About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 1 February 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 101

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 71

ப்³ரஹ்மண்யோ ப்³ரஹ்மக்ருத்³ ப்³ரஹ்மா 
ப்³ரஹ்ம ப்³ரஹ்ம விவர்த்த⁴ந:|
ப்³ரஹ்மவித்³ ப்³ராஹ்மணோ ப்³ரஹ்மீ 
ப்³ரஹ்மஞோ ப்³ராஹ்மண ப்³ரிய:||

  • 667. ப்³ரஹ்மண்யோ - வேதங்களையும் அறிவின் அனைத்து அம்சங்களையும் ஊக்குவிப்பவர்.
  • 668. ப்³ரஹ்மக்ருத்³ ப்ரஹ்மா - பிரம்மாவை உருவாக்கிய படைப்பாளர்.
  • 669. ப்³ரஹ்ம - பரமாத்மா, மேலானவர்.
  • 670. ப்³ரஹ்ம விவர்த்த⁴நஹ - தருமத்தை வளரச் செய்பவர்.
  • 671. ப்³ரஹ்மவித்³ - வேதங்களை உள்ளபடி அறிந்த வித்தகன்.
  • 672. ப்³ராஹ்மணோ - வேதங்களைக் கற்பிப்பவர்.
  • 673. ப்³ரஹ்மீ - பிரம்மாவை, பிரமாண, பிரமேயங்களை உடையவர்.
  • 674. ப்³ரஹ்மஜ்ஞோ - வேதங்களை உணர்ந்தவர்.
  • 675. ப்³ராஹ்மண ப்ரியஹ - வேதம் ஓத வல்ல பிராமணர்களை நேசிப்பவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.38

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.38 

ஸுக² து³:கே² ஸமே க்ருத்வா 
லாபா⁴ லாபௌ⁴  ஜயா ஜயௌ|
ததோ யுத்³தா⁴ய யுஜ் யஸ்வ 
நைவம் பாப மவாப்ஸ் யஸி||

  • ஸுக² - இன்பம்
  • து³ஹ்கே² - துன்பம்
  • ஸமே - சமமாக 
  • க்ருத்வா - கருதி 
  • லாப⁴ - இலாப 
  • அலாபௌ⁴ - நஷ்டம் 
  • ஜய - வெற்றி
  • அஜயௌ - தோல்வி
  • ததோ - அதற்கு பின்
  • யுத்³தா⁴ய - போருக்கு 
  • யுஜ் யஸ்வ - தயாராவாயாக
  • ந - என்றுமில்லை 
  • ஏவம் - இவ்விதம் செய்தால்
  • பாபம் - பாவத்தை 
  • அவாப்ஸ் யஸி - நீ அடைவது

இன்ப துன்பங்களில் சமமாகவும், இலாப நஷ்டங்களில் சமமாகவும், வெற்றி தோல்விகளில் சமமாகவும் கருதி, அதன்பின், போருக்காக போரிடுவாய். இவ்வழியில், பாவ விளைவு நீ அடையவது இல்லை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.36

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.36

ஸவா இத³ம் விஸ்²வ மமோக⁴ லீல:
ஸ்ரு ஜத்ய வத்யத்தி ந ஸஜ்ஜதே ஸ்மிந்|
பூ⁴தேஷு சாந்தர் ஹித ஆத்ம தந்த்ர:
ஷாட்³ வர்கி³ கம் ஜிக்⁴ரதி ஷட்³ கு³ணேஸ²:||

  • அமோக⁴ லீலஹ - வியர்த்தம் அல்லாத லீலைகளை உடைய
  • ஸ: வை - அந்த ஸர்வேஸ்வரனே
  • இத³ம் விஸ்²வம் - இவ்வுலகத்தை 
  • ஸ்ருஜதி - ஸ்ருஷ்டிக்கிறார் 
  • அவதி -  ரக்ஷிக்கிறார் 
  • அத்தி -  அழிக்கிறார் 
  • ஆத்ம தந்த்ரஹ - ஸ்வதந்திரரான அவர் 
  • அஸ்மிந் - இவ்வுலகில் 
  • ந ஸஜ்ஜதே - பற்றுதல் அடைவதில்லை  
  • பூ⁴தேஷு - ஆன்மாக்கள் இடத்தில் 
  • அந்தர் ஹித ச -  மறைந்தவனாய் கொண்டு
  • ஷட்³ கு³ணேஸ²ஹ -  ஆறு வகை இந்திரியங்களுக்கு அவர் ஈஸ்வரனாய் இருந்த போதிலும்
  • ஷாட்³ வர்கி³ கம் -  அந்த அந்த இந்திரிய விஷயத்தை 
  • ஜிக்⁴ரதி -  வாசனையை முகருவது போல முகருகிறான் (அவர் அவைகளில் பற்றுதல் அடைவதில்லை என்பதாம்)

பகவானது திருவிளையாடல்கள் எல்லாம், காரிய காரணங்களைக் கொண்டவையே அன்றி வீணானது அன்று. ஒவ்வொன்றும் ஒரு தத்துவத்தைப் பின்ணணியாகக் கொண்டதே. ஆகவே, வீண் போகாத திருவிளையாடல்களைச் செய்பவரும், அனைத்து ஜீவராசிகளினுள்ளும் விளங்குபவருமான பகவான், விளையாட்டாகவே இந்த உலகத்தைப் படைக்கிறார், காக்கிறார், மேலும் அழிக்கிறார். ஆனால், அவற்றில் ஒட்டுவதில்லை. ஏனெனில், அவர் ஸ்வதந்திரர். எதற்கும் கட்டுப்படாதவர். ஐம்புலன்கள் மற்றும் மனம் ஆகிய ஆறு இந்திரியங்கட்கும் தலைவராகிய பகவான், சகல ஜீவராசிகளின் உள்ளத்திலும் இருந்து கொண்டு, அவற்றினால் நுகரப்படும் பொருள்களை நுகர்கிறார். ஆனால், அவற்றில் பற்றுக் கொள்வதில்லை. பற்றற்ற நிலையில் செய்யும் நிஷ்காம கர்மங்களின் நன்மை தீமையாகிற பலன்கள், அச்செயல்களைச் செய்பவனைப் பாதிக்காதது போல், வேண்டுதல், வேண்டாமை அற்றவரான பகவானது திருவிளையாடல்கள் பகவானைப் பாதிப்பதில்லை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.36

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.36

த்வமேவ ராஜா த⁴ர்மஜ்ஞ 
இதி ராமம் வசோ ப்³ரவீத்|
ராமோபி பரமோ தா³ர: 
ஸுமுக²: ஸும ஹாய ஸா²:|| 
ந சைச் ச²த்பி துராதே³ ஸா²த்³ 
ராஜ்யம் ராமோ மஹா ப³ல:|

  • ராமம் - ஸ்ரீ ராமரைப் பார்த்து 
  • த⁴ர்மஜ்ஞ - தர்மம் அறிந்தவரான
  • த்வம் ஏவ - நீரே
  • ராஜா இதி - அரசன் என்று
  • வச - வாக்கை
  • அப்³ரவீத்து - சொன்னார்
  • பரமோ தா³ரஹ - அபேக்ஷித்தவைகளை எல்லாம் அளிக்க தக்கவரான
  • ஸுமுக²ஹ - தேஜஸ்வியான
  • ஸும ஹாய ஸா²ஹ - புகழ் பெற்ற கீர்த்தியை உடையவரான
  • மஹா ப³லஹ - மஹா பலசாலியான
  • ராம - ஆச்ரிதரின்  மனதை ரஞ்சிப்பிக்கும் ஸ்வபாவம் உடையவரான
  • அபி - போதிலும்
  • ராம - ஸ்ரீராமர்
  • பிதுர் - பிதாவினுடைய
  • ஆதே³ ஸா²த்³ - உத்தரவினால்
  • ராஜ்யம் - ராஜ்ய பரிப்பாலனத்தை
  • ஐச்ச²த்  ந ச - ஒத்துக் கொள்ளவில்லை

இவ்வகையான சொற்களில், "அறமறிந்த நீர் மட்டுமே மன்னராக முடியும்" என்றான். இராமன், கருணையுள்ளவனாகவும், அருள் பொருந்தியவனாகவும், உயர்ந்த புகழைக் கொண்டவனாகவும், பெரும்பலம் படைத்தவனாகவும் இருந்தாலும், தன் தந்தையுடைய ஆணையின் காரணமாக ராஜ்யத்தை விரும்பாதிருந்தான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்  

திவ்ய ப்ரபந்தம் - 81 - பெரியாழ்வார் திருமொழி - 1.6.7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 81 - வில்லேந்திய சார்ங்கபாணி
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஆறாம் திருமொழி - ஏழாம் பாசுரம்

பரந்திட்டு நின்* படு கடல் தன்னை* 
இரந்திட்ட கைம் மேல்* எறிதிரை மோதக்* 
கரந்திட்டு நின்* கடலைக் கலங்கச்* 
சரந் தொட்ட கைகளால் சப்பாணி* 
சார்ங்க விற்கையனே! சப்பாணி|

  • பரந்திட்டு நின்ற - எல்லை காண முடியாத படி விஸ்தீரணமாய் பரந்து நின்ற
  • படு கடல் - ஆழமான ஸமுத்ரமானது
  • தன்னை இரந்திட்ட - வழி விடுவதற்காகத் தன்னைக் குறித்து சரணாகதி பண்ணின
  • கை மேல் - கைகளின் மீது
  • எறி திரை - திவலைகளை வீசுகின்ற அலைகளினால்
  • மோத - மோதி அடிக்க
  • கரந்திட்டு நின்ற - முகம் காட்டாமல் மறைந்து கிடந்த
  • கடலைக் - அக் கடலுக்கு உரிய தேவதையான வருணன்
  • கலங்க - கலங்கி விடும்படி
  • சரம் - அம்புகளை
  • தொட்ட - தொடுத்து விட்ட
  • கைகளால் - திருக்கைகளால்
  • சப்பாணி - சப்பாணி கொட்டி அருள வேணும்
  • சார்ங்கம் - ஸ்ரீ சார்ங்க மென்னும் தநுஸ்ஸை
  • வில் கையனே - கையில் தரித்தவனே! 
  • சப்பாணி - சப்பாணி கொட்டி அருள வேணும்

அன்று, ராமாவதாரத்தின் போது, ராமனாக அவதரித்திருந்த நீ, இலங்கை செல்வதற்காக கடலை வழி ஏற்படுத்துமாறு கேட்க, கடலோ அலட்சியமாக, கேட்ட உன் கைகளின் மேல் அலையை மோதச்செய்ய, அதனால் நீ மிகவும் கோபமடைந்தவனாய் அம்புகளை தொடுத்து கடலின் மீது செலுத்திய அத்திருக் கைகளால் சப்பாணி கொட்டவும். சார்ங்கமென்னும் தனுஸ்ஸை ஏந்தியவனே, சப்பாணி கொட்ட வேண்டும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 023 - திருதேரழுந்தூர் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

023. திருதேரழுந்தூர் 
திருவழுந்தூர் - மாயவரம் 
இருபத்தி மூன்றாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ தேவாதிராஜன் பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ செங்கமலவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ ஆமருவியப்பன் பெருமாள் 
திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்: தேவாதிராஜன்
  • பெருமாள் உற்சவர்: ஆமருவியப்பன்
  • தாயார் மூலவர்: செங்கமலவல்லி
  • திருமுக மண்டலம் திசை: கிழக்கு
  • திருக்கோலம்: நின்ற
  • புஷ்கரிணி: தர்சன 
  • தீர்த்தம்: காவிரி
  • விமானம்: கருட
  • ப்ரத்யக்ஷம்: காவேரி, தர்ம தேவதை, அகஸ்தியர், கருடன்
  • ஆகமம்: பாஞ்சராத்திரம்
  • ஸம்ப்ரதாயம்: வட கலை
  • மங்களாஸாஸநம்: 1 ஆழ்வார்
  • பாசுரங்கள்: 45

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

இத்தலத்தில் மட்டுமே திருமங்கையாழ்வார் தாயாரையும் சேர்த்து மங்களாஸாஸநம் செய்துள்ளார். கிழக்கு பார்த்து அமைந்த இந்த கோயிலுக்கு நேர் எதிரில் மேற்கு பார்த்த சிவன் கோயில் உள்ளது. அங்கு தான் இவர்கள் சொக்கட்டான் ஆடிய மண்டபம் உள்ளது.  ஒரு முறை பெருமாளும் சிவனும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பார்வதி ஆட்டத்தின் நடுவராக இருந்தாள். காய் உருட்டும் போது குழப்பம் வந்தது. நடுவராக இருந்த பார்வதி பெருமாளுக்கு சாதகமாக கூற, சிவனுக்கு கோபம் வந்து பசுவாக மாறும் படி சாபமிட்டார். பார்வதி பசுவாக மாறியவுடன், துணைக்கு சரஸ்வதியும், லட்சுமியும் பசுவாக மாறி பூமிக்கு வந்தார்கள். இவர்களை மேய்ப்பவராக பெருமாள் 'ஆ'மருவியப்பன் என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் ஆட்சி செய்கிறார். கவிச்சக்கரவர்த்தி கம்பன் பிறந்த ஊர்.

உபரிசரவசு என்ற மன்னன் வானில் தேர் வரும் போது, அதன் நிழல் எதன் மீது பட்டாலும் அது கருகி விடும்படி வரம் பெற்றிருந்தான். இவன் மேலே சென்ற போது அதன் நிழல் கண்ணனின் மீதும் அவர் மேய்த்துக் கொண்டிருந்த பசுக்களின் மீதும் பட்டது. பசுக்கள் துன்பம் அடைந்தன. இவனது செருக்கை அடக்க நினைத்தார் கண்ணன். அவனது தேர் நிழல் மீது தன் திருவடியை வைத்து அழுத்தினார். மன்னனின் தேர் கீழே அழுந்தியது. அத்துடன் அவனது ஆணவமும் அழுந்தியது. இதனால் தான் இத்தலம் 'தேரெழுந்தூர்' ஆனது. 

ஒரு முறை தேவேந்திரன் கருடாழ்வாரிடம் ஒரு விமானத்தையும் வைர முடியையும் கொடுத்து, "108 திருப்பதிகளுள் எந்த பெருமாளுக்கு எது உகந்ததோ, அதை கொடுத்து விடு" என்றான். அதன் படி மைசூர் அருகே திருநாராயணபுரத்தில் உள்ள பெருமாளுக்கு வைர முடியை கொடுத்து விட்டு, தேரெழுந்தூர் ஆமருவியப்பனுக்கு விமானத்தை கொடுத்தார் கருடன். இதனால் இங்குள்ள விமானம் கருட விமானம் ஆனது. அத்துடன் கருடன் பெருமாளின் அருகில் இருக்கும் பாக்கியமும் கிடைத்தது. பெரும்பாலான கோயில்களில் கருடன் சன்னதி பெருமாளுக்கு எதிரில் இருக்கும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

லீலை கண்ணன் கதைகள் - 92

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

சுதாமரின் கதை|

சுதாமர் என்ற ஓர் அந்தணர் இருந்தார். அவர் கிருஷ்ணரின் அன்புக்கு உகந்த நண்பர். அவர் வேதங்களை நன்கு கற்றவர். ஆனால் மிகவும் ஏழை. மிகவும் அழுக்கடைந்த ஆடைகளை அவர் உடுத்தி இருந்ததனால் அவரைக் குசேலர் என்றும் அழைப்பார்கள். 


தெய்வாதீனமாக எது கிடைக்கிறதோ அதைக் கொண்டு தான் அவர் உயிர் வாழ்ந்தார். அவருடைய மனைவி எல்லா வகையிலும் அவரைப் போலவே இருந்தாள். இளம் வயதில் அவர் சாந்தீபனி முனிவரின் குருகுலத்தில் கிருஷ்ணரோடு சேர்ந்து படித்தவர். 

குழந்தைகள் படும் கஷ்டத்தைப் பொறுக்க முடியாமல் ஒரு முறை அவருடைய மனைவி அவரைப் பார்த்து, "பகவான் கிருஷ்ணர் ஒரு சமயம் தங்களுடைய நெருங்கிய நண்பராக இருந்தார் என்று பல தடவை என்னிடம் கூறியுள்ளீர்கள். நல்லவர்கள் மீதும், ஏழைகள் மீதும் அவர் மிக்க அன்பு கொண்டவர் என்பது பிரசித்தமாக இருக்கிறது. தாங்கள் அவரைப் பார்த்து ஏதாவது உதவி கேட்டால் என்ன?" என்று கேட்டாள். 

சுதாமர் அவள் நிலையைக் கண்டு பரிதாபப்பட்டார். மிகவும் சாதாரண ஒரு புடவையை அவள் அணிந்திருந்தாள். அந்தப் புடவையும் பல இடங்களில் கிழிந்திருந்தது. அவரைத் திருமணம் புரிந்து கொண்டதிலிருந்து, அவள் ஒரு நாள் கூட வயிறு நிறையச் சாபிட்டதில்லை. இதுதான் முதல் தடவையாக அவள் அவரை ஏதோ கேட்பது, அதுவும் அவர் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

அவர் தமக்குள், "அவள் திருப்திக்காக நான் கிருஷ்ணரைப் பார்க்கப் போவேன். ஆனால் இது காரணமாக என் பழைய நண்பனை இத்தனை வருடங்களுக்குப் பிறகு பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்" என்று நினைத்துக் கொண்டார். 

"அவருக்குக் காணிக்கையாகக் கொடுக்க வீட்டில் ஏதாவது இருக்கிறதா? வெறும் கையுடன் நான் என் நண்பனை எப்படிப் பார்க்க முடியும்?" என்று கேட்டார்.

அப்படிக் கொடுக்க வீட்டில் ஒன்றும் இல்லை. உடனே அவள் வெளியே சென்று நான்கு பிடி நெல், பக்கத்துக்கு வீடுகளிலிருந்து வாங்கி வந்தாள். அதை இடித்து அவலாகச் செய்து, அதை ஒரு துணியில் கட்டினாள். அதை எடுத்துக் கொண்டு, அந்த ஏழை பக்தரான அந்தணர் துவாரகை நோக்கி நடந்தார். வழியெல்லாம் கிருஷ்ணரைத் தாம் சந்திக்கப் போவதைப் பற்றியே எண்ணிக் கொண்டு சென்றார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 45

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

ப்ரும்மாவின் தவம்

ஸ்கந்தம் 02

ஸூத பௌராணிகர் கூறினார்.

“சௌனகாதி மஹரிஷிகளே! அடியாரும் சான்றோரும் நிரம்பிய அவையில் அரசனான பரீக்ஷித் பகவானின் அமுதத் திருவிளையாடல்கள் பற்றிக் கேட்க விரும்பி, ஸ்ரீ சுகரிடம் வேண்டவே, அவர் மகிழ்ச்சி மிகுந்து வேதத்திற்கு ஒப்பான ஸ்ரீமத் பாகவத புராணத்தைக் கூறினார். அது முன்பு ப்ரும்ம கல்பத்தின் துவக்கத்தில் பகவானே ப்ரும்மாவிற்கு உபதேசித்தது. பாண்டு மகனின் கேள்விகளுக்கு பதில்களை வரிசையாகக் கூற ஆரம்பித்தார் ஸ்ரீ சுகர்.


கனவு காண்பவனுக்கும் கனவில் தோன்றும் விஷயங்களுக்கும் எவ்வாறு தொடர்பில்லையோ, அதே போல், தேகம் முதலியவற்றைக் கடந்த அனுபவ ரூபமான ஆத்மாவிற்கு, மாயயால் தோற்றமளிக்கும் உலகியல் பொருள்களுடன் எவ்விதத் தொடர்பும் இல்லை. மாயயினால் ஜீவன், பற்பல உருவங்களாகக் காட்சியளிக்கும் (குழந்தை, சிறுவன், இளைஞன், மனிதன், தேவன் என்று பலவாறாக மாறிக்கொண்டிருக்கும்) உடலுடன் தனக்குத் தொடர்பு இருப்பதாக எண்ணுகிறது. முக்குணங்களையும் கலக்கி நிற்கும் காலம், மயக்கம் தரும் மாயை, இவற்றைக் கடந்த ஆனந்தமயமான ஆத்ம ஸ்வரூபத்தில் மூழ்குகையில் ஜீவனின் நான் எனது என்ற பற்று அகன்று முழுமையடைகிறான். ப்ரும்மாவின் உண்மையான தவத்தினால் மகிழ்ந்த இறைவன், அவரெதிரே தோன்றி ஆன்ம தத்துவத்தின் உண்மைப் பொருளை விளக்கினார். அதையே உனக்குச் சொல்கிறேன்.

மூவுலகங்களுக்கும் பிதாவான ப்ரும்ம தேவர் தான் பிறந்த இடமான தாமரையிலிருந்து எவ்வாறு உலகைப் படைக்கலாம் என்று எண்ணினார். ஆனால் அவருக்கு ஒன்றும் புலப்படவில்லை. சரி, தான் எங்கு இருக்கிறோம் என்பதை அறிய, தாமரைத் தண்டைப் பிடித்துக்கொண்டு கீழிறங்கினார். எவ்வளவு தூரம் இறங்கினாலும் அது எங்கிருந்து முளைத்தது என்று தெரியவும் இல்லை. சுற்றிலும் வெற்றிடம். தண்டு கீழே போய்க்கொண்டே இருந்தது. சலித்துப் போன அவர், மீண்டும் ஏறி கமலத்திலேயே அமர்ந்தார். அப்போது அவர் காதுகளின் அருகில், த ப என்ற ஒலி கேட்டது. ஆச்சரியப்பட்ட அவர் ஒலி எங்கிருந்து வருகிறது என்று அறிய முயன்று தோற்றுப் போனார். மீண்டும் அதே ஒலி கேட்டதும், தன்னைப் படைத்தவருக்குத் தான், தான் இங்கிருப்பது தெரியும். அவர் குரலாய்த் தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து, அதைத் தனக்கான கட்டளையாய் ஏற்று தவம் செய்யத் துவங்கினார்.

தவம் இயற்றுபவர்களிலேயே ப்ரும்ம தேவர் மிகவும் உயர்ந்தவர். அவரது ஞானமோ அளவிடற்கரியது. தன் பஞ்ச ப்ராணன்களையும் ஒடுக்கி, மனம், கர்மப் புலன்கள், அறிவுப்புலன்கள் ஆகியவற்றைத் தன்வயப்படுத்தி கடுந்தவம் இயற்றினார். ஆயிரம் தேவ வருஷங்கள் அதாவது 3,60,000 மனித வருஷங்களுக்கு அனைத்துலகும் ஒளி பெறத் தவம் இயற்றினார். அவரது தவத்தைக் கண்ட இறைவன் அவருக்கு ஸ்ரீ வைகுண்ட தரிசனம் அளித்தார். அதற்கிணையான லோகம் ஏதுமில்லை. அங்கு, ஆத்யாத்மிகம் போன்ற துன்பங்களோ மரண பயமோ, உடற்பற்றோ, மயக்கமோ இல்லை. அங்கு ரஜோ குணமோ, தமோ குணமோ, ஸத்வ குணமோ இல்லை. காலன் கால் வைக்காத லோகம். ப்ரக்ருதியான மாயையும் இல்லை. விருப்பு வெறுப்பு இல்லை. விஷ்ணு பார்ஷதர்கள் உள்ளனர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 100

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 70

காம தே³வ: காம பால: 
காமீ காந்த: க்ருதாக³ம:|
அநிர் தே³ஸ்²ய வபுர் விஷ்ணுர் 
வீரோ நந்தோ த⁴நஞ்ஜய:||

  • 657. காம தே³வஹ் - விரும்பினவற்றை எல்லாம் அளிப்பவர்.
  • 658. காம பாலஹ் - கொடுத்ததைக் பாதுகாப்பவர்.
  • 659. காமீ - விரும்பத்தக்க அனைத்திலும் நிறைந்துள்ளவர்.
  • 660. காந்தஹ் - வசீகரமானவர். யாவராலும் விரும்பத்தக்கவர். மிகவும் வசீகரமான வடிவத்தை உடையவர்.
  • 661. க்ருதாக³மஹ - ஆகமங்களைத் தோற்றுவிப்பவர். தூய மனம் கொண்டவர்களுக்கு புனித மந்திரங்களை வெளிப்படுத்துபவர். ஷ்ருதிகளையும் ஸ்மிருதிகளையும் நமக்குத் தந்தவர். அவரிடமிருந்து கிருத யுகம் தோன்றியது. கேசியை வதம் செய்த பிறகு, வெற்றியுடன் தன் உறவினர்களின் கூட்டத்தில் நுழைந்தவன். தன் பக்தர்களுக்கு அவர்கள் விரும்பும் வடிவில் மீண்டும் மீண்டும் தோன்றுபவர்.
  • 662. அநிர் தே³ஸ்²ய வபுர் - சொல்லித் தலைக்கட்ட முடியாத திருமேனிகளை உடையவர்.
  • 663. விஷ்ணுர் - எங்கும் நிறைந்திருப்பவர். பரவுபவர்.
  • 664. வீரோ - வீரன். அவர் ஒரு விரைவான இயக்கம். அவர் தனது எதிரிகளை அழிப்பவர். எதிரிகளை தன் முன் நடுங்கச் செய்து முதுகைக் காட்டி ஓடச் செய்பவர்.
  • 665. அநந்தோ - எல்லையற்றவர்: முடிவில்லாதவர்.
  • 666. த⁴நஞ்ஜயஹ - உலக ஐஸ்வர்யங்களை விட மேலானவர். அனைத்து செல்வங்களையும் வென்றவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.37

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.37 

ஹதோ வா ப்ராப்ஸ் யஸி ஸ்வர்க³ம் 
ஜித்வா வா போ⁴க்ஷ் யஸே மஹீம்|
தஸ்மா து³த் திஷ்ட² கௌந்தேய 
யுத்³தா⁴ய க்ருத நிஸ்²சய:||

  • ஹதோ வா - கொல்லப்பட்டாலோ 
  • ப்ராப்ஸ் யஸி - அடைவாய் 
  • ஸ்வர்க³ம் - ஸ்வர்கத்தை 
  • ஜித்வா வா - வெற்றி பெற்றாலோ 
  • போ⁴க்ஷ் யஸே - அனுபவிப்பாய் 
  • மஹீம் - இவ்வுலகை 
  • தஸ்மாத்³ - எனவே 
  • உத்திஷ்ட² - எழுவாய் 
  • கௌந்தேய - குந்தியின் மகனே 
  • யுத்³தா⁴ய - போரிட 
  • க்ருத - உறுதி கொள் 
  • நிஸ்²சயஹ - நிச்சயமாக

குந்தியின் மகனே! கொல்லப்பட்டாலோ ஸ்வர்கத்தை அடைவாய், வெற்றி பெற்றாலோ இவ்வுலகை அனுபவிப்பாய். எனவே, எழுந்து துணிவோடும், உறுதியோடும் போர் புரிக!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.35

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.35

ஏவம் ஜந்மாநி கர்மாணி 
ஹ்யகர் துர் அஜ நஸ்ய ச|
வர்ண யந்திஸ் மக வயோ 
வேத³ கு³ஹ்யாநி ஹ்ருத் பதே:||

  • ஏவம் - இவ்வாறு
  • அஜ நஸ்ய ஹி  - பிறப்பே இல்லாதவரும்
  • ஹ்ருத் பதேஹே -   ஸர்வ ஜீவனுக்கும் அந்தர்யாமியுமான
  • ஜந்மாநி -  ஜென்மாக்களையும்
  • அயகர் துர் -   எந்தவித வியாபாரமும் இல்லாதவர்க்கு
  • கர்மாணி ச - வியாபாரங்களையும்
  • கவயோ - கவிகள்
  • வேத³ கு³ஹ்யாநி -   வேதத்தில் ரஹஸ்யமாக கூறப்பட்டவைகளாக 
  • வர்ண யந்தி ஸ்ம -  வர்ணிக்கின்றனர்

சகல ஜீவராசிகளிலும் உட்புகுந்து விளங்கும் பிறப்பில்லாத பகவானுக்கு 'அவதாரம்' என்று பிறவியையும், ஒன்றும் செய்யாமல் சாட்சியாக பார்த்துக் கொண்டிருப்பவனுக்கு 'அவதார லீலைகள்' என்று கர்மங்களையும் சொல்வது, 'வேதங்களில் அடங்கிய பரம ரகசியம்' என்று கவிகள் வர்ணிக்கின்றனர். அதாவது, ஜீவனுக்குப் பிறப்பு முதலியன உண்டென்று சொல்வது போல, பரமாத்மாவுக்கு அவதாரமும் அவதார லீலைகளும், மாயையே தவிர வேறில்லை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.35

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.35

க³த்வா து ஸுமஹாத் மாநம் 
ராமம் ஸத்ய பராக்ரமம்|
அயாசத்³ ப்⁴ராதரம் ராமம்
ஆர்ய பா⁴வ புரஸ் க்ருத:|| 

  • ஆர்ய பா⁴வ - தர்ம வழியில் 
  • புரஸ் க்ருதஹ - முதன்மைப் பெயர் பெற்றவர்
  • து - தம் வரையில்
  • ஸுமஹாத் மாநம் - ஸும ஹாத்மாவான
  • ஸத்ய பராக்ரமம் - ஸத்ய பராக்ரமம்  உள்ள
  • ராமம் - ஸ்ரீ ராமரை 
  • க³த்வா - அடைந்து
  • ப்⁴ராதரம் - உடன் பிறந்தவரான
  • ராமம் - ஸ்ரீ ராமரை
  • அயாசத்³  - கெஞ்சி கேட்டார்  

ஆரியனைப் போல, ராமனே மன்னனாக நிறுவப்பட வேண்டும் என்ற கருத்தைக் கொண்டு தர்ம வழியில் உன்னதனாகச் சிந்தித்த அவன், ராமனிடம் சென்று, மஹாத்மாவும், உண்மையான ஆற்றலைக் கொண்டவனுமான தன் தமையன் ராமனிடம்  கெஞ்சி கேட்டார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்  

திவ்ய ப்ரபந்தம் - 80 - பெரியாழ்வார் திருமொழி - 1.6.6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 80 - தேவகி சிங்கமே! சப்பாணி கொட்டு
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஆறாம் திருமொழி - ஆறாம் பாசுரம்

தாரித்து நூற்றுவர்* தந்தை சொற் கொள்ளாது* 
போருய்த்து வந்து* புகுந்தவர் மண்ணாளப்* 
பாரித்த மன்னர் படப்* பஞ்சவர்க்கு* 
அன்று தேருய்த்த கைகளால் சப்பாணி* 
தேவகி சிங்கமே! சப்பாணி|

  • தந்தை - எல்லார்க்கும் பிதாவாகிய 
  • சொல் - உனது பேச்சை 
  • தாரித்து கொள்ளாது - மனத்தில் கொண்டு சொன்னபடி கேட்காமல் 
  • போர் உய்த்து வந்து - யுத்தத்தை நடத்துவதாக கர்வத்துடன் வந்து 
  • புகுந்தவர் - போர்க் களத்தில் பிரவேசித்து 
  • மண் - தாங்களே பூமி முழுவதும் 
  • ஆள பாரித்த - ஆளுவதற்கு முயற்சி செய்த 
  • மன்னர் - அரசர்களாகிய 
  • நூற்றுவர் - நூற்றுக் கணக்காய் இருந்த கௌரவர்கள்
  • பட - மாண்டு போகும்படி 
  • பஞ்சவர்க்கு - பாண்டவர்கள் ஐவர்க்கும் வெற்றி உண்டாக
  • அன்று தேர் உய்த்த - அன்று பார்த்த ஸாரதியாய் நின்று தேரை ஓட்டின
  • கைகளால் - திருக்கைகளாலே 
  • சப்பாணி கொட்டாய்! - சப்பாணி கொட்டி அருள வேணும்
  • தேவகி - தேவகியின் வயிற்றில் பிறந்த 
  • சிங்கமே! - சிங்கக்குட்டியே! 
  • சப்பாணி - சப்பாணி கொட்டி அருள வேணும்

தந்தையாகிய உன் சொல் கேளாமல் ராஜ்யத்தை தாங்களே ஆளும் பேராசையினால் பஞ்ச பாண்டவர்களின் மீது போர் தொடுத்து வந்த நூற்றுக்கணக்கான துர்யோதன மன்னர்களை மாய்த்து, இது விஷயமாக பாரத யுத்தத்தில் பாண்டவர்களுக்காக தேரை ஒட்டிய அத் திருக்கைகளால் சப்பாணி கொட்ட வேண்டும். தேவகியிடமிருந்து தோன்றிய சிங்கக் குட்டியைப் போன்றவனே, நீ சப்பாணி கொட்ட வேண்டும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 022 - திருவெள்ளியங்குடி 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

022. திருவெள்ளியங்குடி (கும்பகோணம்)
இருபத்தி இரண்டாவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10

திருமங்கையாழ்வார்

001. திவ்ய ப்ரபந்தம் - 1338 - கண்ணன் கருதிய கோயில் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - பத்தாம் திருமொழி - முதலாம் பாசுரம்
ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒரு கால்*
ஆல் இலை வளர்ந்த எம் பெருமான்*
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்துப்*
பெரு நிலம் அளந்தவன் கோயில்* 
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும்* எங்கும் ஆம் பொழில்களின் நடுவே*
வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென்பால்* திருவெள்ளியங்குடி அதுவே|

002. திவ்ய ப்ரபந்தம் - 1339 - காளியன் மேல் நடனமாடியவன் வாழ்விடம் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - பத்தாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு*
அரக்கர்தம் சிரங்களை உருட்டி*
கார் நிறை மேகம் கலந்தது ஓர் உருவக்* கண்ணனார் கருதிய கோயில்* 
பூ நிரைச் செருந்தி புன்னை முத்து அரும்பி* பொதும்பிடை வரி வண்டு மிண்டி*
தேன் இரைத்து உண்டு அங்கு இன் இசை முரலும்* திருவெள்ளியங்குடி அதுவே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1340 - காளமேகன் கருதும் கோயில் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - பத்தாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
கடு விடம் உடைய காளியன் தடத்தைக்* கலக்கி முன் அலக்கழித்து* 
அவன் தன் படம் இறப் பாய்ந்து பல் மணி சிந்தப்* 
பல் நடம் பயின்றவன் கோயில்* 
பட அரவு அல்குல் பாவை நல்லார்கள்* பயிற்றிய நாடகத்து ஒலி போய்*
அடை புடை தழுவி அண்டம் நின்று அதிரும்* திருவெள்ளியங்குடி அதுவே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1341 - பார்த்தசாரதியாய் இருந்தவன் இருக்கும் இடம் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - பத்தாம் திருமொழி - நான்காம் பாசுரம்
கறவை முன் காத்து கஞ்சனைக் காய்ந்த* காளமேகத் திரு உருவன்*
பறவை முன் உயர்த்து பாற்கடல் துயின்ற* பரமனார் பள்ளிகொள் கோயில்* 
துறைதுறைதோறும் பொன் மணி சிதறும்* 
தொகு திரை மண்ணியின் தென்பால்*
செறி மணி மாடக் கொடி கதிர் அணவும்* திருவெள்ளியங்குடி அதுவே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1342 - கோலவில்லி ராமன் கோயில் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - பத்தாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
பாரினை உண்டு பாரினை உமிழ்ந்து* பாரதம் கையெறிந்து* 
ஒரு கால் தேரினை ஊர்ந்து தேரினைத் துரந்த*
செங் கண் மால் சென்று உறை கோயில்* 
ஏர் நிரை வயலுள் வாளைகள் மறுகி*
எமக்கு இடம் அன்று இது என்று எண்ணி*
சீர் மலி பொய்கை சென்று அணைகின்ற* திருவெள்ளியங்குடி அதுவே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1343 - திருவிக்கிரமன் கோயில் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - பத்தாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
காற்றிடைப் பூளை கரந்தென அரந்தை உறக்* கடல் அரக்கர்தம் சேனை*
கூற்றிடைச் செல்ல கொடுங் கணை துரந்த* கோல வில் இராமன்தன் கோயில்* 
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள்* ஊழ்த்து வீழ்ந்தன உண்டு மண்டி*
சேற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ்* திருவெள்ளியங்குடி அதுவே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1344 - நரசிங்கப் பெருமான் வாழ்விடம் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - பத்தாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த* மாவலி வேள்வியில் புக்கு*
தெள்ளிய குறள் ஆய் மூவடி கொண்டு* திக்கு உற வளர்ந்தவன் கோயில்* 
அள்ளி அம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள்* 
அரி அரி என்று அவை அழைப்ப*
வெள்ளியார் வணங்க விரைந்து அருள் செய்வான்* 
திருவெள்ளியங்குடி அதுவே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1345 - ஆழியான் அமரும் கோயில் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - பத்தாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
முடி உடை அமரர்க்கு இடர் செய்யும்* அசுரர் தம் பெருமானை* 
அன்று அரி ஆய் மடியிடை வைத்து மார்வம் முன் கீண்ட*
மாயனார் மன்னிய கோயில்* 
படியிடை மாடத்து அடியிடைத் தூணில்* பதித்த பல் மணிகளின் ஒளியால்*
விடி பகல் இரவு என்று அறிவு அரிது ஆய* திருவெள்ளியங்குடி அதுவே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1346 - இவ்வுலகை ஆள்வர்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - பத்தாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
குடி குடி ஆகக் கூடி நின்று அமரர்* குணங்களே பிதற்றி நின்று ஏத்த*
அடியவர்க்கு அருளி அரவுஅணைத் துயின்ற* 
ஆழியான் அமர்ந்து உறை கோயில்* 
கடி உடைக் கமலம் அடியிடை மலரக்* கரும்பொடு பெருஞ் செந்நெல் அசைய*
வடிவு உடை அன்னம் பெடையொடும் சேரும்* வயல் வெள்ளியங்குடி அதுவே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1347 - திருப்புள்ளம் பூதங்குடி
பெரிய திருமொழி - நான்காம் பத்து - பத்தாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
பண்டு முன் ஏனம் ஆகி அன்று ஒருகால்* பார் இடந்து எயிற்றினில் கொண்டு*
தெண் திரை வருடப் பாற்கடல் துயின்ற* திருவெள்ளியங்குடியானை*
வண்டு அறை சோலை மங்கையர் தலைவன்* 
மான வேல் கலியன் வாய் ஒலிகள்*
கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள்* ஆள்வர் இக் குரை கடல் உலகே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்