About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 12 December 2023

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.20

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.20 

ந ஜாயதே ம்ரியதே வா கதா³சிந்
நாயம் பூ⁴த்வா ப⁴விதா வா ந பூ⁴ய:|
அஜோ நித்ய: ஸா²ஸ்²வதோ அயம் புராணோ 
ந ஹந்யதே ஹந்ய மாநே ஸ²ரீரே||

  • ந - என்றுமில்லை 
  • ஜாயதே - பிறப்பு 
  • ம்ரியதே - இறப்பு 
  • வா - அல்லது 
  • கதா³சிந் - எக்காலத்திலும் (இறந்த, நிகழ், எதிர்)
  • ந - என்றுமில்லை 
  • அயம் - இந்த ஆத்மா 
  • பூ⁴த்வா - தோன்றியது 
  • ப⁴விதா - தோன்றும் 
  • வா - அல்லது 
  • ந - கிடையாது 
  • பூ⁴யஹ - மீண்டும் தோன்றுவது 
  • அஜோ - பிறப்பற்றவன் 
  • நித்யஸ் - நித்தியமானவன்
  • ஸா²ஸ்²வதோ - என்றும் நிலைத்திருப்பவன் 
  • அயம் - இந்த 
  • புராணோ - மிகப் பழமையானவன் 
  • ந - இல்லை 
  • ஹந்யதே - கொல்லப்படுவது 
  • ஹந்யமாநே- கொல்லப்படும் போது 
  • ஸ²ரீரே - உடல்

இந்த ஆத்மாவிற்கு எந்த காலத்திலும் பிறப்போ, இறப்போ என்றும் இல்லை. அவன் தோன்றியதோ அல்ல, தோன்றுபவனும் அல்ல. மீண்டும் தோன்றுவதும் கிடையாது. அவன் பிறப்பற்றவன், நித்தியமானவன், என்றும் நிலைத்து இருப்பவன், மிகப் பழமையானவன். உடல் கொல்லப்படும் போதும், அவன் கொல்லப்படுவது இல்லை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment