||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
001. திருவரங்கம்
ஸ்ரீரங்கம் - திருச்சி
முதலாவது திவ்ய க்ஷேத்ரம்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 249 - 8
தொண்டரடிப்பொடி ஆழ்வார்
127. திவ்ய ப்ரபந்தம் - 910 - அன்பு செய்யும் அடியாரையே உசுக்கிறாய்
திருமாலை - நான்காம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (39)
அடிமையில் குடிமை இல்லா* அயல் சதுப்பேதி மாரில்*
குடிமையில் கடைமை பட்ட* குக்கரில் பிறப்பர் ஏலும்*
முடியினில் துளபம் வைத்தாய்!* மொய் கழற்கு அன்பு செய்யும்*
அடியரை உகத்தி போலும்* அரங்கமா நகருளானே|
128. திவ்ய ப்ரபந்தம் - 911 - நின்னையே மனத்தில் வைக்க வேண்டும்
திருமாலை - நான்காம் திருமொழி - பத்தாம் பாசுரம் (40)
திருமறு மார்வ! நின்னைச்* சிந்தையுள் திகழ வைத்து*
மருவிய மனத்தர் ஆகில்* மாநிலத்து உயிர்கள் எல்லாம்*
வெருவரக் கொன்று சுட்டிட்டு* ஈட்டிய வினையரேலும்*
அருவினைப் பயனதுய்யார்* அரங்கமா நகருளானே|
129. திவ்ய ப்ரபந்தம் - 912 - அடியவர் உண்டு மிஞ்சிய சேடமே சிறந்தது
திருமாலை - ஐந்தாம் திருமொழி - முதலாம் பாசுரம் (41)
வானுளார் அறியலாகா* வானவா! என்பராகில்*
தேனுலாம் துளப மாலைச்* சென்னியாய்! என்பராகில்*
ஊனமா யினகள் செய்யும்* ஊன காரகர்கள் ஏலும்*
போனகம் செய்த சேடம்* தருவரேல் புனிதமன்றே?
130. திவ்ய ப்ரபந்தம் - 913 - எக்குலத்தாராயினும் நின் அடியவர்களே உயர்ந்தவர்கள்
திருமாலை - ஐந்தாம் திருமொழி - இரண்டாம் பாசுரம் (42)
பழுதிலா ஒழுகல் ஆற்றுப்* பல சதுப்பேதி மார்கள்*
இழி குலத்தவர் களேலும்* எம் அடியார் களாகில்*
தொழுமினீர் கொடுமின் கொள்மின்!* என்று நின்னோடும் ஒக்க*
வழிபட அருளினாய் போல்* மதிள் திருவரங்கத் தானே|
131. திவ்ய ப்ரபந்தம் - 914 - அடியார்களைப் பழிப்பவர் புலையர்
திருமாலை - ஐந்தாம் திருமொழி - மூன்றாம் பாசுரம் (43)
அமர ஓர் அங்கம் ஆறும்* வேதம் ஓர் நான்கும் ஓதி*
தமர்களில் தலைவராய* சாதி அந்தணர் களேலும்*
நுமர்களைப் பழிப்பராகில்* நொடிப்பது ஓரளவில்*
ஆங்கே அவர்கள் தாம் புலையர் போலும்* அரங்கமா நகருளானே|
132. திவ்ய ப்ரபந்தம் - 915 - ஆனைக்கு அன்று அருள் செய்தாயே!
திருமாலை - ஐந்தாம் திருமொழி - நான்காம் பாசுரம் (44)
பெண்ணுலாம் சடையினானும்* பிரமனும் உன்னைக் காண்பான்*
எண்ணிலா ஊழி ஊழி* தவம் செய்தார் வெள்கி நிற்ப*
விண்ணுளார் வியப்ப வந்து* ஆனைக்கு அன்று அருளை ஈந்த கண்ணறா*
உன்னை என்னோ* களை கணாக் கருது மாறே| (2)
133. திவ்ய ப்ரபந்தம் - 916 - என் கவிதைகள் எம்பிரானுக்கு இனிக்கும்
திருமாலை - ஐந்தாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம் (45)
வள எழும் தவள மாட* மதுரை மா நகரம் தன்னுள்*
கவள மால் யானை கொன்ற* கண்ணனை அரங்க மாலை*
துவளத் தொண்டாய தொல் சீர்த்* தொண்டரடிப் பொடி சொல்*
இளைய புன் கவிதை ஏலும்* எம்பிரார்கு இனிய வாறே| (2)
134. திவ்ய ப்ரபந்தம் - 917 - சூரியன் உதித்த விட்டான்: பள்ளி எழுந்தருள்
திருப்பள்ளியெழுச்சி - முதலாவது பாசுரம்
கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான்*
கனை இருள் அகன்றது காலையம் பொழுதாய்*
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம்*
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி*
எதிர் திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த*
இரும் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்*
அதிர்தலில் அலை கடல் போன்றுளது எங்கும்*
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே|
135. திவ்ய ப்ரபந்தம் - 918 - கஜேந்திரனுக்கு அருளியவனே! பள்ளி எழுந்தருள்
திருப்பள்ளியெழுச்சி - இரண்டாவது பாசுரம்
கொழுங்கொடி முல்லையின் கொழு மலரணவிக்*
கூர்ந்தது குண திசை மாருதம் இதுவோ*
எழுந்தன மலரணைப் பள்ளிக் கொள் அன்னம்*
ஈன்பணி நனைந்த தம் இருஞ் சிறகுதறி*
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ்வாய்*
வெள் எயிறு உற அதன் விடத்தனுக்கு அனுங்கி*
அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த*
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே|
136. திவ்ய ப்ரபந்தம் - 919 - காலைக் காற்று வீசுகிறது, பள்ளி எழுந்தருள்
திருப்பள்ளியெழுச்சி - மூன்றாவது பாசுரம்
சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்*
துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி*
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ*
பாயிருள் அகன்றது பைம் பொழில் கமுகின்*
மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற*
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ*
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக்கை*
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே|
137. திவ்ய ப்ரபந்தம் - 920 - அயோத்தி அரசே! பள்ளி எழுந்தருள்
திருப்பள்ளியெழுச்சி - நான்காவது பாசுரம்
மேட்டிள மேதிகள் தளை விடும் ஆயர்கள்*
வேய்ங்குழல் ஓசையும் விடை மணிக் குரலும்*
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்*
இருந்தின சுரும்பினம் இலங்கையர் குலத்தை*
வாட்டிய வரிசிலை வானவர் ஏறே!*
மாமுனி வேள்வியைக் காத்து*
அவ பிரதம் ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே!*
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே|
138. திவ்ய ப்ரபந்தம் - 921 - தேவர்கள் பணிய வந்துள்ளனர்: பள்ளி எழுந்தருள்
திருப்பள்ளியெழுச்சி - ஐந்தாவது பாசுரம்
புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்*
போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி*
கலந்தது குண திசை கனைகடல் அரவம்*
களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த*
அலங்கல் அம் தொடையல் கொண்டு அடியிணை பணிவான்*
அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா*
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்*
எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே|
139. திவ்ய ப்ரபந்தம் - 922 - யாவரும் காத்துள்ளனர்: பள்ளி எழுந்தருள்
திருப்பள்ளியெழுச்சி - ஆறாவது பாசுரம்
இரவியர் மணிநெடும் தேரொடும் இவரோ?*
இறையவர் பதினொரு விடையரும் இவரோ?*
மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ?*
மருதரும் வசுக்களும் வந்து வந்து ஈண்டி'*
புரவியொடு ஆடலும் பாடலும் தேரும்*
குமரதண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்*
அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ?*
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே|
140. திவ்ய ப்ரபந்தம் - 923 - தேவருடன் முனிவர்கள் நின்னைத் தொழ நிற்கின்றனர்
திருப்பள்ளியெழுச்சி - ஏழாவது பாசுரம்
அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ?*
அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ?*
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ?*
எம்பெருமான் உன் கோயிலின் வாசல்*
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க*
இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்*
அந்தரம் பார் இடம் இல்லை மற்று இதுவோ?*
அரங்கத்தம்மா!பள்ளி எழுந்தருளாயே|
141. திவ்ய ப்ரபந்தம் - 924 - சூரியனும் ஒளி பரப்பித் தோன்றினன்
திருப்பள்ளியெழுச்சி - எட்டாவது பாசுரம்
வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க*
மாநிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா*
எம்பெருமான் படி மக்கலம் காண்டற்கு*
ஏற்பன ஆயின கொண்டு நன் முனிவர்*
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ?*
தோன்றினன் இரவியும் துலங்கு ஒளி பரப்பி*
அம்பர தலத்தில் நின்று அகல்கின்றது இருள் போய்*
அரங்கத்தம்மா பள்ளி! எழுந்தருளாயே|
142. திவ்ய ப்ரபந்தம் - 925 - யாவருக்கும் காட்சி தர வேண்டுமே! பள்ளி எழுந்தருள்
திருப்பள்ளியெழுச்சி - ஒண்பதாவது பாசுரம்
ஏதம் இல் தண்ணுமை எக்கம் மத்தளியே*
யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி*
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்*
கந்தரு வரவர் கங்குலுள் எல்லாம்*
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்*
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்*
ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள*
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே|
143. திவ்ய ப்ரபந்தம் - 926 - அடியார்க்கு அடியன் ஆவேன்
திருப்பள்ளியெழுச்சி - பத்தாவது பாசுரம்
கடி மலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ?*
கதிரவன் கனை கடல் முளைத்தனன் இவனோ?*
துடியிடையார் சுரி குழல் பிழிந்து உதறித்*
துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா*
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து*
தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி என்னும் அடியனை*
அளியன் என்று அருளி உன் அடியார்க்கு ஆட்படுத்தாய்|*
பள்ளி எழுந்து அருளாயே!!
திருப்பாணாழ்வார்
144. திவ்ய பிரபந்தம் - 927 - அரங்கனின் கமல பாதம் வந்து விட்டது!
அமலனாதிபிரான் - முதலாம் பாசுரம்
அமலனாதி பிரான்* அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன்*
விண்ணவர் கோன்* விரையார் பொழில் வேங்கடவன்*
நிமலன் நின்மலன் நீதி வானவன்* நீள் மதில் அரங்கத்து அம்மான்*
திருக்கமல பாதம் வந்து* என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே|(2)
145. திவ்ய பிரபந்தம் - 928 - அரங்கனின் சிவந்த ஆடையைச் சிந்திக்கின்றேன்
அமலனாதிபிரான் - இரண்டாம் பாசுரம்
உவந்த உள்ளத்தனாய்* உலகம் அளந்து அண்டம் உற*
நிவந்த நீள் முடியன்* அன்று நேர்ந்த நிசாசரரை*
கவர்ந்த வெம் கணைக் காகுத்தன்* கடியார் பொழில் அரங்கத்து அம்மான்*
அரைச் சிவந்த ஆடையின் மேல்* சென்றது ஆம் என சிந்தனையே| (2)
146. திவ்ய பிரபந்தம் - 929 – அவனது திருவுந்தியின் மேல் என் மனம் உள்ளது
அமலனாதிபிரான் - மூன்றாம் பாசுரம்
மந்தி பாய்* வட வேங்கட மா மலை*
வானவர்கள் சந்தி செய்ய நின்றான்* அரங்கத்து அரவின் அணையான்*
அந்தி போல் நிறத்து ஆடையும்* அதன் மேல் அயனைப் படைத்தது ஓர் எழில்*
உந்தி மேல் அதன்றோ* அடியேன் உள்ளத்து இன் உயிரே| (2)
147. திவ்ய பிரபந்தம் - 930 – அவனது திருவயிறு என் மனத்தில் உலவுகிறது
அமலனாதிபிரான் - நான்காம் பாசுரம்
சதுர மா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன்* தலை பத்து உதிர ஓட்டி*
ஓர் வெம் கணை உய்த்தவன்* ஓத வண்ணன்*
மதுர மா வண்டு பாட* மா மயில் ஆடு அரங்கத்து அம்மான்*
திருவயிற்று உதர பந்தம்* என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்