About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 15 October 2023

ஸ்ரீமத் பாகவதம் - 1.2.30

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா: 
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம் 
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்|| 
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||

ஸ்லோகம் - 1.2.30

ஸ ஏவேத³ம் ஸஸர் ஜாக்³ரே 
ப⁴க³வாந் ஆத்ம மாயயா|
ஸத³ ஸத்³ ரூபயா சாஸௌ 
கு³ணமய்யா கு³ணோ விபு:||

  • விபுஹு - விச்வ வியாபியானவரும்
  • ப⁴க³வாந் - இறைவனாகவும் உள்ள
  • ஸ அஸௌ ச ஏவ - அந்த வாஸுதேவனே
  • அ கு³ண - தான் நிர்குண ஸ்வரூபியாக இருந்த போதிலும்
  • ஸத³ ஸத்³ ரூபயா - கார்ய காரண ரூபமான
  • கு³ணோ மய்யா - மூன்று குணமயமான
  • ஆத்ம மாயயா - தனது மாயையால்
  • அக்³ரே இத³ம் - முதலில் இந்த உலகத்தை
  • ஸஸர்ஜ - ஸ்ருஷ்டி செய்தார்

எங்கும் பரவி நிறைந்து விளங்கும் பகவானான வாஸுதேவன், முக்குணங்களுக்கு ஆட்படாதவராக தனித்து இருந்த போதிலும், முக்குண வடிவமானதும், காரிய காரண வடிவானதுமான தன்னுடைய மாயையினால் முதலில் இவ்வுலகத்தைப் படைத்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment