||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
012. திருக்குடந்தை
பாஸ்கர க்ஷேத்ரம் - கும்பகோணம்
பன்னிரெண்டாவது திவ்ய க்ஷேத்ரம்
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
7 ஆழ்வார்கள் – 51 பாசுரங்கள்
1. பூதத்தாழ்வார் - 2 பாசுரங்கள்
1. இரண்டாம் திருவந்தாதி (மூன்றாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் – 2251 - ஏழாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (70)
- திவ்ய ப்ரபந்தம் - 2278 - பத்தாம் திருமொழி - ஏழாம் பாசுரம் (97)
--------------
2. பேயாழ்வார் - 2 பாசுரங்கள்
1. மூன்றாம் திருவந்தாதி (மூன்றாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் - 2311 - மூன்றாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (30)
- திவ்ய ப்ரபந்தம் - 2343 - ஏழாம் திருமொழி - இரண்டாம் பாசுரம் (62)
--------------
3. திருமழிசை ஆழ்வார் - 7 பாசுரங்கள்
1. திருச்சந்த விருத்தம் (முதலாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் – 807 - 811 - ஆறாம் திருமொழி - 6 - 10 (56 to 60) - 5 பாசுரங்கள்
- திவ்ய ப்ரபந்தம் – 812 - ஏழாம் திருமொழி - முதலாம் பாசுரம் (61) 1 பாசுரம்
2. நான்முகன் திருவந்தாதி (மூன்றாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் - 2417 - நான்காம் திருமொழி - ஆறாம் பாசுரம் (36) 1 பாசுரம்
--------------
4. நம்மாழ்வார் - 11 பாசுரங்கள்
1. திருவாய்மொழி (நான்காம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் - 3310 - 3320 - ஐந்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி
--------------
5. பெரியாழ்வார் - 3 பாசுரங்கள்
1. பெரியாழ்வார் திருமொழி (முதலாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் - 173,177 - இரண்டாம் பத்து - ஆறாம் திருமொழி – (2 & 8) 2 பாசுரங்கள்
- திவ்ய ப்ரபந்தம் - 188 - இரண்டாம் பத்து - ஏழாம் திருமொழி - ஏழாம் பாசுரம் - 1 பாசுரம்
--------------
6. ஸ்ரீ ஆண்டாள் - 1 பாசுரம்
1. நாச்சியார் திருமொழி (முதலாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் – 628 - பதிமூன்றாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
--------------
7. திருமங்கையாழ்வார் - 25 பாசுரங்கள்
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) – 17 பாசுரங்கள்
- திவ்ய ப்ரபந்தம் - 949, 954 - முதலாம் பத்து - முதலாம் திருமொழி (2, 7) – 2 பாசுரங்கள்
- திவ்ய ப்ரபந்தம் - 991 - முதலாம் பத்து - ஐந்தாம் திருமொழி - நான்காம் பாசுரம்- 1 பாசுரம்
- திவ்ய ப்ரபந்தம் - 1078 - இரண்டாம் பத்து - நான்காம் திருமொழி - முதலாம் பாசுரம் - 1 பாசுரம்
- திவ்ய ப்ரபந்தம் - 1202, 1205 - மூன்றாம் பத்து - ஆறாம் திருமொழி (5, 8) - 2 பாசுரங்கள்
- திவ்ய ப்ரபந்தம் - 1394 - ஐந்தாம் பத்து - ஐந்தாம் திருமொழி - 1 பாசுரம்
- திவ்ய ப்ரபந்தம் - 1526 - ஆறாம் பத்து - எட்டாம் திருமொழி - 1 பாசுரம்
- திவ்ய ப்ரபந்தம் - 1538 - ஆறாம் பத்து - பத்தாம் திருமொழி - 1 பாசுரம்
- திவ்ய ப்ரபந்தம் - 1570 - ஏழாம் பத்து - மூன்றாம் திருமொழி - 1 பாசுரம்
- திவ்ய ப்ரபந்தம் - 1606 - ஏழாம் பத்து - ஆறாம் திருமொழி - 1 பாசுரம்
- திவ்ய ப்ரபந்தம் - 1732 - எட்டாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - 1 பாசுரம்
- திவ்ய ப்ரபந்தம் - 1759 - ஒண்பதாம் பத்து - இரண்டாம் திருமொழி - 1 பாசுரம்
- திவ்ய ப்ரபந்தம் - 1853 - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - 1 பாசுரம்
- திவ்ய ப்ரபந்தம் - 1949 - பத்தாம் பத்து - பத்தாம் திருமொழி - 1 பாசுரம்
- திவ்ய ப்ரபந்தம் - 1975 - பதினொன்றாம் பத்து - மூன்றாம் திருமொழி - 1 பாசுரம்
- திவ்ய ப்ரபந்தம் - 2010 - பதினொன்றாம் பத்து - ஆறாம் திருமொழி - 1 பாசுரம்
2. திருக்குறுந்தாண்டகம் (இரண்டாம் ஆயிரம்) - 2 பாசுரங்கள்
- திவ்ய ப்ரபந்தம் - 2037 - முதலாம் திருமொழி - ஆறாம் பாசுரம் (6)
- திவ்ய ப்ரபந்தம் - 2045 - இரண்டாம் திருமொழி - நான்காம் பாசுரம் (14)
3. திருநெடுந்தாண்டகம் (இரண்டாம் ஆயிரம்) – 3 பாசுரங்கள்
- திவ்ய ப்ரபந்தம் - 2068, 2070 - இரண்டாம் திருமொழி - 7 & 9 (17, 19) - 2 பாசுரங்கள்
- திவ்ய ப்ரபந்தம் - 2080 - மூன்றாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (29) - 1 பாசுரம்
4. திருஎழுகூற்றிருக்கை (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்
- திவ்ய ப்ரபந்தம் - 2672 -1 பாசுரம்
5. சிறிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்
- திவ்ய ப்ரபந்தம் - 2707 - நான்காம் திருமொழி - ஐந்தாம் பாசுரம் (35)
6. பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்
- திவ்ய ப்ரபந்தம் - 2772 - ஆறாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (60)
----------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி
தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*
அந்தாதி
தானே படைத்து உலகத் தானே அளித்து நீ*
தானே அழிக்கும் தளர்ச்சியோ வானில்*
திரு மகுடம் தைக்கச் சிறு குறளாய் நீண்ட*
பெரும குடந்தைக் கிடந்தாய் பேசு*
- சிறு குறள் ஆய - முதலில் சிறிய வாமன அவதாரமாகி
- பின்பு வானில் - ஆகாய முகட்டில்
- திரு மகுடம் தைக்க - அழகிய கிரீடம் முட்டும் படி
- நீண்ட - திரிவிக்கிரமனாகி நீண்டு வளர்ந்தருளிய
- படைத்து - பிரம்மனாகிச் சிருஷ்டித்து
- நீ தானே - அளித்து தானான நிலையில் நின்று பாதுகாத்து
- நீ தானே - அழிக்கும் - சிவனாகி அழிப்பதனால் ஆகிய
- குடந்தை கிடந்தாய் - திருக்குடந்தை என்னும் ஸ்தலத்தில் பள்ளி கொண்டிருக்கின்றாய்?
- பேசு - இதன் காரணத்தைக் கூறி அருள்வாயாக
ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்