About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 24 October 2023

திவ்ய ப்ரபந்தம் - 48 - பெரியாழ்வார் திருமொழி - 1.3.5

ஸ்ரீ:
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் – 48 - குபேரன் தந்த முத்து வடம்
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்

எழிலார் திருமார்வுக்கு* 
ஏற்கும் இவையென்று*
அழகிய ஐம்படையும்* 
ஆரமும் கொண்டு*
வழுவில் கொடையான்* 
வயிச் சிரவணன்* 
தொழுதுவனாய் நின்றான் தாலேலோ* 
தூமணி வண்ணனே! தாலேலோ|

  • எழில் ஆர் - அழகு மிக்க
  • திருமார்பிற்கு - வக்ஷஸ்ஸ் தலத்துக்கு (திருமார்புக்கு)
  • ஏற்கும் இவையென்று - இவை பொருந்தும் என்று
  • அழகிய - அழகியவையான
  • ஐம்படையும் - பஞ்சாயுதங்களையும்
  • ஆரமும் - முத்து வடத்தியும் (சங்கிலி)
  • கொண்டு - எடுத்துக் கொண்டு
  • வழுவில் - குற்றமற்ற
  • கொடை யான் - கொடையாளனான, ஔதார்யத்தை டைய
  • வயிச்சிரவணன் - குபேரானானவன் 
  • தொழுது - இவற்றை நீ ஏற்க வேண்டுமென்று கை கூப்பிக் கொண்டு
  • உவனாய் நின்றான் - பணிவன்புடன் நின்றான் 
  •  தாலேலோ! - கண்ணுறங்கு! 
  • தூ மணி - தூய நீலமணி போன்ற 
  • வண்ணனே - வடிவை டைய கண்ணனே! 
  •  தாலேலோ! - கண்ணுறங்கு! 

பெருமாளின் அடையாளங்களான பஞ்சாயுதங்களின் சின்னங்கள் பொருந்திய முத்து மாலை ஒன்றை கண்ணனின் அழகான திரு மார்பிற்கு உகந்தவை என்றெண்ணி அப்பழுக்கு இல்லாத குபேரன் உனக்கு சமர்ப்பித்து விட்டு கை கூப்பி நிற்கின்றான், கண்ணுறங்கு, தூய நீல மணி போன்றவனே கண்ணுறங்கு. 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment