About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 8 April 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 135

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 105

யஜ்ஞ ப்⁴ருத்³ யஜ்ஞ க்ருத்³ யஜ்ஞி 
யஜ்ஞ பு⁴க்³ யஜ்ஞ ஸாத⁴ந:|
யஜ்ஞாந்த க்ருத்³ யஜ்ஞ கு³ஹ்யம் 
அந்ந மந்நாத³ ஏவ ச||

  • 976. யஜ்ஞ ப்⁴ருத்³ - யாகங்களை நிறைவிப்பவர். யாகத்தின் நிறைவைக் கொண்டு வருபவர்.
  • 977. யஜ்ஞ க்ருத்³ - யாகங்களை உண்டாக்கியவர்.    
  • 978. யஜ்ஞீ - வேள்விகளால் ஆராதிக்கப்படுபவர். 
  • 979. யஜ்ஞ பு⁴க்³ - வேள்விகளை அநுபவிப்பவர். யாகத்தை அனுபவிப்பவர். பாதுகாவலர்.
  • 980. யஜ்ஞ ஸாத⁴நஹ - வேள்விகளை உபாயமாக்குபவர். யக்ஞங்களின் மூலம் சாதனாவாக அடையப்படுபவர். 
  • 981. யஜ்ஞாந்த க்ருத்³ - வேள்வியின் பலனை உண்டாக்குபவர். யாகங்களின் பலனைத் தருபவர்.
  • 982. யஜ்ஞ கு³ஹ்யம் - வேள்விகளின் அடிப்படை ரகசியமாக உள்ளவர். யாகத்தின் ரகசியம்.
  • 983. அந்நம் - உண்ணும் சுவை அமுதாக உள்ளவர். அவர் இன்பப் பொருள்.
  • 984. அந்நாத³ ஏவ ச - தன்னை அநுபவிப்பவனைத் தான் இனிதாக அநுபவிப்பவர். அவரை அனுபவிப்பவர்களை மகிழ்விப்பவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.72

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.72 

ஏஷா ப்³ராஹ்மீ ஸ்தி²தி: பார்த² 
நைநாம் ப்ராப்ய விமுஹ்யதி|
ஸ்தி²த் வாஸ் யா மந்த காலேபி 
ப்³ரஹ்ம நிர்வாணம் ருச்ச²தி||

  • ஏஷா - இந்த 
  • ப்³ராஹ்மீ - ஆன்மீக 
  • ஸ்தி²திஃ - நிலை 
  • பார்த² - பிருதாவின் மகனே  
  • ந - என்றுமில்லை  
  • ஏநாம் - இந்த  
  • ப்ராப்ய - அடைந்து 
  • விமுஹ்யதி- ஒருவன் குழம்புகிறான் 
  • ஸ்தி²த்வா - இவ்வாறு நிலைபெற்று 
  • அஸ்யாம் - இதில் 
  • அந்தகாலே - வாழ்வின் இறுதிக் காலத்தில் 
  • அபி - கூட 
  • ப்³ரஹ்ம நிர்வாணம் - இறைவனின் ஆன்மீகத் திருநாட்டை 
  • ருச்ச²தி - அடைகிறான்

பார்த்தா!, இந்த ஆன்மீக நிலையை, அடைந்த ஒருவன் குழப்பமடைவது இல்லை. இவ்வாறு இதில் நிலைபெற்று, வாழ்வின் இறுதி காலத்திலும், இறைவனின் ஆன்மீக திருநாட்டை அடைகிறான்.

ஓம் தத் ஸதி³தி ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா ஸூப நிஷத்ஸு
ப்³ரஹ்ம வித்³யாயாம் யோக³ ஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுந ஸம்வாதே³
ஸாங்க்²ய யோகோ³ நாம த்³விதீயோ அத்⁴யாய꞉|| - 2

ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'ஸாங்க்ய யோகம்' எனப் பெயர் படைத்த இரண்டாவது அத்யாயம் நிறைவுற்றது. 

விளக்கம்:
மனிதன் (அல்லது) ஒரு ஜீவன் (அல்லது) ஒரு உயிரி என்பது ஜட உடல் மற்றும் ஆன்மா இவை இரண்டின் கூட்டமைப்பே மனிதன் அல்லது உயிரி. இதில் மனிதன் இறந்து விட்டால் மனித உடல் மட்டுமே அழியும் அதில் உள்ளே இருக்கும் ஆன்மா அழியாது.

நிர்ணயிக்கப்பட்ட கர்மத்தை (அல்லது) வேலையை ஒருவன் செய்தே ஆகவேண்டும். வேலை (அல்லது) கடமை செய்வதற்கு மிகவும் கடினமாக இருக்கிறது என்பதால் அதை செய்யாமல் விட்டால் அவனை பாவம் வந்து சேரும். மேலும் அனைத்து கொடுக்கப்பட்ட வேலையை / கடமையை செய்ய வெறுப்போ விருப்போ கொள்ள கூடாது. அவ்வாறு விருப்பு வெறுப்பு கொள்ளாமல் இருந்தால் மனம் அமைதியாக இருக்கும். மனம் அமைதியாக இருந்தால் தான் புத்தி விழித்தெழும். புத்தி விழித்தெழுந்தால் நாம் கொஞ்சம் கொஞ்சமாக இறைவனை நோக்கி முன்னேறலாம். ஆசை, காமம், கோபம் இவற்றை முற்றிலும் விட வேண்டும். இவை மூன்றும் தான் மனிதனை அங்கும் இங்கும் இழுத்து அலைக்கழிக்கிறது. ஆகையால் இந்த மூன்றையும் விட்டு மனத்தை அமைதியாக நிலையாக வைத்து தனது கடமைகளை விறுப்பு வெறுப்பு இல்லாமல் செய்ய வேண்டும்.

ஒரு வேலையை செய்து விட்ட பிறகு அந்த வேலையின் முடிவு தோல்வியாக இருந்தாலும் அதற்காக மிகுந்த வருத்தம் கொள்ள வேண்டாம். ஏனெனில் அந்த வேலையை அவன் எந்த வித விருப்பு வெறுப்பு இல்லாமல் முழுமையாக செய்து இருக்கிறான். அதன் பலனில் முடிவில் அவனின் அதிகாரம் இல்லை. இதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

“கடமையை கண்ணும் கருத்துமாக செய்வதற்கு மட்டுமே நமக்கு அதிகாரம் இருக்கிறது. அதன் பலனில் எந்த வித அதிகாரமும் இல்லை.”

இன்பம் - துன்பம், சூடு - குளிர், கோடை - மழை, சுகம் - துக்கம் இவை இயற்கையிலிருந்து தோன்றுகின்றன. இவற்றால் மனம் பாதிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். அதாவது இவை நிலையானவை அல்ல. தோன்றி மறைபவை.

இன்பம் வரும் போது மிகுந்த இன்பத்தை அடைவதும் துன்பம் வரும்போது மிகுந்த துன்பத்தில் ஆழ்ந்து விடுவதும் நல்ல கதிக்கு ஒரு மனிதனை கொண்டு செல்லாது. இங்கே ஏற்படுகின்ற இன்பமும் துன்பமும் தற்காலிகமானவை. அவற்றில் ஆழ்ந்துவிட கூடாது. இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக எடுத்து கொள்ள வேண்டும். ஏனெனில் இவை இயற்கையிலிருந்து தோன்றுபவை. இறைவனை அடைந்த பிறகு கிடைக்கும் இன்பமே நிரந்தரமானது. அந்த நிரந்தரமான இன்பத்தை அடைய இறைவனை நோக்கி முன்னேற வேண்டும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.25

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.25

ஸ்த்ரீ ஸூ²த்³ர த்³விஜ ப³ந்தூ⁴ நாம் 
த்ரயீ ந ஸ்²ருதி கோ³சரா|
கர்ம ஸ்²ரேயஸி மூடா⁴ நாம் 
ஸ்²ரேய ஏவம் ப⁴வேதி³ ஹ|
இதி பா⁴ரத மாக்²யா நம் 
க்ருபயா முநிநா க்ருதம்||

  • ஸ்த்ரீ - ஸ்த்ரீகள்
  • ஸூ²த்³ர - ஸூத்ரர்கள்
  • த்³விஜ -  மூன்று வர்ணத்தவர்க்குள்
  • ப³ந்தூ⁴ நாம் -  தாழ்ந்தவர்கள், இவர்களுக்கு
  • த்ரயீ ந ஸ்²ருதி கோ³சரா - வேதத்தை அத்யயனம் செய்யத் தக்கதன்று
  • கர்ம ஸ்²ரேயஸி -  ஸ்ரேயஸைக் கொடுக்கும் கர்மாக்களில்
  • மூடா⁴ நாம் -  அதிகாரம் இல்லாத மேலே கூறியவர்களுக்கு
  • இஹ - இவ்வுலகில்
  • ஏவம் -  இந்த பாரதம் முதலான இதிஹாசங்களால்
  • ஸ்²ரேய ப⁴வேத்³ -  ஸ்²ரேயஸ் ஏற்படும்
  • இதி -  என எண்ணியே
  • முநிநா -  மஹரிஷிகளால்
  • பா⁴ரதம் ஆக்²யாநம் -  மஹாபாரதம் என்ற நூலானது 
  • க்ருபயா க்ருதம் - கருணையால் செய்யப்பட்டது

மாதர்கள், நான்காம் வருணத்தவர், மற்ற மூவர்ணத்தாரிலும், குணம், செயல் இவற்றால் தாழ்ந்தவர்கள் ஆகிய இவர்கள் வேதத்தை அத்யயனம் செய்தல் கூடாது. ஆகவே, அவர்கள் உயர்ந்த நற்செயல்களைச் செய்வதற்கு இயலாது. அதனால், அவர்களும் நன்மை பெற வேண்டும் என்று எண்ணியே, வியாச முனிவர் கருணை கொண்டு 'மஹாபாரதம்' என்னும் நூலை எழுதினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.70

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.70

தத: ஸுக்³ரீவ வசநாத்³
த⁴த்வா வாலி நமா ஹவே|
ஸுக்³ரீவ மேவ தத்³ ராஜ்யே 
ராக⁴வ: ப்ரத்ய பாத³யத்|| 

  • ராக⁴வஃ - ஸ்ரீராகவர் 
  • ஸுக்³ரீவ - ஸுக்³ரீவன் 
  • வசநாத்³து⁴ - சொல்படி 
  • வாலிநம் - வாலியை 
  • ஆஹவே - யுத்தத்தில் 
  • ஹத்வா - வதம் செய்து 
  • ததஸ் - பிறகு 
  • தத்³ ராஜ்யே - அவன் ராஜ்யத்தில் 
  • ஸுக்³ரீவம் ஏவ - ஸுக்³ரீவரையே 
  • ப்ரத்ய பாத³யத்து - ஸ்தாபித்தார்   

ஸுக்ரீவனுடைய முறையீட்டின் பேரில், போரில் வாலியைக் கொன்ற ராகவன், அந்த கிஷ்கிந்தையில் ஸுக்ரீவனையே மன்னனாக நிறுவினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்