||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
வருணன் நந்தகோபரை பிடித்துச் செல்லுதல்|
ஒரு நாள் நந்தகோபர் யமுனையில் குளிக்க சென்றிருந்தார். அப்பொழுது அதிகாலை நேரம். அதனால் இருட்டாகவே இருந்தது. அந்த நேரம் வருணனின் தூதர்களில் ஒருவன் நந்தகோபர் குளிப்பதை பார்த்தான் அவன் நந்தகோபரை இழுத்துக் கொண்டு, வருணனிடம் கொண்டு சென்று விட்டான். நதிக்கு சென்ற நந்தகோபர் திரும்பி வராததை கண்டு எல்லோரும் அழ ஆரம்பித்தார்கள். அனைவரும் கிருஷ்ணனிடம் சென்று முறையிட்டார்கள். கிருஷ்ணன் கண்களை மூடிக் கொண்டு தன் யோக சக்தியை பயன்படுத்தி இது வருணனின் குறும்புத்தனம் என்று தெரிந்துக் கொண்டான். உடனே கிருஷ்ணன் அந்த நதி கரைக்கு சென்று அதில் குதித்து வருணன் இருக்கும் இடம் சென்றடைந்தான். வருணன் கிருஷ்ணனின் காலில் விழுந்து வணங்கி தன் இரண்டு கைகளையும் கூப்பி கிருஷ்ணனை பார்த்து, "பகவானே இன்று நான் ஆசிர்வதிக்க பட்டேன். உங்களுடைய பாதம் எங்கெல்லாம் படுகிறதோ அதை தொடுகிறவர்கள் பிறவிக் கடலிலிருந்து காப்பாற்ற படுகிறார்கள். என்னையும் எனது தூதரையும் மன்னித்து அருளுங்கள். உங்களுடைய தந்தையை நீங்கள் அழைத்து செல்லலாம்".
கிருஷ்ணன் அதை ஏற்றுக் கொண்டு மனதில் சந்தோஷந்துடன் அவன் தந்தையுடன் வீடு திரும்பினான். இதை பார்த்த கோபியர்கள் மனதில் அவன் தெய்வமாகவே தோன்றினான். பல நாட்களாக அவர்கள் மனதில் கிருஷ்ணனை பற்றி முழுவதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், அவன் வசிக்கும் வைகுண்டத்தை பார்க்க வேண்டும் என்றும் ஆசை வைத்திருந்தார்கள். அவர்கள் மனதில் உள்ள ஆசையை அறிந்து கொண்ட கிருஷ்ணன் அதை பூர்த்தி செய்தான். அதன் விளைவாக கோபியர்கள் வைகுண்டத்தை பார்த்தனர், அவர்கள் நாராயணனை கிருஷ்ணனாக பார்த்தார்கள், எல்லா தேவர்களாலும் போற்ற பட்டார். இன்னொரு புறம் திரும்பி அவர்கள் பக்கம் பார்த்தால் அங்கும் கிருஷ்ணன் இருந்தான். அதன் பிறகு அவர்கள் மறுபடியும் பிருந்தாவனம் வந்தடைந்தனர். கோபியர்கள் வைகுண்டத்தை பார்த்ததை அவர்களாலே நம்ப முடியவில்லை. பகவான் கிருஷ்ணனின் லீலைகளே ஆச்சரியம் தான்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்