About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 29 June 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 141

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||உத்தர பீடி²கா||
உத்தர பாகம்
பலஸ்²ருதி

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 3

வேதா³ந்தகோ³ ப்³ராஹ்மண: ஸ்யாத் 
க்ஷத்ரியோ விஜயீ பவேத்|
வைஸ்²யோ த⁴ ஸம்ருத்³த⁴: ஸ்யாத் 
ஸூ²த்³ர: ஸுக² மவாப்நுயாத்||


ப்ராஹ்மண: - ப்ராஹ்மணஸ்
ஸம்ருத்த: - ஸம்ருத்தஸ்
ஸூ²த்ர: - ஸூ²த்ரஸ்

இதை ஒரு பிராமணன் பாராயணம் செய்தால் அவன் வேதாந்தத் திறன் பெறுவதில் வெல்வான்; ஒரு க்ஷத்திரியன் பாராயணம் செய்தால் அவன் எப்போதும் போர்க் களத்தில் வெற்றியாளனாக இருப்பான். ஒரு வைசியன் பாராயணம் செய்தால் அவன் செல்வச் செழிப்படைவான். ஒரு சூத்திரன் பாராயணம் செய்தால் அவன் பெரும் மகிழ்ச்சியை அடைவான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 3.5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||

ஸ்லோகம் - 3.5 

ந ஹி கஸ்²சித் க்ஷணமபி 
ஜாது திஷ்ட²த்ய கர்ம க்ருத்|
கார்யதே ஹ்யவஸ²: கர்ம 
ஸர்வ: ப்ரக்ருதி ஜைர் கு³ணை:||

  • ந - இல்லை 
  • ஹி - நிச்சயமாக  
  • கஸ்²சித் - யாருமே 
  • க்ஷணம் - ஒரு கணம் 
  • அபி - கூட 
  • ஜாது - எவ்வேளையிலும் 
  • திஷ்ட²தி - இருப்பது 
  • அகர்ம க்ருத் - ஒன்றும் செய்யாமல் 
  • கார்யதே - வற்புறுத்துப்படுகின்றனர் 
  • ஹி - நிச்சயமாக 
  • அவஸ²ஸ் - சுதந்திரமின்றி  
  • கர்ம - செயல் 
  • ஸர்வஃ - எல்லாம்  
  • ப்ரக்ருதிஜைர் - பௌதிக இயற்கையிலிருந்து தோன்றிய  
  • கு³ணைஹி - குணங்களால்

எவரும் ஒரு கணம் கூட ஒன்றும் செய்யாமல் இருப்பது இல்லை. எல்லாம் பௌதிக இயற்கையிலிருந்து தோன்றிய குணங்களால் சுதந்திரமின்றி செயல்பட வற்புறுத்தப் படுகின்றனர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.31

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.31

கிம் வா பா⁴க³வதா த⁴ர்மா 
ந ப்ராயேண நிரூபிதா:|
ப்ரியா: பரம ஹம்ஸா நாம் 
த ஏவஹ் யச்யுத ப்ரியா:|| 

  • பா⁴க³வதா - பகவத் ஸம்மந்தமான
  • த⁴ர்மா - தருமங்கள் யாவும் 
  • ப்ராயேண - அநேகமாக 
  • ந  நிரூபிதாஹ - நிரூபிக்கப்படவில்லை 
  • கிம் வா - போலும் 
  • தே ஏவ ஹி -   அந்த பகவத் ஸம்மந்தமான தருமங்கள் அல்லவா   
  • பரம ஹம்ஸா நாம் - பரம ஹம்ஸர்களுக்கு 
  • ப்ரியாஃ - ப்ரியமானவை   
  • அச்யுத ப்ரியாஹ -  ஸ்ரீ பகவானுக்கும் ப்ரியமானவை

நான், ஒருக்கால் பகவானைப் பற்றிய பாகவத தர்மங்களைச் சரிவர விளக்கவில்லையோ! அந்த பகவானைப் பற்றிய தர்மங்கள் அல்லவா, பரம பக்தர்களுக்கு உகந்தவை. அவர்கள் உகப்பதைத் தானே பகவானும் உகப்பன்?' அதாவது, பக்தர்கள் விருப்பமேயன்றோ, பகவானது விருப்பம். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.76

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.76

அஸ்த்ரே ணோந் முக்தமாத் மாநம் 
ஜ்ஞாத்வா பைதா மஹாத்³ வராத்|
மர்ஷயந் ராக்ஷஸாந் வீரோ 
யந்த்ரிண ஸ்தாந் யத்³ ருச்ச²யா|| 

  • வீரோ - சூரரான
  • பைதா மஹாத்³ - பிரம்ம தேவரின்
  • வராத் - வரத்தால் 
  • ஆத்மாநம் - தன்னை
  • யத்³ ருச்ச²யா - ப்ரயத்தனமின்றி 
  • அஸ்த்ரேண - அஸ்திரத்தினால் 
  • உந் முக்தம் - விடுபட்டதாக 
  • ஜ்ஞாத்வா - அறிந்து 
  • யந்த்ரிணஸ் - கயிற்றை கட்டினவர்களான
  • தாந் - அந்த
  • ராக்ஷஸாந் - ராக்ஷசர்களை 
  • மர்ஷயந் - க்ஷமித்துக் கொண்டு

சூரரான ஹனுமான், பிதா மஹரின் {பிரம்மரின்} வரத்தால் அஸ்திரத்தில் இருந்து விடுபட்டதை அறிந்தும், தன் விருப்பத்தின் பேரில் ராட்சசர்களின் கட்டுகளைப் பொறுத்துக் கொண்டு, 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

திவ்ய ப்ரபந்தம் - பெரியாழ்வார் திருமொழி - 2.1 அறிமுகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

பெரியாழ்வார் திருமொழி
இரண்டாம் பத்து - முதலாம் திருமொழி – 10 பாசுரங்கள்

கண்ணன் அப்பூச்சி  காட்டி விளையாடுதல்

கலித்தாழிசை

சிறு குழந்தைகளின் செயல்களுள் பூச்சி காட்டுதல் ஒன்று. அவ்வாறு கண்ணனும் பூச்சி கட்டி விளையாடுகிறான். கோபியர்கள் குழந்தையின் செயலைக் கண்டு களிக்கிறார்கள். 


ஆழ்வாரும் பக்தியின் மேலீட்டால் அவ்விளையாட்டை நேரில் கண்டு மகிழ்வது போல் அநுபவித்து இன்பம் அடைகிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 036 - திருத்தெற்றியம்பலம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

036. திருத்தெற்றியம்பலம் (திருநாங்கூர்)
முப்பத்தி ஆறாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ செங்கண்மால் ரங்கநாத பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ செங்கமலவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ செங்கண்மால் ரங்கநாதன் பெருமாள் 
திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்: செங்கண்மால் ரங்கநாதன், ஸ்ரீ லக்ஷ்மீ ரங்கர்
  • பெருமாள் உற்சவர்: பள்ளி கொண்ட ரங்கநாதர்
  • தாயார் மூலவர்: செங்கமலவல்லி
  • தாயார் உற்சவர்: செண்பகவல்லி
  • திருமுக மண்டலம் திசை: கிழக்கு
  • திருக்கோலம்: புஜங்க ஸயனம்
  • புஷ்கரிணி/தீர்த்தம்: சூரிய 
  • விமானம்: வேத
  • ப்ரத்யக்ஷம்: செங்கமல நாச்சியார், அநந்தன்
  • ஸம்ப்ரதாயம்: தென் கலை
  • மங்களாஸாஸநம்: 1 ஆழ்வார்
  • பாசுரங்கள்: 10

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

கருவறையில் லக்ஷ்மி நாராயணர், ஸ்ரீதேவி, பூமாதேவி, சக்கரத்தாழ்வார், சந்தான கோபால கிருஷ்ணன் ஆகியோரும் அருள் பாலிகின்றனர். செங்கமலவல்லி தாயார் தனி ஸந்நதியில் உள்ளார். மகா மண்டபத்தில் தெற்கு நோக்கி 12 ஆழ்வார்கள், அனுமன், சக்கரத்தாழ்வார்கள் காட்சியளிக்கின்றனர்.

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இத்தலம் மட்டும் தான் "அம்பலம்' என அழைக்கப் படுகிறது. திருநாங்கூரில் "பள்ளி கொண்ட பெருமாள் கோயில்' என்றால் தான் அனைவருக்கும் தெரியும். திருநாங்கூர் வந்த 11 பெருமாள்களில், இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆவார். இவரை வணங்கினால் ஸ்ரீரங்கம் பெருமாளை வணங்கியதற்கு சமம். கிழக்கு பார்த்த இத்தலத்தில் பெருமாள் ஆதிசேஷன் மீது நான்கு புஜங்களுடன் பள்ளி கொண்ட பெருமாளாக அருள்பாலிக்கிறார். தலையும், வலது கையும் மரக்கால் மேல் வைத்து கொண்டு, இடது கரத்தை இடுப்பின் மீது வைத்து கீழே தொங்கவிட்ட நிலையில் காட்சியளிக்கிறார். இவரது தலைப் பக்கம் ஸ்ரீதேவியும், பாதத்தில் பூமாதேவியும் வீற்றிருக்கின்றனர்.

இரண்யாட்சன் என்ற அசுரன் பூமியை தூக்கி கொண்டு பாதாள உலகத்தில் மறைத்து வைத்து விட்டான். தேவர்கள், முனிவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவரும் பூமியை காப்பாற்றுவதற்கு வராக அவதாரம் எடுக்க சம்மதித்தார். இதை கேட்டவுடன் மகாலக்ஷ்மி, "பகவானே! நான் ஒரு நொடி கூட உங்களை விட்டு பிரியாமல் தங்களது மார்பில் குடியிருப்பவள். நீங்களோ என்னை விட்டு வராக அவதாரம் எடுக்க போவதாக கூறுகிறீர்கள். நான் எப்படி தனியாக இருப்பது,''என வருத்தப்பட்டாள். இதே போல் ஆதிசேஷனும், "பரந்தாமா! நீங்கள் பூமியை காக்க பாதாள உலகம் சென்று விட்டால் என் கதி என்னாவது?'' என வருத்தப்பட்டார். இதைக்கேட்ட பெருமாள், "பயப்படாதீர்கள். எல்லாம் நன்மைக்கு தான். நீங்கள் இருவரும் "பலாசவனம்" சென்று என்னை தியானம் செய்ய புறப்படுங்கள். அங்கே சிவபெருமானும் வருவார். நான் இரண்யாட்சனை வதம் செய்து விட்டு உங்களுக்கு அனுக்கிரகம் செய்ய அங்கு வந்து விடுகிறேன்,'' என்றார். அத்துடன் கலியுகத்தில் இத்தலம் "திருத்தெற்றியம்பலம்' என அழைக்கப்படும். என் தீவிர பக்தரான ஸ்ரீபாஷ்யகாரர், தீட்சை பெற்ற 108 வைஷ்ணவர்களை அழைத்து என்னை ஆராதனை செய்ய இருக்கிறார். நான் அங்கிருந்து உலகத்தை காத்து ரக்ஷிக்க போகிறேன். கலியுகம் முழுவதும் அங்கேயே நித்தியவாசம் செய்ய போகிறேன்,'' என்றருளினார். வராக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, பாதாள உலகிற்கு சென்று இரண்யாட்சனை அழித்து பூமியை மீட்டு அது இருக்க வேண்டிய இடத்தில் மெல்ல சுழல விட்டார். இதையறிந்த மகாலக்ஷ்மியும், ஆதிசேஷனும் பூமிக்கு வந்து மகாவிஷ்ணு குறித்து தவம் செய்ய ஆரம்பித்தனர். மகாவிஷ்ணு தான் கொடுத்த வாக்குப்படி பலாசவனம் (திருத்தெற்றியம்பலம்) சென்று அங்கிருந்த சிவன், மகாலக்ஷ்மி, ஆதிசேஷனுக்கு அருள் புரிந்தார். பின் அங்கேயே போர் புரிந்த களைப்பு தீர, சிவந்திருந்த அழகான கண்களுடன் பள்ளி கொண்டார். இதனால் இத்தல பெருமாள் "செங்கண்மால் ரங்கநாதர்' என்றழைக்கப்படுகிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 85

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 30

ஸ்கந்தம் 03

கபிலர் தொடர்ந்து தத்வங்களை விளக்கினார்.

தாயே! அஹங்கார தத்வத்தின் ரூபம் ஸங்கர்ஷணன் ஆவார். இதுவே இந்திரிய அபிமானம் உள்ளவர்களித்தில் செய்கையின் காரணமாகத் தென்படுகிறது.‌ ஸத்வகுணங்களோடு அமைதியாகவும், ரஜோகுணம் மேலிட்டால் கோரமாகவும், தமோகுணங்களைக் கொண்டு மடமையாகவும் நிற்பது இதுவே.

ஸாத்வீக அஹங்காரமே மனஸ் தத்வம் உண்டாகக்‌காரணம். மனஸ் தத்வமே இந்திர்யங்களின் அதிஷ்டான தேவதையான அனிருத்தன் என்று அழைக்கப்படுகிறது.

ராஜஸ அஹங்காரம்‌ மாறுதல் அடைந்து புத்தி தத்வம் தோன்றியது. கண்ணுக்குப் புலனாகும் விஷயங்களைப் புரிந்துகொள்வது, இந்திரியங்களை அதன் தொழிலில் ஊக்குவிப்பது, உலகியல் பொருள்களில் தோன்றும் மாற்றத்தை ஆராய்வது இவை புத்தியின் காரியங்களாம்.

ஐயப்பாடு(சம்சயம்), தவறாகப் புரிந்துகொள்வது (விபர்யயம்),உள்ளது உள்ளபடி அறிந்துகொள்வது (நிச்சயம்), ஞாபக சக்தி (ஸ்ம்ருதி), தூக்கம் (நித்திரை), ஆகியவையும் புத்தியின் இலக்கணங்களே. இந்த புத்தி தத்வமே பகவானது மூன்றாவது வியூகமான ப்ரத்யும்னன் எனப்படுகிறது.

கர்மேந்திரியங்களும் ஞானேந்திரியங்களும் இதிலிருந்து தோன்றின. செயல்‌, அறிவு என்ற பிரிவினால் இருவகை இந்திரியங்களாயின. இதில்‌ செயல் ப்ராணனின் சக்தி, அறிவு புத்தியின் திறன்.

பகவானின் சைதன்யத்தின் தூண்டுதலால் தாமஸ அஹங்காரம்‌ மாறுதல் அடைந்தது. அது சப்த தன்மாத்திரையைத் தோற்றுவித்தது. சப்தத்திலிருந்து ஆகாயமும், ஒலியை அறியும் காது என்ற புலனும் தோன்றின.

கண்களால் காணமுடியாமல் மறைந்திருக்கும்‌ பொருளின் தன்மையையும், பெயரையும் புத்திக்குத் தெரிவிப்பது ஒலி. ஒலி வடிவான சாஸ்திரங்களின் வாயிலாக பகவானைக் காட்டித் தரக்கூடியது. இது ஆகாயத்தின் நுண்ணிய வடிவாகும்.

அனைத்து ஜீவன்களிலும் உள்ளும் புறமாக நிரம்பி இருப்பது ஆகாயமாகும். இந்திரியங்களுக்கும், ஆன்மாவிற்கும் இருப்பிடமாக விளங்குவது ஆகாயமே.

சப்த தன்மாத்திரையை இயல்பாக உடைய ஆகாயம் காலத்தினால் மாற்றமடைந்து ஸ்பர்ச தன்மாத்திரை உண்டாயிற்று. அதிலிருந்து வாயு தோன்றியது. தொடுவுணர்ச்சியை நமக்குத் தரும்‌ தோல் என்ற புலன் உண்டாயிற்று. மென்மை, கடினம், குளிர்ச்சி, சூடு ஆகியவை தொடு உணர்ச்சியின் இயல்புகள். வாயுவின் நுண்ணிய சக்தி இதுவே. மரம் செடி கொடிகளை அசைத்தல், எங்கும்‌ உலாவுதல், வாசனை, நாற்றம் முதலியவற்றை மூக்கிற்கு எடுத்துச் செல்லுதல், அனைத்துப் புலன்களுக்கும் செயல் ஊக்கத்தை அளித்தல் ஆகியவை வாயுவின் செயல்கள். 


அதன் பின்னர், காலரூபியான பகவானால்‌ தூண்டப்பட்டு‌ ஸ்பர்ச தன்மாத்திரையான வாயு மாறுதல் அடைந்து அதிலிருந்து ரூப தன்மாத்திரை தோன்றியது. அதிலிருந்து ஒளியும் உருவத்தைக் காட்டித்தரும் கண்கள் என்னும் புலனும் தோன்றின.

பொருள்களின் உருவத்தைக் காட்டுதல், பொருளின் அமைப்பாகவே இருத்தல், ஒளியின் குணமாக இருத்தல் ஆகியவை ரூப தன்மாத்திரையின் இலக்கணங்கள்.

வெளிச்சம் தருவது, வேக வைப்பது, ஜீரணிப்பது, குளிரைப் போக்குவது, பசி தாகம் உண்டுபண்ணுவது அதற்காகச் சாப்பிடுவது, பருகுவது ஆகியவை அக்னியின் காரியங்கள்.

அதன் பின் ரூப தன்மாத்திரையான அக்னியிலிருந்து ரஸ தன்மாத்திரை தோன்றியது. அதிலிருந்து நீரும், நாக்கு என்ற புலனும் தோன்றின. ரஸம் என்பதே மதுரம்‌ என்ற சுவை. அதனுடன் சேரும்‌ பொருள்களின் வேறுபாட்டால் இனிப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, கார்ப்பு, துவர்ப்பு என்ற சுவைகள் பிரித்துக் காட்டப்படுகின்றன.

பிறவற்றை ஈரமாக்குதல், பிரிந்திருப்பதை ஒன்றாக்குதல், போதும் ‌என்ற மனநிறைவு கொளல், ப்ராணனை நிலைக்கச் செய்தல், பசி தாகத்தால் விளையும் சோர்வை நீக்குதல், வெம்மையைக் குறைத்தல், கிணறு முதலியவற்றிலிருந்து இறைக்க இறைக்க ஊறுதல் ஆகியவை நீரின் காரியங்கள்.

பகவானால்‌ தூண்டப்பட்டு ஜல தத்வத்திலிருந்து தோன்றியது கந்தம் (வாசனை). அந்த தன் மாத்திரையிலிருந்து ப்ருத்வி என்னும்‌ மஹாபூத்ம் தோன்றியது. இந்த கந்தத்தை அறிவிப்பது கிராணேந்திரிய்ம் (மூக்கு) ஆகும். கந்தம் என்பது ஒன்றாக இருப்பினும் பல்வேறு பொருள்களின்‌ சேர்க்கையால் கலப்பான‌ மணம், துர் நாற்றம், நறுமணம், சாரம் (நெடி), புளிப்பு மணம் எனப் பலவாறு வேறுபடுகிறது.

விக்ரஹம், பொம்மை முதலிய உருவங்களால் , ப்ரும்மத்திற்கு ஓர் உருவத்தை காட்டுவது, ஆதாரமற்ற போதிலும் நிலையாய் நிற்றல்,‌ அசையும்‌ அசையாப் பொருள்களின் ஆதாரமாதல், ஆகாயத்தை ஒரு நிலைக்குள்‌ அடக்குதல் (குடத்துக்குள் ஆகாயம்), குணங்களைப் பிரித்துக்‌காட்டுதல் ஆகியவை பூமியின்‌ காரியங்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்