ஸ்ரீ:
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் – 48 - குபேரன் தந்த முத்து வடம்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
எழிலார் திருமார்வுக்கு*
ஏற்கும் இவையென்று*
அழகிய ஐம்படையும்*
ஆரமும் கொண்டு*
வழுவில் கொடையான்*
வயிச் சிரவணன்*
தொழுதுவனாய் நின்றான் தாலேலோ*
தூமணி வண்ணனே! தாலேலோ|
- எழில் ஆர் - அழகு மிக்க
- திருமார்பிற்கு - வக்ஷஸ்ஸ் தலத்துக்கு (திருமார்புக்கு)
- ஏற்கும் இவையென்று - இவை பொருந்தும் என்று
- அழகிய - அழகியவையான
- ஐம்படையும் - பஞ்சாயுதங்களையும்
- ஆரமும் - முத்து வடத்தியும் (சங்கிலி)
- கொண்டு - எடுத்துக் கொண்டு
- வழுவில் - குற்றமற்ற
- கொடை யான் - கொடையாளனான, ஔதார்யத்தை உடைய
- வயிச்சிரவணன் - குபேரானானவன்
- தொழுது - இவற்றை நீ ஏற்க வேண்டுமென்று கை கூப்பிக் கொண்டு
- உவனாய் நின்றான் - பணிவன்புடன் நின்றான்
- தாலேலோ! - கண்ணுறங்கு!
- தூ மணி - தூய நீலமணி போன்ற
- வண்ணனே - வடிவை உடைய கண்ணனே!
- தாலேலோ! - கண்ணுறங்கு!
பெருமாளின் அடையாளங்களான பஞ்சாயுதங்களின் சின்னங்கள் பொருந்திய முத்து மாலை ஒன்றை கண்ணனின் அழகான திரு மார்பிற்கு உகந்தவை என்றெண்ணி அப்பழுக்கு இல்லாத குபேரன் உனக்கு சமர்ப்பித்து விட்டு கை கூப்பி நிற்கின்றான், கண்ணுறங்கு, தூய நீல மணி போன்றவனே கண்ணுறங்கு.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment