||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
017. திருக்கண்ணபுரம்
க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரம் – நாகப்பட்டினம்
பதினாறாவது திவ்ய க்ஷேத்ரம்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 129 - 3
திருமங்கையாழ்வார்
051. திவ்ய ப்ரபந்தம் - 1685 - சௌரி ராஜனின் முடி மேல் துழாயை ஊது
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - நான்காம் திருமொழி - எட்டாம் பாசுரம்
நீல மலர்கள்* நெடு நீர் வயல் மருங்கில்*
சால மலர் எல்லாம்* ஊதாதே* வாள் அரக்கர் காலன்*
கண்ணபுரத்து எம் பெருமான் கதிர் முடிமேல்*
கோல நறுந் துழாய்* கொண்டு ஊதாய் கோல் தும்பீ|
052. திவ்ய ப்ரபந்தம் - 1686 - கண்ணபிரான் சூடிய நறுந்துழாயை ஊது
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - நான்காம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
நந்தன் மதலை* நில மங்கை நல் துணைவன்*
அந்தம் முதல்வன்* அமரர்கள் தம் பெருமான்*
கந்தம் கமழ்* காயா வண்ணன் கதிர் முடிமேல்*
கொந்து நறுந் துழாய்* கொண்டு ஊதாய் கோல் தும்பீ|
053. திவ்ய ப்ரபந்தம் - 1687 - வண்டே! நாங்கள் பாட நீ துழாயை ஊது
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - நான்காம் திருமொழி - பத்தாம் பாசுரம்
வண்டு அமரும் சோலை* வயல் ஆலி நல் நாடன்*
கண்ட சீர் வென்றிக்* கலியன் ஒலி மாலை*
கொண்டல் நிற வண்ணன்* கண்ணபுரத்தானை*
தொண்டரோம் பாட* நினைந்து ஊதாய் கோல் தும்பீ|
054. திவ்ய ப்ரபந்தம் - 1688 - தனியேனை மாலை மதியம் சுடுகின்றதே!
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஐந்தாம் திருமொழி - முதலாம் பாசுரம்
தந்தை காலில் விலங்கு அற* வந்து தோன்றிய தோன்றல் பின்*
தமியேன் தன் சிந்தை போயிற்றுத்*
திருவருள் அவனிடைப் பெறும் அளவு இருந்தேனை*
அந்திகாவலன் அமுது உறு பசுங் கதிர்* அவை சுட அதனோடும்*
மந்தமாருதம் வன முலை தடவந்து* வலிசெய்வது ஒழியாதே|
055. திவ்ய ப்ரபந்தம் - 1689 - இருள் பரவி விட்டதே! யான் என் செய்வேன்?
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஐந்தாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
மாரி மாக் கடல் வளைவணற்கு இளையவன்* வரை புரை திருமார்வில்*
தாரின் ஆசையில் போயின நெஞ்சமும்* தாழ்ந்தது ஓர் துணை காணேன்*
ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது* ஒளியவன் விசும்பு இயங்கும்*
தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன* செய்வது ஒன்று அறியேனே|
056. திவ்ய ப்ரபந்தம் - 1690 - அஞ்சாதே என்று சொல்ல யாரும் இல்லையே!
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஐந்தாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
ஆயன் மாயமே அன்றி மற்று என் கையில்* வளைகளும் இறை நில்லா*
பேயின் ஆர் உயிர் உண்டிடும் பிள்ளை* நம் பெண் உயிர்க்கு இரங்குமோ?*
தூய மா மதிக் கதிர் சுட துணை இல்லை* இணை முலை வேகின்றதால்*
ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும்* அஞ்சேல் என்பார் இலையே|
057. திவ்ய ப்ரபந்தம் - 1691 - தென்றல் நின்றால் என் உயிர் நிற்கும்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஐந்தாம் திருமொழி - நான்காம் பாசுரம்
கயம் கொள் புண் தலைக் களிறு உந்து வெம்திறல்*
கழல் மன்னர் பெரும் போரில்*
மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும்*
வந்திலன் மறி கடல் நீர்*
தயங்கு வெண் திரைத் திவலை நுண் பனி எனும்*
தழல் முகந்து இள முலைமேல்*
இயங்கும் மாருதம் விலங்கில் என் ஆவியை* எனக்கு எனப் பெறலாமே|
058. திவ்ய ப்ரபந்தம் - 1692 - தோழி! அந்தி வருகின்றதே! என் செய்வேன்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஐந்தாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
ஏழு மா மரம் துளைபடச் சிலை வளைத்து*
இலங்கையை மலங்குவித்த ஆழியான்*
நமக்கு அருளிய அருளொடும்* பகல் எல்லை கழிகின்றதால்*
தோழி நாம் இதற்கு என் செய்தும்? துணை இல்லை* சுடர் படு முதுநீரில்*
ஆழ ஆழ்கின்ற ஆவியை அடுவது ஓர்* அந்தி வந்து அடைகின்றதே|
059. திவ்ய ப்ரபந்தம் - 1693 - தூக்கமே வரவில்லை; இரவு நீள்கிறதே!
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஐந்தாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
முரியும் வெண் திரை முது கயம் தீப்பட* முழங்கு அழல் எரி அம்பின்*
வரி கொள் வெம் சிலை வளைவித்த மைந்தனும்* வந்திலன் என் செய்கேன்?*
எரியும் வெம் கதிர் துயின்றது* பாவியேன் இணை நெடுங் கண் துயிலா*
கரிய நாழிகை ஊழியின் பெரியன* கழியும் ஆறு அறியேனே|
060. திவ்ய ப்ரபந்தம் - 1694 - இராப்பொழுது துன்புறுத்துகிறதே!
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஐந்தாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
கலங்க மாக் கடல் கடைந்து அடைத்து*
இலங்கையர் கோனது வரை ஆகம் மலங்க*
வெம் சமத்து அடு சரம் துரந்த* எம் அடிகளும் வாரானால்*
இலங்கு வெம் கதிர் இள மதி அதனொடும்* விடை மணி அடும்*
ஆயன் விலங்கல் வேயினது ஓசையும் ஆய்* இனி விளைவது ஒன்று அறியேனே|
061. திவ்ய ப்ரபந்தம் - 1695 - தலைவன் வரவில்லை: இதனினும் கொடிய வினை இல்லை
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஐந்தாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
முழுது இவ் வையகம் முறை கெட மறைதலும்* முனிவனும் முனிவு எய்தி*
மழுவினால் மன்னர் ஆர் உயிர் வவ்விய* மைந்தனும் வாரானால்*
ஒழுகு நுண் பனிக்கு ஒடுங்கிய பேடையை* அடங்க அம் சிறை கோலி*
தழுவும் நள் இருள் தனிமையின் கடியது ஓர்* கொடு வினை அறியேனே|
062. திவ்ய ப்ரபந்தம் - 1696 - பிரிவுத் துயர் என்னைக் கொல்கின்றதே!
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஐந்தாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
கனம் செய் மா மதிள் கணபுரத்தவனொடும்* கனவினில் அவன் தந்த*
மனம் செய் இன்பம் வந்து உள் புக வெள்கி* என் வளை நெக இருந்தேனை*
சினம் செய் மால் விடைச் சிறு மணி ஓசை* என் சிந்தையைச் சிந்துவிக்கும்*
அனந்தல் அன்றிலின் அரி குரல்* பாவியேன் ஆவியை அடுகின்றதே|
063. திவ்ய ப்ரபந்தம் - 1697 - இவற்றைப் படிப்போர் தேவரோடு சேர்வர்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஐந்தாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
வார் கொள் மென் முலை மடந்தையர்* தடங்கடல் வண்ணனைத் தாள் நயந்து*
ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை* அறிந்து முன் உரை செய்த*
கார் கொள் பைம் பொழில் மங்கையர் காவலன்* கலிகன்றி யொலி வல்லார்*
ஏர்கொள் வைகுந்த மாநகர் புக்கு* இமையரோடும் கூடுவரே|
064. திவ்ய ப்ரபந்தம் - 1698 - திருக்கண்ணபுரம் தொழுதால் உய்வுண்டு
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஆறாம் திருமொழி - முதலாம் பாசுரம்
தொண்டீர் உய்யும் வகை கண்டேன்* துளங்கா அரக்கர் துளங்க*
முன் திண் தோள் நிமிரச் சிலை வளையச்* சிறிதே முனிந்த திருமார்வன்*
வண்டு ஆர் கூந்தல் மலர் மங்கை* வடிக் கண் மடந்தை மா நோக்கம் கண்டான்*
கண்டுகொண்டு உகந்த* கண்ணபுரம் நாம் தொழுதுமே|
065. திவ்ய ப்ரபந்தம் - 1699 - கருட வாகனனை நாம் தொழுவோம்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஆறாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
பொருந்தா அரக்கர் வெம் சமத்துப்* பொன்ற அன்று புள் ஊர்ந்து*
பெருந் தோள் மாலி தலை புரளப்* பேர்ந்த அரக்கர் தென் இலங்கை*
இருந்தார் தம்மை உடன்கொண்டு* அங்கு எழில் ஆர் பிலத்துப் புக்கு ஒளிப்ப*
கருந் தாள் சிலை கைக்கொண்டான் ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே|
066. திவ்ய ப்ரபந்தம் - 1700 - இராவணனை வதைத்தவனை நாம் தொழுவோம்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஆறாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
வல்லி இடையாள் பொருட்டாக* மதிள் நீர் இலங்கையார் கோவை*
அல்லல் செய்து வெம் சமத்துள்* ஆற்றல் மிகுத்த ஆற்றலான்*
வல் ஆள் அரக்கர் குலப்பாவை வாட* முனி தன் வேள்வியை*
கல்விச் சிலையால் காத்தான் ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே|
067. திவ்ய ப்ரபந்தம் - 1701 - சேதுபந்தனம் செய்தவனைத் தொழுவோம்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஆறாம் திருமொழி - நான்காம் பாசுரம்
மல்லை முந்நீர் அதர்பட* வரி வெம் சிலை கால் வளைவித்து*
கொல்லை விலங்கு பணிசெய்ய* கொடியோன் இலங்கை புகல் உற்று*
தொல்லை மரங்கள் புகப் பெய்து* துவலை நிமிர்ந்து வான் அணவ*
கல்லால் கடலை அடைத்தான் ஊர்* ண்ணபுரம் நாம் தொழுதுமே|
068. திவ்ய ப்ரபந்தம் - 1702 - மன்மதனின் தந்தையை நாம் தொழுவோம்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஆறாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
ஆமை ஆகி அரி ஆகி* அன்னம் ஆகி*
அந்தணர் தம் ஓமம் ஆகி ஊழி ஆகி* உவரி சூழ்ந்த நெடும் புணரி*
முன் சேம மதிள் சூழ் இலங்கைக் கோன்* சிரமும் கரமும் துணித்து*
காமன் பயந்தான் கருதும் ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே|
069. திவ்ய ப்ரபந்தம் - 1703 - மனமே! வருந்தாதே: கண்ணபுரம் தொழுவோம்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஆறாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
வருந்தாது இரு நீ மட நெஞ்சே* நம் மேல் வினைகள் வாரா*
முன் திருந்தா அரக்கர் தென் இலங்கை* செந் தீ உண்ண சிவந்து ஒரு நாள்*
முன் பெருந் தோள் வாணற்கு அருள் புரிந்து* பின்னை மணாளன் ஆகி*
கருந் தாள் களிறு ஒன்று ஒசித்தான் ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே|
070. திவ்ய ப்ரபந்தம் - 1704 - விபீடணனுக்கு அருளியவனைத் தொழுவோம்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஆறாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
இலை ஆர் மலர்ப் பூம் பொய்கைவாய்* முதலை தன்னால் அடர்ப்புண்டு*
கொலை ஆர் வேழம் நடுக்கு உற்றுக் குலைய* அதனுக்கு அருள் புரிந்தான்*
அலை நீர் இலங்கைத் தசக்கிரீவற்கு* இளையோற்கு அரசை அருளி*
முன் கலை மாச் சிலையால் எய்தான் ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே|
071. திவ்ய ப்ரபந்தம் - 1705 - மயங்காதே மனமே! கண்ணபுரம் தொழுவோம்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஆறாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
மால் ஆய் மனமே அருந் துயரில்* வருந்தாது இரு நீ வலி மிக்க*
கால் ஆர் மருதும் காய் சினத்த கழுதும்* கத மாக் கழுதையும்*
மால் ஆர் விடையும் மத கரியும்* மல்லர் உயிரும் மடிவித்து*
காலால் சகடம் பாய்ந்தான் ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே|
072. திவ்ய ப்ரபந்தம் - 1706 - கண்ணனின் கண்ணபுரம் தொழுவோம்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஆறாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
குன்றால் மாரி பழுது ஆக்கி* கொடி ஏர் இடையாள் பொருட்டாக*
வன் தாள் விடை ஏழ் அன்று அடர்த்த* வானோர் பெருமான் மா மாயன்*
சென்றான் தூது பஞ்சவர்க்கு ஆய்த்* திரி கால் சகடம் சினம் அழித்து*
கன்றால் விளங்காய் எறிந்தான் ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே|
073. திவ்ய ப்ரபந்தம் - 1707 - இவற்றைப் பாடுக: தேவர்களும் வணங்குவர்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஆறாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
கரு மா முகில் தோய் நெடு மாடக்* கண்ணபுரத்து எம் அடிகளை*
திரு மா மகளால் அருள்மாரி* செழுநீர் ஆலி வள நாடன்*
மருவு ஆர் புயல் கைக் கலிகன்றி* மங்கை வேந்தன் ஒலி வல்லார்*
இரு மா நிலத்துக்கு அரசு ஆகி* இமையோர் இறைஞ்ச வாழ்வாரே|
074. திவ்ய ப்ரபந்தம் - 1708 - திருமகள் கணவன் உறைவிடம் கண்ணபுரம்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஏழாம் திருமொழி - முதலாம் பாசுரம்
வியம் உடை விடை இனம்* உடைதர மட மகள்*
குயம் மிடை தட வரை* அகலம் அது உடையவர் *
நயம் உடை நடை அனம்* இளையவர் நடை பயில்*
கயம் மிடை கணபுரம் * அடிகள் தம் இடமே|
075. திவ்ய ப்ரபந்தம் - 1709 - கண்ணபிரானின் இடம் கண்ணபுரம்
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஏழாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
இணை மலி மருதினொடு* எருதிற இகல் செய்து*
துணை மலி முலையவள்* மணம் மிகு கலவியுள் *
மணம் மலி விழவினொடு* அடியவர் அளவிய*
கணம் மலி கணபுரம் * அடிகள் தம் இடமே|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்