About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 1 August 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 143

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||உத்தர பீடி²கா||
உத்தர பாகம்
பலஸ்²ருதி

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 5

ப⁴க்திமாந் ய: ஸதோ³த்தா²ய 
ஸு²சி  ஸ்தத்³க³த மாநஸ꞉|
ஸஹஸ்ரம் வாஸுதே³வஸ்ய 
நாம்நா மேதத் ப்ரகீர்தயேத்||


ய: - யஸ்
மாநஸ꞉ - மாநஸஹ

எந்த மனிதன் நாள்தோறும் காலையில் எழுந்ததும் கடன்களை முடித்து விட்டு, அவனிடம் முழுமையாகத் திருப்பப்பட்ட இதயத்துடன் தன்னைத் தூய்மை செய்து கொண்டு, பக்தியுடனும், விடாமுயற்சியுடனும், ஒவ்வொரு நாளும் வாஸுதேவனின் இந்த ஆயிரம் பெயர்களையும் சொல்வானோ!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 3.7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||

ஸ்லோகம் - 3.7 

யஸ்த் விந்த்³ரியாணி மநஸா 
நியம்யா ரப⁴தே அர்ஜுந|
கர்மேந்த்³ரியை: கர்ம யோக³ம்
அஸக்த: ஸ விஸி²ஷ்யதே||

  • யஸ் - யாரெருவன் 
  • து - ஆனால்  
  • இந்த்³ரியாணி - புலன்களை 
  • மநஸா - மனதால் 
  • நியம்ய - நியமங்களுக்கு உட்படுத்துகின்றானோ 
  • ஆரப⁴தே - தொடங்குகிறான் 
  • அர்ஜுந - அர்ஜுநனே 
  • கர்மேந்த்³ரியைஹ் - செயற்புலன்களால் 
  • கர்ம யோக³ம் - பக்தி 
  • அஸக்தஸ் - பற்றின்றி 
  • ஸ: - அவன் 
  • விஸி²ஷ்யதே - மிக உயர்ந்தவன்

ஆனால், அர்ஜுநா! யாரொருவன் புலன்களை மனதால் நியமங்களுக்கு உட்படுத்தத் தொடங்குகின்றானோ, அவன் செயற் புலன்களால் பற்றின்றி கர்ம யோகத்தில் மிக உயர்ந்தவனாகிறான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.33

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.33

தம பி⁴ஜ்ஞாய ஸஹஸா 
ப்ரத் யுத்தா² யாக³தம் முநி:|
பூஜயா மாஸ விதி⁴வந்
நாரத³ம் ஸுர பூஜிதம்|| 

  • தம - அந்த நாரதரை 
  • ஆக³தம் அபி⁴ஜ்ஞாய - வந்தவராக பார்த்து 
  • முநிஹி - வியாஸர் 
  • ஸஹஸா - உடனே 
  • ப்ரத் யுத்தா² யா - எதிர் சென்று அழைத்து 
  • ஸுர பூஜிதம் - தேவர்கள் யாவராலும் பூஜிக்கப்பட்ட 
  • நாரத³ம் -   நாரத மஹரிஷியை 
  • விதி⁴வந் - முறைப்படி 
  • பூஜயா மாஸ - பூஜித்தார் 

நாரதர் வந்ததைக் கண்ட வியாஸ முனிவர் எழுந்து எதிர்கொண்டழைத்து, தேவர்களும் கொண்டாடும் நாரத மகரிஷியை அர்க்யம், பாத்யம், ஆசமனம் அளித்து முறைப்படி பூசனை புரிந்தார்.

ஸ்ரீமத் பாகவத மகாபுராணம், முதலாவது ஸ்கந்தத்தில் 
நான்காவது அத்தியாயம் முற்றிற்று.

இதி ஸ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரம ஹம்ஸ்யாம் ஸம்ஹி தாயாம்
ப்ரத²ம ஸ்கந்தே⁴ நைமிஷீயோ பாக்²யாநே சதுர்தோ² அத்⁴யாய:|| 4॥

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.78

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.78

ஸோ பி⁴க³ம்ய மஹாத் மாநம் 
க்ருத்வா ராமம் ப்ரத³க்ஷிணம்|
ந்யவேத³ யத³மே யாத்மா 
த்³ருஷ்டா ஸீதேதி தத்த்வத:|| 

  • அமே யாத்மா - மஹா மேதாவியான 
  • ஸோ - அந்த ஹநுமார் 
  • மஹாத் மாநம் - மஹாத்மாவான 
  • ராமம் - ஸ்ரீராமரை 
  • அபி⁴க³ம்ய - அடைந்து 
  • ப்ரத³க்ஷிணம் - ப்ரதக்ஷிணத்தை 
  • க்ருத்வா - செய்து 
  • த்³ருஷ்டா - காணப்பட்டாள் 
  • ஸீதா இதி - ஸீதை என்று 
  • தத்த்வதஹ - நடந்தவாறு 
  • ந்யவேத³ யத்³ - தெரிவித்தார் 

அளவற்ற புத்தியைக் கொண்ட ஹனுமான், மஹாத்மாவான ராமனை அடைந்து, அவரை வலம் வந்து, "கண்டேன் சீதையை" எனச் சுருக்கமாகச் சொன்னார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

திவ்ய ப்ரபந்தம் - 119 - பெரியாழ்வார் திருமொழி - 2.1.2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 119 - பார்த்தன் தேர்மேல் நின்ற கண்ணன்
பெரியாழ்வார் திருமொழி
இரண்டாம் பத்து - முதலாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்

மலை புரை தோள் மன்னவரும்* மாரதரும் மற்றும்* 
பலர் குலைய* நூற்று வரும் பட்டு அழியப்* 
பார்த்தன் சிலை வளையத்* திண் தேர் மேல் முன் நின்ற* 
செம் கண் அலவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான்* 
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்! (2)

  • மலை புரை - மலையை ஒத்த
  • தோள் - தோள்களை உடைய
  • மன்னவர் - அரசர்களான
  • மாரதரும் - மஹா ரதரும் (பீஷ்மாதிகள்- ஆத்மாநம் -அஸ்வங்களை ரக்ஷித்து போர் செய்வார்)
  • மற்றும் பலரும் - மற்றும் பலவகை அரசர்களும்
  • குலைய - அழியவும்
  • நூற்றுவரும் - (துர்யோதநாதிகள்) நூறு பேரும்
  • பட்டு - மரணமடைந்து
  • அழிய - வேர் அற்ற மரம் போல் உருவம் இழிந்து போகவும்
  • பார்த்தன் - அர்ஜுனனுடைய
  • சிலை - காண்டீவமென்னும் வில்
  • வளைய - வளையவும் (நூற்றுவரை வெல்வதை விட ஐவரை வேள்வித்ததே பெரிய விஷயம்)
  • திண் தேர் மேல் - அந்த அர்ஜுனனுடைய வலிய தேரின் மேல் (பார்த்த சாரதி இருப்பதாலேயே வந்த திண்மை உண்டே)
  • முன் நின்ற - (ஸாரதியாய்) முன் புறத்தில் நின்ற
  • செம் கண் - (வாத்ஸல்ய ஸூசகமாகச்) சிவந்த கண்களை உடையனாய்
  • அல வலை - புகழ்பவனான கண்ணன் (அர்ஜுநனுடைய வெற்றியைப் பிதற்றுவது போல் ஜயத்தையே சொல்லி புகழுமவன் வெல்ல வைக்க ஸ்ரீ கீதையை வெளியிட்டு அருளினவன்)
  • வந்து அப் பூச்சி காட்டுகின்றான்- அப்படிப் பட்ட மிகவும் பயங்கரமான பூச்சி காட்டுகின்றான்;
  • அம்மனே - அம்மா!
  • அப் பூச்சி காட்டுகின்றான் - தலை கேசம் வைத்து மறைத்து, கண்ணை புரட்டி, சங்கு சக்கரம் காட்டி அப்பூச்சி காட்டுதல்

மலைக்கு சமமான புஜ பலத்தையுடைய மஹாரதர் என்ற அரசனையும் மற்றும் பல அரசர்களைக் கொன்றும், துர்யோதனாதிகள் நூறு போரையும் உரு தெரியாமல் அழித்தும், அர்ஜுனனுடைய காண்டீவமென்னும் வில் வளைய அவனுடைய வலிமையான தேரில் முன்புறம் தேரோட்டியாக நின்றும் அர்ஜுனனைப் புகழ்பவனான சிவந்த கண்களையுடைய கண்ணன், ஆச்சர்யமாக பயமுறுத்தி விளையாடுகின்றான்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 036 - திருத்தெற்றியம்பலம் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

036. திருத்தெற்றியம்பலம் (திருநாங்கூர்)
முப்பத்தி ஆறாவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் – 10

001. திவ்ய ப்ரபந்தம் - 1278 - செங்கண்மால் திருத்தெற்றியம்பலத்தே உள்ளார்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - நான்காம் திருமொழி - முதலாம் பாசுரம்
மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும்*
மற்று அவர் தம் காதலிமார் குழையும்* 
தந்தை கால் தளையும் உடன் கழல வந்து தோன்றிக்*
கத நாகம் காத்து அளித்த கண்ணர் கண்டீர்*
நூற்றிதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து*
இளங் கமுகின் முது பாளை பகு வாய் நண்டின்*
சேற்று அளையில் வெண் முத்தம் சிந்தும் நாங்கூர்த்*
திருத்தெற்றியம்பலத்து என் செங்கண் மாலே|

002. திவ்ய ப்ரபந்தம் - 1279 - பேய்ச்சி பால் உண்டவன் வாழும் இடம் இது 
பெரிய திருமொழி - நான்காம் பத்து - நான்காம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
பொற்றொடித் தோள் மட மகள் தன் வடிவு கொண்ட*
பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி*
பெற்று எடுத்த தாய்போல மடுப்ப* 
ஆரும் பேணா நஞ்சு உண்டு உகந்த பிள்ளை கண்டீர்* 
நெல் தொடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல்*
இருஞ் சிறைய வண்டு ஒலியும் நெடுங் கணார் தம்*
சிற்றடிமேல் சிலம்பு ஒலியும் மிழற்றும் நாங்கூர்த்*
திருத்தெற்றியம்பலத்து என் செங்கண் மாலே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1280 - கண்ணனே திருத்தெற்றியம்பலத்து ஐயன்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - நான்காம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப்*
பசு வெண்ணெய் பதம் ஆரப் பண்ணை முற்றும்*
அடல் அடர்த்த வேல் கணார் தோக்கை பற்றி*
அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர்* 
மடல் எடுத்த நெடுந் தெங்கின் பழங்கள் வீழ*
மாங்கனிகள் திரட்டு உருட்டா வரு நீர்ப் பொன்னி*
திடல் எடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர்த்*
திருத்தெற்றியம்பலத்து என் செங்கண் மாலே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1281 - நப்பின்னை மணாளன் வாழ்விடம் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம்
வார் ஆரும் முலை மடவாள் பின்னைக்கு ஆகி*
வளை மருப்பின் கடுஞ் சினத்து வன் தாள் ஆர்ந்த*
கார் ஆர் திண் விடை அடர்த்து வதுவை ஆண்ட*
கரு முகில்போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர்* 
ஏர் ஆரும் மலர்ப் பொழில்கள் தழுவி எங்கும்*
எழில் மதியைக் கால் தொடர விளங்கு சோதி*
சீர் ஆரும் மணி மாடம் திகழும் நாங்கூர்த்*
திருத்தெற்றியம்பலத்து என் செங்கண் மாலே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1282 - செங்கண்மால் வாழ்விடம் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - நான்காம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
கலை இலங்கும் அகல் அல்குல் கமலப் பாவை*
கதிர் முத்த வெண்ண கையாள் கருங் கண் ஆய்ச்சி*
முலை இலங்கும் ஒளி மணிப் பூண் வடமும் தேய்ப்ப*
மூவாத வரை நெடுந் தோள் மூர்த்தி கண்டீர்* 
மலை இலங்கு நிரைச் சந்தி மாட வீதி*
ஆடவரை மட மொழியார் முகத்து* 
இரண்டு சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர்த்*
திருத்தெற்றியம்பலத்து என் செங்கண் மாலே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1283 - இராவணன் தோள்களைத் துணித்தன் இடம் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - நான்காம் திருமொழி - ஆறாம் பாசுரம்
தான் போலும் ஏன்று எழுந்தான் தரணியாளன்*
அது கண்டு தரித்திருப்பான் அரக்கர் தங்கள்*
கோன்போலும் ஏன்று எழுந்தான் குன்றம் அன்ன*
இருபது தோள் உடன் துணித்த ஒருவன் கண்டீர்* 
மான்போலும் மென் நோக்கின் செய்ய வாயார்*
மரகதம்போல் மடக் கிளியைக் கைமேல் கொண்டு*
தேன்போலும் மென் மழலை பயிற்றும் நாங்கூர்த்*
திருத்தெற்றியம்பலத்து என் செங்கண் மாலே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1284 - குறளுருவான பெருமான் வாழ்விடம் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - நான்காம் திருமொழி - ஏழாம் பாசுரம்
பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப்*
பொல்லாத குறள் உரு ஆய்ப் பொருந்தா வாணன்*
மங்கலம் சேர் மறை வேள்வி அதனுள் புக்கு*
மண் அகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர்* 
கொங்கு அலர்ந்த மலர்க் குழலார் கொங்கை தோய்ந்த*
குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம் தன்னால்*
செங் கலங்கல் வெண் மணல்மேல் தவழும் நாங்கூர்த்*
திருத்தெற்றியம்பலத்து என் செங்கண் மாலே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1285 - வராக அவதாரம் எடுத்தவன் வாழ்விடம் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - நான்காம் திருமொழி - எட்டாம் பாசுரம்
சிலம்பின் இடைச் சிறு பரல்போல் பெரிய மேரு*
திருக் குளம்பில் கணகணப்ப திரு ஆகாரம் குலுங்க*
நில மடந்தை தனை இடந்து புல்கிக்*
கோட்டிடை வைத்தருளிய எம் கோமான் கண்டீர்* 
இலங்கிய நால் மறை அனைத்தும் அங்கம் ஆறும்*
ஏழ் இசையும் கேள்விகளும் எண் திக்கு எங்கும்*
சிலம்பிய நல் பெருஞ் செல்வம் திகழும் நாங்கூர்த்*
திருத்தெற்றியம்பலத்து என் செங்கண் மாலே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1286 - உலகங்களைத் தன் வயிற்றில் அடக்கியவன் அமரும் இடம்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - நான்காம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
ஏழ் உலகும் தாழ் வரையும் எங்கும் மூடி*
எண் திசையும் மண்டலமும் மண்டி* அண்டம்
மோழை எழுந்து ஆழி மிகும் ஊழி வெள்ளம்*
முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர்* 
ஊழிதொறும் ஊழிதொறும் உயர்ந்த செல்வத்து*
ஓங்கிய நான்மறை அனைத்தும் தாங்கு நாவர்*
சேழ் உயர்ந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த்*
திருத்தெற்றியம்பலத்து என் செங்கண் மாலே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1287 - தேவர்களுள் ஒருவர் ஆவர்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - நான்காம் திருமொழி - பத்தாம் பாசுரம்
சீர் அணிந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த்*
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலை*
கூர் அணிந்த வேல் வலவன் ஆலி நாடன்*
கொடி மாட மங்கையர் கோன் குறையல் ஆளி* 
பார் அணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன*
பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்*
சீர் அணிந்த உலகத்து மன்னர் ஆகி*
சேண் விசும்பில் வானவர் ஆய்த் திகழ்வர் தாமே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 87

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 32

ஸ்கந்தம் 03

ப்ரக்ருதியின் குணங்களுடன் தொடர்பு கொள்ளும் ஜீவன் அஹங்காரத்தால் 'நானே செய்பவன்' என்று எண்ணுகிறான்.

இதனால் தன் இயல்பான சுதந்திரத்தை இழந்து, ஆனந்தத்தை மறந்து, பாவ புண்யங்களுக்குத் தக்கவாறு, பற்பல வகையான பிறவிகளை அடைகிறான். பிறப்பு இறப்புச் சுழலில் மாட்டிக்கொள்கிறான்.

கனவில் தோன்றும் அச்சம், சோகம் முதலியவற்றுக்குக் காரணம் ஏதுமில்லை. ஆனால், கனவு இருக்கும்வரை அவற்றை அனுபவிக்கத்தான் வேண்டியிருக்கிறது.

அது போலவே, அச்சம், துயரம், நான், எனது, பிறப்பு, இறப்பு முதலியவற்றுக்கு எந்த ஆதாரமும்‌ இல்லை.

எனினும், அஞ்ஞானத்தின் காரணமாக புலன் நுகர் பொருள்களில் கவனம் செலுத்துவதால் ஜீவனுக்கு பிறப்பு இறப்புச் சுழலிலிருந்து விடுதலை கிடைப்பதில்லை.

உலகியல் பற்று கொண்ட மனத்தை இடைவிடாத பக்தி யோகத்தாலும், வைராக்யத்தாலும் மெல்ல மெல்லத் தன்வயப்படுத்தவேண்டும்.


மிகவும்‌ ஈடுபாட்டுடன் அப்யாசம் செய்து, சித்தத்தை ஒரு நிலைப்படுத்தி, ஆன்மா வேறு, ப்ரக்ருதியின் உருவான உடல் வேறு என்று அறியவேண்டும். பக்தியுடன் தேனினும்‌ இனிய திருக்கதைகளைச் செவியாரப் பருக வேண்டும். எல்லா ஜீவராசிகளிடமும் பகைமை பாராட்டாமல் அன்புடன்‌ பழக வேண்டும். புலனடக்கத்துடன் இறைச் சிந்தனை தவிர மற்றவற்றைத் தவிர்க்க வேண்டும். பகவத் அர்ப்பணமாக உறுதியுடன் தன் கடைமைகளைச் செய்ய வேண்டும். மிதமான ஆகாரம் ஏற்று ஸாது சங்கத்தில் எப்போதும்‌ இருக்க வேண்டும். மற்ற சேர்க்கையைத் தவிர்க்க வேண்டும். தேகத்திலோ, அதைச் சார்ந்திருக்கும் மனைவி, மக்களிடமோ, நான் எனது என்ற வீண் அபிமானம் கொள்ளாதிருக்க வேண்டும்.

ப்ரக்ருதி வேறு புருஷன் வேறு என்ற அறிவால் ஜாக்ரத்(விழிப்பு), ஸ்வப்ன (கனவு), ஸுஷுப்தி (தூக்கம்) முதலிய நிலைகளைக் கடக்கவேண்டும். இவ்வாறு செய்பவன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ப்ரும்மத்தையே அடைகிறான்.

நீர் நிலைகளில் நீரில் தோன்றும் சூரியனின் ப்ரதிபிம்பம், அருகிலிருக்கும் சுவற்றில் பரதிபலிக்கும். அதைப் பார்த்தாலும், நாம் அறிவது என்ன? ஆகாயத்தில் சூரியன் இருக்கிறான் என்பதேயாம்.

அதுபோல், ஆழ்ந்த உறக்கத்தில் அனைத்துப் புலன்களும் அஹங்காரத்தில் ஒடுங்கி விடுகின்றன. அப்போது விழிப்பு, உறக்கம், கனவு மூன்று நிலைகளிலும் சாட்சியாக விளங்கும் ஜீவாத்மா விழிப்புடன் இருக்கிறது. அதனால்தான், உறங்கி எழுந்ததும் 'நான் நன்றாகத் தூங்கினேன்' என்று சொல்லமுடிகிறது.

மற்ற புலன்கள் செயலற்றுக் கிடப்பினும் ஜீவன் விழிப்புடன் இருப்பதாலேயே உடலில் உயிர்ப்புத்தன்மை இருக்கிறது. இல்லையெனில் உடலின் பெயர் வேறாகிவிடும்.

விழித்துக்கொண்டிருக்கும்போது இந்திரியங்கள் செயல்படக் காரணம் அந்தர்யாமியான பகவான் என்று புரிந்துவிடும். உறங்கும்போது புலன்கள் செயலற்றிருப்பதால் அந்தர்யாமி இல்லை என்றாகிவிடாது.

உண்மையில் ஆழ்ந்த உறக்கத்தில் இல்லாமல் போவது அஹங்காரமும் புலன்களின் உணர்வும் மட்டுமே. உறக்கத்தில் அஹங்காரம் செயலற்றுப் போவதால் தானே இல்லாமல் போய்விட்டதாக நினைக்கிறான்.

உறக்கத்தில் அஹங்காரம் தொலைந்து ஜீவன் விழிப்புடன்தான் இருக்கிறது. அம்மா, மேற்கூறிய அனைத்தையும்‌ ஆராய்ந்து விவேகத்துடன் பரமாத்மாவை அறிந்து கொள்ள வேண்டும், என்றார் கபிலர்.

மிகவும்‌ மகிழ்ந்த தேவஹூதி, நம் பொருட்டு, மேலும் கேள்விகள் கேட்கத் துவங்கினாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்