||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
029. திரு அரிமேய விண்ணகரம் (திருநாங்கூர்)
இருபத்தி ஒண்பதாவது திவ்ய க்ஷேத்ரம்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் – 10
001. திவ்ய ப்ரபந்தம் - 1238 - மனமே! அரி மேய விண்ணகரம் வணங்கு
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - பத்தாம் திருமொழி - முதலாம் பாசுரம்
திரு மடந்தை மண் மடந்தை இருபாலும் திகழத்*
தீவினைகள் போய் அகல அடியவர்கட்கு என்றும் அருள் நடந்து*
இவ் ஏழ் உலகத்தவர் பணிய* வானோர் அமர்ந்து ஏத்த இருந்த இடம்*
பெரும் புகழ் வேதியர் வாழ் தரும் இடங்கள்
மலர்கள் மிகு கைதைகள் செங்கழு நீர்*
தாமரைகள் தடங்கள்தொறும் இடங்கள்தொறும் திகழ*
அரு இடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர்*
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|
002. திவ்ய ப்ரபந்தம் - 1239 - தேவர்களுக்கு அமுதளித்தவன் இடம் அரிமேய விண்ணகரம்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - பத்தாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
வென்றி மிகு நரகன் உரம் அது அழிய விசிறும்*
விறல் ஆழித் தடக் கையன் விண்ணவர்கட்கு அன்று*
குன்று கொடு குரை கடலைக் கடைந்து அமுதம் அளிக்கும்*
குருமணி என் ஆர் அமுதம் குலவி உறை கோயில்*
என்றும் மிகு பெருஞ் செல்வத்து எழில் விளங்கு மறையோர்*
ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெருங் குணத்தோர்*
அன்று உலகம் படைத்தவனை அனையவர்கள் நாங்கூர்*
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|
003. திவ்ய ப்ரபந்தம் - 1240 - கம்சனைக் கொன்றவன் கோயில் இது
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - பத்தாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
உம்பரும் இவ் ஏழ் உலகும் ஏழ் கடலும் எல்லாம்*
உண்ட பிரான் அண்டர்கள் முன் கண்டு மகிழ்வு எய்த*
கும்பம் மிகு மத யானை மருப்பு ஒசித்து*
கஞ்சன் குஞ்சி பிடித்து அடித்த பிரான் கோயில்*
மருங்கு எங்கும் பைம் பொனொடு வெண் முத்தம் பல புன்னை காட்ட*
பலங்கனிகள் தேன் காட்ட பட அரவு ஏர் அல்குல்*
அம்பு அனைய கண் மடவார் மகிழ்வு எய்தும் நாங்கூர்*
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|
004. திவ்ய ப்ரபந்தம் - 1241 - இரணியனைப் பிளந்தவன் வாழும் இடம் இது
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - பத்தாம் திருமொழி - நான்காம் பாசுரம்
ஓடாத ஆள் அரியின் உருவம் அது கொண்டு*
அன்று உலப்பில் மிகு பெரு வரத்த இரணியனைப் பற்றி*
வாடாத வள் உகிரால் பிளந்து அவன் தன் மகனுக்கு*
அருள்செய்தான் வாழும் இடம் மல்லிகை செங்கழுநீர்*
சேடு ஏறு மலர்ச் செருந்தி செழுங் கமுகம் பாளை*
செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலின் ஊடே*
ஆடு ஏறு வயல் ஆலைப் புகை கமழும் நாங்கூர்*
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|
005. திவ்ய ப்ரபந்தம் - 1242 - உலகளந்தவன் கோயில் அரிமேய விண்ணகரம்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - பத்தாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
கண்டவர் தம் மனம் மகிழ மாவலி தன் வேள்விக்*
களவு இல் மிகு சிறு குறள் ஆய் மூவடி என்று இரந்திட்டு*
அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் எல்லாம்*
அளந்த பிரான் அமரும் இடம் வளங் கொள் பொழில் அயலே*
அண்டம் உறு முழவு ஒலியும் வண்டு இனங்கள் ஒலியும்*
அரு மறையின் ஒலியும் மடவார் சிலம்பின் ஒலியும்*
அண்டம் உறும் அலை கடலின் ஒலி திகழும் நாங்கூர்*
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|
006. திவ்ய ப்ரபந்தம் - 1243 - தயரதன் மகன் தங்கும் இடம் அரிமேய விண்ணகரம்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - பத்தாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
வாள் நெடுங் கண் மலர்க் கூந்தல் மைதிலிக்கா*
இலங்கை மன்னன் முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிர*
தாள் நெடுந் திண் சிலை வளைத்த தயரதன் சேய்*
என் தன் தனிச் சரண் வானவர்க்கு அரசு கருதும் இடம் தடம் ஆர்*
சேண் இடம் கொள் மலர்க் கமலம் சேல் கயல்கள் வாளை*
செந்நெலொடும் அடுத்து அரிய உதிர்ந்த செழு முத்தம்*
வாள் நெடுங் கண் கடைசியர்கள் வாரும் அணி நாங்கூர்*
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|
007. திவ்ய ப்ரபந்தம் - 1244 - காமனைப் பயந்த காளையின் கோயில் இது தான்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - பத்தாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும்*
தேனுகனும் பூதனை தன் ஆர் உயிரும் செகுத்தான்*
காமனைத்தான் பயந்த கரு மேனி உடை அம்மான்*
கருதும் இடம் பொருது புனல் துறை துறை முத்து உந்தி*
நா மனத்தால் மந்திரங்கள் நால் வேதம்*
ஐந்து வேள்வியோடு ஆறு அங்கம் நவின்று கலை பயின்று*
அங்கு ஆம் மனத்து மறையவர்கள் பயிலும் அணி நாங்கூர்*
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|
008. திவ்ய ப்ரபந்தம் - 1245 - குடமாடு கூத்தனின் இடம் அரிமேய விண்ணகரம்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - பத்தாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
கன்று அதனால் விளவு எறிந்து கனி உதிர்த்த காளை*
காமரு சீர் முகில் வண்ணன் காலிகள் முன் காப்பான்*
குன்று அதனால் மழை தடுத்து குடம் ஆடு கூத்தன்*
குலவும் இடம் கொடி மதிள்கள் மாளிகை கோபுரங்கள்*
துன்று மணி மண்டபங்கள் சாலைகள்* தூ மறையோர்
தொக்கு ஈண்டித் தொழுதியொடு மிகப் பயிலும் சோலை*
அன்று அலர்வாய் மது உண்டு அங்கு அளி முரலும் நாங்கூர்*
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|
009. திவ்ய ப்ரபந்தம் - 1246 - அரி சரணம் என்று வணங்கும் இடம் இது
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - பத்தாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
வஞ்சனையால் வந்தவள் தன் உயிர் உண்டு*
வாய்த்த தயிர் உண்டு வெண்ணெய் அமுது உண்டு*
வலி மிக்க கஞ்சன் உயிர் அது உண்டு இவ் உலகு உண்ட காளை*
கருதும் இடம் காவிரி சந்து அகில் கனகம் உந்தி*
மஞ்சு உலவு பொழிலூடும் வயலூடும் வந்து*
வளம் கொடுப்ப மா மறையோர் மா மலர்கள் தூவி*
அஞ்சலித்து அங்கு அரி சரண் என்று இறைஞ்சும் அணி நாங்கூர்*
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|
010. திவ்ய ப்ரபந்தம் - 1247 - இவை படிப்போர் தேவராவர்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - பத்தாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
சென்று சின விடை ஏழும் பட அடர்ந்து*
பின்னை செவ்வித் தோள் புணர்ந்து உகந்த திருமால் தன் கோயில்*
அன்று அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர்*
அரிமேயவிண்ணகரம் அமர்ந்த செழுங் குன்றை*
கன்றி நெடு வேல் வலவன் மங்கையர் தம் கோமான்*
கலிகன்றி ஒலி மாலை ஐந்தினொடு மூன்றும்*
ஒன்றினொடும் ஒன்றும் இவை கற்று வல்லார்*
உலகத்து உத்தமர்கட்கு உத்தமர் ஆய் உம்பரும் ஆவர்களே|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்