||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
சம்பராசுரன் வதம்|
பிரத்யும்னனின் அழகில் மயங்கி மாயாதேவியும் அவனை காதலிக்க ஆரம்பித்தாள். அதை அவள் எத்தனையோ வழிகளில் பிரத்யும்னனுக்குத் தெரிவித்தாள். அதைக் கேட்ட பிரத்யும்னன், "என்ன அம்மா, இப்படி இருக்கிறாய், இது உனக்கே அழகாக இருக்கிறதா?" என்று கேட்டான்.
அதற்கு அவள், "சுவாமி! நீங்கள் என்னுடைய மகன் அல்ல. நீங்கள் கிருஷ்ணரின் மகன். மன்மதனாகிய நீங்கள் தாம் இப்படிப் பிறந்து இருக்கிறீர்கள். உங்கள் மனைவி ரதியாக நான் தான் இப்படி பிறந்துளேன். நீங்கள் குழந்தையாக இருந்த போது, சம்பராசுரன் உங்களை கடலில் தூக்கி எறிந்தான். உங்களை ஒரு மீன் விழுங்க அதன் வயிற்றில் இருந்து நீங்கள் அகப்பட்டீர்கள். நீங்கள் இந்த அசுரனை கொல்ல வேண்டும். இந்த வித்தையை அவனும் அறிந்திருக்கிறான். மகரமாயா என்னும் வித்தையின் ரகசிய மந்திரங்களை அவள் அவனுக்குச் சொல்லிக் கொடுத்தாள்.
பிறகு பிரத்யும்னன் சம்பராசுரனிடம் சென்று அவளைக் கோபம் மூட்டுவதற்காக அவனைத் தகாத முறையில் பேசினான், வசவுகளைத் தாங்க முடியாமல், பிரத்யும்னனைக் கொல்லுவதற்க்காகச் சம்பராசுரன் கதையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான். ஆனால் தன் கதையைக் கொண்டு பிரத்யும்னன் சம்பராசுரனின் கதையை உடைத்து எறிந்தான்.
உடனே சம்பராசுரன் மாயப் போர் நடத்த ஆரம்பித்தான். அவன் ஆகாயத்தில் மறைந்து பிரத்யும்னன் மீது அம்பு மழை பொழிய ஆரம்பித்தான். இதைப் பிரத்யும்னன் ஏற்கனவே எதிர் பார்த்தான். ஆதலால், அவனும் மறைந்து தன வாளின் பலமான வீச்சினால் சம்பராசுரனின் தலையைத் துண்டித்தான். ஆகாயத்தில் பறக்கக் கூடிய சக்தி பெற்ற மாயாதேவி, பிரத்யும்னனைத் தூக்கிக் கொண்டு துவாரகை சென்றாள்.
கிருஷ்ணரைப் போலவே தோற்றமளித்த பிரத்யும்னனைக் கண்டு எல்லோரும் வியப்படைந்தார்கள். அவன் கிருஷ்ணர் தான் என்று நினைத்து, உடன் இருக்கும் பெண் யார் என்று வியந்தார்கள். அவன் கிருஷ்ணன் அல்ல என்று புரிந்து கொள்ள அவர்களுக்கு சிறிது நேரம் பிடித்தது. "யார் இந்த இளைஞன்" என்று எல்லோரும் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டார்கள்.
ருக்மிணிக்கும் குழப்பமாகத் தான் இருந்தது, "எத்தனையோ வருடங்களுக்கு முன்பு நான் என் குழந்தையை இழந்தேன், இன்று அவன் உயிரோடு இருந்தால், இந்த வயதிலும், தோற்றத்திலும் தான் இருப்பான். இவன் எனக்குப் பிறந்த மகனாகத் தான் இருக்க வேண்டும். ஏனெனில் இவன் மீது எனக்கு ஒரு தனி பாசம் ஏற்படுகிறது" என்று நினைத்தாள். அப்பொழுது நாரதர் அங்கே தோற்றமளித்து, எல்லா சந்தேகங்களையும் தீர்த்து வைத்தார். வெகு நாட்களாகக் காணாமற் போயிருந்த கிருஷ்ணரின் மகன் மீண்டும் கிடைத்தது குறித்து எல்லோரும் மகிழ்ச்சியில் குதூகலித்தனர். மாண்டவன் மீண்டது போலவே அவர்கள் நினைத்தார்கள்.
கிருஷ்ணர் தமது மகன் என்று தெரிந்து கொண்டதும் அவனை கட்டி அணைத்துக் கொண்டார். பிரத்யும்னன் அவனது தாய் தந்தையான கிருஷ்ணர் ருக்மிணி கால்களில் விழுந்து வணங்கினான்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment