About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 15 October 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 61

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 31

அம்ருதாம் ஸூ²த்³ப⁴வோ பா⁴நு: 
ஸ²ஸ²பி³ந்து³: ஸுரேஸ்²வர:|
ஒளஷத⁴ம் ஜக³த: ஸேது: 
ஸத்ய த⁴ர்ம பராக்ரம:||

  • 284. அம்ருதாம் ஸூ²த்³ப⁴வோ - அமுத மயமான கிரணங்களுடன் சந்திரனுக்குப் பிறப்பிடமாக உள்ளவன்.
  • 285. பா⁴நுஸ்² - சூரியன்.
  • 286. ஸ²ஸ²பி³ந்து³ஸ் - தீயவர்களை அழிப்பவன்.
  • 287. ஸுரேஸ்²வரஹ - இமையோர் தலைவன்.
  • 288. ஒளஷத⁴ம் - மருந்தாயிருப்பவன்.
  • 289. ஜக³தஸ் ஸேது: - அணையாயிருப்பவன்.
  • 290. ஸத்ய த⁴ர்ம பராக்ரமஹ - கல்யாண குணங்களும், பராக்ரமும் என்றும் கொண்டிருப்பவன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.46

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் - 1.46 

யதி³ மாம ப்ரதீ காரம்
அஸ²ஸ் த்ரம் ஸ²ஸ்த்ர பாணய:|
தா⁴ர்தராஷ்ட்ரா ரணே ஹந்யு
தந்மே க்ஷேம தரம் ப⁴வேத்|| 

  • யதி³ - இருப்பினும் 
  • மாம் - என்னிடம் 
  • அப்ரதீ காரம் - எதிர்த்து போரிடாமல் 
  • அஸ²ஸ் த்ரம் - ஆயுதம் இன்றி 
  • ஸ²ஸ்த்ர பாணயஹ - ஆயுதம் தாங்கிய
  • தா⁴ர்தராஷ்ட்ரா - திருதராஷ்டிரரின் மகன்கள் 
  • ரணே - போர்க் களத்தில் 
  • ஹந்யு - கொன்று விடினும்
  • தத்-அது 
  • மே - எனக்கு 
  • க்ஷேம தரம் - அதிக நன்மை பயப்பதாக 
  • ப⁴வேத் - ஆகி விடும்

எதிர்க்காமலும் ஆயுதமில்லாமலும் இருக்கின்ற என்னை, கையில் ஆயுதம் உடைய திருதராஷ்டிரரின் மகன்கள் போரில் கொல்வார்களேயானால் கூட அது எனக்கு மிகுந்த நன்மை செய்வதே ஆகும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.2.30

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா: 
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம் 
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்|| 
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||

ஸ்லோகம் - 1.2.30

ஸ ஏவேத³ம் ஸஸர் ஜாக்³ரே 
ப⁴க³வாந் ஆத்ம மாயயா|
ஸத³ ஸத்³ ரூபயா சாஸௌ 
கு³ணமய்யா கு³ணோ விபு:||

  • விபுஹு - விச்வ வியாபியானவரும்
  • ப⁴க³வாந் - இறைவனாகவும் உள்ள
  • ஸ அஸௌ ச ஏவ - அந்த வாஸுதேவனே
  • அ கு³ண - தான் நிர்குண ஸ்வரூபியாக இருந்த போதிலும்
  • ஸத³ ஸத்³ ரூபயா - கார்ய காரண ரூபமான
  • கு³ணோ மய்யா - மூன்று குணமயமான
  • ஆத்ம மாயயா - தனது மாயையால்
  • அக்³ரே இத³ம் - முதலில் இந்த உலகத்தை
  • ஸஸர்ஜ - ஸ்ருஷ்டி செய்தார்

எங்கும் பரவி நிறைந்து விளங்கும் பகவானான வாஸுதேவன், முக்குணங்களுக்கு ஆட்படாதவராக தனித்து இருந்த போதிலும், முக்குண வடிவமானதும், காரிய காரண வடிவானதுமான தன்னுடைய மாயையினால் முதலில் இவ்வுலகத்தைப் படைத்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - த்யான ஸ்லோகம் 9

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்⁴யான மங்க³ல ஸ²லோகா꞉ 9
ஶ்ரீ வால்மீகி நமஸ்க்ரியா:

ஸ்²லோக ஸார ஸமா கீர்ணம் 
ஸர்க³ கல்லோல ஸங்குலம்| 
காண்ட³ க்³ராஹ மஹாமீனம் 
வந்தே³ ராமாய ணார்ணவம்||

  • ஸ்²லோக ஸார ஸமா கீர்ணம் - ஸ்லோகங்களாகிற ஸாரம் நிரம்பியதும் ( ஸாரம் என்றால் உப்பு என்றும் பொருள்)
  • ஸர்க³ கல்லோல ஸங்குலம் - ஸர்கங்களாகிற அலைகளுடன் கூடியதும்
  • காண்ட³ க்³ரஹ மஹாமீனம் - காண்டங்கள் என்கிற முதலைகள் சுறா மீன்கள் இவற்றோடு கூடியதும் ஆன
  • ராமாயணார்ணவம் - ராமாயணம் என்னும் கடலை
  • வந்தே³ - வணங்குகிறேன்

ஸ்லோகங்களாகிற ஸாரம் நிரம்பியதும், ஸர்கங்களாகிற அலைகளுடன் கூடியதும், காண்டங்கள் என்கிற முதலைகள் சுறா மீன்கள் இவற்றோடு கூடியதும் ஆன ராமாயணம் என்னும் கடலை வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 44 - பெரியாழ்வார் திருமொழி - 1.3.1

ஸ்ரீ:
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் – 44 - பிரமன் அளித்த தொட்டில்
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - மூன்றாம் திருமொழி - முதலாம் பாசுரம்

மாணிக்கம் கட்டி* 
வயிரம் இடைக்கட்டி* 
ஆணிப் பொன்னால் செய்த* 
வண்ணச் சிறுத் தொட்டில்*
பேணி உனக்குப்* 
பிரமன் விடு தந்தான்* 
மாணிக் குறளனே தாலேலோ* 
வையம் அளந்தானே தாலேலோ| (2)

  • மாணிக்கம் - மாணிக்கத்தை 
  • கட்டி - பதித்து
  • இடை - நடுவில்
  • வயிரம் - வயிரத்தை
  • கட்டி - பொருத்தியும்
  • ஆணிப் பொன்னால் - தூய தங்கத்தால்
  • செய்த - செய்யப்பட்ட
  • வண்ணம் - அழகிய 
  • சிறு தொட்டில் - சிறிய தொட்டிலை
  • பிரமன் - சதுர்முகனானவன் (பிரம்மா)
  • பேணி - ஆசையுடன்
  • உனக்கு - உனக்கு
  • விடுதந்தான் - அனுப்பி வைத்தான் 
  • மாணி குறளனே - மிகச் சிறு உருவமெடுத்த வாமனனே
  • தாலேலோ! - கண்ணுறங்கு! 
  • வையம் - உலகங்களை 
  • அளந்தானே - த்ரிவிக்ரமனாய் அளந்தவனே! 
  • தாலேலோ! - கண்ணுறங்கு! 

கண்ணன் எம்பெருமானுக்கு சதுர்முகனான பிரம்மா ஆசையோடு ஒரு மிகச்சிறந்த தங்கத் தொட்டிலை ஸமர்ப்பிக்கிறான். மாணிக்கக் கற்களை வரிசையாகக் கோர்த்து, அதற்கு நடுவில் வைரக்கல்லைப் பதித்து, சுத்தமான தங்கத்தால் செய்த வண்ணச் சிறுத் தொட்டிலை மிகவும் ரசனையோடு செய்து, பாதுகாப்பாக கட்டப்பட்டிருந்ததாம். வாமனனாக குள்ள உருவம் தரித்து சிறுவனாக வந்தவனே! பின் திரிவிக்கிரம அவதாரம் எடுத்தவனே! நீ கண்ணுறங்கு, உலங்கங்களை தன் திருவடியால் அளந்தவனே! உனக்குத் தாலேலோ! உலகம் அனைத்தையும் உன் திருவடிகளால் அளந்தாய்! உனக்குத் தாலேலோ! நீ கண்ணுறங்கு என்று கண்ணனை தொட்டிலில் இட்டுத் தாலாட்டு பாடுகிறாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 013 - திருவிண்ணகரம் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

013. திருவிண்ணகரம் 
மார்க்கண்டேய க்ஷேத்ரம் – கும்பகோணம்
பதிமூன்றாவது திவ்ய க்ஷேத்ரம்

திருவிண்ணகரம்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 47 - 1

திருமங்கையாழ்வார்

001. திவ்ய ப்ரபந்தம் - 1448 - மனை வாழ்க்கை வேண்டாம்; நின்னருள் தா
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - முதலாம் திருமொழி - முதலாம் பாசுரம்
வண்டு உணும் நறு மலர் இண்டை கொண்டு* பண்டை நம் வினை கெட என்று* 
அடிமேல் தொண்டரும் அமரரும் பணிய நின்று* 
அங்கு அண்டமொடு அகல் இடம் அளந்தவனே*
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனை வாழ்க்கையை* விண்ணகர் மேயவனே| 

002.  திவ்ய ப்ரபந்தம் - 1449 - திருமகள் கணவனே! திருவருள் தா
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - முதலாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
அண்ணல் செய்து அலை கடல் கடைந்து*
 அதனுள் கண்ணுதல் நஞ்சு உண்ணக்கண்டவனே*
விண்ணவர் அமுது உண அமுதில் வரும்* 
பெண் அமுது உண்ட எம் பெருமானே*
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனை வாழ்க்கையை* விண்ணகர் மேயவனே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1450 - நீல மேனியனே! நின்னைக் காண அருள் செய்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - முதலாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
குழல் நிற வண்ண நின் கூறு கொண்ட*
தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம் விழ* 
நனி மலை சிலை வளைவு செய்து* அங்கு அழல் நிற அம்பு அதுஆனவனே*
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனை வாழ்க்கையை* விண்ணகர் மேயவனே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1451 - ஆலிலையில் கண் வளர்ந்தவனே! அருள் செய்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - முதலாம் திருமொழி - நான்காம் பாசுரம்
நிலவொடு வெயில் நிலவு இரு சுடரும்* உலகமும் உயிர்களும் உண்டு ஒரு கால்*
கலை தரு குழவியின் உருவினை ஆய்* அலை கடல் ஆல் இலை வளர்ந்தவனே*
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனை வாழ்க்கையை* விண்ணகர் மேயவனே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1452 - திருவிண்ணகரானே! திருவருள் தா
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - முதலாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
பார் எழு கடல் எழு மலை எழும் ஆய்ச்* சீர் கெழும் இவ் உலகு ஏழும் எல்லாம்*
ஆர் கெழு வயிற்றினில் அடக்கி நின்று* அங்கு ஓர் எழுத்து ஓர் உரு ஆனவனே*
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனை வாழ்க்கையை* விண்ணகர் மேயவனே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1453 - நான்மறைப் பொருளே! நல்லருள் நல்கு
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - முதலாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
கார் கெழு கடல்களும் மலைகளும் ஆய்* ஏர் கெழும் உலகமும் ஆகி*
முதலார்களும் அறிவு அரும் நிலையினை ஆய்ச்* 
சீர் கெழு நான்மறை ஆனவனே* 
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனை வாழ்க்கையை* விண்ணகர் மேயவனே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1454 - வேத ஒலியானவனே! அருள் காட்டு
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - முதலாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
உருக்கு உறு நறு நெய் கொண்டு ஆர் அழலில்*
இருக்கு உறும் அந்தணர் சந்தியின் வாய்*
பெருக்கமொடு அமரர்கள் அமர நல்கும்* இருக்கினில் இன் இசை ஆனவனே* 
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனை வாழ்க்கையை* விண்ணகர் மேயவனே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1455 - பெண்ணாசை விடுத்தேன்; நின்னைக் காண அருள் செய்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - முதலாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
காதல் செய்து இளையவர் கலவி தரும்* 
வேதனை வினை அது வெருவுதல் ஆம்*
ஆதலின் உனது அடி அணுகுவன் நான்*
போது அலர் நெடுமுடிப் புண்ணியனே* 
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனை வாழ்க்கையை* விண்ணகர் மேயவனே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1456 - மும்மூர்த்தியானவனே; நின்னைக் காண வேண்டும்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - முதலாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
சாதலும் பிறத்தலும் என்று இவற்றை*
காதல் செய்யாது உன கழல் அடைந்தேன்*
ஓதல் செய் நான்மறை ஆகி* உம்பர் ஆதல் செய் மூவுரு ஆனவனே* 
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனை வாழ்க்கையை* விண்ணகர் மேயவனே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1457 - திருமால் திருவடி சேர்வர்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - முதலாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
பூ மரு பொழில் அணி* விண்ணகர் மேல்*
காமரு சீர்க்* கலிகன்றி சொன்ன*
பா மரு தமிழ் இவை* பாட வல்லார்*
வாமனன் அடி இணை* மருவுவரே|

011. திவ்ய ப்ரபந்தம் - 1458 - எல்லாவற்றையும் துறந்து நின்னை அடைந்தேன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - இரண்டாம் திருமொழி - முதலாம் பாசுரம்
பொறுத்தேன் புன்சொல் நெஞ்சில்*
பொருள் இன்பம் என இரண்டும் இறுத்தேன்* 
ஐம்புலன்கள் கடன் ஆயின* வாயில் ஒட்டி அறுத்தேன்*
ஆர்வச் செற்றம் அவை தம்மை* மனத்து அகற்றி வெறுத்தேன்* 
நின் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே|

012. திவ்ய ப்ரபந்தம் - 1459 - திருவிண்ணகரானே! நீயே சரணம்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - இரண்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
மறந்தேன் உன்னை முன்னம்* மறந்த மதி இல் மனத்தால்*
இறந்தேன் எத்தனையும்* அதனால் இடும்பைக் குழியில்*
பிறந்தே எய்த்து ஒழிந்தேன்* பெருமான் திரு மார்பா*
சிறந்தேன் நின் அடிக்கே* திருவிண்ணகர் மேயவனே|

013. திவ்ய ப்ரபந்தம் - 1460 - மனத்திருந்த தேனே! உன்னையே சரணடைந்தேன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - இரண்டாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
மான் ஏய் நோக்கியர் தம்* வயிற்றுக் குழியில் உழைக்கும்*
ஊன் ஏய் ஆக்கை தன்னை* உதவாமை உணர்ந்து உணர்ந்து*
வானே மா நிலமே* வந்து வந்து என் மனத்து இருந்த தேனே!* 
நின் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே|

014. திவ்ய ப்ரபந்தம் - 1461 - பந்த பாசங்களை அகற்றி உன்னைச் சேர்ந்தேன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - இரண்டாம் திருமொழி - நான்காம் பாசுரம்
பிரிந்தேன் பெற்ற மக்கள்* பெண்டிர் என்று இவர் பின் உதவாது அறிந்தேன்* 
நீ பணித்த அருள் என்னும்* ஒள் வாள் உருவி எறிந்தேன்* 
ஐம்புலன்கள் இடர் தீர* எறிந்து வந்து செறிந்தேன்* 
நின் அடிக்கே* திருவிண்ணகர் மேயவனே|

015. திவ்ய ப்ரபந்தம் - 1462 - எதுவும் நிலையாது; எனவே நின்னைச் சேர்ந்தேன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள்* பல்லாண்டு இசைப்ப*
ஆண்டார் வையம் எல்லாம்* அரசு ஆகி முன் ஆண்டவரே*
மாண்டார் என்று வந்தார்* அந்தோ மனை வாழ்க்கை தன்னை வேண்டேன்* 
நின் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே|

016. திவ்ய ப்ரபந்தம் - 1463 - மல்லர்களை அடர்த்தவனே! சரணம்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
கல்லா ஐம்புலன்கள் அவை* கண்டவாறு செய்யகில்லேன்*
மல்லா மல் அமருள் மல்லர் மாள* மல் அடர்த்த மல்லா*
மல்லல் அம் சீர்* மதிள் நீர் இலங்கை அழித்த வில்லா* 
நின் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே|

017. திவ்ய ப்ரபந்தம் - 1464 - திருவிண்ணகரானே! நீயே சரணம்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
வேறா யான் இரந்தேன்* வெகுளாது மனக்கொள் எந்தாய்*
ஆறா வெம் நரகத்து* அடியேனை இடக் கருதி* 
கூறா ஐவர் வந்து குமைக்கக்* குடி விட்டவரை*
தேறாது உன் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே|

018. திவ்ய ப்ரபந்தம் - 1465 - வானவர் தலைவா! யான் நின் அடைக்கலம்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - இரண்டாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
தீ வாய் வல் வினையார்* உடன் நின்று சிறந்தவர் போல்*
மேவா வெம் நரகத்து இட* உற்று விரைந்து வந்தார்* 
மூவா வானவர் தம் முதல்வா* மதி கோள் விடுத்த தேவா* 
நின் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே|

019. திவ்ய ப்ரபந்தம் - 1466 - பாண்டவர் தூதா! என்னை ஏற்றுக் கொள்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
போது ஆர் தாமரையாள்* புலவி குல வானவர் தம் கோதா* 
கோது இல் செங்கோல்* குடை மன்னர் இடை நடந்த தூதா*
தூ மொழியாய் சுடர் போல்* என் மனத்து இருந்த வேதா* 
நின் அடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே|

020. திவ்ய ப்ரபந்தம் - 1467 - தேவர் உலகு சேர்வர்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - இரண்டாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
தேன் ஆர் பூம் புறவில்* திருவிண்ணகர் மேயவனை*
வான் ஆரும் மதிள் சூழ்* வயல் மங்கையர் கோன் மருவார்* 
ஊன் ஆர் வேல் கலியன்* ஒலிசெய் தமிழ் மாலை வல்லார்*
கோன் ஆய் வானவர் தம்* கொடி மா நகர் கூடுவரே|

021. திவ்ய ப்ரபந்தம் - 1468 - திருவிண்ணகரானே! நின் ருவத்தை மறவேன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருமொழி - முதலாம் பாசுரம்
துறப்பேன் அல்லேன்* இன்பம் துறவாது* 
நின் உருவம் மறப்பேன் அல்லேன்* என்றும் மறவாது*
யான் உலகில் பிறப்பேன் ஆக எண்ணேன்* பிறவாமை பெற்றது* 
நின் திறத்தேன் ஆதன்மையால்* திருவிண்ணகரானே|

022. திவ்ய ப்ரபந்தம் - 1469 - திருமாலே! நான் உனக்கு அடிமை
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
துறந்தேன் ஆர்வச் செற்றச்* சுற்றம் துறந்தமையால்*
சிறந்தேன் நின் அடிக்கே* அடிமை திருமாலே* 
அறம் தான் ஆய்த் திரிவாய்* உன்னை என் மனத்து அகத்தே*
திறம்பாமல் கொண்டேன்* திருவிண்ணகரானே|

023. திவ்ய ப்ரபந்தம் - 1470 - திருநறையூர்த் தேனே! நின்னை அடைந்தேன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
மான் ஏய் நோக்கு நல்லார்* மதிபோல் முகத்து உலவும்*
ஊன் ஏய் கண் வாளிக்கு* உடைந்து ஓட்டந்து உன் அடைந்தேன்* 
கோனே குறுங்குடியுள் குழகா* திருநறையூர்த் தேனே* 
வரு புனல் சூழ்* திருவிண்ணகரானே|

024. திவ்ய ப்ரபந்தம் - 1471 - உன்னைச் சேர்ந்து என் தீவினைகளைப் போக்கினேன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருமொழி - நான்காம் பாசுரம்
சாந்து ஏந்து மென் முலையார்* 
தடந் தோள் புணர் இன்ப வெள்ளத்து ஆழ்ந்தேன்* 
அரு நரகத்து அழுந்தும்* பயன் படைத்தேன்* 
போந்தேன் புண்ணியனே* உன்னை எய்தி என் தீவினைகள் தீர்ந்தேன்* 
நின் அடைந்தேன்* திருவிண்ணகரானே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

லீலை கண்ணன் கதைகள் - 52

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

யானை குவளைய பிதாவின் வதம்|

கிருஷ்ணனும் பலராமனும், காலையில் எழுந்ததும் ஸ்நானம் செய்துவிட்டு அமர்ந்திருந்தனர். அப்பொழுது தண்டோரா போடும் சத்தம் இவர்கள் செவியில் விழுந்தது, போட்டி ஆரம்பிக்க போகிறது என்று எண்ணி, அவ்விடத்துக்கு விரைந்தனர். நுழைவு வாசலில், குவளையபிதா என்ற ஓர் யானை நின்றுகொண்டு இருந்தது. யானை பாகன் அவர் இருவரையும் உள்ளே அனுமதிக்காமல் தடுத்தான், கிருஷ்ணன் பாகனை பார்த்து "ஏ யானை பாகா, எங்களது வழியை மறைக்காதே, நாங்கள் உள்ளே செல்லவேண்டும், எங்களை நீ மறைத்தால், உன்னையும் உனது யானையையும் கொல்லுவேன்" என்று எச்சரித்தார்.


இதற்கு பாகன் பதிலடி கொடுக்க நினைத்து, யானையின் கோபத்தை தூண்டினான், அது கிருஷ்ணனை தாக்க ஆரம்பித்தது. கிருஷ்ணனை யானை அதன் துதிக்கையால் தூக்க முயற்சித்தது, ஆனால் கிருஷ்ணர் அதன் பிடியில் இருந்து தப்பித்துவிட்டார். யானையின் நெற்றியில் பலத்த அடியை கொடுத்து, அதன் கால்களுக்கு நடுவில் சென்று ஒளிந்து கொண்டார். யானையின் கோபம் அதிகமானது, ஆனால் அதனால் கிருஷ்ணனை கண்டுபிடிக்க முடியவில்லை.


கிருஷ்ணர் வெளியே வந்ததும், துதிக்கை வைத்து மறுபடியும் அவரை தூக்கியது, கிருஷ்ணர் மீண்டும் அதன் பிடியில் இருந்து தப்பித்தார். இந்த முறை யானையின் பின் புறம் சென்று, அதன் வாலினை பிடித்துக்கொண்டார். வாலை பிடித்து இழுத்து, ஒரு இருபது மையில் தூரம் தூக்கியடித்தார். அவர் சிறு வயதில் கோகுலத்தில் கன்றுகளுடன் விளையாடியது போல தோன்றியது. யானை திரும்ப அவர் புறமாக ஓடி தாக்க வந்தது, அதன் வாலை எதிர்ப்புறமாக இழுத்து, சுழற்றினார் கிருஷ்ணர்.

பிறகு அதன் முகத்தில் கனமான அடியை கொடுத்து விட்டு, முன்னே ஓடினார், அவரை யானை துரத்த ஆரம்பித்தது, ஆனால் அதனால் அவரை தொடக்கூட முடியவில்லை. அவரை பிடிக்க முடியாததால், மதம் பிடித்தது போல இருந்தது. யானை இவ்வளவு அடிவாங்கியதை பார்த்தும், பாகன் திருந்தாமல் யானையை ஏவினான். இந்த விளையாட்டை முடிக்க நேரம் வந்துவிட்டதாக கிருஷ்ணன் எண்ணினான். யானையின் துதிக்கையை பிடித்து இழுத்து கவிழ்த்தார், அதன் தந்தங்களை பிடுங்கி, யானையையும் பாகனையும் கொன்றார். இந்த தந்தத்தை ஆயுதமாக கொண்டு, பலராமரும் கிருஷ்ணரும் மல்யுத்த அரங்கில் களம் இறங்கினர்.

தூரத்தில் இருந்து கொண்டு வீரர்கள் இதனை பார்த்துகொண்டு இருந்தனர், இதனை பார்த்த வீரர்கள் மனதில் பயம் வர ஆரம்பித்தது. கிருஷ்ணனின் வலிமையை பார்த்ததும் கம்சனே பயமுற்றான். ஆனால் சுற்றி இருந்த மக்கள் கிருஷ்ணரை பார்த்து உடல் சிலிர்த்தனர், இருவரின் அழகும், பெரிய கண்களும் மக்களை ஈர்த்தது. இருவரின் வீரத்தை பற்றி தெரிந்தவர்கள், மற்றவரிடம் இருவரை பற்றியும் புகழ ஆரம்பித்தனர், “கிருஷ்ணரும் பலராமரும் நாராயணின் ஒரு அங்கம் என்றும், கிருஷ்ணரின் உண்மையான தந்தை வசுதேவர்” என்றும் உரையாடிக்கொண்டு இருந்தனர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - ஐம்பத்தி எட்டாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

058 நில் என்று பெற்றேனோ இடையற்றூர்குடி நம்பியைப் போலே|

இடையாற்றூர் நம்பி, ஸ்ரீ ரங்கம் அருகில் உள்ள இடையாற்றூக்குடி என்னும் ஊரில் வசித்து வந்த தீவிர நம்பெருமாள் பக்தர். ஸ்ரீ ரங்கத்தில் ஆண்டிற்கு நான்கு முறை பிரம்மோற்சவம் நடக்கும். ஆண்டு முழுவதும் ஸ்ரீ ரங்கத்தில் நம்பெருமாளுக்கு புறப்பாடும் உற்சவமும் நடக்கும் என்றாலும், பிரம்மோற்சவத்தின் போது ஸ்ரீ ரங்கமே அழகு கோலம் கொண்டிருக்க, நம்பெருமாள் அழகில் மயங்க அனைவரும் கூடுவர். இடையாற்றூர் நம்பியும் இதற்கு விதிவிலக்கல்ல. பிரம்மோற்சவத்தின் போது, இடையாற்றூர் நம்பி முதல் நாளே ஸ்ரீ ரங்கம் வந்துவிடுவார்.


கொடியேற்றம் முதல் அனைத்து புறப்பாடுகளிலும் கலந்து கொண்டு, ஒன்று விடாமல் சேவிப்பார். பிரம்மோற்சவம் முடிந்த பின், வீடு திரும்பினாலும், அனுதினமும் நம்பெருமாளின் அழகை எண்ணியபடியும், அடுத்த பிரம்மோற்சவம் பற்றிய ஏக்கத்துடனும் நாட்களைக் கடத்துவார். ஒரு பிரம்மோற்சவம் விடாது, ஆண்டுதோறும் நான்கு பிரம்மோற்சவத்தின் போதும் ஸ்ரீ ரங்கம் சென்று நம்பெருமாளை சேவித்து வருவார்.

ஆண்டுகள் சென்றன. முதுமை ஆட்கொண்ட காரணத்தால், ஒரு முறை இடையாற்றூர் நம்பியால் பிரம்மோற்சவத்தின் முதல் நாள் அன்று ஸ்ரீ ரங்கம் செல்ல முடியவில்லை. முதுமையினால் அவதி கொண்டாலும், ஸ்ரீரங்கம் புறப்பட்டு, ஆறாம் நாளே கோவிலினை அடைந்தார். இந்நிலையில், முதல் நாள் முதல் இடையாற்றூர் நம்பியைக் காணாது நம்பெருமாள் தவித்துப் போனார். ஆறாம் நாள், தூணைப் பற்றிக் கொண்டு இடையாற்றூர் நம்பி நிற்பதைக் கண்டு பேரானந்தம் கொண்ட நம்பெருமாள், அவரிடம், “உன் வரவால் மனமகிழ்ந்தேன். முதல்நாளே வரும் நீ ஏன் இம்முறை ஆறாம் நாள் வந்தாய்?"என வினவினார்.


அதற்கு இடையாற்றூர் நம்பி, “நம்பெருமாளே! எம்பெருமானே! உன் தயவினால், இத்தனை ஆண்டுகள் உன் அழகை சேவிக்கும் பாக்கியம் கொண்டேன். முதுமை காரணமாக இவ்வுடல் பயணத்திற்கு ஒத்துழைக்கவில்லை. இதுவே கடைசியோ என்று மனம் பதறுகிறது.”, என்றார், இருகரம் கூப்பி.

நம்பெருமாள், உடனே, “என்றால், இனி, இங்கேயே நில்லும். அனுதினமும் எம்மை சேவித்துக் கொண்டு இரும்.”, என்று கூறி செல்ல, நம்பெருமாள் உற்சவம் முடியும் வேளை, இடையாற்றூர் நம்பியின் உடல் பிரிந்து உயிர் செல்ல, மோக்க்ஷம் அடைந்தார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, " இடையாற்றூர் நம்பி போல் அனுதினமும் நம்பெருமாளை எண்ணினேனோ, இல்லை, இடையாற்றூர் நம்பி போல், நம்பெருமாளால், “இங்கேயே எம்முடன் நில்”, என்று அன்புடன் தான் கூறப்பெற்றேனோ? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவத புராணம் - 5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

எங்கே கங்கை?

ஸ்கந்தம் 01

ஒரு மரத்தின் பயன் என்பது அதன் இலை, பட்டைகள், பூ, காய்கள், நிழல், என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் பழமே அதன் உண்மையான பலனாகும்.


வேதம் ஒரு கற்பக மரம். அதனால் அநேக ப்ரயோஜனங்கள் உண்டு. ஆனால், அதன் ஸாரமாகப் பழுத்த பழம் தான் ஸ்ரீமத் பாகவதம். அது நன்கு பழுத்து அதன் நறுமணத்தினால் ஈர்க்கப்பட்டு அதை எடுத்துக் கொள்ள ஸ்ரீ சுகாசார்யர் தேடி வந்ததினாலேயே அவர் கிளி முகம் உடையவராக உருவகப்படுத்தப் படுகிறார். மேலும், கிளியானது சொல்லிக் கொடுப்பதை மிகைப்படுத்தாமலும், அதே சமயம் குறைக்காமலும் திருப்பிச் சொல்லும் இயல்புடையது. வியாஸர் சொல்லிக் கொடுத்ததை அப்படியே திருப்பிச் சொல்கிறார் என்பதனாலும் அவர் கிளி முகம் கொண்டவராகச் சித்தரிக்கப் படுகிறார்.

ஸ்ரீமத் பாகவதத்தின் மாஹாத்மியத்தில் அதன் பெருமையை விளக்கும் வண்ணம் அநேக கதைகள் சொல்லப்படுகின்றன.

ஆத்ம தேவன் என்ற மஹாத்மாவின் கதை, பக்தி தேவியின் கதை மேலும் பாகவத புராணத்தைப் பூஜை செய்த ஒருவரின் கதை ஆகியவை மிகவும் ப்ரஸித்தம். ஒவ்வொன்றையும் சுருக்கமாகப் பார்க்கலாம்.

தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒருவர் கங்கா ஸ்நானம் செய்வதற்காக காசிக்கு பாத யாத்திரையாகச் சென்று கொண்டு இருந்தார். அக்காலத்தில் போக்குவரத்து வசதிகள் கிடையாது. காசிக்குச் செல்ல பல மாதங்கள் பிடிக்கும். நடந்தோ, அல்லது மாட்டு வண்டியோ கட்டிக் கொண்டு போவார்கள். பாரத தேசத்தில் ஹோட்டல்கள் என்பதே கிடையாது. உணவை விற்பது பாவம் என்று கருதப்படும் தேசம். ஆங்காங்கு சத்திரங்களிலோ வீட்டுத் திண்ணைகளிலோ தங்கி இளைப்பாறிப் கொண்டு பயணத்தைத் தொடர வேண்டும். யாத்ரிகர்கள் தங்குவதற்காகவே வீட்டு வாசலில் திண்ணை வைத்துக் கட்டியிருப்பார்கள். இரவு உறங்கச் செல்லு முன் வாசலில் யாராவது வந்திருக்கிறார்களா என்று பார்த்து உணவிட்டு பின் கதவடைக்கும் காலம் ஒன்று இருந்தது.

தென்னாட்டிலிருந்து கிளம்பிய மனிதர், பல நாட்கள் நடந்து நடந்து காசிக்கு அருகில் சென்று விட்டார். இரவாகி விட்டதால், ஒரு வீட்டுத் திண்ணையில் தங்கினார். காலையில் அந்த வீட்டில் குடியிருந்தவர் வெளியில் வந்ததும், அவரைப் பார்த்துக் கேட்டார். 

"நான் தென்னாட்டில் இருந்து வரேன். காசிக்குப் போய் கங்கைல ஸ்நானம் பண்ணணும்னு ஆசை. கிட்ட வந்துட்டேன்னு தெரியறது. இங்கேர்ந்து கங்கை எவ்வளவு தூரம் இருக்கும்? எவ்வளவு நாள் ப்ரயாணம் நடந்தா காசி வரும்?"

அந்த மனிதர் பார்க்க மிகவும் ஸாதுவாய் இருந்தார். அவர் சொன்ன பதில் இவருக்கு மிகவும் அதிர்ச்சியை அளித்தது.
காசியாவது, கங்கையாவது, அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் எங்கேயும் போனதேயில்லை. பயணிக்குக் கோபம் வந்தது.

நமது ஸநாதன தர்மத்தில் ஜென்மாவில் ஒரு முறையாவது காசியில் போய் கங்கையில் ஸ்நானம் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. பாரத தேசத்தின் தென் கோடியில் இருந்து மிகவும் ஆசை ஆசையாக தவித்துக் கொண்டு எத்தனையோ பேர் கங்கா ஸ்நானத்திற்காக வருகிறோம். இவர் காசியின் அருகிலேயே இருந்து கொண்டு தெரியாது என்கிறாரே! காசி தெரியாதா, கங்கை தெரியாதா? உன் வீட்டுத் திண்ணையில் தங்கியதே மஹா பாபம். இப்படி ஆகிவிட்டதே. என்று கத்திக் கொண்டு பலவாறாக அவரைத் திட்டி விட்டுக் கிளம்பினார்.

கோபத்தில் விடுவிடுவென்று நடந்தவர் அன்று மாலையே புண்யமான வாரணாசி நகரத்தை அடைந்து விட்டார். கங்கை எங்கே என்று விசாரித்துக் கொண்டு கங்கைக் கரைக்கு வந்தார். கங்கையில் ஸ்நானம் செய்தால் தான் நேற்றிரவு அவர் வீட்டில் தங்கிய பாபம் போகும் என்று கருவிக் கொண்டு ஸ்நானம் செய்ய ஆயத்தமானார். ஆனால், கங்கைக் கரையில் பலரும் ஈரமாக எதிர்ப்பட்டனர். நிறைய பேர் ஸ்நானம் செய்து விட்டு அனுஷ்டானம் செய்து கொண்டிருந்தனர்.

ஆஹா, இவர்களைப் பார்ப்பதே புண்யம். ஈரத்தோடு எதிர்ப்பட்டவரைக் கேட்டார்.
"ஐயா, நீங்க எங்க குளிச்சிட்டு வரீங்க?" 
அவர்,  இவரை ஏற இறங்கப் பார்த்து விட்டு, "கங்கைல" 
"அப்படியா, ரொம்ப சந்தோஷம். எனக்கும் கங்கா ஸ்நானம் பண்ணணும்னு ஆசை. இதுக்காகவே தென்னாட்டில் இருந்து புறப்பட்டு பல மாசமா நடந்தே வந்தேன். கங்கை எங்கே இருக்கு?"

அவர், இவரை மீண்டும் ஏற இறங்கப் பார்த்தார்.
"என்னாச்சுங்க? கங்கைக் கரையிலேயே நின்னுண்டு கங்கை எங்கேன்னு கேக்கறீங்க? இதோ ப்ரவாஹமா ஓடறதே இதான் கங்கை. பார்த்து காலை வைங்க. தண்ணீர் வேகம் அதிகம்."

"இதோவா, எங்கே எனக்குத் தெரியலயே"
"கண்ணு தெரியாதா? இதோ பாருங்க நீங்க நிக்கற இடத்திலேர்ந்து ஒரு அடி நகர்ந்தா நதி தானே?"
சொரேலென்றது பயணிக்கு!

ப்ரவாஹமாக ஓடும் கங்கா மாதாவின் ஒரு துளி கூட அவர் கண்ணுக்குத் தெரியவில்லை! அதிர்ந்து போனார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்