||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
026. திருஇந்தளூர் (மாயவரம்)
இருபத்தி ஆறாவது திவ்ய க்ஷேத்ரம்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 11
திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1328 - திரு இந்தளூர்ப் பெருமானே! எம்மைக் காப்பாற்று
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஒண்பதாம் திருமொழி - முதலாம் பாசுரம்
நும்மைத் தொழுதோம்* நும் தம் பணிசெய்து இருக்கும் நும் அடியோம்*
இம்மைக்கு இன்பம் பெற்றோம்* எந்தாய் இந்தளூரீரே*
எம்மைக் கடிதாக் கருமம் அருளி* ஆ ஆ என்று இரங்கி*
நம்மை ஒருகால் காட்டி நடந்தால்* நாங்கள் உய்யோமே?
002. திவ்ய ப்ரபந்தம் - 1329 - இந்தளூராய்! இரக்கம் காட்டு
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஒண்பதாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே*
மருவினிய மைந்தா* அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே*
நந்தா விளக்கின் சுடரே* நறையூர் நின்ற நம்பீ*
என் எந்தாய் இந்தளூராய்* அடியேற்கு இறையும் இரங்காயே|
003. திவ்ய ப்ரபந்தம் - 1330 - அயலார் ஏசுகின்றனர்: அருள் செய்வாய்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஒண்பதாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
பேசுகின்றது இதுவே* வையம் ஈர் அடியால் அளந்த*
மூசி வண்டு முரலும்* கண்ணி முடியீர்!*
உம்மைக் காணும் ஆசை என்னும் கடலில் வீழ்ந்து* இங்கு அயர்த்தோம்*
அயலாரும் ஏசுகின்றது இதுவே காணும்* இந்தளூரீரே|
004. திவ்ய ப்ரபந்தம் - 1331 - எம்பெருமானே! நீரே வாழ்ந்து போம்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஒண்பதாம் திருமொழி - நான்காம் பாசுரம்
ஆசை வழுவாது ஏத்தும்* எமக்கு இங்கு இழுக்காய்த்து*
அடியோர்க்கு தேசம் அறிய* உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு*
காசின் ஒளியில் திகழும் வண்ணம்* காட்டீர் எம் பெருமான்*
வாசி வல்லீர் இந்தளூரீர்!* வாழ்ந்தே போம் நீரே|
005. திவ்ய ப்ரபந்தம் - 1332 - எங்களுக்கு நீரே பெருமான்!
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
தீ எம் பெருமான் நீர் எம் பெருமான்* திசையும் இரு நிலனும் ஆய்*
எம் பெருமான் ஆகி நின்றால்* அடியோம் காணோமால்*
தாய் எம் பெருமான்* தந்தை தந்தை ஆவீர்*
அடியோமுக்கே எம் பெருமான் அல்லீரோ நீர்?* இந்தளூரீரே|
006. திவ்ய ப்ரபந்தம் - 1333 - எல்லோரையும் போல் என்னையும் நினையாதீர்!
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
சொல்லாது ஒழியகில்லேன்* அறிந்த சொல்லில்* நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க* எண்ணியிருந்தீர் அடியேனை*
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர்* நமக்கு இவ் உலகத்தில்*
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர்* இந்தளூரீரே|
007. திவ்ய ப்ரபந்தம் - 1334 - பெருமானே! நாங்கள் உன் தொண்டர்கள்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள* எம்மைப் பணி அறியா வீட்டீர்*
இதனை வேறே சொன்னோம்* இந்தளூரீரே*
காட்டீர் ஆனீர்* நும் தம் அடிக்கள் காட்டில்*
உமக்கு இந்த நாட்டே வந்து தொண்டர் ஆன* நாங்கள் உய்யோமே?
008. திவ்ய ப்ரபந்தம் - 1335 - தங்கள் வண்ணத்தைக் காட்டக் கூடாதா?
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஒண்பதாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
முன்னை வண்ணம் பாலின் வண்ணம்* முழுதும் நிலை நின்ற*
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம்* வண்ணம் எண்ணுங்கால்*
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம்* புரையும் திருமேனி*
இன்ன வண்ணம் என்று காட்டீர்* இந்தளூரீரே|
009. திவ்ய ப்ரபந்தம் - 1336 - எந்தையே! திருமேனி வண்ணத்தைக் காட்டுங்கள்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
எந்தை தந்தை தம்மான் என்று என்று* எமர் ஏழ் அளவும்*
வந்து நின்ற தொண்டரோர்க்கே* வாசி வல்லீரால்*
சிந்தை தன்னுள் முந்தி நிற்றிர்* சிறிதும் திருமேனி*
இந்த வண்ணம் என்று காட்டீர்* இந்தளூரீரே|
010. திவ்ய ப்ரபந்தம் - 1337 - அமரர்க்கும் அமரராவர்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஒண்பதாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
ஏர் ஆர் பொழில் சூழ்* இந்தளூரில் எந்தை பெருமானை*
கார் ஆர் புறவின் மங்கை வேந்தன்* கலியன் ஒலி செய்த*
சீர் ஆர் இன் சொல் மாலை* கற்றுத் திரிவார் உலகத்தில்*
ஆர் ஆர் அவரே* அமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே|
011. திவ்ய ப்ரபந்தம் - 2779 - மண்ணுலகில் மாயவன் தரும் காட்சிகள்
பெரிய திருமடல் - ஏழாம் திருமொழி - ஏழாம் பாசுரம் (67)
கோட்டியூர் அன்ன உருவின் அரியை*
திருமெய்யத்து இன் அமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை*
மன்னு மதிள் கச்சி வேளுக்கை ஆள் அரியை*
மன்னிய பாடகத்து எம் மைந்தனை*
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்