About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 3 April 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 133

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 103

ப்ரமாணம் ப்ராண நிலய: 
ப்ராண ப்⁴ருத் ப்ராண ஜீவந:|
தத்வம் தத்வ விதே³காத்மா 
ஜந்ம ம்ருத்யு ஜராதிக³:||

  • 959. ப்ரமாணம் - பிரமாணமாய் இருப்பவர். அவர் எல்லாவற்றிற்கும் உண்மையான ஆதாரம்.
  • 960. ப்ராண நிலயஃ - அனைத்து ஆன்மாக்களுக்கும் வாழ்விடமானவர். எல்லா உயிர்களுக்கும் இருப்பிடமாக இருப்பவர்.
  • 961. ப்ராண ப்⁴ருத் - உயிரினங்களைத் தரிப்பவர். அவர் அனைத்து உயிரினங்களையும் தாங்குகிறார்.
  • 962. ப்ராண ஜீவநஹ - உயிரினங்களுக்கு வாழ்வாக இருப்பவர்.
  • 963. தத்வம் - சாரமாக, தத்துவமாக உள்ளவர்.
  • 964. தத்வ வித்³ - தத்துவத்தை அறிந்தவர். உண்மையை அறிந்தவர்.
  • 965. ஏகாத்மா - உலகங்கட்கெல்லாம் ஓருயிராய் இருப்பவர். ஒரே ஒரு உயர்ந்த ஆத்மா.
  • 966. ஜந்ம ம்ருத்யு ஜராதிக³ஹ - பிறப்பு, இறப்பு, மூப்புகட்கு அப்பாற்பட்டவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.70

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.70 

ஆபூர்ய மாணம் அசல ப்ரதிஷ்ட²ம் 
ஸமுத்³ர மாப: ப்ரவி ஸ²ந்தி யத்³வத்|
தத்³வத் காமா யம் ப்ரவி ஸ²ந்தி ஸர்வே 
ஸ ஸா²ந்திம் ஆப்நோதி ந காம காமீ||

  • ஆபூர்ய மாணம் - என்றும் நிறைந்த 
  • அசல ப்ரதிஷ்ட²ம் - உறுதியாக நிலைத்த 
  • ஸமுத்³ரம் - கடல் 
  • ஆபஃ - நீர் 
  • ப்ரவி ஸ²ந்தி - புகுந்து 
  • யத்³ வத்து - உள்ளபடி 
  • தத்³வத் - அது போல 
  • காமா - ஆசைகள் 
  • யம் - எவரிடம் 
  • ப்ரவி ஸ²ந்தி - புகுந்து 
  • ஸர்வே - எல்லா 
  • ஸ - அம்மனிதன் 
  • ஸா²ந்திம் - அமைதி 
  • ஆப்நோதி - அடைகிறான்  
  • ந - அல்ல 
  • காம காமீ - ஆசைகளை பூர்த்தி செய்ய விரும்புபவன்

கடலில், நதிகள் வந்து விழுந்து கலக்கும் போது, அது மேன்மேலும் நிரப்புதற்குரியதாய் அசையா நிலை கொண்டிருப்பது போலே விருப்பங்கள் தன்னுள்ளே புகுந்து தாக்கும் போதுஅமைதியாய் இருப்பவன் எவனோ அவன் சாந்தி அடைகிறான். விருப்பங்களை விரும்புவோன் அதனை அடையான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.23

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.23

த ஏத ருஷயோ வேத³ம் 
ஸ்வம் ஸ்வம் வ்யஸ் யந் அநே கதா⁴|
ஸி²ஷ்யை: ப்ரஸி²ஷ்யைஸ் தச் ஸி²ஷ்யைர்
வேதா³ஸ்தே ஸா²கி² நோ ப⁴வந்|| 

  • தே ஏதே -  அப்படிப்பட்ட இந்த 
  • ருஷயோ -  பைலாதி மஹரிஷிகள் 
  • ஸ்வம் ஸ்வம் வேத³ம் - தங்கள் தங்கள் வேதத்தை 
  • அநே கதா⁴ வ்யஸ் யந் - பலவிதமாக பிரித்தார்கள் 
  • தே வேதா³ஸ் -  அவ்வேதங்கள் 
  • ஸி²ஷ்யைஃ -  அவரது சீடர்களாலும் 
  • ப்ர ஸி²ஷ்யைஸ் -  சீடரது சீடர்களாலும்
  • தச் ஸி²ஷ்யைர் - அவர்களுடைய சிஷ்யர்களாலும் 
  • ஸா²கி² ந அப⁴வந்நு -  சாகைகள் உள்ளவர்களாக ஆயின 

பிறகு, அந்த ரிஷிகள் தத்தம் வேதத்தைப் பல பிரிவுகளாக வகுத்தனர். பின்னர், அவர்களுடைய சீடர்கர்கள் என்று வழி வழியாக வேதங்கள் பல கிளைகள் உள்ளனவாகப் பிரிக்கப்  பட்டன. 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.68

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.68

ததோ க³ர்ஜத்³ த⁴ரிவர: 
ஸுக்³ரீவோ ஹேம பிங்க³ள:|
தேந நாதே³ந மஹதா 
நிர் ஜகா³ம ஹரீஸ்²வர:|| 

  • தத⁴ - அங்கிருந்து 
  • ஹரிவரஹ - வாநர ஸ்ரேஷ்டரான 
  • ஹேம பிங்க³ளஹ - ஸ்வர்ணம் போல் மஞ்சள் வர்ணரான 
  • ஸுக்³ரீவோ - ஸுக்³ரீவர் 
  • அக³ர்ஜத்³ - கர்ஜித்தார் 
  • மஹதா தேந - அந்த பெரிய 
  • நாதே³ந - த்வனியால் 
  • ஹரீஸ்² வரஹ - வாநரர்களின் ஈசனான வாலி 
  • நிர் ஜகா³ம - வெளிக் கிளம்பினான்

அதன் பிறகு, வாநரர்களில் சிறந்தவனும், பொன்னிறம் கொண்டவனுமான ஸுக்ரீவன் பெரு முழக்கம் செய்தான். அந்தப் பேரொலியால் வாநரர்களின் மன்னன் வாலி வெளியே வந்தான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்  

திவ்ய ப்ரபந்தம் - 110 - பெரியாழ்வார் திருமொழி - 1.9.3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 110 - கொத்துத் தலைவனை அழித்த அச்சுதன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்

கத்தக் கதித்துக்* கிடந்த பெருஞ் செல்வம்* 
ஒத்துப் பொருந்திக் கொண்டு* உண்ணாது மண் ஆள்வான்*
கொத்துத் தலைவன்* குடி கெடத் தோன்றிய* 
அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான்* 
ஆயர்கள் ஏறு என் புறம் புல்குவான்|

  • கத்தக் கதித்து கிடந்த - மிகவும் திரண்டு கிடந்த
  • பெருஞ்செல்வம் - அளவற்ற ஐஸ்வர்யத்தை
  • ஒத்து - தன் பந்துக்களான பாண்டவர்களோடு ஒத்து
  • பொதிந்து கொண்டு - மனம் பொருந்தி இருக்க
  • உடலால் ஒத்து- மனசால் ஏற்றுக் கொண்டு
  • உண்ணாது - அனுபவித்து உண்ணாமல்
  • மண் - பூமியை
  • ஆள்வான் - தான் அத்விதீயனாய் ஆள வேணுமென்று நினைத்தவனான
  • கொத்து தலைவன் - தம்பிமார்களும் பந்துக்களும் ஸேனைகளுமாகிய திரளுக்குத் தலைவனாகிய துர்யோதநன்
  • குடி கெட - தன் குடும்பத்தோடு அழியும் படி
  • தோன்றிய - திருவவதரித்த
  • அத்தன் - என் பெருமான்
  • வந்து - ஓடி வந்து
  • என்னை - என்னுடைய
  • புறம் - முதுகை
  • புல்குவான் - கட்டிக் கொள்வான்
  • ஆயர்கள் ஏறு - இடையர்களுக்குள் சிறந்த கண்ண பிரான்
  • என் புறம் - என்னுடைய 
  • புல்குவான்! - முதுகை கட்டிக் கொள்வான்

மிகுந்த செல்வமுடையவனாக இருந்தும், தன் பந்துக்களுடன் கூடி அச் செல்வத்தைப் பகிர்ந்து கொள்ளாமல், பூமி உள்பட, எல்லாவற்றையும் தானே ஆள நினைத்த துர்யோதனனை குடும்பத்தோடு அழிப்பதற்காக திருவவதரித்த கண்ணன் என் பின்னால் வந்து என்னைக் கட்டிக் கொள்வான்! இடயர்களின் தலைவன், என்னைப் பின்புறம் வந்து கட்டிக் கொள்வான்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 033 - திருவைகுந்த விண்ணகரம் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

033. திருவைகுந்த விண்ணகரம் (திருநாங்கூர்)
முப்பத்தி மூன்றாவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10

001. திவ்ய ப்ரபந்தம் - 1228 - மனமே! வைகுந்த விண்ணகரத்தை வணங்கு
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - முதலாம் பாசுரம்
சலம் கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு*
தடங் கடலைக் கடைந்து அமுதம் கொண்டு உகந்த காளை*
நலம் கொண்ட கரு முகில்போல் திருமேனி அம்மான்*
நாள்தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்*
சலம் கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி*
செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலினூடே*
வலம் கொண்டு கயல் ஓடி விளையாடு நாங்கூர்*
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|

002. திவ்ய ப்ரபந்தம் - 1229 - நரஸிங்கன் உறையும் இடம் வைகுந்த விண்ணகரம்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
திண்ணியது ஓர் அரி உருவாய்த் திசை அனைத்தும் நடுங்கத்*
தேவரொடு தானவர்கள் திசைப்ப* 
இரணியனை நண்ணி அவன் மார்வு அகலத்து உகிர் மடுத்த நாதன்*
நாள்தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்*
எண் இல் மிகு பெருஞ் செல்வத்து எழில் விளங்கு மறையும்*
ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெருங் குணத்தோர்*
மண்ணில் மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர்*
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1230 - மூட மனமே! வைகுந்த விண்ணகரையே வணங்கு
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் எல்லாம்*
அமுது செய்த திரு வயிற்றன் அரன் கொண்டு திரியும்*
முண்டம் அது நிறைத்து அவன்கண் சாபம் அது நீக்கும்*
முதல்வன் அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்*
எண் திசையும் பெருஞ் செந்நெல் இளந் தெங்கு கதலி*
இலைக்கொடி ஒண் குலைக் கமுகோடு இசலி வளம் சொரிய*
வண்டு பல இசை பாட மயில் ஆலும் நாங்கூர்*
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1231 - இராமன் தங்குமிடம் வைகுந்த விண்ணகரம்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - நான்காம் பாசுரம்
கலை இலங்கும் அகல் அல்குல் அரக்கர் குலக் கொடியைக்*
காதொடு மூக்கு உடன் அரியக் கதறி அவள் ஓடி*
தலையில் அங் கை வைத்து மலை இலங்கை புகச் செய்த*
தடந் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்*
சிலை இலங்கு மணி மாடத்து உச்சிமிசைச் சூலம்*
செழுங் கொண்டல் அகடு இரியச் சொரிந்த செழு முத்தம்*
மலை இலங்கு மாளிகைமேல் மலிவு எய்தும் நாங்கூர்*
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1232 - இராவணனைக் கொன்றவன் கோயில் இது தான்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
மின் அனைய நுண் மருங்குல் மெல்லியற்கா* 
இலங்கை வேந்தன் முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிர*
தன் நிகர் இல் சிலை வளைத்து அன்று இலங்கை பொடி செய்த*
தடந் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்*
செந்நெலொடு செங்கமலம் சேல் கயல்கள் வாளை*
செங்கழு நீரொடு மிடைந்து கழனி திகழ்ந்து எங்கும்*
மன்னு புகழ் வேதியர்கள் மலிவு எய்தும் நாங்கூர்*
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1233 - கண்ணபிரான் உறையும் கோயில் இது தான்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
பெண்மை மிகு வடிவு கொடு வந்தவளைப்* 
பெரிய பேயினது உருவு கொடு மாள உயிர் உண்டு*
திண்மை மிகு மருதொடு நல் சகடம் இறுத்தருளும்*
தேவன் அவன்மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்*
உண்மை மிகு மறையொடு நல் கலைகள் நிறை பொறைகள்*
உதவு கொடை என்று இவற்றின் ஒழிவு இல்லா* 
பெரிய வண்மை மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர்*
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1234 - வெண்ணெய் உண்ட கண்ணன் விரும்பும் இடம் இது
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
விளங்கனியை இளங் கன்று கொண்டு உதிர எறிந்து*
வேல் நெடுங் கண் ஆய்ச்சியர்கள் வைத்த தயிர் வெண்ணெய்*
உளம்குளிர அமுது செய்து இவ் உலகு உண்ட காளை*
உகந்து இனிது நாள்தோறும் மருவி உறை கோயில்*
இளம்படி நல் கமுகு குலைத் தெங்கு கொடிச் செந்நெல்*
ஈன் கரும்பு கண் வளரக் கால் தடவும் புனலால்*
வளம் கொண்ட பெருஞ் செல்வம் வளரும் அணி நாங்கூர்*
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1235 - நரகாசுரனை அழித்தவன் மகிழ்ந்து றையும் இடம் இது
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
ஆறாத சினத்தின் மிகு நரகன் உரம் அழித்த*
அடல் ஆழித் தடக் கையன் அலர் மகட்கும் அரற்கும்*
கூறாகக் கொடுத்தருளும் திரு உடம்பன் இமையோர்*
குல முதல்வன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்*
மாறாத மலர்க் கமலம் செங்கழு நீர் ததும்பி*
மது வெள்ளம் ஒழுக வயல் உழவர் மடை அடைப்ப*
மாறாத பெருஞ் செல்வம் வளரும் அணி நாங்கூர்*
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1236 - தேவர்கள் வணங்கும் வைகுந்த விண்ணகரை வணங்கு
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
வங்கம் மலி தடங் கடலுள் வானவர்களோடு*
மா முனிவர் பலர் கூடி மா மலர்கள் தூவி*
எங்கள் தனி நாயகனே எமக்கு அருளாய் என்னும்*
ஈசன் அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்*
செங் கயலும் வாளைகளும் செந்நெலிடைக் குதிப்பச்*
சேல் உகளும் செழும் பணை சூழ் வீதிதொறும் மிடைந்து*
மங்குல் மதி அகடு உரிஞ்சு மணி மாட நாங்கூர்*
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1237 - மண்ணும் விண்ணும் ஆள்வர்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
சங்கு மலி தண்டு முதல் சக்கரம் முன் ஏந்தும்*
தாமரைக் கண் நெடிய பிரான் தான் அமரும் கோயில்*
வங்கம் மலி கடல் உலகில் மலிவு எய்தும் நாங்கூர்*
வைகுந்தவிண்ணகர்மேல் வண்டு அறையும் பொழில் சூழ்*
மங்கையர் தம் தலைவன் மருவலர் தம் உடல் துணிய*
வாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன*
சங்கம் மலி தமிழ் மாலை பத்து இவை வல்லார்கள்*
தரணியொடு விசும்பு ஆளும் தன்மை பெறுவாரே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 77

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 22

ஸ்கந்தம் 03

மைத்ரேயர் தொடர்ந்தார். அனைவரின் உள்ளத்தையும்‌ அறியும் திறன் ‌கொண்ட கர்தம மகரிஷி, இவ்வளவு அழகான விமானத்தைப் படைத்தும் தேவஹூதி மகிழ்ச்சி அடையவில்லை என்று உணர்ந்தார்.

தேவஹூதி கிழிந்த அழுக்கடைந்த ஆடைகளை அணிந்து இருந்தாள். மிகவும்‌ இளைத்துப் போய், கேசங்கள் அழுக்கடைந்து சடை போட்டிருந்தது.


அவளைக் கண்ணுற்ற கர்தமர், பயந்த சுபாவம்‌ உடையவளே, நீ இந்த பிந்துஸரஸில் நீராடி விமானத்தில் ஏறிக்கொள். இந்த நீர்நிலை பகவானால் உண்டாக்கப்பட்டது. அனைத்து விருப்பங்களையும்‌ பூர்த்தி செய்ய வல்லது, என்றார்.

அழகிய கண்களை உடைய தேவஹூதி, கணவரின் ஆணைப்படி, பிந்துஸரஸ் என்ற அந்த நீர்நிலையில்‌ மூழ்கினாள். அங்கே அவளுக்கு மிக ஆச்சரியமான காட்சி காத்திருந்தது.

பிந்துஸரஸினுள் ஒரு அழகிய மாளிகை இருந்தது‌. ஆயிரக் கணக்கான இளம் பெண்கள் பணி செய்து கொண்டிருந்தனர். அவர்களது திருமேனி யிலிருந்து தாமரை மணம் வீசியது. அவர்கள் தேவஹூதியைக் கண்டு கைகூப்பி, அம்மா, நாங்கள் உங்கள் பணிப்பெண்கள். தங்களுக்கு என்ன சேவை செய்ய வேண்டும்? கட்டளையிடுங்கள், என்றனர்.

அவர்கள் தேவஹூதியின் விருப்பத்திற்கிணங்க, அவளை உயர்ந்த வாசனைப்பொடிகளல் தைல ஸ்நானம் செய்வித்தனர். உயர்ந்த பட்டாடைகளை அணிவித்தனர். விலை உயர்ந்த ஆபரணங்களால் அவளை அலங்கரித்தனர். அறுசுவை உண்டியையும், இனிய நன்னீரும் கொடுத்தனர்.

மிக அழகிய பெண்ணாக அவளை உருமாற்றியிருந்தனர் அப்பெண்கள். ஏராளமான நகைகளுடன் அழகு மிளிரும்‌ தன்னை தன் கணவரான கர்தமருக்கு அர்ப்பணிக்க விரும்பினாள் தேவஹூதி. அவ்வாறு அவள் நினைத்ததுமே, பணிப் பெண்களோடு கணவனின் எதிரே நிற்கக்கண்டு வியந்தாள்.

கர்தமரின் யோகசக்தியைக் கண்டு மிகவும் ஆச்சரியமுற்றாள். கர்தமருடன், அவரால் படைக்கப்பட்ட அழகிய விம்மானத்தில் ஏறினாள்.

தன் மனைவி தேவஹூதியாலும், ஆயிரக்கணக்கான வித்யாதரப் பெண்களாலும் பணிவிடை செய்யப்பெற்று கர்தமர் தன்னையும் மிகுந்த அழகுடன் ஆக்கிக்கொண்டார்.

மன்மதன் போன்ற அழகுடன் தேவஹூதியின் மனம் மகிழும் வண்ணம்‌ விளங்கினார் கர்தமர். தன் மனைவியுடன் பலவிதமான தேவ உத்யான வனங்களிலும், மானஸ ஸரஸ்களிலும்‌ விமானம் மூலம் சுற்றினார்.

அவ்விமானம் நினைத்தபடி தடையின்றி எங்கும் செல்ல வல்லது. அதிலேறி அனைத்து உலகங்களிலும் தடையின்றி சஞ்சாரம் செய்து தேவர்களையும் விஞ்சினார்.

பகவானின் திருவடிகளில் பற்றுள்ளவர்க்கு அனைத்தும் கிடைக்கும். அவர்கள் விரும்ப மாட்டார்கள். விரும்பினால், அவர்களால் அடைய முடியாதது ஒன்றுமே இல்லை.

உலகங்கள்‌ முழுவதையும் மனனைவிக்குச் சுற்றிக் காண்பித்து , அவளோடு பலவாறு இன்புற்ற பின்னர், தன் இருப்பிடம்‌ திரும்பினார் கர்தமர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்