About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 27 December 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 89

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 59

வேதா⁴: ஸ்வாங்கோ³ ஜித: க்ருஷ்ணோ
த்³ருட⁴: ஸங்கர் ஷணோ ஸ்²யுத:|
வருணோ வாருணோ வ்ருக்ஷ:
புஷ்க ராக்ஷோ மஹா மநா:||

  • 551. வேதா⁴ஸ் - மங்களகரமானவர். சுப காரியங்களைச் செய்பவர். உருவாக்கியவர். வழங்குபவர். 
  • 552. ஸ்வாங்க³ - ஆளுகின்ற அரசாங்கத்தைப் பெற்றவர். இறையாண்மையின் அடையாளங்களைக் கொண்டவர். பிரபஞ்சத்தின் கருவி காரணமாகவும் பொருள் காரணமாகவும் இருக்கிறார். அழகான, நன்கு விகிதாசாரமான உறுப்புகளைக் கொண்டிருக்கிறார்.
  • 553. அஜிதஹ் - வெற்றி கொள்ள முடியாதவர். ஸ்ரீவைகுண்டம் என்று அழைக்கப்படும் வெல்ல முடியாத தலத்தின் அதிபதி. 
  • 554. கிருஷ்ணோ - கண்ணன் என்னும் கரு நிறத்தோன். தவிர்க்க முடியாத வசீகரம் கொண்டவர்.
  • 555. த்³ருட⁴ஸ் - திடமானவர். எண்ணங்களிலும், சொல்லிலும், செயலிலும் உறுதியும் உறுதியும் உடையவர். வலிமையானவர்.
  • 556. ஸங்கர்ஷணோ - சித், அசித் ஆகியவற்றை ஒரே அடியாகத் தன்னிடம் ஈர்ப்பவர் வியூக வாசுதேவர். மற்றவர்களை தன் அருகில் இழுப்பவர்.
  • 557. அஸ்²யுதஹ - தனது நிலையிலிருந்து நழுவாதவர். பக்தர்களை ஒரு போதும் நழுவ விடாதவர். பிறப்பு, வளர்ச்சி, சிதைவு, நோய், இறப்பு போன்ற எந்த மாற்றமும் இல்லாதவர். 
  • 558. வருணோ - எல்லாவற்றையும் மூடி மறைந்திருப்பவர். உறைபவர்.
  • 559. வாருணோ - பக்தர்களிடம் எப்போதும் இருப்பவர். பக்தர்களின் துன்பங்களை நீக்குபவர்.
  • 560. வ்ருக்ஷஃ - மரம் போல் நிழல் தந்து காப்பவர். மரத்தைப் போல உறுதியாகவும் அசையாமலும் நிற்பவர்.
  • 561. புஷ்க ராக்ஷோ - வலிமையான கண்ணோக்கு உடையவர், கருணை பொழியும் கண்களை உடையவர். தாமரை போன்ற அழகிய கண்களை உடையவர். எல்லா இடங்களிலும் வியாபித்திருப்பவர். சூரியனையும் சந்திரனையும் கண்களாகக் கொண்டவர். இதயத் தாமரையில் தியானம் செய்யும் போது உணர்வின் ஒளியாக அவர் பிரகாசிப்பவர்.
  • 562. மஹா மநாஹ - பரந்த மனம் படைத்தவர். தாராள மனதுடன் இருப்பவர். மிகவும் திறமையான மனம் கொண்டவர். வரம்பற்ற திறன் கொண்ட மனம் (புத்தி) உடையவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.26

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.26 

அத² சைநம் நித்ய ஜாதம் 
நித்யம் வா மந்யஸே ம்ருதம்|
ததா²பி த்வம் மஹா பா³ஹோ 
நைநம் ஸோ²சிது மர்ஹஸி||

  • அத² - இருப்பினும் 
  • ச - மேலும் 
  • ஏநம் - இந்த ஆத்மா 
  • நித்ய ஜாதம் - எப்போதும் பிறந்து கொண்டே இருப்பவன் 
  • நித்யம் - என்றுமே 
  • வா-அவ்வாறே 
  • மந்யஸே - நீ இவ்வாறு நினைத்து 
  • ம்ருதம் - இறந்து கொண்டே இருப்பவன் 
  • ததா²பி - ஆனாலும் 
  • த்வம் - நீ 
  • மஹா பா³ஹோ - பலம் பொருந்திய புயங்களை உடையோனே 
  • ந - இல்லை 
  • ஏநம் - ஆத்மாவைப் பற்றி 
  • ஸோ²சிதும் - கவலைப்பட 
  • அர்ஹஸி - தகாது

அவ்வாறே இருப்பினும், இந்த ஆத்மா, எப்போதும் பிறந்து கொண்டே இருப்பவன், இறந்து கொண்டே இருப்பவன். பலம் பொருந்திய புயங்களை கொண்டவனே, என்றுமே ஆத்மாவைப் பற்றி நீ இவ்வாறு நினைத்து, கவலைப்பட தேவை இல்லை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.24

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.24

தத: கலௌ ஸம்ப்ர வ்ருத்தே 
ஸம் மோஹாய ஸுரத்³ விஷாம்|
பு³த்³தோ⁴ நாம் நா ஜந ஸுத: 
கீக டேஷு ப⁴விஷ்யதி||

  • ததஹ் - இருபத்தோராவது அவதாரத்தில் 
  • கலௌ - கலியுகம் 
  • ஸம்ப்ர வ்ருத்தே - ஆரம்பித்த போது 
  • ஸுரத்³ விஷாம் - அஸுரர்களை 
  • ஸம் மோஹாய - மயக்குவதற்காக 
  • கீக டேஷு - கயா ப்ரதேசத்தில் 
  • நாம் நா - தனது பெயரால் 
  • பு³த்³தோ⁴ - புத்தர் என்றவராய் 
  • அஜந ஸுதஹ - அஜந ஸுதராக 
  • ப⁴விஷ்யதி - உண்டாகப் போகிறார்

அதன் பிறகு இருபத்தோராவது அவதாரமாக, கலியுகத் தொடக்கத்தில் தேவர்களின் பகைவர்களாகிய அசுரர்களை மயக்குவதற்காக, கீகடம் என்கிற மகத ராஜ்யத்தில் அஜனன் என்பவரின் திருமகனாக 'புத்தர்' என்ற திருப்பெயருடன் திரு அவதாரம் செய்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.24

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

வநவாஸ:

ஸ்லோகம் - 1.1.24

ஸ ஜகா³ம வநம் வீர: 
ப்ரதிஜ்ஞா மநு பாலயந்|
பிதுர் வசந நிர்தே³ ஸா²த் 
கைகேய்யா: ப்ரிய காரணாத்||

  • ஸ வீரஹ - அந்த வீரன் ஸ்ரீராமன் 
  • பிதுர் - பிதாவினுடைய
  • வசந நிர்தே³ ஸா²த் - வார்த்தையாகிய ஆஞ்ஜையால்
  • கைகேய்யாஃ - கைகேயினுடைய
  • ப்ரிய காரணாத் - இஷ்ட நிமித்தமாக
  • ப்ரதிஜ்ஞாம் - ப்ரிதிக்ஞையை
  • அநு பாலயந் - பரிபாலிப்பவராய்
  • வநம் - வனத்திற்கு
  • ஜகா³ம - சென்றார்

அந்த வீரர் ராமன், தன் தந்தை கொடுத்த உறுதிமொழியைக் காப்பாற்றுவதற்காகவும், கைகேயியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவும்,  காட்டுக்குச் சென்றார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

திவ்ய ப்ரபந்தம் - 70 - பெரியாழ்வார் திருமொழி - 1.5.7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 70 - நப்பின்னை நாதனே!
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - ஐந்தாம் திருமொழி - ஏழாம் பாசுரம்

துப்புடை ஆயர்கள் தம் சொல் வழுவாதொரு கால்* 
தூய கருங்குழல் நற் தோகை மயிலனைய* 
நப்பினை தன் திறமா நல் விடை ஏழவிய* 
நல்ல திறலுடைய நாதனும் ஆனவனே!* 
தப்பின பிள்ளைகளைத் தன மிகு சோதி புகத்* 
தனியொரு தேர் கடவித் தாயொடு கூட்டிய* 
என் அப்ப! எனக்கொரு கால் ஆடுக செங்கீரை* 
ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே|

  • துப்பு உடை - நெஞ்சில் கடினத் தன்மை உடையரான
  • ஆயர்கள் தம் - இடையர்களுடைய
  • சொல் - வார்த்தையை
  • வழுவாது - தப்பாமல்
  • ஒரு கால் - ஒரு காலத்திலே
  • தூய - அழகியதாய்
  • கரு - கருமை நிற
  • குழல் - கூந்தலை உடையவளான 
  • நல் தோகை - நல்ல தோகையை உடைய
  • மயில் அனைய - மயில் போன்ற சாயலை உடையவளான
  • நப்பின்னை தன் திறமா - நப்பின்னைப் பிராட்டிக்காக
  • நல் - கொடிய 
  • விடைஏழ் - ஏழு முரட்டுக் காளைகளை
  • அவிய - அழியும் படி செய்த
  • நல்ல திறல் உடைய - நன்றான மிடுக்கை (திறமை) உடையனாய்
  • நாதன் ஆனவனே - இடையர்களின்  ஸ்வாமியானவனே!
  • தப்பின - பிறந்தவுடன் இறந்து போன
  • பிள்ளைகளை - வைதிகரின் நான்கு பிள்ளைகளையும்
  • தன் - தன்னுடைய
  • மிகு சோதி - தேஜோ ரூபமான பரம பதத்திலே
  • புக - செல்வதற்காக
  • தனி - தனியே
  • ஒரு - ஒப்பற்ற
  • தேர் - தேரை
  • கடலி - நடத்தி
  • தாயொடு கூட்டிய - உயிருடன் தாயிடம் சேர்ப்பித்த
  • என் அப்ப - என் அப்பனே!
  • எனக்கு - எனக்காக
  • ஒருகால் - ஒரு முறை
  • செங்கீரை ஆடுக - செங்கீரை ஆடியருள வேணும்
  • ஆயர்கள் - இடையர்களுக்காக
  • போர் ஏறே - போர் செய்ய, ரிஷபம் போலே நின்ற கண்ணனே! 
  • ஆடுக ஆடுகவே - ஆடிக் காட்டுவாயாக

கடும் நெஞ்சை உடைய இடையர்களின் வார்த்தைக்கு இணங்க மென்மையான திருமேனி உடையவனும், பராகிரமசாலியானவனும், ஆயர்களின் தலைவனுமான, கண்ணன் ஒரு சமயம் ஏழு முரட்டுக் காளைகளை அடக்கி, கருத்த கூந்தல் உடையவளும், மயில் தோகையைப் போன்றவளுமான நப்பின்னை பிராட்டியை மணந்து கொண்டான். பின்னர், ஒரு பிராமணனின் நாலு இறந்த பிள்ளைகளையும், தனியே ஒரு தேரில் பரமபதம் போய், அங்கிருந்து அவர்களை மீட்டு அவர்கள் தாயுடன் சேர்த்தான். ஆயர்களின் காளையே , பசுக்களின் ரக்ஷகனே, ஒரு செங்கீரை ஆடிவிடு என்கிறாள் யசோதை!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 019 - திருநாகை 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

019. திருநாகை (நாகப்பட்டினம்)
பத்தொண்பதாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ ஸௌந்தர்ய ராஜப் பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ ஸௌந்தர்யவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ ஸௌந்தர்ய ராஜன் பெருமாள் 
திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்: ஸௌந்தர்ய ராஜன்
  • பெருமாள் உற்சவர்: நீலமேகம்
  • தாயார் மூலவர்: ஸௌந்தர்ய வல்லி
  • தாயார் உற்சவர்: கஜலட்சுமி
  • திருமுக மண்டலம் திசை: கிழக்கு 
  • திருக்கோலம்: நின்ற 
  • புஷ்கரிணி/தீர்த்தம்: ஸார
  • விமானம்: ஸௌந்தர்ய
  • ஸ்தல விருக்ஷம்: மாமரம்
  • ப்ரத்யக்ஷம்: நாகராஜன், கலியன், ப்ரம்ஹாதிகள்
  • ஆகமம்: பாஞ்சராத்ரம்
  • ஸம்ப்ரதாயம்: தென் கலை
  • மங்களாஸாஸநம்: 1 ஆழ்வார்
  • பாசுரங்கள்: 10

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

தசாவதாரங்களை விளக்கக்கூடிய செம்பு தகட்டாலான மாலை பெருமாளின் இடையை அலங்கரிப்பதை பார்க்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஆதிசேஷனால் உண்டாக்கப்பட்ட சார புஷ்கரிணியில் நீராடி பெருமாளை வழிபட்டால் அவர்கள் சூரிய மண்டலத்தை அடைவார்கள் என்பது ஐதீகம். இங்குள்ள அஷ்டபுஜ துர்க்கையும் சக்தி வாய்ந்தவள். திருமங்கை ஆழ்வார் இத்தல பெருமாளின் அழகில் மயங்கிய நிலையில் ஒண்பது பாசுரங்களை பாடி விட்டு பத்தாவது பாடலில் தான் இத்தலத்தின் பெயரை குறிப்பிடுகிறார். கண்டன், சுகண்டன் என்ற இரு அந்தண சகோதரர்கள் நிறைய கொடும் செயல் புரிந்து வந்தார்கள். ஒரு நாள் இவர்கள் சார புஷ்கரிணியில் நீராடினார்கள். உடனே அவர்கள் பாவம் நீங்கி வைகுண்டம் சென்றார்கள்.  இவர்களது சிற்பங்களை பெருமாள் சன்னதியில் வைத்துள்ளார்கள்.

உத்தான பாத மகாராஜனின் குமாரன் துருவன். சிறுவனான இவன் நாரதர் மூலம் இத்தலத்தின் பெருமையை அறிந்தான். உலகம் முழுவதும் தனக்கே அடிமையாக வேண்டும் என்று பெருமாளை குறித்து தவம் செய்தான். இவனது தவத்தை கலைக்க தேவர்கள் இடைஞ்சல் செய்தனர். இருப்பினும் தவத்தை வெற்றிகரமாக முடித்த துருவன் முன்பு பெருமாள் கருடன் மீது அமர்ந்து பேரழகு பொருந்தியவராக தரிசனம் தந்தார். பெருமாளின் பேரழகில் மயங்கிய துருவன் தான் கேட்க வந்த வரத்தை மறந்தான். இறைவனது பேரழகே போதும். இதில் தான் உண்மையான சுகம் இருக்கிறது. அந்த பேரழகை எப்போதும் தரிசிக்கும் பாக்கியத்தை தர வேண்டும் என பெருமாளிடம் கேட்டான். பெருமாளும் தனது ஸௌந்தர்யமான திருக்கோலத்தை துருவனுக்கு காட்டி அவன் தவமிருந்த தலத்திலேயே தங்கினார். அழகான இவர் "ஸௌந்தர்ய ராஜப் பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார். 

நரசிம்மர் இங்கு எட்டு கரத்துடன் அஷ்டபுஜ நரசிம்மராக அருள்பாலிக்கிறார். ஒரு கை பிரகலாதனை ஆசிர்வதிப்பது போலவும், ஒரு கை அபய முத்திரையையும் காட்டுகிறது. மற்ற கைகள் இரண்யனை வதம் செய்கின்றன. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், திருக்குருகைப் பெருமான் கவிராயர், முத்துச்சாமி தீட்சிதர் ஆகியோரின் பாடல்கள் இப்பெருமாளின் பேரழகைப் பாடுகின்றன. நாகங்களுக்கெல்லாம் தலைவனான ஆதிசேஷன் இத்தலத்தில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி அதற்கு "சார புஷ்கரணி' என்று பெயரிட்டு அதன் கரையில் அமர்ந்து பெருமாள் குறித்து தவமிருந்தார். பெருமாளும் மகிழ்ந்து தனது படுக்கையாக ஏற்றுக்கொள்வதாக இத்தலத்தில் அருள்புரிந்தார். நாகம் (ஆதிசேஷன்) பெருமாளை ஆராதித்ததால் அவரது பெயராலேயே இவ்வூர் நாகப்பட்டினம் ஆனது.  

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்  

லீலை கண்ணன் கதைகள் - 80

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

நாரதரின் வருகை|

வந்தவர் பேசிக் கொண்டிருக்கும் போதே நாரதர் அங்கே வந்து சேர்ந்தார். கையில் தம்புராவுடன் அவர் நாராயணனைப் பற்றி பாடிக்கொண்டே வந்தார். கிருஷ்ணர் அவரைத் தகுந்த மரியாதையுடன் வரவேற்றார். 


பிறகு அவரைப் பார்த்து, 'மூன்று உலகங்களும் நலமாக இருக்கின்றன என்று நம்புகிறேன். மூன்று உலகங்களிலும் சஞ்சரிக்கும் தங்களால் எங்களுக்கு நன்மையே ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இந்த மூன்று உலகங்களைப் பற்றிய செய்திகளைத் தங்களிடமிருந்து எங்களால் தெரிந்துக் கொள்ள முடிகிறது. உங்களுக்குத் தெரியாதது ஒன்றும் இந்த மூன்று உலகங்களிலும் கிடையாது" என்று சொன்னார். 

நாரதர் சொன்னார், "கிருஷ்ணா! நீங்கள் சாதாரண மனிதனைப் போலத் தோற்றமளித்தாலும், நீங்கள் யார் என்பதை நான் அறிவேன். உலகில் நடப்பது ஒன்றும் தங்களுக்குத் தெரியாதது போலப் பேசுகிறேர்களே! அது எனக்குச் சிரிப்பைத் தான் உண்டாக்கிறது. இந்த உலகில் மட்டுமல்ல, மூன்று உலகங்களிலும் என்ன நடக்கிறது என்பது தங்களுக்குத் தெரியும். இருந்தும் தாங்கள் கேட்டதனால் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல விரும்புகிறேன். 

"குந்தியின் மகன் யுதிஷ்டிரர் ராஜசூயயாகம் செய்ய விரும்புகிறார். யாகத்திற்குப் பிறகு ஒரு சிறந்த புருஷரை ஆராதனை செய்ய வேண்டும். அதற்குத் தங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இதற்குத் தாங்கள் சம்மதம் தெரிவிக்க வேண்டும்" என்று வேண்டினார். நாரதரின் வார்த்தைகளைக் கேட்ட கிருஷ்ணர் தாம் ஒரு தர்மசங்கடத்தில் மாட்டிக்கொண்டிருப்பதை உணர்ந்தார். 

இரண்டு காரியங்கள் அவரை முன்னோக்கி இருந்தன. சுற்றிலும் பார்த்தபோது ஜராசந்தனோடு சண்டையிட்டு, அந்த அரசர்களை விடுதலை செய்ய, யாதவர்கள் துடித்துக் கொண்டிருந்தார்கள் என்று பட்டது. ஆனால், யுதிஷ்டிரர் தமது ராஜசூய யாகத்திற்காக விடுத்த அழைப்பை ஏற்று, அங்கே செல்ல வேண்டும் என்று கிருஷ்ணர் நினைத்தார். 

உடனே அவர் தம் விசாலமான கண்களால் தம் நண்பர் உத்தவரைப் பார்த்தார். "அன்புள்ள நண்பரே! தாங்கள் தாம் புத்தியில் சிறந்தவர்; எது சரி என்று வழி சொல்லக்கூடியவர். ஆகவே தாங்கள் என்ன செய்யச் சொல்லுகிறீர்களோ, அதன்படி நடப்பேன்" என்று சொன்னார். 

கிருஷ்ணரால் ஒரு கஷ்டமான காரியம் கொடுக்கப்பட்ட உத்தவர் அடக்கத்துடன் எழுந்து நின்று, "கிருஷ்ணா! எனக்கு இந்த இரண்டு காரியங்களும் முக்கியம் வாய்ந்தவை, இரண்டும் உடனே கவனிக்கப்பட வேண்டியவை என்று தோன்றுகிறது. தங்களுடைய அத்தை மகனான யுதிஷ்டிரர் தமது ராஜசூய யாகத்தில் தாங்கள் இருக்கவேண்டும்மென்று விரும்புகிறார். ஆனால் சிறைப்பட்ட அரசர்களை நினைத்தாலோ, ஒவ்வொரு நாளும் அவர்களுக்குச் சித்திரவதையாக இருப்பதுடன் தாங்கள் தாம் அவைகளைக் காப்பாற்ற முடியும். உலகிலுள்ள எல்லா அரசர்களுக்கும் சவால் விடுத்து, அவர்களை வென்ற அரசன்தான் ராஜசூய யாகம் நடத்த முடியும். அதனால் யுதிஷ்டிரர் ஜராசந்தனுக்கும் சவால் விடுத்து, அவனையும் தோற்கடிக்க வேண்டும். 

அதனால் நீங்கள் யுதிஷ்டிரரிடம் சென்று, ஜராசந்தனுக்குச் சவால் விடுக்கும் படி அவரைக் கேட்டுக் கொள்ளுங்கள். இதனால் இரண்டு காரியங்களும் ஒரே சமயத்தில் செய்து முடிக்க முடியும். ஜராசந்தன் பத்தாயிரம் யானை பலம் உள்ளவன் என்று கேள்வியுற்றிருக்கிறேன். அதனால் அவனைக் கொள்வது எளிதல்ல. அதனால் யாராவது அவனோடு மல்யுத்தம் செய்து தான் அவனைக் கொல்ல வேண்டும். இதைச் செய்யக் கூடியவன், யுதிஷ்டிரரின் தம்பியான பீமன் ஒருவன்தான். தன்னோடு மல்யுத்தம் செய்யும் படி பீமன் ஜராசந்தனுக்குச் சவால் விடுத்தால், ஜராசந்தன் க்ஷத்ரியனானதால் மறுக்க மாட்டான். பீமன் நிச்சயமாக அவனைக் கொன்று விடுவான்" என்று சொன்னார். 

உத்தவர் சொன்ன சரியான ஆலோசனையை நாரதர் உட்பட எல்லோரும் ஆமோதித்தார்கள். உடனே கிருஷ்ணர் கிரி விரஜத்திலிருந்து வந்த தூதரைப் பார்த்து, "அவர்கள் எல்லோரும் சீக்கிரமே விடுவிக்கப்படுவார்கள் என்று சிறைப்பட்ட அரசர்களிடம் சொல்லுங்கள்" என்று சொல்லியனுப்பினார்.

அவரும் கிரிவிரஜம் திரும்பி இந்த நல்ல செய்தியை அரசர்களுக்குச் சொன்னார். நாரதரும், தம் வந்த காரியம் முடிந்தது என்று சந்தோஷப்பட்டுக் கொண்டே, நாராயணனைத் துதித்துக் கொண்டே திரும்பினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 33

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

நம்பிக்கையூட்டும் ‌ஸத்குருவின் வாக்கு

ஸ்கந்தம் 02

ஸ்ரீ சுகாசார்யார் பரீக்ஷித் கேட்ட கேள்வியினால் மிகவும் மகிழ்ந்து சொல்லலானார்.

"அரசனே! உன் கேள்வி மிகவும் சிறப்பானது. அனைவர்க்கும் நன்மை பயப்பது. ஞானிகள் கொண்டாடும் கேள்வி. அனைவரும் அறிய வேண்டிய சிறந்த விஷயங்களைக் கேட்டிருக்கிறாய்.


மனிதர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம். அவர்களது அருமையான ஆயுள், இரவில் இன்புறுவதிலும், உறங்குவதிலும் வீணாகிறது. பகலில் பொருள் ஈட்டுதலிலும், குடும்பத்தைக் காப்பாற்றுவதிலும், கேளிக்கைகளிலும் வீணாகிறது.

மனிதன் இவ்வுடல், உறவுகள் எல்லாம் பொய்யென்று அறிந்தே இருக்கிறான். எவ்வளவு மரணங்களைக் கண் முன் கண்டாலும், அது தனக்கும் வரும் என்று சிந்திப்பதில்லை.

முக்தியை விரும்புபவன், அனைத்திலும் ஆன்மாவாக விளங்கும் பகவானான ஸ்ரீ க்ருஷ்ணனது திருவிளையாடல்களை செவியாரப் பருகி, வாயாரப் பாடி, மனதார நினைத்தல் வேண்டும்.

ஞானத்தினாலோ, பக்தியினாலோ, யோகத்தினாலோ, தர்மங்களைக் கடைப் பிடிப்பதாலோ வேறு சாதனைகளாலோ என்ன பயன் எனில், அது அவனுக்கு மரண காலத்தில் பகவானது நினைவைத் தர வெண்டும்.

ஏராளமான விதிகளையும், விரதங்களையும், அநுஷ்டானங்களையும் கடைப்பிடிக்கும் முனிவர்களும் கூட, பகவானின் கதைகளையும், கல்யாண குணங்களையும் கேட்பதில் மிக்க ஈடுபாடு கொள்கிறார்கள். எனில், மாந்தர்களுக்கு வேறு கதி என்ன இருக்கிறது?

நான் உனக்குச் சொல்லப் போகும் பாகவத புராணத்தை மஹாபாரத யுத்த முடிவில் நான் என் தந்தையான வியாஸரிடம் கற்றேன். நிர்குண ப்ரும்மத்தில் ஈடுபட்ட மனத்தை உடையவனாகினும் என்னை கண்ணனின் கதைகள் மிகவும் ஈர்த்தன.

நீ ஏற்கனவே க்ருஷ்ணனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளாய். இதைக் கேட்பதால் உனக்கு பகவானின் திருவடித் தாமரைகளில் நிஷ்காம்யமான (எதையும் எதிர்நோக்காத) பக்தி ஏற்படும்.

தனக்கு நன்மையைத் தேடிக் கொள்வதில் சோம்பேறித்தனம் கொள்பவனின் நீண்ட ஆயுள் விரைவில் கழியும். ஆனால், பொறுமையுடன் தன் ஆன்ம நலம் பற்றிச் சிந்திப்பவனின் சில மணித்துளிகளும் மிகவும் மேலானவை.

இக்ஷ்வாகு வம்சத்தில் கட்வாங்கன் என்று ஒரு அரசன் இருந்தார். அவர் மிகுந்த பராக்ரமத்துடன் விளங்கினார். தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அசுரர்களோடு போர் புரிந்து தேவர்களுக்கு வெற்றிக் கனியைக் கொடுத்தார். அதனால் மகிழ்ச்சி அடைந்த தேவர்கள், "முனிவரே, வேண்டிய வரம் கேளுங்கள்" என்றனர்.

கீழே பூலோகத்தைப் பார்த்தார். தேவலோகத்திற்கும் பூமிக்கும் காலக் கணக்கு வேறென்பதால், பூமியில் பல்லாயிரம் வருடங்கள் ஓடி விட்டன. அவரது மனைவி மக்களோ சுற்றத்தாரோ யாரும் இல்லை. அவரது பரம்பரையில் வேறு ஒருவர் அரச பீடத்தில் இருந்தார்.

எனவே தன் அரண்மனைக்குச் செல்ல விரும்பவில்லை. "முக்தி வேண்டும்" என்று கேட்டார்.

தேவர்கள் திகைத்தனர்.

"முக்தி கொடுக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. நாங்களும் முக்திக்கு ஆசைப்படுபவர்களே. ஸ்ரீமன் நாராயணன் ஒருவரே முக்தி வழங்கும் தெய்வம். வேறு வரம் கேளுங்கள்" என்றான் தேவேந்திரன்.

கட்வாங்கர் சற்று யோசித்து, "எனில், எனக்கு இன்னும் எவ்வளவு ஆயுள் மீதி இருக்கிறது என்று சொல்ல முடியுமா?"

"அது முடியும் முனிவரே. தங்களுக்கு இன்னும் ஒரு முஹூர்த்த காலமே ஆயுள் உள்ளது" என்று சொன்னான்.

கட்வாங்கர் உடனேயே பத்மாசனத்தில் அமர்ந்து மனத்தை ஒரு நிலைப் படுத்தி, பற்றுக்கள் அனைத்தையும் துறந்து ஸ்ரீமன் நாராயணனின் திருவடியில் மனத்தை நிறுத்தினார். அக்கணமே சரீரத்தைத் துறந்து முக்தி யடைந்தார்.

பரீக்ஷித்தே, உனக்கு ஏழு நாள்கள் அவகாசம் இருக்கிறது. அதுவரை நிச்சயம் காலன் வரப்போவது இல்லை. எனவே, நீ தாராளமாக உனக்கான நன்மையை அடைந்து விட முடியும்" என்று அவனை உற்சாகப்படுத்தும் விதமாகச் சொன்னார்.

ஏழு நாள்களை மிகக் குறைவு என்று எண்ணி இருந்த பரீக்ஷித்திற்கு (நமக்கும்) குருவின் நம்பிக்கை ஊட்டும் பேச்சு பெரு மகிழ்ச்சியைத் தந்தது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்