About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 18 February 2024

லீலை கண்ணன் கதைகள் - 104

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ரிஷிகளின் சாபம்|

ஒரு நாள் சில யாதவர்கள், தங்கள் முட்டாள்தனம் காரணமாக, ரிஷிகளைச் சீண்ட விரும்பினார்கள். அவர்கள் கிருஷ்ணருக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்த சாம்பனுக்குப் பெண் வேஷம் போட்டார்கள். பிறகு ரிஷிகளிடம் சென்று, ரொம்ப அடக்கம் உள்ளவர்கள் போல நடித்து, அவர்களைப் பார்த்து, 'இந்த இளம் பெண் கருவுற்றிருக்கிறாள். இவளுக்குப் பிறக்கப் போவது ஆணா, பெண்ணா சொல்லுங்கள்?' என்று கேட்டார்கள்.


அவர்களுடைய கபடத்தனத்தைப் புரிந்துகொண்ட ரிஷிகள் மிகவும் கோபம் கொண்டு, அவர்களைச் சபித்தார்கள்: 'ஓ மடையர்களே! அவன் ஓர் இரும்பு உலக்கையை ஈன்றெடுப்பான். அது உங்கள் குலத்தையே அழிக்கும்' என்றார்கள்.

ரிஷிகளின் சாபத்தைக் கேட்டுப் பயந்து அந்த இளைஞர்கள் உடனே சாம்பனின் வேஷத்தைக் கலைத்தார்கள். அப்பொழுது ஓர் இரும்பு உலக்கை அவன் புடவையிலிருந்து கீழே விழுந்தது. ஒன்றும் புரியாமல் அவர்கள் அந்த உலக்கையை எடுத்துக் கொண்டு அரசவைக்குச் சென்று, நடந்த விஷயங்களைச் சொன்னார்கள்.

ரிஷிகளின் சாபத்தைக் கேட்டுச் சபையில் இருந்த எல்லாரும் நடு நடுங்கினார்கள். சாபத்தைத் தவிர்ப்பதற்கு உக்கிரசேனர் ஒரு வழி கண்டுப்பிடித்தார். உலக்கையைப் பொடிசெய்து, அந்தப் பொடியைக் கடலில் எறியும்படிச் சொன்னார். அப்படியே அதைப் பொடி செய்து கடலில் எறிந்தார்கள். ஆனால், ஒரே ஒரு கூரிய துண்டைப் பொடி பண்ண முடியவில்லை. ஆகவே, அதையும் கடலில் தூக்கி எறிந்தார்கள்.

இந்த இரும்புத் துண்டைக் கடலில் இருந்த ஒரு மீன் சாப்பிட்டது. பிறகு ஒரு செம்படவன் அந்த மீனைப் பிடிக்க, அதன் வயிற்றில் அந்த இரும்பைக் கண்டான். அதை அவன் தட்டி, ஓர் அம்பின் தலையாகச் செய்தான். மற்ற இரும்புப் பொடிகள் கடற்கரைக்குத் தள்ளப்பட, அவை ஏரக் என்று அழைக்கப்படும் புல்லாக வளர்ந்தன.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment