||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா:
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம்
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||
ஸ்லோகம் - 1.2.11
வத³ந்தி தத் தத்த்வ வித³ஸ்
தத்த்வம் யஜ்ஜ்ஞா நமத்³வயம்।
ப்³ரஹ் மேதி பரமாத் மேதி
ப⁴க³வாந் இதி ஸ²ப்³த்³யதே॥
- யத்³ - யாதொரு
- அத்³வயம் - இரண்டற்ற (அத்வைதமான)
- க்ஞாநம் - ஞானமானது
- ப்³ரஹ்ம இதி - உபநிஷத்துக்களால் பிரம்மம் என்றும்
- பரமாத்மா இதி - பரமாத்மா என்றும்
- ப⁴க³வாந் இதி - பகவான் என்றும்
- ஸ²ப்³ த்³யதே - கோஷிக்கப்படுகின்றதோ
- தத் - அந்த ஞானத்தையே
- தத்வம் - உண்மை என்று
- தத்வ வித³ஸ் - உண்மையை உணர்ந்தோர்
- வத³ந்தி – உரைக்கின்றனர்
உண்மை அறிந்த சான்றோர்கள் அறியப்படும் பொருள், அறிபவன் என்ற இரண்ரற்றதான ஞானத்தை சத்தியம் (தத்துவம்) என்று கூறுகிறார்கள். (உபநிஷத்தை உணர்ந்தவர்கள்) பிரும்மம் என்றும், (ஹிரண்யகர்ப்பனை உபாசிப்பவர்கள்) பரமாத்மா என்றும், (பக்தர்கள்) பகவான் என்றும் பெயரிட்டு அழைக்கிறார்கள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்