About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 12 August 2023

ஸ்ரீமத் பாகவதம் - 1.1.11

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² ப்ரத²ம: அத்⁴யாய꞉||
||நைமிஷ க்ஷேத்ரே ஸ்ரீமத் பாகவத விஷயே  
ஸூதம், ப்ரதி ஸொ²னகாதி முனீநாம் ப்ரஸ்ந:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||முதல் அத்யாயம்|| 
||ஞானிகளின் கேள்விகள்||

ஸ்லோகம் - 1.1.11

பூ⁴ரீணி பூ⁴ரி கர்மாணி 
ஸ்²ரோ தவ்யாநி விபா⁴க³ஸ²꞉|
அத꞉ ஸாதோ⁴த்ர யத்ஸாரம் 
ஸமுத்³ த்⁴ருத்ய மநீஷயாம்||
ப்³ரூஹி ந꞉ ஸ்²ரத்³ த³தா⁴ நாநாம் 
யேநாத்மா ஸம்ப்ர ஸீத³தி||

  • விபா⁴க³ஸஹ - முறைகளால் அனுஷ்டிக்க வேண்டிய 
  • பூ⁴ரி கர்மாணி - அநேகம் கர்மாக்கள் இருக்கின்றன
  • ஸ்²ரோ தவ்யாநி - அதே போல் கேட்க வேண்டிய ஸாஸ்திரங்கள்
  • பூ⁴ரீணி - அநேகம் இருக்கின்றன
  • அதஸ் - ஆகையால் 
  • ஸாதோ⁴ - ஹே! மகரிஷே!
  • அத்ர - இவைகளில்
  • யத்ஸாரம் - யாதென்று ஸாரமானதே 
  • யேந ஆத்மா - எதனால் புத்தியானது 
  • ஸம்ப்ர ஸீத³தி - நன்கு அமைதி அடையுமோ 
  • மநீஷயாம் ஸமுத்³ த்⁴ருத்ய - தங்களது அறிவுத் திறத்தால் அதனை எடுத்து 
  • ஸ்²ரத்³ த³தா⁴ நாநாம் நஸ் - கேட்பதில் ஸ்ரத்தையோடு கூடிய எங்களுக்கு 
  • ப்³ரூஹி - எடுத்துச் செல்லும்

முறைப்படி கடை பிடிக்க வேண்டிய கடமைகளோ ஏராளம். கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய ஸாஸ்திரங்களோ அநேகம். ஆகையால், ஹே! மகரிஷியே! இவைகளில் கடைந்தெடுக்கப்பட்ட ஸாரமான பொருள் எதுவோ, எதை கேட்பதால் மனம் நன்கு அமைதியடையுமோ, அதை உங்களது அனுபவத்தாலும் அறிவுத் திறத்தாலும் உலகோரின் நன்மைக்காகக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பு கொண்ட எங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டுகிறோம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment