About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 18 February 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 113

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 83

ஸமா வர்த்தோ நிவ்ருத் தாத்மா 
து³ர்ஜயோ து³ரதி க்ரம:|
து³ர்லபோ⁴ து³ர்க³மோ து³ர்கோ³ 
து³ரா வாஸோ து³ராரிஹா||

  • 779. ஸமா வர்த்தோ - திரும்பத் திரும்ப அவதரிப்பவர். தனது படைப்பின் செயல்பாட்டை சுழற்சியில் மீண்டும் மீண்டும் செய்கிறார். அவருடைய  எண்ணங்கள், எப்பொழுதும் தன் பக்தர்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதைச் சுற்றியே சுழல்கின்றன.
  • 780. நிவ்ருத் தாத்மா - ஒன்றிலும் சேராத தனித்த திருப்பப்பட்ட மனதை உடையவர். முதன்மையானவர், ஒப்பற்றவர். உயர்ந்தவர். பெரியவர்களை விட பெரியவர்.  உலகப் பற்றுகளிலிருந்து மனம் திரும்பியவர்.  நிவிருத்தி தர்மத்தை கடைப்பிடிப்பவர்களின் ஆத்மாவாக இருப்பவர்.  கர்மாவின்படி பலன்களை வழங்குபவர்.தனது அவதாரங்களை நம்மிடையே எடுத்துக் கொண்டாலும், அவர் சம்சாரத்தின் பந்தங்களிலிருந்து விடுபட்டவர். எங்கும் நிறைந்திருப்பதால் எதையும் விட்டு எங்கும் விலகாதவர். பிரளய காலத்தில் ஜீவாத்மாக்களை தன்னுள் இழுத்துக் கொண்டவர். அனைத்தையும் முழுமையாக ஊடுருவியவர். சிருஷ்டியின் (படைப்பு) பிரளய (அழித்தல்) விளைவுகளால் பாதிக்கப்படாதவர்.
  • 781. து³ர்ஜயோ - வெற்றி கொள்ள முடியாதவர். அன்பாலும் பக்தியாலும் தவிர  கட்டுப்படுத்த முடியாதவர்.
  • 782. து³ரதி க்ரமஹ - மீற முடியாதவர். மோட்சத்தை நாடுபவர்களால் அவருக்கு கீழ்ப்படியவோ அல்லது புறக்கணிக்கவோ முடியாது.
  • 783. து³ர்லபோ⁴ - அடைவதற்கு அரியவர். ஒரே மனப்பான்மையின் மூலம் மட்டுமே அடைய முடியும்.
  • 784. து³ர்க³மோ - நெருங்க முடியாத ஒளியை உடையவர். அவரது பிரகாசத்தால் அவரை அடைவது கடினம்.
  • 785. து³ர்கோ³ - அடைய முடியாதவர். பெரும் தடைகள் காரணமாக அவர் எளிதில் உணரப்படுவதில்லை.
  • 786. து³ரா வாஸோ - நெருங்க முடியாத இருப்பிடத்தை உடையவர். அவரது இருப்பிடமான ஸ்ரீ வைகுந்தம் அடைவது எளிதல்ல.
  • 787. து³ராரிஹா - தன்னை அடைய ஓட்டாமல் தீயவரை விலக்கி வைப்பவர். தீய எண்ணம் கொண்ட எதிரிகளை விரட்டுபவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.50

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.50 

பு³த்³தி⁴ யுக்தோ ஜஹாதீஹ 
உபே⁴ ஸுக்ருத து³ஷ் க்ருதே|
தஸ்மாத்³ யோகா³ய யுஜ் யஸ்வ 
யோக³: கர்மஸு கௌஸ²லம்||

  • பு³த்³தி⁴ யுக்தோ - புத்தியுடையவன்
  • ஜஹாதி - தப்ப இயலும் 
  • இஹ - இவ்வாழ்வில் 
  • உபே⁴ - இரண்டிலும் 
  • ஸுக்ருத து³ஷ்க்ருதே - நற்செய்கை தீச்செய்கை 
  • தஸ்மாத்³ - எனவே 
  • யோகா³ய - பக்தித் தொண்டிற்காக 
  • யுஜ் யஸ்வ - ஈடுபடு 
  • யோக³ஹ் - யோக உணர்வு 
  • கர்மஸு - எல்லாச் செயல்களிலும் 
  • கௌஸ²லம் - திறமையாம் (விடுபட உபாயமாகும்)

புத்தியுடையவன் இங்கு நற்செய்கை தீச்செய்கை இரண்டையும் துறக்கிறான். ஆதலால் நீ யோகத்திலே பொருந்தி விடு. யோகம் செயல்களில் ஈடுபடுவாயாக.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.3

கஸ்மிந் யுகே³ ப்ரவ்ருத் தேயம் 
ஸ்தா²நே வா கேந ஹேதுநா|
குத: ஸஞ்சோதி³த: க்ருஷ்ண: 
க்ருதவாந் ஸம்ஹிதாம் முநி:|| 

  • கஸ்மிந் யுகே³ - எந்த யுகத்தில்
  • இயம் ப்ரவ்ருத்தா -  இக்கதை நடந்தது
  • ஸ்தா²நே வா - எந்த இடத்தில் ஏற்பட்டது
  • கேந ஹேதுநா - என்ன காரணத்தால் ஏற்பட்டது
  • குதஸ் - என்ன காரணம் கொண்டு
  • ஸஞ்சோதி³தஹ் - தூண்டப்பட்டவராய்
  • முநிஹி - மஹரிஷியான
  • க்ருஷ்ணஹ - வியாஸ பகவான்
  • ஸம்ஹிதாம் - இந்த ஸ்ரீமத் பாகவதத்தை
  • க்ருதவாந் - செய்தார்

இது எந்த காலகட்டத்தில் மற்றும் எந்த இடத்தில் முதன்முதலில் தொடங்கப்பட்டது, இது ஏன் எடுக்கப்பட்டது? மகா முனிவரான கிருஷ்ண த்வைபாயன வியாசர் இந்த இலக்கியத்தைத் தொகுக்க எங்கிருந்து உத்வேகம் பெற்றார்?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.48

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.48

நிஜகா⁴ந ரணே ராமஸ் 
தேஷாம் சைவ பதா³நு கா³ந்|
வநே தஸ்மிந் நிவஸதா 
ஜநஸ் தா²ந நிவாஸி நாம்|| 

  • தேஷாம் - அவர்களுடைய
  • பதா³நு கா³ந் -  கூட்டாளிகளையும்
  • ராமஸ் ஏவ - ஸ்ரீராமரே
  • ரணே - போரில்
  • நிஜகா⁴ந - கொன்றார்
  • தஸ்மிந் வநே - அந்த வனத்தில்
  • நிவஸதா - வஸித்து வந்தவராலே
  • ஜநஸ் தா²ந நிவாஸி நாம் - ஜன ஸ்தானத்தில் வஸித்து வந்த

மற்றும் அவர்களுடைய கூட்டாளிகள் அனைவரையும், அவர்களின் தொண்டர்களையும் ஸ்ரீராமரே போரில் கொன்றார். அந்த வனத்தில் அவர் வசித்திருந்த போது, ஜன ஸ்தானத்தில் வஸித்து வந்த, 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்  

திவ்ய ப்ரபந்தம் - 92 - பெரியாழ்வார் திருமொழி - 1.7.7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 92 - சார்ங்கம் என்னும் வில்லை ஏந்தியவன்
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - ஏழாம் திருமொழி - ஏழாம் பாசுரம்

படர் பங்கைய மலர் வாய் நெகிழப்* 
பனி படு சிறு துளி போல்* 
இடங் கொண்ட செவ்வாய் ஊறி ஊறி* 
ற்றிற்று வீழ நின்று
கடுஞ் சேக்கழுத்தின் மணிக் குரல் போல்* 
உடை மணி கணகணென* 
தடந் தாளிணை கொண்டு சாரங்கபாணி* 
தளர் நடை நடவானோ!

  • படர் - படர்ந்திருக்கிற
  • பங்கயம் மலர் - தாமரைப் பூ
  • வாய் நெகிழ - மொட்டாக இல்லாமல் வாய் திறந்து மலரும் போது அதில் இருந்து பெருகுகி்ன்ற
  • பனி படு - குளிர்ச்சி பொருந்திய மதுவாகிய தேனானது
  • சிறு துளி போல - சொட்டுச்சொட்டாக விழும் துளியைப் போலே
  • இடம் கொண்ட - பெருமை கொண்டுள்ள
  • செவ்வாய் - தனது சிவந்த வாயில் இருந்தும்
  • ஊறி ஊறி - ஜலமானது இடைவிடாமல் சுரந்து
  • இற்று இற்று - நடுவே முறிந்து முறிந்து சொட்டு சொட்டாக
  • வீழ நின்று - கீழே விழும் படி நின்று 
  • கடும் சே - முரட்டு ரிஷபத்தின்
  • கழுத்தில் - கழுத்திலே கட்டப்பட்டுள்ள
  • மணி - மணியினுடைய
  • குரல் போல் - ஒலி போலே
  • உடை மணி - தனது இடுப்பில் கட்டிய மணி
  • கண கண என - கண கண என்று ஒலிக்க
  • தடம் தாளிணை கொண்டு - அழகியதாய் பருத்த இரண்டு பாதங்களாலும்
  • சார்ங்க பாணி - சார்ங்கம் என்னும் வில்லை ஏந்தியவனே!
  • தளர் நடை - அழகிய இளம் நடையை
  • நடவானோ - நடக்க மாட்டானோ? நடக்க வேணும்

மலர்ந்த தாமரைப் பூவில் இருந்து குளிர்ந்த தேன் சிறு சிறு துளியாக ஒழுகுவதைப் போல், கண்ணனின் சிவந்த வாயில் இருந்து ஊரும் ஜலமானது தொடர்ந்து கீழே முறிந்து விழ, இடுப்பில் கட்டின மணியின் ஓசை கொடிய ரிஷபத்தின் கழுத்தில் கட்டின மணியின் ஓசையைப் போல கண கண என்றொலிக்க, பெரிய கால்களையுடைய சார்ங்கபாணியான கண்ணன் தளர் நடையிட்டு வருவானோ என ஏங்குகிறார் ஆழ்வார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 027 - திருக்காவளம்பாடி 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

027. திருக்காவளம்பாடி (திருநாங்கூர்)
இருபத்தி ஏழாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ கோபால கிருஷ்ணன் பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ மடவரல் மங்கை தாயார் ஸமேத ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் பெருமாள் திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்: கோபாலகிருஷ்ணன்
  • பெருமாள் உற்சவர்: ராஜ கோபாலன்
  • தாயார் மூலவர்: மடவரல் மங்கை
  • தாயார் உற்சவர்: செங்கமல நாச்சியார்
  • திருமுக மண்டலம் திசை: கிழக்கு 
  • திருக்கோலம்: நின்ற - பாமா ருக்மணியுடன்
  • புஷ்கரிணி/தீர்த்தம்: தடமலர்ப் பொய்கை
  • விமானம்: ஸ்வயம்பு, வேதா மோத
  • ப்ரத்யக்ஷம்: சேனைத் தலைவர், மித்ர தேவர், ருத்ரன்
  • ஸம்ப்ரதாயம்: தென் கலை
  • மங்களாஸாஸநம்: 1 ஆழ்வார்
  • பாசுரங்கள்: 10

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

கிருஷ்ண பரமாத்மா சத்ய பாமாவுடன் சேர்ந்து நரகாசுர வதத்தை நிகழ்த்தினார். இந்திரன், வருணன் உள்ளிட்டோரிடம் இருந்து நரகாசுரன் அபகரித்த பொருட்கள் யாவற்றையும் அவர்களுக்கே கிருஷ்ணர் மீட்டுத் கொடுத்த பிறகு, அவர்கள் கிருஷ்ணருக்கு நன்றி தெரிவித்தனர்.

நீண்ட நாட்கள் கழித்து, இந்திரன் தோட்டத்தில் விளைந்த பாரிஜாத மலர் குறித்து அறிகிறார் சத்யபாமா. தனக்கு அந்த மலர் வேண்டும் என்று கிருஷ்ணரிடம் கேட்கிறார். கிருஷ்ணரும் உரிமையோடு பாரிஜாத மலரைத் தருமாறு இந்திரனிடம் கேட்கிறார். ஆனால் அதற்கு இந்திரன் உடன்படவில்லை.

கோபம் கொண்ட கிருஷ்ணர், இந்திரனோடு போர் செய்து, அவரது காவளத்தை (பூம்பொழில்) அழித்தார். துவாரகாவில் இருந்து வந்த கிருஷ்ணர், தான் இருப்பதற்கு ஓர் இடத்தை தேர்ந்தெடுக்க விரும்பினார். பிறகு மிகவும் பசுமை நிறைந்த இந்த இடத்திலேயே கோயில் கொண்டார். இந்த இடத்திலேயே சத்யபாமாவுக்காக பாரிஜாத மலர்ச் செடியை நட்டார் கிருஷ்ண பரமாத்மா.

இத்தலத்துக்கு அருகிலேயே திருமங்கையாழ்வாரின் பிறந்த இடமான குறையலூரும், அவர் வைணவர் அடியாருக்கு அன்னதானம் நடத்திய மங்கை மடமும் உள்ளன.

கோயில் சிறியது தான் என்றாலும், மிக அருமையாக உள்ள இத்தலத்தில் ராஜகோபால சுவாமி கிழக்கு நோக்கி ருக்மிணி, சத்யபாமாவுடன் எழுந்தருளி உள்ளார்.

ஆண்டு தோறும் தை அமாவாசைக்கு மறுநாள் இப்பகுதியிலுள்ள 11 திருப்பதி பெருமாள்களும் ஒன்றாக கருட சேவைக்கு மணிமாடக் கோவிலில் எழுந்து அருள்வார்கள். இவர்களுக்கு மங்களாஸாஸநம் செய்வதற்காக திருமங்கை ஆழ்வார் இங்கு எழுந்து அருள்வார். அன்றைய தினம் இந்த ஊரைச் சுற்றி உள்ள வயல் வெளிகளில் உள்ள நெற் பயிர்கள் காற்றினால் ஆடும் சத்தத்தை கேட்டதும், அந்த சப்த வடிவில் திருமங்கை ஆழ்வாரே வந்து விட்டதாக பக்தர்கள் பரவசம் அடைவார்கள். பதினொரு பெருமாளையும் மங்களாஸாஸநம் செய்த பிறகு, திருமங்கை ஆழ்வாரை மணவாள மாமுனிகள் மங்களாஸாஸநம் செய்வார். இந்த கண்கொள்ளா காட்சியை காண ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள்.

சிவனுக்கும், சேனைத் தலைவர் விஷ்வக் சேனருக்கும் இங்கு கிருஷ்ணன் காட்சி தந்துள்ளார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

லீலை கண்ணன் கதைகள் - 104

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ரிஷிகளின் சாபம்|

ஒரு நாள் சில யாதவர்கள், தங்கள் முட்டாள்தனம் காரணமாக, ரிஷிகளைச் சீண்ட விரும்பினார்கள். அவர்கள் கிருஷ்ணருக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்த சாம்பனுக்குப் பெண் வேஷம் போட்டார்கள். பிறகு ரிஷிகளிடம் சென்று, ரொம்ப அடக்கம் உள்ளவர்கள் போல நடித்து, அவர்களைப் பார்த்து, 'இந்த இளம் பெண் கருவுற்றிருக்கிறாள். இவளுக்குப் பிறக்கப் போவது ஆணா, பெண்ணா சொல்லுங்கள்?' என்று கேட்டார்கள்.


அவர்களுடைய கபடத்தனத்தைப் புரிந்துகொண்ட ரிஷிகள் மிகவும் கோபம் கொண்டு, அவர்களைச் சபித்தார்கள்: 'ஓ மடையர்களே! அவன் ஓர் இரும்பு உலக்கையை ஈன்றெடுப்பான். அது உங்கள் குலத்தையே அழிக்கும்' என்றார்கள்.

ரிஷிகளின் சாபத்தைக் கேட்டுப் பயந்து அந்த இளைஞர்கள் உடனே சாம்பனின் வேஷத்தைக் கலைத்தார்கள். அப்பொழுது ஓர் இரும்பு உலக்கை அவன் புடவையிலிருந்து கீழே விழுந்தது. ஒன்றும் புரியாமல் அவர்கள் அந்த உலக்கையை எடுத்துக் கொண்டு அரசவைக்குச் சென்று, நடந்த விஷயங்களைச் சொன்னார்கள்.

ரிஷிகளின் சாபத்தைக் கேட்டுச் சபையில் இருந்த எல்லாரும் நடு நடுங்கினார்கள். சாபத்தைத் தவிர்ப்பதற்கு உக்கிரசேனர் ஒரு வழி கண்டுப்பிடித்தார். உலக்கையைப் பொடிசெய்து, அந்தப் பொடியைக் கடலில் எறியும்படிச் சொன்னார். அப்படியே அதைப் பொடி செய்து கடலில் எறிந்தார்கள். ஆனால், ஒரே ஒரு கூரிய துண்டைப் பொடி பண்ண முடியவில்லை. ஆகவே, அதையும் கடலில் தூக்கி எறிந்தார்கள்.

இந்த இரும்புத் துண்டைக் கடலில் இருந்த ஒரு மீன் சாப்பிட்டது. பிறகு ஒரு செம்படவன் அந்த மீனைப் பிடிக்க, அதன் வயிற்றில் அந்த இரும்பைக் கண்டான். அதை அவன் தட்டி, ஓர் அம்பின் தலையாகச் செய்தான். மற்ற இரும்புப் பொடிகள் கடற்கரைக்குத் தள்ளப்பட, அவை ஏரக் என்று அழைக்கப்படும் புல்லாக வளர்ந்தன.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்