About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 6 September 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 42

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 12

வஸுர் வஸுமநா: ஸத்ய: 
ஸமாத்மா ஸம்மித: ஸம:|
அமோக⁴: புண்ட³ரீகாஷோ 
வ்ருஷ கர்மா வ்ருஷா க்ருதி:||

  • 105. வஸுர் - சிறிது அநுகூல புத்தியுள்ளவரிடத்தும் அன்புடன் வசிப்பவர். பக்தர்கள் தேடும் பொக்கிஷம்.
  • 106. வஸுமநாஸ் - தன்னை அடைந்தவரைப் பெருஞ் செல்வமாக நினைப்பவர். தூய மனம் கொண்டவர்.
  • 107. ஸத்யஸ் - தன்னை அடைந்தவர்களுக்கு அநுகூலன். அவர் சத்தியம்.
  • 108. ஸமாத்மா - அடியார் எவரையும் சமமாகப் பாவிப்பவர். 
  • 109. ஸம்மிதஸ் - அடியார்க்கு அடங்கிய பொருளாய் இருப்பவர். தன்னைப் புரிந்து கொள்ளவும். தன் பக்தர்களால் கட்டுப்படுத்தவும் அனுமதித்தவர். ரிஷிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் உபநிடதங்களில் வெளிப்படுத்தப்பட்ட இறுதி உண்மை.
  • 110. ஸமஹ - எல்லாரிடத்தும் சமமாய் இருப்பவர். பாரபட்சமற்றவர்.
  • 111. அமோக⁴ஃ - அடியாரின் உறவு வீண் போகாமல் காப்பவர். பக்தர்களுக்கு அருள் செய்பவர்.
  • 112. புண்ட³ரீகாஷோ - விண்ணோர்க்குக் கண் போனவர். தாமரை மலரைப் போன்ற கண்களை உடையவர்.
  • 113. வ்ருஷ கர்மா - தர்மத்தின் படியே நற்செயல்களைச் செய்பவர்.  
  • 114. வ்ருஷா க்ருதிஹி - தருமமே வடிவானவர். தர்மத்தை நிலை நிறுத்த வெளிப்படுபவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment