜீவன் உணர்ந்தால் தான் அந்த பரம் பொருளை வணங்க வேண்டும், முக்தியடைய வேண்டும் என்ற எண்ணம் ஜீவனுக்கு ஏற்படும்.

பிரம்மம் தான் எல்லாம். ராமானுஜர் விசிஷ்டாத்வைதம் கொள்கையை பரப்பி வந்தார். 

அப்போது வடநாட்டில் யக்ஞமூர்த்தி என்ற பெரும்புலவர் இருந்தார். அவர் அத்வைத நெறியை வலியுறுத்தி வந்தார். ராமானுஜருடன் வாதாட யக்ஞமூர்த்தி திருவரங்கத்திற்கு வந்தார். யக்ஞமூர்த்தி நிரம்பக் கற்ற துறவி. வாதத்திறமை மிக்கவர்.

வாதப்போரின் நிபந்தனைப்படி, யக்ஞமூர்த்தி, தான் தோல்வி அடைந்தால் தன் பெயரை மாற்றி, ராமானுஜரின் பெயரை வைத்துக் கொள்வதாகக் கூறினார். அத்துடன், ‘‘நான் ராமானுஜரின் பாதுகைகளைச் சுமப்பேன்’’ என்றும் கூறினார். ராமானுஜர், ‘‘நான் தோற்றால் எனது நூல்களைக் கையால் தொடமாட்டேன்’’ என்றார். வாதம் பதினெட்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. பதினேழாம் நாள் நிலவரப்படி யக்ஞமூர்த்தியின் பக்கம் ஓங்கி நின்றது.

 அன்றிரவு ராமானுஜர் திருவமுது செய்யாமல் இருந்தார். ஆழ்வார்கள் வளர்த்த திருமால் நெறி தன்னால் தோல்வி அடையாமல் காத்திடப் பெருமாளிடம் வேண்டினார். பெருமாளும் ராமானுஜரின் கனவில் தோன்றினார். உமக்கு, ‘‘இன்னுமொரு சீடனைத் தந்தருள்வோம்!’’ என்று குறிப்பாகக் கூறியருளினார். பதினேழாம் நாளிலேயே யக்ஞமூர்த்தி தன்னுடைய வாதத்தை நிறைவு செய்து விட்டார். பதினெட்டாம் நாள், ராமானுஜர் பல்வேறு சான்றுகளுடன் வாதாடினார். இறுதியில் வெற்றி வாகையும் சூடினார்.

யக்ஞமூர்த்தியும் ராமானுஜரின் சீடரானார். அத்வைத கொள்கை பின்பற்றிய யாதவ பிரகாசரிடம் கல்வி கற்ற போதே, சிறு வயது ராமானுஜர், தனது குருவிடம் துணிவுடன், ஆழ்வார்கள் கூறிய விசிஷ்டாத்வைத முறையைப் பற்றிக் கூறி விளக்கினார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "அந்த எம்பெருமானைப் போல வாதாடி அத்வைதம் வென்றவளா நான்? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவத புராணம் - 9

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஆத்ம தேவன் - 1

ஸ்கந்தம் 01

ஸனத் குமாரர் செய்த பாகவத ஸப்தாஹத்தில் ஸ்ரீமத் பாகவத மஹிமையை விளக்கும் ஆத்ம தேவன் என்பவரது சரித்ரத்தை சொல்கிறார்.

ஆத்ம தேவன் என்ற ஒரு அந்தணர் பூரண வேத அத்யயனம் செய்து ஸதா சாரத்தோடு வாழ்ந்து வந்தார். பெரிய செல்வந்தராக இருந்த அவர், நிறைய தான தர்மங்களும் செய்து வந்தார்.


அத்தனை விஷயங்களும் கை கூடியிருந்த போதிலும் அவருக்கு ஒரு பெரிய மனக்குறை. அவருக்கு குழந்தைகள் இல்லை. அத்தனை சாஸ்திரங்களையும் கற்று உணர்ந்திருந்தபடியால், புத்ரன் இல்லாவிட்டால் புத்து என்னும் நரகம் சம்பவிக்கும் என்று அஞ்சினார். எனவே குழந்தைப் பேறு வேண்டி ஏராளமான வைத்யங்கள், பரிகாரங்கள், யாத்திரைகள் என்று செய்து கொண்டேயிருந்தார். ஆனால், ஒரு பலனும் இல்லை. 

அவரது மனைவி துந்துலி என்பவள். அவளுக்கோ குழந்தை ஆசை அறவே இல்லை. குழந்தை பிறந்தால், நிறைய பொறுப்புகள் வரும், அழகு கெட்டு விடும் என்று அஞ்சினாள். குணத்தில் ஆத்ம தேவனுக்கு எதிர்மறையாய் இருந்தாள். எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டே இருப்பாள்.

எத்தனையோ கோவில்களுக்குச் சென்று வேண்டிக் கொண்ட போதிலும் குழந்தை பிறக்கவில்லை என்று மனம் வாடினார் ஆத்ம தேவன்.

ஒரு சமயம் வருத்தத்தோடு காட்டு வழி நடந்தார். ஒரு மரத்தடியில் அமர்ந்தார். துக்கம் தாளாமல் கண்ணீர் வந்தது. அந்த வழியாகச் சென்ற ஒரு ஸாது அவரைப் பார்த்தார்.

ஸாதுக்கள் இளகிய மனமும் கரு‌ணையும் கொண்டவர்கள். பார்த்தால் தேஜஸ்வியாய், வேதம் படித்தவர் மாதிரி இருக்கிறார். அழுகிறாரே என்று மனமிரங்கி ஆத்ம தேவனை உற்று நோக்கினார். நிமிர்ந்து பார்த்த ஆத்ம தேவன், ஒரு ஸாதுவைப் பார்த்ததும் ஓடிச் சென்று வீழ்ந்து வணங்கினார்.

"ஏம்பா அழற?" கேட்டதும் இன்னும் அழுகை பெரிதாக வெடித்தது. அவரை ஆசுவாசப்படுத்தி மீண்டும் கேட்டார்.

"ஏன் அழற?"

"ஸ்வாமி! சாஸ்திரங்கள் எல்லாம் புத்திரன் இல்லாதவனுக்கு கதியில்லை, நரகம் தான்னு சொல்றது. எனக்கு புத்திரனும் இல்லை. கதியுமில்லை ஸ்வாமி."

"இதுக்கா இப்படி அழற? புத்திரன் இருந்து அவன் சரியா ஸம்ஸ்காரம் செய்தால் தானப்பா நரகம் வராது. ஆனா, சந்ததி இல்லாம எவ்வளவோ பேர் இருக்காங்க. புத்ரனே இருந்தாலும் அவன் நமக்கு ஸம்ஸ்காரம் செய்ய அந்திம நேரத்தில் பக்கத்தில் இருப்பான்னு என்ன நிச்சயம்? சாஸ்திரம் சொல்றது என்னவோ உண்மை தான். நீ ஏதாவது பரிகாரம் செய்தியா?"

"எல்லா விதமான பரிகாரங்களும் செய்துட்டேன். ஏராளமான வழிபாடுகள், ஹோமங்கள் எல்லாம் பண்ணியாச்சு."

ஸாதுவுக்கு அவரைப் பார்த்தால் பாவமாய் இருந்தது. அந்த ஸாதுவுக்கு ஒருவரது தலையெழுத்தைப் படிக்கும் சக்தி இருந்தது.

"சரி, உட்கார்" என்று சொல்லி அவரது தலையெழுத்தைப் பார்த்தார்.

"ஆத்ம தேவா, இதற்கு முன்னால் ஏழு பிறவிகளுக்கும் உனக்கு குழந்தை இல்லை. இனி வரப் போகும் ஏழு பிறவிகளுக்கும் குழந்தை பிறக்கப் போவதில்லை. அதனால, நீ குழந்தை ஆசையை விட்டு விட்டு ஸந்நியாசம் வாங்கிக்கோ. நானே கொடுக்கறே‌ன். அது அடுத்த ஜென்மாவுக்கு சமானம் ஆயிடும். பிறவி இல்லாம முக்தியும் கிடைக்கும். நரகத்துக்காக பயம் வேண்டாம்."

ஆத்ம தேவன் கேட்டு விட்டு முன்னிலும் பெரிதாய் அழுதான். ஸாதுவோ திகைத்தார்.

"என்னப்பா சொல்லிட்டேன். இப்படி அழற?"

"எனக்கு குழந்தை பிறந்துடும் என்கிற நம்பிக்கைலயாவது காலத்தை ஓட்டியிருப்பேன். நீங்க மஹாத்மாவா இருக்கீங்கன்னு பார்த்தா ஏழு ஜென்மத்துக்கு குழந்தை இல்லங்கறீங்க. இது தெரியாம இருந்திருந்தா நிம்மதியாவாது இருந்திருப்பேன். குழந்தை வரம் கேட்கறவன் கிட்ட போய் ஸந்நியாசம் வாங்கச் சொல்றீங்க."

ஸாது பார்த்தார், இவரைப் பேசி சமாதானப் படுத்த முடியாது என்று உணர்ந்து கொண்டார். அருகில் ஒரு மாமரத்தில் ஒரு மாங்கனி தொங்கிக் கொண்டு இருந்தது. அதைப் பறித்து ஏதோ ஜபம் செய்து,

"இதை உன் பத்நியிடம் கொடுத்து சாப்பிடச் சொல் நல்ல குழந்தையாகப் பிறக்கும்" என்றார்.

ஆத்ம தேவர் மிகவும் மகிழ்ந்து அவரை நமஸ்கரித்து விட்டு பழத்தோடு வீட்டுக்கு ஓடினார். 

ஏழு ஜென்மத்துக்கு குழந்தை கிடையாது என்றார். இப்போது பழம் கொடுத்து பிறக்கும் என்கிறாரே என்றால், முன்னது விதி. பின்னது அனுக்ரஹம். 

ஒரு கஷ்டத்திற்கு காரணம் நாம் செய்யும் முன்வினை. அனுக்ரஹம் செய்யும் போது ஸாதுக்கள் தங்கள் தவத்தின் ஒரு பகுதியை பழம், விபூதி, குங்குமம் அல்லது ஏதோ ஒரு பொருளில் ஏற்றிக் கொடுக்கிறார்கள். அந்த வினையின் வீரியத்தை விட அனுக்ரஹ பலம் அதிகமாக இருந்தால் கஷ்டம் விலகும். மாறாய் இருந்தால், தவத்தின் அளவுக்கேற்ற அளவு வினைப் பயன் விலகும். முற்றிலும் விலக்க மறுபடி ப்ரார்த்தனையும் அனுக்ரஹமும் தேவை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்