About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 16 September 2023

ஸ்ரீமத் பாகவதம் - 1.2.16

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா: 
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம் 
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்|| 
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||

ஸ்லோகம் - 1.2.16

ஸு²ஸ்²ரூஷோ: ஸ்²ரத்³த³தா⁴ நஸ்ய 
வாஸுதே³வ கதா²ருசி:| 
ஸ்யாந் மஹத் ஸேவயா விப்ரா: 
புண்ய தீர்த² நிஷேவணாத்||

  • விப்ராஹா - ஹே ப்ராமணோத்தமர்களே!
  • புண்ய தீர்த² - புண்ணிய தீர்த்தங்களை 
  • நிஷேவணாத் - சேவிப்பதாலும் 
  • மஹத் ஸேவயா - பெரியாருடைய பாத ஸேவையாலும் 
  • ஸ்²ரத்³த³ தா⁴நஸ்ய - ஸ்ரத்தையோடு கூடியவனும் 
  • ஸு²ஸ்²ரூஷோஸ் - இறைவன் குணத்தை கேட்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளவனுமான மனிதனுக்கு
  • வாஸுதே³வ - வாஸுதேவனின் 
  • கதா²ருசிஹி - கதையில் விருப்பம் 
  • ஸ்யாந் - உண்டாகும் 

அந்தணப் பெரியோர்களே! புண்ணிய நதிகளில் நீராடுவதால் சான்றோர்களின் தரிசனம் (சாது சத்சங்கம்) கிடைக்கும். சாதுக்களின் நட்பினால் அறநெறிகளில் ஈடுபாடு உண்டாகும். அதன்பின், பகவானுடைய குணங்களைக் கேட்பதில் விருப்பம் ஏற்படும். பின்னர், பகவானுடைய கதைகளைக் கேட்பதில் நம்பிக்கை பிறக்கும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment